இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் ... தொடர்ச்சி - 5 ... 9. கனாத்திறம் உரைத்த காதை (கலிவெண்பா) அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை நிகர் மலர் நெல்லொடு தூஉய், பகல் மாய்ந்த மாலை மணி விளக்கம் காட்டி, இரவிற்கு ஓர் கோலம் கொடி-இடையார்-தாம் கொள்ள-மேல் ஓர் நாள் மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க, 5 பால் விக்கிப் பாலகன்-தான் சோர, மாலதியும், 'பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன விட்டு ஏற்பன கூறார்' என்று ஏங்கி, மகக் கொண்டு, அமரர் தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம், புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம், பகல் வாயில் 10 உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம், புக்கு எங்கும் 'தேவிர்காள்! எம் உறு நோய் தீர்ம்' என்று மேவி-ஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு, 15 ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், 'ஆசு இலாய்! செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்; பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில் படு பிணம் தா' என்று, பறித்து, அவள் கைக் கொண்டு, சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்கு 20 இடு பிணம் தின்னும் இடாகினிப் பேய் வாங்கி, மடி அகத்து இட்டாள், மகவை-இடியுண்ட மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு, அச் சாத்தன் 'அஞ்ஞை! நீ ஏங்கி அழல்' என்று, 'முன்னை உயிர்க் குழவி காணாய்' என்று, அக் குழவி ஆய், ஓர் 25 குயில்-பொதும்பர் நீழல் குறுக, அயிர்ப்பு இன்றி, மாயக் குழவி எடுத்து, மடித் திரைத்துத் தாய் கைக் கொடுத்தாள், அத் தையலாள் தூய மறையோன் பின் மாணி ஆய், வான் பொருள் கேள்வித் துறைபோய், அவர் முடிந்தபின்னர், இறையோனும் 30 தாயத்தாரோடும் வழக்கு உரைத்துத் தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து, மேய நாள், தேவந்தி என்பாள் மனைவி, அவளுக்குப் 'பூ வந்த உண் கண் பொறுக்க' என்று மேவி, தன் மூவா இள நலம் காட்டி, 'எம் கோட்டத்து 35 நீ வா' என உரைத்து, நீங்குதலும்-தூ-மொழி, ஆர்த்த கணவன் அகன்றனன், 'போய் எங்கும் தீர்த்தத் துறை படிவேன்' என்று; அவனைப் போர்த்து இங்ஙன் மீட்டுத் தருவாய்' என ஒன்றன் மேல் இட்டு, கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள், வாட்டு-அரும் சீர்க் 40
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி; அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று; 'பெறுக, கணவனோடு!' என்றாள்- 'பெறுகேன்; கடுக்கும் என் நெஞ்சம்; கனவினால், என் கை 45 பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம்; பட்ட பதியில், படாதது ஒரு வார்த்தை இட்டனர் ஊரார், இடுதேள் இட்டு, என்-தன்மேல்; "கோவலற்கு உற்றது ஓர் தீங்கு" என்று அது கேட்டுக் காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்; காவலனொடு 50 ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்; உரையாடேன்; தீக் குற்றம் போலும், செறி-தொடீஇ! தீக் குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற நல் திறம் கேட்கின் நகை ஆகும்'- பொன்-தொடீஇ! கைத்தாயும் அல்லை; கணவற்கு ஒரு நோன்பு 55 பொய்த்தாய் பழம் பிறப்பில்; போய்க் கெடுக! உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில், மடல் அவிழ் நெய்தல் அம் கானல், தடம் உள, சோம குண்டம், சூரிய குண்டம், துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு 60 தாம் இன்புறுவர் உலகத்து, தையலார்; போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாம் ஒரு நாள் ஆடுதும்' என்ற அணி-இழைக்கு-அவ் ஆய்-இழையாள், 'பீடு அன்று' என இருந்தபின்னரே-'நீடிய காவலன் போலும், கடைத்தலையான் வந்து-நம் 65 கோவலன்!' என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும் பாடு அமை சேக்கையுள் புக்கு, தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு, 'யாவும் சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி, குலம் தரு வான் பொருள்-குன்றம் தொலைந்த; 70 இலம்பாடு நாணுத் தரும் எனக்கு' என்ன- நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி, 'சிலம்பு உள; கொண்ம்' என-'சேயிழை! கேள்; இச் சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர் 75 மாட மதுரை அகத்துச் சென்று; என்னோடு இங்கு, ஏடு அலர் கோதாய்! எழுக' என்று, நீடி வினை கடைக்கூட்ட வியம் கொண்டான்-கங்குல் கனை சுடர் கால் சீயாமுன். வெண்பா காதலி கண்ட கனவு கரு நெடுங் கண் மாதவி-தன் சொல்லை வறிதாக்க, மூதை- வினை கடைக் கூட்ட வியம் கொண்டான்-கங்குல் கனை சுடர் கால் சீயாமுன். 10. நாடுகாண் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) வான்கண் விழியா வைகறை யாமத்து, மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க, கார் இருள் நின்ற கடைநாள் கங்குல்- ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப, ஏழகத் தகரும், எகினக் கவரியும், 5 தூ மயிர் அன்னமும், துணை எனத் திரியும், தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து-ஆங்கு- அணி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழிந்து, 10 பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி- புலவு ஊண் துறந்து, பொய்யா விரதத்து, 15 அவலம் நீத்து, அறிந்து, அடங்கிய கொள்கை, மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய ஐ-வகை நின்ற அருகத் தானத்துச் சந்தி ஐந்தும் தம்முடன் கூடி வந்து, தலை மயங்கிய வான் பெரு மன்றத்து, 20 நீர் அணி விழவினும், நெடுந் தேர் விழவினும், சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என, உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகு ஒளிச் சிலாதலம் தொழுது, வலம் கொண்டு- 25 மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும் உலக இடைகழி ஒருங்குடன் நீங்கிக் கலையிலாளன் காமர் வேனிலொடு மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும், பல் மலர் அடுக்கிய, நல் மரப் பந்தர் 30 இலவந்திகையின் எயில் புறம் போகி- தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக் காவிரி வாயில் கடைமுகம் கழிந்து, குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து 35 காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப் பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-ஆங்கண், இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி, நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து, முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க, 40 'மதுரை மூதூர் யாது?' என வினவ- 'ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்; நாறு ஐங் கூந்தல்! நணித்து' என நக்கு தேமொழி-தன்னொடும், சிறைஅகத்து இருந்த காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்- 45 'உருவும், குலனும், உயர் பேர் ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும், உடையீர்! என்னோ, உறு கணாளரின் கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு?' என- 'உரையாட்டு இல்லை; உறு தவத்தீர்! யான் 50 மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்'- "பாடகச் சீறடி பரல் பகை உழவா; காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு அரிது; இவள் செவ்வி அறிகுநர் யாரோ? "உரியது அன்று; ஈங்கு ஒழிக" என, ஒழியீர்; 55 மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த, தென் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின், போதுவல் யானும்; போதுமின்' என்ற 60 காவுந்தி ஐயையைக் கை தொழுது, ஏத்தி, 'அடிகள்! நீரே அருளுதிர் ஆயின், இத் தொடி வளைத் தோளி துயர் தீர்த்தேன்' எனக் 'கோவலன்! காணாய்; கொண்ட இந் நெறிக்கு ஏதம் தருவன யாங்கும் பல; கேண்மோ 65 வெயில் நிறம் பொறாஅ மெல்லியல் கொண்டு பயில் பூந் தண்டலைப் படர்குவம் எனினே மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் பொய்யறைப் படுத்து, போற்றா மாக்கட்குக் 70 கையறு துன்பம் காட்டினும் காட்டும்; உதிர் பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும்; மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்துச் செஞ் சுளைப் பலவின் பரல் பகை உறுக்கும் 75 கயல் நெடுங் கண்ணி காதல் கேள்வ! வயல் உழைப் படர்குவம் எனினே, ஆங்குப் பூ நாறு இலஞ்சிப் பொரு கயல் ஓட்டி, நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின், 80 கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து, சுரும்பு சூழ் பொய்கைத் தூ நீர் கலக்கும்; அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி, குடங்கையின் நொண்டு, கொள்ளவும் கூடும்; 85 குறுநர் இட்ட குவளை அம் போதொடு பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை, நெறி செல் வருத்தத்து, நீர் அஞர் எய்தி, அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்; எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் 90 பொறி மாண் அலவனும், நந்தும், போற்றாது, ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின், தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா, வயலும் சோலையும் அல்லது, யாங்கணும், அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை; 95 நெறி இருங் குஞ்சி! நீ வெய்யோளொடு குறி அறிந்து, அவை அவை குறுகாது ஓம்பு' என- தோம் அறு கடிஞையும், சுவல் மேல் அறுவையும், கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு; 'மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக' எனப் 100 பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர்- கரியவன் புகையினும், புகைக் கொடி தோன்றினும், விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும், கால் பொரு நிவப்பின் கடுங் குரல் ஏற்றொடும் சூல் முதிர் கொண் மூப் பெயல் வளம் சுரப்ப, 105 குட மலைப் பிறந்த கொழும் பல் தாரமொடு கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தலை, ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது, ஆம்பியும், கிழாரும், வீங்கு இசை ஏத்தமும், 110 ஓங்கு நீர்ப் பிழாவும், ஒலித்தல் செல்லாக் கழனிச் செந்நெல், கரும்பு சூழ் மருங்கில் பழனத் தாமரைப் பைம் பூங் கானத்து, கம்புள் கோழியும், கனை குரல் நாரையும், செங் கால் அன்னமும், பைங் கால் கொக்கும், 115 கானக் கோழியும், நீர் நிறக் காக்கையும், உள்ளும், ஊரலும், புள்ளும், புதாவும், வெல் போர் வேந்தர் முனையிடம் போல, பல் வேறு குழூஉக் குரல் பரந்த ஓதையும்; உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய 120 கழாஅ மயிர் யாக்கைச் செங் கண் காரான் சொரி புறம் உரிஞ்ச, புரி ஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டில் கொழும் பல் உணவு கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய, கருங் கை வினைஞரும் களமரும் கூடி 125 ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்; கடி மலர் களைந்து, முடி நாறு அழுத்தித் தொடி வளைத் தோளும் ஆகமும் தோய்ந்து, சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றிச் செங் கயல் நெடுங் கண் சில் மொழிக் கடைசியர் 130 வெங் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்; கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து, விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி, பார் உடைப்பனர் போல், பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்; 135 அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்; தெண் கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்; பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு, ஆங்கு, 140 உழைப் புலிக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு மழைக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில், மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து, 145 மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும் மங்கல மறையோர் இருக்கை; அன்றியும், பரப்பு நீர்க் காவிரிப் பாவை-தன் புதல்வர், இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர், பழ விறல் ஊர்களும், 150 பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து, மங்குல் வானத்து மலையின் தோன்றும், ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு, காவதம் அல்லது கடவார் ஆகி, பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்- 155 ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி, குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து, வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை- பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா, பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160 இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி, பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமம் சாற்றும் சாரணர் தோன்ற- 'பண்டைத் தொல் வினை பாறுக, என்றே கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் 165 வந்த காரணம், வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கின், தெரிந்தோன் ஆயினும், ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய வீரன் ஆகலின், விழுமம் கொள்ளான்- 'கழி பெரும் சிறப்பின் கவுந்தி! காணாய், 170 ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை; இட்ட வித்தின் எதிர் வந்து எய்தி, ஒட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா; கடுங் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்; 175 அறிவன், அறவோன், அறிவு வரம்பு இகந்தோன், செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன், தரும முதல்வன், தலைவன், தருமன், பொருளன், புனிதன், புராணன், புலவன், சினவரன், தேவன், சிவகதி நாயகன், 180 பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன், தத்துவன், சாதுவன், சாரணன், காரணன், சித்தன், பெரியவன், செம்மல், திகழ் ஒளி இறைவன், குரவன், இயல் குணன், எம் கோன், குறைவு இல் புகழோன், குணப் பெரும் கோமான், 185 சங்கரன், ஈசன், சுயம்பு, சதுமுகன், அங்கம் பயந்தோன், அருகன், அருள் முனி, பண்ணவன், எண் குணன், பாத்து இல் பழம் பொருள், விண்ணவன், வேத முதல்வன், விளங்கு ஒளி, ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது, 190 போதார், பிறவிப் பொதி-அறையோர்' என- சாரணர் வாய்மொழி கேட்டு, தவ முதல் காவுந்திகை தன் கை தலைமேல் கொண்டு, 'ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக்கு அல்லது, என் செவிஅகம் திறவா; 195 காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு நாமம் அல்லது நவிலாது, என் நா; ஐவரை வென்றோன் அடி இணை அல்லது, கைவரக் காணினும், காணா என் கண்; அருள் அறம் பூண்டோ ன் திரு மெய்க்கு அல்லது, என் 200 அருகர், அறவன், அறிவோற்கு அல்லது, என் இரு கையும் கூடி ஒரு வழிக் குவியா; மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது, என் தலைமிசை உச்சி தான் அணிப்பொறாஅது; 205 இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது, மறுதர ஓதி என் மனம் புடைபெயராது' என்று அவன் இசை மொழி ஏத்தக் கேட்டு, அதற்கு ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி, நிவந்து, ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கிப் 210 'பவம் தரு பாசம் கவுந்தி கெடுக' என்று, அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது, 'பந்தம் அறுக' எனப் பணிந்தனர் போந்து- கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று நீரணி-மாடத்து நெடுந் துறை போகி, 215 மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும், தீது தீர் நியமத் தென் கரை எய்திப், போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி- வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர், 220 'காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர் ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்' என்றே- 'நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன் ஆற்று வழிப்பட்டோ ர் ஆர்?' என வினவ-என் மக்கள் காணீர்; மானிட யாக்கையர்; 225 பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்' என- 'உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ ? கற்றறிந்தீர்!' என- தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து, காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க- 230 'எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை; முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக' என- கவுந்தி இட்டது தவம் தரு சாபம்; கட்டியதுஆதலின், பட்டதை அறியார், குறு நரி நெடுங்குரல் கூவிளி கேட்டு, 235 நறு மலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி, 'நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும், அறியாமை என்று அறியல் வேண்டும்; செய் தவத்தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீரோ!' என- 240 அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கிப் பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின், முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்' எனச் சாபவிடை செய்து, தவப் பெரும் சிறப்பின் 245 காவுந்தி ஐயையும், தேவியும், கணவனும், முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என். கட்டுரை முடி உடை வேந்தர் மூவருள்ளும் தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர் அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம் பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும், விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும், 5 ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக் குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம் தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும், பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்; அரங்கும், ஆடலும், தூக்கும், வரியும் 10 பரந்து இசை எய்திய பாரதி-விருத்தியும், திணைநிலை வரியும் இணைநிலை வரியும் அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும், ஈர்-ஏழ் சகோடமும், இடைநிலைப் பாலையும், தாரத்து ஆக்கமும், தான் தெரி பண்ணும், 15 ஊர் அகத்து ஏரும், ஒளி உடைப் பாணியும், என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்; ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று. வெண்பா காலை அரும்பி மலரும் கதிரவனும், மாலை மதியமும் போல் வாழியரோ-வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |