குறம் நூல்கள்

     குறம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்பாகக் குறம் என்னும் உறுப்பு வருவது பண்டைய முறை. இது நாளடைவில் குறவஞ்சி என்னும் தனிவகைச் சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியப் பகுதிகளில் குறி சொல்லும் பகுதியை மட்டும் கூறுவதே குறம். இந்தக் குறம் என்னும் பகுதிக்கு மட்டும் தனியொரு சிற்றிலக்கியமாகத் தோன்றியதே குறம் என்னும் சிற்றிலக்கியம். இந்த வகையில் முதலாவதாகத் தோன்றிய நூல் மீனாட்சியம்மை குறம். இந்தச் சிற்றிலக்கியம் தோன்றிய காலம் 17 ஆம் நூற்றாண்டு.

புகழ் பெற்ற குறம் நூல்கள்