சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 4 |
தினசரி தியானம் |
ஆறுதல் எங்கே? எல்லாம் அழிந்துபட்டுப்போம் இவ் அவனியிலே அண்ணலே, நான் எதைச் சார்ந்திருந்து ஆறுதல் அடைவது? இந்த நிலவுலகிலே எல்லாம் நாசமடைந்து வருகின்றன. நமது அன்புக்குரியவர் அழிந்துப்ட்டுப்போயினர். நண்பர் என்பார் நம்மைக் கைநழுவ விட்டுவிட்டனர். செல்வம் எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை ஒன்று மட்டும் உறுதியாக நிற்கிறது. அவ்வுண்மையும் இறைவனும் ஒன்றே. பொய்க் கூடு கொண்டு புலம்புவனோ எம்மிறைவர் மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே. -தாயுமானவர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |