சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
தினசரி தியானம் |
சத்திய தேவதை சத்திய தேவதையின் ஆட்சியிலிருப்பது நல்வாழ்வு. அதற்குச் செங்கோலாயிருப்பது சாந்தம். அதற்குச் சிம்மாசனமாயிருப்பது மாந்தர் உள்ளம். இரண்டுவித அரசர்கள் நமது உள்ளத்தை ஆளமுயலுகிறார்கள். ஒருவன் கொடுங்கோல் வேந்தன், பொய்யன். காமமும், குரோதமும், போராட்டமும் அவனது செயல். மற்றொருவன் செங்கோல் வேந்தன், சத்தியசொரூபி. தூய்மையும், அன்பும், அமைதியும், அடக்கமும் அவனது செயல். இவ்விருவருள் யாரை நாம் மனத்தகத்து வீற்றிருக்கச் செய்வது? சத்திய வேந்தன் சித்தமிசை குடிகொள்ள இடம்கொடுப்போமானால் நாம் நாம் பாக்கியவான்கள் ஆவோம். புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும். -திருக்குறள் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |