தினசரி தியானம்

பூஜை

     இறையே, போற்றிப் பாராட்டுதற்குரிய பொருள் உன்னையல்லாது வேறு ஒன்றும் கண்டிலேன்.

     தெய்வத்தின் பெருமையை எண்ணுமளவு மனம் தெய்வப் பெற்றி பெறுகிறது. எதைப் போற்றுகிறதோ அதன் பாங்கெல்லாம் மனத்துக்குச் சொந்தமாகிறது. கீழ்மையில் மகிழ்வடைகிற மனம் உண்மையில் கீழ்மையைப் பூஜிக்கிறது. பின்பு அம்மனம் கீழ்மையின் சொரூபமாகிவிடுகிறது. நலமனைத்தின் திரட்சி தெய்வ சொரூபம். தெய்வத்தை வணங்குதலும் நலத்தை வணங்குதலும் ஒன்றே. யாண்டும் நலத்தை நினைந்து நலத்திலே நிலைபெற்றிருப்பதே தேவ பூஜையாகிறது.

உள்ளுறையில் என்னாவி நைவேத்தியம்
     ப்ராணன் ஓங்குமதி தூபதீபம்
ஒருகால மன்றிது சதாகால பூசையாய்
     ஒப்புவித்தேன் கருணைகூர்.

-தாயுமானவர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.