சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
தினசரி தியானம் |
சிற்பி சிற்பி ஒருவன் சிலையைச் செதுக்கி உருவாக்குவதுபோன்று உன்னைப் பற்றிய எண்ணத்தால் அண்ணலே, என்னை நான் உருவாக்குவேனாக. முன் எண்ணியது பின் விளைகிறது. விலக்க முடியாத வல்வினையென்பது முன் எண்ணிய தீய எண்ணங்களாம். வேண்டப்படும் நற்பயன் என்பது முன் எண்ணிய நல்லெண்ணங்களாம். காரண காரியமாக, வினையும் வினைப்பயனும் வந்தமைகின்றன. வினைப்பயன் என்பது எண்ணும் எண்ணத்தில் இருக்கிறது. நலத்தையே எண்ணி, நலத்தையே பேசி, நலத்தையே செய்பவன் தன்னை நல்லானாக்கும் சிற்பியாகிறான். எண்ணித் தம்மை நினைந்திருந்தேனுக்கு அண்ணித்திட்டமு தூறுமென் நாவுக்கே. -அப்பர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |