தினசரி தியானம்

ஹிருதய குகை

     குகனே, எனையாள் நாயகனே, உனக்கு என்றே அமைந்துள்ளது என்னுடைய ஹிருதயம் என்னும் குகை. நீ அதை விட்டு அகலாது அமர்ந்திருப்பாயாக.

     புயல்காற்று எவ்வளவு வேகமாய் அடித்தாலும் மலை உச்சியிலுள்ள குகையில் அது நுழையாது. ஆங்கு அமைதி நிலவுகிறது. அதனுள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கு அசையாது எரிகிறது. புற உலகில் போராட்டம் வேண்டியவாறு நிகழுக. தாக்குதலும் தூற்றுதலும் அதன் போக்காகும். ஆனால் மனத்தினுள்ளே அமைதியும் இனிமையும் ஓங்குக. வெளியே உள்ள கொந்தளிப்பு உள்ளே உறையும் சாந்தத்தைக் களைக்கலாகாது.

படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத்
துடிப்பற்றார்க் கன்றோ சுகங்காண் பராபரமே.

-தாயுமானவர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.