தினசரி தியானம்

கரையற்றது

     பேருணர்வாய்ப் பொலியும் பெரிய பொருளே, உன்னை எந்த வடிவத்திலும் அடக்கமுடியாது என்பதை உணர்வேனாக.

     உணர்வு என்றும், அன்பு என்றும், அறிவு என்றும் இயம்பும்போது நமது அனுபவத்துக்கு எட்டுவது ஒன்று உண்டு. அனுபவத்துக்கு எட்டுகிறது என்றாலும் நமது மனதும் மொழியும் அதற்கு எல்லை கட்டவல்லவை அல்ல. மனது அமைதி பெற்று அப்பேருணர்வில் திளைத்திருத்தல் வேண்டும். மனதினது செயற்கரிய செயல் இதுவே.

உரையற்ற தொன்றை யுரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே.

-திருமந்திரம்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.