தினசரி தியானம்

நெல்லிக்கனி

     கடவுளே, உன்னைக் கருணாகரனென்று அறியாதவர்களுக்கு நீ கைப்பவன் போன்று தென்படுகின்றாய். உன்னை நெல்லிக் கனி எனல் வேண்டும். இன்னாதது போன்று காட்டிய பின்பு, இனியதாகும் பொருள் நீ ஒருவனே. நலமனைத்தையும் எனக்கு நல்குபவன் நீயே.

     ஐம்புலன்கள் மூலம் நுகரும் இன்பம் முதலில் தித்திக்கிறது. பிறகு துன்பமாய் வடிவெடுத்து விடுகிறது. தகவிலாதவர்க்குத் தெய்வ வழிபாடு துன்பம் போன்று தோன்றுகிறது. அதில் தோய்ந்திருப்பவர்க்கு அது தித்திக்கிறது. கேட்டைக் களைய வல்லதும் அதுவேயாம். நலனும் இனிமையும் கடவுளிடத்தே உள.

திக்கொடுகீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்
கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே.

-தாயுமானவர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.