தினசரி தியானம்


பாம்பாட்டிச் சித்தன்

     மன்னே, என் மனது என்னும் பாம்பைக் கட்டி ஆட்டத் தெரிந்துகொள்வேனானால் பிறகு உன்னை நான் வந்தடைவது திண்ணம்.

     ஒழுக்கத்தில் நிலைநிற்கின்றவர்க்கு மனவுறுதி அதிகரிக்கின்றது. நாளடைவில் அது ஆத்ம சக்தியாக வடிவெடுக்கிறது. சரீரத்தின் அடிப்பகுதியில் மூலாதாரம் என்னும் இடத்தில் பாம்பு போன்று அது எழுந்திருக்கிறது. அதற்குக் குண்டலினி என்று பெயர். கடவுள் காட்சிக்காக அதை நன்கு கட்டியாள வல்லவன் சித்தன். அங்ஙனம்நாம் ஒவ்வொரு வரும் பாம்பாட்டிச் சித்தன் ஆகவேண்டும்.

குத்திரமெய்ப் புற்றகத்துக்
   குண்டலிப்பாம் பொன்றாட்டுஞ்
சித்தனைஎன் கண்ணால்
   தெரிசிப்ப தெந்நாளோ?

-தாயுமானவர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.