தினசரி தியானம்

கருமம்

     கடவுளைக் காணுதற் பொருட்டு நான் கருமத்தையெல்லாம் கடந்து செல்வேனாக.

     சினிமாப்படம் என்பது நிழல், வெளிச்சம் ஆகியவைகளின் அசைவு. அந்த அசைவு ஓய்ந்தால் திரை தென்படும். இயற்கையின் கருமம் என்பது சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகியவைகளின் அசைவு. அந்த அசைவு ஓய்ந்தால் இறைவன் தென்படுவார்.

வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோ ர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே.

-திருமந்திரம்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.