தினசரி தியானம்

சுவைத்தல்

     தித்திக்கும் உணவைச் சுவைக்கும் பொழுது உலகத்தவர் செய்யும் பேர் இரைச்சல் எனக்கு உபத்திரவமாகத் தோன்றுவதில்லை. இறைவா, உன்னை நான் எண்ணியிருக்கும் போது உலத்தவர் செய்யும் இடைஞ்சலை நான் எண்ணாதிருக்க அருள்புரிவாயாக.

     கடவுள் வழிபாட்டுக்கு வெளி உலகிலிருந்து உண்டாகும் இடைஞ்சல் இடைஞ்சலல்ல. உண்மையான இடைஞ்சல் உள்ளத்தில் உண்டாகிறது. மனம் இறைவனைச் சுவைக்கத் தெரிந்து கொண்டால் போதும். அப்பொழுது அது எல்லாம் அடையப் பெறுகிறது. ஏனைய பொருள்களுக்கிடையில் இனியவைகளும் இல்லை; இன்னாதவைகளும் இல்லை. சுவைப்பதற்குரிய பொருள் கடவுள் ஒருவரே.

உவட்டாத பேரின்பமான சுகவாரியினை
வாய்மடுத்துத் தேக்கித் திளைக்க
நீ முன்னிற்பது என்றுகாண்?

-தாயுமானவர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.