எம்.ஆர். ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய நன்மதி வெண்பா இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். காப்பு நீர்கொண்ட கொண்டல் நிகர்மாறன் றண்ணளியால் சீர்கொண்ட வெண்பாவிற் செப்புவாம் - பேர்கொண்ட சொன்மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை நன்மதியே நாடி நயந்து. 1 நூல் தருணமுத வாக்கேளிர் தாள்வணங்கு வோர்க்கு வரமருளாத் தெய்வமன வாஞ்சை - பெரிதுறமேல் ஊர்ந்தவுட னோடா வுழைப்புரவி நன்மதியே ஓர்ந்தவ ரகற்றுவரென் றோது. 2 நாடுங்கால் வேதனத்தை நல்காப் புரவலன்றன் மாடிருந்து தொண்டியற்றி வாழ்வதினும் - ஈடுபெறு சீரணியா னேறுகொண்டு செய்ந்நிலத்தை நன்மதியே ஏரினுழல் மேலாமென் றெண். 3 மிக்கவாக் கொண்டுபணி மேவேற்கோ யின்மணியம் தக்கதெனக் கொள்ளேல் தகவில்லார் - பக்கல் வருநட்பாற் றேனன் மதியேநீ செல்லேல் அரிய வனத்தொன்றி யாய். 4 வாய்திறந்தோ ரின்சொல் வழங்காது மௌனியாய் வாய்மகிபன் றன்மை வழுத்துங்கால் - நோய்கொள் செவிகேளான் கண்விழியான் தேர்நன் மதியே சவமவனென் றேதுணிந்து சாற்று. 5
இடைநற் பருவமனை யெய்தல் - மடமைமிகும் தீயர்தவம் குற்றமதைத் தேரா னரசாட்சி தீயவென நன்மதியே செப்பு. 6 கடனளிப்பா னாயுணூல் கற்றவனெஞ் ஞான்றும் இடைவறத்த லில்லாத யாறு - கடவுண்மறை தேர்ந்துணர்ந்த வந்தணர்கள் சேர்நகரி னன்மதியே சார்ந்திருக்கும் வாழ்வே தகும். 7 மருகன்ற னல்லியல்பு மங்கையரின் வாய்மை மருண்மதியா யன்கவிசொல் மாட்சி - வரிகொளுமி தன்னைக்குத் திக்கொள்ளுந் தண்டுலம்வெண் காகவினம் இன்னவில நன்மதியே யெண். 8 அரியபசிக் காஞ்சோ றமுதுவருத் தாமற் றருபவனே வள்ளறனைச் சாரும் - ஒருதுயரம் தாங்கவல்லா னாண்டகையாந் தைரியவா னன்மதியே ஓங்கு குலமணியென் றோது. 9 வருத்துபசி நீக்காவூண் மக்கட்பே றில்லா ஒருத்தி யுடன்வாழ்ந் துழலும் - திருத்தமிலா வாழ்வசத் தின்கறவை மாசுறுகி ணற்றுநீர் தாழ்வென்று நன்மதியே சாற்று. 10 வழங்க வியன்றதே வான்கல்வி தெவ்வர் முழங்கமர்க்கஞ் சாமையே மொய்ம்பு - செழுங்கவிசொல் பாவலரை மெச்சுதலே பாண்டித்தி யம்குதர்க்கம் மேவலிடர் நன்மதியே விள். 11 நன்னசையாய் விச்சை நவிலாவா யன்னையைக்கூஉய் அன்னமெனக் கேளாத வன்னவாய் - பின்னோர்த் தயவுடன்கூ வாதவாய் தாநன் மதியே குயவன்மண் டொட்ட குழி. 12 தொத்துவார் வல்லுடும்பு சொல்வருட நூறிருக்கும் பத்துநூ றாண்டுபெரும் பாம்பிருக்கும் - தத்தும் திரைமடுவிற் பல்காலம் சேர்ந்திருக்கும் கொக்கு புருடார்த்த நன்மதியே போற்று. 13 பித்தளைகாந தங்கியுலைப் பெய்துருக்கி வாத்திடினும் நத்துபசும் பொன்னியல்பை நண்ணுமோ - சித்தம் மயர்வுறுகீ ழோர்நன் மதியேமே தக்க வியல்புளா ராத விலர். 14 புனலருந்து வாம்பரியைப் பொங்கு மதத்தால் அனலுகுக்குங் கட்களிற்றை யாவின் - நினைவொடுசெல் புங்கவத்தைக் கல்லாத புன்மதியை நன்மதியே சங்கையின்றி நண்ண றவிர். 15 நன்றியற்றி னார்மகிழ நன்றாற்றல் விந்தையின்றால் கொன்றன்ன வின்னா குறித்தியற்றும் - வன்றொழிலோர் துன்புறுத்துங் காலத்தும் தூயவர்க ணன்மதியே இன்புறுத்து வாரென் றிசை. 16 தூரிற் கரும்பினிதாய்த் தோன்றிமேல் வன்மைமிக்க சீரிலாக் கண்கடொறுந் தீயதாய்ப் - பாரில் முடிவி லுவர்ப்புறல்போல் முற்றுங் கயவர் தொடர்பென்று நன்மதியே சொல். 17 எத்தருணத் தெம்மொழிக ளேற்குமோ வம்மொழிகள் அத்தருணத் திற்புகன்று மந்நியர்தம் - சித்தமது நோதலின்றித் தாநோவா நோன்மையன்றோ நன்மதியே ஏதமிலாச் சான்றோ ரியல். 18 குற்றமே நாடுங் குணமிலிபாற் றொண்டுசெய உற்றுழல லால முகுபகுவாய்ப் - புற்றரவப் பையடியிற் றேரை படுத்தலென நன்மதியே ஐயமின்றித் தெள்ள வறை. 19 ஏரிநிறை நீரா லெழிலுறுங்கா லத்தடத்தில் ஆருந் தவளை யயுதமாம் - தாரணியில் பொற்றிரளான் மேன்மை பொருந்துங்கா னன்மதியே பற்றுடையே மென்பார் பலர். 20 பக்குவமில் காய்பறியேல் பந்துக்க ளைப்பழியேல் தக்கபடை மண்டும் சமரின்மனம் - நெக்குவெரின் இட்டகலே னன்மதியே யிங்கிதங்கூ றுங்குரவர் கட்டளைமீ றேனீ கடந்து. 21 ஒருநகரிற் கோர்கணக்கன் ஓர்வழக்குத் தீர்ப்போன் ஒருவனே யாகாம லூரின் - வருவழக்கம் பன்முறையு மாறிற் பருவரலுற் றந்நகரம் நன்மதியே வீயுமென நாட்டு. 22 உடன்பாடி லாமனையாள் ஒப்புரவில் மன்னன் தொடர்புறுதி கொள்ளாத தோழன் - விடவுரியார் என்றறியா தானே யிடைய னிடையனிடை யன்றென்று நன்மதியே யாய். 23 பாவுகல மேற்சகடம் பண்டியின்மே லந்நாவாய் மேவுதலு முண்டிதனை விள்ளுங்கால் - வீவில் கலையார்ந்த நன்மதியே கைத்துடைமை யின்மை நிலையாவென் றின்றே நினை. 24 வெந்திறன்மிக் கோனேனும் மென்மனையை யன்னவடன் தந்தைமனை யிற்பலநா டங்கவிடல் - சந்தைக் கடையில்விலை கூறியந்தக் காரிகையை விற்று விடலென்று நன்மதியே விள். 25 ஏசவரு நாயதனை யேற்றியே - நேசமுடி சூட்டுகினு மந்தச் சுணங்கன் குணங்கெடுமோ தேட்டமுறு நன்மதியே செப்பு. 26 தவளைக்கு காலிறுதல் சர்ப்ப மதற்கு நவையார் மிகுபிணிதா னண்ணல் - இவரும் மனைதீயா ளாதல் வறுமையுறன் மூப்பில் இனவினலே யாநன்மதி யே. 27 முளரிபுன னீங்கின் முளரிமலர்க் கேள்வன் ஒளிர்கரத்தாற் றீய்ந்திறுத லொப்பத் - தளர்வணுகித் தந்தநிலை மாறிற் றமராலுந் துன்புறலில் விந்தையென்னோ நன்மதியே விள். 28 நாட்டுகணக் கன்கணக்க னம்பி னிறப்பனைய கேட்டையுறு வானதனாற் கேண்மையுடன் - தேட்டமுறுந் தன்மரும மோர்கணக்கற் சாராவண் ணங்கணக்கன் நன்மதியே வாழ்ந்திடுத னன்று. 29 மாகணக்கன் றன்னை மகிழ்விக்கா துண்டவூண் தேகஞ்சே ராதிருசிற் றேய்க்குமெண்ணெய்ப் - பாகமின்றேல் ஈசன் சகடு மிறையுநக ராதெனவீண் பாசமிலா நன்மதியே பன். 30 சாந்த குணங்கணக்கற் சார்ந்தாலும் வன்றந்தப் பாந்தள்தீண் டாதேனும் பல்புகர்மா - வாய்நதகடாம் விட்டாலும் தேள்கொட்டா விட்டாலு நன்மதியே கிட்டார்கள் மேதினியோர் கேள். 31 மேலியல்தே ரும்பருவ மேவுமுன மக்கட்குப் பாலியவி வாகமதைப் பாலிப்பர் - காலமுற்று முற்றாத காய்துவர்ப்பு மொய்க்குமன்றித் தீஞ்சுவையைப் பற்றாது நன்மதியே பார். 32 செய்யதமிழ்த் தேர்ச்சிமிகச் சேராதான் சொல்செய்யுள் செய்யுமிங்கி தந்தன்னைத் தேரான்பால் - செய்யுநட்பு மேவியக லேன்மெய்யான் வில்லாண்மை நன்மதியே பாவிக்கி லின்னனவீண் பார். 33 கொள்ளேல் கொடியோர்தங் கூட்டுறவு கொண்டபுகழ் தள்ளேல் கடனளித்துச் சஞ்சலத்துக் - குள்ளாகேல் என்புருக்கு மென்குதலை யேந்திழையார் நன்மதியே அன்புளரென் றுன்னே லகத்து. 34 காதலொடில் வாழக் கருதா மதியிலியாம் மாதுடனில் வாழ்க்கையுற வாஞ்சித்தல் - மாதுரியச் சார மொழிகருப்பஞ் சக்கையினை நன்மதியே ஊரெறும்பு மொய்த்திடலொக் கும். 35 காரணமில் லாநகையுங் காதலன்பா லன்பில்லா நேரிழையும் பூரணமில் நெய்படுநற் - பூரிகளும் பல்லியமில் லாமணமும் பாரினில்வீ ணாமெனவே தொல்லியல்பார் நன்மதியே சொல். 36 நல்குமின்ப வில்லா ணவியப் புரைநாடிப் பல்கலாஞ் செய்யேலப் பண்மொழியாள் - மல்குகண்ணீர் வாரும்போ தம்போச மாதுன் மனையைவிட்டுப் பேருமென்று நன்மதியே பேசு. 37 அன்புகுன்றா நாளி லருங்குறைசற் றேனுமெண்ணா தன்புகுன் றத்தொடங்கு மற்றைமுதல் - இன்புடன்செய் நற்றொழிலி லுந்தீய நாடுதல்கா ணன் மதியே குற்றமுறுங் கீழோர் குணம். 38 சீர்த்தவியன் மேலோர் சிறியோரைத் தம்மொடுறச் சேர்த்தலா னீக்கரிய தீங்குறுவர் - போர்த்துடலூன் மேயலுறு வன்முகடு மேவுதலா னன்மதியே பாயன்மிக மொத்துப் படும். 39 மெய்யழகி லைங்கணைகொள் வேளெனினு மான்றோர்சொல் செய்யமுது நூலனைத்துந் தேர்ந்தாலும் - மையணிகண் வேசையணு காமற்கை விட்டகல்வா ணன்மதியே காசையளி யானைக் கடிந்து. 40 தகைசால்பண் பில்லாத் தனயனைப்பெற் றோன்றன் அகிலகுண முங்கெட் டழியும் - நகுதரளம் கக்குமிக்கு முற்றிக் கதிரீனி னன்மதியே அக்கரும்பி னின்சா றறும். 41 கன்னியருள் ளன்புங் கடுக்கட் செவிநட்பும் அந்நியவில் லக்கிழத்தி யாசையும் - துன்னரையன் நம்ப மனங்கொளலு நன்மதியே யின்னிரத நிம்பமும்பொய் யென்றே நினை. 42 மகிபுகழு மாண்டகையை வாழ்மனையாள் கண்டால் அகனமர்ந்தின் சொல்லா னழைக்கும் - புகழ்வாய் நடைப்பெருமை யில்லானை நன்மதியே நோக்கின் நடைப்பிணமென் றெள்ளி நகும். 43 கடந்த நினைந்துருகேற் காரிகையா ரன்பு மிடைந்தவரென் றெண்ணேன் மிலைந்த - வடந்திகழ்தோள் பூவலரந் தப்புரத்துப் பூவையரை நன்மதியே மேவமனங் கொள்ளேல் விழைந்து. 44 எறும்பார்ந் தியற்று மிரும்புற்றுப் பிண்ணா வுறும்பாந்த ளார்வாத லொப்ப - வறும்பாழ் மதிகேடன் பொன்னன் மதியேபா ராள்பூ பதிசெயிர்த்து வவ்வப் படும். 45 உறவனரல் லாரு முறவுடையே மென்று செறிவொடுறச் சூழ்வாங்ஙன் சேரின் - பெறவரிதாய்த் தேடுமருஞ் செல்வஞ் சிதறுண்டு நன்மதியே ஒடுமென்று நெஞ்சி லுணர். 46 செங்கைக் கணியீகை தேர்வேந்தர்க் கம்பணியாம் பங்கமறப் பொய்யாமை பத்தினியாம் - மங்கைக்கு மான முயரிழையாம் மன்னீதி நன்மதியே மானவர்க்குப் பூணா மதி. 47 ஆய்ந்தோய்நது செய்யா தவசாத்தி னாற்றுதலால் வாய்ந்தகரு மஞ்சிதைந்து மாயுமே - ஆய்ந்தோய்ந்து செய்யிற் சிதைந்ததுநற் சீர்த்தியுற்று நன்மதியே கையிலுறு மென்றே கருது. 48 தன்னுளடங் காச்சினமே சத்துருவாந் தன்பொறையே தன்னரணாந் தன்றயையே சார்கிளையாந் - தன்னுடைமை நன்றென்று வந்திடலே நன்மதியே வான்றுறக்கம் கன்றுமன மேவனர கம். 49 தன்னகரார் வான்றவனைத் தன்புதல்வன் வாலறிவைத் தன்னரிவைப் பேரழகைத் தன்முன்றில் - துன்னரிய வோடதியை யுள்ளத் துவகையொடு நன்மதியே நாடமனங் கொள்ளார் நரர். 50 தானிழிமி டிக்ககடலிற் றாழ்தல்புவி - யீனமுறல் தன்மரண மூழி தனக்கினியாள் விண்ணரம்பை நன்மதியே யீ துண்மை நம்பு. 51 தமரில்லாத் தானத்துந் தம்மன்ப ரில்லா வமையத்து மேதிலர்சே ராங்கும் - சுமையின்றிச் சங்கைகொளு மவ்விடத்துந் தாஞ்சேற னன்மதியே இங்கிதந்தேர்ந் தோர்க்கமைதி யின்று. 52 வெள்ளிலையுண் ணாவாயும் மென்மணஞ்செய் நாதனுடன் உள்ளமிணங் காதா ளுடன்வாழ்வும் - கள்ளொழுகும் அங்கமலம் விணடலரா வாவியுட னன்மதியே திங்களில காவிரவுந் தீது. 53 வாளுரகத் திற்கு வலியதலை யிற்கடுவாம் தேளிற்கு வாலில்விடஞ் சேருமே - கோளர்களாம் தீயுருவார் கீழ்கட்குத் தேகமெலாம் வெங்காளம் ஏயுமென நன்மதியே யெண். 54 தலைமறையப் பொற்குவையைத் தந்தாலு மன்பு நிலைபெறா தாங்கணிகை நெஞ்சில் - விலைமாது மத்தகத்த டித்தாணை வைத்தாலு நன்மதியே சித்தமக ளங்கமிலை தேர். 55 சிரமார்ந்த குஞ்சிமிகச் சிக்குற்று நாறி யுரவாகம் போர்க்கு முடுக்கை - பெருமாசு கொண்டுசீர் குன்றிற் குலமாது நன்மதியே கொண்டவற்ப ழிக்குமெனக் கூறு. 56 கானீண்ட சோலையிற்பல் கந்தமலர்ச் சாறெடுத்துத் தேனீச்செய் தேன்பிறரைச் சேரலைப்போற் - றானீதல் உண்ணலின்றிக் கூட்டும்பொன் னோடுங்கா ணன்மதியே மண்ணின்மன் கையில் வறிது. 57 வன்புறங்கூற் றாலுய்யும் வஞ்சகர்சொற் கேட்டரசன் மன்பதைக்கின் னாவியற்றல் வண்மையொடு - பொன்பொழிந்து மட்டலருங் கற்பகத்தை வன்னியிற்றீய்க் குங்கரிக்கா வெட்டலென நன்மதியே விள். 58 பாழிநிதி கட்குப் பதியாங் குபேரன்றன் றோழ னெனவிருந்துஞ் சோமேசன் - ஏழமையாய் அம்பலியி ரந்துண்டா னாதலா னன்மதியே தம்பொருட மக்குதவி சாற்று. 59 தீரர்க்கி யற்றுதவி தெங்கிளநீ ருண்ணிறையும் சார மதற்குச் சமமாகும் - பாரில் பெருமை மிகப்பிறங்கப் பேசரிய வின்பம் தருமென்று நன்மதியே சாற்று. 60 அரியவழிச் செல்லே லாய்ந்ததுணை யின்றி யரகத்தி லன்ன மருந்தேல் - உரிமைபிறர்க் குள்ளபொருள் கொள்ளே லொன்னாரு நன்மதியே துள்ளவன்சொற் கூறே றுணிந்து. 61 ஆயங்கொள் வானை யருங்கவறா டாகுலனை மாயஞ்செய் தட்டானை வாணிபனைத் - தீய நடக்கை விலைமாதை நன்மதியே நம்பேல் இடக்கரனை நீயென்று மே. 62 இன்மொழியாற் றீம்பா லெவருமருந் தார்சினத்து வன்மொழியால் வெவ்விடமும் வாய்க்கொள்வார் - இன்மொழிதான் ஐயோ பயனிலதா மாதலா னன்மதியே வெய்யோர்க்கு வன்சொல் விளம்பு. 63 மெய்ம்மை நெறிநிருபன் மீறி யொழுகுதல்வெங் கைம்மைப்பெண் வீட்டிலதி காரமுறல் - பொய்ம்மையொன்றே மேயகணக் கன்சுகுண மேவலிவை நன்மதியே தீய பயக்குமெனச் செப்பு. 64 செறிபொருள்சே ரம்பனுவ றீஞ்சுவையார் கீதம் அறிவிலிக்கி சைக்க வணுகல் - உறுமொலிகொள் காதில்செவி டன்பாற்போய்க் கம்பெடுத்துப் பம்பம்மென் றூதலென நன்மதியே யோது. 65 நகையேற்றாய் தந்தை நரபதிபால் வீணே நகையேற் பிறன்மனையை நண்ணி - நகையேல் அவையினவை யேன்மறைதேர் அந்தணரை யின்ன நவையிலா நன்மதியே நன்று. 66 புனலுயிர்க்கா தாரமாம் பொற்பாரா தாரம் வனமதுர மென்மொழிக்கு வாயாம் - மனிதர்க்கு மானைவிழி யார்மணியாம் மாந்தர்க்கு நன்மதியே தானை யணியெனவே சாற்று. 67 இகலாகா தியாவரொடு மின்னலுற்ற பின்னர் அகமலைத லாகா தவையில் - பகச்சொல்லல் தக்கதன்று தன்னெஞ்சைத் தையலர்பா னன்மதியே சிக்கவிட லாகாது தேர். 68 கொண்டமனை யாளிடத்தும் கொற்றவன் றன்பாலும் அண்டர்தொழுந் தேவிடத்து மான்மாவைக் - கண்ட குருவிடத்து நன்மதியே கொஞ்சுமகார் பாலும் தருகையுறை யோடணுகல் சால்பு. 69 தொண்டியற்ற லிற்பணிப்பெண் தூயவுரு வத்தரம்பை பண்டைமந்தி ரத்தமைச்சு பற்றுடனே - உண்டி உதவலிற்றா யானவளே யொண்மனையா ளென்றே இதமாக நன்மதியே யெண். 70 பிறன்மனைக்குக் கூடப் பிறந்தாரை யொப்பப் பிறர்பொருள்வவ் வாதவரைப் பேணிப் - பிறர்தம்மைப் போற்றநடந் தொன்னார் புழுங்கினா னன்மதியே சீற்றமுறு வாரான்றோர் தேர்ந்து. 71 பிறர்க்குரியா ணாடேல் பிறர்பொருளை வவ்வேல் பிறருதவி நோக்கிப் பிழையேல் - செறிசெல்வம் போயபின்சுற் றத்தகத்திற் புக்குழலே னன்மதியே தீயகுழுச் சேரே றெளிந்து. 72 வீட்டுமனு நற்பருவ மெல்லியலார் பாலிருப்பின் நாட்டுபுகழ் குன்றி நவையுறுவன் - கோட்டமிலா நங்கை யருந்ததியு நன்மதியே யாடவர்கள் அங்குழுப்புக் காற்சீ ரறும். 73 பிறனையுன்னும் பேதையோரீஇப் பீதியலாக் கையாள் அறநீக்கி மாற்றமெதி ராடும் - அறிவில்லாக் கான்முளைக டிந்துபல கான்மனையைச் சாராத நோன்மைநன்று நன்மதியே நோக்கு. 74 பிறர்க்குன் னசைவிள்ளேற் பிறரில்லத் தென்றும் வறிதுறே லந்நியன்மேல் வாஞ்சை - யுறுமனையைச் சேரவுன்னே னன்மதியே தீயவிடக் காம்புரவி யூரமனங் கொள்ளே லுணர்ந்து. 75 திரமெனவுட் பூரியேற் சேர்ந்த - வரவைமிகத் தர்ப்பமுறு மாறுவிடேல் தங்கரிய தானத்தே நிற்பவுன்னே னன்மதியே நீ. 76 பற்றுலக்கிப் பின்னருந்தும் பாகிலைநல் லெண்ணெய்மூழ் கற்றைநாட் கண்டுயில லையமறக் - கற்ற புலமைமிகு நன்மதியே போதமிகு வாரோ டிலகல் விலையரிதென் றெண். 77 பாடறியா தான்பாற் பணிசெய்த லும்விரும்பி நாடலிலா நட்பதனை நாடலும் - நீடு நிதிக்காகச் செய்நட்பு நீணன் மதியே நதிக்கெதிர்த்து நீந்தலென நாட்டு. 78 பாலார்ந்த நன்னீரப் பால்போ லிருப்பினும்பால் மேலாங் குணம்போம் விதம்போல - மாலார்ந்த துன்மதியின் கூட்டுறவு துன்புறுத்தும் வாய்மையினை நன்மதியே யோர்ந்து நவில். 79 கயவர்க்கு நேர்துன்பங் காதலித்துத் தீர்ப்போர் துயருறுவ ரென்ற றுணிபாம் - உயரனலிற் பட்டுவருந் துந்தேளைப் பாலிப்போர் தம்மையது கொட்டுமென்று நன்மதியே கூறு. 80 செய்யவே வாக்கருமஞ் செய்யலுள்ள மொவ்வாத தையன் மணமரசன் றானறியாச் - செய்யபணி வேண்டியழை யாவதுவை வீடுறலொவ் வாக்கேண்மை ஈண்டிவையா கா நன்மதி யே. 81 அளவிறிரு விற்குயிரோ ராயிழைபே ரூர்க்கு வளவணிக னின்னுயிராம் வாய்த்த - களமத்தின் ஆருயிர்நீ ரும்பற் கருந்துதிக்கை சீவனா வாருமென நன்மதியே யாய். 82 வலியபுலிப் பால்கொணர்ந்து வைத்தாலு மீரல் உலையவரிந் தங்கை யுதவித் -தலையுயரம் நற்பொற் றிரள்குவித்து நல்கிடினும் நன்மதியே அற்பொன்றாள் வேசை யவள். 83 விதிப்பயனன் றாங்காலம் வெங்கா னடைந்தும் மதிப்புடைய பல்பொருளும் வாய்க்கும் - விதிப்பயன்றான் தீதுறுங்காற் செம்பொற் றிடருறினு நன்மதியே ஏது முறலரிதென் றெண். 84 பாங்கர்ப் பகைஞனுறின் பண்டிராய சம்பார்த்தோன் ஓங்கதிகா ரத்துவரி னூர்க்குடிகள் - தீங்கியற்றும் வெங்குறளை கூறுவரேல் மிக்கதுயர் நன்மதியே அங்கணக்கற் சாருமென லாம். 85 பொன்கொதுவை வைத்திடுதல் போர்முகத்து நில்லாது பின்கொடுத்த லாவணத்திற் பேதமையாய் - மின்கனகம் வீண்செலவு செய்தல் வெறுக்கையில் லாவறியன் கேண்மைகொள னன்மதியே கேடு. 86 மாவெந் திறலுள்ளேம் மண்டலத்தி யாமென்றே யேவ ருடனு மிகல்கொள்ளேல் - தீவிடங்கால் புற்றரவு நன்மதியே பூவுலகிற் பொன்றும்பல் சிற்றெறும்பு மொய்க்கச் சிதைந்து. 87 விரிதிசைசூழ் பாராளும் வேந்த னருகிற் பிரதானி யின்மை பெரியோர் - கருதித் துதிக்கைபெறு நன்மதியே துன்னுமத வேழம் துதிக்கையின்றி நிற்றலெனச் சொல். 88 நல்லவமைச் சாரரசு நானிலத்தின் மேன்மையுறும் நல்லமைச்சில் லாநாடு நன்மதியே - வல்ல வியந்திரங் கீல்கழல விற்றுகுதல் போல பயனற் றழியுமெனப் பன். 89 சொல்லியமாற் றத்துயிராந் தூய்மைபெறு வாய்மை மெல்லியற்குச் சீவன் மிகுமானம் - அல்லலிலாக் கூட்டுநவார் நன்மதியே கோட்டைக் குயிர்வீரர் சீட்டிற் கெழுத்தெனவே செப்பு. 90 பெருமானி யூக்கமற்றுப் பேதைமையார் கீழின் அருகிருந் துய்ய வணுகிச் - சிரமமுறல் நாழி புனலுக்கு ணன்மதியே கைம்மாவின் பாழிமெய்ம்ம றைத்தலெனப் பன்னு. 91 அம்முகமன் கூறா வரசனிடந் தொண்டுசெயின் இம்மையம்மை யில்லையெங்ங னென்னிலோ - கம்மும் இருணிறையு மில்லி லிருகைத் தடவித் திரியலென நன்மதியே தேர். 92 மெய்யுறுதி காட்டியதன் மேற்பொய்த் திடமுயலேல் செய்யவா தாரமாய்ச் சேர்கிளைஞர் - நையவசை சொல்லேற் சினவாசற் றொண்டியற்றேல் பாதகரூர் செல்லேனீ நன்மதியே தேர்ந்து. 93 உருவிற் பெரியனினு மொண்ணயங்கை சோரா நானே பெரியனென்பர் நல்லோர் - பெருமைமிகு மாகன் மலைநிகரு மத்தகய நன்மதியே பாகற் கடங்குமிது பார். 94 சேதகமார் மண்ணுழவு செய்யேற்றீ வற்கடத்தில் ஓது முறவினரில் லுற்றழுங்கேல் - ஏதிலர்க்குன் உண்மருமம் விள்ளே லுயர்படையை நன்மதியே திண்மையிலார்க் கீயே றெளிந்து. 95 சாலிவிளை யாவூருந் தார்வேந்தில் லாவூருங் கோலரசன் வாழாத கோவிலும் - மேலாந் துணையின்றிச் சென்னெறியுந் தூநன் மதியே பிணமெரியு மீமமெனப் பேசு. 96 ஓகையொடு நாதன்பா லுள்ளன்பில் லாளோடு தாக முடன்கணவன் றான்வாழ்தல் - மோகமுடன் வாய்த்தகற் சாணையினில் வாரியின்றிச் சந்தின்முறி தேய்த்தலென நன்மதியே செப்பு. 97 ஆருரையுங் கேட்டலா மவ்வாறு கேட்டவற்றைத் தீரவா ராய்ந்து தெளிந்திடலாம் - நேருற்றுக் கண்டுமறி யாநிருபன் காசினியி னன்மதியே துண்டரிக்க வாயனெனச் சொல். 98 பாகிலையுண் ணாவாயும் பண்பார்முன் னூலனைத்தும் மாகுரவர் பாலோதா வாயுமிசை - மோகமுறத் தேம்பலின்றிப் பாடாவாய் சீர்மைபெறு நன்மதியே சாம்ப லிடுமுழையாய்ச் சாற்று. 99 பல்லார்செல் பாதையிற்புற் பற்றாது பற்றிடினும் புல்லார்ந்தி டாதிறுதல் போலவே - வில்லார் நுதல்விலைமா தன்புகொள்ளாள் கொண்டாலு நொய்தாய்ச் சிதையுமென நன்மதியே செப்பு. 100 பலபணிசெய் தட்டான் பழக்கம் - மலைவாய்க் கனவினிற்காண் செல்வம்பல் காலமுறு மென்று மனநம்ப னன்மதியே வம்பு. 101 நன்மையுறாக் கல்வி நவையி லபிநயத்தின் தன்மை யிசையிரதந் தான்செறியாப் - புன்மைமிகு பாடன் மனக்கிளர்ச்சி பற்றாப் பழக்கமவை தேடலில்சொன் னன்மதியே தீது. 102 அதிக சரச மருவருப்புக் கேது அதிகவின்பந் துன்பமே யாக்கும் - மிதமின்றி யோங்கி வளர லொடிதற்காந் தாழ்மையுறல் ஓங்கலென நன்மதியே யோது. 103 மேலணுகாப் புன்னெஞ்சார் வீணனைப் பஞ்சமனை ஞாலமதிற் றட்டானை நாவிதனைச் - சீல முறுமிதராக் கொண்மகிப னோங்குதலில் செங்கோல் இறுமென்று நன்மதியே யெண். 104 மங்கையர்பால் வாதாடேல் மாண்ட வியன்குணங்கள் பங்கமுறக் கைவிடேற் பாலருடன் - சங்கையின்றித் தொந்தமுற நட்டவர்பாற் சொற்பழகே லாளிறையை நிந்தைசெய்யே னன்மதியே நீ. 105 திருவுறுநற் காலமுறிற் றெங்கினிள நீருண் மருவுபுனற் போன்று வருமால் - திருவறுங்கால் வீயுங்கா ணன்மதியே வெங்கண் மதமாவின் வாயுறுவி ளங்கனியின் மாய்ந்து. 106 மதியொருவன் மேல்வைத்த மங்கையின்மே லன்பாய் மதியிலியோர் தூர்த்தன் வறிதே - நிதமணுகும் பூசைப் பகுவாய்ப் புகுங்கிள்ளை பஞ்சரத்திற் பேசலுண்டோ நன்மதியே பேசு. 107 மைந்தன் றனக்குதித்த வாய்மைசெவி யுற்றவந்நாள் தந்தை யுறுமகிழ்ச்சி தான்சிறிதாம் - மைந்தனுல கெங்கும் புகழ்படைத்தா னென்னுமொழி கேட்டுவகை பொங்குமென நன்மதியே போற்று. 108 ஈனமுறு சாதி யெனினுங்காற் காசுக்கும் தானுதவா னாம்வீணன் றானெனினும் - மானமிலா வேசை மகனெனினு மேதினியி னன்மதியே காசுடையா னேபெரியன் காண். 109 நன்மதி வெண்பா முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF திருமால் வெண்பா - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நல்லை வெண்பா - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF திருவிடைமருதூர் உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF மேகவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF பாண்டிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் இருப்பு உள்ளது விலை: ரூ. 299.00தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |