புராணத் திருமலைநாதர் அருளிய மதுரைச் சொக்கநாதருலா கலிவெண்பா பூமேவு செல்வி புணருந் திருமாலும் தேமேவு கஞ்சத் திசை முகனும் - தாமேவி 1 இன்னநெறி யின்னசெய லின்னவுரு வென்றறிவால் உன்ன வரிய வொருமுதல்வன் - தன்னிகராம் 2 ஆதி யதாதி யடிமுடியொன் றில்லாத சோதி யளவுபடாத் தோற்றத்தான் - ஓதும் 3 இமய முதல்வி யிறைவி மறைதேர் சமய முதல்வி தலைவி - உமைகௌரி 4 மாணிக்க வல்லி மரகத வல்லியிசை பேணித் தமிழறியும் பேராட்டி - காணரிய 5 பங்கயற்கண் ணான்கனக பங்கயக்கண் ணான்புகழ்ந்த அங்கயற்க ணம்மைபுண ராகத்தான் - பொங்கும் 6 செழுந்தண் டமிழ்வெள்ளந் திண்முனிமா மேகம் பொழிந்த பொதியப் பொருப்பன் - மொழிந்த 7 இறைமுனருட் பாட லெதிரேற்று நன்னூற் றுறைபுகழ்ந்த வைகைத் துறைவன் - நறைகமழும் 8 வான்பாயுஞ் சோலை வயற்செந்நெல் கன்னலுக்குத் தேன்பாயும் பாண்டித்திருநாடன் - கான்பாடல் 9 தங்கு மறையோசை ஈங்கத் தமிழோசை பொங்கு மதுரா புரிவேந்தன் - எங்கும் 10
மருவுந் தொடையிதழி மார்பன் - பொருவில் 11 துரகங் கறிறு துவசங் கதிகள் விரவுங் கடிய விடையன் - பரவரிய 12 எங்கோன் மறைமுரச னெவ்வுயிர்க்குந் தன்கருணைச் செங்கோ னடாத்துஞ் சிவானந்தன் - துங்கப் 13 பனுவன் மறைகள் பரவு முனைவன் அனக னசல னகண்டன்-வனசப் 14 பதியா ரணன்படைக்கப் பாலித்தோன் காக்கும் அதிகார மாலுக் களித்தோன்-பதியாய் 15 நரமடங்க லாங்கார நீங்கி நடுங்கச் சரபவுரு வங்கொண்ட தாணு -வெருவாமல் 16 எப்புவன மும்புரப்பா ரெவ்வெவரு மேத்துதலால் முப்புரமுஞ் சுட்டவிள முரலான்-ஒப்பிலா 17 ஐந்தருநாட் டண்ண லரும்பழிக்கா வன்றுதனக் கிந்திரவி மான மினிதமைத்து-வந்தித் 18 தழகிய சொக்கரென வானதிரு நாமம் குழைவுதரு நேசமுடன் கொண்டோன்-பிழையகல 19 மன்னு கடவுட் கணிறுவினை மாற்றியதன் பின்ன ரடைந்த பெருவணிகன்-தன்னால் 20 அறிந்த வழுதி யழகிய சொக்கர் உறைந்த திருவெல்லை யுற்று-நிறந்தயங்கும் 21 மண்டபமுஞ் சூளிகையு மாளிகையு நீளுமணித் தண்டரள பீடிகையுஞ் சாளரமும்-மண்டுமெழில் 22 அங்கயற்க ணம்மைதிரு வாலயமு மாமதிகளும் பொங்குமணிக் கோபுரமும் பூங்கிடங்கும்-எங்கணும் 23 நீடுபல வீதிகளு நேரின்றித் தாரகையைக் கூடி வளர்மாட கூடமுடன்-ஆடகத் 24 தெற்றியுந் தோரணமுஞ் செய்குன்றுந் தேர்நிரையும் சுற்று மலர்த்தடமுஞ் சோலைகளும்-மற்றும் 25 நலமுடைய வெல்லா நகரமைத்துத் தென்பாற் குலவு வடபாற் குடபாற்-கலையூரும் 26 சூலிக்குங் காளிக்குந் துய்ய சுடராழி மாலுக்குங் கோயில் வகுத்தமைத்துக்-கோலரிய 27 பாசப் பகையாம் படர்சடைமேற் கங்கைநீர் வீசிப் புனித மிகவருளித் - தேசு 28 மதியி னமிர்தத் துளியான் மதுரம் பதிமுழுது மெய்தப் பணிப்பப் - புதுமை 29 மருவு புரியு மதுரா புரியென் றிருநலமு மேத்துபெய ரேற்க - அருமறையோர் 30 ஆதிபல சாதிகளு மண்ணல் பணிவிடைக்கங் கோது பரிகரமு முற்றமர்த்திப் - போத 31 மதுரா புரேசற்கு வைதிக சைவ விதியாரப் பூசை விளக்கிப் - பதியுறையும் 32 மன்னன் குடைவீர மாறன் குலதிலகன் தென்னன் செழியன் செகதீரன் - முன்னை 33 ஒருநாள் மறைவிதியா லுற்றருளாற் கண்ட திருநாளி லங்கோர் தினத்தில் - உரியவரால் 34 குற்றமிலா மெய்பூசை கொண்டருளி மிண்டுநவை அற்ற விழாச்சிறப்பு மானதற்பின் - கொற்றமறைத் 35 தண்டமிழும் வாசகமுஞ் சங்கத் தமிழமுதம் மண்டுந் திருவிசையு மந்திரமும் - தொண்டர் 36 அருள்விரித்த சேக்கிழா ரான்றதமிழ்ப் பாடற் றிருவிருத்தச் செய்யுட் சிறப்பும் - இருமருங்கும் 37 பொங்க மகளிர் புரியாடம் பஃறீபம் கங்குற் பொழுதைக் கடிதகற்ற - எங்களிடத் 38 தல்லற் பவந்தொலைக்கு மங்கயற்க ணம்மையுறை செலவத் திருக்கோயில் சேர்ந்தருளி - எல்லோர்க்கும் 39 நீங்கா விடையருளி நீங்கா வுரிமைபுரி பாங்கா மடவார் பணிபுரியத் - தேங்குமணம் 40 சேர்ந்த மலர்த்தொடையுந் தெண்ணித் திலத்தொடையும் ஆர்ந்ததிருப் பள்ளி யறையின்கண் - போந்து 41 மலயத் தனிக்கால் வரசரனந் தைவந் துலவப் பரிமளங்க னோங்கப் - பலவுயிரும் 42 முன்னை யகில முழுதும் பயந்தவொரு கன்னிகையுந் தாமுங் கலந்தருளி - இன்னருளால் 43 ஈருருவு மோருருவா யெவ்வுயிரு மீடேற ஓருருவு மீருருவா யுற்றுணர்ந்து - சீருதவும் 44 வேதவொலி சங்கவொலி வீணையொலி யாழுதவும் கீதவொலி யெங்குங் கிளர்ந்திசைப்பப் - போதின் 45 மருவிரித்த தெய்வ மலரணையை நீங்கித் திருவிருப்பி லன்பருடன் சேர்ந்து - பெருவிருப்பிற் 46 சைவ சவுராதி சண்டாந்த வர்ச்சனைகள் மெய்வளரக் கொண்டு விளக்கமுறக் - கைவளரும் 47 மாறின்மணி மண்டபங்க ணாயனெனு மண்டபத்தின் ஏறிமணிப் பீடத் திருந்தருள - ஏறுடையான் 48 தன்பா லலகில்பணி சாத்துமறை யோரிறைஞ்சி அன்பா லணிபுனைவா ராயினார் - ஒன்பதுகோள் 49 ஏற்க வணங்கு மெழில்சேர் நவமணிசூழ் காற்கமல வீரக் கழல்விளங்க - ஆர்க்கும் 50 உகத்திருளை யெல்லா மொழிக்க - மிகுத்த 51 திகழ்வாள் வயிரமணி சேருதா பந்தம் அகல்வான் கதிரைமதி யாக்கப் - புகலளிகள் 52 சாலத் திரண்டுசூழ் தாமரைபோற் செங்கைமேல் நீலக் கடகவொளி நின்றிலங்க - கோலமணிச் 53 சுந்தரமார் திண்புயமேற் சோதிமணிக் கேயூரம் மந்தரஞ்சூழ் வாசுகியின் வாய்ப்புதவ - எந்தைமுடி 54 வைத்தநதி கைபரப்பி மார்பத்தைத் தைவரல்போல் நித்தில மாலை நிலவெறிப்ப - முத்தம். 55 கதித்த திருமார்பிற் கதிரார மேரு உதித்தகதிர் மண்டில மொப்ப - மதிக்கரிய 56 தற்படியொன் றில்லாத சாம்பு நதநிதியம் விற்பவள வெற்பினிடை வீழ்வதெனக் - கற்பகத்தின் 57 பொற்பூண் மலர்மாலை பூங்கொன்றை நாண்மாலை சொற்பூ தரமார்பிற் றோற்றமெழக் - கற்பூரச் 58 சுண்ணம் பனிநீரிற் றோயும் பசுங்களபம் விண்ணும் புவியும் விடாயாற்ற - அண்ணலருட் 59 கண்ட மரகதக் கோவை கடுவமைத்த ஒண்டொடி மெல்விரல்க ளொத்திலங்கத் - தண்டத் 60 துருகா தவரு முருகக் குழைகள் இருகாதின் மீதி லிலங்கக் - கருதினர்தம் 61 எண்ணிலாப் பாவ விருளகற்றும் வெண்ணீறு வெண்ணிலா நன்னுதலின் மேல்விளங்க - வண்ணப் 62 புதிய மணிமுடிமேற் பொற்பே ரொளியின் திதலைத் திருவாசிச் சேவை-உதயகிரி 63 வந்தெழுந்த செஞ்சுடர்மேற் கால்கொண்டு வானிட்ட இந்திரவில் போல வினிதிலங்கச்-சுந்தரத்துக் 64 கொப்பனைபோற் சாத்தியபின் னொப்பிலான் பேரருட்கு வைப்பனையான் தேவர் வரவருள-மெய்ப்பதிவாய் 65 நந்தி விரைவி னணுகிக் கடவுளர்கள் வந்துதொழக் காலம் வருகவெனச்-செந்திருமால் 66 வந்திறைஞ்சி நான்முகனும் வாசவனும் வானவரும் எந்தை யிவனிவனென் றேத்தெடுப்ப-ஐந்தொழிற்கும் 67 போக்காங் கலாதி மனாதி புலாதியுடன் வாக்காதி சத்தாதி வானாதி-தாக்கா 68 தடலே யுதவு மரனே பரனே உடலே யுயிரே யுணர்வே-நடமருவு 69 தெய்வச்சுடரே சிவானந்த போகமே சைவச் சலதி தருமமுதே-மொய்வார் 70 மருவார் குழலாண் மகிழ்வே மதுரைத் திருவால வாயுறையுந் தேவே-அருடா 71 எனவரிய தொண்ட ரிருமருங்குஞ் சூழ்ந்து மனமுருகி மெய்யுருகி வாழ்த்தக்-கனமருவு 72 தும்புருவு நாரதனுஞ் சுத்த விசைபாடக் கொம்பனைய மாதர் குனிப்பமிட-நம்பன் 73 புனித விமயமலைப் பொற்றொடியுந் தானும் இனிதி னிருந்தருளு மெல்லை-நனிகூர் 74 பொருவி றிருவுலாப் போத முகிழ்த்தம் மருமலரோன் கூறிவணங்க-அருளால் 75 எழுந்து கனக வெழிற்கோ புரத்துச் செழுந்தண் டிருவாயில் சேர்ந்து-தொழுமடியார் 76 பல்லாண்டு கூற விமையோர் பரவமறை வல்லாரு மாதவரும் வாழ்த்தெடுப்பச்-சொல்லரிய 77 மாணிக்க ரச்சி வயக்குந் தமனியத்திற் பூணப் பதித்துப் பொலிதலாற்-காணரிய 78 பன்னிரண்டு கோடி பருதியரும் வந்துதித்த பொன்னசல நேர்தேர் புகுந்தருளி-நன்னெறியால் 79 மிக்க திருநீற்று மெய்த்தொண்டர் வெள்ளவொளி புக்கதிருப் பாற்கடலே போல்விளங்க-அக்கடலில் 80 அம்பொற் கிரிமே லலைகளெனத் தேர்மீது பைம்பொற் கவரி பணிமாற-அம்புவிக்கண் 81 மூன்றுடையா னைச்சேர்ந்து முன்னைந்தன் மெய்க்களங்கம் கான்றொழுகு தெய்வக் கலைத்திங்கள் -போன்றணிந்த 82 நீல மணிவயங்கு நீள்காம்பு பற்றியவெண் கோலமணி முத்துக் குடைவிளங்க- ஞாலங்கள் 83 முற்றுஞ் சுருதி முழுதுங் கருணையாற் பெற்றமடக் கன்னிதேர் பின்போதப்-பற்றியதன் 84 செய்கை யழிந்தயலே சேவைக் கயர்வோர்தம் கைகடலையேறக் கண்பனிப்ப-வைகையெதிர் 85 ஏடேற்றித் தென்னவனை யீடேற்றி வெஞ்சழணக் காடேற்ற மேறக் கழுவேற்றி-நீடேற்றம் 86 தானேற்ற புத்தன் றலையி லிடியேற்றும் கானேற்ற பாடற் கவுணியனும்-மேனாள் 87 நிலைகடந்த கற்றுணா னீண்ட கடலாழி அலைகடந்த நாவுக் கரசும் - மலரடைந்த 88 புள்ளவாம் பொய்கையிடைப் புக்க முதலைவாய்ப் பிள்ளைவா வென்ற பெருமாளும் - தள்ளரிய 89 போதிநழற் புத்தன் பொன்னம் பலத்திட்ட வாதழித்த மாணிக்க வாசகனும் - மூதுணர்வால் 90 முந்தை வினைகண் முழுதுஞ் செழுமறைநூற் றந்தையிரு தாளுந் தடிந்தோனும் - எந்தைமகிழ்ந் 91 தாடுந் திருப்பெரும்பே ரம்பலம்பொன் மேய்ந்தருளைச் சூடுந் திருநீற்றுச் சோழனும் - நீடருளால் 92 விண்புகழச் சுந்தரர்தம் வெள்ளானை முன்செல்லத் திண்புரவி மேற்கொண்ட சேரலனும் - வண்புகலி 93 வேந்தரா லாருயிர்க்கூன் மெய்க்கூன் தவிர்ந்தருளே சேர்ந்துவாழ் நின்றசீர்த் தென்னவனும் - காந்துமனச் 94 செற்றம் புனையமணர் தீத்தொழிலை மாய்த்தடர்த்துக் கொற்றம் புனைந்த குலச்சிறையும் - சொற்றகைய 95 இத்தகைய ரென்னு மிவர்முதலா வெண்ணிறந்த சுத்தநெறி நின்றமெய்த் தொண்டர்களும்-மெய்த்திறமை 96 கோலும் படையசுரர் கொற்றமெலா முற்றிமதம் காலுங் களிற்றுமுகக் கற்பகமும்-மேலோர் 97 குறைமீட்டு வெஞ்சூர் குடிமடியத் தேவர் சிறைமீட்ட வேற்றடக்கைத் தேவும்-பொறைகூர் 98 திருமகளு மாலுந் திருநெடுமா லுந்தி தருசதுர் வேத தரனும்--பருதியர்கள் 99 பன்னிருவ ரீசர் பதினொருவ ரெண்வசுக்கள் மன்னு மிருவர் மருத்துவர்கள்-இன்னவரும் 100 தந்தம வாகனங்க டாம்புகுத -அந்தர 101 துந்துபிக ளார்ப்பச் சுரரார்ப்பப் பூமாரி வந்து பொழிய மழைதுனிப்ப-நந்து 102 வளைகண் முரல மருடி வயிர்கள் கிளைக லொலிகள் கிளர -அளவில் 103 முரச மதிர முழவு துடிகள் பரசு பதலை பணவம் - விரசு 104 வலம்புரி யெங்கு முழங்க வயங்கு சலஞ்சல நின்று தழங்க - நலம்புரியும் 105 சின்னங்க ளார்ப்பச் செழுநான் மறைமுழுதும் முன்னெங்கும் பின்னெங்கு மொய்த்தொலிப்ப - இந்நிலமேல் 106 மானிடருங் கின்னரரும் வானவரும் விஞ்சையரும் தானவருங் கூடித் தலைமயங்க - ஆன 107 படியுந் திசையும் பகிரண்ட கூட முடியு மயக்க முயக்கக் - கொடிகள் 108 இரவி கிரண மெறியாத வண்ணம் விரவு விசும்பை விழுங்கத் - தரைமேல் 109 முதிரா முதல்வியுடன் முக்கட் பெருமான் மதுரா புரிவீதி வந்தான் - பதியிலாக் 110 குழாங்கள் கின்னரர்தங் கன்னியருங் கிஞ்சுவாய் விஞ்சையர்தம் கன்னியருங் கந்திருவக் கன்னியரும் - பொன்னடைந்த 111 விண்ணுலக மங்கையரும் வின்னொருங்கத் தண்ணனிகூர் மண்ணுலக மங்கையரும் வந்தீண்டி - எண்ணரிய 112 செல்வக் கனகநிலைச் செய்குன்றிற் பொன்வரைமேல் வல்லிக் கொடியின் வயங்குவார் - அல்லற் 113 பளிக்குநிலா முன்றின்மேற் பாலாழி முன்னம் அளிக்கு மரம்பையர்நே ராவார் - விளிக்கரிய 114 வீர மடவார் விமானத் தடைவதுபோல் பாரநிலைத் தேரிற் படருவார் - ஆர்வமுடன் 115 பற்றிய வோவம் பரன்பவனி பார்க்கவுயிர் பெற்றதென மாடம் பெயர்குவார் - சுற்றும் 116 விரிந்தமணி வீதி மிடைவா ரிறைதாள் பரிந்து புகழ்வார் பணிவார் - பிரிந்துமையாள் 117 மும்முலைகொண்டுற்பவிக்க முன்முனிந்தார் தோள்விரும்பி நம்முலைகள் விம்ம னகையென்பார் - செம்மை 118 விதம்பயின்ற வம்மடவாள் வேட்கையுற வேட்டார் இதம்புரிவா ரெங்கட்கு மென்பார் - பதஞ்சலிக்குச் 119 சீர்க்கூத் தருள்வார் திருவுலா நாமதனன் போர்க்கூத்துக் காணப் புரிந்ததென்பார் - தார்க்கவிகைக் 120 குண்டோ தரற்குத்தா கம்பசிபோற் கொள்காதல் கண்டோர்க்கு மீகை கடனென்பார் - கொண்டபசிக் 121 கன்னக் குழியா றழைத்தா ரவற்கெமக்கும் இன்னற் றுயரொழிப்பா ரின்றென்பார் - முன்னோன் 122 திருமுறுவல் போற்றுவார் செய்ய முறுவல் தருநிலவா லுள்ளந் தளர்வார் - முருகு 123 செறியுந் திருமார்பஞ் சேவிப்பார் கொங்கைக் குறிகண்டு நாணமால் கொள்வார் - அறிவுடையாற் 124 கெங்க டுகிலு மெழிற்றொடியும் வேண்டிற்றோ தங்கநறு மாலை தரவென்பார் - கங்கை 125 மருவார் மலரமுதால் வாசவனார் பேணும் திருவால வாயுறையுந் தேவற் - கிருகண்ணீர் 126 மஞ்சனமோ வெங்கை வளைபள்ளித் தாமமோ நெஞ்சமமு தோவென்று நின்றுரைப்பார் - அஞ்சாமற் 127 செல்வார் நகைப்பார் திகைப்பார் மதனனெமைக் கொல்வான் வருமென்று கூறுவார் - சொல்வார்போல் 128 நிற்பார்தஞ் சேடியர்பா னித்தற் குரைக்குமொழி கற்பார் மறப்பார் கலங்குவார் - அற்புதமாம் 129 மாணிக்க வல்லி மணவாளற் கியாங்கொடுக்கும் காணிக்கை யோநங் கலனென்பார் - நாணமுறச் 130 சாத்துந் துகிலிழப்பார் தம்மானம் வின்மாரன் கோத்த மலர்மறைப்பக் கூசுவார் - பாத்து 131 விதமருவு மாத ரவர்நிற்க வேளுக் குதவவரு பேதை யொருத்தி - மதனூல் 132 பேதை படியாத பூவை படராத வல்லி வடியா மதுமலரா மாலை - கடியாரப் 133 பூவாத சூதம் புனையாத மாணிக்கம் கூவாத செல்வக் குயிற்பின்னை - மேவிக் 134 கவடுபடா வஞ்சி கலைமலயத் தென்றற் சுவடுபடாக் கன்னிநறுஞ் சோலை - கவினத் 135 தெளியுந் தெளியாத செய்கையுந் தாங்கித் தளருங் குதலைமொழித் தத்தை-ஒளிகள் 136 நிறையா விளந்திங்க ணீருடன்பால் பேதித் தறியாத பேடையிள வன்னம்- இறுதிநாள் 137 துற்ற பருதியர்தந் தோற்றத்து முன்னாக உற்ற வருணத் துதயம்போற்-பற்றிய 138 வான்றா ரணிமுழுதும் வந்தழிக்குந் தம்பெருமை தோன்றாமற் றோன்றுந் துணைநகிலாள்-ஆன்ற 139 விடையா னுடையான் விளங்கு மழுவாட் படையா னிருகமல பாதம்-அடையாமற் 140 பொய்வாழ் வடைந்தோர் புலன்கள்போ லொன்றோடொன் றொவ்வா தலைகின்ற வோதியான் - பவ்வத் 141 துலக மயக்க மொழிந்தோர் மனம்போற் கலகஞ் சிறிதறியாக் கண்ணாள்-உலவுமதிற் 142 செற்றார் புரமெரித்த தெய்வங்க ணாயகற்குக் கற்றார் புகள்மதுரைக் கண்ணுதற்கு-வெற்றி 143 மருவார் தொடைத்தென்னன் மாமுத் தளக்கும் திருவாயின் மாதருடன் சேர்ந்து-பொருவிலா 144 நித்திலத்தின் கூட்ட நிறையக் கொணர்ந்தேகி வித்துருமக் காற்பந்தர் வீதிக்கண்-முத்தினத்தாற் 145 சிற்றி லிழைத்துச் சிறுசோறம் முத்தத்தாற் சற்று முணராள் சமைத்தனள்போற்-பற்றிவரும் 146 கிள்ளைக்குந் நாயர் கிளைக்குந்தன் கைப்பாவைப் பிள்ளைக்கு மூட்டுகின்ற பெற்றியான்-புள்ளினத்துள் 147 அற்புதமாம் பூவைக் கதன்வார்த்தை தான்மகிழ்ந்து கற்பதுபோற் றன்வார்த்தை கற்பிப்பாள்-மற்றொருநாள் 148 மாதவிப் பந்தர் மருங்கேதன் கைத்தாயர் போத வுடன்றானும் போயிருந்து-காதலருட் 149 பெண்களிக்க வாரி யழைத்ததுவும் பெய்வளையாள் கண்களிக்கத் தந்தைதனைக் காட்டியதும் - மண்களிக்க 150 டக்கணிவோ னல்கி யகன்றதுவும்-மைக்கடன்மேல் 151 மிக்கவயில் தொட்டதுவும் விண்ணோர் பிரான்முடியைத் தக்க வளையாற் றகர்த்ததுவும் - அக்கனகத் 152 திண்மை வடகிரியிற் சேலிட் டதுமறைநூல் உண்மை முனிவர்க் குணர்த்தியதும் - வண்மையால் 153 தத்தையினஞ் சாற்றவயல் சார்பூ வைகளிருந்து முத்திதருஞ் சொற்பொழிந்த முப்புலவோர் - சுத்தத் 154 திருப்பதிகத் தோசை செவியூடு தேக்க விருப்பமுடன் கேட்டிருக்கும் வேலை - நிருத்தன் 155 சரத னிமலன் சதானந்தன் மாறா விரதன் வடமேரு வெற்பன் - வரதன் 156 அறவ னமல னருளாளன் வைகைத் துறைவ னபிடேகச் சொக்கன் - நிறைவீதி 157 வந்தா னெனச்சின்னம் வாழ்த்தெடுப்பத் தாயாருடன் செந்தா மரைசேப்பச் சென்றடைந்து - சிந்தைமகிழ்ந் 158 தன்னையரைக் கண்டு மயலார் தமைக்கண்டும் முன்ன ரிருகை முகிழ்த்திறைஞ்சி - அன்னமே 159 பூவையே மானே புனமயிலே பூங்கிளியே பாவையே யிங்கிவரைப் பார்த்திடீர் - மேவுமான் 160 கன்றுமொரு பாற்கிளியுங் காதலித்தார் நம்முடனே யொன்றிவிளை யாடற் கொருப்பட்டோ - அன்றியுநம் 161 சிற்றில்வாய் வந்தார் சிறுசோ றுகந்தோயாம் கற்ற கழங்காடல் கற்கவோ - சொற்றகைய 162 அண்ணல் கருத்தை யறையுமென வன்னையர்கேட் டுண்ணெகிழப் புல்லி யுரைசெய்வார் - எண்ணெண் 163 திருவிளையாட் டண்ணனீ செய்விளையா டற்கு வருவரெனச் சொன்னால் வழக்கோ - அருமறைநூல் 164 வல்ல முனிவோர் மகத்தவியுங் கொள்ளார்நின் சில்லடிசிற் காவின்று சேர்வரோ - நல்லபணி 165 நிற்கவெள்ளி மன்றாடு நித்தர் கழங்காடல் கற்கவந் தாரென்றுரைத்தல் கற்பாமோ - அற்புதமென் 166 றிந்த மொழியுரைக்குந் தாயர்க் கிவரிங்கு வந்ததுதா னேதென்று மான்வினவப் - பைந்தொடியே 167 எல்லா வுயிருமகிழ்ந் தீடேற வைந்தொழிலும் வல்லா னுலாவந்த வாறென்னச் - சொல்லுதலும் 168 நீரேற்ற செய்யசடை நித்த னுறையுமணித் தேரேற்று மென்னையெனச் சென்றுரைத்துக் - காரேற்ற 169 கண்ணீர் வழிந்திழியக் காமந் தலைப்பட்டோர் உண்ணீர்மை போல வுளந்தளர்ந்தாள் - பெண்ணீர்மை 170 இப்படியுண் டோவென்று தாய ரியம்புதலும் கைப்பணிலந் தன்னைக் கழற்றிவிடுத் - தொப்பனைசெய் 171 பொன்னணியிற் சில்லணிகள் போக்கிப் பொழிநீரால் தன்னயனந் தீட்டஞ் சனமொழித்து - மின்னனையாள் 172 பேரிளம்பெண் ணீதிதனைப் பேதைப் பருவத்தே யாரு மதிசயிப்ப வெய்தினன்போல் - ஓர்வின்றி 173 நிற்பதனைக் கைத்தாயர் நேர்கண் டெடுத்தணைத்துப் பொற்புவளர் மாளிகையிற் போய்ப்புகுந்தார் - மற்றொருத்தி 174 பெதும்பை பேதைப் பருவம் பிரிந்து பெதும்பையெனும் காதற் பருவத்துக் காட்சியாள் - மேதக 175 முற்றாத வல்லி முளரி முகிழிரண்டு பெற்றா லெனவழியாப் பேருலகம் - செற்றழிக்க 176 வேண்டிப் பிறக்குமெழில் வெள்ளத் துடன்வடவை மூண்டிங் கிரண்டாய் முகிழ்த்ததென - மாண்டவத்தோர் 177 கைமுகிழ்க்க வெங்காலன் கண்முகிழ்க்கக் காமுகர்தம் மெய்முகிழ்க்க மேன்முகிழ்க்கு மென்னகிலாள் - தண்மை 178 விளைக்குந் தவமடைந்தோர் வெவ்வினைபோ னாளும் இளைக்கவடிக் கொண்ட விடையான் - விளைத்த 179 அளவிலரும் பாலாழி யாலால மென்னக் களவு பிறந்துடைய கண்ணாள் - அனிகள் 180 கடியாத தார்முடிக்க்க் காமன் றனக்கு முடியாத வெல்லா முடிக்கப் - படிமுழுதும் 181 கூடி முடிக்குங் கொடியவிருள் போலமுடிக் கூடி முடிக்குங் குழலினாள் - நீடிவளர் 182 முல்லையரும் புக்கும் முருந்துக்கும் பேரொளிகள் இல்லையென வீறு மிளநகையாள் - தொல்லுலகில் 183 மின்னுக் கொருவடிவ மேன்மேல் வளர்ந்தேறல் என்னப் பொலிந்துவளர் வெய்தினாள் - பன்னும் 184 மலர்ச்சயன நீங்கி வரவுதய காலத் தலர்க்கை குவித்தோ ரணங்கு - கொலைக்கிங் 185 கிடம்பார்த்த கண்ணா யெழுகடலாந் தெய்வத் தடம்பார்க்க வாவென்று சாற்ற - விடம்புறர்த்த 186 செங்கட் கருங்கூந்தற் சேடியர் கோடியர் அங்கட் புடைமிடைய வாயிழையும் - எங்கும் 187 மருவுதவு சோலை வளர்வு கிளரத் திருமருவு வாவி செறிய - அருகொருத்தி 188 மின்னே யமிர்த விளைவே செழுங்கமலப் பொன்னேயிப் பொய்கைதனைப் போற்றிடாய் - பன்னும் 189 பரன்றன் பவனிதொழும் பாவையர்க்குட் காதல் அரும்பும் பருவத் தவர்போல் - திருந்து 190 வலம்புரி யேறி மகிழ்ந்தர சன்னம் கலந்து பணிலங் கலிப்ப - நலங்கோள் 191 அளித்து வரவெதி ரன்னத்தோ டேகிக் களிக்கு மிளம்பேடை காணாய் - தளிர்த்து 192 விரிந்தசடை யண்ணலுலா மேவுமவ ருள்ளம் புரிந்து நெகிழ்வது போலத் - தெரிந்த 193 இரவிச் சுடர்கண் டிதழவிழ்ந்து சேந்த பருவக் கமலமுகை பாராய் - அருமறைதேர் 194 மாக விமான மதுரா புரேசன்றன் ஆக முறவெண்ணு மன்னவர்போல் - நாகத் 195 தடர்ந்து படர்வா னணிமென் பவளம் நுடங்குகொடி நோக்கி னோக்காய் - தடங்கடல்கள் 196 வந்தடைந்த வாவி மகிழ்ந்தாடா யென்றியம்பப் புந்திபெரு நாணமுறப் புன்மூரல் - தந்தருகு 197 நேசச் செவிலியர்க ணீராட்ட நீராடி ஓசைக் கடலொன் றுதவுதிருக் - கூச 198 எழுகட றந்த விளந்திரு வென்னத் தொழுது மகளிர் துதிப்பச் - செழுமைக் 199 கரையிற் சுரபுன்னைக் காவினிடை மேவி விரைமெய்த் தவிசின் விளங்கப் - புரைதீர் 200 மலர்வதனக் கைத்தாயர் வாழ்த்தும் - பொலனிழைமுன் 201 ஆதி திருவிளை யாடலிவ் வாவிநலம் ஓதுமவள் பின்னு முரைக்கின்றாள் - பூதலங்கள் 202 வாழிபெற மாணிக்கம் விற்றுதுவு மாகமுகில் ஆழி பருக வருளியதும் - சூழுமியற் 203 கோநகரை நான்மாடக் கூடலென வைத்ததுவும் மானநெறிச் சித்தரென வந்ததுவும் - மீனவன்றன் 204 கன்னலணி கல்லானை வாங்கியதுங் காரமணர் துன்னுமத யானை துணித்ததுவும் - உன்னரிய 205 ஓர்விருத்த வால குமாரனுரு வுற்றதுவும் ஆர்முடித்தோன் கான்மாறி யாடியதும் - பாரித் 206 துரைத்தா னவளை யுகந்தருளிச் செந்தா மரைததான மாதிலுயர் மாதும் - உரைத்தவற்றுப் 207 பூணுங் கருத்தும் புனிதன் றிருவுலாக் காணும் பெருவிருப்புங் கைக்கொண்டாள் - சேணடைந்து 208 தோற்றும் பொழிலூடு துய்யசீ தேவியினும் ஏற்றம் புனைவா ளிருந்திடலும் - நீற்றுக் 209 கவச னுமையாள் கணவ னிடபத் துவசன் கடம்பவனச் சொக்கன் - தவள 210 மதவா ரணமீது வந்தா னெனவற் புதவா ரணமுரசம் பொங்க - இதயநிகர் 211 பாங்கியர்முன் செல்லப் பதறியுடன் பின்சென்று தாங்கரிய பேருவகை தானெய்தி - நீங்காத 212 மல்லற் கருணை மலையாண் முலைத்தடங்கள் புல்லக் குழைந்த புயத்தாளைத் - தொல்லைமறை 213 கூறா தரமடந்தை கொங்கைக் குறியென்றும் மாறா தழகெறிக்கு மார்பானை - வேறின்றித் 214 தோற்றுமிகு தாளானைத் தொல்லைக் கொடும்பாசம் மாற்றுந் திருவால வாயானை - ஏற்றமுறப் 215 பார்த்தாள் பணிந்தாள் பறிபோந் தனிநெஞ்சம் காத்தாடன் னாணங் கடைபிடித்தாள் - வேர்த்தாண்முன் 216 காணாத காட்சியாற் கண்ணுக்குஞ் சிந்தைக்கும் பேணாத நல்விருந்து பேணினாள் - நாணயந்து 217 விண்டலருஞ் செம்முகையின் மேவு முருகென்னக் கண்டறியாக் காமமுங் கைகலப்பக் - கெண்டைவிழி 218 பாராத பார்வை படைப்ப மனத்துக்கும் வாரா மகிழ்ச்சியும் வந்தெய்த - ஓராமல் 219 நின்றதோர் முன்னை நிறையுங் கரையழிந்து சென்றதோ வென்னென்று செப்புகேன் - ஒன்றிமால் 220 ஆளுந் தனிநெஞ்சத் தாதரவா லானனமும் தோளுந் தனமுஞ் சுரிகுழலும் - வேளைப் 221 பொரவழைத்தல் போலப் பொலிந்தாலும் வேளும் விரைமலர்ப் பாணம் விடுரே - பரவிநாம் 222 கட்டிய காஞ்சியின் கட்டுவிடச் செங்கைமேல் இட்ட வளையி னினமுரியக் - கிட்டா 223 உருவமிகப் பேதித் தொளிபடைத்து மற்றைப் பருவ மெனப்புளகம் பாரித் - தொருவாத 224 பேரழகு நந்தம் பெருமாட்டிக் கெய்தியதிங் காரறிய வல்லாரென் றன்னையரும் - மாரன் 225 சிறுநா ணெறிந்து சிலைபார்க்கு முன்னே முறுகாமான் மேல்வளரு முன்னே - அறுகால்சேர் 226 தாமஞ் சரிகுழலா டன்னைக் கரத்தணைத்துச் சேமம் பெறமாடஞ் சென்றடைந்து - பூமலர்கள் 227 ஏறுந் திருப்பாய லேற்றி யவண்மோகம் ஆறும் படியொருவா றாற்றினார் - கூறுமதன் 228 மங்கை செங்கண் சிவப்பக் கருங்கண் சிவப்பூறும் மங்கைப் பருவத்து மற்றொருத்தி - திங்கண்மதி 229 சூழுஞ் சடையான் றுணைத்திண் புயாசலமேல் வாழுங் கருத்தே வளர்தோகை - ஆழித் 230 திருவால வாயண்ண றேங்கருணை வெள்ளப் பெருவாவி தேடன்னப் பேடை - வருதென்றல் 231 கால்கொண் டுலவுங் கடம்பவனச் சோலைக்கு மால்கொண் டுருகு மனத்தத்தை - கோலம் 232 படரு மதனன் படையுலகை யெல்லாம் அடர வடர வடர்ந்து - புடவி 233 தளர மதனன் றனியாண்மை யெங்கும் வளர வளர வளரக் - களவு 234 பெருகத் தபோதனர்மேற் பேரநங்க னெஞ்சம் கருகக் கருகக் கருகிப் - பொருதவியல் 235 பென்னப் புனைந்துலகத் தெய்தாத வெற்றிமதன் தன்னைப் புனைவித்த தாழ்குழலாள் - முன்னொருவேல் 236 உந்து கடல்குடித்த தென்ன வுயிர்குடிக்க வந்தவிட வேலனைய வாட்கண்ணாள் - முந்தைநிறம் 237 பேதித்து வேட்கை பெருத்தழகு பெற்றிலகும் சோதிக் கனகவளைத் தோளினாள் - மோதிக் 238 கரையழியா வாவி கலக்கிக் கமல விரைமுகையைச் சாடிவிழ வீழ்த்திப் - பரவும் 239 மலைக்கோட்டை யெற்றி வருமத்த யானைக் கொலைக்கோட்டை யொப்பக் குலாவிச் - சொலற்கரிய 240 முத்தத் தொடைகண் முயங்குகிர ணப்பத்தி தத்துங் களபத் தனக்குவட்டாள் - பத்திதரும் 241 தேர்த்தட் டினுக்குஞ் சிறுமை கொடுத்தகன்ற ஆர்த்த மணிக்காஞ்சி யல்குலாள் - ஏத்தரிய 242 அங்கயற்க ணம்மைமுலை யானைக் கிடங்கொடுக்கும் செங்கனகக் குன்றைச் சிவக்கொழுந்தை - எங்கள் 243 அழகிய செக்கனைநா லாரணமுங் கூடப் பழகியுங் காணாப் பரனைத் - தொழுதெவரும் 244 சேவிக்க வாழ்விக்குந் தெய்வப் பெருமானை ஆவித் துணையா மருமருந்தை - மேவி 245 ஒருநாட் பவனியிற்கண் டுள்ளந் தனக்குத் திருநாட் பொலிவுதனைச் செய்து - வருநாள் 246 திருமடந்தை போலத் தெரிவையர்கள் கோடி இருமருங்குஞ் சேவிக்க வேகி - அரியநெறிச் 247 செய்கைத் தமிழேடு செல்ல யெதிரேற்றும் வைகைக்கரையின் மருங்குவளர்-பொய்கைப் 248 புடைமருவசுந் தெய்வப் புதுமலர்ப்பூங் காவின் இடைமருவு மண்டபத்தி லெய்தி-அடர்கனகத் 249 தண்டரளப் பத்தித் தனிவே திகைத்தவளப் புண்டரிகத் தன்னமெனப் போயிருப்பக்-கண்டொருத்தி 250 பேச வுடனே பெயர்ந்தெழுந்து - நேசக் 251 கலக மதவேள் களிகூர மின்போல் இலகு மணியூ லேறிக் -குலமதியம் 252 தக்க வமிர்தந் ததும்பித் துளிப்பதுபோல் மிக்க முகத்துல் வெயர்வரும்பத்-திக்கின் 253 வழிபோய் முனிவர் மனமடைய வாரி விழிவேல்க டாவடிபோய் மீளப்-பொழிபுயலைக் 254 காந்திருளை வென்று களிவென்றி பாடுவபோல் ஏந்து குழல்வண் டிசைபரப்ப-மாந்தளிரைக் 255 காந்தளைக் கட்டுரைத்த கட்டாண்மை போற்செங்கை ஏந்து வளைக ளினிதொலிப்பப்-பாந்தளை 256 மின்னைப் புறங்கண்ட வீரப் புகழ்பாடல் என்னக் கலைக்காஞ்சி யேத்தெடுப்ப - அன்னத்தை 257 அம்பதுமந் தன்னை யடர்த்த வடலெனக்காற் செம்பதுமந் தம்மிற் சிலம்பலம்ப - நம்பெருமான் 258 மாலந் தகவசுரன் மாறா வயமாறச் சூலந் தனிலிட்ட சொற்பாடும் - காலன் 259 உரத்தி லுதைத்த வுரமும் பிரமன் சிரத்தை யறுத்த திறனும் - புரத்தை 260 எரித்த புகழு மிராவணனை வெற்பில் நெரித்த சயத்து நிலையும் - உரித்துக் 261 கரியுரி போர்த்த கணக்குங் கணைவேள் எரியெழப் பார்த்த வியல்பும் - விரியா 262 மொழியும் பரிசனமுன் மூதண்ட மெங்கும் ஒழிவின்றி நின்ற வொருவன் - பழியஞ்சி 263 வெங்கால தூதுவரால் வேந்தற் குணர்த்தியதும் மங்காத பாதகத்தை மாற்றியதும் - அங்கம்போய் 264 வெட்டியதும் பொய்யமணர் விட்டபணி மாய்த்ததுவும் பட்டுவிழ வானைப் பணித்ததுவும் - கிட்டி 265 எழிலார மெய்க்காட்டங் கிட்டதுவுந் தென்னற் கழியாக் கிழிகொடுத்த வன்பும் - மொழியும் 266 திருமா தனையார் தியங்கிவளை விற்ற பெருவாழ்வும் பாடிப் பெயர்ந்தாள் - அருகொருத்தி 267 வந்திறைஞ்சி மஞ்சன மாட வருகவென உந்துமணி யூச லுடனிழிந்து - சந்ததமும் 268 விசுந் திரைவகை மேவிநீர் நாவிமலர் வாசம் புணர மகிழ்ந்தாடித் - தூசும் 269 களபமும் பூந்தொடையுங் காந்திமணிப் பூணும் புளகமுங் கூடப் புனைந்து - தளவ 270 முறவன் மடமகளிர் மொய்த்தீண்டக் கண்டோர் மறுக மதவேண் மகிழ - இறைமார்பில் 271 சிந்தையுற நின்றாண்முன் றெய்வமறைப் பாய்பரிமேல் இந்திரனு மாலயனு மேத்தெடுப்ப - வந்தான் 272 அருவா யுருவா யருவுருவ மில்லா உருவா யளியா யொளியாய் - மருவிலயன் 273 ஆடும் பெருமா னகிலம் புரக்கமுடி சூடும் பழியஞ்சிச் சொக்கனென - நாடி 274 உருகி யொருத்தி யுரைக்க மகிழ்வே பெருகிப் பிடிபோற் பெயர்ந்து - கருணைக்கோர் 275 ஆகரனைப் பூரணனை யானந் தனைச்சந்த்ர சேகரனை யட்டாலைச் சேவகன் - ஏகி 276 வணங்கினாள் பார்த்தாள் வழுத்தினாண் மாலோ டிணங்கினாள் சிந்தை யிளைத்தாள் - அணங்குடையான் 277 வேதப் புரவியுடன் வீதி தனைக்கடந்தான் மாதுக் கரசனைய மாமயிலைத் - தாதியர்கள் 278 கண்டவர்க ணின்றிரங்கக் கையணையிற் கொண்டேகிப் புண்டரிக மாளிகையிற் போய்ப்புகுந்து - வண்டலர்த்தும் 279 பாயன்மே லேற்றப் பகற்செங் கதிர்க்கடவுள் ஆய குடதிசைவா யாழிபுக - மாயப் 280 பெருமாலை நல்கும் பெருங்கங்குன் முன்னே மருண்மாலை வந்து மருட்டத் - திருமாலை 281 தாங்குந் தனக்குவட்டுத் தையலுங் கண்டுமனம் ஏங்குந் தவிக்கு மிரங்கியிடும் - பாங்கிலெழும் 282 வெண்மதியப் பாவி விடுக்கின்ற செந்தீக்கென் பெண்மதிய மாற்றப் பெறாதென்னும் - கண்ணீர் 283 துளிக்கு மனமயங்குஞ் சோருங் குயிலை விளிக்கு முடலம் வெதும்பும் - அளிக்கரசை 284 வாவென்னும் போவென்னும் வண்கிளியை வாய்முத்தம் தாவென்னு மாலை தருகென்னும் - கோவென்னும் 285 இப்படி வாடு மிவடன்னை யன்னையரும் அப்பரிசை யாற்றுவா ராயிழாய் - ஒப்பிலான் 286 மாலையுந் தோளு மணிமார்பு நீதோயக் காலையில் யாஞ்சென்று கட்டுரைப்பம் - வேலையெனத் 287 தோற்றுமா மையற் றுயரொழியென் றின்சொல்லால் ஆற்றினா ராறினா ளங்கொருத்தி - சாற்றும் 288 மடந்தை சலம்புரி காமன் றழைத்தோங்க வெற்றி வலம்புரி நல்கு மடந்தை - தலம்புகழும் 289 காம ரதக்கரும்பு காமச் சுவையமிர்தம் காமன் றனக்குள்ள கட்டாண்மை - காமன்றன் 290 சேமத் தனஞ்செல்வஞ் செங்கோ லவன்கொற்றத் தாமத் தரளத் தனிமவுலி - தேமுற்றுத் 291 தாது நெகிழுஞ் சதகோடி செங்குமுதம் வாதிலழி யச்சிவந்த வாயினாள் - பூதலத்தோர் 292 முன்னூசல் கொண்டுமன மோக முறவேண்டும் பொன்னூச லன்னமணிப் பொற்குழையாள் - மன்னும் 293 அலகின் மறையோ ரறிவி னுயர்வோர் உலைய வுலக முலைய - நலமகலச் 294 செங்கோ லொழித்தெவர்க்குந் தீங்கு புரிவேந்தர் வெங்கோ லினுங்கொடிய வேற்கண்ணாள் - பொங்கி 295 மலையைக் கடிந்தெடுத்து வச்சிரத்தா லோங்கி உலைவின் மகத்துக் குரித்தாய்ப் - பலகண் 296 படைத்துக் கருகிப் பணைக்களிற்றின் மேலாய் மடற்கொத்து மாலை வளைந்து - திடத்தால் 297 புரந்தரனைப் போலப் பொலிந்து முனிவோர் முரண்கெடுக்க விம்மு முலையாள் - நிரந்தரமும் 298 வஞ்சம் புரிவேந்தர் மண்டலத்துள் வாழ்வோர்தம் நெஞ்சம்போ னின்றலையு நேரிடையாள் - அஞ்சிவரும் 299 கோகனகந் தண்டரளக் கோவைதனைப் பூத்ததென மோகந் தருவதன மூரலாள் - தோகை 300 திருவால வாயான் றிருத்தோள் - மருவுவான் 301 சிந்தித்துத் தூதுநீ செல்லென்று பைங்கிளியை வந்தித்துப் பாயன் மருங்கேறி - அந்திப் 302 பொழுதுவர வுள்ளம் புழுங்கி யழுங்கி எழுதியே மின்போ லிருந்து - தெழுதாற்றா 303 ளாகித் தமியேனை யாற்றுவா ராரென்று மோகித் தரிவையர்த முன்மொழிய - ஓகைபெற 304 இன்னிசையாழ் வல்லாளோ ரேந்திழை யாழ்வாங்கித் தென்னதென வென்றெடுத்துச் செந்தமிழாற் - பன்னியிசை 305 ஆக்கியவெண் சித்தி மடவார்க் கருளியதும் மாக்கனக வாசல் வளவற்கு - நீக்கியதும் 306 வேட்டவர்க்குத் தண்ணீர் வினைமுகத்து நல்கியதும் வாட்ட மறவிரத வாதத்தைக் - காட்டியதும் 307 வந்துபரி யாளாய் வளவற் குணர்த்தியதும் எந்தையுல வாக்கோட்டை யீந்ததுவும் - முந்தைவழக் 308 கேறி வணிகற்கு மாதுலரா யெய்தியதும் மாறன் பிரமகத்தி மாற்றியதும் - கூற 309 மனத்துயரும் போக மதியிருளும் போகத் தினத்தை விளைப்பான் றிகழ - அனத்தை 310 அனையநடை வல்லிநீ ராடினா ளாடை புனைகலன் வாசம் பொறுத்தாள் - தனைநேர் 311 இலகுமணிச் செங்கண்மா லேற்றின் முனிவோர் மலர்பொழிய மாமறைகள் வாழ்த்தப் - பலமுகிலிற் 312 பல்லிய மார்ப்பப் பணிலத் திரண்முழங்க எல்லையி றேவரினி தேத்தெடுப்பத் - தொல்லை 313 அருண சயில னசல னமலன் ஒருவ னருவ னுருவன் - இருவர் 314 மகிழு முதல்வன் மதுரை யிறைவன் அகில புவன வதிபன் - இகலின் 315 இலகு மதன வயிரி யிமய மலையின் வனிதை மகிழ்நன் - அலகிலாப் 316 பேத தபேதன் பெருமான் பிறப்பறுக்கும் பாதன் பரமன் பரானந்தன் - நாதனணி 317 வீதிபுகுந் தானென்று மெல்லியலாண் முன்விட்ட தூதுபோய் மீண்டகிளி சொல்லுதலும் - போதக் 318 களியுதவு தென்றலெனக் காமருபூ மாலை அளிசிறந்த காற்றங் கசைய - ஒளிவிரியும் 319 பாதவங்கொள் பல்லவத்தை மெல்விரல்கள் பாரிப்பச் சூத மலர்போற் சுணங்கெறிப்பச் - சாதி 320 விளையு மதுச்செருந்தி மிக்கமல ரெல்லாம் அளகமலர்க் காவி னலரப் - புளகக் 321 கமுகத்திற் பாலையெனக் கண்டத்திற் கொண்ட சமுகத் தரளந் தயங்க - அமுத 322 வளநீர்மை தாங்கி வளர்கனகக் கொங்கை இளநீர்க் குலம்போ லிலங்க - உளமகிழச் 323 சாற்றுமொழி கோகிலத்தின் றன்மைபெற வெந்நிலமும் மாற்ற வரிய மகிழ்ச்சியுறத் - தோற்ற 324 உருவ மதனுக் குடையானை வேண்டி வருவசந்த காலம்போல் வந்தாள் - பெருமான் 325 திருவுலாக் கண்டா டிருவழகுங் கண்டாள் உருகினா ளுள்ள முடைந்தாள் - அருகொருத்தி 326 ஆங்கதனைக் கண்டொழிய வானந்த வாரிதிமுன் பாங்கியொருத்தி பகருவாள் - தாங்கிநீர் 327 ஏந்து மலையோ விவண்முலையோ நன்றென்று சேந்துணரும் வாறின்று சேர்ந்திடீர் - வேய்ந்த 328 இளம்பிறையோ வல்லி யிவணுதலோ செவ்வி வளம்புனைவ தென்ற்றிய வாரீர் - விளங்கநீர் 329 துய்த்த கடுவிடமோ தோகைக்கருங் கூந்தலோ மைத்த தெனவறிய வந்திடீர் - கைத்தலத்தில் 330 தங்கு முழைவிழியோ தையன் மதர்விழியோ பொங்குநல மென்ற்றியப் போந்திடீர் - செங்கைதனிற் 331 சேர்ந்த துடியிடையோ தேமொழியாள் சிற்றிடையோ நேர்ந்த தெனவறிய நீர்வாரீர் - காந்தியொளிர் 332 போதணியுங் கொன்றையோ பொற்கொடியாள் பொற்சுணங்கோ ஏதுநிற மென்றறிய வெய்திடீர் - ஓதரிய 333 சித்தரே நித்தரே சிற்பரா நந்தரே சுத்தரே யாலவாய்ச் சொக்கரே - இத்தகைமை 334 செய்யு மெனமடவாள் செப்ப வவளருகே மையன் மடந்தையும் வந்திறைஞ்ச - ஐயன் 335 திருப்பார்வை யீந்தருளச் சிந்தைகளி கூர்ந்து விருப்பா யிவள்பெற்று மீண்டாள் - ஒருத்தி 336 அரிவை புடவி முனிவோர் புகழ மதவேளுக் கடர்மௌலி சூட்டு மரிவை - கடையும் 337 உவரி தருமமிர்த மன்றி யுலகோர்க் கவனி யுதவு மமிர்தம் - புவனிவலை 338 போதாத முத்தம் புகரொழிந்த மாணிக்கம் சீதார விந்தத் திருச்செல்வம் - யாதும் 339 புகன்ற திசையும் புவியுஞ் சுருங்க அகன்ற நிதம்பத் தணங்கு - முகந்தவிசை 340 வண்டி னொழுங்கும் வளையு நுதற்சிலையும் கொண்ட னிறமுங் குளிர்மலரும் - கண்டுமருள் 341 மாலைக் கடுத்த வழகும் படைத்துமதன் கோலத்தை யொத்தகருங் கூந்தலாள் - ஞாலத்துள் 342 நற்கனகப் பூணை நயந்தக்கா லோரிரண்டு பொற்கனக மேருப் பொருப்பாயும் - சொற்குலவும் 343 கொள்ளைத் தரளமணிக் கோவைத் திரளணிந்தால் வெள்ளித் துணைக்கிரியின் மேம்பட்டும் - உள்ளம் 344 புதையவொளிர் மாணிக்கம் பூண்டக்கால் வெய்யோன் உதைய வரையிணையை யொத்தும் - இதையம் 345 பனித்து முனிவர் பதைப்ப மதனன் குனிப்ப மறலி குலைய - மனத்தை 346 உருக்கி யிடையை யொதுக்கி மிகவும் தருக்கி வளருந் தனத்தாள் - செருக்கண் 347 உறுசமர வீர ருரங்கிழித்து மீண்ட நிறவலகு போல நிமிர்ந்து - கறுவி 348 விலகி மறலி விடுதூதர் போல உலக மடைய வுலாவிக் - கலகம் 349 விளைத்துக் கடுவை வெறுத்துயிரைச் சேர வளைத்துப் பருகி மதர்த்துத் - திளைத்துக் 350 கடுங்கால தண்டநிகர் கண்ணாள் - தொடர்ந்து 351 திருவால வாயான் றிருமாலை வேண்டி வருமால் வளர வருந்தும் - ஒருநாள் 352 படைமதனும் பல்கோடி பாவையருஞ் சூழ மடலவிழும் பூங்காவில் வந்து -புடைமருவும் 353 தேமாவைப் பார்த்துகந்தித் தேமா நறுநிழலில் நாமா தரித்திருத்த னன்றென்னப் - பூமடந்தை 354 அன்னா ளொருத்தி யடியிறைஞ்சி யாரணங்கே என்னா ருயிரேயெ னின்னமுதே - முன்னாளில் 355 இந்தமா நீழல்கா ணீரேழு பேருலகும் தந்தமா னன்பாய்த் தழுவுதலும் - எந்தை 356 மறுவகன்ற செய்ய வடிவத்திற் கொங்கைக் குறியும் வளைத்தழும்புங் கொண்டான் - அறிகிலை நீ 357 கள்ளுதவுந் தேமாவிற் காரணமீ தென்றுரைப்ப உள்ளமே னாணத்தை யுள்ளடக்கி - வள்ளல் 358 செறிந்த திதுவன்றித் தெய்வ மரங்கள் அறிந்ததிலை யோவென் றறைய - நறுங்குழலாய் 359 ஆல மகிழ்தில்லை யாத்தி குராமருது பாலைபலா வெண்ணாவல் பாடலம் - கோல 360 மருக்கொன்றை போலு மரங்களுள வண்ணல் இருக்குமிட மிங்குவற்று ளிந்தத் - திருக்கடம்பு 361 போற்று மதுரா புரியால வாய்ச்சொக்கர் வீற்றிருப்ப தென்று விளம்புதலும் - கோற்றொடியும் 362 நெஞ்சங் களிப்பமிக நீண்டகன்ற தூண்டுவிழிக் கஞ்சங் களிப்பக் கடிதணைந்து - தஞ்சமென 363 நேர்வந் திறைஞ்சினா ணீபந் தனைநோக்கி ஆர்வந் திகழ வறைகின்றாள் - சேரும் 364 அரியயனு மேத்த வருமறைகள் போற்ற உரிய முனிவ ருவப்ப்ப் - புரியும் 365 விரியுமலர் வேணியான் வீற்றிருக்கப் பெற்றாய் உரிய சிவலோக மொப்பாய் - பெரிய 366 தனியான் மதனன் சரத்தான் மயலால் துனியாற் றளந்தேனென் சொல்கேன் - முனிவகலத் 367 தீதன்றி முன்விறகு விற்றதுவுஞ் சேரலற்கு நாதன் றிருமுகத்தை நல்கியதும் - ஓதல் 368 உறுபலகை பாணற் குதவிதுந் தூய விறலி யிசைவியந்த வீறும் - மறுகியுழல் 369 ஏனக் குருளைக் கிரங்கிமுலை யீந்ததுவும் மான வரசமைச்சா வைத்ததுவும் - ஆனபயம் 370 தீரத் திறல்வலியா னுக்குபதே சித்ததுவும் நாரைக்கு முத்திதனை நல்கியதும் - தேரிற் 371 கருணையது வன்றியொரு கைம்மாற்றுக் கன்றே அருளுடையா னாளுமோ வாளா - தொருவுமோ 372 என்றுரைக்கும் போதி லிறைவன் றிருவெழுச்சி துன்று பணைக டுவைத்திடலும் - வென்றி 373 இருபுருவ மாக மெடுத்ததனு வென்னத் தருகலன்கண் மின்னிற் றயங்கக் - கருகிநிறம் 374 கொண்ட மலரளகங் கொண்டற் குழாமென்ன மண்டி வழிதேன் மழைகாட்டத் - துண்டமும் 375 கண்ணுங் கரமுங் குமிழுங் கருவினையும் தண்ணென்ற காந்தளுந் தாநேர - வண்ண 376 முலைமே லணிதரள மொய்வடங்கள் செய்ய மலைமே லருவிகண் மான - அலர்மேவும் 377 கந்தமிகுங் கார்காலங் காமப் பயிர்விளைக்க வந்த தெனவீதி வந்தணைந்தாள் - எந்தை 378 கலாதி யிலாதி கலாமதி சூடி வலாரி பராவு மணாளன் - நிலாவு 379 சுராரி முராரி சுபால கபாலி புராரி பராதி புராணன் - கிராதனணி 380 கண்ணன் கருணைபொழி கண்ணன் செழும்பவள வண்ணன் சதுரன் மதுரேசன் - எண்ணெண் 381 கலையா னிறைபரமன் கங்காளன் வெள்ளி மலையான் மழவிடைமேல் வந்தான் - குலவிப் 382 பணிந்தாண் மடவாள் படர்மயலைச் சொல்லத் துணிந்தாள் சிலவார்த்தை சொல்வாள் - கொணர்ந்தயலார் 383 பாரக் குவளைமலர்ப் பாயன் மலர்த்தொடையென் றீரப் புழுகெனவ றிமசலமென் - றோராமற் 384 பேசும் பொழுதும் பெருமானே யென்னெஞ்சம் கூசும் படியென்னோ கூறிடீர் - ஆசைமால் 385 தந்தக்கான் மந்தக்கா றாழாம னென்னல்போல் வந்தக்கா னானாற்ற வல்லேனோ - அந்தி 386 மதிக்குட் தழலு மலைச்சந் தனத்திற் கொதிப்புந் தரளக் கொதிப்பும் - விதித்ததுதான் 387 என்னளவே வந்ததோ வெல்லார்க்கு மொக்குமோ பொன்னளவு கொன்றையாற் பொன்படைத்த- தன்ன 388 படியே வருளீரேற் பாரீர் நகையீர் அடியேன் மதன் போருக் காளோ - தொடியோ 389 கலையோ மனமோ கவர்ந்தீ ரளித்தீர் அலையோ வலரோ வயர்வோ - தொலையாதோ 390 என்மயக்க மென்னென் றியம்பு மிவணிற்க மின்மயக்கும் பெண்ணமுதம் வேறொருத்தி - மன்னும் 391 தெரிவை உலகுபதி னாலு மொருகுடைக்கீ ழாளச் சிலைமதனக் கீந்த தெரிவை - பலவுயிரைப் 392 பட்டுப் பறியும் படைவே லனவரற்கு மட்டுப் படாத கடு வல்விடம்போல் - கிட்டரிய 393 கூற்றந் தனக்குங் கொலைநூல் படிப்பித்தும் சாற்று மதனூ றலைகண்டும்- ஆற்றா 394 தடல்போ யகில மழிய வுகாந்தக் கடல்போ லுலாப்போதுங் கண்ணாள் - புடவி 395 மருளக் கொடுமை வளர வளர்ந்த இருளும் வெளிபோ லிரியக் - கருமையுற 396 வீசி யுயிரை வெருட்டிப் பிணித்தயம பாசநிகர் கொந்தனக பந்தியான் - தேசம் 397 பணியப் பணியிற் பயின்று திருவை மணியைப் புணர்ந்து மணந்து - தணிய 398 உலகை யளவிட் டுலகை விழுங்கி உலகுக் கினிமை யுதவி - இலகி 399 அரியிற் குலவி யமுதிற் சமைத்த கிரியிற் பொலிவு கிளர - உரிய 400 முழுகி வளரு முலையாள் - எழுதும் 401 பழுதற்ற வோவியரும் பண்பாற் றெரிந்தும் எழுதக் கிடையா விடையாள் - மொழியும் 402 குடபா லிரவி குதிப்பக் கலைகள் உடையான் குணபா லுதிப்ப - இடையாடும் 403 தென்றற் கொழுந்துலவுந் தெய்வமணி மண்டபத்தின் முன்றிற் றிருமாதர் மொய்த்திறைஞ்ச - நின்று 404 மனங்கவரு மையல் வளர விருப்பாள் அனங்கன் கொடுஞ்சமருக் கஞ்சி - இனம்பயிலும் 405 கோவைக் கனித்துவர்வாய்க் கோதையர்க்குக் கூறாமல் பூவையர்க்குக் கற்பிப்பாள் போலிருந்து - தேவர்க் 406 கதிபன் முதல்வ னணியால வாயின் முதல்வ னிசைகண் மொழிவாள் - மதுரைதிரு 407 வாலவா யானதுவும் வாள்வளவன் சேனையொளி கோலுமட லம்பாற் குலைத்ததுவும் - சீலமுறச் 408 சங்கப் பலகை புலவர்பெறத் தந்ததுவும் கொங்குதேர் வேதியற்காக் கூறியதும் - கொங்குதேர் 409 சோராவற்குத் தீதகலச் சொற்றதுவும் பற்றியநக் கீரர் தமிழ்முனிபாற் கேட்டதுவும் - சீருடைய 410 செந்தமிழை யூமை தெரிவித் ததுவும்வடபால் எந்தையிடைக் காடற்கா வெய்தியதும் - சிந்தை 411 மகிழ்ந்துரைக்கும் போது வனசப் பதியும் புகழ்ந்த வுதயகிரி போத - மிகுந்துலகம் 412 மொய்த்த விருளு மகல முகமலர்ந்து சித்திர மன்ன திருவெழுந்து - முத்தமிழும் 413 கற்றார் புகழுங் கடம்பவனத் தாலயத்துள் பொற்றா மரைப்பொய்கை போயணுகிச் - சுற்றும் 414 விரிந்ததடங் கண்டு வியந்து நயந்து பரிந்து சிலதியரைப் பார்த்துத் - திருந்துமணி 415 நீலக் கருங்கெண்டை யங்க ணிறைவுதரும் கோலத்தோ டுள்ளங் குளிர்ச்சியடைந் - தேல 416 முளரி முகமலர்ந்து முத்தந் தரித்து வளைகள் செறிந்து வயங்கி - அளிசேர்ந் 417 துகளு மிருப்பா லுடையான் றிருத்தார் அகமகிழப் பெற்றுமய லாற்றும் - மகளிர் 418 தமைப்பொருவு மிந்தத் தடமென்று நேசத் திமைக்குமணிப் பூணா ளியம்பி - அமைத்தவிழி 419 ஓரா யிரக்கடவு ளுற்றபெருந் தீவினைபோல் தீராத வென்மயலைத் தீர்த்திரென - நீராடி 420 ஆடை யணிமுற் றணிந்தான் கரையணையப் பாடலிசைப் பாணன் பணிந்திறைஞ்சி - ஆடல்வேள் 421 வெற்றித் திருவளைய மின்னே யரன்பவனி இற்றைக்கு முண்டென் றியம்பினான் - சொற்றகைய 422 பாணற்குப் பைம்பூணும் பட்டா டையுமுதவி யாணர்த் திருமா ளிகையெய்தி - ஆணிமணிப் 423 பீடத் திருக்கவொரு பெய்வளையாள் வந்திறைஞ்சி ஆடகப் பொற்பூ ணணிந்தக்கால் - கூடல் 424 அமலர் பவனி யருகி னெடுமால் கமல வனிதையெனக் காணும் - அமையும் 425 வயிர மணிபுனைந்தான் மாமலரோ னன்னூல் பயிலு மரிவையெனப் பார்க்கும் - செயிரில் 426 கதிருதய பானு கதிர்கரப்ப வீசும் புதிய மரகதப் பூணான் - மதிமுகத்து 427 வல்லிக் கலங்காரஞ் செய்து மலர்க்கரத்தில் அல்லிக் குவளை அளித்தயல்சூழ் - மெல்லியர்க்கு 428 வைத்த கனகம் வயிரந் தரளமணிப் பத்தி யணியணிந்து பன்மாதர் - மொய்த்திறைஞ்சப் 429 பக்க முறநிறுத்திப் பாணன் றனைநோக்கி மிக்க வுவமை விளம்பென்றாள் - தக்கமலர்ச் 430 செந்தா மரையாளும் வெண்டா மரையாளும் மந்தா கினியு மருங்கெய்த - வந்தித் 431 தரமகளிர் சூழ வகிலாண்டம் பெற்ற வரைமகடான் வீற்றிருந்த வாறு - பொருவுமெனச் 432 கன்னி யெதிர்நின்று கைகுவிய மெய்குழைய இன்னிசையாழ்ப் பாண னியம்பினான் - தென்னவற்காக் 433 கான்மாறி யாடுகின்ற காரணனை யாரணனை நான்மாடக் கூடலுக்கு நாயகனைத் - தான்மால்கொண் 434 டாவியப் பூணா யழுத்தி நினைந்துருகி ஓவியப் பாவையை யொத்திருந்தாள் - மேவா 435 அரக்க னுரத்தை யடுக்க லெடுக்க நெரித்த வொருத்த னிருத்தன் - விரித்த 436 விதிப்படி யுற்ற விறற்சமன் வெற்றி பதைக்க வுதைத்த பதத்தன் - மதித்த 437 சதுரான னன்கண்ணன் சங்கார காலன் மதுரா புரேசன் மணாளன் - கதுவுமலர்ப் 438 போதுதிர்க்குங் கற்பகப்பூம் பொன்விருக் கத்தின்மேல் வீதி மறைபரவ மேவுதலும் - ஆதரவு 439 கொண்டாள் விரைந்தணைந்தாள் கூடிப்பெருமானைக் கண்டா ளிருகண் களிகூர்ந்தாள் - வண்டு 440 மருக்கமழுங் கொன்றையான் மாமூர லீந்தான் தருக்கிப் புளகந் தழைத்தாள் - கருப்புச் 441 சிலையி னுதறிகழச் செங்கமல வாச மலரின் வதனம் வயங்க - நிலவு 442 தளவ முறுவ றயங்க வசோகத் தொளியும் வடிவு மொளிர - மிளிர்சூதப் 443 போதிற் சுணங்கு பொலியக் கழுநீரிற் காதிற் பொருகண் களிசிறப்ப - ஓதும் 444 மகரக் கொடியின் மணிக்குழைகள் வாய்ப்ப இகலிப் பொருமதன னேற்றம் - அகலவெதிர் 445 வென்றிறைவன் றன்னருளால் வேளரசு கைக்கொண்டு நின்றனன்போ லாயிழையு நேர்நின்றாள் - குன்றாத 446 மெய்ப்பா லணங்குடையான் வெள்ளிமணி மன்றுடையான் அப்பா லுலாவந்தா னாங்கொருத்தி - இப்பாரில் 447 பேரிளம்பெண் மாறாத வெற்றிபுனை மாரவேண் மாதவத்தின் பேறா மெனவந்த பேரிளம்பெண் - கூறின் 448 வருத்தி யுடனே மகிழு மதனூல் விருத்தி யதுராக வெள்ளம் - திருத்தும் 449 அமுத முதவ வவதரித்த மூரற் குமுத வதனநறுங் கொம்பு - தமரம் 450 அழகு பயந்த வணங்கு - விழையும் 451 சுரத மதனச் சுருதி யறிவுக் கிரதி பரவ விருப்பாள் - மருவு 452 திருவா லுருவாற் றிருப்பாற் கடன்மேல் வருவாள் புகழ வருவாள் - பெரியோர் 453 நிறைகழிக்க மையொழித்து நேரெதிர்த்த வேந்தர் உறைகழித்த வேலொத் துலாவி - இறையெடுத்த 454 முத்தலைவே லென்னவுயிர் முற்று முடித்தறவோர் சத்தியவெஞெ சாபந் தனையொத்து - வித்தகமாம் 455 விற்றே ரநங்கனையும் வேற்றடக்கைக் கூற்றினையும் குற்றேவல் கொண்டகொடுங் கூர்விழியாள் - துற்றணிந்த 456 வேரித்தா மப்பளித மென்சந் தனக்குழம்பாற் பூரிப்பாற் செய்யமணிப் பூணாரப் - பாரிப்பால் 457 எண்பார்த் தலத்துளிடை யில்லையென்று போகாமல் கண்பார்த்த வன்ன கனதனத்தாள் - நண்பால் 458 இறைப்பொழுது நீங்கா திறைதிருமே னிக்கண் உறைக்குந் தகையுமென வுற்றோ - மறைத்ததற்கு 459 மெய்வளையு மாமை மிகவெறுக்கு மென்றோமுன் கைவளையுந் தோள்வளையுங் காதலியாள் - மைவளையும் 460 விண்படைத்த மாடத்தின் மீதே மதிள்புடைசூழ் வண்பளிங்கிற் செய்தமைத்த மண்டபத்துக் - கண்களிப்ப 461 வெண்ணிலா முன்றிலிடை மீதேறி நீர்வெள்ளம் தண்ணிலா வெள்ளமெனத் தையலார்-எண்ணிலார் 462 தங்க டிருமுகமுந் தாழ்குழலும் பங்கயத்திற் பொங்கி யெழுமளிகள் போற்பொலியத்-தங்கம் 463 செறியு மணிக்குழையுஞ் செங்கண்ணும் வள்ளை மறியுங் கயற்செயல்கண் மானக்-குறியாத் 464 தளரிடையுங் கொங்கைகளுந் தாமரைநா ளத்து வளரு மிருமுகையின் வாய்ப்பக்-களமும் 465 நகையு மணிபணில நன்முத்த மென்னத் துகில்க டிரைபோலத் தோற்றத்-திகழும் 466 புலராத செவ்விப் பொலிவா லொளிகூர் மலர்வாவி யைமுன்றின் மான-மலர்வாவிச் 467 செம்பதுமப் பீடத்துச் சேரோ திமமென்ன அம்பவளப் பீடத் தமர்ந்திருந்து-நம்பன் 468 ஒருவ னெமையா ளுடையான் புயங்கள் கருதி யயர்கென்ற காலை-முருகியலும் 469 அம்புயமும் பாற்கடலு மைந்தருவுஞ் சிந்தித்தோர் தம்பதங்க ளாக்கொள்ளத் தந்தருளும்-நம்பெருமான் 470 திங்க டனையொழித்துச் செங்கதிராம் வெங்கதிரைக் கங்குலுக்குங் கற்பித்த காரணத்தை-மங்கைமீர் 471 சாற்றுமென யாழ்த்தடக்கைத் தைய லொருவிறலி கோற்றொடியஞ் செங்கை குவித்திறைஞ்சித்-தோற்றம் 472 கருனா கரனைக் கடம்பவனத் தானை மருவாமல் வாடு மகளிர் - திருவாயாம் 473 செங்குமுதத் துக்குந் திகழ்முரன் முல்லைக்கும் அங்கட் சகோதர மவைதமக்கும் - திங்கள் 474 பரிதியெனத் தோன்றும் பரமன் புயத்துக் குரிய நினக்கிவ் வுரையேன் - தெரியிழாய் 475 ஓசை யமிர்தடியே முற்றருந்த யாழ்சிறிது வாசியென நின்று வணங்குதலும் - மாசிலாத் 476 தந்திரியாழ் வாங்கிச் சராசரங்க ணின்றுருகக் கந்திருவக் கன்னியருங் கண்டுவப்ப - அந்தமிசை 477 ஆதி வலைவீசி யன்புற் றதவுமுண்மை வாதவூ ரர்க்கு வழங்கியதும் - பேதமற 478 வெம்பரியைப் பாண்டியற்கு விற்றதுவு மற்றைநாள் அம்புவியெண் வையை யழைத்ததுவும் - எம்பெருமான் 479 பிட்டுக்கு மண்சுமந்த பேரருளுந் தென்னவனை அட்டதழல் வெப்பை யகற்றியதும் - மட்டிலமண் 480 வெங்கழுவி லேற விடுத்ததுவும் வன்னிகிண றங்களை கற்பா லழைத்ததுவும் - தங்கும் 481 இருந்தண் டமிழ்பாடி யாழ்கலனே யாகக் கருங்கங்கு லாழிகரை கண்டாள் - பெருங்கவர்க்கால் 482 வாரண மார்ப்ப மலர்வண் டொலியெழுப்பக் காரிரு ளோடக் கடிக்கமல - வேரி 483 அலர நிருத ரழியக் கதிர்கள் மலரத் தொழில்கள் வளர - விரகால் 484 இரவி குணபா லெழுபுரவித் தேர்மேல் வரும்பி ராம மழுங்கப் - பரவும் 485 மதவா ரணமு மணிவா ரணமும் விதவார வாரம் விளைக்கக் - கதுவு 486 முறைச்சுருதி யாழொலியு மூவாத தெய்வ மறைச்சுருதி சூழொலியு மல்கத் - திறத்தடையும் 487 பல்லுயிரிற் பேரிருளும் பாரிற் கலியிருளும் ஒல்லை யடையா துடைந்திரிய - நல்லோர் 488 முகத்தா மரையு முனிவொன் ற்றியா அகத்தா மரையு மலரப் - பகைத்தமொழி 489 ஈனச் சமயத் திகலழிய வெல்லையிலா ஞானக் கதிர்க ணலமுதவத் - தானே 490 தருமந்த மில்லாச் சராசரங்கட் கெல்லாம் பருவம் பெறஞான பானு - ஒருவனெழில் 491 எட்டானை பூண்டெழுந்த விந்திரவி மானத்து மட்டார் மலர்வீதி வந்தணையத் - தொட்டாரேல் 492 முன்னமய லைத்தீர்க்க மோகம் வடிவுடைய தன்ன மடப்பாவை யாயத்தார் - தன்னருகு 493 போற்ற மதுரா புரேசன் பவனியெதிர் ஏற்று நடந்தா ளிறைஞ்சினாள் - ஆற்றாப் 494 பெருமா மயக்கத்தைப் பெற்றுவந்த தன்மை ஒருநாவா லோத லுறுமே - அருகொரு 495 சேடி யிவணிற்கச் செந்தமி ழாகரனை ஓடி வணங்கி யுடையானே - நீடி 496 வளமதியத் தீயால் வதன மதியும் உளமதியும் வாட லுணரேம் - அளவில் 497 ஒருமைக் கடலொலியா லுற்றதுயி னீங்கி இருமைக் கடலுலைவ தென்னே - ஒருமலயக் 498 காற்றா லிரண்டு களபவரை முத்தாரம் ஆற்றாத தென்னோ வறிகிலேம் - கூற்றின் 499 விளங்கியவே யோசையால் வேய்த்தோ ளிரண்டும் துளங்குவகை யென்னென்று சொல்கேம் - விளிந்தால் 500 சிறிது மயக்கந் தெளிந்து - முறைகடந்து 501 புக்க கடவுளர்தம் பொற்பழியத் தற்போத் தக்க னியாகந் தனை யழிப்பாய் - மிக்க 502 உருவிலாக் காம னுயர்தோ ணெரித்தும் திருவிலா மாலைச் சிதைத்தும் - இருமருங்கும் 503 யாமத்து மாதரவா மாமதிதேய்த் திட்டழித்தும் காமக் கொடுங்கனலின் கைகுறைத்தும் - சேமித்துப் 504 பாத்துரையா மித்தரைத் பல்லுதிர்த்து மாமடலிற் சாய்த்த விதியைத் தலைகெடுத்துஞ் - சாத்தியொளிர் 505 மாக விமான மனம்வளர்த்த வென்றுயரம் யோக மளித்தொழிக்க வொண்ணாதோ - மோகமுற 506 வாரூ டறுத்து வளர்முலைக்குந் தோளுக்கும் சீரூரு மானிடர்க்குந் தேவர்க்கும் - ஆரூரில் 507 செம்பொற் றியாக மளிப்பதுபோற் செம்பசலை அம்பொற் றியாக மளிப்பதேன் - அம்பிகை 508 ஆரத் தழுவு மரிய திருமேனி சேயக் குழைத்த செயறீரப் - பாரில் 509 அரிவையர்த நெஞ்சமுட னாகங் குழைத்தால் புரிவுதரு மத்தழும்பு போமே - விரியும் 510 சடைப்பால் விளங்கத் தகும்பூந் தொடையும் இடப்பாகப் பூந்தொடையு மீந்தால் - படைத்த 511 குலப்பாவை யாரூடல் கொள்வரேன் மற்றை வலப்பாகத் தாமம் வழங்காய் - முலைத்தடத்திற் 512 சேர்ந்தா ளெனநின்று செப்பினா டன்னெஞ்சம் சோர்ந்தா ளுடலந் துளங்கினாள் - போந்தணுகி 513 இப்படி மாத ரெழுவகையு மால்கொள்ள முப்புவனங் காக்க முடிபுனைந் - தொப்பிலாச் 514 சுந்தர மாறன் சுருதி சுரநாடர் வந்து பரவு மதுரேசன் - எந்தை 515 அருள்பாவு கோன்கருனை யங்கயற்க ணம்மை ஒருபாகன் போந்தா னுலா. 516 நூற் சிறப்புப் பாயிரம் (இவற்றை இயற்றியவர் பெயர் தெரியவில்லை) வெண்பா சீரார் புராணத் திருமலைநா தன்கருணைப் பாராளன் மெய்ஞ்ஞானப் பால்விளங்க - ஆராய்ந்து வேதக் குலாவால் விரித்தால வாய்ச்சொக்க நாதர்க் குலாப்பாடி னான். 1 வேதநூற் றென்முழைசை வீரமா றன்கடல்சூழ் பூதலங்க ளன்பாய்ப் புரக்குநாள் - ஆதிநெறித் தெய்வ மதுரைத் திருவால வாயுறைந்த ஐயருலாக் கொண்டருளி னார். 2 வாழி மறைவாழி மன்னன் புகழ்வாழி வாழி மதுரை நகர்வாழி - வாழியே தண்ணளிகூர் வைகைத் தமிழ்நாடு வாழியே கண்ணுதலோன் சைவா கமம். 3 மதுரைச் சொக்கநாதருலா முற்றும். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |