உமாபதி சிவாச்சாரியார் அருளிய போற்றிப் பஃறொடை போற்றிப் பஃறொடை சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது, 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. 196 அடிகளைக் கொண்டு அமைந்த இந் நூல் மூலமாகத் தன்னுடைய குருவான மறைஞான சம்பந்தரை உமாபதியார் போற்றிப் பாடியுள்ளார். நூல் பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும் வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன் நாதநா தாந்த நடுவேதம் - போதத்தால் ஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச் சேம வொளியெவருந் தேரும்வகை - மாமணிசூழ் மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க நின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத பல்லுயிர்வெவ் வேறு படைத்து மவைகாத்து மெல்லை யிளைப் பொழிய விட்டுவைத்துந் தொல்லையுறும்.
வந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற நெல்லுக் குமிதவிடு நீடு செம்பிற் காளிதமுந் தொல்லைக் கடறோன்றத் தோன்றுவரு - மெல்லாம் ஒருபுடை யொப்பாய்த்தா னுள்ளவா றுண்டாய் அருவமா யெவ்வுயிரு மார்த்தே - யுருவுடைய மாமணியை யுள்ளடக்கு மாநாகம் வன்னிதனைத் தானடக்குங் காட்டத் தகுதியும் போன் - ஞானத்தின் கண்ணை மறைத்த கடிய தொழி லாணவத்தால் எண்ணஞ் செயன்மாண்ட வெவ்வுயிர்க்கு முண்ணாடிக் கட்புலனாற் காணார்தங் கைகொடுத்த கோலேபோற் பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால் தனுகரண மும்புவன முந்தந் தவற்றான் மனமுதலாவந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங் காட்டி யதனாற் பிறப்பாக்கிக் கைகொண்டு மீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற வெப்பிறப்பு முற்செ யிருவினையா நிச்சயித்துப் பொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப் புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் எல்லைப் படாவுதரத் தீண்டியதீப் - பல்வகையா லங்கே கிடந்த வநாதியுயிர் தம்பசியால் எங்கேனுமாக வெடுக்குவென - வெங்கும்பிக் காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக் கேயக்கை, கான்முதலா யெவ்வுறுப்பு - மாசறவே செய்து திருத்திப்பின்பி யோகிருத்தி முன்புக்க வையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத னல்லவமே போற்றியம் மாயக்கா றான்மறைப்ப நல்ல வறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா வக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித் துக்காவி சொரத்தா யுண்ணடுங்கி மிக்கோங்குஞ். சிந்தையுருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால் வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க நேசத்தை வைத்த நெறிபோற்றி - பாசற்ற பாளைப் பசும்பதத்தும் பாலனா மப்பதத்து நாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக் கொண்டாள வாளக் கருவிகொடுத் தொக்க நின்று பண்டாரி யான படி போற்றி - தண்டாத புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில் அன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி - முன்புள்ள உண்மை நிலைமை யொருகா லகலாது திண்மை மலத்தாற் சிறையாக்கிக் - கண்மறைத்து மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக் கால நியதி யதுகாட்டி - மேலோங்கு முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை யந்தவராக மவைமுன்பு - தந்த தொழிலறி விச்சை துணையாக மானி நெழிலுடைய முக்குணமுமெய்தி - மருளோடு மன்னு மிதயத்திற் சித்தத்தாற் கண்ட பொருள் இன்ன பொருளென் றியம்பவொண்ணா - வந்நிலை போய்க் கண்டவியன் கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக் கொண்டுநியமித்தற்றை நாட்கொடுப்பப் - பண்டை யிருவினையான் முன்புள்ள வின்பத்துன் பங்கள் மருவும்வகை யங்கே மருவி - யுருவுடனின் றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற் போங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி - நீங்காத முன்னை மலத்திருளுண் மூடா வகையகத்துள் துன்னுமிரு ணீக்குஞ் சுடரேபோ - லந்நிலையே சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரியர் ஆக்கிப் பணித்த வறம் போற்றி - வேட்கைமிகு முண்டிப் பொருட்டா லொருகா லவியாது மண்டியெரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் திண்டிறல் சேர் வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரிதல் எல்லா முடனே யொருங்கிசைந்து - செல்காலை முட்டாமற் செய்வினைக்கும் முற்செய்வினைக் குஞ் செலவு பட்டோ லை தீட்டும் படிபோற்றி - நட்டோங்கு மிந்நிலைமை மானுடருக் கேயன்றி யெண்ணிலா மன்னுயிர்க்கு மிந்த வழக்கேயாய் - முன்னுடைய நாணாள் வரையி லுடல்பிரித்து நல்வினைக்கண் வாணாளின் மாலா யயனாகி - நீணாகர் வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து நானா விதத்தா நலம் பெறுநாள் - தான்மாள வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன் வந்து பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட விற்றைக்கும் இல்லையோ பாவி பிறவாமை யென்றெடுத்து நல்லதோ ரின்சொ னடுவாகச் - சொல்லியிவர் செய்திக்குத் தக்க செயலுறுத்து வீரென்று வெய்துற் றுரைக்க விடைகொண்டு - மையறருஞ் செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந் தக்கநெருப் புத்தூண் தழுவுவித்து - மிக்கோங்கு நாராசங் காய்ச்சிச் செவிமடுத்து நாவரிந்து மீராவுன் னூனைத்தின் நென்றடித்தும் - பேராமல் அங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம் வெங்கோப மாறாத வேட்கையரா - யிங்கொருநாள் எண்ணிமுதற் காணாத வின்னற் கடுநரகம் பன்னொடுநாட் செல்லும் பணிகொண்டு - முன்னாடிக் கண்டு கடன்கழித்தல் காரியமா மென்றண்ணிக் கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற் காச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய மீய்த்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்த நெறி நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன் மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக நஞ்சனைய சிந்தை நமன்றூதர் - வெஞ்சினத்தால் அல்ல லுறுத்து மருநரகங் கண்டுநிற்க வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும் இன்ன வகையா லிருவினைக்க ணின்றருத்தி முன்னைமுத லென்ன முதலில்லோ - நல்வினைக்கண் எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு செல்காலம் பின்னரகஞ் சேராமே - நல்லநெறி யெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல் உய்யு நெறிசிறிதே யுண்டாக்கிப் - பையவே மட்டாய் மலராய் வருநாளின் முன்னைநாண் மொட்டா யுருவா முறைபோலக் - கிட்டியதோர் நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை யெல்லை யிரண்டு மிடையொப்பிற் - பல் பிறவி யத்தமதிலன்றோ வளவென்று பார்த்திருந்து சத்தி பதிக்குந் தரம் போற்றி - முத்திதரு நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமல மொன்றினையு மந்நிலையே யுண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு மேவா விளங்கும் பிரளயா கலருக்குத் தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் -பூவலயந் தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - யன்னவனுக் காதிகுண மாதலினா லாடுந் திருத்தொழிலுஞ் சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம் பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல் வைச்ச நதியு மதிக் கொழுந்து - மச்சமற வாடு மரவு மழகார் திருநுதன்மேல் நீடுருவ வன்னி நெடுங்கண்ணும் - கேடிலயங் கூட்டுந் தமருகமுங் கோல வெரியகலும் பூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப வெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியார் உள்ளத் தினும்பிரியா வொண்சிலம்புங் - கள்ளவினை வென்று பிறப்பறுக்கச் சாத்திவீ ரக்கழலும் ஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி - யென்றும் இறவாத வின்பத் தெமையிருத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந் தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று பேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம் உண்டி யுறக்கம் பயமின்ப மொத்தொழுகிக் கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி - மிண்டாய வாறு சமயப் பொருளுமறி வித்தவற்றிற் பேறின்மை யெங்களுக்கே பேறாக்கித் - தேறாத சித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும் அத்தகைமை தானே யமையாமல் - வித்தகமாஞ் சைவ நெறியிற் சமய முதலாக வெய்து மபிடேக மெய்துவித்துச் - செய்யதிருக் கண்ணருளா நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட புண்ணு மிருவினையும் போயகல - வண்ணமலர்க் கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி மெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி - யொத்தொழுகுஞ் சேணா ரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக் காணா தொழியுங் கணக்கேபோ - லாணவத்தின் ஆதி குறையாம லென்பா லணுகாமல் நீதி நிறுத்து நிலைபோற்றி - மேதக்கோர் செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால் எய்துஞ்சீர் முத்திபத மெய்துவித்து - மெய்யன்பாற் காணத் தகுவார்கள் கண்டாற் றமிப்பின்பு நாணத் தகுஞான நன்னெறியை - வீணே யெனக்குத் தரவேண்டி யெல்லாப் பொருட்கு மனக்கு மலரயன்மால் வானோர் - நினைப்பினுக்குந் தூரம்போ லேயணிய சுந்தரத்தா ளென்றலைமேல் ஆரும் படிதந் தருள்செய்த - பேராளன் தந்தபொரு ளேதென்னிற் றான்வேறு நான்வேறாய் வந்து புணரா வழக்காக்கி - முந்தியென்றன் உள்ளமென்று நீங்கா தொளித்திருந்து தோன்றி நிற்குங் கள்ளமின்று காட்டுங் கழல்போற்றி - வள்ளன்மையால் தன்னைத் தெரிவித்துத் தன்றாளி நுட்கிடந்த வென்னைத் தெரிவித்த வெல்லையின்கண் -மின்னாரும் வண்ண முருவ மருவுங் குணமயக்கம் எண்ணங் கலைகாலமெப்பொருளு - முன்னமெனக் கில்லாமை காட்டிப்பின்பெய்தியவா காட்டியினிச் செல்லாமை காட்டுஞ் செயல்போற்றி - யெல்லாம்போய்த் தம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருளாகி யெம்மைப் புறங்கூறி யின்புற்றுச் - செம்மை யவிகாரம் பேசு மகம்பிரமக் காரர் வெளியா மிருலில் விடாதே - யொளியாய்நீ நின்ற நிலையே நிகழ்த்தி யொருபொருள்வே றின்றியமை யாமை யெடுத்தோதி - யொன்றாகச் சாதித்துத் தம்மைச் சிவமாக்கி யிப்பிறவிப் பேதந் தனிலின்பப் பேதமுறாப் - பாதகரோ டேகமாய்ப் போகாம லெவ்விடத்துங் காட்சி தந்து போகமாம் பொற்றாளி நுட்புணர்த்தி - யாதியுடன் நிற்க வழியா நிலையிதுவே யென்றருளி யொக்க வியாபகந்தன் நுட்காட்டி - மிக்கோங்கு மாநந்த மாக்கடலி லாரா வமுதளித்துத் தான்வந்து செய்யுந் தகுதியினால் - ஊனுயிர்தான் முன்கண்ட காலத்து நீங்காத முன்னோனை யென்கொண்டு போற்றிசைப்பேன் யான் போற்றி திருத்தில்லை போற்றி சிவபோகம் போற்றியவன் மெய்ஞ்ஞானப் புண்ணிய நூல் - போற்றியெங்கள் வெம்பந்த வாழ்க்கைவிட வேறாய்வந் துண்ணின்ற சம்பந்த மாமுனிபொற் றாள். போற்றிப் பஃறொடை முற்றும். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சதுரகிரி யாத்திரை மொழி: தமிழ் பதிப்பு: 5 ஆண்டு: ஜூலை 2015 பக்கங்கள்: 160 எடை: 150 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-32-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: வாழ்க்கை சதுரங்கத்தின் மாயக்கட்டங்களில் முன்னேறிச் சென்று ஜெயிப்பதுதான் மனிதர்களின் லட்சியமாக இருக்கிறது. இந்தப் புதிர்ப் பயணத்தில் சோர்ந்துவிழும் ஒவ்வொரு தருணத்திலும் கடவுளைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறோம். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் பாதையில் செல்லும் எல்லோருக்கும் முழுமையான திருப்தி கிடைத்து விடுவதில்லை. ஆனால், சதுரகிரிக்கு யாத்திரை வருகிறவர்கள் புதுமையான அனுபவத்தைப் பெறுகிறார்கள். சந்தன மகாலிங்கத்தையும் சுந்தர மகாலிங்கத்தையும் தரிசிப்பதில் கிடைக்கும் பரவசத்தைத் தாண்டி, இந்த மலையில் உலாவிய, இந்த மலையை மகத்தான புனித பூமியாக மாற்றிய எண்ணற்ற சித்தர்களின் ஆசியும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இங்கு வந்து சென்றதால், வாழ்வில் இனிமையான திருப்பங்களைச் சந்தித்தவர்கள் எத்தனையோ பேர். இறையருளின் மகத்துவத்தை, இறைவனோடு நடந்து செல்லும் பரவசத்தை இந்த யாத்திரையில் அனுபவிக்கலாம். சித்தர்களின் ரசவாத வித்தைகள், அமானுஷ்யத் தன்மையோடு நிகழ்ந்த அற்புதங்கள், உயிரை ஊடுருவிச் செல்லும் உண்மைக் கதைகள், வாழ்க்கையின் புதிர் முடிச்சுகளை அவிழ்க்கும் அதிசய அனுபவங்கள் என எல்லாம் தரும் யாத்திரை அது. சதுரகிரியின் ரகசியங்களைச் சொல்லும்விதமாக ‘தினகரன் ஆன்மிக மலர்’ இதழில் தொடராக வெளிவந்து, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொகுப்பு, நூல் வடிவம் பெற்று பல பதிப்புகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. பக்திப் பரவசத்தில் திளைக்க விரும்புவோர்க்கு பயனுள்ள நூல் இது! நேரடியாக வாங்க : +91-94440-86888
|