பதினொன்றாந் திருமுறை சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கைலாய ஞான உலா கலிவெண்பா திருச்சிற்றம்பலம் திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா(து) அங்கண் அருமால் உற;அழலாய் நின்ற - பெருமான் 1 பிறவாதே தோன்றினான்; காணாதே காண்பான்; துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் 2 ஆழாதே ஆழ்ந்தான்; அகலா(து) அகலியான்; ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல் 3 ஓதா துணர்ந்தான்; நுணுகாது நுண்ணியான் யாதும்அணுகா துஅணுகியான்; - ஆதி 4 அரியாகிக் காப்பான்; அயனாய்ப் படைப்பான்; அரனாய் அழிப்பவனுந் தானே - பரனாய 5 தேவர் அறியாத தோற்றத்தான்; தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான்; - ஓவாதே 6 எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்; - எவ்வுருவும் 7 தானேயாய் நின்றளிப்பான்; தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான்; - ஆனாத 8 சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப - ஆராய்ந்து 9 செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப - அங்கொருநாள் 10
இறைவன் கோலம் கொள்ளல் பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை, நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள் 11 ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப - ஊனமில்சீர் 12 நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தாவ்13 வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள் 14 குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு தலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த 15 கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும் 16 சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா 17 மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்(கு) அணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய 18 ஆரம்அவைபூண்(டு) அணிதிக ழும்சன்ன வீரந் திருமார்பில் வில்இலக - ஏருடைய 19 எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும் கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் - கொண்டு 20 கடிசூத் திரம்புனைந்து, கங்கணம்கைப் பெய்து வடிவுடைய கோலம் புனைந்தாங்கு - அடிநிலைமேல் 21 இறைவன் புறப்பாடு நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர் 22 எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும் அண்ணல்மேல் ஆசிகள் தாம்உணர்த்த - ஒண்ணிறத்த 23 பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் - பொன்னியலும் 24 அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண் 25 நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏத்த வருணன் மணிக்கலசந் தாங்கத் - தெருவெலாம் 26 வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத் தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர் 27 ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள் வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய 28 உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன் திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த 29 கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள் பொங்கு கவரி புடைஇரட்டத் - தங்கிய 30 பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக 31 மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய் மோகத்(து) உருமு முரசறையப் - போகம்சேர் 32 தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும் கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான் 33 விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர் வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு - எண்ணார் 34 கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் - செருக்குடைய 35 சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத 36 அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் - மன்னிய 37 மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் - ஏல்வுடைய 38 சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான் கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான் 39 காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர் 40 சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல் 41 மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய 42 விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் - எச்சார்வும் 43 சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம் கல்லலகு கல்ல வடமொந்தை - நல்லிலயத் 44 தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் 45 குடமுழவம் கொக்கரை, வீணை, குழல்யாழ் இடமாம் தடாரி படகம் - இடவிய 46 மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு)இவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப, - ஒத்துடனே 47 மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய 48 ஆறாம் இருதுவும், யோகும், அருந்தவமும் மாறாத முத்திரையும், மந்திரமும், - ஈறார்ந்த 49 காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும் வால கிலியரும் வந்தீண்டி - மேலை 50 இமையோர் பெருமானே போற்றி! எழில்சேர் உமையாள் மணவாளா போற்றி - எமைஆளும் 51 தீயாடி போற்றி! சிவனே அடிபோற்றி! ஈசனே, எந்தாய், இறைபோற்றி! - தூயசீர்ச் 52 சங்கரனே போற்றி! சடாமகுடத் தாய்போற்றி! பொங்கரவா பொன்னங் கழல்போற்றி! - அங்கொருநாள் 53 ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி! - தூய 54 மலைமேலாய் போற்றி! மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றிதாள் போற்றி! - நிலைபோற்றி 55 போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும் எங்கும் நலம்பெருக, - ஏற்றுக் 56 கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழக் - கடிகமழும் 57 பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே 58 மகளிர் குழாங்கள் வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம் கோமான் படைமுழக்கம் கேட்டலுமே - தூமாண்பில்) 59 வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ(டு) ஊனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா 60 வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய 61 மாட நடுவில் மலர்ஆர் அமளியே கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில் 62 சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும் 63 கூழைபின் தாழ, வளைஆர்ப்பக், கைபோந்து கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் - சூழொளிய 64 கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழ்நற் 65 பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகைப்புனைந்து - பொற்புடைய 66 பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர் 67 சூளிகையும் சூட்டும் சுளிகையும் சுட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின் 68 மேல்ஏறி நின்று தொழுவார்; துயர்கொண்டு மால்ஏறி நின்று மயங்குவார் - நூலேறு 69 தாமமே தந்து சடாதாரி நல்கானேல், யாமமேல் எம்மை அடும்என்பார் - காமவேள் 70 ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார்; கையெறிவார் தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார்; - பூமன்னும் 71 பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு துன்னரி மாலையாச் சூடுவார்; - முன்னம் 72 ஒருகண் எழுதிவிட்(டு) ஒன்றெழுதா தோடித் தெருவம் புகுவார்; திகைப்பார்; - அருகிருந்த 73 கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார்; - அண்ணல்மேற் 74 கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார் திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார்; - ஒண்ணிறந்த 75 1. பேதை பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச் சிறுசோ றடுதொழிலாள்; - தீதில் 76 இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள்; நலஞ்சேர் உடையாலும் உள்உருக்க கில்லாள்; - நடையாலும் 77 கௌவைநோய் காளையரைச் செய்யாள்; கதிர்முலைகள் வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள்; - செவ்வன்நேர் 78 நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்;தன் செவ்வாயின் வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள்; - பூங்குழலும் 79 பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள் ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள்; - நாடோறும் 80 ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற மனத்தினளாஞ்சேயிழையாள் - நன்றாகத் 81 தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி நீல அறுவை விரித்தெடுத்துக் கோலஞ்சேர் 82 பந்தரில் பாவைகொண்(டு) ஆடுமிப் பாவைக்குத் தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர் 83 ஈசன் எரியாடி என்ன அவனைஓர் காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் - தாய்சொல் 84 இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல் நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய 85 2. பெதும்பை பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள் காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் - சீரொளிய 86 தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு காமருவு கெண்டை,ஓர் செந்தொண்டை, - தூமருவு 87 முத்தம் முரிவெஞ் சிலை,சுட்டி, செம்பவளம் வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த 88 கங்கணம் சேர்ந்திலங்கு கையாள், கதிர்மணியின் கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழ்நல் 89 அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள், ஆய்பொதியில் சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் - வந்து 90 திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள் கடல்பட்ட இன்னமுதம் அன்னாள், - மடல்பட்ட 91 மாலை வளாய குழலாள், மணம்நாறு சோலை இளங்கிளிபோல் தூமொழியாள், - சாலவும் 92 வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்(கு) அஞ்சனத்தை யிட்டங்(கு) அழகாக்கி - எஞ்சா 93 மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணிஆர் வளைதோள்மேல் மின்ன - மணியார்ந்த 94 தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க் காமன் உருவம் வரவெழுதிக் - காமன் 95 கருப்புச் சிலையும் மலர்அம்பும் தேரும் ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் - விருப்பூரும் 96 தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர 97 நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும் நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் - நன்றாகக் 98 கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட 99 3. மங்கை மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய 100 அங்கை கமலம்; அடிகமலம்; மான்நோக்கி கொங்கை கமலம்; முகம்கமலம் - பொங்கெழிலார் 101 இட்டிடையும் வஞ்சி; இரும்பணைத்தோள் வேய்எழிலார் பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு - மட்டுவிரி 102 கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர் 103 வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள் 104 காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து, - மாதராள் 105 பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏவ்வைக்கண் - நற்கோட்டு 106 வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர் 107 தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும் வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான் 108 தார்நோக்கும் தன்தாரும் நோக்கும்; அவனுடைய ஏர்நோக்கும்; தன்ன தெழில்நோக்கும்; - பேரருளான் 109 தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும்; அவன்மார்பின் நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண்நோக்காது 110 உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய 111 4. மடந்தை தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர் 112 ஈசன் சிலையும், எழில்வான் பவளமும், சேய்வலங்கை வேலும், திரள்முத்தும் - பாசிலைய 113 வஞ்சியும், வேயும், வளர்தா மரைமொட்டும், மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப் 114 புருவமும், செவ்வாயும், கண்ணும் எயிறும் உருவ நுகப்பும்மென் தோளும், - மருவினிய 115 கொங்கையும், வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர் பங்கயப் போதனைய சேவடியாள்; - ஒண்கேழல் 116 வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர் ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள்; - ஊழித் 117 திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய 118 முத்தாரம் கண்டத் தணிந்தாள்; அணிகலங்கள் மொய்த்தார வாரம் மிகப்பெருகி - வித்தகத்தால் 119 கள்ளுங், கடாமுங், கலவையுங் கைபோந்திட்டு உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய 120 காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும் 121 தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை வண்ணம் பெறமிசையே மட்டித்தாங்(கு) - ஒண்ணுதலாள் 122 தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப் பின்னும்ஓர் காமரம் யாழமைத்து - மன்னும் 123 விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு - அடல்வல்ல 124 வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க்(கு) எஞ்ஞான்றும் மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல 125 மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால அணிஏறு தோளானைக் கண்டாங்(கு) - அணியார்ந்த 126 கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள் 127 எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம் நல்லாய் படுமேற் படுமென்று - மெல்லவே 128 செல்ல லுறும்;சரணம் கம்பிக்கும்; தன்னுறுநோய் சொல்லலுறும்; சொல்லி உடைசெறிக்கும்; - நல்லாகம் 129 காண லுறும்;கண்கள் நீர்மல்கும்; காண்பார்முன் நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது; - பூணாகம் 130 புல்லலுறும் ‘அண்ணல்கை வாரான்’என் றிவ்வகையே அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள் 131 தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப் பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி 132 5. அரிவை செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழ்நல் 133 திங்களும், தாரகையும், வில்லும், செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் - பொங்கொளிசேர் 134 மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்ஆவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும் 135 “இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்”பென்னும் - சொல்லாலே 136 அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர் 137 இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார் நடைபெடை அன்னத்தை வென்றாள்; - அடியிணைமேல் 138 பாடகம் கொண்டு பரிசமைத்தாள்; பன்மணிசேர் சூடகம் முன்கை தொடர்வித்தாள்; - கேடில்சீர்ப் 139 பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள்; - பொன்னனாள் 140 இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் - முன்னமே 141 பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய 142 இன்னிசையும், இப்பிறப்பும், பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையையுங் கைவிட்டுப் - பொன்னனையீர் 143 இன்றன்றே காண்ப(து) எழில்நலங் கொள்ளேனேல் நன்றன்றே பெண்மை நமக்(கு)என்று - சென்றவன்தன் 144 ஒண்களபம் ஆடும்; ஒளிவாள் முகத்திரண்டு கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழ்நல் 145 கூந்தல் அவிழ்க்கும்; முடிக்கும் கலைதிருத்தும்; சாந்தம் திமிரும் முலையார்க்கும் - பூந்துகிலைச் 146 சூழும்; அவிழ்க்கும்; தொழும்அழும் சோர்துயருற்(று) ஆழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் - சூழொளிய 147 அங்கை வளைதொழுது காத்தாள்; கலைகாவாள்; நங்கை இவளும் நலம்தோற்றாள்; - அங்கொருத்தி 148 6. தெரிவை ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள்; - ஓரா 149 மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும் இருள்தீர் புலரியே ஒப்பாள்; - அருளாலே 150 வெப்பம் இளையவர்கட்(கு) ஆக்குதலால் உச்சியோ(டு) ஒப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்(து) 151 அந்தளிர்போற் சேவடியும், அங்கையும் செம்மையால் அந்திவான் காட்டும் அழகினாள்; - அந்தமில் 152 சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள் ஏரார் இரவின் எழில்கொண்டாள்; - சீராரும் 153 கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்ணிளங் காரின் சவிகொண்டாள்; - வண்ணஞ்சேர் 154 மாந்தளிர் மேனி; முருக்கிதழ்வாய்; ஆதலால், வாய்ந்த இளவேனில் வண்மையாள்; - மாந்தர் 155 அறிவுடையீர் நின்மின்கள்; அல்லார்போம் என்று பறையறைவ போலும் சிலம்பு - முறைமையால், 156 சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல் ஓரா தகலல் உறாதென்று - சீராலே 157 அந்துகிலும், மேகலையும், சூழ்ந்தாள்; அணிமுலைகள் மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே 158 பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால் காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர் 159 நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும் 160 காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன் தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும் 161 ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும் கோகிலமும் போலும் குணத்தினா - ளாகிப் 162 பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி அலர்சுமந்து கூழைய வாகிக் - கலைகரந்(து) 163 உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து கள்ஆவி நாறும் கருங்குழலாள் - தெள்ளொளிய 164 செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார் 165 பொற்கவற்றின், வெள்ளிப் பலகை மணிச்சூது நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகரும் 166 தோளான், நிலைபேறு, தோற்றம், கேடாய்நின்ற தாளான் சடாமகுடம் தோன்றுதலும், - கேளாய 167 நாணார் நடக்க; நலத்தார்க் கிடையில்லை; ஏணார் ஒழிக; எழிலொழிக; - பேணும் 168 குலத்தார் அகன்றிடுக; குற்றத்தார் வம்மின்; நலத்தீர் நினைமின்நீர் என்று - சொலற்கரிய 169 தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது - போவானேல், 170 கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாங்கு 171 7. பேரிளம்பெண் பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் - மண்ணின்மேல் 172 கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே வுளவென்று - பண்டையோர் 173 கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல் விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம் 174 அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் - எஞ்சாத 175 பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி வைத்தன போல வளர்ந்தே ந்தி - ஒத்துச் 176 சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்(கு) அணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த 177 கொங்கையாள், கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம் நங்கையாள், நாகிளவேய்த் தோளினாள்; - அங்கையால் 178 காந்தட் குலம்பழித்தாள்; காமவேள் காதலாள்; சாந்தம் இலங்கும் அகலத்தாள்; - வாய்ந்துடனே 179 ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து துடித்தச் செழும்பவளம் - காய்ந்திலங்கு 180 சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து 181 வரிகிடந்(து) அஞ்சனம் ஆடி மணிகள் உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய 182 தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால் வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த 183 குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப 184 யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல் வாசிகை கொண்டு வடிவமைத்தாள்; - மாசில்சீர்ப் 185 பாதாதி கேசம் பழிப்பிலாள்; பாங்கமைந்த சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள்; - மாதார்ந்த 186 பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர் வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழ்நல் 187 கண்அவனை அல்லாது காணா செவியவன(து) எண்ணருஞ்சீர் அல்ல(து) இசைகேளா - அண்ணல் 188 கழலடி யல்லது கைதொழா அஃதால் அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் - றெழிலுடைய 189 வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால் 190 அரிஅரணஞ் செற்றாங்(கு) அலைபுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில் 191 ஆடும் இறைவன், அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர் 192 வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே 193 வந்தாய்; வளைகவர்ந்தாய்; மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவுஎன்று - நொந்தாள்போல் 194 கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் 195 பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ஆர வாரம் பெரிதன்றே - விண்ணோங்கி 196 மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு. 197 காப்பு பெண்ணீர்மை காமின்; பெருந்தோளி ணைகாமின்; உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக் காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன் ஊரேறு போந்த துலா. திருச்சிற்றம்பலம் திருக்கைலாய ஞான உலா முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |