ஒதுங்கி வாழ்ந்து... சரோசாவின் திருமண நாள் நெருங்க நெருங்க, உலகம்மை மீது மட்டில்லாக் கோபங்கொண்ட மாரிமுத்து நாடார் என்ன பண்ணினாலும் கவலைப்படாமல் திரியும் உலகம்மையைப் பழி வாங்க முடியாதது போல் தோன்றியதை, தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டார். சரோசா வேறு, "கடைசில தங்கப்பழந்தானா எனக்குக் கிடைக்கணும்?" என்று அய்யாவுக்குக் கேட்கும்படியாய் அழுததை, அவரால் மறக்க முடியலாம்; ஆனால் உலகம்மையை மன்னிக்க முடியாது.
ஆகையால் தான், பலவேச நாடாரிடம் உலகம்மையின் வீட்டுக்கூரையைப் பிய்த்துப் போட்டுவிடும்படி சொன்னார். பலவேசத்திற்கு, அது அதிகப்படியாகத் தெரிந்தது. அதே சமயம் நிச்சயதாம்பூலமான பின்னும் நின்று போன கல்யாணங்களும் நினைவிற்கு வந்தன. சேரியில் வேறு, அருணாசலம் பெட்டிஷன் எழுதுவதற்கென்றே பிறந்தவன் போல், முழு நேர விண்ணப்பதாரனாக மாறிவிட்டான். ஆகையால் "செருக்கி மவள கோர்ட்டு வழக்குன்னு இழுத்தா அலைய முடியாம ஓடிப்போயிடுவா. நம்மளையும் ஒரு பயலும் குற சொல்ல முடியாது" என்று அத்தான்காரரிடம் சொல்லி, அவரது அரைகுறை சம்மதத்தைப் பெற்ற பின்னர் வக்கீல் நோட்டீஸ் விட்டுவிட்டார். இதற்கிடையே, உலகம்மையை குட்டாம்பட்டிக்காரர்கள் கொடுமைப் படுத்துகிறார்கள் என்றும், கோணச்சத்திரம் போலீஸ் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும், அருணாசலம் பெட்டிஷன் போட்டான். போலீஸ் ஸ்டேஷன் சார்பில், 'காளிமார்க் கலர் புகழ்' ஹெட்கான்ஸ்டபிள் யோசித்தார். ஏற்கெனவே உலகம்மையைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்து, பல்வேறு அலுவல்கள் நிமித்தத்தால், அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போன அவர், பெட்டிஷனைப் பற்றிக் கேள்விப்பட்டதும், உலகம்மை மீதிருந்த பழைய விரோதத்தைப் புதுப்பித்துக் கொண்டார். இவ்வளவுக்கும் உலகம்மைக்கு, இந்த பெட்டிஷன் விவகாரம் இதுவரை தெரியாது. ஹெட்கான்ஸ்டபிளே, மாரிமுத்து நாடார் வீட்டிற்கு வந்தார். உலகம்மையைச் சமூக விரோதியாகச் சித்தரித்தாலொழிய, சமூகம் அவளுக்கு எதிரியாக இருக்கும் விஷயத்தை மறைக்க முடியாது என்று மறைக்காமல் சொன்னார். அதோடு ஐ.ஜி. லெவலுக்குப் போயிருக்கும் பெட்டிஷனால் கோணச்சத்திரப் போலீஸ் நிலையத்திற்கே கெட்ட பெயர் என்றும், இந்தக் கெட்டப் பெயரை நீக்க வேண்டுமானால், போலீஸ் நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு உலகம்மை சமூக விரோதச் செயல் செய்து வருபவள் என்று 'ரிக்கார்ட்' பூர்வமாக நிரூபிக்க வேண்டும், என்றும் எடுத்துரைத்தார். அப்படி நிரூபிக்கத் தவறினால், 'கோடு கிழித்த' பழைய சமாசாரங்கள் கூட கிளப்பப்பட்டு, தனக்கு மட்டுமில்லாமல் மாரிமுத்து நாடாருக்கும் மானபங்கத்தோடு மற்ற பங்கங்களும் வரும் என்றும் சற்று மிரட்டினார். சமூக விரோதியாவதற்குரிய தகுதிகள் என்ன என்பதைத் தீர்மானிக்க நினைத்தவர்கள்போல், மாரிமுத்து நாடாரும், பலவேச நாடாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த போது இருவர் முகத்தையும் பார்த்த ஹெட்கான்ஸ்டபிள், எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். "பட்டைச் சாராயம், விபச்சாரம், சாமி சிலையைக் கடத்துவது, திருட்டு." இறுதியில், ஊரில் பிரபலமாகியிருக்கும் பட்டைச் சாராயமே எடுத்துக் கொள்ளப்பட்டது. சமயம் வாய்க்கும் போது, காய்ச்சிய சாராயமும், சட்டியும் உலகம்மையின் வீட்டில் வைக்கப்பட வேண்டும் என்றும், தகவல் அறிந்ததுமே, ஹெட்கான்ஸ்டபிள், தானாக வருபவர் போல், வருவார் என்றும் போர் வியூகம் வகுக்கப்பட்டது. அந்த வியூகத்தைக் கலைக்கும் எதிர் வியூகமாக, கான்ஸ்டபிளுக்கு 'காளி மார்க்கை' உடைக்கிற சாக்கிலும், வெற்றிலை பாக்கு வாங்கிக் கொடுக்கிற சாக்கிலும், தலையைச் சொறிந்து கொண்டு நின்ற ஒரு ஹரிஜனப் பண்ணையாள், நேராகப் போய் அருணாசலத்தின் காதைக் கடித்தார். அருணாசலம் பல்லைக் கடித்துக் கொண்டு, பல பெட்டிஷன்களைத் தட்டி விட்டான். உலகம்மையின் வீட்டுக்கு வந்து, தனியாக இருந்த மாயாண்டியையும் எச்சரித்துவிட்டுப் போய்விட்டான். பல அட்டூழியங்களை இதுவரை 'இம்பெர்ஸனலாக'ச் செய்துவந்த கான்ஸ்டபிள், கள்ளச்சாராய அட்டூழியத்தை 'பெர்ஸனலாக' நடத்த நினைத்து, மாரிமுத்து நாடாரின் சமிக்ஞைக்காகக் காத்திருந்தார். அப்போது அருணாசலம் போட்ட மனு அவருக்கு எஸ்.பி.யால் அனுப்பப்பட்டதுடன், அவரது விளக்கமும் கேட்கப்பட்டிருந்தது. நிச்சயம் டிரான்ஸ்பர் வந்துவிடும் என்பதைப் புரிந்து கொண்ட ஹெட்கான்ஸ்டபிள், அது வருவதற்குள், உலகம்மைக்கும் அருணாசலத்திற்கும் ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்; தவியாய்த் தவித்தார். இந்தச் சமயத்தில், உலகம்மையின் வீட்டுக்குப் பல ஹரிஜனப் பெண்கள் வந்து போகத் துவங்கினார்கள். ஓரளவு அமைதியும், அனுதாபமும் கொண்டிருந்த ஊர் ஜனங்கள், இதைப் பார்த்ததும் மீண்டும் கோபாவேசமாகத் தத்தளித்தார்கள். ஒரு மேல் ஜாதிப் பெண்ணோட வீட்டுக்கு, பள்ளுப் பறையுங்க வருதுன்னா அதுவும் ஊர்க்கட்ட மதிக்காம வருதுன்னா அது பெரிய விஷயம்! இது அந்த ஊரை மதிக்காமல் மட்டுமல்ல அவமரியாதையாகவும் நடத்தக் கூடிய செயலாகக் கருதப்பட்டது. இதற்கிடையே நிலமில்லாத சிலர், உலகம்மை வீட்டுக்குப் போகும் ஹரிஜனங்களையும் பகிஷ்கரிக்க வேண்டும் என்றார்கள். நிலமுள்ள மாரிமுத்து வகையறாக்கள், "ஊர் விவகாரம் வேற, வயல் விவகாரம் வேற" என்று சொல்லி விட்டார்கள். அவ்வளவு லேசான கூலிக்கு, அந்தச் சேரி ஆட்களை மாதிரி, வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், ஒரு பெரிய விஷயமும் நடந்தது. பயங்கரமான வெள்ளத்தால், நெல்லை மாவட்டம், இதர மாவட்டங்கள் போல பலமாகப் பாதிக்கப்பட்டது. குட்டாம்பட்டிக் குளத்திற்கு, ராம நதியின் உபரி நீர் விரைவில் வெள்ளமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், குளம் உடையாமல் இருக்க, மதகைத் திறக்கும்படி ஹரிஜனங்கள் சொன்னதை - அதனால் தங்கள் சேரி அழியும் என்று சொன்னதை - நிலப்பிரபுக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை ஆட்சேபித்து, அருணாசலம், மதகுக்கருகே ஒரு கட்டிலைப் போட்டு படுத்துக் கொண்டு, சேரி மக்களின் பேச்சையும் கேட்காமல், சாகும்வரை அல்லது மதகுகள் திறக்கப்படும் வரை, இந்த இரண்டில் எது முன்னால் வருகிறதோ அதுவரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, படுத்துக் கொண்டே அறிவித்தான். அந்த அறிவிப்பு இரண்டு தெருக்களுக்கு மேல் பரவாமல் இருந்த சமயத்தில், எப்படியோ அதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஹெட்கான்ஸ்டபிள், வயதான சப் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி, அருணாசலத்தை அரசாங்க விருந்தாளியாக்கினார். இதுவரை "கிறுக்குப்பய மவன், எக்கேடாவது கெடட்டும், பட்டாத்தான் தெரியும்" என்று முனங்கிக் கொண்டிருந்த சில 'பட்டுப்போன' சேரிக்கிழவர்கள் கூட கிளர்ந்தெழுந்தார்கள். ஒருவர் கூடப் பாக்கியில்லாமல், போலீஸ் நிலையத்தில் அருணாசலத்தைப் பார்க்கப் போனார்கள். அதை முற்றுகையாகக் கருதிய வயதான சப்-இன்ஸ்பெக்டர், ஒழுங்காக 'ரிட்டயராக'க் கருதி அருணாசலத்தை விடுதலை செய்தார். அருணாசலம், மீண்டும் வந்து மதகுப் பக்கம் படுத்துக் கொண்டான். இப்போது சேரிமக்கள், அவன் பக்கத்திலேயே நின்றார்கள். சேரி அழியாமல் இருப்பதற்காக, அவன் தன்னை அழித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறான் என்பதை உணர்ந்ததும், அவர்களும் இரண்டிலொன்றைப் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தவர்களாக ஒன்று திரண்டு, அவனருகேயே நின்றார்கள். ஆனாலும் அவர்களுக்குக் கோஷங்கள் தெரியாது. சிலர், பண்ணையார்கள் வயல்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் துடித்தர்கள். மதகுகளை உடைக்க வேண்டும் என்று இளவட்டங்கள் வட்டமடித்தனர். மேல் ஜாதிக்காரர்களையும் சும்மா சொல்லக்கூடாது. பிள்ளைமார், நாடார், தேவர் என்ற ஜாதி வித்தியாசமில்லாமல், ஒருதாய் மக்கள் போல் ஒன்று திரண்டார்கள். வாயில்லாப் பூச்சிகளாய்க் கிடந்த சேரியர், விஷப் பூச்சிகளாய் மாறிய விந்தையை இன்னும் அவர்கள் ஜீரணிக்க முடியாமல் திண்டாடினாலும், "பறப்பய மக்கள ஓடோட விரட்டாட்டா நாம இருந்ததுல புண்ணியமில்ல" என்று சொல்லி, மரம் வெட்டும் தேவர்களையும், ஆடுமேய்க்கும் கோனார்களையும், பனையேறும் 'சாணார்'களையும், கிணறுவெட்டும் இதர மேல் ஜாதிக்காரர்களையும், நிலப்பிரபுக்கள் ஒன்று திரட்டினார்கள். மதகுகள் உடைக்கப்பட்டால் அவற்றை உடைக்கும் மண்டைகளை உடைப்பதற்காக மாரிமுத்து நாடார், பஞ்சாட்சர ஆசாரி, மாரிமுத்துச் செட்டியார் ஆகியோர் மண்வெட்டிகளையும், கோடாரிகளையும், வெட்டரிவாட்களையும் விநியோகித்தார்கள். மாவட்டக் கலெக்டரே, அங்கு வந்துவிட்டார். பி.டபிள்யூ. எஞ்சினியர்களும், குளத்து மதகைத் திறந்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். கொஞ்சம் திமிறிப் பார்த்த மேல் ஜாதி நேச ஒப்பந்தக்காரர்களை, ரிசர்வ் போலீஸுடன் வந்திருந்த கலெக்டர், இறுதியில் மிரட்டிப் பணிய வைத்தார். சாம, பேத, தானம் போய்விட்டால் அவர்கள் 'தண்டத்திற்கு' இருப்பதாகக் கருதப்பட வேண்டும் என்று சுருங்கக் கூறி விளங்க வைத்தார். எப்படியோ, தாசில்தார், அவருக்கு 'அபிஷியல் மச்சானான' ஆர்.டி.ஓ., எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் புடை சூழ நின்ற கலெக்டர், படுத்துக் கிடந்த அருணாசலத்திற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் தயாராக இருந்த 'ஆரெஞ்சு ஜூஸை' நீட்டினார். அருணாசலம், மடக்கென்று குடிக்கவும், மதகுகள் படக்கென்று திறக்கவும் சரியாக இருந்தது. உண்ணாவிரதம் நின்று விட்டதாகக் கேள்விப்பட்டு வீட்டில் இருந்து ஓடிவந்த உலகம்மை, கையில் வைத்திருந்த இரண்டு வாழைப் பழங்களை, அவனிடம் நீட்டினாள். அவன் ஒன்றை வாய்க்குள் வைத்துக் கொண்டு இன்னொன்றை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டான். குட்டாம்பட்டிக்காரர்கள் உலகம்மையின் இந்த 'சேரிச் செயலை', மிக சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். எதிரிகளுக்கு உதவும் 'எட்டம்மையான' அவளை, எப்படியாவது நிர்மூலப்படுத்தி விட வேண்டும் என்பதில் அவர்களுக்கு இப்போது கருத்து வேற்றுமை இல்லை. மேல் ஜாதியில் பிறந்து, மேல் ஜாதியில் வளர்ந்து, மேல் ஜாதியில் வாழும் ஒரு 'பொம்பிளை', மேல் ஜாதியினரைக் கிள்ளுக்கீரையாகக் கருதும் 'கழுத களவானிப்பய மவனும்', 'காவாலிப்' பயலுமான அருணாசலத்திற்கு, எல்லார் முன்னிலையிலும், வாழைப்பழத்தைக் கொடுக்கிறாள் என்றால், அவளை வாழைக்குலையைச் சாய்ப்பது போல், சாய்க்கவில்லை யென்றால், அவர்கள் இருந்ததில் பிரயோஜனமில்லை. குலத்தைக் கெடுக்க வந்த அந்தக் 'கோடாரிக்காம்பை', கோடாலியால் கூட வெட்டியிருப்பார்கள். அருணாசலத்தையும், அவன் பெட்டிஷன்களையும் கருத்தில் கொண்டு, உலகம்மையை வேறு வழியில் மடக்கப் பார்த்தார்கள்; நினைத்தார்கள். இப்போது ஊரே ஒரு மனிதனாகி, உலகம்மைக்கு ஜென்ம விரோதியாக மாறிவிட்டது. சேரி மக்களிடம் பட்ட அவமானத்தை, அவளிடம் பட்ட அவமானமாகக் கருதினார்கள். காசு கேட்டு, அது கிடைக்காத சிறுவன், கையில் இருக்கும் கண்ணாடியை வீசியெறிவது மாதிரி. கொஞ்சம் மனமாறி வந்த பலவேச நாடார், 'பள்ளுப் பறைகளோடு' அவள் சேர்ந்து கொண்டதை அறிந்ததும், வெகுண்டார். "அருணாசலத்த வச்சிகிட்டு இருக்காள்" என்று இரண்டு மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட மாரிமுத்து நாடார், பஞ்சாட்சர ஆசாரி, ராமையாத்தேவர் ஆகியோர், "வே, ஒமக்கு மூளை இருக்கா? அருணாசலத்த வச்சிக்கிட்டிருக்கான்னு சொன்னா, நமக்குத்தான் அசிங்கம்! அடுத்த ஊர்க்காரங்க, வச்சிக்கிட்டு இருந்தவள் உலகம்மன்னு அட்ரஸ்ஸா வச்சிக்கிட்டு இருப்பாங்க? மேல் ஜாதிப் பொண்ணைக் கீழ் ஜாதிக்காரன் வப்பாட்டியா வச்சிக்கிட்டிருக்கான்னு எல்லாருடைய பொண்ணையும் தான் தப்பா நினைப்பாங்க! இது ஏன்வே ஒம்ம களிமண் மண்டையில் உரைக்கல?" என்று பலவேச நாடாரை நாயைப் பேசியது மாதிரி பேசி, அவர் வாயை ஆளுக்கொரு பக்கமாக அடைத்தார்கள். 'புலி வருது புலி வருதுன்னு' சொல்றது மாதிரி வச்சுக்கிட்டிருக்கான்னு சொல்லப் போய் அவள் நிஜமாகவே அருணாசலத்தை 'வச்சிக்கிட்டு' இருக்கத் துவங்கினால், கேவலம் உலகம்மைக்கு மட்டுந்தானா? அவளைச் சேர்ந்த ஜாதிக்கும் பங்கு கிடைக்காமலா போகும்? 'மேல் ஜாதிக்காரங்க எங்களுக்கு மச்சினங்கன்னு சேரிப்பசங்க பேசினா சேதம் யாருக்கு?" ஆகையால் குட்டாம்பட்டியார், "பாம்பும் சாகணும். பாம்படிக்கிற கம்பும் நோகக்கூடாது" என்று நினைத்தவர்கள் போல், உலகம்மையை எதிர்த்து, பகிஷ்காரத்தைப் பலப்படுத்தினார்கள். சிலரை அதற்காகப் பலவந்தப்படுத்தினார்கள். உலகம்மை வட எல்லையான தோட்டத்துக் கிணற்றில் குளித்து வந்தாள். அங்கே அவள் குளிக்கக் கூடாது என்று தோட்டக்காரரைச் சொல்ல வைத்தார்கள். விரைவில், தோட்டச்சுவரை முட்கம்பிகளை வைத்து அடைக்கவேண்டும் என்றும், அவரிடம் ஆணையிடப்பட்டது. உலகம்மை சட்டாம்பட்டிக் கிணறுகளில் ஒன்றில் குளித்தாள். இரண்டு நாள் கழித்து, தோட்டக்காரர், அவள் அருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். உலகம்மை அசரவில்லை. சேரிக்கிணற்றில் போய்த் தண்ணீர் எடுத்தாள். ஊர்க்கிணற்றுக்குத் தண்ணீருக்காகப் போவதை, அங்கேயுள்ள பெண்களின் நிசப்தத்தைத் தாங்க மாட்டாது ஏற்கெனவே விட்டுவிட்டாள். என்றாலும், ஊரில் நிலவிய பதட்ட நிலையைக் கருதி ஹரிஜனப் பெண்கள் அவள் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். சேரியில் உள்ள சில கிழங்கள் கூட "எல்லாம் ஒங்களாலத்தான் நாடாரம்மா. நீங்க தான் எதுக்கும்மா ஒங்க சண்டையில இழுக்கிய?" என்று தண்ணீர் எடுக்கப் போன அவளிடம் நேரிடையாகவே கேட்டு விட்டார்கள். உலகம்மைக்கு என்னவோ போலிருந்தது. அவர்களைப் பற்றி அருணாசலத்திடமோ, இதர பெண்களிடமோ சொல்ல அவள் விரும்பவில்லை. அப்படிச் சொன்னால், அந்த கிழங்கட்டைகளுக்கு 'செமத்தியாக' வசவு கிடைக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும். உலகம்மை சட்டாம்பட்டி வயக்காட்டுக்கு போகும் போது, வீட்டில் இருந்த ஒரு செப்புக்குடத்தையும் கையோடு கொண்டு போனாள். இதையறிந்த குட்டாம்பட்டியார், சட்டாம்பட்டி நிலப்பிரபுக்களிடம், உலகம்மையை வயலில் சேர்க்கக் கூடாது என்று பக்குவமாகச் சொல்வதற்குத் தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். உலகம்மைக்கு மீண்டும் பயங்கரத் தனிமை வாட்டியது. மெட்ராஸுக்குப் போகலாம் என்று அய்யாவிடம் சொன்ன போது, அவர் மறுத்துவிட்டார். உலகம்மையும் சேரி மக்கள் காட்டும் அன்பில், கட்டுண்டவளாய் அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். இப்போது ஊர் நிலைமை காரணமாக, சேரி மக்கள் ஒதுங்கி இருப்பதால், தனிமைப்பட்ட அவள், அய்யாவிடம் மீண்டும் பட்டணப் பிரவேசத்தைப் பற்றிச் சொல்லும் போது, அவரோ, "எந்தவித பலமும் இல்லாமல், அழக மட்டும் வச்சிக்கிட்டு இருக்கிற ஏழப்பொண்ணு மெட்ராஸ்ல மானத்தோடு வாழ முடியாது" என்று சொன்னார். அவள் மீண்டும் வற்புறுத்திய போது, "நான் செத்த பிறவு என்னைக் குழிமுழிவிட்டு அப்புறமா வேணுமுன்னா போ! என் கண்ணால நீ மெட்ராஸ்ல மானத்துக்குப் போராடுறத பாக்க முடியாது" என்று இறுதியாகச் சொல்லிவிட்டு, வேறு பக்கமாக முகத்தை வைத்துக் கொண்டார். உலகம்மையால் அதற்கு மேல் வற்புறுத்த முடியவில்லை. அதோடு ஒரு லெட்டர் கூடப் போடாத லோகு இருக்கும் மெட்ராஸுக்குப் போக, அவளுக்கு விருப்பமில்லை. அவனை நினைக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலிய தன்னை மீறி வரவழைத்துக் கொண்டு, அதை இறுதியில் வீம்பாக மேற்கொண்டாள். கல்யாணமாகி பத்து நாட்களுக்குப் பிறகும், சரோசா கண்ணைக் கசக்குவதைப் பார்த்து மாரிமுத்து நாடார் திடுக்கிட்டார். போகப் போகச் சரியாகி விடும் என்று நினைத்தவர், மகள் களையிழந்து இருப்பதைப் பார்த்துக் கலங்கினார். முதலிரவிலேயே, தங்கப்பழம், 'பட்டை' போட்டுக் கொண்டு, அவளை நெருங்கினான் என்றும், சாராய நாற்றத்தைத் தாங்க முடியாத சரோசா, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து அழுதாள் என்றும், தங்கப்பழமும் வெளியே வந்து, அவள் தலைமுடியைப் பலவந்தமாகப் பிடித்து, இழுத்துக் கொண்டு உள்ளே போனான் என்றும், மனைவி மூலம் கேள்விப்பட்ட மாரிமுத்து நாடாருக்கு, மார்பை என்னவோ செய்தது. இது போதாதென்று, மச்சினன் பலவேசம் "அத்தான், அடுத்த போகத்துல கரையடி வயலுல கடல போடப்படாது, தக்காளி தான் போடணும்" என்று, அவர் நிலத்துக்காரர் மாதிரியும், இவர் குத்தகைக்காரர் மாதிரியும் பேசிவருவது அவரை வாட்டி வதைத்தது. 'இத்தனைக்கும் காரணமான அந்த உலகம்மை, இன்னும் உலாத்துறாள். காலை நீட்டி நீட்டி நடக்கிறாள். கையை ஆட்டி ஆட்டிப் போகிறாள். இனிமேயும் அவள விட்டு வைக்கது மகா தப்பு! விட முடியாது, விடக்கூடாது!' மாரிமுத்து நாடார், வட எல்லைத் தோட்டக்காரர் ஐவராசாவிடம் தோட்டச்சுவரை அடைத்துவிட வேண்டும் என்று வாதாடி, ஊர்க்காரர்களை எதிர்த்த சேரிப்பயலுக்கு, உலகம்மை வாழைப்பழம் கொடுத்ததை புள்ளிவிவரமாகக் காட்டினார். "அது எப்டி மச்சான் முடியும்? அனார்க்கலி சினிமாவுல உயிரோட சமாதி கட்டுனது மாதுரி இருக்குமே" என்று இழுத்துப் பேசிய ஐவராசாவிடம், தோட்டச்சுவரை அடைக்கவில்லையானால், அவர் வயலுக்குப் பச்சைத் தண்ணீர் போகாது என்று பச்சையாகச் சொல்லிவிட்டார். பொது வாய்க்காலில் இருந்து, நீர் போகமுடியாத 'முக்கடி முனங்கடியில்' மாரிமுத்து நாடார் வயல் வாய்க்காலை நம்பியிருக்கும் இடத்தில், 'ரெண்டு மரக்கால்' விதப்பாட்டை வைத்திருந்த ஐவராசா, இறுதியில் இணங்கிவிட்டார். 'எப்டி வெளில போவா? எப்டியும் போவட்டும். நம்ம தோட்டத்த நாம அடைப்போம்! மாரிமுத்து நாடாருக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை. பலவேச நாடார் இப்போது அவரை மதிப்பதே இல்லை. உலகம்மையை, ஊரைவிட்டு விரட்டவில்லையானால், அவர் இருப்பதில் அர்த்தமில்லை. வீட்டுக்காரி வேறு, "நீங்க ஒரு ஆம்புளயா? ஒரு அன்னக்காவடி பொம்புளய அடக்க முடியாத நீங்க ஒரு ஆம்புளயா?" என்று இரவில் கொடுத்த 'அடி' அவருக்கு பகலிலும் வலித்தது. அந்த வலி தாங்க முடியாமல், அவர் பல்லைக் கடித்துக் கொண்டார். அவர் மூளை தீவிரமாகச் சிந்தித்து இறுதியில் ஒரு முடிவை மேற்கொண்டது. 'ஒண்ணுக்கும் முடியாமல் போனால், பிராந்தன ஏவி அவள கற்பழிக்கச் சொல்லணும். இதனால் (பிராந்தனுக்கு) எட்டு வருஷம் ஜெயில் கிடச்சாலும் பரவாயில்ல.' |
முன்னத்தி ஏர் ஆசிரியர்: பாமயன்வகைப்பாடு : விவசாயம் விலை: ரூ. 130.00 தள்ளுபடி விலை: ரூ. 120.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
குறள் இனிது ஆசிரியர்: சோம வீரப்பன்வகைப்பாடு : வர்த்தகம் விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|