ஓட நினைத்து... ஒரு நாள் முழுதும் உலகம்மைக்கு நிம்மதியில்லை... லோகுவைச் சந்தித்ததால், திருமணம் நின்று போன செய்தி வந்தாலும் வரலாம் என்று உள்ளூரப் பயந்து கொண்டிருந்தவளுக்கு, இப்போது போன உயிர் வந்துவிட்டது. மாரிமுத்து நாடார் வீட்டில், கல்யாண வேலைகள் தங்கு தடையின்றி நடந்துவந்தன. தினமும் காலையிலும், மாலையிலும், சரோசாவைப் பார்த்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, வேலை வெட்டிக்குப் போகும் அவளால் நேற்றுப் போக முடியவில்லை. ஏதோ ஒரு குற்றம் செய்துவிட்ட உணர்வில் தவித்தாள். ஆனால் அவள் பயந்தது மாதிரி எதுவும் நடக்காததால், மாரிமுத்து நாடாரின் வயலுக்குப் புறப்பட்டாள். போகிற வழியில் அவர் மகளைப் பார்க்கலாம் என்று நினைத்தாள். பிறகு சாயங்காலம் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டிக் கழித்தாள்.
புறப்படப் போன உலகம்மை, அய்யா அவளை அர்த்தத்துடன் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, "என்னய்யா விஷயம்" என்றாள். "போறவள மறிக்கப்படாது, போயிட்டு வா." "எதையோ சொல்ல வந்தியரு?" "ஒண்ணுமில்ல, கலக்கமா இருக்கு." "கலக்கலா? இனிமே ஒமுக்கு அதுக்குக் காசு கெடயாது. மெட்ராஸ்ல வார்னிஷையோ எதையோ குடிச்சிட்டு நிறய முட்டாப்பயமக்க செத்துப் போயிட்டாங்களாம். இனிமே அந்தச் சமாச்சாரமே பேசப்படாது." உலகம்மை வீட்டிலிருந்து வெளியேறினாள். 'விளக்குழிக்குள்' இருந்த கலையத்திற்குள் இரண்டு மூன்று ரூபாய் இருப்பது அய்யாவுக்குத் தெரியும் என்பது அவளுக்குத் தெரியும். அதே நேரத்தில் அய்யா, ஆயிரந்தான் கலக்கம் வந்தாலும் அவளிடம் கேளாமல் அதை எடுக்க மாட்டார் என்பதும், அவளுக்குத் தெரியும். 'சாயங்காலம் கலக்கலுக்குக் குடுக்கிற காசுக்கு ஒரு முட்டை வாங்கி அடைபண்ணி அய்யாவுக்குப் போடணும்' என்று நினைத்துக் கொண்டு வயலைப் பார்த்து நடந்தாள். வயலில், இன்னும் மூன்று 'தட்டுகள்' நடாமல் கிடந்தன. அதோடு நாற்றங்கால் இருந்த ஒரு மரக்கால் விதப்பாட்டையும் இன்றைக்கு நடவேண்டும். கண்மாய்க்கு மேற்கே, குளத்துக்குள் குதித்துக் கொண்டிருந்த பெரிய பையன்களை 'காப்பி'யடிப்பது மாதிரி, கிழக்கே முட்டளவு ஓடிக் கொண்டிருந்த நீரிலே விளையாடிய சின்னப்பையன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் நடந்தாள். அவளுக்கும் இப்டி ஒரு தம்பி இருந்தா எப்டி இருக்கும்? அய்யாவுக்கு காவலா இருக்கும். மடைவாய்க்குள் வலையை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம், "மாமா, நமக்கும் கொஞ்சம் மீன் குடுக்கக் கூடாதா? இன்னும் ஆறு மாசத்துக்கு ஒம்ம வீட்டில மீன் வாசன தான் இருக்கும். அப்புறம் கருவாட்டு வாசன" என்று கிண்டல் செய்து கொண்டே, அவள் வயலுக்குப் போன போது பத்துப் பன்னிரெண்டு பெண்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். "ஏய் உலகம்மா, ஒன்னத்தான் ஒன்னத்தான்" என்று கத்திக் கொண்டே வந்த வெள்ளைச்சாமி, குத்துக்காலில் சாய்ந்து கொண்டிருந்தான். அவன், எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. கரை வழியாய் வந்தவன் மாதிரியும் இல்லை. பம்ப் செட்டுக்குள் படுத்துக் கொண்டிருந்தவன் மாதிரியும் தெரியவில்லை. திடீர் இட்லி, திடீர் காபி மாதிரி திடுதிப்பென்று வந்து நின்றான். "என்ன பூ, உலவு, ஒனக்கு லக்கி அடிக்கி. அன்னிக்கி என்னடான்னா மாரிமுத்து மச்சான் கூப்புட்டாரு. இன்னிக்கு பிராந்தன் கூப்பிடுறான். ஒன்பாடு தேவல. குறுக்க நிமுத்த முடியாம கஷ்டப்படாண்டாம்" என்றாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. "பிராந்தன அங்கயே போயி பாருக்கா. இங்க வந்தா முன்னா வேலயில இல்லாத குறல்லாம் சொல்லுவான்" என்றாள் இளம்பெண் ஒருத்தி. அவள் கல்யாணமாகி, ஒரு பிள்ளைக்குத் தாயானவள். கல்யாணமாகாத உலகம்மையை 'அக்கா' என்றழைத்து, தனக்கு இன்னும் இளமை இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்பவள். "ஒன்பாடு லக்கிதான். கிளம்பு ஒலவு. இந்தப் பிராந்துப்பய இங்க கத்தறது மெட்ராஸுக்குக் கேக்கும் போலிருக்கு. மாரிமுத்து கல்யாண வீட்ல இவன ஆடச்சொன்னா நல்லா ஆடுவான். செலவும் மிச்சம். என்ன ஒலவு, எதுக்குக் கூப்பிடுறான்?" உலகம்மை, நாற்றுக்கட்டுத் தீரட்டும் என்று நினைத்தவள் போல், அவன் கூக்குரலைப் பொருட்படுத்தாமல் நட்டுக் கொண்டிருந்தாள். கட்டில் மிச்சத்தை மற்றவர்களிடம் கொடுக்க அவள் இஷ்டப்படவில்லை. "மாரிமுத்து மாமா வீட்ல இன்னிக்கு சொக்காரங்க ஆக்கிப் போடுறாவுளாம். அண்டா குண்டா கழுவ கூட்டிக்கிட்டு வரச் சொல்லி இருப்பார்" என்று உரக்கச் சொல்லிக் கொண்டே, வயல் நீரில் நாற்றுமீது படாமல், கையைக் கழுவிக் கொண்டிருந்தாள். வெள்ளைச்சாமியால், இப்போது குத்துக்காலில் இருந்து கத்த முடியவில்லை. தொண்டை வலித்திருக்க வேண்டும். வயலுக்கே வந்தான். "ஏய் உலகம்மா, நான் சொல்றது காதுல விழல?" "இரேன், அப்பாவு, என்ன மாடுன்னு நினைச்சியா மனுஷின்னு நினைச்சியா?" "நீ மாடும் இல்ல. மனுஷியும் இல்ல. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யுற திருட்டுத் தேவடியா. அடுத்துக் கொடுக்கற பனையேறிச் செறுக்கி மவா. வயலுக்குள்ள ஏமுழா போனா? ஒப்பன் வயலாளா? இல்லன்னா ஒன் வைப்பாளன் வயலாளா? எத்தனாவது சட்டத்துலழா வயலுக்குள்ள வரலாம்? வாரியா, இல்ல..." உலகம்மை திகைத்துத் திக்குமுக்காடிப் போனாள். அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை. தலை விண்ணென்று தெரித்தது. நெஞ்சு அடித்துக் கொள்ளும் சத்தம் அவளுக்கு நன்றாகக் கேட்டது. அவன், வேறு யாரையோ பேசுவது மாதிரியும் அவளுக்குத் தோன்றியது. இந்த மாதிரி யாருமே, அவளைப் பேசியதில்லை. கிராமத்து வாலிபப் பெண்கள் 'கெட்ட' வார்த்தைகள் பேசுவதை, வெறுப்பவள் அவள். 'நம்ம உலகு தான் நூத்துல ஒருத்தி. அவா வாயில மறந்து கூட ஒரு கெட்ட வார்த்த வராது' என்று பல 'கெட்ட வார்த்தை' பெண்களாலேயே புகழப்பட்டவள். வெள்ளைச்சாமி பேசியதைக் கேட்டும் சாகாமல் இருக்கிறோமே என்று வருத்தப்பட்டாள். அப்படிப் பேசிய அவனை, சாகடிக்காமலும் இருக்கிறோமே என்று கோபப்பட்டாள். 'ஒன்ன ராத்திரில அவமானப்படுத்திட்டா' என்று அவள் தந்தை சொன்ன நாளிலிருந்து, இடுப்பில் யாருக்கும் தெரியாமல் ஒரு சின்னக் கத்தியைச் 'செருகி' வைத்திருக்கும் அவள், இப்போது அந்தக் கத்தியை எடுத்து அவன் தொண்டைக் குழியைக் குத்தி நெஞ்செலும்பைத் 'தென்னி' எடுக்கலாமா என்று கூட நினைத்தாள். சில சினிமாப் படங்களைப் பார்த்திருக்கும் உலகம்மை, இத்தனை கலக்கத்திலும், லோகநாதன் அங்கே திடுமென்று வந்து, வெள்ளைச்சாமியை உதைப்பது போலவும், அவன் கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலவும், 'தேவடியா' என்று சொன்ன அவன் உதடுகளைப் பனைமரத்தில் வைத்துத் தேய்ப்பது போலவும், அது முடிந்ததும் அழுதுக் கொண்டிருக்கும் அவளை அணைத்துக் கொள்வது போலவும் கற்பனை செய்து பார்த்தாள். பிறகு 'இப்டி புத்தி கெட்டதனமா சரோசாவுக்குத் துரோகமா நெனக்கிற என்னை அவன் என்ன சொன்னாலும் தகும்' என்று நினைத்துக் கொண்டாள். இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் பேசினாள்: "ஒனக்கு நான் என்ன பண்ணுனேன் வெள்ளையா? ஏன் இப்டி அவமானமா பேசுற?" "எனக்குப் பண்ணினா என்ன? எங்க பெரிய்யாவுக்குப் பண்ணினா என்ன? நாக்குமேல பல்லுப்போட்டுப் பேச ஒனக்கு வெக்கமா இல்லழா? வயல விட்டுவா நாய." "வெள்ளையா, மரியாதி குடுத்து மரியாதி வாங்கு. முப்பத்திரெண்டு பல்லும் உடஞ்சி போவும். ஜாக்கிரத." "யாருக்கு உடையுதுன்னு பார்த்துடலாமுழா." "என்ன எதுக்குல அவமானமா பேசுற?" "நீ எதுக்கிழா சட்டாம்பட்டிக்குப் போன? எந்தக் கள்ளப்புருஷனப் பாக்கப் போனழா? இந்த ஊர்ல ஆம்புள கிடைக்கலன்னா அந்த ஊருக்குப் போன? எச்சிக்கல தேவடியா. எங்க பெரிய்யா வயலுல்ல நாய் மாதிரி வேல பாக்கிற 'வாங்கிக் குடிச்ச' கூலிவேல பாக்கிற செறுக்கிக்கு இவ்வளவு திமுரு இருக்குமுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? வயல்ல ஏமுழா நிக்கிற? பனையேறிப்பய மொவள." நாற்றுக்கற்றைகளைப் போட்டுவிட்டு, வாய் பிளந்தவாறு நின்ற 'பொம்பிளைகளால்' இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. 'தனக்கு வந்தாத் தெரியும் தலைவலியும் நோயும்' என்பது மாதிரி; 'வாங்கிக் குடிச்சி', 'கூலிவேல பாக்குற செறுக்கி' என்பன போன்ற வார்த்தைகள் தங்களையும் தாக்குவதை உணர்ந்திருந்தார்கள். சிறிது நேரம் அந்த பிராந்துப் பூனைக்கு எப்படி மணிக்கட்டுவது என்று யோசிப்பது போல், கைகளை முஷ்டிகளாக்கி நெரித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில், ஒரு கிழவி போர்ப்பரணி பாடினாள்: "ஏய் வெள்ளயா! அறிவிருக்கால? அவள ஏமுல அப்பிடித் திட்டுற? நாய்க்குப் பிறந்த பயல." "ஒனக்கென்னழா சும்மா கெடயேன், கிழட்டுச் செறுக்கி." இன்னொருத்தி பிடித்துக் கொண்டாள்; அவள் கிழவியின் அண்ணன் மகள். "யாரப் பாத்துல செறுக்கின்ன? யாருல வாங்கித் தின்னவங்க? இருந்த சொத்தை எல்லாம் சைக்கிள் ஓட்டப் பழகுறதாயும் 'பூதுக்கடையிலயும்' தொலச்சிட்டு நாயிலயும் கேடு கெட்ட நாயா, பெரியப்பன் ஊத்துற எச்சிக் கஞ்சிக்கு அலையுற பயலால செறுக்கின்னு கேக்குற? சோம்பேறிப்பய மவன?" "அந்தத் தேவடியாள பேசினா ஒனக்கென்னழா?" இன்னொருத்தி இடைமறித்தாள்: "யார்ல தேவடியா? இந்த இருபது வயசுலயும் ஒருத்தர் ஒரு வார்த்த பேசாதபடி நடக்கறவா அவா. இவள் தேவடியாளாம். தேவடியாங்கிறய, ஒன் தங்கச்சி கதை தெரியுமால? மேலத்தெரு சுந்தரம்பய, ஒன் வீட்டுக்கு வந்து ஒன்னையே சிகரெட்டு வாங்கப் போகச் சொல்லிட்டு ஒன் தங்கச்சிய கட்டிப்பிடிச்சான். அவ தேவடியாளா? இவா தேவடியாளா? எச்சி சிகரெட்டுக்கு ஆசப்பட்டு சொந்த தங்கச்சிய கூட்டிக் குடுக்கிற பயலுக்கு வாய் வேறயல? இவ்வளவு பேசுறியே, ஒன் அக்கா எப்படின்னு ஒனக்குத் தெரியுமால?" "விட்டுத் தள்ளுக்கா." "சும்மா இரு அலமு. நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். பிராந்துப்பயமவன் முழுத்த பொம்புளப்புள்ளயப் பாத்து வாய்க்கு வந்தபடி பேசுறான். எல, மாரியம்மா சத்தியமா சொல்லுறேன். உலகம்மையோட பாவம் ஒன்ன விடாதுல. நீ புழுத்துத்தான் சாகப்போறல, ஒம்மைய மாதிரி." "ஏழா, எங்க அம்மையப் பேசுனீன்னா ஒரே வெட்டா வெட்டி கிணத்துக்குள்ள ஆத்துப்புடுவேன்." இப்போது மற்றொருத்தி சாடினாள்: "ஏமுழா, கிறுக்குப்பய மவன்கிட்ட பேச்ச வளக்கிறிய? மம்பெட்டிக் கணயவச்சி சாத்தலாம் வாங்க. ஏல பிராந்தா! நீ ஆம்புளன்னா அங்கேயே நில்லுல. ஒன்மேல சாணிய கரச்சி ஊத்தாட்டி சொல்லு." சில கிழவிகள் தடுத்தும் கேளாமல், பெண்கள், அவனை நோக்கி முன்னேறினார்கள். ஓடுவதா அல்லது சாடுவதா என்று தெரியாமல் வெள்ளைச்சாமி திண்டாடினான். "ஏல வெள்ளய்யா, உலகம்மா மோசம் பண்ணிட்டா. பனையேறீப்பய மவள வாய்க்கு வந்தபடி பேசி விரட்டுல" என்று பெரியப்பா சொன்னதை அமல் செய்ய வந்தால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்தவன் போல் அவன் தவித்துக் கொண்டிருந்த போது, விஷயத்தின் முதல் அத்தியாயத்தை அவன் 'லெவலில்' முடிக்க நினைத்த மாரிமுத்து நாடார், பிறகு ஒரு வேளை விபரீதமாகிவிடும் என்று நினைத்து மனைவி பேச்சியை அனுப்பி வைத்தார். அவள் வருவதற்கு ஒரு நிமிடம் தாமதம் ஏற்பட்டிருந்தால், வெள்ளைச்சாமி 'பொம்பிளைகளிடம் அடிபட்டிருப்பான். "முறுத்த ஆம்புளைய அடிக்கப் போறியளா? பிராந்தன்னு இளக்காரமா?" என்று சொல்லிக் கொண்டு வந்த பேச்சியைப் பார்த்ததும், முன்னேறிக் கொண்டிருந்த பெண் கூட்டம் பின்வாங்காலும் முன்வாங்காமலும் அப்படியே நின்றது. பேச்சி 'நாட்டாமை நல்லச்சாமி நாடார் மவள்'. அவள் பிறந்த ஊரில், அவள் அய்யா நாட்டாண்மைக்காரர். அதுவும், இப்போது படித்த இளைஞர்களால் பறி போய்விட்டது. அந்தக் காலத்தில், ஊரில் அம்மங்கொடையோ, ஆத்தாக் கொடையோ நடக்கும்போது, 'குடிசனங்க', அவருக்கு கோயிலில் வெட்டிய ஆட்டுக்கிடாவில் தொடைக் கறியைக் கொடுத்து விட வேண்டுமாம். குளத்தில் மீன் அழிந்தால், முதல் விரால் மீனும் அவருக்குத்தான். கல்யாணம் போன்ற நல்லது நடந்தால், அவரிடம் நாலுபடி அரிசியும், இரண்டு தேங்காயும் கொடுக்க வேண்டுமாம். கருமாந்திரம் மாதிரி கெட்டது நடந்தால், ஒரு துண்டுக் கருவாடும், பத்துப் பலக் கருப்புக்கட்டியும் கொடுக்க வேண்டுமாம். 'வாட்ச்மேன்' மாதிரி, கோவில் சாவியும் அவரிடம் தானாம். இப்படிப்பட்ட 'நாட்டாமைச்' சூழலில் வளர்ந்த பேச்சியம்மை ஐம்பதுக்கு மேல் வயதாகியும், இன்னும் 'கர்நாடகமாகவே' இருந்தாள். இதர பணக்காரப் பெண்கள் ஓரளவு தங்களை மாற்றிக் கொண்டதைக் கூட அவள் வெறுத்து, "கெட்டாலும் மேன்மக்க மேன்மக்கதான்" என்று தமிழ்ச் செய்யுளுக்கு அனர்த்தம் செய்து, கெட்டு நொறுங்கிப் போன அய்யா நிலையை நியாயப்படுத்துபவள். சரோசா கிழவியாகிப் போனதுக்கு இவளே காரணம். அப்படிப்பட்டவள், வேலைக்காரிகளின் எதிர்ப்பைக் கண்டதும், கொஞ்சம் திடுக்கிட்டாள். அவளைப் பார்த்ததும், அவர்கள் வயலுக்குள் விழுந்தடித்துப் போவார்கள் என்று நினைத்து, அப்படி எதுவும் நடக்காததால், அதிர்ந்து போனாள். 'பெருங்காய வாசனையை' கைவிடாமல் அதட்டினாள். "அவன அடிக்கப் போறியள, அடிக்க முடியுமா உங்களால?" ஆவேசமாகப் பதில் வந்தது. "அவனயும் அடிப்போம். அத தடுக்கிறவியலயும் அடிப்போம். ஏழ எழியவங்கன்னா கேவலமா?" "உலகம்ம எங்களுக்குத் துரோகம் பண்ணிட்டா. அவள வயலுக்குள்ள விடுறதும் விடாததும் எங்க இஷ்டம். நீங்க யாரு அப்பண?" "ஒருத்தி பாதி நேரம் வேல பாத்தப் பிறவு அவள மாத்த அதிகாரம் இல்ல. அதுவும் தேவடியான்னு சொல்லுறதுக்கு திறந்து கிடக்கல." "அவா என் வயலுல மிதிக்க முடியாது." "அப்படின்னா நாங்களும் வேல பாக்கல. அவளுக்கு இல்லாத வயலு எங்களுக்கும் வேண்டாம். வாங்கழா போவலாம். இந்த வயலுல யார் வந்து நடுறான்னு பாத்துப்புடலாம். ஓஹோ." முப்பது நாழிகையில், இருபத்தெட்டை வீட்டுக்குள்ளே செலவழித்த பேச்சியம்மைக்கு உண்மை புரியத் துவங்கியது. 'காலம் மாறிப் போச்சி. அதுவும் கெட்டதுக்கு மாறிப் போச்சி. அட்டய பிடிச்சிக் கட்டுலுல கிடத்துற மாதிரி, நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சதுமாதிரி தெருவில சுத்துற வேலக்கார நாயுவளும் சட்டம் பேசுற காலம் வந்துட்டு, விட்டுப் பிடிச்சா தான் வாழலாம்.' இப்போதுதான் பேச்சியம்மை, அந்தப் பெண்களை முதன் முறையாக மனுஷிகளாகப் பார்த்தாள். இப்போதுதான், அவளுக்கு அவர்களும், சேலை ஏன் கட்டுகிறார்கள் என்பதற்கு முழு அர்த்தம் புரிந்தது. இதனால் கொஞ்சம் பயந்து கூடப் போனாள். அதே நேரத்தில், எப்படியாவது உலகம்மையை 'டிஸ்மிஸ்' செய்து விடுவதில், அவளுக்கு மட்டும் வயலை 'லாக்கவுட்' செய்வதில் குறியாக இருந்தாள். அதற்காகச் சுருதியை மாற்றினாள். "இத்தனை பேசுறியள! அவன் எதுக்காவ அவள அப்படிப் பேசியிருப்பான்னு நெனச்சிப் பாத்திகளா?" "சும்மா ஒங்களுக்குத்தான் பேசத் தெரியுங்குறது மாதிரி கத்தாதீங்க. ஆயிரம் பொய்யச் சொல்லி ஒரு கல்யாணத்த நடத்துன்னு சொல்லுவாக. இந்த உலகம்ம என்ன பண்ணினா தெரியுமா? சட்டாம்பட்டில நிச்சயம் பண்ணின மாப்பிள்ளகிட்ட போயி எதையோ பேசி கலைச்சிட்டா. என் பொண்ணு வயசுல இருக்கிறவளுக, மூணு பிள்ள, நாலு பிள்ள பெத்துட்டா. ஆனால், நான் பெத்த பொண்ணு முப்பது வயசுலயும் கன்னி கழியாம இருக்கா. இப்ப கூடி வந்ததையும் இந்தப் பாதகி கெடுத்திட்டா! சரின்னு சொல்லிட்டுப் போனவங்க, இன்னக்கிப் பொண்ணு வேண்டாமுன்னு சொல்லியனுப்பிட்டாங்க." பேச்சியம்மைக்கு 'வேலைக்காரிகள்' மத்தியில் அழ விருப்பம் இல்லை. இருந்தாலும் அழுதாள். அந்த அழுகை, பெண்கள் மத்தியில் ஒருவித 'இரக்கத்தைக்கூட' ஏற்படுத்தியது. பேச்சியம்மை, தன் மகள் கல்யாணம் நின்று போனதுக்காக அழுவதாகத்தான் அந்தப் பெண்கள் நினைத்தார்கள். அது உண்மையுங்கூட. அதே சமயம், 'கூலி வேல பாக்குற பொம்பிளைங்கிட்ட சரிக்குச் சமமா பேசும்படியாய் ஆண்டவன் வச்சிட்டாரே' என்று அதற்கும் சேர்த்து அழுதாள். 'என்ன! உலகம்மையா கலச்சா?' என்று கசமுசா என்று பேசிக் கொண்டே பெண்கள் அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதே நேரத்தில் உலகம்மை இல்லாமல் வயலுக்குள் போகவும் அவர்கள் விரும்பாதது மாதிரி இருந்தது. ஒருத்தி உலகம்மையிடமே, கேட்டாள்: "நீ எம்மாளு கிடக்க முடியாம சட்டாம்பட்டிக்குப் போன?" "போனாளோ போவலியோ? ஆயிரம் இருக்கும். அதுக்காக அவள வெளியேத்துறது நம்மள வெளியேத்துறது மாதிரி." "இவளும் இப்படிப் போயிருக்கக்கூடாது. அதுக்காக அவனும் அப்படிப் பேசியிருக்கக்கூடாது." "இவா போயிருக்க மாட்டா. யாரோ கோள் சொல்லிட்டாங்க." உலகம்மை, சக 'வேலைக்காரிகள்' கொஞ்சம் வீக்காகி வருவதைப் புரிந்து கொண்டாள். அதே சமயம் அவர்களிடம் விளக்கமாகச் சொல்ல அவள் விரும்பவில்லை. சொன்னாலும், அவர்களுக்குப் புரியாது. புரிந்தாலும், அவள் செய்வதை அங்கீகரிக்க மாட்டார்கள். ஏன்? அவளே, இப்போது தான் செய்தது சரிதானா என்பது போல் யோசித்தாள். லோகநாதன் மீது அவளுக்குக் கோபம் வந்தது. 'படிச்சவன' நம்பக்கூடாது என்பது எவ்வளவு உண்மை! ஈரத்துணியைப் போட்டு கழுத்தறத்துட்டான். பாவி. சரோசாக்கா இப்போ எப்டி இருக்காளோ?' பெண்கள் எந்த முடிவுக்கு வர முடியாமல் தவித்த போது, உலகம்மை ஒரு முடிவுக்கு வந்தாள். பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசினாள். "நான் சட்டாம்பட்டிக்குப் போனது வாஸ்தவந்தான். அதுக்காவ வருத்தப்படவும் இல்ல. சந்தோஷப்படவும் இல்ல. ஏதோ என் போதாத காலம். இவ்வளவும் நடந்த பிறவு நான் இவங்க வயலுல நுழையுறது தப்புத்தான். எனக்காக நீங்க வராண்டாம். நான் போறேன்." உலகம்மை விருட்டென்று நடந்தாள். அதுவரை அழாமல், கோபத்தால் கன்றிச் சிவந்த அவள் விழிகள் நீரைக் கொட்டின. அவள், 'சரோசாக்கா நம்மளப் பத்தி என்ன நினைப்பாள்!' என்று தான் வருத்தப்பட்டாளே தவிர, வெள்ளைச்சாமியைப் பற்றி அவள் அதிகமாக அலட்டிக்கவில்லை. அதற்காக, அவன் வார்த்தைகள் மறந்து போகக் கூடியவில்லை அல்ல. அவன் அப்படித் திட்டியபோது, இதர பெண்கள் தாயைப் போல பரிந்து பேசியது, அவள் இதுவரை அனுபவித்திராத புதிய பாசம். அவளையறியாமலே கண்ணீர் விட்டாள். ஐந்து வயதிலே அம்மாவை இழந்து தாய்ப்பாசத்தின் கனபரிமாணத்தை உணராத அவள், அந்தப் பெண்கள் அவளுக்காகப் பரிந்து பேசியபோது, அவள் அம்மாவே, பத்துக் கூறுகளாகி, ஒவ்வொன்றும் ஒரு தாயாக அங்கே நட்டுக் கொண்டிருந்தது போல், அவளுக்குத் தோன்றியது. அவளுக்காக அவர்கள் வேலையை விட்டுவிட்டு வரத்தயாராக இருந்ததும் அவளுக்குக் கொஞ்சம் இதமாகவே இருந்தது. உலகம்மை, ஊருக்கருகே வந்து விட்டாள். என்ன நடந்தது என்பன தெரியாதவள் போலவும், என்ன நடக்கும் என்பது புரியாதவளைப் போலவும் தலையைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டே நடந்தாள். 'லோகு சொல்லியிருப்பாரோ? சேசே, சொல்லியிருக்க மாட்டாரு. சரோசாக்காவ கட்ட மாட்டேன்னுட்டாரா? அது அவரு இஷ்டம். தங்க ஊசின்னு கண்ணுல இடிக்க முடியுமா? பாவம் சரோசாக்கா என்னப் பத்தி என்ன நினைப்பா? நான் செஞ்சது சரிதான்னா? அவங்க மட்டும் மாப்பிள்ளய ஏமாத்தப் பார்க்கலாமா? அவரும் பாவந்தான். அவளும் பாவந்தான். ஆனால் நான் தான் பாவி, பொறக்கக்கூடாத பாவி.' தலை குனிந்து நடந்தவள் 'கனைப்புச்' சத்தங்கேட்டுத் தலை நிமிர்ந்தாள். பலவேச நாடார் அவளைப் பார்த்துச் சிரித்தார். "உலகம்மா உன்னோட உதவிய மறக்க முடியாது. நீ உண்மையிலேயே புலிக்குப் பொறந்தவா தான். நான் உன்ன என்னமோன்னு நெனச்சேன். அவன் மாரிமுத்துக்கு பயப்படாண்டாம். சின்னய்யா இருக்கேன். தைரியமா இரு. வீட்ட காலி பண்ணாண்டாம். அவன் வயலு போனா, என் வயலு இருக்கு. சட்டாம்பட்டிக்கு எப்ப போன? மாப்பிள்ளக் கிட்டயே சொல்லிட்டியா?" உலகம்மை அவரை வெறுப்போடு பார்த்தாள். "நான் ஒண்ணும் ஒமக்குப் பயந்து போவல. எனக்கு அநியாயமா பட்டுது. அதனாலே போனேன். சொன்னேன். அவ்வளவுதான்." உலகம்மை அவரை ஏறிட்டுப் பார்க்காமல் நடந்தாள் 'மானங்கெட்டவன், மானத்த வாங்குறது மாதிரி 'தொழில் பண்ணலாமுன்னு' சொல்லிட்டு, இப்ப அதே வாயால சின்னையாங்றான். மானங்கெட்டத்தனமா பேசுறதும், அப்புறம் மானங்கெட்டத்தனமா 'அலத்துறதும்'. தூ-' 'இந்த ஊர்ல எப்டித்தான் காலந்தள்ளப் போறோமோ' என்று தன்னை அறியாமல் மெதுவாகச் சொல்லிக் கொண்டாள். என்னவோ ஒன்று பயங்கரமாக நடக்கப் போகிறது என்ற அச்சத்தை விரட்டியடிப்பவள் போலவும், அதிலிருந்து ஓட விரும்புபவள் போலவும், அவள் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போனாள். |
இமயகுருவுடன் ஓர் இதயப்பயணம் ஆசிரியர்: மோகன் சுவாமிமொழிபெயர்ப்பாளர்: சுபா வகைப்பாடு : ஆன்மிகம் விலை: ரூ. 220.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல்: ரூ. 50.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
பித்தப்பூ ஆசிரியர்: க.நா. சுப்ரமண்யம்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 70.00 தள்ளுபடி விலை: ரூ. 65.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|