கோப ரூபியாய்... 'கோணச்சத்திரம்' டவுனா? கிராமமா?' என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவிற்கு டவுன் மாதிரி விரிந்தும், கிராமம் மாதிரி மரம் மட்டைகளோடும் அந்த ஊர் இருந்தது. மயானத்திற்கு அருகே, செவ்வகம் மாதிரியும், கூம்பு மாதிரியும் அமைந்த மதில் சுவருக்கு மத்தியில், செங்கற் படிவங்களால் கட்டப்பட்ட சிவப்புக் கட்டிடம் உள்ளது. மதிலுக்கும், அந்தக் கட்டிடத்திற்கும் இடையே பல மரங்கள். குறிப்பாக மதில் வாசலிலிருந்து உள்ளே போனால், பெரிய பெரிய மரங்கள் தெரியும். "இதுக்குமேல் நீ உள்ளே போறத விட எங்ககிட்ட வந்து தூக்குப் போட்டுச் சாவலாம்" என்று குறிப்பால் உணர்த்தும் கழுத்தை வலிக்க வைக்கும் பெரிய ஆலமரங்கள் இரண்டு உண்டு. வாடிக்கைக்காரர்களுக்கு ஞாபகப்படுத்துவது போல், மதிலை ஒட்டி சில கருவேல மரங்களும் 'பட்டைகளை'க் காட்டிக் கொண்டு நின்றன.
மயானத்திற்கருகே இருந்த அந்தக் கட்டிடத்தில், ஏறக்குறைய செத்து விட்டவர் போல், அவர் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உள்ளங்கை, எதையோ வாங்கத் தயார் நிலையில் இருப்பது போல், கிண்ணம் மாதிரி போதிய இடைவெளியுடன் குவிந்து கிடந்தது. உள்ளே முதலாவது அறையில், சுவரோடு ஒட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலியில் 'ரைட்டர்' எதையோ எழுதிக் கொண்டிருந்தார். எதிர்ச்சுவரில் பல துப்பாக்கிகள், பல்லி மாதிரி அப்பிக் கிடந்தன. உண்மையிலேயே, அவர் ரைட்டர்தான். அந்த வார்த்தையின் தமிழ் மொழிபெயர்ப்பின்படி, அவரும் சிறந்த எழுத்தாளர் தான். எப்.ஐ.ஆரில், என்னென்ன காரணங்களை எப்படி எப்படிச் சிருஷ்டிக்கலாம் என்று நினைப்பவர். என்றாலும், சிருஷ்டிக்கும் பிரமனை, சிவன் தலையைக் கிள்ளியது போல், புதிய சப்-இன்ஸ்பெக்டர் பையன் இவரையும், இவரது சிருஷ்டியையும் அவ்வப்போது 'கிள்ளி'க் கொண்டிருந்தாலும், அவரது சிருஷ்டித்தல், திருஷ்டிபடும் அளவிற்கு சுறுசுறுப்பாக மீண்டும் வளரும். இரண்டாவது அறையில், விசாலமான மேஜையும், அதன் மேல் என்னவெல்லாமோ கிடந்தன. ஆளில்லாத நாற்காலி. அதற்கு வலது பக்கத்தில், குறுக்கு நெடுக்கான கம்பிகளைக் கொண்ட "லாக்கப் அறை". உள்ளே நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். கம்பிகளுக்கு வெளியே ஒரு கான்ஸ்டபிள் லத்திக் கம்போடு உலாத்திக் கொண்டிருந்தார். உள்ளே நின்று கொண்டிருந்தவர்கள், கான்ஸ்டபிளிடம் மாமன் மச்சான் மாதிரி பேசிக் கொண்டிருந்தார்கள். "எஸ்.ஐ. எப்ப ஸார் வருவார்?" "நாளக்கி மந்திரி வரார். அதுக்காவ எங்கெல்லாமோ அலைஞ்சிக்கிட்டிருக்கார். சர்க்கிளும் அவரும் டி.எஸ்.பி. கிட்ட போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஒன் சம்சாரத்துக்கு இப்ப உடம்பு எப்படிடா இருக்கு? இப்ப அவா காய்க்காளா." "அவளால முடியல ஸார்? எப்ப ஸார் விடுவிங்க?" "எஸ்.ஐ. வரட்டும்." "மாதக்கடசில நாமதான் ஒங்களுக்கு கைகொடுக்கணுமுன்னு சொன்னேன். சரிதானே ஸார்? நேத்து செங்கோட்டை பஸ்ல வந்திறங்கினியளே. எங்க ஸார் போயிருந்தீங்க?" "மாமியாருக்கு உடம்பு சரியில்ல. ஒரு நட போயிட்டு வந்தேன். ஏய் அடுத்த வாரம் கொஞ்சம் மலத்தேனு வேணும். கிடைக்குமா? மாமியாருக்கு மருந்துக்கு வேணும்." "ஒங்களுக்கு இல்லாததா? இப்ப செத்த நேரம் விடுங்க. நொடியில கொண்டு வாரேன். நாளக்கின்னா கிடைக்காது." "பரவாயில்ல, நீ பெரிய ஆளுதாண்டா. ஒனக்குப் பதிலா நான் உள்ள போயி நிக்கணுமுன்னு கூடச் சொல்லுவே." லாக்கப்பிற்குள் இருந்தவர்களும், வெளியே நின்றவரும் சிரித்த சிரிப்பு, ரைட்டரின் சிருஷ்டி வித்தையைக் கூட லேசாகக் கலைத்தது. லேசாக, முகத்தைச் சுழித்துக் கொண்டார். வெளியே தூங்கிக் கொண்டிருந்த ஹெட்கான்ஸ்டபிள், வாசல் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்டுப் 'படக்கென்று' விழித்தார். சின்ன வயசில், பாட்டி கூடப் படுத்து, பல பேய்க் கதைகளைக் கேட்டுக் கெட்டுப் போன அவர், தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பவள் மோகினிப் பிசாசாக இருக்கலாமா என்று சந்தேகப்பட்டார். திடீரென்று எழுந்து லத்திக்கம்பை எடுத்துக் கொண்டு "யாரது யாரது" என்றார். 'பதுங்கிவிட்டு வெட்டினான்' என்று எழுதலாமா, அல்லது 'வெட்டிவிட்டுப் பதுங்கினான்' என்று எழுதலாமா என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த ரைட்டரும், அவர் போட்ட கூச்சலில் வெளியே வந்தார். கான்ஸ்டபிளும் அங்கே ஓடிவந்தார். நெருங்கி வந்து நின்று கொண்டு, போலீஸ் படிக்கட்டில் 'ஏறலாமா, வேண்டாமா?' என்று யோசிப்பது போல் நின்ற பெண்ணைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திகிலாகவே இருந்தது. 'கொலைக் கேஸா?' ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார். "ஏய் யார் நீ? மரியாதியா சொல்லு." "என் பேரு உலகம்மை. குட்டாம்பட்டியில் இருக்கேன். எங்க அய்யாவ வாங்குன கடன குடுக்கலன்னு கோட்டுக்குள்ள நிறுத்தி இருக்காங்க." "கோட்டுக்குள்ளன்னா?" "நீங்க இங்க ஜெயிலுக்குள்ள போட்டு அடைக்கது மாதிரி, ஒரு கோட்ட வரஞ்சி, அதுக்குள்ளேயே நிக்க வைக்கறது. மத்தியானத்துல இருந்து எங்க அய்யா கஞ்சி தண்ணி குடிக்காம அங்கேயே கிடக்காரு." உலகம்மையால் அழாமல் இருக்க முடியவில்லை. ரைட்டர் அவள் பேசுவதில், ஏதாவது சிருஷ்டிக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார். "சரி கம்ளெயிண்ட் எழுதிக்குடு. நாளைக்குப் பாக்கலாம்." "இன்னிக்கு நீங்க வராட்டா அவரு அங்கேயே செத்துப் போவாரு." "இப்ப முடியாது. நாளைக்கு மந்திரி வரார். அவனவன் நாயாய் அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். நீ நாளைக்கி வா." "அய்யா அப்டிச் சொன்னா எப்டிங்க? அங்க என் அய்யா இந்நேரம் செத்துக் கூட போயிருப்பாரு. இல்லன்னா இந்த நேரத்துல மூணு மைலு நடந்து வருவேனா?" "நீ எப்டி வந்தங்கிறது முக்கியமல்ல. இப்ப நாங்க வர முடியாதுங்கறதுதான் முக்கியம்!" "இப்டிப் பேசினா எப்படி அய்யா? வலியார் மெலியார வாட்டாம இருக்கத்தான் நீங்க இருக்கிய? மந்திரிமாரு கூட இதத்தான் சொல்லுதாவ?" "ஏய், அனாவசியமா பேசாத. நாளைக்கு வான்னா வா. ஒனக்கு ஒப்பன் பெரிசு. எங்களுக்கு மந்திரி பெரிசு." "அப்புறம் என் மேல வருத்தப்படக் கூடாதுங்க. மந்திரி எங்க ஊருக்கும் வாராரு. நான் அவருகிட்டயே சொல்லுவேன். அப்படின்னா நான் போவட்டுமா? தண்ணி கேட்டவருக்கு அதக் குடுக்காம வந்துட்டேன்." ஹெட்கான்ஸ்டபிள் விறைப்பாக நின்றார். கான்ஸ்டபிள் வயிற்றைத் தடவி விட்டுக் கொண்டார். 'ஸ்டேஷன் இன்சார்ஜான' ரைட்டர் மிடுக்காகப் பேசினார். அவருக்கு ஹெட்கான்ஸ்டபிளை அதிகமாகப் பிடிக்காது. "அந்தப் பொண்ணு சொல்றதப் பாத்தா கேஸ் சீரியஸ் போலத் தோணுது. கோட்டுக்குள்ள ஒருவர நிறுத்தி வைக்கிறது சட்டப்படி பெரிய குற்றம். ரெண்டு வருஷம் ஜெயில் போடலாம். அது அநியாயம்! ரெண்டு பேரும் போயிட்டு ஜல்தியா வந்திடுங்க." ஹெட்கான்ஸ்டபிளும், கான்ஸ்டபிளும், இரண்டு லைட் இல்லாத சைக்கிள்களை உருட்டிக்கொண்டு, அழாக் குறையாகப் புறப்பட்டார்கள். உலகம்மை, முன்னால் வழி காட்டிக் கொண்டிருந்தாள். ரைட்டர் தன்னைத்தானே தனக்குள்ளேயே மெச்சிக் கொண்டார். 'ஒருவேள மந்திரிய அவள் பார்த்தாலும், அவள மந்திரி பார்த்தாலும் நம்மப் பத்தி அவா சொல்லாண்டாமா? சொல்லுவா-' "என்னய்யா ஒங்க ஊர்ல பெரிய இழவாப் போச்சி" என்று கத்திக் கொண்டே, ஹெட்கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளுடன் அங்கே வந்த போது துடித்துக் கொண்டிருந்த மாயாண்டி அவர்களை ஏறிட்டுப் பார்த்து எழுந்தார். அவரால் நிற்க முடியவில்லை. மீண்டும் அந்தக் கட்டாந்தரையில் உட்கார்ந்தார். உலகம்மை, அய்யாவை ஆதரவாகப் பிடித்துக் கொண்டே "இவருதான் மாரிமுத்து. இவருதான் ராமசாமி. இவன் தான் வெள்ளைச்சாமி. இவங்க மூணு பேருமாத்தான் எங்கய்யாவை இழுத்துக் கோட்டுக்குள்ள நிறுத்தினவங்க" என்றாள். ஹெட்கான்ஸ்டபிள், மாரிமுத்து நாடாரை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு, "அடடே நாடாரா? நீங்களா இப்டிப் பண்ணுனது?" என்றார். மாரிமுத்து நாடார் சிரிப்பை வரவழைத்துக் கொண்டார். "நான் ஒண்ணும் பண்ணலிங்க. குடுத்த கடன கேட்டேன். அதுக்கு இந்த மனுஷன் இங்க வந்து புரள்றான். குடி வெறில அவனே புரண்டா நான் என்னங்க பண்றது? ஏய் பிராந்தா! அய்யாமாருக்கு ரெண்டு காளிமார்க் கலர் வாங்கியாடா. ராமசாமி ரெண்டு நாற்காலி கொண்டு வா! வேற எதும் வேணுங்களா?" "ஒண்ணும் வேண்டாம். நாங்க சீக்கிரமா போவணும்." உலகம்மை சோற்றுக்குள் மறைத்து வைத்த முழுப் பூசணிக்காயை வெளியே எடுக்கத் துடித்தாள். ஹெட்கான்ஸ்டபிளோ சாவகாசமாக வயிற்றை நெளித்து விட்டுக் கொண்டு நின்றார். "பொய் சொல்லுறாரு. மத்தியானத்தில இருந்து இவர இங்கயே நிறுத்தி வச்ச பாவி மனுஷன், இப்ப என்னமாப் பேசுறாரு? வேணுமுன்னா இங்க நிக்கவங்களக் கேட்டுப் பாருங்க." ஹெட்கான்ஸ்டபிள் சுற்றி நின்றவர்களைக் கேட்பதற்காக வாயெடுத்தார். இதற்குள் காளிமார்க் கலரை பிராந்தனிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி, மாரிமுத்து நாடார் நீட்டினார். இந்தச் சிறு இடைவெளி நேரத்தில், 'நமக்கென்ன வம்பு' என்று நினைத்து கூட்டத்தில் பெரும் பகுதி கலைந்து விட்டது. "கலர் நல்லா இருக்கே" என்று சொல்லிக் கொண்டே "ஏய்யா ஒங்களத்தான். இவர நாடாரு கோட்டுக்குள்ள நிறுத்தி வச்சாரா? சொல்லுங்க உம் ஜல்தி" என்றார் ஹெட். கூட்டத்தில் யாருமே பேசவில்லை. "அட சொல்லுங்கய்யா. நாடார் பொய் சொல்லுறாரா? இந்தப் பொண்ணு பொய் சொல்றாளா?" கூட்டம் மௌனம் சாதித்தது. பிறகு ஒருவர் ஒரு சலாம் போட்டுக்கொண்டே, பொதுப்படையாகப் பேசினார். "எங்களுக்கு ஒண்ணுந் தெரியாதுங்க. வயலுக்குப் போயிட்டு இப்போதான் வந்தோம்." இதற்குள் ராமசாமி கொண்டு வந்த நாற்காலிகளில் இரு போலீஸ்காரர்களும் உட்கார்ந்தார்கள். உலகம்மைக்கு ஒன்றும் ஓடவில்லை. 'இது ஊரா அல்லது காடா?' என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள். "எலியும் பூனையும் மாதிரி சண்டட போடுறாக" என்ற பழமொழியை ஊரார் சொல்லும் போதெல்லாம், அவள் யோசித்துப் பார்த்தவள். 'எலி, பூனை கூட எப்பவும் சண்டைக்குப் போகாது. உயிர் பிழைச்சா போதுமுன்னு பூனயப் பார்த்ததும் ஓடுகிற ஜீவன் அது. இருந்தாலும் அடிச்சிக் கொல்லுற பூனயயும், துடிச்சிச் சாவுற எலியையும், 'ஒரே தட்ல' வச்சு 'எலியும் பூனயும் மாதிரி' என்று சொல்வதன் உட்பொருள் இப்போதுதான் அவளுக்குப் புரிய வேண்டாத அளவுக்கு புரிந்தது. போலீஸ்காரங்க என்னடான்னா கலர் குடிக்காங்க!' ஊராரைப் பார்த்தே அவள் கேட்டாள். "சொல்லுங்கய்யா! துரைச்சாமி மாமா நீரும் பாத்துக்கிட்டுத் தானே இருந்தீரு? சொல்லுமே. சீம முத்துமாமா! நீரு தான என்ன மாரிமுத்து நாடாரோட காலு கைய பிடிக்கச் சொன்னீரு? நான் கோட்டுக்குள்ள போனதுக்குப் பிராந்தன் என்னமா கேட்டான்? சொல்லுமேன் சின்னையா, பேச மாட்டீரா? மச்சான் மவராசா ஒம்மத்தான். நீருதானே அய்யாக்குத் தண்ணி குடுக்கக் கிணத்துப் பக்கம் போனீரு? போலீஸ் அய்யாமாருக்கிட்டச் சொல்லுமே. யாருமே சொல்ல மாட்டியளா. ஒங்க வாயி செத்துப் போச்சா? லிங்கையா மச்சான், நீரு கூடவா பேசாம இருக்கியரு?" கூட்டத்தினர் மனச்சாட்சியால் உந்தப்பட்டதுபோல் முன்னுக்கும் பின்னுக்குமாக நடந்தார்கள். உண்மையைச் சொல்லத் துடித்த சிலர் கூட, போலீஸ்காரர்கள் கலரைக் குடித்த தோரணையைப் பார்த்ததும், தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்கள். உலகம்மை, இப்போது போலீஸ்காரர்களைப் பார்த்து அழுது கொண்டே பேசினாள். ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார். இதற்குள் இரண்டு இளநீர் அங்கே வந்துவிட்டன. "ஏய் அனாவசியமா பேசாத. பொம்புளைக்கு இவ்வளவு வாயி ஆவாது." "நீரும் ஓரம்சாஞ்சிப் பேசுறியருய்யா. இவங்கள ரகசியமாக் கூப்புட்டு விசாரிச்சா உள்ளதச் சொல்லுவாங்க. பப்ளிக்கா கேட்டா பயப்படத்தான் செய்வாங்க. ஏன்னா இந்த ஆளு அவங்கள கருவறுத்திடுவான்னு தெரியும். ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு விஷயத்துல அவருகிட்ட மாட்டிக்கிட்டவங்க. ஏட்டய்யா ரகசியமா விசாரியும். என் அய்யாவ படுத்துனபாடு அப்பத் தெரியும்." ஹெட்கான்ஸ்டபிள், இளநீரைத் தம்பிடித்துக் குடித்துவிட்டுச் சீறினார். மீசையில் சில இளநீர்த்துளிகள் புல்லில் படர்ந்த பனிபோல் மின்னின. "ஏ பொண்ணு! எனக்கு முப்பது வருஷ போலீஸ் சர்வீஸ். எப்டி விசாரிக்கணுமுன்னு எனக்கு நீ சொல்லிக் குடுக்கிறியா. பொம்பிளேன்னு பாக்கறேன். இல்லன்னா லத்தி பிஞ்சிருக்கும்." மாரிமுத்து நாடார் இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பவில்லை. இளநீர் குடித்தவர் காதில் எதேச்சையாகச் சொல்பவர் போல் பேசினார். "அவா என்னைக்கும் அடங்காப்பிடாரிதான்! பொம்புள பேசுறத பெரிசா எடுக்காதிங்க. ஒண்ணுமில்ல, ஏட்டு ஸார், இவா அப்பன் மாயாண்டிக்கு அண்ணாடம் குடி. அந்தப்பக்கமா குடிச்சிட்டுத் தள்ளாடிக்கிட்டு வந்தான். 'ஏய்யா குடிக்கக் காசிருக்கு, கொடுத்த கடன அடைக்கக் காசில்லையான்னு' கேட்டேன். அதுக்கு குடிவெறில இங்கேயே புரண்டுக்கிட்டுக் கத்தினான். இவா நான் கோடு கிழிச்சேன்னு கத்துறா. இந்தச் சாக்குல வாங்குன கடன ஏப்பம் போடலாமுன்னு நெனச்சி நடிக்கிறா. நாட்ல சர்க்கார் நடக்குங்கறத மறந்துட்டா." ஹெட்கான்ஸ்டபிள், எஸ்.பி.யைக் கண்டவர் போல் திடுக்கிட்டு எழுந்தார். மாயாண்டிப் பக்கம் போனார். "ஏய், ஊதுய்யா பாக்கலாம். போதும் ஊதுனது. தண்ணி நெறயா போட்டுருக்கான். ஏ பிள்ள! ஒப்பன சாராயத்த குடுத்துத் தெருவுல விட்டதுமுல்லாம பெரிய மனுஷங்கள அவமானப்படுத்தப் பாக்கியா? குடிக்கது சட்ட விரோதமுன்னு தெரியாதா? கான்ஸ்டபிள், இந்த ஆளைத் தூக்கும். மாயாண்டி நடப்பா ஸ்டேஷனுக்கு." கான்ஸ்டபிளும், ஹெட்கான்ஸ்டபிளும் ஆளுக்கொரு கையாக, மாயாண்டியைப் பிடித்து நிறுத்தினார்கள். பிறகு ஒரு கையில் தத்தம் சைக்கிளை உருட்டிக் கொந்து, இன்னொரு கையால், மாயாண்டியின் கையைத் தோளோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு புறப்பட்டார்கள். மாயாண்டி, பரக்கப் பரக்க விழித்தவராய், "ஒலகம்மா ஒலகம்மா!" என்று புலம்பிக் கொண்டே, அந்த போலீஸ்காரர்களுக்கு மத்தியில் நடக்க முடியாமல் நடந்தார். உலகம்மை வாயடைத்துப் போனாள். பெரிய அநியாயத்தைத் தண்டிக்க வந்த போலீஸ்காரர்கள், அந்த ஆளைத் தண்டிக்க மனமில்லாமல், அதை மூடி மறைக்க, ஒரு அப்பாவியைக் கூட்டிப் போவதை நினைத்து, அவளால் பேசக்கூட முடியவில்லை. 'இப்படியும் நடக்குமா' என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, கண்களைக் கசக்கிக் கொண்டாள். சிறிது தூரம் போவது வரைக்கும் அப்படியே ஸ்தம்பித்துப் போன உலகம்மை, பிறகு சுயநினைவுக்கு வந்தவள் போல் "அய்யா, அய்யா, இவ்வளவு நாளும் காசு குடுக்காம இருந்துட்டு இன்னைக்கு குடுத்து ஒம்ம கெடுத்திட்டனே, கெடுத்திட்டனே" என்று புலம்பிக் கொண்டு, இழுத்துச் செல்லப்படும் தாய்ப்பசு பின்னால் கதறியோடும் கன்று போல் ஓடினாள். மாரிமுத்து நாடார், வெள்ளைச்சாமியும், ராமசாமியும் புடை சூழ ஹெட்கான்ஸ்டபிளிடம் பேசிக் கொண்டு போனார். "நாளக்கி மந்திரி வரார். ஐயாவுக்கு டூட்டி எங்க?" "மேடப் பக்கம்." "அப்படின்னா நாளக்கி அங்க பாக்கலாம்." "நீங்க வாரியளா?" "ஆமாம். நானும் பேசுறேன்." "நீங்க வேற கட்சியாச்சே. மாறிட்டிங்களா?" "மாறல. ஆனால் மந்திரி எல்லாருக்கும் பொதுத்தானே." "அதுவுஞ்சரிதான். யோவ் மாயாண்டி! ஜல்தியாய் நடய்யா. ஒன்னோட பெரிய இழவாப் போச்சி." மாரிமுத்து நாடார், ஹெட்கான்ஸ்டபிள் கையை உரசிக் கொண்டே பேசினார். பத்து ரூபாய் நோட்டு ஒன்று கைமாறியது. பாம்புக் கண்ணனான கான்ஸ்டபிளுக்கே தெரியவில்லை. உலகம்மை பள்ளிக்கூடத்தின் பக்கம் சிறிது நின்றாள். தள்ளாடிக் கொண்டும், தள்ளப்பட்டுக் கொண்டும் போன தகப்பனைப் பார்த்தாள். அவள் கண்களில் ஒருவித வெறி. உடம்பில் ஒருவித முறுக்கு. தலையில் ஒருவித நிமிர்வு. முன்னால் போகும் அய்யா, வெறும் அய்யாவாக, இப்போது அவளுக்குத் தெரியவில்லை. ஏழையாகப் பிறந்த ஒருவனை, எந்த வம்புதும்புக்கும் போகாத ஒருவனை, கிட்டத்தட்ட அனாதையாக இருக்கும் ஒரு அப்பாவியை, அநியாயம் நியாய வேடம் பூண்டு, அக்கிரமம் போலீஸ் உருவமாகி, கொண்டு போவதாக நினைத்துக் கொண்டாள். உலகம்மை, வேடிக்கை பார்ப்பது போல வரும் கூட்டத்தை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்தாள். உபதேசம் செய்த சீமமுத்து மாமா, தண்ணீர் எடுக்கப் போன மவராசா மச்சான், வழக்குப் பேசப்போகும் லிங்கையா மச்சான், 'வம்புச் சண்டைக்குப் போவக்கூடாது; வந்த சண்டய விடக்கூடாதுன்னு' அடிச்சிப் பேசும் ஆறுமுக ஆசாரி, 'ஏழையென்றும், கோழையென்றும் எவருமில்லை ஜாதியில்' என்று ஒரு பாரதியாக மாறும் சீமைச்சாமி வாத்தியார், அக்கிரமக்காரர்களை அடக்குபவராக 'பாவக்கூத்து' நாடகத்தில் குரலை மாற்றிப் பேசும் சண்முகம் பிள்ளை - அத்தனை பேரையும் அலட்சியமாகப் பார்த்த உலகம்மைக்கு, இப்போது அசாத்திய தைரியம் வந்துவிட்டது போல் தோன்றியது. அத்தனை பேரும் அவளுக்குப் புழுக்களாகத்தான் தெரிந்தனர். நாடி நரம்புகளெங்கும் வியாபித்திருந்த தைரிய அணுக்கள் அனைத்தும் ஒன்றிரண்டாய், இரண்டு நான்காய், நான்கு பதினாறாய், பதினாறு இருநூற்று ஐம்பத்தாறாய் பிரிந்து, அதுவே அடக்க முடியாத அணுப்பிளப்பாகி அணுகுண்டை அடிவயிற்றில் வைத்திருப்பவள் போல், கூட்டத்தைப் பார்த்துப் பேசினாள்: "நீங்களெல்லாம் மனுஷங்களாய்யா? ஒங்களுக்கு எதுக்குய்யா வேட்டி, சட்டை? பொட்டையிலயும் கேடுகெட்ட பொட்டப்பயலுக! ஏன் பின்னால வாரீக? உள்ளதச் சொல்லப் பயப்படுற நீங்களெல்லாம் எதுக்காவ மனுஷன்னு பூலோகத்துல லாந்தணும்? போங்கய்யா, ஒங்க வேலயப் பாத்துக்கிட்டு." கூட்டத்தினர் முணுமுணுத்துக் கொண்டே, கோபத்துடன் பின் வாங்கினர். ஒருவேளை போலீஸ்காரர்கள் இருந்ததும் நல்லதாய்ப் போயிற்று. இல்லையென்றால், அவளை அடித்தாலும் அடித்திருப்பார்கள். உலகம்மை போலீஸ்காரர்கள் பின்னால் கம்பீரமாக நடந்து கொண்டிருந்தாள். |
உங்கள் மனிதம் ஜாதியற்றதா? ஆசிரியர்: ஜெயராணிவகைப்பாடு : தலித்தியம் விலை: ரூ. 220.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
மொபைல் ஜர்னலிசம் ஆசிரியர்: சைபர் சிம்மன்வகைப்பாடு : இதழியல் விலை: ரூ. 275.00 தள்ளுபடி விலை: ரூ. 250.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|