பத்திரகிரியார் அருளிய மெய்ஞ்ஞானப் புலம்பல் மெய்ஞ்ஞானப் புலம்பல் என்பது பத்திரகிரியார் என்ற சித்தரால் 14 ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற பாடல்கள் ஆகும். இந்த நூல் 231 கண்ணிகளைக் கொண்டது. அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதினெண்சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். பட்டினத்தார் தலயாத்திரை செய்து கொண்டிருந்த காலத்தில் உஜ்ஜைனி மாகாளபுரத்திற்குச் சென்று மாகாளேசுவரரை வணங்கி விட்டு ஊருக்கு வெளியே காட்டுப் பிள்ளையார் கோவில் ஒன்றில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார்.
பட்டினத்தார் ஒருபாடல் பாட அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அந்தக் கணமே ஞானம் பெற்றான் மன்னன் பத்திரகிரி. தன் அரச போகங்களைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக அவருடனேயே கிளம்பி விட்டான். பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் திருவிடை மருதூரை அடைந்து அங்கே கோவில் வாசலில் துறவிகளாக அமர்ந்திருக்கத் தொடங்கினர். பத்திரகிரியார் ஊருக்குள் சென்று பிச்சை பெற்று வந்து குருவுக்குத் தந்து அதில் மிஞ்சியதைத் தானும் உண்டு வாழ்ந்து வந்தார். ஒருநாள் பத்திரகிரியார் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒரு பெட்டைநாய் அருகே வந்து நிற்க அதற்குச் சிறிது உணவளித்தார். அன்று முதல் அது அவருடனேயே இருக்க ஆரம்பித்தது. திருவிடை மருதூர் கோவிலின் கிழக்கு கோபுரவாசலில் பட்டினத்தாரும் மேற்குக் கோபுர வாசலில் பத்திரகிரியாரும் அமர்ந்திருப்பது வழக்கம். ஒருமுறை ஒரு பிச்சைக்காரன் பட்டினத்தாரிடம் பிச்சை கேட்க, அதற்கு அவர் “நான் சகலமும் துறந்த துறவி; மேற்குக் கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான்; அவனிடம் போய்க் கேளுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அந்த வார்த்தைகளைக் கேள்வியுற்ற பத்திரகிரியார் அதிர்ச்சி அடைந்தார். தன்னுடைய திருவோடும், உடன் இருக்கும் நாயும் தன்னைக் குடும்பி ஆக்கி விட்டனவே என்கிற அயர்வில் திருவோட்டினைத் தூக்கி எறிய அது உடைந்ததோடு அது நாயின் மீது பட்டு அதுவும் இறந்து போனது. அந்த நாய் காசிராஜனின் மகளாகப் பிறந்தது. அவள் வளர்ந்த பின் முற்பிறவி ஞாபகம் கொண்டு திருவிடைமருதூருக்கு வந்து பத்திரகிரியாரிடம், “துறவியாகிய தங்கள் எச்சில் சோறு உண்டு வளர்ந்த நாய் தான். நான்; எனக்கு முக்தி கிடைத்திருக்க வேண்டுமே; பிறவி எப்படி வாய்க்கலாம்?” என்று முறையிட்டாள். அவர் மருதூர் இறைவனிடம் முறையிட அங்கே கிளம்பிய ஜோதியில் இருவரும் முக்தி பெற்றனர். காப்பு முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல அத்தி முகவன்தன் அருள் பெறுவது எக்காலம்? நூல் ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? 1 நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்? 2 தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம்? 3 ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல் மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்? 4 மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக் காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்? 5 காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம்? 6 சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம்? 7 பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத் தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்? 8 கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்? 9 பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம்? 10 தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்? 11 ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல் தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம்? 12 தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13 மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்; தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? 14 பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்; ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்? 15 உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும் புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்? 16 வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும் வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்? 17 பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும் விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்? 18 ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல் ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்? 19 தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும் கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம்? 20 அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம் செத்த சவம்போல் திரிவதினி எக்காலம்? 21 ஒழிந்த தருமத்தினை வைத்துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க் கழிந்த பிணம்போல்இ ழிந்து காண்பதினி எக்காலம்? 22 அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்? 23 கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன் உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்? 24 தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல் மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம்? 25 தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல் ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம்? 26 எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்? 27 அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல் சிவவேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம்? 28 அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன் தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டு செய்வது எக்காலம்? 29 பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால்காணாக் குன்றில் விளக்கொளியைக் கூறுவதும் எக்காலம்? 30 தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம்? 31 வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்? 32 மற்றிடத்தைத் தேடி என்றன் வாழ்நாளைப் போக்காமல் உற்றிடத்தைத் தேடி உறங்குவதும் எக்காலம்? 33 இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்? 34 கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல் பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்? 35 செஞ்சலத்தினால் திரண்ட சென்ன மோட்சம்பெறவே சஞ்சலத்தை விட்டு உன் சரண் அடைவது எக்காலம்? 36 கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும் வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம்? 37 ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து போடுகின்ற நாள் வருமுன் போற்றுவதும் எக்காலம்? 38 நவசூத் திர வீட்டை நான்என்று அலையாமல் சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்? 39 பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டுக் கரந்துன் அடிஇணைக்கீழ்க் கலந்து நிற்பது எக்காலம்? 40 பொம்மைதனைப்போட்டு உன்னைப் போற்றி நிற்பது எக்காலம்? 41 உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம்? 42 சேவைபுரிந்து சிவரூபக் காட்சிகண்டு பாவைதனைக் கழித்துப் பயன் அடைவது எக்காலம்? 43 காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல் பாண்டத்தை நீக்கிப் பரம் அடைவது எக்காலம்? 44 சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல் ஊத்தைச் சடம்போட்டு உனை அடைவது எக்காலம்? 45 தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல் உடக்கைக் கழற்றி உனைஅறிவது எக்காலம்? 46 ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல் ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்? 47 கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்? 48 புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்? 49 தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில் பக்குவம்வந்துன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்? 50 பருவத் தலைவரொடும் புல்கியின்பம் கொள்வதற்குத் தெரிவைப் பருவம் வந்து சிக்குவதும் எக்காலம்? 51 தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து குருவை அறிந்தேநினைத்துக் கும்பிடுவது எக்காலம்? 52 வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்? 53 பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல் சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்? 54 சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம் சொல்லாரக் கண்டு எனக்குச் சொல்வதினி எக்காலம்? 55 மருவும் அயல்புருடன் வரும் நேரம் காணாமல் உருகுமனம் போல் என் உளம் உருகுவதும் எக்காலம்? 56 தன்கணவன் தன் சுகத்தில் தன்மனம்வே றானது போல் என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம்? 57 கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல் தேடித் தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம்? 58 எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல் கவ்வனத் தியானம் கருத்து வைப்பது எக்காலம்? 59 கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச் சொன்ன பரம்பொருளை எண்ணுவது எக்காலம்? 60 ஆகம் மிகவுருக அன்புருக என்புருகப் போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம்? 61 நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின் பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்? 62 அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித் துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம்? 63 கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல் அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்? 64 தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்ததேன் பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம்? 65 ஆதார மூலத்தடியில் கணபதியைப் பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்? 66 மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக் கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்? 67 அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்? 68 மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில் தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்? 69 வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனைத் தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம்? 70 கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்? 71 உச்சிக் கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம்? 72 பாராகிப் பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம்? 73 கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதி எல்லாம் சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவதும் எக்காலம்? 74 கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்? 75 அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்? 76 அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம் பிறிவுபட இருத்திப் பெலப்படுவது எக்காலம்? 77 பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமாய்ப் பேதம் பலவிதமும் பிரித்தறிவது எக்காலம்? 78 தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்? ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம்? 79 புன்சனனம் போற்று முன்னே புரிவட்டம் போகில் இனி என் சனனம் ஈடேறும் என்றறிவது எக்காலம்? 80 நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள் கிட்டவழி காட்டிக் கிருபை செய்வது எக்காலம்? 81 நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி நானே வெளிப்படுத்தித் தருவன் என்பதும் எக்காலம்? 82 அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனிஎக்காலம்? 83 ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்? 84 இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு சினமாண்டு போக அருள் தேர்ந்திருப்பது எக்காலம் ? 85 அமையாமனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம்? 86 கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல் மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம்? 87 ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம் நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்? 88 கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து சுட்டுவிடுமுன் என்னைச் சுட்டிருப்பது எக்காலம்? 89 தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல் நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்? 90 வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல் தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம்? 91 காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல் வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம்? 92 ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச் சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம்? 93 இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில் தடை அறவே நின்று சலித்தருப்பது எக்காலம்? 94 மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில் பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்? 95 ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம்? 96 பஞ்சரித்துப் பேசும்பல்கலைக்கு எட்டாப் பொருளில் சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம்? 97 மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம் அற்று நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம்? 98 ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித் தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம்? 99 அஞ்ஞானம் விட்டே, அருள் ஞானத்து எல்லைதொட்டு மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது எக்காலம்? 100 சொல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம்? 101 மேலாம் பதம்தேடி மெய்ப்பொருளை உள்இருத்தி நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம்? 102 எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணிப் பாராமல் கண்ணாடிக்குள் ஒளிபோல கண்டறிவது எக்காலம் ?103 என்னை அறிந்து கொண்டே எங்கோமானோடு இருக்கும் தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம்? 104 ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்? 105 ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன் காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்? 106 மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை நில்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்? 107 முன்னை வினை கெடவே மூன்று வகைக் காட்சியினால் உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம்? 108 கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும் விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்? 109 கனவு கண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க நினைவைப் பரவெளியில் நிறுத்துவது எக்காலம்? 110 ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும் பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம்? 111 நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்? 112 முப்பாழும் பாழாய், முதற்பாழும் சூனியமாய் அப்பாழும் பாழாய் அன்பு செய்வது எக்காலம்? 113 சீ யென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை நீ யென்று கண்டு நிலை பெறுவது எக்காலம்? 114 வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும் அவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்? 115 எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்? 116 அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்? 117 நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம் தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்? 118 என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்? 119 ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல் வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்? 120 ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து வெளியிட்டுச் சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம்? 121 காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல் பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்? 122 பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச் செந்தாரைப் போலே திரிவது இனி எக்காலம்? 123 ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க் கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்? 124 ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்? 125 சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம்? 126 ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல் ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்? 127 கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப் புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம்? 128 தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில் பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்? 129 தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்? 130 ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம்? 131 ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்? 132 காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம் பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம்? 133 ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின் நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்? 134 குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப் பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம்? 135 மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல பித்தடுத்து நின் அருளைப் பெற்றிருப்பது எக்காலம்? 136 சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ் வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்? 137 என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின் தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம்? 138 உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்? 139 வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல் பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம்? 140 பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல் பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம்? 141 நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய் ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்? 142 பாற்சுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக் காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம்? 143 பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல் நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்? 144 காமக் கடல்கடந்து கரைஏறிப் போவதற்கே ஓமக் கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம்? 145 உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்? 146 வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்? 147 பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல் வெட்டு வெளியாக விசும்பறிதல் எக்காலம்? 148 அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய் கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம்? 149 ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே எட்டாப் பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம்? 150 பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்? 151 ஆசார நேச அனுட்டானமும் மறந்து பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்? 152 பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம்படைப்பே அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம்? 153 ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி எக்காலம்? 154 சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்? 155 அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம்? 156 இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம்? 157 ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும் தானாகி நின்றதனை அறிவது எக்காலம்? 158 என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்? 159 இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளைச் சொன்னதென்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம்? 160 என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம்? 161 என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த உன்னை வெளியில் வைத்தேஒளித்து நிற்பது எக்காலம்? 162 கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல் நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவது எக்காலம்? 163 நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல் சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்? 164 பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது எக்காலம்? 165 கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல் வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்? 166 கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல் உடலில்ஒளித்த சிவம்ஒளி செய்வது எக்காலம்? 167 அருணப் பிரகாசம் அண்டஎங்கும் போர்த்தது போல் கருணைத் திருவடியில் கலந்து நிற்பது எக்காலம்? 168 பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்டானது போல் உன்னில் பிறந்து உன்னில்ஒடுங்குவதும் எக்காலம்? 169 நாயிற் கடைப்பிறப்பால் நான்பிறந்த துன்பம்அற வேயில் கனல் ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்? 170 சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல் ஆரியந்தோற்றத்து அருள் பெறுவது எக்காலம்? 171 இரும்பினில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க் கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம்? 172 கருக்கொண்ட முட்டைதனைக் கடல் ஆமைதான் நினைக்க உருக்கொண்ட வாறதுபோல்உனை அடைவது எக்காலம்? 173 வீடுவிட்டு பாய்ந்து வெளியில் வருவார்போல் கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவது எக்காலம்? 174 கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல் உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம்? 175 இருளை ஒளி விழுங்கி ஏகஉருக் கொண்டாற்போல் அருளை விழுங்கும்இருள் அகன்று நிற்பது எக்காலம்? 176 மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல் என்னுள் நின்றதுஎன்னுள்ளே யான் அறிவது எக்காலம்? 177 கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல் கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவது எக்காலம்? 178 பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை காணுகின்றஎன் கருத்தில் கண்டறிவது எக்காலம்? 179 செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்? 180 ஆவியும் காயமும்போல் ஆத்துமத்தில் நின்றதனை பாவிஅறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம்? 181 ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம்? 182 சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும் போகா உடல்அகன்று போவதென்பது எக்காலம்? 183 நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு வெட்ட வெளியில்விரவி நிற்பது எக்காலம்? 184 வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ் திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம்? 185 எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க் கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம்? 186 உண்டதுவும் மாதருடன் கூடிச்சேர்ந்து இன்பம் கண்டதுவும் நீயெனவேகண்டு கொள்வது எக்காலம்? 187 ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும் ஓம்என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம்? 188 சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற இடம் சித்தம் பிறந்தஇடம் தேர்ந்தறிவது எக்காலம்? 189 போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும் தாக்கும் ஒரு பொருளைச் சந்திப்பது எக்காலம்? 190 நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம்? 191 அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில் பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்? 192 நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய் ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்? 193 தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும் பத்தியுடனே கேட்டுப் பணிவது இனி எக்காலம்? 194 நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில் சயனித் திருந்து தலைப்படுவது எக்காலம்? 195 அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்? 196 மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல் தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம்? 197 பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம்? 198 வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக் கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்? 199 பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம்? 200 அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து முத்தி தர நின்றமுறை அறிவது எக்காலம்? 201 நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல் நீநின்ற கோலம்அதில் நிரவிநிற்பது எக்காலம்? 202 எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல் உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம்? 203 அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல் என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம்? 204 அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல் சிந்தை வைத்துக் கொண்டு தெரிசிப்பது எக்காலம்? 205 பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம்? 206 மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை என்னுள் ஒருநினைவை எழுப்பிநிற்பது எக்காலம்? 207 ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல் ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம்? 208 தன்உயிரைக் கொண்டு தான் திரிந்த வாறதுபோல் உன்உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம்? 209 சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனிக் காற்றில்உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம்? 210 என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து தன்வசமும் கெட்டு அருளைச் சார்ந்து இருப்பது எக்காலம்? 211 தன்னை மறந்து தலத்து நிலை மறந்து கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம்? 212 என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம்? 213 தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம்? 214 இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல் துணை பிரிந்தபோது அருள் தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம்? 215 தேட்டம் அற்ற வான்பொருளைத்தேடுவதும் எக்காலம்? 216 முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின் மறைந்தால் அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம்? 217 கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால் தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவது எக்காலம்? 218 தானென்ற ஆணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்தே ஏனென்ற பேச்சுமிலா திலங்குவது மெக்காலம். 219 நான் அவனாய்க் காண்பதெல்லாம்ஞானவிழியா ல்அறிந்து தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம்? 220 தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில் ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம்? 221 உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்? 222 ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும் தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம்? 223 ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில் மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்? 224 காட்டும்அருள் ஞானக்கடலில் அன்புக் கப்பல்விட்டு மூட்டும் கருணைக் கடலில் மூழ்குவதும் எக்காலம்? 225 நான் யாரோ நீ யாரோ நன்றாம் பரமான தான் யாரோ என்றுஉணர்ந்து தவம்முடிப்பது எக்காலம்? 226 எவர் எவர்கள் எப்படிக் கண்டுஎந்தப்படி நினைத்தார் அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்? 227 உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம்? 228 விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல் களங்கமற உன்காட்சி கண்டறிவது எக்காலம்? 229 என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்ன தெல்லாம் முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவது எக்காலம்? 230 மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கி காயத்தை வேறாக்கி காண்பதுஉனை எக்காலம்? 231 ஐஞ்சு கரத்தானை அடி இணையைப் போற்றிசெய்து நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம்? 232 மெய்ஞ்ஞானப் புலம்பல் முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |