பட்டினத்தார் அருளிய பூரண மாலை மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள் வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே. 1 உந்திக் கமலத்து உதித்து நின்ற பிருமாவைச் சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரசமே 2 நாவிக் கமல நடு நெடுமால் காணாமல் ஆவி கெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே. 3 உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல் கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே. 4 விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல் பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே. 5
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே. 6 நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல் போதம் மயங்கி பொறி அழிந்தேன் பூரணமே. 7 உச்சிவெளியை உறுதியுடன் பாராமல் அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே. 8 மூக்கு முனையை முழித்திருந்து பாராமல் ஆக்கை கெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே. 9 இடைபிங்கலையின் இயல்பறிய மாட்டாமல் தடையுடனே நானும் தயங்கினேன் பூரணமே. 10 ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல் நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே. 11 மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல் பொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே. 12 பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே. 13 தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்து களும் உண்டென்று நம்பி உணர்வழிந்தேன் பூரணமே. 14 இந்த உடல் உயிரை எப்போ தும்நான் சதமாய்ப் பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே. 15 மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே. 16 சரியை கிரியா யோகம்தான் ஞானம் பாராமல் பரிதிகண்ட மதியதுபோல் பயன் அழிந்தேன் பூரணமே. 17 மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து கண் கெட்ட மாடதுபோல் கலங்கினேன் பூரணமே. 18 தனி முதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல் அநியாயமாய்ப் பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே. 19 ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை ஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே. 20 வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல் காசிவரை போய்த்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே. 21 கருவிகள் தொண்ணூற்றாறில் கலந்து விளையாடினதை இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே. 22 உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல் கடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே. 23 எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே. 24 எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து பித்தனாய் நானும் பிறந்து இறந்தேன் பூரணமே. 25 பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் யானும் உன்றன் பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே. 26 உற்றார் அழுதுஅலுத்தார் உறன் முறையர் சுட்டலுத்தார் பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே. 27 பிரமன் படைத்து அலுத்தான் பிறந்து இறந்து நான் உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே. 28 எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் சனித்துப் புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே. 29 என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே. 30 அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே. 31 செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல் பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே. 32 எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க மனக்கவலை நீர வரம் அருள்வாய் பூரணமே. 33 எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப் பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே. 34 சாதி பேதங்கள் தனை அறியமாட்டாமல் வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே. 35 குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான் மலபாண்டத்துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே. 36 அண்ட பிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே. 37 சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல் அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே. 38 ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல் நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே. 39 என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தால் உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே. 40 நரம்பு தசை போல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே. 41 சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்து நலந்தனைத்தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே. 42 குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய் அருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே. 43 ஒளியாய்க் கதிர்மதியாய் உள் இருளாய் அக்கினியாய் வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே. 44 இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய் உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே. 45 மூலவித்தாய் நின்று முளைத்து உடல் தோறும் இருந்து காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே. 46 உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே. 47 தாயாகி தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம் நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே. 48 விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக் குலங்கள் எழுவகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே. 49 ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய் மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே. 50 வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே. 51 பொய்யாய்ப் புவியாய் புகழ்வா ரிதியாகி மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே. 52 பூவாய் மணமாகிப் பொன்னாகி மாற்றாகி நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே. 53 முதலாய் நடுவாகி முப்பொருளாய் மூன்றுலகாய் இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே. 54 ஊனாய் உடல் உயிராய் உள் நிறைந்த கண்ணொளியாய்த் தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே. 55 வித்தாய் மரமாய் விளைந்த கனியாய்ப் பூவாய்ச் சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே. 56 ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எலாம் தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே. 57 மனமாய்க் கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே. 58 சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச் சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே. 59 பொறியாய்ப் புலன் ஆகிப் பூதபேதப் பிரிவாய் அறிவாகி நின்ற அளவறி யேன் பூரணமே. 60 ஊன் உடலுக்குள்ளிருந்த உயிர்ப் பறியேன் பூரணமே. 61 பொய்யும் புலையும் மிகப் பொருந்தி வீண் பேசலன்றி ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே. 62 நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப் பரம் அதுவே என்னைப் பதம் அறியேன் பூரணமே. 63 கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய் செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே. 64 வாரிதியாய் வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எலாம் சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே. 65 வித்தாய் மரமாய் வெளியாய் ஒளியாய் நீ சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே. 66 தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால் உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே. 67 ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும் என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே. 68 நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும் மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே. 69 மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய் நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே. 70 உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க் குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே. 71 சட்சமய பேதங்கள் தான்வகுத்துப் பின்னும் ஒரு உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே. 72 முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடத்து உள்ளிருந்த செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே. 73 என்னதான் கற்றால் என் எப்பொருளும் பெற்றால் என் உன்னை அறியாதார் உய்வரோ பூரணமே. 74 கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப் பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே. 75 வான் என்பார் அண்டம் என்பார் வாய்ஞான மேபேசித் தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே. 76 ஆதி என்பார் அந்தம் என்பார் அதற்குண்டுவாய் இருந்த சோதி என்பார் நாதத் தொழில் அறியார் பூரணமே. 77 மூச்சென்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார் பேச்சென்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே. 78 பரம் என்பார் பானு என்பார் பாழ்வெளியாய் நின்ற வரம் என்பார் உன்றன் வழி அறியார் பூரணமே. 79 எத்தனை பேரோ எடுத்தெடுத்துத்தான் உரைத்தார் அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன் பூரணமே. 80 நகாரமகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார் வகாரயகாரம் என்பார் வகை அறியார் பூரணமே. 81 மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே. 82 உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல் பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன் பூரணமே. 83 வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல் காயம் எடுத்துக் கலங்கினேன் பூரணமே. 84 சந்திரனை மேகமது தான் மறைத்த வாரது போல் பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே. 85 அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன் நான் பூரணமே. 86 நீர் மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத் தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே. 87 நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன் பூரணமே. 88 எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே. 89 மாயாப் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே ஓயாச் சனனம் ஒழிந்திலேன் பூரணமே. 90 பூசையுடன் புவனபோகம் எனும் போக்கியத்தால் ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே. 91 படைத்தும் அழித்திடுவாய் பார்க்கில் பிரமாவெழுத்தைத் துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே. 92 மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த தந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே. 93 அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும் சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன் பூரணமே. 94 நரகம் சுவர்க்கம் என நண்ணும் இரண்டு உண்டாயும் அரகரா என்பது அறிகிலேன் பூரணமே. 95 பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே. 96 சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதிபே தங்கள் என்றும் பாந்தம் என்றும் புத்தியென்றும் படைத்தனையே பூரணமே. 97 பாசம் உடலாய்ப் பசு அதுவும்தான் உயிராய் நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே பூரணமே. 98 ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன் பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே. 99 நானே நீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால் தேனின் ருசியது போல் தெவிட்டாய் நீ பூரணமே. 100 முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல் அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேன் பூரணமே. 101 பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே. 102 பூரண மாலை முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பார்வை யற்றவளின் சந்ததிகள் மொழிபெயர்ப்பாளர்: விலாசினி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 352 எடை: 400 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-87333-72-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: அமைதியாக சண்டையிட்டுக்கொள்ளும் தம்பதிகளுக்குப் பிறந்த அமர் ஹம்ஸா, பங்களா என்றழைக்கப்படும் நொறுங்கிவரும் தன் வீட்டில் துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்பார்த்து வளர்கிறான். அவனிடம் இருக்கும் இந்த முன்னெச்சரிக்கை குணத்தால் துரதிர்ஷ்டம் அவன் வாழ்க்கையில் அருவியாக நுழைகிறது. இருபத்தியாறு வயதில் தான் கற்பனை செய்துகொண்ட பார்வையாளர்களுக்குத் தன் கதையைக் கூற அவன் முடிவெடுக்க, பங்களாவின் ரகசியங்கள் வெளிவரத் தொடங்குகின்றன. ஆழ்ந்த வலியும் வறண்ட நகைச்சுவையும் தளும்பும் பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல், வாசகர்களை ஆட்படுத்தித் துன்புறுத்தும் ஒரு குடும்ப நாடகமாக, அனீஸ் சலீமை நம் காலத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட கதைசொல்லிகளில் ஒருவரென, உறுதிப்படுத்துகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|