சிந்நயச் செட்டியார் இயற்றிய அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை காப்பு ஞாலத் தருணை நலிவகற்று நாயகற்குச் சீலத் தருணை சிலேடை வெண்பா - மாலைசொல யானை திறை கொண்ட தெனாதிதயக் கார்வரையில் யானை திறை கொண்ட விபம். நூல் மாகவிஞர் நூன்முகத்தில் வைணீகர் யாழிசையில் ஆக ரிவரும் அருணையே - நாகர் மெயிலாய வெற்பினான் மேம்படுதார் வேய்ந்த கயிலாய வெற்பினான் காப்பு . 1 முப்பொருளிற் றாபதரு மொய்தெருவிற் கந்துகமும் அப்பிரிய முந்தும் அருணையே - யொப்பரிய மாதார கத்தன் வயன்றுதித் தாரகத்தன் கேதார கத்தன் கிரி. 2 சீரங் கனையார் திருக்குஞ் சுரிகுழலும் ஆரம் பரிக்கும் அருணையே- யீரிரண் டாரண வாசிய னங்கண வாசியன் வாரண வாசியன் வாழ்வு . 3 நித்த விரதர் நியதியும் மாதவமும் அத்த மனத்தாம் அருணையே - பத்தரது மாச யிலத்தன் மனமாந் தனியிலத்தன் சீச யிலத்தன் சிலம்பு . 4 தேறு கலைப் பயில்வுந் தேங்குமுயிர் நீங்குநரும் ஆறுதலை யாக்கும் அருணையே - மாறனடித் தேக ரணத்தான் செலாத கரணத்தான் கோக ரணத்தான் குடி . 5
ஆத்தி கரைத்தீர்க்கும் அருணையே - மூத்தமக னாங்கானை மாடத்தா னாகட்பெற் றூர்ந்தபெம்மான் றூங்கானை மாடத்தான் றோய்வு . 6 மேதகுகல் லூரிகளின் மெய்யுணர்ந்தார் பொய்யுடம்பில் ஆதரங் கூரா அருணையே - மோதகழி நீடலை யாற்றிருந்தார் நில்லாமே யோட்டேடுக்குங் கூடலை யாற்றிருந்தார் குன்று. 7 மேவாப் பெய் யென்றஞ்சி வேந்துமுரு விற்சுரரும் ஆவா கணிமே வருணையே - யேவாய் நதிணகத் தலத்தா னகுகைத் தலத்தா னதிகைத் தலத்தான னகம். 8 வேக வமர்க்களமு மேலோ ரவைக்களமும் ஆகமங்க ணாடும் அருணையே - யாக கருத்தா சலமுற்றான் காதலன்பர் தம்பால் விருத்தா சலமுற்றான் வீடு . 9 ஒற்றரொன்னா ரூரி லொருவெள்ளம் யூபத்தில் அற்ற மறியும் அருணையே- தெற்றலுற்ற வேணி குழியான் வியோ மகங்கை பாய்ந்துமன்று மாணி குழியான் மனை . 10 காமருப டப்பைகளிற் கார்குலங்கள் சீர்க்கிடங்கில் ஆமலக மாரும் அருணையே - சாமத்தை மெச்சியே கம்பத்தான் மேலொழித்த கம்பத்தான் கச்சியே கம்பத்தான் காப்பு . 11 சாற்றுமட வார்வயிறுஞ் சார்ந்தவரைத் தேர்ந்தவரும் ஆற்றுப் படுக்கும் அருணையே - கூற்று வருமேற் றளியார் வதைப்பரவ ராய திருமேற் றளியார் சிலம்பு. 12 உத்தமகு லச்சேயு மொண்குமுதப் பூந்தடமும் அத்துவரி நேரும் அருணையே - பத்தர் சினேகதங் காவதத்தார் தேவனென்பார்க் காக்கு மனேகதங் காவதத்தா ரார்பு. 13 மாதரெழிற் செய்குன்றும் வாயிலின் கண்வேரமுஞ்செய் யாதவரை யேய்க்கும் அருணையே - யேதங் குறிக்காரைக் காட்டான் கொடுங் காலனுக்கு நெறிக்காரைக் காட்டா னிலம் . 14 முத்தருள நிந்தனைக்கு மொய்குழலார் நீள்விழிக்கும் அத்தியந்த மாறும் அருணையே - சத்தி கரங்கணின்முட் டத்தான் கருளுலகுக் காக்குங் குரங்கணின்முட் டத்தான் குடி. 15 மங்குலொலி யாலளையின் மண்புரப்பார் திண்புயத்தில் அங்கதம லங்கும் அருணையே - கங்குலிற்றீஞ் சொற்கோல மாதேவன் றொண்டனை முயங்குகென்ற விற்கோல மாதேவன் வீடு . 16 பற்கல் வரநதியும் பண்பிகவாச் சாற்றோரும் அற்பரவைக் கோடும் அருணையே - பொற்பக் கருவாலங் காட்டினான் கண்டமட்டுந் துய்த்துத் திருவாலங் காட்டினான் சேர்பு. 17 கொம்பனையார் நம்புகற்பில் கோயிலின்றி வீற்றிடத்தில் அம்ப லமலா அருணையே -யும்பருய்ய உண்பாக்க மைந்தனுசி தநஞ்சு முண்டமைந்தன் வெண்பாக்க மைந்தன் விருப்பு. 18 காட்டிற் கடுந்தரக்குங் கண்ணார் கவினரங்கும் ஆட்டைக் கலக்கம் அருணையே - கேட்டெழும்பூ பாளத் திநகரன் பன்மாந் தினகரன் காளத் திநகரன் காப்பு. 19 இல்லவர்க்கு வள்ளியோ ரீகையுமா னார்கதுப்பும் அல்லகண்ட மாற்றும் அருணையே - நல்லமுது நீதி புரியார் நினைத்த படியுரியா ராதி புரியா ரகம் . 20 போற்றலர்கண் றேண்ணவரும் பொற்புணையை நீவாரும் ஆற்றலைத்து கைக்கும் அருணையே - யேற்ற புலிதாய வாசன் புலிதாய வாசன் வலிதாய வாசன் மனை 21 மேயோர்க்குச் சத்திரமும் வேழக்கு மீளிகளும் ஆயோ தனமூட் டருணையே - தீயோர் திடமுல்லை வாயிலார் சிந்தைபலி கொண்ட வடமுல்லை வாயிலார் வாழ்வு. 22 பூவையர்தோள் புல்லினரும் போர்க்களத்திற் பேய்க்கணமும் ஆவலங் கொட்டும் அருணையே - தாவி வருவிடைச்சு ரத்தன் மதுக்குழலி பாகன் றிருவிடைச்சு ரத்தன் சிலம்பு. 23 சேண்டொடவேள் கோட்டத்திற் றேனிசை கேட்டீர்ம்பொழிலில் ஆண்டலை யசைக்கும் அருணையே - வேண்டுநரை நோத கிரியா னுவலருஞ்சீ ரங்கிரியான் வேத கிரியான் விருப்பு. 24 கார்க்கு நிகர் தடக்கைக் காவலருங் காவலரும் ஆர்க்கு மளிகூர் அருணையே - போர்க்குநவை யிச்சிறுபாக் கத்தன் பிலிக்கு மிரங்கியரு ளச்சிறுபாக் கத்த னகம். 25 ஆயத் தியங்கா அருணையே - மாயன் றுருவக் கரையான் றெழார்க்குக் கரையான் றிருவக் கரையான் சிலம்பு . 26 வேய்ந்தபுகழ் நாற்சாதி மேவகத்துங் காவகத்தும் ஆந்தருமஞ் சாரும் அருணையே - காந்தள் பொரும்பைமா காளத்தார் பூண்டு களிக்கு மிரும்பைமா காளத்தா ரில் . 27 தக்கவர்சார் மற்றையருஞ் சால்பரத்தி மார்கலனும் அக்கதை யேற்கும் அருணையே - பிக்கை யுணாவிற் கலந்தா னுடைதலைக லந்தா னணாவில் கலந்தா னகர். 28 தாவற்றோர் தாழ்ந்தாரைத் தையலர்கால் சஞ்சலத்தை ஆவத்துக் காக்கும் அருணையே - தேவியொடு கொஞ்சமாக் கூடலான் கொஞ்சியங்ஙன் கூடலான் வெஞ்சமாக் கூடலான் வீடு 29 வாரா வருந்தவர்க்கு மைந்தருமின் னார்விழியும் ஆரா தநஞ்செய் அருணையே - போராற்றி யாண்டிக் கொடுமுடியா னாய்முடிய வேளைவென்ற பாண்டிக் கொடுமுடியான் பற்று. 30 நம்பினார்க்குச் சித்தியொரு நாலிரண்டு மீராறும் அம்பிகைவ ழங்கும் அருணையே - வெம்பியெழு நஞ்சைக் களத்தா னராயணன்கா னாக்களத்தா னஞ்சைக் களத்தா னகம் 31 மையுண்கண்ணார் நுசுப்பும் வண்டலையுந் தண்டலையும் ஐயம் புகுக்கும் அருணையே - வையைமண்முன் கல்லைச் சிற்றம்பலத்தன் கௌரியெச் சிற்றம்பலத்தன் றில்லைச் சிற்றம்பலத்தன் சேர்பு 32 வாக்கியத் தான்றோரு மாலை யினைஞருஞ்சை யாக்கிரக மண்ணும் அருணையே - நோக்கி னுருக்கழிப் பாலையா னுற்றிடப்பு ரிந்த திருக்கழிப் பாலையான் சேர்பு. 33 பூசா கிரியைகளைப் புங்கவர்துன் னாரைமன்னர் ஆசாரத் தாக்கும் அருணையே - மாசா மவேதகா னத்தான் வழுத்தலர்கா னத்தான் சுவேதகா னத்தான் றொடர்பு. 34 செவ்வியோர் நெஞ்சிற் சிறப்புறா வீதிகளில் அவ்வியமு ழக்கும் அருணையே - தெவ்வை யுழுமலவி ருப்பா னுளத்தகவி ருப்பான் கழுமலவி ருப்பான் கலப்பு . 35 தீனமைந்தர் மொய்ம்பாற் றெருவுதொரு மங்கலத்தால் ஆனகந்தி ளைக்கும் அருணையே - நானத் தொடைமுடி வள்ளல் சுரிகுழலாள் பங்கன் கடைமுடி வள்ளல் கலப்பு . 36 மன்னியவேழ் மஞ்சினொடு மால்வரையு மாண்டவரும் அன்னியமஞ் சாடும் அருணையே - துன்னுபிலம் விண்ணிப் படிக்கரையன் வெம்பவவே லைக்கரையன் மண்ணிப் படிக்கரையன் வாழ்வு . 37 கங்கணக ரத்தியர்கண் கண்டாருங் கைரவமும் அங்கணம் பூக்கும் அருணையே - தங்கண் விருப்பனந் தாளார் விரவரிய தாளார் திருப்பனந் தாளார் சிலம்பு . 38 சோதித் தருவுந் துரிய நிலையினரும் ஆதித் தனைத்தே றருணையே - வேதியர்க ளோம்பழ னத்தினா ணொண்பழ நத்தினான் பூம்பழ னத்தினான் பூ. 39 பூமாண் பொழிலிற் புறவத்தில் வேங்கையால் ஆமா விரியும் அருணையே - சாமாந்தர் மையாற்றி னையன் மறுத்தஞ்ச லென்றருள்செ யையாற்றி னைய னகம். 40 தப்பருநீள் காவுந் தளிதொறும்வி நாயகரும் அப்ப மிசையும் அருணையே - யொப்புயர்வின் மெய்த்தான மாட்சியான் மேவாத மாட்சியா னெய்த்தான மாட்சியா னேர்வு. 41 பேசுபுல வோர்மனைப்புன் பேதையரும் வாவிகளும் ஆசிரியம் பாடும் அருணையே - நேச மருவானைக் காவான் மருந்தெனக் காவான் றிருவானைக் காவான் சிலம்பு. 42 இம்மையொடு ஞானியரு மேற்பாருக் கீவாரும் அம்மை கடுக்கும் அருணையே - யெம்மையாள் மைஞ்ஞீலி யத்தன் மழுமா னணியத்தன் பைஞ்ஞீலி யத்தன் பதி. 43 மாசறக்கற் றோர்வாக்கின் மாதரார் பார்வைகளின் ஆசு கமழும் அருணையே - தேசுடையைந் தேச்சிலாச்சி ராமமத்தா ரீர்ஞ்சடையா யென்னவருள் பாச்சிலாச்சி ராமத்தார் பற்று . 44 காசினதி தோய்ந்தவர்க்குங் காரிகையார் தோய்ந்தவர்க்கும் ஆசை யகற்றும் அருணையே - பேசளவி னாட்போக்கி யம்மா னளித்தான் றேடும்மம்மான் வாட்போக்கி யம்மான் மனை. 45 மெத்துகுணத் தார்முனிவும் வேண்ட லர்கண் மாரதரும் அத்திரமேவும் அருணையே - துத்தி யராப்பள்ளிக் கண்வளர்வா னம்புயத்தான் போற்றச் சிராப்பள்ளிக் கண்வளர்வான் சேர்பு. 46 மந்திரிகள் வேறிசைந்த மந்திரத்திற் பொய்கைகளில் அந்தரங்கஞ் சூழும் அருணையே - நந்த மடுங்கள வண்ணலா ராசையற்றாற்க் குற்றார் நெடுங்கள வண்ணலார் நேர்வு. 47 நாயகருடன் சென்ற நல்லாரை வேய்ங் குழலை ஆயர் குறிக்கும் அருணையே - நேயந்தஞ் சாந்துருத் திக்கண்ணார் தாமுணர்சோ திக்கண்ணார் பூந்துருத் திக்கண்ணார் பூ. 48 செம்பவள வாய்ச்சியர்கள் சிற்றிடைக்குங் கட்கடைக்கும் அம்பர மழுங்கும் அருணையே - தம்புகழ்ச்சிப் பாற்றுத் துறையார் பவமகலப் பாராத சோற்றுத் துறையார் தொடர்பு. 49 தேடவருங் கேயமுந் தீர்ந்தொருவா றாற்றுநரும் ஆடவரைக் கண்ணும் அருணையே - சாடுவிட முன்குடித் திட்டையன் முன்னோர்க்காத் திட்டையன் றென்குடித் திட்டையன் சேர்பு . 50 அல்குலைத் தூற்றும் அருணையே - பல்கலைதேர்ந் துள்ளமங்கை யுள்ளா ருணர்விற் புணர்வரியார் புள்ளமங்கை யுற்றார் புரம் . 51 புங்கவர்கள் பூசனையைப் பூதவேள் விச்சமித்தை அங்கி கரிக்கும் அருணையே - திங்களணி நக்கரப் பள்ளியார் நான்முகிலை வேணிவைத்த சக்கரப் பள்ளியார் சார்பு . 52 கண்டுமொழி யார்மருங்குங் காப்பமைந்த நீண்மதிலும் அண்டந் தரிக்கும் அருணையே- மண்டுபவ வேலைத் துறையான் விழாமே யெடுத்தாண்ட பாலைத் துறையான் பதி. 53 தம்மிலமின் னார்மனையிற் சத்திநிபா தத்தருள்ளில் அம்மனை யாடும் அருணையே - தம்மிடத்துப் பத்திமுற் றத்திருப்பான் பாவியர்கள் பாழ்மனத்தைச் சத்திமுற் றத்திருப்பான் சார்பு. 54 சுத்தமறைக் கந்தணருந் துன்றுகல்லில் வாணிபரும் அத்த முரைக்கும் அருணையே - சித்தசற்சொல் கட்டீச் சரத்தான் கருத்திற் கசோசரத்தான் பட்டீச் சரத்தான் பதி. 55 சந்ததந்தொ ழும்பரன்புந் தாயாரை நந்தனரும் அந்தரியா கத்தாழ் அருணையே - முந்த நலஞ்சுழிச் சம்பு நடைத்துரகம் விற்ற வலஞ்சுழிச் சம்பு மனை. 56 போகுயர்காப் பூந்துணரும் புக்கறியாக் காலனெஞ்சும் ஆகுல மேயும் அருணையே - யோகை நடமூக் ககத்தார் நணுக வெளியார் குடமூக் ககத்தார் குடி. 57 தாரிளைஞர் மார்பகமுஞ் சைவவிபூ திப்பொலி ஆர மணக்கும் அருணையே - மாரனெய்த வில்லம் புணர்ந்தான் விழித்தவனைக் கண்டிலா னல்லம் புணர்ந்தா னகர். 58 தேநந்து செய்யிற் சிவஞா னியருளத்தில் ஆநந்த மண்டும் அருணையே - தாநவனும் வேழம்ப மாதரித்தான் வெண்பொடியும் மாதரித்தான் கோழம்ப மாதரித்தான் குன்று . 59 பெண்மைமிக்கார் கண்ணும் பிறங்கு பொன்னாட்டிற் பரியும் அண்மைய வாவும் அருணையே- வண்ம நிறைசை யமலர் நெடுநீர்கொண் டான்றாழ் துறைசை யமலர் தொடர்பு. 60 மாசில் சுளையினறா வார்கனியை வண்மையரை ஆசினிதந் தீண்டும் அருணையே - மாசுணத்த கேயூர வாகரன் கேடிலருட் சாகரன் மாயூர வாகரன் வாழ்வு . 61 தொக்கவடி யார்மனமுந் தூயதுரு நீற்றுடம்பும் அக்கவட மல்கும் அருணையே - மிக்கவரா லெள்ளாறு வந்தா ரிழிகுழிபு கச்சிவந்தார் நள்ளாறு வந்தார் நகர். 62 ஏரியுறீஇ நீரை யெழுபுயலும் விப்பிரரும் ஆரியமு கக்கும் அருணையே - பேரியம்பி யும்பர்மா காள னுவந்தூது மாகாள னம்பர்மா காள னகம் . 63 எஞ்சுதலில் வேட்டத் திறைவருஞ்சை வக்குழுவும் அஞ்சுமா னூக்கும் அருணையே - நெஞ்சி னலதைப் பதியார் நணுகாப் பதியார் திலதைப் பதியார் சிலம்பு . 64 மாண்டவெழிற் கன்னிமட வாரு மடிமைகளும் ஆண்டவரை நாடும் அருணையே - நீண்ட வுருப்பாய் புரத்தா னுமைசேர் புரத்தான் றிருப்பாம் புரத்தான் சிலம்பு .65 வேலைதோ றன்பினரு மிக்க சுவைக்கரும்பும் ஆலைய ருமரும் அருணையே - பாலுருவத் தாழி மிழலையா னம்பகங்கொண் டாழிநல்கு வீழி மிழலையான் வீடு . 66 சாகாதி யைக்கரியுந் தாம்பரித்தே ரைக்கிரியும் ஆகார மொக்கும் அருணையே - மோகப் பெருக லுடையார் பெறாத்தோ லுடையார் மருக லுடையார் மனை. 67 காண்டகுகி ழாரிலிளங் காலுமெய்யைத் தாபதரும் ஆண்டுபல வாட்டும் அருணையே - யீண்டுவையை நீத்தமங்கை யார்வா னிகழ்த்து குறட்களித் தான் சாத்தமங்கை யார்வான் றலம். 68 கல்லிதய நல்லார் கருங்குழலுஞ் செவ்வாயும் அல்லி குவிக்கும் அருணையே - மல்லிரித்த வாகைக்கா ரோணத்தான் மாலுநிரு வாணத்தா னாகைக்கா ரோணத்தா னாடு. 69 சேமவெண்ணீ றக்குநருஞ் சிற்பரந் தேர்ந்தாருளமு ஆமய மாயும் அருணையே - வாமத் தமலா லயத்தா னகநி லயத்தான் கமலா லயத்தான் கலப்பு . 70 பார்வருமா யுள்வேத பண்டிதரு நீத்தாரும் ஆர்வ மொழியும் அருணையே - கார்வல் லிரவையுண் மண்டளியா ரீர்ங்கோதை பாகர் பரவையுண் மண்டளியார் பற்று. 71 சீலத்தின் வேந்தர் திருப்பவனி யிற்பொழிலில் ஆலத்தி சுற்றும் அருணையே - சால வளம ரமருவா ரன்றெயின்மூன் றட்டார் விளம ரமருவார் வீடு. 72 தீரவுயர் சோலைகளிற் றேசிகர்தம் பொன்மனையில் ஆரவிட்ட மாட்டும் அருணையே - யேர மரவீர மாநகரன் மாயமதி லெய்த கரவீர மாநகரன் காப்பு. 73 கச்சுவிடா தாய்க்குலமுங் கற்பத்தால் யோகிகளும் அச்சுதனைப் போற்றும் அருணையே - நச்சி தலையாலங் காட்டா ரருச்சியார்க் கெட்டாத் தலையாலங் காட்டார் தலம் . 74 விற்பனர்வாய்ச் சொற்பொருளு மெய்யடியார் கண்ணிணையும் அற்புத மடுக்கும் அருணையே - வெற்பின் மடவாயி னம்பன் மணிநகைகாட் டென்னுங் குடவாயி னம்பன் குடி . 75 ஆலமர மானும் அருணையே - கால விரிதிநிய மத்தா னெமைத் தொழுவார்த் தீர்ந்தென் பரிதிநிய மத்தான் பதி . 76 திண்டடந் தோட்காவலருஞ் சேதாவின் சிஃறுயரும் அண்டரண்ட மாளும் அருணையே - தொண்டராய் மற்றோம மன்னன் மறுத்தடைந்தாரைப் புரக்குஞ் சிற்றேம மன்னன் சிலம்பு . 77 பூதரநேர் போதகமும் பொன்றாக் கொடை முரசும் ஆதரிக்க வேங்கும் அருணையே - வேதன் மருவுசாத் தாநத்தன் வாஞ்சாதா நத்தன் றிருவுசாத் தாநந்தன் சேர்பு . 78 சாடமரில் யானைகளுஞ் சால்வினைப் பொற்கம்மியரும் ஆடகமு ருக்கும் அருணையே - தோட மடும்பா வனத்தா னழல்போல் வனத்தா னிடும்பா வனத்தா னிடம் . 79 வாம்பரியோ டுந்தெருவின் மைந்தருந்தேனைச் சுரும்பும் ஆம்பல்வாய்த் துய்க்கும் அருணையே - வேம்பன் றருக்கடிக்கு ளத்தான் றழற்கடிக்கு ளத்தான் றிருக்கடிக்கு ளத்தான் சிலம்பு . 80 விஞ்சுற்ற தந்நிழன்மேல் வேழமுமே தக்காரும் அஞ்சக் கரமோ தருணையோ - கஞ்சனுயிர் வீட்டியத் தான்குடியான் வெய்யவிட மல்லவற்றை நாட்டியத் தான்குடியா னாடு. 81 ஊக்கமுளார் யாரு முறுகொலையை நுண்ணறிவும் ஆக்கத் தடுக்கும் அருணையே - பூக்கும் பெருவலிவ லத்தான் பிரியாவ லத்தான் றிருவலிவ லத்தான் சிலம்பு . 82 கத்திதீர் கானகத்திற் கற்றவர்செய் காவியத்தில் அத்தியா யஞ்சேர் அருணையே - பத்திமரீஇ மைச்சின மாண்டார் மனநச் சினமாண்டார் கைச்சின மாண்டார் கலப்பு . 83 யாகமனு விண்ணவரை யேற்றத்தார் சீற்றத்தை ஆகருட ணிக்கும் அருணையே - நாகத்து மின்றிருவாய் மூரன் மெலவரும்ப நோக்கிமகிழ் தென்றிருவாய் மூரன் சிலம்பு . 84 மங்கையர்கள் கொங்கையிலும் வான்றுறவர் செங்கையிலும் அங்கசனம் பெய்யும் அருணையே - நங்கைதும்பைப் போதா ரணியத்தன் பொன்முடி வளைத்த பிரான் வேதா ரணியத்தன் வீடு . 85 பம்பிசைக் காரளியும் பஃறொடையைக் காளையரும் அம்புயத்தி லார்க்கும் அருணையே- யெம்பாற் றவாதசாந் தத்தான் றகித்தசாந் தத்தான் றுவாதசாந் தத்தான் றொடர்பு . 86 துச்சரிகட் கான்றோருந் தோகையன்னார் கந்தரமும் அச்சங் கவிக்கும் அருணையே - நிச்சன் மனவாயி லுள்ளார் மதிவெறுத் தென்னுள்ளார் புனவாயி லுள்ளார் புரம் . 87 கஞ்ச முகத்தியர்கள் கையின் மலர்த்தடத்தில் அஞ்சங் குலாவும் அருணையே - விஞ்சுபய மற்றால மேயா ரமுதாக்கித் தாமேயார் குற்றால மேயார் குடி. 88 மின்னனையார் மென்னடைக்கு மேவு மதிதியர்க்கும் அன்ன மருளும் அருணையே - தன்ம வுருவாப்ப னூரா னுடையான் சடையான் றிருவாப்ப னூரான் சிலம்பு. 89 சிந்தனையின் மிக்கீவார் சீர்த்தியும டந்தையரும் அந்தரதிக் கேயும் அருணையே - சுந்தரர்க்கா வாடக மேவினா னாற்றிலிருந் தாவிபுக வேடக மேவினா னில் .90 மைவனத்த வேட்டுவரும் வாரணத்தைக் கேசரியும் ஐவனம டிக்கும் அருணையே - வைவளரும் வல்வே லிவருமான் வாகுதந்த சாமிதந்தை நெல்வே லிவருவா னேர்வு . 91 மிக்கார்வ நீடுதொண்டர் மெய்யைமட வார்மொழியை அக்கார மூடும் அருணையே - யெக்காலு நேவைத் திருப்பதியார் நெஞ்சோ வதிலுறையுந் தேவைத் திருப்பதியார் சேர்பு . 92 ஓங்கார மோர்ந்தா ருளத்திலிளை யார்தோளில் ஆங்காரந் துஞ்சும் அருணையே - பூங்கணைக்கை வேடானை வாழ்வான் விழிமுளரி சற்றலர்த்தி யாடானை வாழ்வா னகம் . 93 மாலதா மாடுகண்ட வெம்புலியுந் தண்பணையும் ஆலவா லங்காட் டருணையே - சீலத் தரங்குன்ற வாணர் தமைப்புரியா ரென்றும் பரங்குன்ற வாணர் பதி . 94 நிட்டா பரருமன்பர் நீடநின்றார் பான்மதனும் அட்டாங்கஞ் செய்யும் அருணையே - யொட்டாக் கழியற் பரமா கடியரணங் காய்ந்த சுழியற் பரமர் தொடர்பு . 95 பாடினர்க்குப் பார்த்திபரும் பலகதியிற் பாய்பரியும் ஆடிக் களிக்கும் அருணையே - மூடர் திருப்பத்தூ ரத்த னிடபத்தூ ரத்தன் திருப்பத்தூ ரத்தன் சிலம்பு. 96 போரரசர் பாழிமொய்ம்பிற் பூசுரச்சிறார் கிடையில் ஆரணங் கற்கும் அருணையே - கூருகிரி லூனப்பே ராளி யுரங்கிழித்துக் கொக்கரித்த வானப்பே ராளி கலப்பு. 97 மாண வுயர்ந்தோர் மனத்திலறச் சாலைகளில் ஆண வமிகும் அருணையே - வாணியைநீ மூக்கொடுங் குன்றன் முரணறவென் றஃதரிந்த மாக்கொடுங் குன்றன் மனை. 98 மானவய வீரர் மகாரினமும் வேதியரும் ஆனைவலங் கொள்ளும் அருணையே - வானக்கொண் மூவண வேந்தன் முளரியினான் காண்பரிய பூவண வேந்தன் புரம். 99 வாகைத்தார் மன்னவரும் வாச்சியமுந் தேங்கமலை ஆகத்து வைக்கும் அருணையே - பாகத்திற் காண மலையான் கருமலையான் செம்மலையான் கோண மலையான் குடி . 100 அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |