உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
கோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது காப்பு பின்முடுகு வெண்பா வல்லோர் புகழ்பேரூர் வாழ்பட்டி நாதன்மேற் சொல்லுங்கண் ணாடிவிடு தூதுக்கு - வெல்லுநட னம்பயில உம்பர்தொழு நம்பனரு ளும்பெரிய கம்பகும்பத் தும்பிமுகன் காப்பு. நூல் சிவபெருமான் துதி கார்போலும் மேனியனுங் கஞ்சமலர்ப் புங்கவனும் பார்கீண்டும் விண்பறந்தும் பன்னெடுநாள் - ஆர்வமுடன் 1 தேடி வருந்தித் திரிந்துந் தெரியாமல் நீடுசுட ராவுயர நின்றருள்வோன் - பீடுடைய 2 தக்கன் சிரத்தைத் தகர்த்துத் தகர்ச்சிரத்தை மிக்கத் திருத்தும் விறலாளன் - இக்குதனுக் 3 காமாரி சூலதரன் காரிலகு கந்தரத்தன் தீமைப் புரத்தைச் சிரித்தெரித்த - கோமான் 4 விடையன் நிருத்தமிடு மெய்யன் அலகைப் படையன் உமைக்குப் பதியான் - முடிவிலாச் 5 சங்கரன்வெண் ணீற்றன் சதாசிவன்கங் காளனெரி தங்குங் கரத்தன் சபாபதியன் - கொங்கவிழும் 6 கூவிளமார் கங்கைமதி கோளரவு தும்பைகொன்றைப் பூவறுகு சூடும் புரிசடையான் - காவியும்வெங் 7 காலுஞ்செந் தாமரையும் கார்விடமுஞ் சாகரமும் வேலுங் கருவிளமும் மீனமும் - நீலவண்டும் 8 மானுமம்பும் மாவடுவும் வாளுமொப்பற் றேயகன்று தானே யிரண்டுஞ் சரியாகி - வானுலகில் 9 மண்ணுலகில் உற்பவித்து வாழும் உயிர்க்கெல்லாம் எண்ணில் அருளளித்தும் இன்புற்ற - கண்ணிணைசேர் 10 பேதை மரகதமாம் பெண்ணைத்தன் மெய்யிலொரு பாதியிலே வைத்துகந்த பட்டீசன் - தீதணுகாப் 11 பேரைநகர் வாழும் பெருமான்றன் மெய்யழகோர் காரணமாய் உன்னிடத்தே காணுதலுஞ் - சீரிலகு 12 கண்ணாடியின் சிறப்பு சுந்தரங்கள் எல்லாம் தொகுப்பில் ஒருவடிவாய்ச் சுந்தரரைக் காட்டும் தொழிலாடி - அந்தரத்தில் 13 அம்புவியில் உள்ளபொருள் அத்தனையு நீயாடிக் கம்பிதஞ்செய் வித்திடுவாய் கஞ்சனமே - கொம்பனையார் 14 வித்துருமப் பொற்றரள மிக்கபணி பெற்றிடினு மத்தவளை யுற்றிருப்பா யத்தமே - முத்தநகை 15 மானார் கபோல வளத்துவமை பார்க்கிலுனைத் தானே புகழுந் தருப்பணமே - மானேயார் 16 நாட்டங்கம் நாற்றிசையும் நாடிலுமுன் னேயசைய மாட்டாமற் செய்தபடி மக்கலமே - நீட்டுபதி 17 னாறுபசா ரஞ்சிவனுக்கு அன்பினொடு செய்யவதில் மாறிலா தேந்துமொளி வட்டமே - வீறுலகில் 18 தன்னேரி லாதமன்னன் தானிருக்கும் ஆசனத்தின் முன்னே யிருக்கு முகுரமே - துன்னியிடும் 19 பைந்தார் நகரிற் படுதிரவி யங்களினில் ஐந்தா மதில்முதற்கண் ணாடியே - முந்து 20 நயமான லோகத்தில் நாடுவாய் நற்கல் நயமாகில் அங்கே நடிப்பாய் - இயல்பான 21 அப்பு வழியே அருஞ்சரக்குக் கொண்டணைவார் கப்பல் நடத்தியிடு கண்மணியே - துப்புறுவார் 22 ஆசையினால் வேதாந்த ஆகமநூல் பார்க்குமவர் நாசியிலே நின்றுணர்த்து நாயகமே - பேசரிய 23 நண்ணுபொறி ஐந்தினையு நாடவறி யாதவென்றன் கண்ணிணைக்கும் கண்மணியாய்க் காட்டிடுவாய் - விண்ணுமண்ணும் 24 எட்டுத் திசையோடு இருந்தவொரு பத்தினையும் கட்டுத் தவிர்த்திடுவாய் காணாதே - மட்டாரும் 25 நூலணிந்த மெய்வலத்தை நொய்தினிட மாக்கியிடப் பாலைவலப் பாலிருத்தும் பக்குவனே - சால 26 இரசமுடன் சேர்ந்திருப்ப தென்றறியார் உன்னை நிரசமென்று சொல்லுவது நேரோ - பரவசமாய்க் 27 கண்ணாடி யுண்டதனங் கண்ணாடி நில்லாமற் கண்ணாடி யேன்விரும்புங் கண்ணாடி - திண்ணமதாய் 28 மின்னார்க்கும் ஆடவர்க்கும் வேண்டுபொருள் வெவ்வேறே சொன்னாலும் உன்னையே சூழ்ந்துகொண்டு - முன்னிருத்திப் 29 பம்பரத்தை வென்றதனப் பைந்தொடியா ருங்கடல்சூழ் அம்புவியைத் தாங்கும் அரசருமே - தம்பல்லைக் 30 கெஞ்சிப் பணிந்திட்டுன் கீழ்ப்பட்டார் பாரிலுன்னை மிஞ்சினபேர் ஆருரையாய் மெல்லோனே - அஞ்சீர் 31 அயனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை நிறையுஞ் சராசரங்கள் நீடும் தராதலத்தில் மறைநாலு வாயான மாண்பால் - நிலையாத 32 கஞ்சனம்பேர் காட்டுகையாற் காதலித்தோர்க் கானதினாற் பஞ்சடிசேர் மானாரைப் பண்ணுறலாற் - கஞ்சமலர்த் 33 தேவனே யென்று தெரியும் பெரியோரிப் பூவுலகில் உன்னையே போற்றிடுவார் - மேவிவரு 34 அரிக்கும் கண்ணாடிக்கும் சிலேடை கஞ்சனங் கம்படலாற் கட்டுண் டமைந்ததினால் அஞ்சொலார் தன்கைவசம் ஆனதினால் - மிஞ்ச 35 ஒருவடிவாய் நின்றமையால் உள்ளே தெரிய உருவெடுத்துக் காட்டுகையால் ஓதும் - பெருவானும் 36 மேதினியும் எல்லாந்தன் மெய்யில் அடக்குகையால் ஆதிநா ராயணநீ யாமெனலாம் - கோதிலார் 37 அரனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை பாகத் திருத்தலாற் பன்னீருந் தங்கினதாற் சோகத்தை யார்க்குந் துடைத்தலால் - மாகத்தைத் 38 தந்துள்ளே காட்டுகையால் தக்கவருள் நாட்டுகையாற் சிந்துகே சம்முரித்துச் சேர்ந்தமையால் - முந்தவரும் 39 அம்பலத்தில் ஆடியென்றும் ஆனதினால் பேரைநகர் நம்பனுக்கு நேரான நாயகமே - உம்பருக்கும் 40 எட்டாமே மூவருக்கும் ஏமமாய் நின்றருளும் பட்டீசன் என்றுமனம் பாவிப்போன் - இட்டமுடன் 41 ஆருறினுங் கைசேரு மத்தமே ரூபமதாய்ச் சேருவாய் கீழ்மேல் சிறப்பிலதாய்ப் - பாரிற் 42 கணிகைமா தென்றுன்னைக் காணலாங் கண்ணே இணைபகரா வாழ்வே இனிதே - கணவருடன் 43 ஊடுங் கனங்குழையார்க்கு உற்ற குணந்திருத்த ஆடவர்கை கூப்பி அடிபணிந்தால் - நாடாதே 44 தோயார் கபோலத்தைத் தொட்டுமுத்தம் இட்டவுடன் வேயனைய தோளியர்கள் மேவுவது - மாயிலெல்லாம் 45 ஆடியே யுன்றனெழி லாங்கபோ லங்கணினைக் கூடினதால் அன்றோ குணவானே - நாடியிடும் 46 பெண்ணவர்கள் தங்குணமும் பெட்பும் பெருமையுநீ உண்ணயந்து கண்டிருப்பாய் உத்தமனே - கண்ணிணையாய் 47 உன்னையே நட்புக்கு உறுதியென எண்ணியது முன்னமே வள்ளுவனார் மூதுரையிற் - சொன்ன 48 நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பாம் - புவியிற் 49 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதாம் நட்பாங் கிழமை தருமாம் - நுணுக்கமாய்ச் 50 சொன்ன முறையின் படிநின் தொடர்புளதாற் பின்னை ஒருவரையும் பேசுவனோ - கன்னியர்கள் 51 அந்தக் கரணம் அவருரைக்கு முன்னேநீ சிந்தை தனிலுணர்ந்து தேர்ந்திடுவாய் - பந்தமெலாம் 52 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்று மாறாநீர் வையக் கணியென்றுங் - கூறாமுன் 53 ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளலென்றும் - வையமெலாம் 54 போற்றுதிரு வள்ளுவனார் பூவுலகோர்க் கேயினிதாய்ச் சாற்றுபொரு ளின்பயனீ தானாமே - ஏற்றரிய 55 ஆடியே என்றன் அருமை நலங்களெலாங் கூடி யிருந்ததிந்தக் கொற்றவனே - மூடியென்னப் 56 பேய்க்குரைத்தால் உண்மையினைப் பேசமனம் நாணினதால் தாய்க்கொழித்த சூலுமுண்டோ தாரணியில் - சேய்க்குப் 57 பசிவருத்தங் கண்டிடின்நல் பாலருத்தித் தாய்தன் சிசுவைப் புரக்குஞ் செயல்போல் - நிசமாக 58 எந்தன் கருத்தில் இருந்த படிமுடித்துத் தந்திடுவாய் நல்ல தருப்பணமே - அந்தரங்கம் 59 பட்டீசுவரப் பெருமான் திருத்தசாங்கம் சொல்லக்கேள் வேத சொரூபவா னந்தனுக்கு வில்லுருவ மாய்வளைந்து மேவலினாற் - பொல்லா 60 இடுக்கண் எவர்க்கும் இயற்றும் அரக்கன் எடுக்க இசைக்கும் இயல்பாற் - கடுத்துவரு 61 மாருதத்தைப் போக்கிவிட மாட்டாமல் தன்முடியில் ஓர்முடியைச் சிந்தும் உரத்தினால் - வாரிதியில் 62 வானவருந் தானவரும் வாசுகியி லேபிணித்துத் தானே கடைந்திடுமத் தானமையால் - வானளவு 63 போமேரு மந்தரமும் போகுமோ ஒப்புக்கே ஆமோ எனவே அசைவற்றுப் - பூமியிலே 64 அந்தரத்தோர் போற்ற அதிசயங்கள் சேருநிச மந்தரமதாம் வௌ;ளி மலையினான் - பந்தவினை 65 பிந்திடவே செய்யும் பிரயாகை யாமெனவே வந்துலவு நற்காஞ்சி மாநதியான் - சந்ததமுந் 66 தண்டரளந் தங்குமொளிர் சங்குலவுங் கந்தமலர் வண்டுலவும் கொங்கு வளநாடன் - அண்டர்புகழ் 67 வாசவனும் நான்முகனும் மாயவனும் மாமகிமை பேசரிய போதிவனப் பேரூரன் - ஆசையுடன் 68 துன்றவரி வண்டினங்கள் துங்கநற வுண்டுகொஞ்சு மன்றல்நிறை கொன்றைமலர் மாலையான் - குன்றிடாப் 69 போகமுறுஞ் சுந்தரர்க்குப் போயொளிக்குஞ் சாலிவயல் பாகமது காட்டுமிட பப்பரியான் - மாகடத்தின் 70 வீறுபடும் எண்டிசைசேர் வேழமிரு நான்கினையும் மாறுபடச் செய்யுமத வாரணத்தான் - நீறணிந்த 71 அண்ணலைவந் திப்போர்க்கு அரும்பதந்தந் தோமெனவே விண்ணளந்து காட்டும் விடைக்கொடியான் - எண்ணரிதாய்க் 72 காட்டுஞ் சராசரங்கள் காணுமிவை அத்தனையு மூட்டுவிப்போ மென்றறையு மும்முரசான் - காட்டிமறை 73 செப்பும் இருவினையுஞ் செய்யு முறைபிறழா மப்பொசியு மாறாத வாணையினான் - ஒப்பிலதாம் 74 பாகனைய தேமொழியம் பாமுனைகூர் வேல்விழிதன் பாகனெழில் பேரைவளர் பட்டீசன் - சோகமெனுங் 75 கோதிலாக் காரைக்கால் அம்மை குடியிருக்கும் பாதனெழில் பேரைவளர் பட்டீசன் - ஓதரிய 76 காலனுக்கோர் காலன் கரியினுரி போர்த்திடுகா பாலியெழில் பேரைவளர் பட்டீசன் - கோலமிகு 77 நடராசர் பவனி மீனத் திரவிபுக விள்ளரிய உத்திரநாள் ஆன தினத்தில் அதிசயமாய் - வானுலவு 78 போதிவளர் நீழல்தனில் பொன்றிகழு மன்றிலான் காதற் றிருநடனங் காட்டுதலுங் - கோதிலயன் 79 மாலிந் திரன்கருடன் வானோருங் கின்னரரும் கோலமிகு கந்தருவர் கூறுதவத் - தாலுயர்ந்த 80 நாரதனே ஆதியாம் ஞான இருடிகளும் சேரவர சம்பலத்தே சென்றிறைஞ்சி - ஆர்வமுடன் 81 எங்கள்மனக் கண்மணியே எங்கள் தவப்பயனே எங்கள் பவந்தொலைக்கும் எங்கோவே - சங்கரனே 82 கங்கை முடிக்கணிந்த கண்ணுதலே போற்றிநிதம் மங்கை பிரியாத வாமத்தாய் - திங்களோடு 83 ஆற்றைச் சடைக்கணிந்த அண்ணலே போற்றிதிரு நீற்றை அணிந்த நிமலவெனப் - போற்றியிடப் 84 பூதலத்தோர் எல்லாம் புனிதநதி தோய்ந்துதங்கள் நீதி கரும நியமமுற்றி - நாதனடி 85 கண்டிறைஞ்சிப் போற்றிசெய்து காமியமும் ஆணவமும் பண்டுவரு மாயையுமுப் பற்றுவிடக் - கண்டே 86 அரகர என்றேதான் அன்புடன்கை கூப்பி அரகர என்றேநான் அண்டி - அரகனக 87 மன்றிற் றிருநடஞ்செய் மங்கைபங்க னைத்தொழுதேன் குன்றனைய தோள்களுநற் குண்டலமுங் - கொன்றையணி 88 செக்கர்ச் சடையுந் திருநுதலுஞ் செங்கரமும் மிக்கபணி பூண்டிருந்த மெய்யழகும் - ஒக்கவே 89 கண்டுமனங் காதலித்துக் கண்குளிரச் சேவித்துக் கொண்டுநின்றேன் அப்பொழுது கூத்தாடும் - புண்டரிகப் 90 பாதத்திற் பூமாரி பத்தரருச் சித்திடவே வேதவொலி எங்கும் மிகவொலிப்ப - வீதியெலாந் 91 துந்துபிக ளேமுழங்கச் சொல்லரிய பல்லியங்கள் இந்தநிலம் எல்லாம் இசைந்தார்ப்பப் - பைந்தொடிமின் 92 பச்சைப்பெண் பாகன் பவனிவந்தான் பின்தொடர்ந்து நச்சுவிழி யாருடனே நான்போந்தேன் - பச்சிமத்து 93 வீதியிலோர் பாதியிலே மேவுதலும் பச்சையுமை காதலினால் அங்கோர் கலகமிட்டு - நாதனுடன் 94 ஊடித் திருக்கோயி லுட்புகுந்தாள் சூலதரன் ஓடித் திருப்ப உபாயமின்றி - வாடிமனங் 95 கன்றினதைக் கண்டிருந்த காமன் சரந்தொடுத்தே இன்றுபழி தீர்ப்பன் எனவிசைந்தான் - குன்றவில்லி 96 பாகம் பிரியாத பச்சைமயி லைப்பிரிந்த மோகக் கனல்குழித்து முன்போந்தான் - சோகமுறல் 97 கண்டென்னைக் கண்டானே கையசைத்தான் புன்முறுவல் கொண்டான் புருவநெற்றி கோட்டினான் - வண்டுலவுங் 98 கொன்றைமலர் மாலையிற்கை கொண்டெடுத்துக் காட்டினான் குன்றனைய தோளிற்கை கொண்டணைத்தான் - நின்றவெனைப் 99 பாதாதி கேசமுதற் பார்த்தான் புறம்போந்தான் நீதான் எனது நிலைகுறித்தே - ஓதரிய 100 நாண மடமச்சம் நற்பயிர்ப்பு நான்கினையும் வீணிலே சூறைகொண்டு மேவிடுதல் - நீணிலத்தில் 101 உன்னைப்போல் வாருளரோ ஒண்டொடியார் தங்கள்முன் என்னைமயல் செய்வதுனக்கு ஏற்குமோ - உன்னரிய 102 அம்பலவா மாரனர சம்பலவா எந்தனுடல் அம்பளவா கத்தோணும் ஆசையினால் - நம்பும் 103 உடையும் வளையும் உனக்கீந்தேன் உள்ள முடையும் வளையு முரித்தானே - அடியாள் 104 அறைவதெலாங் கேட்டுங்கே ளாதவன்போற் போதல் முறைதானோ சொல்லாய் முதல்வா - சிறிதுநாள் 105 உண்ணச்சோ றின்றி உடுக்கப் புடவையின்றி எண்ணிலகந் தோறும் இரக்குநாள் - நுண்ணிடையார் 106 பிச்சையிட வந்தவர்க்கும் பேசரிய மாலுதவ நிச்சயமாய் கையறிவாய் நின்றனக்கு - உச்சவநா 107 ளாகியொரு பெண்ணைவரும் அங்கசனம் புக்கிறை யாகக் கொடுத்தல் அறமாமோ - ஆகமதிற் 108 பிச்சையிட வந்ததனப் பேதையர்க்கும் பேறுதரும் உச்சவத்தில் வந்துதொழும் ஒண்டொடிக்கும் - நிச்சயமா 109 ஆசை கொடுக்கவென்றே ஆய்ந்தறிந்தா யாமென்றே ஏசிவிட்டேன் காதினிற்கொண்டு ஏகுதலும் - பாசவினை 110 நீக்கி அருள்தந்து நிட்டையினால் முன்சென்மப் பாக்கியத்தைத் தேர்ந்தறியப் பண்ணுவித்துத் - தாக்குபவ 111 மாற்றுந் திருவா வடுதுறைநற் றேசிகன்றாள் போற்று முனிக்குழுவும் பூதலத்தே - தோற்றுந் 112 தரும புரக்குருவின் தாள்பரவி நெஞ்சில் ஒருமைபெற நிற்பாரும் ஓங்கி - அருமையுறு 113 சாந்தலிங்க மூர்த்தி சரணமலர் தான்துதித்துப் போந்த அடியார்கள் போற்றிசைத்துத் - தீந்தமிழில் 114 மூவர் தமிழும் முதிர்ந்த பெருந்துறையார் தூவு தமிழுந் தொலையாத - ஆவலுடன் 115 பண்ணோ டிசைத்திடலும் பாரிலெவ ரும்போற்றுந் தண்ணார்சொல் ஞானசிவாச் சாரியர்தான் - எண்ணரிய 116 வேதம் உரைத்திடவும் மேலோன் அதுவுமொரு காதிலே கேட்டகன்றான் காசினியில் - தீதகலும் 117 கோயில்முன் னேநின்றான் கொம்பனைக்குத் தூதுவிட்டான் ஆயிழையும் ஊடல்தவிர்ந் தங்குவந்து - தூயவனைப் 118 பாதம் பணிந்தாள் பதியும் எடுத்தணைத்துக் காதலுடன் போந்து கனகசபை - ஓதரிய 119 ஆசனத்தில் வீற்றிருந்தான் நான்சென் றடிபணிந்துன் ஆசைவலைக் கென்னை அகப்படுத்திப் - பாசமிகு 120 மாலையிட்டாய் கொன்றைமலர் மாலையிட வேநினைந்து மாலைதனில் என்மனைக்கு வாவென்று - சாலவே 121 கண்ணாரக் கையாலே காட்டினேன் சாடையெலாங் கண்ணாலே கண்டான் கழல்பணிந்தேன் - பண்ணார்சொல் 122 மாதருடன் கோபுரத்து வாயிலின்முன் வந்திறைஞ்சிப் போதுமென என்மனைக்குப் போதலுமே - தேடியப்போ 123 தாய் செய்கை வந்தனையே காணமிகு வந்தனையே செய்துவந்தேன் வந்தனையே என்று மடியிருத்திச் - சுந்தரஞ்சேர் 124 செங்கரங்கள் தங்குவளை சிந்தினமெய் துன்றுகலை பங்கமுறு கின்றவென்றன் பைந்தொடிக்கு - யங்க 125 மிகுந்து கனன்று வெதும்பு தனங்கள் சுகந்தம் உலர்ந்து துலங்கச் - சகந்தனிலே 126 பெண்களிலை யோவென்றன் பெண்ணையார் பார்த்தனரோ கண்பட்ட தென்றுநுதற் காப்பிட்டாள் - தண்மலர்ப்பூஞ் 127 சேக்கைத் துகள்போக்கிச் சேர்க்கவுடல் வேர்க்குமனல் தீய்க்கவென் தாய்க்குமனந் தேக்கிடவே - நோய்க்குப்பனி 128 நீரிறைத்து வீசியுமின் னேரிழைக்குக் கண்ணூறு தீரிதெனக் காணிக்கை செப்பனிட்டாள் - சூரியன்தேர் 129 மேலைப் புணரிதனில் மேவுதலுங் கீழ்த்திசைசேர் வேலைதனில் வட்டமதி மேற்றோன்ற - மாலையிலே 130 வந்தெனது மையல்தனை மாற்றிடவே வாரனென்றே அந்தரங்கஞ் சொல்லிவந்தார் ஆதலினால் - தந்தியுரி 131 போர்த்துச் சபாபதியார் புன்முறுவல் கொண்டணையிற் சேர்த்த வருவான் திரமென்றே - பார்த்திருந்தேன் 132 மன்மதன் முதலியோர் அப்போது மாரன் அளிநாண் கருப்புவில்முல் லைப்போது கொண்டுவந்தே ஆர்ப்பரித்தான் - எப்போதும் 133 ஆண்மைசெய் பேதையர்பால் அல்லால்மற் றோரிடத்தில் தாண்மை வருமென்றே தலைப்பட்ட - கீண்மையனே 134 உன்னையன்று கொன்றவன்பால் உன்வலிமை காட்டாதே என்னையின்று வென்றதனால் என்னபயன் - முன்னவன்றாள் 135 காமாரி என்றொருபேர் காட்டுபட்டி நாதனைப்போய்ப் பூமாரி செய்திடுதல் பொற்பாமே - மாமதனாம் 136 உன்றனுக்கும் ஆண்மை உளதாகு முன்னாலே என்றனுக்கு மெத்த இனிதாமே - என்று 137 பிரித்துரைக்கக் கேட்டுப் பிரதிசொல்லா தென்னை வருத்தக் கரும்பை வளைத்துத் - திரித்தளிநாண் 138 பூட்டிமலர் வாளியெலாம் பொற்குடத்தை வென்றுகரிக் கோட்டினையுங் காட்டிலே கூட்டிவிடப் - போட்டிசெயும் 139 பந்துத் தனங்களிற்புண் பட்டிடவே எய்துவிட்டான் இந்துவுமப் புண்ணில் எரியைவிட்டான் - சந்தங் 140 கலந்துவரு தென்றலதற் காற்றாதே உள்ளங் குலைந்து மிகவருத்தங் கொண்டேன் - மெலிந்ததுடல் 141 மெத்தப் பரவசமாய் வெய்துயிர்த்தேன் கண்ணிணைக்கு நித்திரையும் அற்றேன் நினைவற்றேன் - புத்தியெலாம் 142 போதிமன்றி லேநடஞ்செய் புண்ணியன்பா லன்றியுறுந் தாதைதாய் சுற்றத்தார் தான்வேண்டேன் - மேதினியில் 143 தூது உன்னைப்போல் தூதாங்கு உரைப்பாரோ உற்றுரைத்து நன்னயங்கள் காட்டி நவிலுதற்குக் - கன்னியரே 144 தங்கள் வருத்தம் தவிர்ப்பாரல் லாலெனது கொங்கை வருத்தங் குறிப்பாரோ - பைங்கிளியும் 145 அன்னமும்வண் டுங்குயிலும் அன்றிலுந்தா ராவுமயில் இன்ன பிறவும் எதிர்நின்று - சொன்னதையே 146 சொல்லும் பிரிதுரைத்துச் சொல்லும் வகையுணர்ந்தது இல்லையலாது அங்கிரைகண்டு ஏகுமே - வல்லை 147 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூதாய் - சகத்தினிலே 148 கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாந் தூதென்று - மிக்க 149 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலையே - படிமீதில் 150 வள்ளுவனார் சொன்னமொழி வாய்மையெல்லாம் நின்றனக்கே உள்ளதுதான் வேறார் உணர்ந்தவர்காண் - ஒள்ளியநாள் 151 உத்திரத்தின் பின்வந் துறுநாள் உனதுபெயர் எத்திசையும் போற்ற இசைக்குமே - உத்திரமும் 152 சித்திரையுங் கன்னியிடஞ் செம்பாதி நட்பிசையும் நித்தியமா இந்நாள் நிறைந்திருக்கும் - தத்தையெனும் 153 பச்சையுமை யாள்மெய்யிற் பட்டீசன் சேர்ந்ததுவும் நிச்சையமாய் அத்தமன்றோ நீதியாய் - உச்சிதமாய் 154 பட்சமுறும் உன்றனுக்கும் பட்டீச னார்தனக்கும் நட்புச் சரிதானே நன்றிசெயும் - மத்திமத்திற் 155 சென்றுரைக்கில் அத்தனுக்குச் சித்தமதில் அத்தமுறும் நன்றென்றே நாடி நலனுரைப்பார் - இன்றேதான் 156 சுத்த தருப்பணமே தூயவொளி வட்டமே அத்தமே கஞ்சனமே ஆடியே - எத்துபடி 157 மக்கலமே பார்கை வழுத்து முகுரமே மிக்க வருத்தமெலாம் விள்ளுதற்குத் - தக்கவனே 158 நீயன்றி வேறுலகில் நேயத்தார் இல்லையெங்கள் நாயகன்முன் நீசென்று நண்ணுவையேல் - ஆயிழையாள் 159 பாலையரன் பால்காட்டிப் பானுவளித் தன்னைமதி போலவே காட்டியதார் போதியில்வாழ் - மேலவன்றான் 160 அன்றுசெயுஞ் சித்துவிளை யாடலைப்போ லேநீயும் இன்றுசெய்தாய் என்றுமிக இன்புறுவேன் - சென்றதனால் 161 வெல்வாய் மருமாலை மேலவன்றான் தந்திடவே சொல்வாய்கண் ணாடியே தூது. 162 திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது முற்றிற்று |