பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : K. Gnana Vadivel   |   உறுப்பினர் விவரம்
      
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்

மிதிலைப்பட்டிக் குழந்தைக் கவிராயர்

இயற்றிய

மான் விடு தூது

     மான் விடு தூது என்பது மிதிலைப்பட்டிக் குழந்தைக் கவிராயர் என்பவர் இயற்றிய நூலாகும். இதனை உ. வே. சாமிநாதையர் 1936ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இந்நூல் 301 கண்ணிகளைக் கொண்டது.

     குழந்தைக் கவிராயர் மிதிலைப்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். தந்தை மங்கைபாக கவிராயர். இவர் இந்நூலைத் தவிர வேறு நூல்கள் எழுதியதாகக் குறிப்புகள் இல்லை. தனிப்பாடல்கள் பல இயற்றியுள்ளார்.

     நூலின் பாட்டுடைத் தலைவன் தாண்டவராய பிள்ளை. இவர் முல்லையூரில் கார்காத்த வேளாளர் குலத்தில் காத்தவராய பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். சிவகங்கை சமஸ்தானத் தலைவராக இருந்த ராசபுவி வடுகநாத துரை அவர்கள் பிள்ளையவர்களின் திறமையைக் கண்டு தமக்கு மந்திரியாக அமர்த்திக் கொண்டார்.

     மானை அம்பால் எய்த பாவத்தால் பாண்டு எனும் அரசன் இறந்த செய்தியும், மான் வாயுவுக்கு வாகனமாக இருப்பதும், கலைக் கோட்டு முனிவர் மான் கொம்பைப் பெற்றதும் ஆகிய புராண இதிகாச வரலாறுகள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 'அரியவற்றுள் எல்லாம் அரிதே' எனும் குறளை 42ஆம் கண்ணியிலும், 'பிறவிப் பெருங்கடல்' எனும் குறளை 44ஆம் கண்ணியிலும் அழகுற அமைத்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.


ஆதி இந்தியர்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

தூங்காநகர நினைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.490.00
Buy

கேள்விகளே பதிலாகும்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

துணையெழுத்து
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

வினாக்களும் விடைகளும் - அண்டவெளி
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

கச்சத்தீவு
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
இருப்பு உள்ளது
ரூ.430.00
Buy

தமிழாற்றுப் படை
இருப்பு உள்ளது
ரூ.480.00
Buy

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

மக்களைக் கையாளும் கலை
இருப்பு உள்ளது
ரூ.105.00
Buy

வினாக்களும் விடைகளும் - விலங்குகள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

ஜெயமோகன் குறுநாவல்கள்
இருப்பு உள்ளது
ரூ.370.00
Buy

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

இன்னொரு பறத்தல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

சிரியாவில் தலைமறைவு நூலகம்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

வேண்டாம் மரண தண்டனை
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

கதை To திரைக்கதை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

நெஞ்சக்கனல்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-5
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy
காப்பு

நேரிசை வெண்பா

சங்கநிதி தென்முல்லைத் தாண்டவ ராசசெய துங்கன்மிசை மான்விடு தூதுக்குப் - பொங்கு புவிநா யகனன்பர் போற்றுங் கசமு கவிநா யகனிதங் காப்பு.
நூல்

மானின் பெருமை

பூமேவு கோகனகப் போதி லரசிருக்கும்
மாமேவு பைந்துளப மாதவனும்-தேமேவு 1

புண்டரிக வீட்டோனும் பொன்னுலகை யாள்வோனும்
அண்டருந் தானவரு மங்கையினாற்-கொண்டெடுத்த 2

மந்தரமும் வாசுகியும் வாரிதியு மேவருந்த
அந்தவமு தங்கடையு மந்நாளிற்-சிந்தைமகிழ் 3

சந்திரனே தேகமெனத் தண்பாற் கடன்மீது
வந்துற் பவித்த மதிமானே-ஐந்து 4

தலையரையன் சென்னிகவர்ந் தாருமணஞ் செய்ய
மலையரையன் பெற்றெடுத்த மாதைத்-தலைநாள் 5

ஒருகால் பிடித்திருந்தா ருன்னையுல குய்ய
இருகால் பிடித்திருந்தா ரென்றும்-திருமாலும் 6

கூரங்க மானபடை கொண்டிருந்துந் தென்னிலங்கை
சாரங்க மேகுரங்காச் சாதித்தான்-காரங்கம் 7

பெற்றோன் மனைவியைநீ பெற்றிருந்தா யுன்மகிமை
மற்றோர்கொண் டாட வசமாமோ-பொற்றோட்டின் 8

உந்திக் கமலத்தே யுற்பவித்தோன் மாமறைகள்
வந்திக்கச் செய்த மகத்துவமும்-புந்திக்குள் 9

எண்ணிச் சராசரங்க ளீரே ழுலகமெல்லாம்
பண்ணிக்கை வந்திருந்த பாங்குமேல்-எண்ணுங்கால் 10


நத்திருந்த வெண்கலைமா னாவிற் பிரியாமல்
வைத்திருந்த வீறன்றி மற்றுமுண்டோ-கொத்திருந்த 11

அஞ்சுதலை யோன்மதலை யாறுதலை வேன்முருகன்
உஞ்சு தலையெடுக்க வுன்மகளைக்-கொஞ்சுமொழி 12

வள்ளியைக் கொண்டிருந்தான் மான்மருக னம்முறையால்
வெள்ளிமலை யோனுனக்கு மெய்த்தமையன்-வெள்ளிமலை 13

தங்கமலை பெற்றுவந்த சங்கரனார் மேம்பாடும்
செங்கமலை மாலிரட்சை செய்திறமும்-செங்கோலைத் 14

துன்ன நடத்துவதுந் தொக்கபடை தற்சூழ
மன்னரென வந்த விறுமாப்பும்-இந்நிலமேல் 15

உன்னாமந் தானுமெத்த வுண்டுபெரு மானென்னல்
தன்னாமம் பெற்றபலத் தாலன்றோ-மன்னுகலைக் 16

கோட்டு முனிவனுக்குன் கோட்டி லொருகோடு
நாட்டுசென்னி மேலிருந்த நல்வரத்தால்-மோட்டு 17

மகரக் கடலுறங்கு மாலை யயோத்தி
நகரிற் புகவழைத்தா னாடிச்-செகதலத்தில் 18

விள்ளுமந்தி மானென்று மிக்கசந்தி மானென்றும்
வள்ளல்கட்குப் பேர்கொடுத்த வச்சயமே-எள்ளாத 19

மின்வண்ணப் பின்னலான் வேதண்ட கூடத்தே
பொன்வண்ணத்தந்தாதிபோந்துரைப்போன்-உன்வண்ணப் 20

பேர்படைத்த சேரமான் பெற்றபே றிவ்வுலகில்
ஆர்படைத்தார் வேந்த ரருங்கலையே-கூரும் 21

இருணாடு மூடாம லேவிளங்கச் செய்வ
தருணோத யத்தினா லன்றோ-அருணமே 22

வஞ்சனை செய்காள மாமுனிவ னேவலினால்
எஞ்சலில் பூத மெழுந்துருத்துப்-பஞ்சவரைக் 23

கொல்லவந்த போதவரைக் கொல்லாம லேபுரந்த
வல்லமை மாயனுக்கும் வாராதே-சொல்லுகின்ற 24

எள்ளவரை தானடக்கி யீரக் கடலையுண்டாய்
உள்ள கலைமுழுது மோங்கநின்றாய் - புள்ளிபெற்ற 25

பொன்னுழையே கும்பனுக்குப் போதித்த தோமுனிவன்
தன்னுழையே நீபடித்த சாதளையோ - இந்நிலமேல் 26

மான்றேச மென்றுமதில் வாசிமெத்த வாசியென்றும்
தான்றேசஞ் சொல்வதென்ன தப்பிதமோ - கான்றேசம் 27

சொந்தமென்று பன்மிருகஞ் சூழ்ந்தாலு மென்னதென்று
வந்து மொழிய வழக்குண்டோ - சந்ததமும் 28

தேனூருஞ் சோலை செறியுங் கலையூரோ
மானூரோ நீயிருக்கும் வானகரம் - கானூரும் 29

பொன்னம் பலத்தே புலிபாம் பிருத்தலினால்
உன்னம் பலத்தினுக்கே யொப்பாமோ - தன்மையாய் 30

நாடுநக ரம்பலமெந் நாளுமுன்பேர் பெற்றதுபோற்
கூடுமோ காவலர்க்குங் கூடாதே - நீடுசெய 31

மாதினைநீ தாங்கு மகிமையன்றி மற்றவட்கு
மேதினியி லுண்டோ விசேடமே - மோதுதெவ்வர் 32

கிட்டுஞ் சமர்க்குடைந்து கெட்டோருன் பேர்கண்டால்
வெட்டுந் தலையும் விலகுவார் - அட்டதிக்காம் 33

தானங்காக் குந்தேவா தாழ்குழலா ராடவர்க்கு
மானங்காக் குந்துரையே வான்பிணையே - கானமுனி 34

சாபத்துக் கஞ்சுவாய் சாலமொழி வார்கண்டால்
நீபத் தடிவிலகி நிற்பாயே - கோபத்திற் 35

பாண்டுவெனுஞ் சந்த்ரகுலன் பார்முழுது மோர்குடைக்கீழ்
ஆண்டுபுகழ் கொண்ட வரசர்கோன் - தாண்டுகலை 36

மானையெய்த தீவினையால் வானகரி னாடிழந்து
கானடைந்து வானுலகங் கைக்கொண்டான் - ஞானமுனி 37

வேத வியாசன் விரித்துரைத்த பாரதத்தில்
ஓதுகதை பொய்யோ வுலகறியும் - ஆதலினாற் 38

கோல விரிப்புலியைக் குஞ்சரத்தைக் கொன்றுமுயல்
காலின்மிதித் தோனுன்னைக் கைக்கொண்டான் - ஞாலத்தில் 39

சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடுமென்று - கற்றே 40

அறிதலி னாலே யபாயமா மென்று
சிறிய வரையிணங்காச் செல்வா - மறியே 41

அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளலென்று - பாணித் 42

தரிய வரத்தினையுண் டாக்கும் பெரிய
வரையுறவு கொண்டபுத்தி மானே - வரையாப் 43

பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தாரென்ற-முறையால் 44

துறவாகக் காயிலைக டுய்த்தே யரிதாள்
மறவாத பாக வதனே-உறநாடிற் 45

கட்புலங்கா ணாரூபக் கால்வாதத் தைத்தாங்கி
விட்புலமு மேழ்கடலு மெத்திசையும்-பெட்புமிகு 46

தண்டலமும் வெற்புஞ் சராசரமு நின்றசைய
மண்டலமும் வீதியுஞ்செல் வாசியே-கண்டுகனி 47

பண்போன் மொழிபயிலும் பாவையர்க்கெல் லாமிரண்டு
கண்போல வந்த கருங்கலையே-நண்பாகத் 48

தீராத வல்வழக்குத் தேறாக் களவுகன்னம்
பேரான வெல்லைப் பிசகுமுதல்-ஆராய்ந்து 49

சுத்த னசுத்தனென்று சோதனையாய் நாக்குமழு
வைத்தோதக் கற்பித்த வல்லமைகள்-அத்தனையும் 50

தென்பாகை நாட்டிற் சிறந்தபுல்வாய் மாதென்றே
அன்பாகச் சொல்ல வவதரித்தாய்-இன்பாம் 51

துணையேவன் காமத் துயர்க்கடலை நீந்தும்
பிணையே கருணைப் பெருக்கே-இணையான 52

காது நடந்தவிரு கண்ணார்க்கு மாடவர்க்கும்
தூது நடந்தாரைச் சொல்லக்கேள்-மாதுபங்கர் 53

தூது சென்றவர்கள்

சுந்தரர்க்கப் பானாளிற் றூதுசென்றார் பாண்டவர்க்குச்
செந்திருமா றூதாகச் சென்றாரே-இந்திரற்கே 54

அந்தநளன் றூதுசென்றா னந்நளனுக் கோதிமந்தான்
சந்து நடந்தகதை தப்பிதமோ-முந்தக் 55

குணமாலை ருக்குமணி கொண்டமய றீர
மணமாலை கிள்ளைதர வாழ்ந்தார்-தணவாத 56

மற்றத் தூதுப்பொருள்களின் குறைகள்

வாளகண்டஞ் செல்லும் வரிக்குயிலைத் தூதனுப்பிற்
காளகண்ட நல்வசனங் காட்டுமோ-தாளமலர் 57

ஏற்கு மதுகரத்தை யேவின் மதுபானி
நாக்குக் குழறுமே நவ்வியே-மூக்கிலே 58

கோபத்தைக் காட்டுமொரு கொண்டைமயில் போய்க்க
லாபத்தைக் காட்டுமில்லை லாபமே-சோபத்தால் 59

அன்னத்தைத் தூதுவிட்டா லவ்வன்னம் பாலுக்கும்
பின்னத்தைக் காட்டுமிதம் பேசாதே-சொன்னத்தைச் 60

சொல்லுமே யல்லாமற் றொன்ற விரித்துரைத்து
வல்லமையாய்க் கிள்ளைசொல்ல மாட்டாதே-மெல்லவே 61

எத்திசையுஞ் செல்லு மிளம்பூவை தூதுசென்றால்
கத்திகை வாங்கக் கலங்குமே-மெத்தவே 62

மேகங் கடுகுரலாய் விள்ளுமல்லா னின்போலப்
பாகமுட னின்சொற் பகராதே-மோகமிஞ்சிக் 63

கண்டுயிலும் வேளையினிற் கண்டவனி ருத்திரனைக்
கொண்டுவந்த பாங்கியென்பாற் கூடுமோ-தண்டாத 64

என்னெஞ்ச மாங்கவன்பா லெய்தி யெனைமறந்து
வன்னெஞ்ச மாயிருந்தால் வாயுண்டோ-தென்மலையத் 65

தென்றலைத் தூதுவிட்டாற் றென்றல் சலனகுணம்
மன்றலணி வாங்குமிங்கு வாராதே-துன்று 66

கலையே மணிமே கலையே தவிர்ந்தேன்
அலையேய் துரும்பா யலைந்தேன்-மலையாமற் 67

காக்கும் பிணையேவன் காமக் கடற்கரையிற்
சேர்க்கும் பிணையே செழுங்கலையே-ஆர்க்குமிகும் 68

ஆசைதந்தோன் பேருமவ னாடு மவனூரும்
மாசில் புகழும் வழுத்தக்கேள்-தேசுதரும் 69

தசாங்கம் - பொதியின்மலை

அம்புதமு மம்புலியு மாடரவுஞ் சென்னியின்மேற்
பம்புதலா லீசன் படிவமாய்-அம்பரமும் 70

பொன்னுமணிக் கோடும் பொருந்திச் சிலைதிகிரி
மன்னுதலான் மாலின் வடிவமாய்-இந்நிலமேல் 71

நான்முகஞ் சாகைபல நண்ணிப்பல் பூப்படைத்து
மான்மகன் போல வளஞ்சிறந்து-மேன்மை 72

அரம்பைபலர் தற்சூழ்ந்தே யண்டருல கெய்தித்
திரம்பெறலாற் றேவேந் திரன்போல்-உரம்பயின்று 73

சந்தனமுங் காரகிலுந் தம்மிற் றலைசிறந்து
வந்த பொதிய மலையினான்-செந்தமிழின் 74

வைகை நதி

ஏடேறச் சைவநிலை யீடேறத் துள்ளுபுனல்
கோடேறக் கூடல் குடியேறப்-பீடேறு 75

மூரிக் கயன்மகர மோதித் திரையேற
வாரிப் புனலும் வளர்ந்தேறப்-பாரித்து 76

மண்டு புகழேற மாறன் வியப்பேறக்
கண்டு சமணர் கழுவேறத்-தண்டுளப 77

மாடேறுஞ் சொக்கர் மதிச்சடையின் மண்ணேற
நாடேறும் வைகை நதியினான்-சேடேறும் 78

தென்பாண்டி நாடு

பூங்காவு மாங்குயிலும் பூட்டு மொழிக்கரும்பும்
வாங்காத கீத வரிச்சுரும்பும்-நீங்காத 79

வாவித் தலமும் வனச மலர்க்காடும்
காவிப் புதுமலருங் கம்பலையும்-பூவைக்கும் 80

தென்மலய மாருதமுஞ் சேயிழையார் தங்குழுவும்
மன்மதனார் பாளையந்தான் வந்ததென-நன்மைதிகழ் 81

தேவேந்து நாட்டினுக்குச் செவ்விதென்று பாவேந்தர்
நாவேந்து தென்பாண்டி நாட்டினான்-பூவேந்து 82

முல்லை மாநகர்

வாணிக்கு நாதனவை வந்திருக்க வேணுமென்று
காணிக்கை யாய்ச்சமைத்த காரணமோ-வேணிக்கு 83

வேந்த னுலகம் வெளிறிடவே வேண்டுமென்று
வாய்ந்தசெம் பொன்னால் வகுத்ததோ-தேர்ந்துவச்ர 84

வண்ண னுலகு வறியதென்று சொல்லுதற்குப்
பண்ணிச் சிறந்த படிவமோ-எண்ணுங்கால் 85

மண்மகளுக் காக வகுத்தமணிப் பீடமோ
திண்மைசெறி பேரழகு சேரிடமோ-உண்மை 86

தெரிந்துரைக்க வல்லவரார் சிற்பநூல் கற்றோர்
புரிந்தசிற்ப மென்றுலகம் போற்ற-விரிந்தமணிக் 87

கூடமு மேல்வீடுங் கோபுரமு மாமறுகும்
மாடமுஞ்சேர் தென்முல்லை மாநகரான் - நாடமிர்தும் 88

குவளை மாலை

கண்டு நிகர்மொழியார் கண்னு மவர்மனமும்
வண்டுஞ் செறிநீல மாலிகையான் - விண்டோர் 89

குதிரை

மகுட முடியிடறி மாதிரமும் வானின்
முகடு நிறைபடல மூட - விகடர் 90

கெடியரணு நெஞ்சிற் கெருவிதமுங் கூட்டி
அடியின் குரத்துகள தாக்கிக் - கொடியவிட 91

நெட்டரவு மேனி நெறுநெறெனக் கண்பிதுங்க
அட்ட கிரிநின் றசையவே - வட்டமிட்டுக் 92

காற்கதியுங் காற்கதியே காணுமென வீரிரண்டு
காற்கதியி லைந்து கதிகாட்டிப் - பாற்கடலில் 93

மாதவனுங் கற்கி வடிவங் கரந்துநிற்க
ஆதவ னேழ்பரியு மஞ்சவே - நாதன் 94

வலம்புரி போலவன் மானித்துப் போரில்
வலம்புரியுங் கோரரண வாசியான் - சலம்புரிந்து 95

யானை

திக்கயங்கண் மாதிரத்திற் சென்று புறங்கொடுப்பத்
தொக்கயங்க டொக்கெனவே சூறையிட்டு - மிக்க 96

சிகர வடவரையைச் சீறித் தகர்த்து
மகர வுததி மடுத்துப் - பகரும் 97

வடவைக் கனலவித்து வான்பிறையை யெட்டித்
தடவிக் குணக்கெடுத்துத் தாளாற்-புடவிமன்னர் 98

கொத்தளத்தைக் கோட்டையினைக் கோட்டைக்குக் காக்கவைத்த
அத்தளத்தை யெல்லா மணுவாக்கி-எத்தளமும் 99

கண்டு நடுநடுங்கக் காலனுங் கண்புதைப்பக்
கொண்டலென நின்றதிருங் குஞ்தரத்தான்-மண்டலத்தில் 100

மேழிக்கொடி

ஆர்க்கு மதியா தவர்பகையு மஞ்சவே
பார்க்கின்ற மேழிப் பதாகையான்-நீர்க்குலவு 101

முரசு

நத்தோலும் வாரியென்ன நாதரொரு மூவரென்ன
முத்தோலுங் காட்டு முரசினான்-எத்திக்கும்102

வேற்படை

காற்படையுந் தேர்ப்படையுங் கைக்கிரியு மாவுமாம்
நாற்படையுஞ் சூழ ரணபேரி-ஆர்ப்பரித்து 103

வெற்றிசொல்லி வந்த விகட மருவலர்கள்
கொற்றமுங் கொற்றக் குடையுமேல்-அற்றுவிழ 104

மாதரங்கம் போல மறுகிக் குதித்துவரு
மாதுரங்க மெல்லா மறுகிவிழ-மோதிவரு 105

சிந்துரங்கள் கோட்டுச் சிரந்துணிந்து கைதுணிந்து
சிந்துரங்க ளாகித் திகைக்கவே-வந்த 106

முடித்தேர்க டட்டழிந்து முட்டுந் துரங்கம்
மடித்தே வலவன் மடிய-அடுத்துநின்று 107

பாரிட் டெதிர்த்த படைவீரர் சென்னிகு
பீரிட் டிரத்தம் பெருகவே-தாரிட்ட 108

தோடுணிய வாடுணியத் துள்ளித் திரண்டுவரு
தாடுணிய மோட்டுத் தனுத்துணியக்-கோடுணிய 109

விற்றுணியச் செங்கை விரறுணிய வெற்றிசொன்ன
சொற்றுணிய நாக்குத் துணியவே-பற்றுணிய 110

ஒட்டகங்கள் கோடி யுருளச் செயபேரி
பெட்டகங்கள் போலப் பிறழவே-கட்டழிந்து 111

சாளையப் பட்டுச் சளப்பட்டுத் தாமிருந்த
பாளையப் பட்டும் பறிபட்டு-மூளைகொட்டக் 112

கட்டித் தயிரெனவே கண்டுசில பேயருந்தி
எட்டிக் கொழுப்பை யிழுக்கவே-தட்டுசிறை 113

வட்ட மிடுங்கழுகு வந்துகுடல் பற்றியெழல்
பட்ட மிடுங்கயிறொப் பாகவே-கொட்டும் 114

குருதி முழுகிநிணங் கொண்டுபருந் தேகல்
கருதுங் கருடனெனக் காணப்-பெருகிவரு 115

நன்னீ ரெனவொருபேய் நாடித் தசையருந்திச்
செந்நீர் குடித்துத் திகைக்கவே-துன்னி 116

வறட்டுக் கிழட்டுப்பேய் வாய்க்கொழுப்பை நோண்டிக்
கறட்டுப்பேய் தின்று களிக்க-முறட்டுப்பேய் 117

வாங்கித் தினுந்தசையை வந்தொருபேய் தட்டிவிட
ஏங்கிப் பசியா லிருந்தலற-ஆங்கொருபேய் 118

பேய்ப்பொட்ட லிட்ட பெருங்களத்திற் றின்றதசை
வாய்ப்பட்ட தென்று மகிழவே-கூப்பிட்டே 119

அன்று கலிங்கத் தமர்க்களத்துக் கொப்பாக
இன்று கிடைத்த தெனப்புகலத்-துன்றுபல 120

கூளி நடனமிடக் கொக்கரித்தே யுக்ரசெய
காளி மகிழக் கவந்தமிரு-தாள்பெயரக் 121

காகம் பருந்து கழுகுநிழற் பந்தரிட
மாகமின்னார் கல்யாணம் வாய்த்ததென-ஓகைபெறச் 122

சொல்லு மருவார் தொடியிடற வெந்நாளும்
வெல்லுமுனை கொண்டவடி வேலினான்-ஒல்லுமணி 123

ஆணை

வட்டநெடு வேலா வலயம் விளங்குபுவி
அட்டதிசை யுஞ்செலுத்து மாணையான்-இட்டமிகச் 124

வடுகனாததுரையின் பெருமை

சந்ததமுங் கோட்டிச் சவுமியநா ராயணரை
வந்தனைசெய் தொப்பமிடு வண்கையான்-நந்துலவு 125

தென்குளந்தை மேவுஞ் செயசிங்கங் கோகனக
மின்குழந்தை போலும் விசித்திரவான்-முன்குழந்தை 126

ஆமப் பருவத்தே யம்பொற் சுடிகைதந்த
சோமனுக்கு நேராந் துரைராயன்-பூமன் 127

முரசுநிலை யிட்டு முடிதரித்தே சேதுக்
கரசுநிலை யிட்ட வபயன்-வரசதுரன் 128

தண்டளவ மாலைச் சசிவர்ண பூபனருள்
கொண்ட லுபய குலதீபன்-மண்டலிகன் 129

ராச புலிவடுக நாத பெரியுடையான்
ராச னிவனாண்மை நாகரிகன்-யோசனையும் 130

தலைவன் பெருமை

மந்திரமு மொன்னார் வணங்கத் தனுவெடுத்த
தந்திரமு நீயோகத் தன்மையும்-வந்த 131

திரமாங் கணக்கினுட்பந் திட்ப நிதானம்
பரராச வட்டமுணர் பாங்கும்-தரம்பகுத்துத் 132

திட்டவட்ட மாய்நிதியந் தேடுவதுஞ் சீமைநவ
சட்டமெனக் காக்குஞ் சமர்த்துமேல்-வட்டமாம் 133

வல்லமையுங் காதல்விசு வாசமுங்கண் டேநமக்கு
நல்லமைச்ச னென்று நவமணிப்பூண்-பல்லக்குத் 134

தண்டிகை யூர்கவரி தண்கவிகை காளாஞ்சி
கண்டிகை முத்தங் கவனமாத்-திண்டிறல்சேர் 135

மத்தகெச மாதி வரிசைநல்கு மந்த்ரிதள
கத்த னுபய கனயோகன்-நித்தநித்தம் 136

ஈகைக் கிணையென்றோ வேற்றலருந் தண்ணளியோ
மேகத்தின் கால்விலங்கு வெட்டுவித்தோன்-ஆகையினால் 137

காராள னாகினான் கங்கைசுத னாயினான்
பாராம னீலி பழி துடைத்தோன்-பேராகச் 138

சூலி முதுகிற் சுடுசோ றளித்துமொரு
சூலி பசியாற்றத் தூங்கிரவிற்-சாலி 139

முளைவாரி யன்னமிட்டோன் முத்தமிழ்க்குப் பாம்பின்
வளைவாயிற் கைநீட்டும் வள்ளல்-இளையாமற் 140

பட்டாடை கீறிப் பருஞ்சிலந்தி காட்டிவெகு
நெட்டாய் விருது நிறுத்தினோன்-மட்டாரும் 141

பைந்தருவுக் கொப்பென்றோ பாலிக்கு முன்கையைச்
சந்தனமாய் வைத்தரைத்த தாடாளன்-முந்தக் 142

கொடுக்குங் குணமோ குழந்தைசொன்ன தென்றோ
அடுக்கு மவன்மீதி லன்போ-எடுக்கும் 143

இருநிதியு நெல்லா யிரக்கலமுந் தந்தே
ஒருகவிதை கொண்டுபுக ழுற்றோன்-பெருமைசேர் 144

அவன் செய்த தர்மங்கள்

கோலமிகு குன்றாக் குடியிலே நீடூழி
காலமெல்லா நிற்கவே கற்கட்டிச்-சூலத்திற் 145

றன்னூற்றுக் காணத் தடாகப் பிரதிட்டைசெய்து
செந்நூற் றுறையாற் சினகரமும்-பொன்னாற் 146

படித்துறையும் பூந்தருவும் பைந்தருவும் வேதம்
படித்துறையு மண்டபமும் பாங்காய்-முடித்துவைத்தே 147

போற்றிய வையா புரியென்று பேருமிட்டு
நாற்றிசையோர் போற்றுவள்ளி நாதருக்கே-தோற்றுதினக் 148

கட்டளையுந் த்வாதசிக் கட்டளையுந் தைப்பூசக்
கட்டளையு மேநடத்துங் கங்கைகுலன்-மட்டுவிரி 149

சீதளியார் புத்தூர்த் திருத்தளியார் கொன்றைவன
நாதனார் வயிரவ நாதருக்கும்-சீதமலர் 150

நல்லமங்கை பாகருக்கு நம்பும் வயிரவர்க்கும்
வல்ல திருக்கோட்டி மாதவர்க்கும்-கல்லியன்முன் 151

மண்டபமு நெய்விளக்கு மாமதிலும் வாகனமும்
தண்டலையும் வில்வத் தளமலர்கள்-கொண்டதோர் 152

நித்தியநை மித்தியமு நேயமாய்த் தானடக்கப்
பத்தியுட னேயமைந்த பண்பினான்-நத்துலவு 153

தென்பாக நேரிக்குச் சேர்ந்த வடபாலில்
வன்பாங் கரடிபுலி மான்மரைகள்-துன்பான 154

கள்ளர் குடியிருக்குங் காட்டைவெட்டி நாடாக்கிப்
புள்ளலம்பு சோலை புதுக்கியே-பள்ளநீர் 155

முன்பார் புகழ முனைவேந்தர் கொண்டாட
வன்பாரை வெட்டியுநீர் மல்கவே-அன்பாரும் 156

மண்டலிகன் முத்து வடுகநா தச்சமுத்ரம்
கண்டுபுகழ் கண்டமார்க் கண்டனாம்-கொண்டல் 157

அரசன் பெரியவுடை யான்மகிழ்ந்து வெற்றி
புரிகின்ற சோழ புரத்தில்-திருவளரும் 158

கந்தவனப் பொய்கைக் கரையினுக்கு மேற்றிசையில்
அந்தமிகு பாற்கடலி தாமென்னச்-சந்ததமும் 159

செய்கை தவறா திருந்ததிரி யம்பகப்
பொய்கைதனைக் கண்டிருந்த புண்ணியவான்-செய்திகழும் 160

வைகை நதிநீர மானபரம் பைக்குடியிற்
பொய்கைசெறி கூபம் புனற்பந்தல்-மைகவியும் 161

நந்தவனம் பூஞ்சோலை நன்மடமு மேயிற்றி
அந்தணர் சாலை யமைத்துவைத்தே-முந்தப் 162

படிக்கட் டளையாய்ப் பசித்துவந்தோர்க் கெல்லாம்
கொடிக்கட்டி யன்னங் கொடுத்தோன்-வடிக்கட்டும் 163

தன்ம சரீரன் றரும சகாயனெழில்
மன்மத ரூபனடல் வாளபிமன்-நன்மைசேர் 164

தன்னை யடுத்தோரைத் தாய்போலத் தாபரிப்போன்
பின்னையெண்ணா மற்கொடுக்கும் பேராளன்-பொன்னைப் 165

புதைப்பார் மணாளன் புருடமக மேரு
சுதைப்பார் புகழ்விளைக்குஞ் சோமன்-சுதைப்புவியைக் 166

காக்குங் கருணா கரனா மனுநீதன்
வாக்கி லிரண்டுரையா மானபரன்-ஆர்க்கும் 167

உபகாரஞ் செய்யவென்றே யோதுநூல் கற்றோன்
அபகாரஞ் செய்ய வறியான்-சுபகாரி 168

துட்டருக்கு நிட்டூரன் றுட்டருக்கு மார்பாணி
சிட்டருக்கு நன்மைபுரி செங்கோலான்-மட்டுவிரி 169

அவயவச் சிறப்பு

மாப்பதுமன் போலவே வந்தமுனி நல்யாகம்
காப்பனெனச் சென்றமலர்க் காலினான்-ஆர்ப்பரித்துச் 170

சொந்தமென விந்தையுறை தோளினான் கோகனகை
வந்து குடியிருக்கு மார்பினான்-வந்தவரை 171

வங்கணங் கட்டி வசந்தத் தியாகநல்கக்
கங்கணங் கட்டுமிரு கையினான்-கொங்கு 172

பரந்த மடவார் பயோதரத்தி லேந்தும்
நரந்தம் பரிமளிக்கு நாசி-பொருந்தினோன் 173

ஆனவித்தை யெல்லா மறிந்தாலுங் காந்தருவ
கானவித்தை கேட்குமிரு காதினான்-நானிலத்திற் 174

கீர்த்தி கரித்துக் கிளைக்கின்ற சந்த்ரவிம்பம்
மூர்த்தி கரித்த முகத்தினான்-பார்த்திபரில் 175

மூவேந்தர் போலவந்து முத்தமிழை யாராய்ந்து
பாவேந்தை வாழவைத்த பாக்கியவான்-பூவேந்து 176

தந்தை முதலியோர்

காத்தவரா யன்பாலன் காணுமைவர் பேரிடரைத்
தீர்த்தவரா யன்புபுரி சீதரமால்-பார்த்தனுக்குக் 177

காண்டா வனதகனங் காண ரதமூர்ந்தோன்
வேண்டார் வணங்கவரி வில்லெடுத்தோன்-சேண்டாங்கி 178

நில்லாமற் றிக்கயங்க ணேர்ந்தாலு நல்லதென்று
மல்லாட மார்புதட்டும் வல்லமையான்-நல்லாரை 179

ஆய்ந்தா தரிக்கு மறிவினான் மேருவரை
சாய்ந்தாலு மீளநடுந் தந்திரவான்-ஏந்துமலர்த் 180

தேன்றொட்ட விந்திரவி தெற்குவடக் கானாலும்
தான்றொட்ட வாரந் தவறாதான்-கான்றொட்ட 181

செய்க்குவளை நித்திலஞ்சூழ் தென்முல்லை யாதிபதி
மைக்குவளை மாலையணி மார்பினான்-திக்கு 182

விசையஞ் செலுத்தி விருதொன்று கட்டி
இசையெங்கு மேசெலுத்து மெங்கோன்-திசையாள் 183

அதுலன் குளந்தைக் கரசன் மகிழும்
சதுரனாம் ராமக்ருஷ்ணன் றம்பி-மதுரமொழி 184

சொன்னவிச்வ நாதனுக்குஞ் சூரியநா ராயணற்கும்
பின்னவன் கீர்த்திப் பிரதாபன்-மன்னுகலி 185

கோபன் கவிவேந்தர் கொண்டாட வந்தபற்ப
நாபன் சசிவன்ன ராசனுக்கும்-சோபந்தீர் 186

சோமன் குலத்தருமன் சுப்பிர மண்யனுக்கும்
சேமநிதி யான சிறுதாதை-பூமணிகா 187

உந்துதிருப் பாற்கடலி லுற்பவித்த தண்மதிபோல்
முந்து வலம்புரியின் முத்தம்போல்-வந்த 188

நனையகஞ்சேர் நீலமணி ராமக்ருஷ்ண மாலைத்
தனைய னெனமகிழ்ந்த தந்தை-அனகன் 189

தருநமசி வாயமன்னன் றந்தகயி லாசன்
மருக னெனவந்த மாமன்-உரிமை 190

அடர்ந்த கிளையா னகந்தை யறியான்
மடங்க லெனவே வயங்கொள்-படையான் 191

தொழுந்த கைமையான் சுகந்த புயவான்
எழுந்த பிறையா யிரங்கள்-தொழுவோன் 192

பரதந் திரசம் பனதந் திரசிந்
திரதன் சுமுகன் செனகன்-சரதன் 193

பொருமந் தரதிண் புயமண் டலிகன்
தருவுங் கரமுஞ் சரியென்-றருளவரு 194

காரியுப காரியதி காரிவிவ காரிகுண
வாரிநிதி வாரியருள் வாரிமழை-மாரிமத 195

வாரணங் கூப்பிடுமுன் வந்தேன்வந் தேனென்ற
நாரணன் றாண்டவ ராயமன்னன்-போரளவி 196

இன்றிளைத்தாய் நாளைவா வென்றே யிராவணற்கு
நன்றுரைத்த தாண்டவ ராயமன்னன்-நின்றெதிர்த்து 197

வன்மை புரிந்தோரும் வந்துசர ணென்றடைந்தால்
நன்மைபுரி தாண்டவ ராயமன்னன்-சொன்மருவு 198

தாகரிகன் மாற்றலர்பாற் சங்க்ராம கெம்பீரன்
நாகரிகன் றாண்டவ ராயமன்னன்-மாகனகக் 199

கோட்டிலங்கை ராவணனைக் கொன்று விபீடணனை
நாட்டுதுரை தாண்டவ ராயமன்னன்-கூட்டுசுண்ணம் 200

வல்லசுர மஞ்சரிக்கு மாலைதரு கந்தபொடி
நல்லதென்ற தாண்டவ ராயமன்னன்-சொல்லுநெறி 201

கோடா மனுநீதி கொண்டிருந்து வைகைவள
நாடாளுந் தாண்டவ ராயமன்னன்-வாடாத 202

தலைவன் பவனி வரத்தொடங்கல்

தென்னவன்போற் பூலோக தேவேந் திரன்போல
மன்னு பவனி வருவதற்கு-முன்னமே 203

நித்திய தான நியம மனுட்டானம்
பத்தி தரும்பூசை பண்ணியே-மொய்த்தகன 204

சுற்றம் விருந்துத் தொகுதிபல தற்சூழ
உற்ற வறுசுவை சேருண்டி-முற்ற 205

அருந்திமலர் வாய்பூசி யாசார மீதில்
இருந்துமின்னார் கண்ணாடி யேந்தத்-துரைவடுக 206

அணிகளை அணிதல்

நாதமன்ன னுக்கன்றி நானிலத்து வேந்தைவணங்
காதமுடி மேற்பாகு கட்டியே-காதிலணி 207

மாணிக்க முத்து மரகதப்பூ மூவருடல்
காணிக்க வந்த கவின்காட்டப்-பூணிழையார் 208

கூடி முருகனென்று கும்பிடவே மேற்காதில்
ஆடு முருகி னணியணிந்து-சேடுதிகழ் 209

வாக்கிலுறை வெண்கமல மாதுவெளி வந்ததென
ஆக்கமிகும் வெண்ணீ றலங்கரித்துத்-தீர்க்கமாய்ப் 210

பார்க்கின் முகமதியின் பாற்களங்கம் வேண்டுமென்றோ
சேர்க்குங்கத் தூரித் திலதமிட்டு-நீக்கமின்றி 211

இச்சைசெறி கோகனகைக் கிட்ட திரைபோலப்
பச்சைவச்ரம் வைத்த பதக்கமிட்டுக்-கச்சையடர்ந் 212

தோங்கத் தனம்படைத்த வொண்டொடியார் காமசரம்
தாங்கரத்ன கண்ட சரந்தாங்கிப்-பூங்கரத்திற் 213

சங்குவளை மாலைசிந்தித் தாழ்குழலார் பின்றொடரச்
செங்குவளை மாலை திருத்தியே-பொங்குமுன்னீர் 214

மாகுவலை யந்தாங்க வைத்த மணிச்சுமடாம்
வாகு வலைய மணிதரித்து-மாகர் 215

சுரதருவிற் காமவல்லி சுற்றியது போல
விரலணியுங் கைச்சரடும் வேய்ந்தே-அரையிற் 216

சலவைகட்டி யொன்னார் தருங்குருதி மாந்திப்
புலவுகக்குங் குற்றுடைவாள் பூட்டிக்-கலகம் 217

நிலவுஞ் சகட நெறுநெறென வீழக்
கலகலென நீட்டுதண்டைக் காலில்-இலகுரத்ன 218

மிஞ்சியிட்டுக் கொற்றம் விளக்கு மணியோசை
அஞ்சியிட்ட பேருக் கபயமென-விஞ்சு 219

வரையில் வெயிலெறிக்கும் வாறுபோற் பீதாம்
பரவுத்த ரீகம் பரித்துத்-தரணிமுற்றும் 220

ஓரடி கொண்டளந்தங் கோரடி தூக்கிநின்ற
ஈரடியும் பாவடியி லேற்றியே-ஏரடர்க்கும் 221

யானையின் சிறப்பு

பாடகச் சீறடியார் பங்கயக்கை லாகுதர
ஆடகப்பொன் கூடத் தயல்வந்து-ஓடைமின்னல் 222

கொண்டிருண்டெ ழுந்துநின்ற கொண்டலென்ற பண்புகொண்டு
தண்டரங்க மொண்டகும்ப சம்பவன்றி-ரண்டவங்கைத் 223

தொண்டலங்கொ டுண்டுமிழ்ந்து தொந்தமென்று மன்றிலண்டர்
கண்டபண்ட ரங்கனந்த கன்கரத்தி-ரண்டுகண்பு 224

தைக்கமொத்தி ருத்ரமிக்க தட்டியட்ட திக்கயத்தின்
மத்தகத்தி னைத்தகர்த்து வட்டமிட்டெ-திர்த்தகற்கி 225

கத்திகட்டி விட்டமத்த கத்தினத்தி யைத்துகைத்துச்
சத்திரக்க ரத்தரைத்த லத்தினற்சி-ரத்தையெற்றி 226

யுத்தரங்க மீதி லுருத்த ரணவீர
பத்திரன் போன்முசலம் பற்றியே-நித்தநித்தம் 227

விந்தை கொலுவிருக்கும் வெற்பொன்று கான்முளைத்து
வந்து நடைபயின்ற வாறென்ன-முந்துதெவ்வர் 228

சிந்துஞ் சதுரங்க சேனா சமுத்திரத்தை
மந்தரம் போல மதித்துவெற்றி-தந்துநின்று 229

பவனிவரல்

நந்தா வளக்கரட நால்வாய்ப் பனைத்தடக்கைத்
தந்தா வளப்பவனி தான்வரலும்-பிந்தாக் 230

குடைநெருங்கக் கோடி கொடிநெருங்கக் காலாட்
படைநெருங்கத் தாவு பரிமா-புடைநெருங்க 231

மள்ளர் குரவை மலிய மதாவளத்தின்
வெள்ள மிகுதி மிடையவே-துள்ளிவிட்டு 232

மன்னிய வார்பெலமா மல்லா ரிராசவார்
துன்னியவரா வுத்தரணி சூழ்ந்துவர-மின்னுவெள்ளித் 233

துப்பாக்கி யூழியத்தர் தோமரத்தர் கேடயத்தர்
தப்பாது விற்காரர் தற்சூழக்-குப்பாய 234

நேரிசத்தர் வாட்காரர் நேமிதரித் தோர்களிரு
பாரிசத்துங் கேப்புலியொப் பாகவரத்-தாரிசைத்த 235

வாத்தியங்கள்

ஒட்டகத்தின் கூன்முதுகி னோங்குமத குஞ்சரமேற்
கொட்டுநக ராபேரி கொண்டலின்வாய்-விட்டதிரத் 236

தண்டகந் தாங்குந் தகுணியுங் கோடிணையும்
தொண்டகமுஞ் சல்லரியுந் துந்துமியும்-விண்டதொனி 237

மத்தள தாள வகையுங் கிடுபிடியும்
தொத்திலகு நாக சுரத்தொனியும்-சத்திக்கும் 238

வாங்காவுங் கானாவும் வாங்கா மணிக்கொம்பும்
பூங்காமன் றூரியத்தைப் போன்முழங்க-நீங்காத 239

தம்புரு வீணை சரமண் டலம்வரியாத்
தும்புரு கானத் தொனிகூட்டப்-பம்பு 240

மற்றச் சிறப்புக்கள்

பரதவிட மாதர் படிதம் பயிற்றச்
சுரதவிட வாரயினி சுற்ற-உரதருண 241

கட்டியத்தர் வேத்திரக் கையாற் பராக்கென்னத்
தட்டி வருஞ்சந் தடிவிலக-மட்டுவிரி 242

பொன்னடைப்பை காளாஞ்சி பூஞ்சிவிறி வீசுகுஞ்சம்
சொன்னடக்கை யோரேந்திச் சூழ்ந்துவர-அன்னடக்கும் 243

சந்த்ர கிரண சமுக மிருபாலும்
வந்ததென்ன வெண்சா மரையிரட்டச்-செந்தமிழின் 244

சின்னம் ஒலித்தல்

நாவலர் தாருவந்தான் ராயர்மகிழ் மந்த்ரிவந்தான்
பூவலரு நீலப் புயன்வந்தான்-ஆவறரு 245

பொன்னா பரணன் புகழா பரணமெனும்
கன்னாவ தாரவுப காரிவந்தான்-பொன்னாரும் 246

மாதர் மடலெழுது மால்ராம க்ருஷ்ணமன்னன்
சோதரனா முல்லைத் துரைவந்தான்-மேதினியில் 247

கொட்டமிடுங் கள்ளர் குறும்படக்கு வோன்வந்தான்
வட்டமிடு மாநகுலன் வந்தானே-றிட்டெதிர்த்துச் 248

சீறுஞ் சமர திவாகரன்வந் தான்விருது
கூறும் விகடர் குடாரிவந்தான்-வீறு 249

சரணென் றடைந்தோரைத் தள்ளாத கங்கை
வருண குலதிலகன் வந்தான்-தருண 250

கரதல பற்பநிதி காத்தவ ராயன்
வரதனையன் வந்தான்வந் தானென்-றொருதாரை 251

சின்னவொலி மேருத் திரைக்கடலி னாட்டியநாள்
மன்னுமொலி போல மலியவே-கன்னியெயில் 252

குழாங்கொண்ட மகளிர் செயல்

மண்டபமு நந்தா வனமு மலர்வீடும்
கொண்ட பெருந்தெருவுங் கோபுரமும்-மண்டிவிளை 253

யாடுகின்ற பேதையரே யாதியா யேழ்பருவ
வாடுமிடை யார்கோடி மாலாகி-ஓடிவந்துட 254

கண்ட வுடன்கமலக் கைகுவித்தார் மெல்லமெல்லக்
கொண்டுநட தந்தியெனக் கும்பிட்டார்-மண்டலமேல் 255

ஆணி லழகனிவ னாமென்பார் கண்காண
வேணு மனந்தமென்பார் மெல்லியலார்-சேணிக்கு 256

மாரனோ விந்திரனோ மாமாலோ சூர்தடிந்த
வீரனோ பாருமென்பார் மெல்லியலார்-மாரனென்றாற் 257

கன்னற் சிலையுண்டே காணரதி யோநாமும்
வன்னிப் பரியெங்கே மாரனென்றாற்-பொன்னிலகு 258

விண்ணாடர் கோமானேல் வெள்ளைமத யானையுண்டே
கண்ணா யிரமெங்கே காட்டுமென்பார்-எண்ணாமல் 259

முன்னகத்தை யேந்து முகில்வண்ண னாமாயிற்
பன்னகத்தை யுண்ணும் பரியெங்கே-அந்நகத்தை 260

தாக்குமயில் வீரனென்றாற் சந்ததமு நீங்காமற்
காக்கு மயில்வா கனமுண்டே-பார்க்கினிவன் 261

மேழி விருதால் விருதுசின்னஞ் சொல்லுவதால்
வாழி குவளைமலர் மாலையால்-ஆழிதொட்ட 262

ராகவன்கைத் தாண்டவ ராயமன்ன னாமென்றே
மாகவன மாகவே வந்துநின்ற-வேகமிக 263

குழாங்களின் கூற்று

உன்கா லுரலா வுலக்கை மருப்பாக
வன்காமன் றன்சிலையை மாட்டாயோ-நன்கானச் 264

செய்க்கரும்பு தின்னத் தெவிட்டாதோ மன்மதனார்
கைக்கரும்பு தின்றாற் கசக்குமோ-மைக்களிறே 265

கொட்டமிடுந் தெவ்வர் குடையைச் சிதைப்பதலால்
வட்ட மதன்குடைக்கு மாட்டாயோ-குட்டைமுனி 266

தன்கைக் கடங்குமிந்தத் தண்கடலை நீண்டிருந்த
உன்கைக்கு ளேயடக்க வொண்ணாதோ-பொன்கொட்டிக் 267

கப்பமிடார் செய்குன்றைக் கட்டழிப்பாய் தென்மலையை
அப்பரிசு செய்யவுன்னா லாகாதோ-செப்பும் 268

மதமோ மொழிந்திடநால் வாயிருந்துங் கூறா
விதமேதோ வேழையர்கண் மீதும்-கதமுண்டோ 269

என்றார் நமதுபணி யெல்லாமுங் கைக்கொண்டால்
நன்றா மமைச்சருக்கு ஞாயமோ-குன்றாத 270

வள்ளத் தனத்தியர்கள் வஞ்சரைச் சூறைகொள்வோன்
கள்ளத் தனத்தையெங்கே கட்டுரைப்போம்-தெள்ளுதமிழ் 271

மல்லையான் சொல்லு மதுர கவிக்கல்லால்
முல்லையா னம்பான் மொழிவானோ-மெல்லியலீர் 272

அந்தமல்லர் கோட்டைகட்டி யாளுகின்றான் பஞ்சணையில்
வந்தமல்லர் கோட்டைகட்ட வாரானோ-சொந்தச் 273

செயமங்கை வீற்றிருக்குஞ் செம்பொன் மணிக்குன்றாம்
புயமங்கை யாற்றழுவப் போமோ-பயமென்றே 274

ஏழையர் வார்த்தைசெவிக் கேறுமோ மேனியெல்லாம்
மாழையுருக் கொண்டோமோ வாருமென்னச்-சூழநின்று 275

தலைவி தலைவனது பவனி காணவருதல்

கன்னியர்க ளின்னபல கட்டுரைக்கும் வேளையினில்
மன்னுமத யானையின்முன் வந்துநின்றேன்-கன்னற் 276

சிலையேந்து சிங்கார தேக மதனை
மலையேந்தி யான்புரந்த மாலைத்-துலைசேர் 277

சிவிச்சக்ர வர்த்தியைப்போற் சேர்ந்தோரைக் காத்த
புவிச்சக்ர வர்த்தியைமுன் போரிற்-சவிச்சக்ரம் 278

ஆதவன்மே லேவிநின்றே யாரிருள்பூ ரித்துநின்ற
மாதவனை நீள்கருணை வாரிதியை-மோது 279

பரதிமிர ராசியடர் பாற்கரனை யார்க்கும்
சரதகுண சந்த்ரோ தயனை-விரவு 280

காதலபங் கேருகனைக் காத்தவ ராயன்
வாதனய னான மணியச்-சருவும் 281

விரவலர் கோளரியை விற்பனனை வாணர்
புரவலனை நீலப் புயனை-இருநிதியைக் 282

தலைவி மயல்கொள்ளல்

கண்டேன் திருவழகைக் கண்குளிரச் சேவித்தேன்
கொண்டே னதிமோகங் கொண்டமயல்-விண்டுரைக்க 283

இவ்வேளை நல்வேளை யென்றுசொல்லும் வேளையினிற்
செவ்வேழங் கான்மீறிச் செல்லவே-வெவ்வேல் 284

மதனம்பு பாய வரிக்கணம்பு பாய
விதனமொடு சோர்ந்து மெலிந்தேன்-பதன 285

இடைதுவளக் குன்றமென வேந்துவளக் கொங்கை
நடைதுவள மெல்ல நடந்தேன்-புடைதழுவு 286

விஞ்சுசகி மார்செறிந்து மேலணைத்துக் கொண்டேக
நெஞ்சு சகியே னிலைதளர்ந்தேன்-பஞ்சணையிற் 287

சேர்த்தினார் பன்னீர் தெளித்தார் தழலினிடை
வார்த்தவெண்ணெய் போலவுள்ளம் வாடினேன்-கூர்த்துமுகம் 288

பாராத வன்மயலாற் பாவி யுடல்வருந்தத்
தேராத வன்குடபாற் சென்றொளித்தான்-பேராத் 289

துருத்திதென்றன் மாலை சுடர்மதியம் வெள்ளி
உருத்தசெழுந் தீயி னுருக்கி-விருத்தமதன் 290

வாரி யிறைப்பதுபோல் வன்னிலவு வீசவிரா
ஓருகமே யாகி யுடலயர்ந்தேன்-பாரறிய 291

அம்பலரும் பாரலரு மாக்கினான் மன்மதன்கை
அம்பலருக் காரவமே யாக்கினான்-அன்பு 292

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூதென்-றகத்தறிந்தே 293

புத்திமான் சந்து பொருந்துவாய் நீநினைந்தாற்
சித்தியா மென்றே தெளிந்துரைத்தேன்-பத்தியாய்ப் 294

தலைவி தூதுரைக்கும் சமயத்தைக் கூறுதல்

பூசைபண்ணும் வேளையினிற் போகேல் சமத்தான
ராசவட்ட வேளையிலு நண்ணாதே-யோசனைசெய் 295

தானாபதியர் தளகர்த்தர் காரியத்தர்
ஆனாத போது மணுகாதே-தானாக 296

ஒப்பமிடும் வேளையிலு மொன்னார் திறைகொணர்ந்து
கப்பமிடும் வேளையிலுங் கட்டுரையேல்-எப்புவிக்கும் 297

பேராட்டும் வாணர் ப்ரபந்தகவி வந்திருந்து
பாராட்டும் வேளை பகராதே-சீராட்டும் 298

உல்லாச மன்மதன்போ லொண்டொடியார் கூட்டமிடும்
சல்லாப வேளையிலுந் தானுரையேல்-வல்லாள 299

போசன் கொலுப்பெருக்கிப் போசனமுந் தான்பண்ணி
வீசுமலர்ச் சப்ரமஞ்ச மீதினிலே-நேச 300

மிதசனங்க டற்சூழ வீற்றிருக்கும் வேளை
மதுமலர்த்தார் வாங்கிநீ வா. 301

மான் விடு தூது முற்றும்




சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்