உமாபதி சிவாச்சாரியார் அருளிய நெஞ்சு விடு தூது நெஞ்சு விடு தூது, கி.பி. 1311-ம் ஆண்டு, உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலின் செய்யுள்கள் கலிவெண்பாவில் பாடப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர், தனது ஞானாசிரியனைத் தலைவனாக நினைத்துத் தன்னைக் காதலியாகப் பாவித்துத் தனது மனதைத் தலைவனின் அன்பையும் அருளையும் பெற்று வரத் தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலில் இறைவனைத் தலைவனாகப் பாவித்து எழுதப்பட்டுள்ளதால், இறைவனது பெருமைகளும், சைவ சித்தாந்த கொள்கைகளும் கூறப்படுகின்றன. அவருடைய இயல்பு, பசு, பாச இயல்பு ஆகியவை பற்றி எழுதப்பட்டுள்ளது. இந் நூலின் முதற்பகுதியில், இறைவன் இயல்பு, உயிரின் இயல்பு, தளைகளின் இயல்பு எனச் சைவ சித்தாந்தத்தின் உண்மைகளான இறைவன், உயிர், மலங்கள் ஆகியன பற்றிக் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் இறைவனுடைய நிலையை மலை, நாடு, ஆறு, ஊர், தார், குதிரை, யானை, கொடி, முரசு, ஆணை எனும் தசாங்கங்களின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். மூன்றாம் பகுதியில் இறைவனது பெருமை, ஞானாசாரியன், குரு உபதேசம், அடையும் இடம் என்பவை தொடர்பில், பிற சமயங்களில் மயங்காது, சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்நூலின் இறுதி அங்கமாகத் தனி வெண்பா ஒன்றினை முழுக்கருத்தையும் விளக்கும் வகையில் நூலாசிரியர் அமைத்திருக்கின்றார். நூல் இறைவனியல்பு
நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும் வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன் நாதமுங் காணா நலத்தினா - னோத வரியா னெளியா நளவிறந்து நின்ற பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா வருவா னுருவா னருவுருவு மில்லான் மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான் பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன் படநாகம் பூண்ட பரமன் பசுவின் இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான் உயிரியல்பு என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற் சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப் பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின் பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா உணர்வின் மிசையோ டுலகா யதனைப் புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற் கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத் தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல் வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன் ஆன திறலா ரகந்தைக்கு - மேனி யயர வயர வழிய வழியும் உயிரின் றுயர முரையேன் - வயிரமே தளையினியல்பு மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர் இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும் அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர் மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம் இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன் சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால் உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல் பாவமெனும் பௌவப்பரப்பழுந்திப் - பூவையர்தம் கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங் குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால் நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோ றும் சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை இறைவனது நிலை வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ் செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா வேத முடிவில் விளைவில் விளைவிலொளி யாதி யமல நிமலனருட் - போத அறிவிலறிவை யறியு மவர்கள் குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள் வெளியில் வெளியில் வெளியன் வெளியி லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி லளியி லளியி லளிய னளியில் அளவி லளவி லளவன் - அளவிறந்து நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற் சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா விளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற் றுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக் கல்லாது தோன்றா வமல னகிலமெலா நில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு மீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப் பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம் தசாங்கம் 1. மலை பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற் குலவி விளங்குகுணக் குன்றோ - னிலகவே 2. ஆறு செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம் களவுபயங் காமங் கொலைகோபங் காதி அளவில்வினை யெல்லா மழித்திங் - குளமகிழத் தொம்மெனவே யெங்கு முழங்கிச் சுருதிபயில் செம்மைதரு மாகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின் காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங் கோடுபல பூதத் துணர்வழித்து - நீடுபுகழ் மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற ஐவாய வேட்கை யவாவழித்து - நையுமியல் வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவு நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கு மந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தைவிழ மோதி யலைக்கு மருணீர்மை முக்குணமுங் காதி யுரோமமெலாங் கைகலந்து - சீதப் புளக மரும்பிப் புலன்மயக்கம் போக்கி விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன மாதர் மயக்க மழித்துவளர் மண்டலத்தின் சோதியொரு மூன்றினையும் சோதித்து - நீதியினால் ஆதார மாறினுஞ்சென் றாறியடல் வாயுக்கண் மீதான பத்து மிகப்பரந்து - காதிப் பிறுதிவியப் புத்தேயு வாயுவா காய வுறுதி நிலமைந்து மோடி - மறுவிலா நான்முகன்மா லீசன் மகேச நலஞ்சிறந்த தான்முக மைந்தாஞ் சதாசிவமு - மானதொரு விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில் அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரு மவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்ட முள்ளாக்கிச் செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்தங்- கெவ்வறிவுந் தானாய வீடருளித் தன்னிற் பிரிவில்லா வூனாகி யெவ்வுயிர்க்கு முட்புகுந்து - மேனியிலா வஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத் தானந்த மில்லாத தண்ணளியா லோங்கிவரு மானந்த மென்பதோ ராறுடையான் - ஆனந்தம் 3. நாடு பண்ணும் பயன்சுருதி யாகமங்கள் பார்த்துணர்ந்து நண்ண வரியதொரு நாடுடையான் - எண்ணெண் 4. ஊர் கலையா லுணர்ந்து கருத்தழிந்து காம நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால் ஓட்டற்றுவீற்றிருக்கு மூருடையான் - நாட்டத்தால் 5. தார் தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந் துண்ணீர்மை யெய்தி யுரோமமெலா - நண்ணும் புளகம் புனைமெய்யர் பொய்யிற்கூ டாமல் உளகம்பங் கொண்டுள் ளுருகி - யளவிலா மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கவருன் மேலாய் விளங்கலங்கன் மெய்யினான் - தேலாத 6. குதிரை வானம் புவன மலைகடலேழ் பாதாள முனைந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமா யெல்லாமா யல்லவா யெண்ணுவாரெண்ணத்துள் நில்லாம னிற்குநீள் வாசியான் - சொல்லாரும் 7. யானை பாதாள மூடுருவிப் பாரேழும் விண்ணேழு மாதார மாகி யகண்டநிறைந் - தோத அரிதா யெளிதா யருமறையா றங்கத் துருவா யுயிரா யுணர்வாய்ப் - பெரிதாய வெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித் துய்ய கடலைத் துகளெழுப்பி - யையமுறுங் காமக் குரோத மத மாச்சரியங் காய்ந்தடர்த்துச் சாமத் தொழிலின் றலைமிதித்து - நாமத்தாற் கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டழித்துத் தத்தம் பயங்கொலைகள் தாங்கழித்தே - தத்திவரும் பாசக் குழாத்தைப் படவடித்துப் பாவையர்த மாசைக் கருத்தை யறவீசி - நேசத்தா லானவே கங்கொண் டருண்மும் மதத்தினா லூனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப் பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டான் மருவித் திகழ்ஞான வானையா - னிருமுச் 8. கொடி சமையங் கடந்து தனக்கொப் பிலாத சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித் 9. முரசு தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி இம்மை மறுமை யிரண்டகற்றிச் - செம்மையே வாயுவை யோடா வகைநிறுத்தி வானத்து வாயுவையு மாங்கே யுறவமைத்துத் - தேயுறவே என்று மொறுதகைமை யாயிருக்கு மின்பருளே நின்று முழங்கு நெடுமுரசோன் - அன்றியும் 10. ஆணை மாலு மயனும் வகுத்தளித்த வையமெலாஞ் சாலுமிதற் கப்பாலு மெப்பாலு - மேலை யுலகு முலகா லுணரவொண்ணா வூரு மிலகி நடக்குமெழி லாணையான் - அலகிறந்த இறைவன் பெருமை காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான் பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான் றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச் சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன் ஞானாசாரியார் வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த சம்பந்த மாமுனியென் றம்பிரா - னம்புவியோர் போற்றுந்திருவடியென் புன்றலைமீதே பொறித்தோ நேற்றின் புறத்தமைத்த வெங்கோமான் - சாற்றுவார் சாற்றும் பொருளான் றனிமுதல்வன் றனல்லான் வேற்றின்ப மில்லா விளங்கொளியான் - போற்றுங் குருவேட மாகிக் குணங்க்குறியொன் றில்லாப் பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங் கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையா நெட்டுமவர்க் கெட்டா வியல்பினான் - மட்ட வீழ்தார் குரூபதேசம் வானோன் பவனி வரக்கண்டு வல்வினையே னேனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப் பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம் நீத்தா நினைவே றாக்கினா - னேத்தரிய தொண்ணூற்றறுவர் பயிறொக்கிற்றுவக்கறுத்தான் கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும் வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான் மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய வஞ்செழுத்தி னுள்ளீ டறிவித்தா னஞ்செழுத்தை நெஞ்செழுத்தி நேய மயலாக்கி - யஞ்செழுத்தை யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தியதி லுச்சரிப்பு வைச்சிருக்கு மந்த வழிகாட்டி - யச்சமறச் சென்று விளக்கை யெழத்தூண்டிச் செஞ்சுடரி னொன்றி யொருவிளக்கி னுள்ளொளியாய் - நின்ற பெருவிளக்கின் பேரொளியி னுள்ளே பிரச மருவு மலர்போன் மதித்தங் - கருவினிருக் கொள்ளா வருளைக் கொளுத்திக் குணங்குறியொன் றில்லா விடத்தே யளைப்பாற்றி - விள்ளாத வுள்ள முதலாக வுற்றதெல்லாம் வாங்கவருள் வெள்ள மயலளித்து மேவினான் - கள்ள மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லா மிறப்பித்தா னென்பிறவி யீர்த்தான் - விறற்சொல்லுக் கெட்டானை யார்க்கு மெழுதா வியற்குணங்க ளெட்டானை யாற்றா வெழுத்தினான் - மட்டாரும் பாடலா ராடலார் பண்பலார் நண்பலா ராடலா ராட லகன்பதியாங் - கூடலார் காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான் பாணர் கிலகு பலகையிட்டான் - சேணிற் சிறந்த வுருவான் றிலுமாக் கெட்டா நிறைந்த திருவருவாய் நிற்போன் - கறங்குடனே சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்ட மன மாறில் கருணையினான் மாற்றினா - ணீறணிந்த மெய்ய னமல னிமலனருள் வீடளிக்கு மையனறி வுக்கறி வாயினான் - பொய்யாற்பாற் பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தந் நெஞ்சத்துண் மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவா னத்தன்பால் நீசென் றடையு மிடத்தையெல்லாஞ் அடையும் இடம் சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி யாசைதனிற் பட்டின்ப வார்கலிக்கு - ணேசமுற நின்று திளைக்கு மிதுமுத்தி யல்லதுவே றொன்று திளைக்கு மதுமுத்தி - யன்றென் றிகலா விருளலகை போலிகலே பேசு முலகா யதன்பா லுறாதே - பலகாலுந் தாம்பிரமங் கண்டவர்போற் றம்மைக்கண்டாங்கதுவே நான்பிரம மென்பவர்பா நண்ணாதே - யூன்றனக்குக் கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல வென்றுகுறித் தென்றுமற மேதெய்வ மென்றென்று - வென்றிப் பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொன் மிறையே விரும்பி விழாதே - நிறைமேவி வாழ்பவர்போன் மண்ணுடலின் மன்னுமுரோ மம்பறித்துத் தாழ்வுநினை யாதுதுகில் தானகற்றி - யாழ்விக்கு மஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும் வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை யாதிமறை யோதி யதன்பயனென் றும்மறியா வேதியர்சொன் மெய்யென்று மேவாதே - யாதியின்மே லுற்றதிரு நீருஞ் சிவாலயமு முள்ளத்துச் செற்ற புலையற்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர் வேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாத மூடருடன் கூடி முயங்காதே - நீட வழித்துப் பிறப்ப தறியா தரனைப் பழித்துத் திரிபவரை பாராதே - விழித்தருளைத் தந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவ னந்தங் கடந்தப்பா லாய்நின்றோ - னெந்தைபிரான் வீற்றிருக்க மோலக்க மெய்தியடி வீழ்ந்திறைஞ்சிப் போற்றி சயசய போற்றியென - வார்த்தகரி யன்றுரித்தாய் நின்பவனி யாதரித்தா ரெல்லாரும் வென்றிமதன னம்புபட வீழ்வரோ - நின்றிடத்து நில்லாத செல்வ நிலையென் றுனைநீங்கிப் பொல்லா நரகம் புகுவரோ - பல்லாருங் கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ சித்தம் பலகாற் றிகைப்பரோ - முத்தம் பொருத நகைமடவார் புன்கலவி யின்ப மருவி மயங்கி வருவரோ - விருபொழுது நாளிருபத் தேழு நவக்கிரக மும்நலியுங் கோளிதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை யெரித்த விழியாய்நின் னின்பக் கடற்கே தரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந் தீரா யெனவுரைத்துச் செங்கமலப் பூந்திருத்தா டாரா யெனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - யேராரும் பூங்குன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே யீங்கொன்றை வாரா யினி. வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும் வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல நெஞ்சமே வாராய் நினைத்து. முற்றும் |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கவிதை ஓவியம் சிற்பம் சினிமா மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2000 பக்கங்கள்: 439 எடை: 500 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: 978-93-84302-26-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 390.00 தள்ளுபடி விலை: ரூ. 355.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நேரடியாக வாங்க : +91-94440-86888
|