ஏகாம்பரநாதர் உலா - Ekambaranathar Ula - உலா நூல்கள் - Ula Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




இரட்டைப்புலவர்

இயற்றிய

ஏகாம்பரநாதர் உலா

திருச்சிற்றம்பலம்

காப்பு

நேரிசை வெண்பா

சாற்றரிய வாயிரக்கான் மண்டபத்தின் சார்வாக
ஏற்ற முடனே யினிதிருந்து - போற்றும்
விறல்விகட சக்ர விநாயகனை யேத்துந்
திறல்விகட சக்ரா யுதம்.

கலிவெண்பா

ஏகாம்பரநாதர் இயற்பெருமை

நிலம்போற்றும் பைந்துளப நீலப் பொருப்பும்
பொலம்போற்றும் போதிற் பொருப்பும் :- நலம்போற்றும் 1

மேருப் பொருப்பொருதன் வெள்ளிப் பொருப்பிலிரண்
டாரப் பொருப்புடைய வன்னமுடன் :- சேர 2

விருந்து மனமகிழ்வுற் றெப்போது மின்பம்
பொருந்தி யுறைகின்ற போதிற் :- கரந்தையினி(து) 3

தேந்துமுடி யோனுடனே யின்பநகை யாடிவளைக்
காந்தளிணை கொண்டுதிருக் கண்புதைப்ப :- வாய்ந்த 4

படியும் விசும்பும் பரிதிமதி காணா(து)
அடையு மிடையிருளே யாகி :- நெடிதூழிக் 5

காலஞ் சிறிது பொழுதிற் கழிதலாற்
சீல முனிவர்க்குந் தேவர்க்குஞ் :- சால 6

மறையவர்க்கும் வேதம் வகுத்த தொழிலெல்லாங்
குறைவுபட்ட தென்றிறையுட் கொண்டு :- செறியளக 7

ஓவியமே நின்னா லுலக நெறிமுறைமை
யாவுங் குறைவுபட்ட தீங்கதற்கு :- மேவியநல் 8

“அம்பிகை செய் பூசனை”

வேதா கமத்தில் விதித்தபெரும் பூசைதனைப்
போதார் குழலாய் புரிகென்ன :- வீதெமக்கு 9

வாய்த்த தெனவிரும்பி வானோரை நஞ்சுண்டு
காத்தபெருமான் கழலிறைஞ்சி :- யேத்தி 10

மடமாது நின்னை வழிபடுவதற் கான
விடமாவ தேதருள் செய்கென்ன :- விடையோனுந் 11

தென்பால தான திசையிற் றிரைவீசு
நன்பாலித் தண்டகநன் னாட்டகத்து :- முன்பாக 12

வோது திருநகரி யோரேழி னுஞ்சிறந்த
ஆதி நகர்காஞ்சி யந்நகரிற் :- போதநலம் 13

மன்னி வளர்வதொரு மாவுண்டு அதன்நிழற்கீழ்க்
கன்னி யெமையுனக்குக் காணலாஞ் :- சொன்னபடி 14

யாகம பூசை புரியவினி தவ்விடத்துப்
போகவென வமரர் போற்றிசைப்ப :- வேகிப் 15

பொருப்பரைய னேவலொடு போந்துபல கோடித்
திருத்தகு மாதருடன் சேர :- விருப்புடனே 16

தென்றிசையிற் சென்று திருவாய் மலர்ந்தவுயர்
நன்றுதிகழ் காஞ்சி நகரெய்தி :- வென்றியிபம் 17

ஒன்று குறுமுயக் கோடு மிடம்பார்த்து
நின்றுவிடுங் காஞ்சி நிழல்பார்த்து :- சென்றடைந்தோர் 18

தாம்பிறரைக் காணலாந் தம்மையவர் காணாமல்
ஆம்பரிசு நல்கு மகம்பார்த்துக் :- காம்பொன்றின் 19

மூன்று முளரி முகிழ்க்குந் தடம்பார்த்துத்
தோன்றுமலர்த் தீபச் சுடர் பார்த்துத் :- தான்றன் 20

இடத்து நிழனோக்கி யாவருங் காணாப்
படுத்து மொருகிணறு பார்த்துக் :- குடக்கோடிக் 21

காண வரிதாய்க் கரக்குநதி பார்த்தமரர்
பேணுலகத் துய்க்கும் பிலம்பார்த்துக் :- காணரிய 22

செம்பொனிற நல்குஞ் சிலைபார்த்துத் திண்காரி
வெம்பரியூர் செண்டு வெளிபார்த்துக் :- கொம்பிற் 23

கடிக்கமலப் போதுங் கழுநீருஞ் சேரப்
படைக்குமொரு பாடலமும் பார்த்து :- நடுப்புகுந்தோர் 24

தோற்றங் குரங்காக்குந் தொல்லையிடம் பார்த்ததனை
மாற்றுங் கடவுண் மடுப்பார்த்துக் :- கூற்றால் 25

இறவா இடம்பார்த் திறந்தவர் பின்வந்து
பிறவா விடம்பார்த்த பின்னர் :- செறிதரங்கக் 26

கம்பை நதியின் கரையணுகிக் காண்டகைய
பைம்பொழில்சூழ் எம்மருங்கும் பார்த்தருளி :- யெம்பிரான் 27

யாமா தரவோ டிருப்போ மெனச்சொன்ன
தேமா வடிநிழலைச் சேர்ந்தருளிக் :- கோமானை 28

நாமினிது பூசிக்க நல்லவிட மீதென்று
பூமருவு தெய்வப் புனலாடித் :- தாமாகக் 29

கம்பை மணலைக் குவித்துக் கசிந்துள்ளம்
எம்பெரு மாட்டி யினிதிறைஞ்சித் :- தம்பழைய 30

சேடியர்க ணிற்பத் திருச்சூ டகக்கையாற்
றோடவிழ்பூக் கொய்து தொடுத் தணிந்து :- கூட 31

விரவுந் திருவுருவில் வெண்ணீறு நெஞ்சிற்
றிருவஞ் செழுத்துந் திகழ :- வுரிமையுடன் 32

அந்தமில் பூசையின்மே லாளுடைய நாயகிக்குச்
சிந்தை யொருப்படவே செல்லுநாள் :- இந்துநுதல் 33

“தழுவக்குழைந்த பிரான்”

ஆதிக் குலமடந்தை யன்புடைமை முன்புபோற்
சூதத் திருநிழலோன் சோதிப்ப :- மோதிக் 34

கரைபொருது கம்பைநதி கற்பாந்தந் தன்னில்
விரிகடல் போற்றரங்கம் வீசி :- யிருசுடரும் 35

விண்ணும் பொலன்சக்ர வெற்புங் குலகிரியு
மண்ணும் புதையவரப் பண்ணி :- யெண்ணிறந்த 36

வாரிடத்து மெவ்விடத்து மெப்போது முள்ளபிரா
னோரிடத்துத் தாமு மொளித்திருப்பப் :- பாரிடமு 37

மேனை யமர்நாடு மேகோ தகமாக
வானபெரும் பெருக்குக் கஞ்சாதே :- வானவர்கோன் 38

செச்சை நிகருடம்பிற் செம்பாதி யாகியதன்
பச்சை யுடம்பருமை பாராதே :- யிச்சையுடன் 39

றேசுதரும் பழைய திவ்யா கமப்படியே
பூசைதனை யொழிந்து போகாதே :- மாசிலா 40

வன்புடைமை தன்னை யகன்றா லரன்மேனி
யென்படுமோ வென்பதனை எண்ணியோ :- தன்பழைய 41

பெண்மையோ வன்போ பிறப்போ பெருங்காதற்
றிண்மையோ கற்போ தெரிகிலேம் :- உண்மை 42

மறைபடைத்த மேனி வளையான் முலையாற்
குறிபடுத்தி மார்பு குழைய :- நறைபடைத்த 43

தாழ்ந்த புரிகுழலா டானாக வம்மணல்மேல்
வீழ்ந்து தழுவ வெளிப்பட்டோன் :- சூழந்தமரர் 44

மீளா வடிமை விலையா வணங்கொடுக்குந்
தாளான் அரிபிரமர் தம்பிரான் :- ஆளாய 45

“அருளழகன்”

தொல்லைத் திருக்குறிப்புத் தொண்டன்றலைமோதக்
கல்லிற் புறப்பட்ட கையுடையோன் :- வில்லால் 46

வசையின் முடிமேன் மதியாமன் மோத
விசையனோடு பொருத வீரன் :- பசியாற் 47

பதறியொரு சிறுவன் பால்வேண்டப் பாலின்
உததி கொடுத்த வுதாரன் :- துதிபெருகத் 48

தேவர் நெருங்குந் திருப்பங் குனித்திருநாண்
மேவிய வேத விழாவொலியிற் :- றாவிக் 49

குலாவு பலபொற் கொடிவீதி யெங்கும்
உலாவிவரு நாளி லொருநாள் :- நிலாவியசீர் 50

எவ்வா னவரு மிறைஞ்சும் பெரும்பூசை
திவ்யா கமப்படியே செய்ததற்பின் :- மைவானி 51

லாறு தொடவுயர்ந்த வாயிரக்கான் மண்டபத்தி
லேறி யருளி யினிதிருந்து :- சீறியெழக் 52

காணுந் தொறுமொருதன் கண்மூன் றினிலிரண்டு
நாணுந் திருக்காப்பு நாணணிந்து :- சேணுலவு 53

மைவாரி மேகம் வளரும் பிறைபடைத்த
செவ்வான மீது திகழ்ந்ததென :- வெவ்வாயுந் 54

தோடு விரியிதழிச் சூழறனிற் பல்கோடிப்
பாட லளிகள் படிந்ததென :- நீடுமிரு 55

பாலும் வெயிலுதவு பத்மரா கக்கிரிமே
னீல வொளிபோய் நிறைந்ததெனக் :- கோலமுடன் 56

அன்றுதிருச் செங்காட் டணிந்ததிருச் சட்டைதனை
யின்று மணிந்தா ரினிதென்ன :- வொன்றாக 57

வெம்மை யுடையா னிருபா கமுமெங்கள்
அம்மை திருமேனி யானதெனத் :- தம்மின் 58

முயங்கக் கிரிமான் முலைகுழைத்த மெய்யிற்
றயங்கத் திருச்சாந்து சாத்தி :- யுயர்ந்த 59

நனைத்தண் டுழாய்மௌலி நாபியில்வா ழன்ன
மெனைத்து மறியா விடத்தே :- தனக்கடையச் 60

சம்பு குலத்தொருவன் சாத்துகைக்கா மென்றளித்த
செம்பொன் மணிமகுடஞ் சேர்வித்துத் :- தம்போ 61

னிகரற் றவரிவர் நீங்கா விடத்தே
மகரக் குழையங்கு வைத்துத் :- திகழமரர் 62

சாத லொழித்தற்குச் சான்றிருக்கு மவ்விடத்தே
சோதிமணிக் கட்டுவடஞ் சூழ்வித்துப் :- போதப் 63

பதும வளைத்தழும்பு பட்ட விடத்தே
புதுவயிரக் கேயூரம் பூட்டித் :- திதலை 64

பரந்து வளர்கடவுட் பச்சைக் குரும்பை
யிரண்டுகுறி யிட்ட விடத்தே :- குனிப்பின் 65

காணிப் பிறைநிலவோ கங்கா நதிப்புனலோ
வேணிப் புரையிருபால் வீழ்ந்ததெனச் :- சேணிற் 66

பனித்தா ரகையின் பரிசன்ன முத்தின்
றனித்தாழ் வடம்விளங்கச் சாத்திக் :- குனிப்பில் 67

தீதிருந்து மபினயமுந் தெய்வத் துடியு
மிருங்கனலும் வாழு மிடத்தே :- பொருந்தப் 68

பிறந்த விளம்பரிதிப் பேரழகு மட்கச்
சிறந்த கடகஞ் செறித்து :- நுறுங்கப் 69

பிசைந்துபிசைந் துண்ணவொரு பிள்ளையறுத் தாக்க
விசைந்துபசி தோன்று மிடத்தே :- விசும்பின் 70

முதிரு மிருளை முனிபதும ராகக்
கதிருதர பந்தனமுங் கட்டி :- மதுரைப் 71

புரவி திகழிடத்தே பொற்பதும ராகத்
திருவுடை யாடை திருத்தி :- பரதவிதக் 72

குஞ்சிப்பும் நல்லநிலைக் கூத்துந் திகழிடத்தே
செஞ்சித்ர ரத்னச் சிலம்பணிந்து :- துஞ்சிச் 73

செலவுற்ற வானோர் சிரந்தொடுக்கு மாலை
யிலகிக் கிடக்கு மிடத்தே :- குலவு 74

மதுமிக்க கல்லார மாலை யுடனே
யிதழித் திருமாலை யிட்டு :- மதில்பொருத 75

தம்பொற் சிலையைத் தலைக்கொண் டனரென்னச்
செம்பொற் றிருவா சிகைசேர்த்து :- விம்ப 76

விரவி யிடைதா னிலங்குவதே யென்னப்
பரவுமணிக் கண்ணாடி பார்த்துச் :- சுருதியினான் 77

“இசைப்பா விருப்பன்”

மூவாத பேரன்பின் மூவர் முதலிகளுந்
தேவாரஞ் செய்த திருப்பாட்டும் :- பாவனையாற் 78

போதவூர் கண்ணீர் புளகத் துடனணிந்த
வாதவூ ராளிதிரு வாசகமும் :- பாவனையாற் 79

வேட்டென் றெழுதா விருபிறப்போர் கற்கத்தான்
பாட்டுண்ட நாலு பழங்கவியுங் :- கேட்டருளி 80

“சூழவருந்தெய்வத்தொளி”

ஐங்கைப் பவளநிறத் தானைப் பெருமானுஞ்
செங்கைச் சுடர்வடிவேற் சேவகனு :- மெங்கு 81

நிறைபூதஞ் சூழ நிலமெல்லாங் காப்ப
மறைஞாளி யேறிவரு வானும் :- நிறையருளாற் 82

றுண்ணெனத்தே வர்க்குச் சுதைபகுத்த மோகினியாம்
பெண்ணிடத்தில் வந்து பிறந்தோனும் :- பண்ணுமக 83

மங்கும் படிக்கழற்கண் வாய்ந்திலங்குந் தம்முடைய
திங்கணுதல் வேர்விற் செனித்தோனுந் :- துங்கமுடி 84

கொண்ட கடவுட் குளிர்கொன்றைத் தாருமுடித்து
உண்ட பரிகலத்தி லுண்டோனுந் :- தண்டமிழான் 85

மண்புகழப் பாடி மறையூரி லாண்பனையைப்
பெண்பனை யாக்கிய பிள்ளையுந் :- திண்பிடித்துப் 86

பாழி யமணரிடும் பாரச் சிலையுடனே
யாழி தனின்மிதந்த வன்பனுஞ் :- சூழுமிருட் 87

பாதி யிரவிற் பரவைக்குஞ் சங்கிலிக்குந்
தூது நடப்பித்த தோழனுந் :- தீதில் 88

வழுக்கில் பெருந்துறையில் வாழ்வித்த கோலங்
கழுக்குன்றிற் கண்ட கவியும் :- வழுத்துநர்க்குப் 89

போத வினியதொரு பொன்வண்ணத் தந்தாதி
யாதியுலாவோ டமைத் தோனுஞ் :- சோதிமணி 90

மன்றி னருகு மலர்த்துழாய் நாறுமிடங்
கொன்றை கமழ்வித்த கொற்றவனு :- மென்றும் 91

புடைமருவு தன்னிழலிற் போகாத பேயை
யிடைமருதி லிட்ட விறையு :- மடையத் 92

துயர்கடந்த தொண்டத் தொகையதனி லேனைச்
செயல்சிறந்த தொண்டத் திரளுங் :- கயிலைதனிற் 93

றந்தாள் படாமற் றலையால் நடந்துபோ
யந்தாதி யாற்புகழ்ந்த வம்மையு :- மிந்தநிலங் 94

கோட்டி வளைத்தெடுத்துக் கூட்டிக் குலைத்தடுக்கிக்
காட்டவல்ல பூத கணவரு :- மீட்டுநல 95

மெண்ணு மொருநாற்பத் தெண்ணா யிரவரெனும்
புண்ணிய வேடப் புனிதரு :- நண்ணரிய 96

வோரா யிரத்துத் தொளாயிரரென் றூழிமுதற்
பேரா நிமந்தப் பெருமையருஞ் :- சேர 97

வுரிய விதிமுறையோ டுள்ள முருகிப்
பொருவரிய வன்புடனே போதச் :- கரரைத் 98

“வாசலில் நந்தி”

திருவா சலினந்தி செங்கைப் பிரம்பால்
நிரையாக வெங்கு நிறுத்தி :- வருவார் 99

கழற்சே வடிபணிந்து கண்களிப்ப முன்னே
யெழச்சே வியுநீங்க ளென்ன :- முழக்க 100

விருப்பதுவும் வெள்ளிமலை யென்னாமற் செம்பொற்
பொருப்பினும் மேறினார் போல :- விருப்பால் 101

“திருத்தேரில் மேவினார்”

வடித்தசுடர் வேற்சம்பன் வாழ்மல்லி நாதன்
கொடுத்த திருத்தேர்மேற் கொண்டு :- முடித்தநதி 102

யாடும் விசையி லலையெழுந்து தன்மீதில்
நீடும் வகைசுழித்து நின்றதெனக் :- கூட 103

விருகதி ரஞ்ச வெறிக்கு நிலாவின்
ஒருதனி வெண்குடை யோங்க :- விருபாலுங் 104

கங்கை நதியிற் கரைபுரண்ட சீகரம்போன்
மங்கையர்கள் வெண்சா மரையிரட்ட:- வெங்களையும் 105

இட்டாலோ பூணாக வென்றுரக மாடுவபோற்
பட்டால வட்டம் பணிமாற :- விட்ட 106

வெருது மராமரமு மெவ்வேழுஞ் சாயப்
பொருத விடைக்கொடிமுன் போத :- வருவதொரு 107

மேருக் கிரிதொடரும் வெள்ளிக் கிரியென்ன
மூரிவிடை யெம்பிரான் முன் போதப் :- பேரிகை 108

“பல்லியம் முழக்கம்”

சல்லிகை மத்தளி தண்ணுமை பண்ணமை
பல்லிய மெங்கும் பரந்தார்ப்ப :- வல்லபடி 109

வாணன் குடமுழா வாசிப்ப மாமதுர
வீணை யுததி மிகவுயிர்ப்ப :- பேணும் 110

பரிசி றமதுசெவிப் பாண்சேரி பெற்ற
விருவ ரிசைபாடி யேத்தச் :- சுருதியெழு 111

மின்னரம் பேழு மிசை ததும்ப வெம்மருங்குங்
கின்னரர் தங்கள் கிளைபாட :- முன்னரிடும் 112

பேரிகை யோசை பிறங்கமிகத் தாரையுடன்
மூரி வலம்புரி முன்முழங்க :- வாரங் 113

“திருச்சின்னம் முழக்கம்”

குளித்தவதி பாரக் கொங்கைத் தழும்பும்
வளைத்தழும்பும் பெற்றபிரான் வந்தான் :- கிளைத்தசடை 114

யேகாம் பரநாதன் வந்தா னிகல்விடையின்
பாகாம் பழையபரன் வந்தான் :- மாகத் 115

தெழுமிரண்டு பேரொளியு மெப்போது மஞ்சி
வழிவிலங்கு மூருடையான் வந்தான் :-சுழிகொண் 116

டலையும் பகீரதிநின் றார்க்கின்ற சென்னி
மலையன் றிருமருகன் வந்தான் :- கலைதேர் 117

பரிசிலிரு வர்க்கும் பகல்விளக்குங் கண்ணும்
வரிசையுட னளித்தான் வந்தா :- னொருவயிற்றில் 118

வாரா வுடம்புடையான் வந்தா னெனமறுகிற்
சீரார் திருச்சின்னஞ் சேவிப்ப :-வேரிமிகத் 119

“தேவர் தம் ஊர்திமேல் சூழ வந்தல்”

தேங்கு மலரோன் சிறையோதிம மீது
மோங்கு திருமா லுவணத்துந் :- தாங்குபடை 120

வாசவன் வெள்ளைமத வாரண மீது
மீசர்பதி னொருவ ரேறிடத்துந் :- தேசுதரு 121

மாறிருவ ரெவ்வே ழடர்புரவித் தேர்மீதும்
வேறிருவ ரெண்மர் விமானத்துஞ் :- சீறியடுங் 122

கூற்றுக் கடவுள் கொடிய கடாமீதும்
போற்று மளகேசன் புட்பகத்துங் :- காற்றுறவாம் 123

வேகமிகு தழலோன் வெற்றித் தகர்மீதும்
வாகை வருணன் மகரத்து :- ஆகமத்தின் 124

நீதி தெரியு நிருதிநர வாகனத்துங்
காது பனவன் கலைமீதுஞ் :- சோதிதிகழ் 125

சீதமதி முத்தின் றேர்மீது மோரேழு
வேத முனிவர் விமானத்தும் :- போதவுயர் 126

விஞ்சையர் சாரணர் சித்தர் வியன்கருடர்
செஞ்சுடிகை நாகருடன் சேவிப்ப :- மஞ்சுகவித் 127

தாடுங் கொடிக ளருக்கன் பரிதடுக்க
மாட நெடிய மணிமறுகி :- னீடருளாற் 128

“சூழவருந் தெய்வக் குழாங்கள்”

பொன்னான சூடகக்கைப் போதன்ன மும்புனலு
மெந்நாளு மெவ்வுயிர்க்கு மீந்தருளி :- மன்னு 129

மறச்சாலைப் பெண்டி ரருகுவரக் கங்கை
புறக்காவற் பெண்டிருடன் போதச் :- சிறக்கும் 130

வரையர மாதரும் வாரா கரத்திற்
றிருவுடன் வந்த திரளுந் :- திருவுங் 131

கலையை யகலாத கன்னிமட மானு
மலையை யகலா மயிலுங் :- கலைமகளும் 132

பொன்னி னுலகாளும் பூவையரு மாநதிக
ளென்னு மடவா ரெழுவரு :- மன்னமயில் 133

சீறும் விடைகளிறு சேனங் கடாயாளி
யேறு மடவா ரெழுவருங் :- கூறுங் 134

குலநாக மாதர் குழாமும் பணிந்து
பொலமாட வீதி புகுத :- நிலமாதர் 135

“திருவுலாக்காணும் திருமகளிர்”

தாணு நுதல்விழிமேற் றாவடிபோ கத்திரண்ட
பாண மலரோன் படையென்னப் :- பூணரவஞ் 136

சூடுந் தரங்கச் சுரநதியிற் றோய்ந்துவிளை
யாடும் படிதிரண்ட வன்னமெனப் :- பாடலினாற் 137

றம்பெருமை பாடுந் தமிழோன் றனக்களித்த
வெம்பகலிற் சேர்ந்த விளக்கென்ன :- நம்பருறை 138

சூதத் தெழுந்த துணர்ப்பல் லவப்படலங்
கோதத் திரண்ட குயிலென்னத் :- தீதற்ற 139

வெந்தைபெரு மான்கரத்தி னேந்துமிள மான்கண்டு
வந்து திரண்டசில மானென்னச் :- செந்தமிழின் 140

பாட்டுக் குழல்வோன் பசும்பாதி யின்வார்த்தை
கேட்டுத்திரண்ட கிளியென்னக் :- கூட்டகிலார் 141

தாழ்ந்த சடைமுடியோன் றன்னுடம்பைக் காரென்று
வாழ்ந்து திரண்ட மயிலென்னச் :- சூழ்ந்தரன்பால் 142

நன்புதிய தூதுக்கு செல்வேனான் செல்வேன்
என்பனபோன் மென்குழல்வண் டெங்குமெழ :- நின்புயமேல் 143

எங்கள் தழும்பணிந்தா லென்செய்யு மென்பனபோற்
செங்கை வளைகள் சிறந்தார்ப்பச் :- சங்கரன்மேற் 144

றள்ள வரியகுறித் தாமுமிடத் தாயங்
கொள்வனபோற் கொங்கைக் குவடசைய :- வுள்ளமகிழ் 145

செம்பதுமைக் கேள்வன் றிருமல்லி நாதனுயர்
சம்புபதி நல்குந் தடந்தேர்போல் :- கம்பரே 146

யித்தேருங் கண்டாலோ வென்பனபோ லல்குலெனு
மத்தேரின் மேகலைக ளார்ப்பரிப்ப - வித்தெருவிற் 147

சீற்ற விடையோனைச் சேவிக்கப் பெற்றபதம்
போற்றுவபோற் பொன்னூ புரஞ்சிலம்ப :- மேற்ககன 148

கூடம் வெளியடைத்த கோபுரத்துங் குன்றனைய
மாட நெடுமத்த வாரணத்து :- மோடுகதிர் 149

விஞ்சு கொடிதடுக்கு மேனிலா முற்றத்து
மஞ்சுதவழ் கங்கைகொண்டான்மண்டபத்தும் :- வெஞ்சமரிற் 150

றத்துபரி பல்லவன் சம்பு குலப்பெருமான்
வைத்த துலாபார மண்டபத்துஞ் :- சித்ரமணிச் 151

சூளிகையின் மீதுஞ் சுறைநிலா முற்றத்து
மாளிகையின் மீதும் மறுகிடத்தும் :- யாளி 152

செறியுமணித் தெற்றியினுஞ் செய்குன் றிடத்து
நிறைய எவரு நெருங்க :- இறையவனை 153

“திருக்காட்சியும் காண்மகளிர் காதலும்”

வந்து வணங்கி மதிக்கொழுந்துஞ் செஞ்சடையுஞ்
சிந்தைகவர் கண்மலருஞ் செவ்வாயு :- மெந்தைபிரான் 154

தெய்வப் புரிநூலுந் திண்டோளு மார்பகமுஞ்
சைவத் திருவான தாழ்வடமு :- மெய்வழியக் 155

கொண்ட திருநீறுங் குழைதுரந்த செங்கழுநீர்
மண்டு திருக்கொன்றை மாலையு :- மெண்டிசையுந் 156

தாவில் சுருதித் தமருகமுந் தம்முடைய
தேவி யறியுந் திருக்கூத்தும் :- யாவையுந்தம் 157

உள்ளத்தே கொள்ளா வுருக்காப் பெருகின்ப
வெள்ளத்தே வீழா மிகவுயிராத் :- தள்ளியுறை 158

விட்டவாள் போல்விழியீர் மென்சுணங்கின் பொன்முலைமேற்
பட்டவா பாரீர் பசப்பென்பார் :- கட்டழகன் 159

கோதை யகன்மார்பங் குழைவிக்க மாட்டாதால்
ஏது படிலென் இவையென்பார் :- போத 160

நெருக்கி யரிதிட்ட நிரைவளைக ளெல்லா
மிருக்கை யரிது கரத்தென்பார் :- நிருத்தன் 161

பரிக்குந் தழும்பு படுத்தா வளைகள்
இருக்கிலென் போகிலென் என்பார் :- திருக்கண்கள் 162

வையார்நம் மேலென்பார் வைப்பா ரவர்கருணை
மெய்யானவ ளொருத்திமே லென்பார் :- ஐயோ 163

வருள்படைக்க வேண்டி யருமந்த கண்ட
மிருள்படைத்த தேனிங்ங னென்பார்:- இருள்படைத்த 164

தின்றாகில் வானோ ரெனுஞ்சாதி யத்தனையும்
பொன்றாதோ வென்று புகலுவார் :- வென்றிமதன் 165

ஏவானோ மேலென்பார் ஏவினால் இன்னமுந்தான்
போவானோ போய்த்தோ விழியென்பார் - மேவனிலம் 166

செல்லாதோ மீதென்பார் சென்றால் வரவிடுமோ
நல்லார் திருக்காப்பு நாணென்பார் : புல்லத் 167

திருக்கொன்றை மாலைபெறிற் சிந்தை குடியேறி
யிருக்கின்ற மாலொழியு மென்பா :- ரொருத்திகுறி 168

யிட்டதிவர் மார்புபிற ரெய்துவதின் மாலுழன்று
பட்டதமையும் படவென்பார் :- மட்டவிழும் 169

அம்பதுமப் போதி னயன்மா லறியாத
வும்ப ரறியா வொருகிரியைச் :- செம்பவளப் 170

பாதி யுடம்பு பசப்பித்தாள் பைங்களபக்
கோதை முலையாற் குழைவித்தா - ளாதலா 171

லுண்மை தனக்கிந்த வுமையாள் பிறந்ததற்பின்
பெண்மைதனக் கேற்றம் பெரிதென்பார்:- பெண்மைக்கு 172

இறையா ளிவளன்றோ வென்பார்மற் றிங்ஙன்
மறுகி லெதிர்வந்த மாத :- ரறுசமய 173

அண்டருக்குந் தாயா ரறச்சாலை யிப்படிபெற்
றுண்டிருக்கு மூதூ ருடையானே:- கொண்டவிருட் 174

காவி விழியொருத்தி கட்டிக் குறியிட்டு
மாவடியில் வைத்த வயிரமே :- தேவிமுகஞ் 175

செவ்வி பெருகத் திருச்சூ டகக்கையாற்
றவ்வி பிடித்துச் சமைத்தன்ன :- மெவ்வுயிர்க்கு 176

மாரச் சொரிதருநெல் ஆட்டைக் கிருநாழி
சேரப் படியளக்குஞ் சீமானே : மார்புபோற் 177

கண்ணுஞ் சிலர்படைத்த காணியோ காமவேள்
பண்ணுந் துயர்தீரப் பார்த்தருளீர்:- வெண்ணிலவோடு 178

ஈரும் மிளந்தென்றல் ஈராமல் உம்முடைய
வாரம் பசிதணித்தா லாகாதோ :- வாரவுளம் 179

வேவக் கறங்கும் விடைமணியை யும்முடைய
சேவுக் கினிதளித்தாற் றீதாமோ :- மேவியவிக் 180

கொக்கி னிறகுடனே கூவுங் குயிற்சிறகை
யொக்க வணியவுமக் கொண்ணாதோ :- மிக்க 181

வறஞ்செய்யு மூருடையீர் ஆகாது காணு
மறஞ்செயல் என்று மயங்கா :- நிறந்திகழும் 182

விண்ட குவளைக்கும் விள்ளாத தாமரைக்குந்
தண்டரள மும்பொன்னுஞ் சாத்துவா:-ரொண்டொடியீர் 183

பாகம் பிரியாத பச்சைமயில் காணாமல்
ஏகம்பர் பார்த்தா ரெமையென்பார் :- ஆகமதன் 184

காதன் மலர்சொறிந்து கைசலிப்ப விவ்வண்ண
மாதர் பலர்மயங்க மற்றொருத்தி :- பேதை 185

பேதை

திரையுதவு பேரமுதின் சிற்றரும்பு முற்றி
வருமுகைய தானதொரு வல்லி :- சுருதியளி 186

யூத மலரா வொருதா மரைமுகிளங்
காத லுதவாத காமசரம் :- வேதத் 187

துழையா னகலா துறைகின்ற சூதங்
குழையாத தென்றற் கொழுந்து :- பழைதாகக் 188

கம்ப ருறையுங் கடவுளிளஞ் சூதத்தின்
கொம்பி லுறையாக் குயிற்பிள்ளை :- யின்ப 189

வலையா ரமுதத்தின் ஆரம்ப வித்து
தொலையாத காமத்தின் றோற்றம் :- உலகிற் 190

சிறந்தபிரா னல்லாத தேவர்களைப் போல
விறந்து பிறக்குமெயிற்றாள் நிறைந்துமைப்போல் 191

முத்தாரம் பூண முலையெனக்குச் சூட்டுமென்று
கைத்தாயர் முன்னின்று கண்பிசைவாள்:- சுத்த 192

வியல்பு தனையொழிய வேதும் பிறழாக்
கயலை யனையவிரு கண்ணாள் :- புயல்வரினு 193

மாடாத தோகையதன் பிஞ்சம்போற் கூடுவதுங்
கூடாது மான குழலினாள் :- நீடிமிக 194

வோங்கி வளர்தன் னுரியபரி ணாமமெல்லாந்
தாங்கியவித் தன்ன தனத்தினாள் :- நீங்காத 195

வேகம்ப மென்னீ ரிமவான் மகள்தழுவ
வாகங் குழைந்த வரனென்னீர் :- மாகம்பை 196

யாறென்னீ ரம்மை யறச்சாலை யென்னீர்நம்
பேரென்னீ ரென்றுதமைப் பேசுவித்த :- வாறெல்லாம் 197

பாவைக் குரைத்தந்தப் பாவைபக ராததெல்லாம்
பூவைக் கழுது புகலுவாள் :- மேவுபல 198

தீவிற் பிறந்த செழுமணியுந் தம்மூரின்
வாவி பிறந்த மணிமுத்துங் :- காவிவிழி 199

யம்மை முதனா ளரனாரைப் பூசித்த
கம்பை மணலுங் கலந்தெடுத்துக் :- கொம்பனையா 200

ளொண்டொடி மாத ருடனே கரஞ்சிவப்ப
வண்ட லிழைத்து மகிழ்போதிற் :- பண்டொருநாள் 201

தெண்டிரையிற் பெற்ற திருவமுதச் செவ்வாயும்
பண்டுகிராற் கொண்ட பரிகலமு :- மண்டுமெரி 202

தாழுஞ் சினத்துழுவை தான்கொடுத்த வுட்சாத்தும்
வேழங் கொடுத்ததொரு மேற்சாத்துஞ்:- சூழ்பனியின் 203

ஓங்கல் கொடுத்த வொருபா கமுமுடையார்
தாங்கு மணிமறுகு சாருதலு :- மாங்கவளும் 204

வண்ட தனையொழிந்து வந்தணுகிச் செந்துவர்வா
யொண்டொடி மாத ருடனிறைஞ்சி :- யண்டருறை 205

நாகஞ் சிலையாக நண்ணார் புரமெரித்த
ஏகம்பர் தம்பெருமை யெண்ணாதே :- கோகநகச் 206

வுந்திக் கணையோ னொருபாக முஞ்சடையு
மந்தப் புரமென் றறியாதே :- யிந்தப் 207

பெருத்த மணக்கோலப் பிள்ளையுடன் றேர்மேல்
இருத்து மெனைக்கொடுபோ யென்ன:- வொருத்தியிவர் 208

பூணத் தவரிருவர் பொன்முடியுஞ் சேவடியுங்
காணக் கிடையாத கம்பர்காண் :- வாணுதலாய் 209

பாய வுலகம் பதினாலையும் பரந்தொன்
றாய பெருமா னருகிருக்கத் :- தோயுமகிற் 210

பச்சைக் கிரியாற் பவளத் திருமார்பி
லச்சிட்ட வர்க்கொழிந்துண் டாகுமோ :- வச்சமுடன் 211

மீதெடுத்துக் கம்பை மிகுபெருக்குக் கஞ்சாத
மாதவத்தாட் கன்றியிது வாய்க்குமோ :- மூதண்ட 212

மெல்லாம் பெறநெல் லிருநாழியால் வளர்க்க
வல்லாள் தனக்கன்றி வாய்க்குமோ : சொல்லாய் 213

குறைவின் மடமயிலே கூசாதே யாமே
யிறைவரரு கேறி யிருப்போம் :- மறவிதனை 214

யென்ன இளையா ளிருகண்கள் முத்தரும்ப
வன்னையர்தங் கையா லணைத்தாற்றி:- மின்னேபோ 215

தென்று பகர்வதன்முன் ஏகம்பர் தேருடனே
தென்றலந் தேருந் தெரிவித்து :- வென்றி 216

மதன்கை வரிசாபம் வாங்காமல் வாசம்
பொதிந்தகணை பூட்டாமற் போந்தான் :- பெதும்பை 217

பெதும்பை

யிவண்மற் றொருத்தி யெவர்க்குந் தெரியாப்
பவளத் தமுதுதரும் பாவை :- தவளத் 218

திருப்பாற் கடற்பிறந்து செந்தா மரைமேல்
இருப்பார்க்கு நேரே யிளையாள்:-விருப்புடனே 219

ஆர்க்கும் அளிகள் அவிழ்பத மீதென்று
பார்க்குமுகை போலும் பருவத்தாள்:-ஆக்கமுடன் 220

போராக்கு மாமதனன் போதும் பவனிக்குத்
தேராக்க வெண்ணுஞ் செழுந்தென்றல் :- வேரிநறு 221

போது புனைவதற்கும் பூணாரம் பூண்பதற்கும்
ஆதரவு வைக்கு மளவினாள் :- ஆதிமதன் 222

பேறும் மடநாணும் பெண்மைப் பெருமிதமும்
வீறுஞ் சிறிதரும்பு மெய்யினாள் :- சீறியெரி 223

யூட்ட மதின்மூன் றுழிநிகழ்ந்த வண்ணம்போற்
கூட்டி முடிக்குங் குழலினாள் :- வேட்டவர்தம் 224

புந்திகவர் வஞ்சனையும் பொய்யுங்கொலையுமிடம்
வந்துவந்து பார்க்கு மதர்விழியாண் :- மைந்தர் 225

உகமை யழகோடே யுள்ளரும்புங் கஞ்ச
முகையின் முகைபோல் முலையாள் :-இகுளையர்தம் 226

மீளாத காதல் விழைவுரைக்கும் போததனைக்
கேளா தவர்போலக் கேட்டிருப்பாள் :- கேளாய 227

மாதரு மானு மயிலும் பசுங்கிளியும்
ஓதிமஞ் சூழ வுடன்போத :- மாதவிப்பூம் 228

பந்தரிட்ட நீழற் பளிக்குச் சிலாதனத்து
வந்திருப்ப வெற்றி மடமாதர் :- உந்திக் 229

குவளை மலரிருகண் கொங்கைக் குறியிட்ட
பவள மலையினையும் பாடித் :- தவளநகை 230

யன்னை யறஞ்செய் அறச்சா லையும்பாடிக்
கன்னி யினிதாடுங் கழங்கென்னக் :- கன்னிதனக் 231

காழி தருமுத்த மாகாதென் றவ்வூரில்
ஏழுநதி முத்த மினிதெடுத்துச் :- சூழ்தேரிற் 232

றட்டு நிகரல்குற் சங்கிலிபாற் றூதுதமை
விட்டவர்பாற் பெற்ற விழியொன்றும் :- வட்டித்துப் 233

பாத மலர்துதித்த பட்டவா ணன்றனக்குக்
காத லுடனளித்த கையிரண்டும் :- பூதத்து 234

இகலொழிய நின்று மிருந்துங் கிடந்து
முகிலுறையுந் தானங்கண் மூன்று :- நகிலால் 235

இலங்கு வரிவளையா லிவ்விரண் டாய்த்தம்மேல்
நலங்கொள் தழும்பொரு நான்குந் :- துலங்க 236

வுமைக்கமைத்த பொற்கோயி லூழி முதல்நாள்
அமைத்தன கோணங்கள் ஐந்தும் :- அமைத்தோள் 237

இளைக்கு மருங்குல் ருநாழி நெற்கொண்
டளிக்குஞ் சமயங்க ளாறுங் :- குளிப்பார் 238

செறியும் பவக்கடலைச் சிந்தித் திரையால்
எறியும் புனிதநதி யேழும் :- பிறைநுதலாள் 239

அன்பொடுபா டிக்கழங்கை யாடுகின்ற வெல்லைக்கண்
என்பொருபெண் ணான வெழினகரும்:- அன்பனுளம் 240

அன்றொருத்திக் குண்மை யறிவித்துத் தாமகிழ்க்கீழ்ச்
சென்றொளித்து நின்ற திருநகருஞ் :- சென்று 241

முதுககன கோளத்து முற்பட்ட கூத்தின்
பதும மலர்ந்த பதியுங் :- கதிராழிக் 242

காவித் திருநிறத்தோன் கைகுவித்து நின்றெதிரே
சேவித்து நிற்குந் திருப்பதியுந் :- தாவுபரி 243

மல்லற் றொடைத்தொண்டை மான்கடவுந் தேரையொரு
முல்லைக் கொடிதடுத்த மூதூரு :- நெல்விலைக்குச் 244

சற்றளந்த நாட்புகலிச் சைவப் புலவனுக்குக்
கொற்றளந்த மாடக் கொடிநகரும் :- பெற்றதொரு 245

தாயுமிலை யென்னுந் தமது குறையையொரு
தூய கழைதவிர்த்த தொன்னகரும் :- வாய்கலசம் 246

ஆட்டி யினிமை யறிந்தவூ னெச்சிறனை
யூட்டிய வேட னுறைபதியுஞ் :- நாட்டிலுள 247

வெண்ணி லமணரெலா மேறக் கழுவிலொரு
பெண்ணை யியலறிந்த பேரூரும் :- விண்ணவர்தஞ் 248

சாத லுறைநாளுஞ் சாகாத புள்ளிரண்டுந்
தீதகல வாழுந் திருமலையுந் :- தூதுதமை 249

யோட்டுந் திருநாவ லூராற் கிரந்திட்டுப்
பாட்டுண்ட வூரும் படைத்துடையான் :- சூட்டு 250

வெருவும் வரியரவும் வெண்டலையு மாறு
மருவு முடிக்கம்ப வாணன் :- ஒருபுத்தன் 251

செங்கல் லெறிக்குச் சிவலோக மீந்தபிரான்
றுங்க மணிமறுகு தோன்றுதலும் :- பைங்கொடியும் 252

ஆடுங் கழங்குதவிர்த் தாயத் துடன்கனக
மாட நெடுவீதி வந்தணுகிக் :- கூடப் 253

பணிந்து பரவிப் பகுவா யரவ
மணிந்த திருத்தோ ளழகு :- மணங்கமழும் 254

பொன்னான மார்பும் புனையும் புரிநூலு
மன்னான காதல் வரநோக்கி :- மின்னுந் 255

திருந்திழையீ ரிந்தத் திருமேனி தன்னில்
இருந்ததழும் பென்னதழும் பென்றாள் :- புரிந்தவரும் 256

மின்னே கிளியே விளங்கிழையே யன்னமே
யன்னே யிதனை யறியாயோ :- தன்னருளாற் 257

பாராட்டி வையம் பதினாலையும் வளர்க்கும்
பேராட்டி மாதவத்தின் பேறுகாண் :- வாரிதிசூழ் 258

வைய முழுதறிய வாங்குஞ் சிலைமாரன்
எய்யுங் கணைபடைத்த வேற்றங்காண் :- துய்யகுழற் 259

பண்பிறந்த சொல்லாய் பலசொல்லி யேனிந்தப்
பெண்பிறந்தார்க் கெல்லாம் பெருமைகாண்:-மண்பரவி 260

யேத்து மிறையா ளிருகொங்கை யால்வளையாற்
சாத்திய கோலத் தழும்புகாண் :- பார்த்தருளாய் 261

என்னு மளவி லிலங்குமனத் துட்காதல்
பொன்னனைய மெய்யிற் புறம்பொசியக்:-கன்னிவெயில் 262

தீண்ட மலர்வதொரு செந்தா மரைமுகைபோற்
காண்டகைய செவ்விக் கவின்படைத்தாண்:-மீண்டரனுங் 263

கோல மயிலைக் குறிப்பாற் கடைக்கணித்தாற்
போல முறுவலுடன் போயகன்றான் :- மாலைமதன் 264

செங்கை வரிசிலையைச் சேரத் தொடைமடக்கி
யெங்கள் பெருமானோ டேகினான் :- மங்கை 265

மங்கை

புடையோத ஞாலமெலாம் போர்மதனன் வேதக்
கிடையோதி விக்குமொரு கிள்ளை :- விடமும் 266

வளருங் கொடுங்கொலையும் வஞ்சனையும் பொய்யுங்
களவுங் குடிபுகுதுங் கண்ணாள் :- தெளிதேனுஞ் 267

சீல வுததி யமுதுஞ் செழும்பாகும்
பாலு முதவும் பனிமொழியாள் :- மாலுதவு 268

மிக்க திருவழகின் வெள்ளத் தெழுந்தவிரு
மொக்கு ளனைய முலையினாள் :- மைக்குழலிற் 269

பூவின் மிகுபொறையாள் பூணார மென்முலையாள்
நோவ வடியிட்ட நுண்ணிடையாள் :- ஆவிபெற 270

வார்வ முளதாக வாடவர்தன் மேல்வைத்த
பார்வை யறியும் பருவத்தாள் :- சேரச் 271

சுடருற்ற பூவளைக்கைத் தோழியருந் தானு
நெடுமத்த வாரணத்தி னின்று :- விடையோன்பால் 272

அன்னத்தைத் தூதுவிடவங்கையிற் கொண்டனள்போற்
பன்னித் திலநிரைத்த பந்தேந்தி :- யன்னதுதான் 273

பாவை யொருபாகன் பாலணுக மாட்டாமற்
போவதுவு மீள்வதுவும் போற்றோன்ற :- மேவி 274

நெறிந்திருள் கொண்டை நெகிழ்ந்து ததும்ப
நறும்புழு கின்கண் நனைந்து :- செறிந்து 275

சுரும்பி னினங்கள் சுழன்று சுழன்று
நரம்பென வெங்கு நணுங்க :- விரும்பி 276

யிடுங்குழை யஞ்ச வெறிந்திரு கண்கள்
நெடுங்குமி ழின்க ணெருங்க :- வடங்கொள் 277

மனங்கமழ் குங்கும வண்ட லணிந்து
கணங்கணி கொங்கை துளங்க :- வணங்கி 278

மருங்கு தளர்ந்து வருந்த வருந்த
இருங்கலை கொஞ்சி யிரங்க :- நிரம்பி 279

யிலங்கு பதங்க ளிடுந்தொறு நின்று
சிலம்பு சதங்கை சிலம்ப :- நலந்திகழும் 280

வல்லியினி தாட மடவா ரணைந்துமலர்
வில்லி புரிவித்த மெய்த்தவமே :- நல்லமட 281

மானே கலாப மயிலே மலர்பொதியாத்
தேனே திரையளித்த தெய்வமே :- கானேயுங் 282

கோதை யிதழ்வாய்க் கொடியே நமக்கிந்தப்
பாவியிடை செய்த பகையுண்டோ :- மேவியுடன் 283

மன்னுஞ் சிறையன்றின் மன்றிற் பனைமடன்மே
லின்னஞ் சிலநா ளிருந்தாலோ :- முன்னமே 284

வென்றே யிருக்கும் விழியுடனே யுள்ளபகை
யின்றே மதன்முடிக்க வெண்ணமோ:-வென்றிமதன் 285

சேரும் வளைமலராற் றீண்டப் பெறும்வாழ்வில்
ஆரமணிப் பந்துக் கமையாதோ :- பாருலகில் 286

தாவில் தகைமைத் தபோதனர்தங் காலத்தே
யாவி யுடனிருந்தா லாகாதோ :- பாவா 287

யமையும் மையுமெனு மவ்வளவிற் றேர்மே
லுமையொரு பாக முடையோன் :- சமரமுக 288

வீரனுக்கு மெய்யன்பான் மேவுந் திருநீற்றுச்
சேரனுக்குஞ் சோழனுக்குந் தென்னனுக்கும்:-ஊரனுக்கும் 289

ஆரணற்கும் வாசவற்கு மல்லாத தேவருக்கு
நாரணற்கும் மேனோர்க்கும் நாதனார் :- போர்முகத்தி 290

லாமநாட் கொண்டதலை யாட்டுத் தலையாக
மாமனார்க் கீந்த மருகனார் :- தாமாக 291

விங்கெமையாட் கொள்ள வெழுந்தருளப் பெற்றோமென்
றங்குளமின் னார்கண் டகமகிழச் :- செங்கேழ் 292

வயங்கு மணிமாட மாமறுகிற் றோன்ற
வியந்தமணி பந்தாடல் விட்டு :- நயந்தணுகித் 293

திண்டோளு மார்புந் திருநீல கண்டமுங்
கண்டோரை வாழ்விக்குங் கண்மலருங்:-கண்டிறைஞ்சித் 294

தூய பவளந் துவளுற்றா டோழியருந்
தாயரு நிற்கத் தலைப்பட்டாள் :- தீய 295

வெறியு மழுவுடையா ரிம்மாதின் காதல்
சிறிது முணரார்போற் செல்லக் :- குறைவில் 296

மறை புகலும் பூசை மனுவா லயத்தி
லுறைதிரு வேகம்ப முடையீர் :- செறியிருளிற் 297

பந்தணுகுஞ் செங்கைப் பரவைபாற் சங்கிலிபால்
வந்துழலுந் தூது மறந்தீரோ :- நொந்தொசியுஞ் 298

சிற்றிடை புல்லத் திருமார் பகங்குழைந்தீர்
நெற்றி விழியுடையீர் நீரன்றோ :- வொற்றியூர்ப் 299

பெண்ணோ வறிவார்தம் பேரின்று தொட்டுமக்கு
விண்ணோர் பெருமானே வேண்டாவோ:-வண்ணம் 300

அமைந்தாரார் காதலினா லார்தலையிற் பெண்ணைச்
சுமந்தாரார் மற்றுமைபோற் சொல்லீ :- ரமைந்து 301

துகைத்து மதுகரத்தாற் றோடுழுதார் தந்து
நகைத்துமுகம் பார்த்து நடவீர் :- முகத்திலிவை 302

கண்ணன்றோ வெப்படியுங் காதலித்தா டானுமொரு
பெண்ணன்றோ கச்சிப் பெருமானே :- யெண்ணில் 303

இருக்கிலறஞ் சொன்னீ ரெனுமாதை விட்டுத்
திருக்கடைக்கண் வைத்தவர்போற் செல்ல:-வொருக்காலு 304

மேவுண் டறிகிலளென் றெண்ணாதே யேவுண்டால்
ஆவி படுவ தறியாதே :- பாவி 305

விறல்வேள் சிலையம்பு விட்டான்றன் னம்பின்
மறல்வேல் விழியாண் மனத்தே :- பிறைமுடியார் 306

பாதி கருகப் படுபஞ்ச பாணமதிங்
கேது படுத்தா திளையாளைக் :- காதலுக்குச் 307

சங்கம் விழுமென்றுந் தாழ்கலைநில் லாதென்றும்
அங்கம் பசலைநிற மாமென்றுந் :- திங்கணிலா 308

ஈரஞ் சுடுமென்று மேழிசைவேய் தீயென்று
மாரஞ் சுடுமென்று மன்றறிந்தாள் :- சோர்வுற் 309

றடங்கு மறிவினளா யன்னையர்தந் தோண்மேற்
றடங்கண் மயிறளர்ந்து சாய்ந்தாள் :- மடந்தை 310

மடந்தை

இளையார் மனம்வளைய வெய்யுமதன் செங்கோல்
வளையா வகையசையும் வல்லி :- யளகநறை 311

தேங்கு கருமுகிலுஞ் செவ்வாய் முருக்குமொளி
தாங்குபுரு வத்திந்த்ர சாபமு :- மாங்கழையும் 312

வாய்ந்த மொழிக்குயிலு மைக்கட் கருவிளையும்
பூந்தரளஞ் சேர்கழுத்துப் பூங்கமுகு :- ஏய்ந்தநகை 313

முல்லை நகையு முலைக்கோங்குங் கைக்காந்தள்
மல்லல் மலரும் வரிச்சுணங்கா :- மல்லிமல 314

வேங்கையுஞ் சாயல் மயிலும் வியனழகுந்
தாங்கு திருநிறத்த சண்பகமும் :- வாங்குமிடை 315

மின்னும் பதச்சூத மென்குழையுங்கொண்டொன்றாய்
மன்னியகார் வேனிலுடன் வந்ததென:-மின்னுசுதை 316

பக்க நிலவெறிக்கப் பத்மரா கத்துவெயின்
மிக்க வரங்கத்து மேனின்று :- முக்கணனைத் 317

தேவர் நெருங்குந் திருமயா னம்பார்த்துத்
தாவில் திருமேற் றளிபார்த்து :- மேவி 318

யரன்விடா தாளு மனேகதங்கா பார்த்துப்
பரவுங்கா ரைக்காடு பார்த்துப்:-பெரிதிறைஞ்சிக் 319

கங்கைகொண்டான் மண்டபமுங் கண்டு மனமகிழந்து
மங்கைகொண்டான் வாழு மனைபார்த்துத் :-திங்கண் 320

முடித்த முடிக்கு முடிகொடுத்த சம்பன்
படைத்துலா மண்டபமும் பார்த்து:-விடைக்கொடியோன் 321

கச்சா லையும்பார்த்துக் கம்பர்தம் பாடியெனும்
பொற்சா லையும்பார்த்துப் பூவைமொழிப் :- பச்சைநிறச் 322

சைவ முதல்வி தவஞ்செய்யப் பெற்றதொரு
தெய்வவுல காணித் திருக்குளமுந் :- துய்ய 323

வறச்சாலை யும்பார்த் தறுசமயம் வாழும்
புறச்சாலை யும்பார்த்துப் பூவை :- சிறப்புடைய 324

விந்நகர்போ லெந்நகரு மில்லையிமை யோர்பதியு
முன்ன வரிதிதனுக் கொப்பென்ன :- வன்னநடை 325

மானே யிதன்பெருமை வல்லவரார் சொல்லுகைக்குத்
தானே யுவமை தனக்கல்லான் :- மானார்கட் 326

பொற்றொடியாள் கண்ணுதலைப் பூசித் தறஞ்செய்யப்
பெற்ற திதுபோற் பிறிதுண்டோ :- மற்றிவளுக் 327

கந்தமுத லில்லாத வாதியொரு மாவடிக்கீழ்
வந்துவெளிப் பட்டநகர் மற்றுண்டோ :- நந்தா 328

மருக்காவின் மூன்று மணிவிளக்கு மன்னி
யொருக்காலு நீங்கா துறையுந் :- திருக்காமக் 329

கோட்ட மெனிலிங்கே குலவுங் கனகமழை
யீட்ட முகில்பொழிந்த திவ்விடத்தே :- கூட்டியபே 330

ராசையுடன் மால்பத் தவதாரந் தம்மிலும்வந்
தீசனைப் பூசித்த திவ்விடத்தே :- பேசுநல 331

மொன்று புரிந்த தொருகோடி யாகுமிதில்
என்று மொழிகின்ற வெல்லைக்கண் :- மன்றற் 332

றிருக்கொன்றை மாலையளி செவ்விமண முண்டு
தருக்கிய நாதந் ததும்ப :- வெருக்கமலர் 333

பாயுஞ் சடாடவிமேற் பாகீ ரதிமுகங்க
ளாயிரமும் வீசி யலையெடுப்ப :- வோயா (து) 334

அருகிலிரு பாலு மருமறைக ணான்கும்
பரிகலமு மாலையுடன் பாட :- வொருதன் 335

றிருக்கைத் தமருகத்துத் தெய்வச் சுருதி
பெருக்கத் திசைமுகத்திற் பெய்ய :-விருப்பொடரி 336

தேடுந் திருவடியிற் செம்பொற் சிலம்போசை
யூடுங் ககனத் துலாய்நிமிர :- நீடு 337

நடஞ்செய் தருள்காக்கு நாயகரும் வானந்
தொடும்பொன் மணித்தேருந் தோன்ற:-கொடுங்குழையாள் 338

கோதை யசையக் குழலசையக் கோல்வளைக்கை
மாதர் பலருடனே வந்திறைஞ்சிச் :- சோதி 339

மிகக்கருணை யெப்போதும் வீற்றிருந்த செவ்வி
முகத்தழகைக் கண்ணால் முகந்தாள் :- நிகர்ப்பில் 340

தவளத் திருநீறுஞ் சந்தனமுந் தோய்ந்த
பவளத் திருத்தோள்கள் பார்த்தா :- ளிவளும் 341

மலர்மார்பி லாசையெலாம் வைத்தாள்மைக் கண்ணீர்
புலராம னெஞ்சம் புலர்ந்தா :- ளுலகுண்ட 342

திண்பால் விடையீர் திருத்தோ ணலங்கண்ட
பெண்பாவி யாவி பெறுமாறு :- கண்பாரீர் 343

என்றபொழு திற்கச்சி யேகம்ப ரேகுதலு
மன்றன் மலர்சொரிய மாரவேள் :- நின்றயர்ந்த 344

தத்தை மொழிக்குயிலைத் தாய ரெடுத்தணைத்துச்
சித்ரமணி மண்டபத்திற் சேர்வித்து :- முத்தினொரு 345

பந்தரு மிட்டார் பனிநீ ரையுஞ்சொரிந்தார்
செந்தளிரின் பாயலின்மேற் சேர்த்தினார் :- சந்தனமும் 346

பூசினார் கொண்டமயல் போமோவென் றாயிரமும்
பேசினார் தாயார் பெரிதிருந்து :- கூசாதே 347

தண்ணென் கழுநீருஞ் சாத்தினார் பார்த்தயலார்
எண்ண முமக்கொன்று மில்லையோ :- வொண்ணுதலீர் 348

முத்தினொரு பந்தன் முழுநிலா வீசுநிழல்
நித்தருறை தேமா நிழலாமோ :- பித்துளதோ 349

வாசப் பனிநீர் மணலை யவராகப்
பூசித்த வாற்றின் புனலாமோ :- பாசிழைக்குப் 350

பாயல் குளிரி படுத்தாலப் பாய்விடையோன்
கோயிலிள மாவின் கொழுந்தாமோ :- நேயமுள 351

பொற்றொடி நல்லீர் புனைசந் தனச்சேறு
நெற்றி விழியவர்த னீறாமோ :- கற்றறிவி 352

னூற்றா யிரநீர் நொடித்தா லவையிவளுக்
கேற்றார் திருவஞ் செழுத்தாமோ :- மேற்றான் 353

பிணைந்த வணிகழுநீர் பெய்வளைக்குக் கம்ப
ரணிந்த திருக்கொன்றை யாமோ:-வணங்கனையீ 354

ரென்று மொழிய இவையவை யாயினபோல்
நின்றதிவ ளாவி நீங்காம :- லன்றே 355

தெரியவே யாவர்க்குஞ் சிந்தா குலமு
முரையுந் தெளிவுதர லுற்றாள் :- அரிவை 356

அரிவை

கமல மலர்சுமந்தாள் கட்டழகு மேனாள்
அமுதமுடன் வந்தா ளழகுஞ் :- சிமயமிசைக் 357

கூசி மழைதவழுங் கொல்லிக் கிரிபடைத்தாள்
பேச வரியதொரு பேரழகும் :- வீசுமிளந் 358

தென்றலும் வென்றிச் சிலைமாரன் னைங்கணையு
மன்றலுமொன் றான வடிவினாள்:-பொன்றுமொரு 359

காலமும் பர்த்துக் கயிறும் பிடித்தொருவன்
சூலமு மேந்திச் சுழலாமன் :- மால்செய்(து) 360

உலவா நகையா வொசியா வசையா
குலவா வுயிருண்ணுங் கூற்று:-தலைவிக்கைங் 361

கோணம் பெறவகுத்த கோயில்போல் யாவரையுங்
காணுந் தொருமயக்குங் காட்சியாள் :- பேணி 362

மகிழ்வுற்ற வாயமுடன் வண்டரள மாலை
திகழ்சித்ர மண்டபத்திற் சேர்ந்து :- மகர 363

விடந்தோய் விழியங் கெழுதி யவையெல்லாம்
நெடும்போது பார்த்தகலா நிற்ப:-வடைந்தெவரு 364

மின்ன திதுவிதுவென் றெங்களுக்குக் காட்டியரு
ளன்ன நடையா யடைவிலென :- மின்னிடையீர் 365

வெள்ளிமலை நீங்கி விண்ணோரு மண்ணோரு
முள்ளும் பிரானை யுமையாள்போ :- யுள்ளமிகத் 366

தாங்காத பூசைக்குத் தக்கவிட மீதென்று
நீங்காது நின்ற நிலைபாரீர் :- தேங்கமழும் 367

காவி புடைசூழ்ந்த கம்பா நதிப்புனலிற்
பாவை படியும் படிபாரீர் :- கோவையிதழ் 368

ஓசை யளிக ளுலவம்பி காவனத்தில்
வாசமலர் கொய்யும் வகைபாரீர் :- பேசரிய 369

வாதி யமர ரறியா வவராக
மாதுகுவித்த மணல் பாரீர் :- கோதை 370

யணியு மிருளோதி யன்பொடு பூசித்துப்
பணியும் வழிபாடு பாரீர்:- இணையிலிமுன் 371

மேவு புளகமுடன் வெண்ணீறு மெய்க்கணிந்து
தேவி யிருந்த செயல்பாரீர் :- பூவிற் 372

கரந்து மழைபொழியாக் காலத்தே கம்பை
பரந்து வரும்பெருக்கைப் பாரீர் :- விரிந்தபுனல் 373

மாகம் புதைய வரப்பண்ணித் தம்மையொளித்
தேகம்பர் நின்ற விடம்பாரீர் :- தோகை 374

யரும்புனல்கண் டஞ்சியவ ராகமுறச் சென்று
பரிந்து தழுவியது பாரீர் :- புரிந்து 375

மலைக்கு மகடன் வழிபாடு வந்து
பலித்த பெரும்பேறு பாரீர் :- கலப்பொற் 376

றெரிவையுட னிந்தத் தேமா னிழலிற்
பரம னிருந்தவிடம் பாரீர் :- பொருவில் 377

றிருக்கைவளை யான்முலையாற் றிண்டோளு மார்பும்
பரித்த திருத்தழும்பு பாரீர் :- விரித்தசடை 378

யண்ணல் வெளிப்பட் டருள்வரங்கள் பாரீரென்
றெண்ணும் புதுமை யிவையெல்லா:- மொண்ணுதலாள் 379

காட்ட வவருங் களிகூர் பொழுதிலொரு
தேட்ட முளதாய சிந்தையளாய்க் :- கூட்டி 380

கிளியிடம் வேண்டினாள்

இருங்கரத் தேந்தி இருந்த கிளியை
வருந்திவினை யேன்பெற்ற வாழ்வே :- யருந்தவமே 381

தேமென் குதலைதருந் தெள்ளமுதே கம்பரணி
தாமந் தருவாய் தவிருவா :- யாமெல்லாஞ் 382

சூழு நிலவிற் சுதைநிலா முன்றிலின்யான்
வாழும் படிநினைக்க மாட்டாயோ :- வேழந் 383

திகழும் வரிசிலையான் சேவகங்கள் காட்டும்
பகழி நறும் பூவாகப்பண்ணா :- யிகழ்வார்முன் 384

என்னன்னை யேது மிரங்கா ளிரவுபகல்
உன் அன்னை யுன்னை யொறுக்குமோ :- தென்னன் 385

பொருப்பிற் பிறந்து புகையாக வீசு
நெருப்பு குளிர நினையாய் :- நிரைத்தளரத் 386

தாருங் கழுநீருஞ் சந்தனமுந் தோய்ந்தபனி
நீருங் குளிர நினைத்திடாய்:- பேரரவச் 387

சேவின் மணிவருத்தந் தீர்த்தருளா யென்றிருந்து
பூவை யினிதுரைக்கும் போதின்கண் :- டேவருய்ய 388

ஆலமினிய வமுதாக வுண்ட பிரான்
கோல மறுகு குறுகுதலு :- நீலவிழி 389

தூதுவிடக் கிள்ளைக்குச் சொல்லுவதெல் லாமறந்து
காதலுடன் வந்தவனைக் கைதொழுது :- நீதிபுரி 390

ஏகம்பரை வேண்டுகின்றாள்

யிந்தமலைப் பாவை யிடப்பாகங் கொண்டுமக்குத்
தந்தவலப் பாகந் தரலாமோ :- வெந்தைபிரான் 391

கங்கைத் திருமுடிமேற் கண்ணியலால் வெண்ணீறு
தங்குபுயக் கொன்றை தரலாமோ :- சங்கரா 392

வெம்பாக நீரணைந்தா லிவ்வுடம்பிற் பச்சென்ற
செம்பாகம் வந்து சிவக்குமோ :- நம்பாநின் 393

சோதி மணிமுடிமேற் சோமப் பனிக்கொழுந்தை
மோது முதுதரங்க மோதாதோ :- வோதாயென் 394

றாதியுடன் சொல்ல வறம்வளர்க்கு மூருடையா
னேது முரையா னெழுந்தருள :- மாத 395

ரறிந்து மகவை யளித்தவர்க ளாக்கிச்
சொரிந்த கறியமுதுஞ் சோறு :- மருந்தா 396

விருப்பினொடு செங்காட்டில் வேண்டும் பொழுதோ
திருப்பவளச் செவ்வாய் திறப்பீர் :- விருப்பால் 397

வளைந்த திரிபுரத்தை மாள்விக்கும் போதே
குளிர்ந்த திருமுறுவல் கொள்வீர் :- துளங்குநில 398

முத்த வரிசிலையான் மொய்ம்பூங் கணைபுகுந்து
தைத்தபொழு தோதிருக்கண் சாத்துவீர் :- மெய்த்தக் 399

கொடிய விடஞ்சுரரைக் கொல்லும் பொழுதோ
வடைய வருளுடையீ ராவீர் :- மடமாத 400

ருற்றதுயர் கேட்பதற்கொன் றோதாது போகின்றீர்
கற்றதிது வோகள்ளக் கம்பரே :- பெற்றவர்தாள் 401

வீசுமழு வாற்றுணிய வெட்டுமவர்க் கல்லாது
வாசமலர்க் கொன்றை வழங்கீரோ :- பூசித்து 402

வல்லபங்கள் செய்து வழிபடுவார்க் கல்லாது
புல்ல வொருவர் பொருந்தீரோ :- சொல்லீர் 403

ஒருவா சகமென்ன வோராது போலப்
பொருமா ரனைநிறுத்திப் போனார் :- தெரிவை 404

தெரிவை

யொருத்தி தவக்குறும்பை யோட்டியுல கெல்லாந்
திருத்தி மதனடத்துஞ் செங்கோ :- னிருத்தனார் 405

தூதுவிடச் சங்கிலிபாற் றோழனுக்குத் தாமுழன்ற
போதிதுவென் றெண்ணும் புரிகுழலாள்:-ஆதிரையான் 406

வெண்டிரைநீர் வேணிக்கு வேறுமொரு திங்கணமக்
குண்டெனவென் றெண்ணு மொளிநுதலாள்:-துண்டமதி 407

வேணி யுடையோன் மிடற்றி லடக்குதற்கும்
பாணி மிசையசையப் பண்ணுதற்கும் :- பாணந் 408

தொடுப்பதற்கும் பார்ப்பதற்குஞ் சூழ்கழற் காலன்மேல்
விடுப்பதற்கு மெண்னும் விழியாள் :- விடைக்கொடியோ 409

ராய பிறப்பை யணுகா தவருடைய
தூய பிறப்புணர்த்துந் தோளினாள் :- நாயனார் 410

சேமச் சிலையுஞ் சிலையு மிவையென்று
தாமுட் குறிக்குந் தனத்தினாள் :- மாமழுவோன் 411

தென்றல் படக்குழைந்த தேமாவின் கொம்பரிது
வென்று திருவுள்ளத் தினிதெண்ண :- வொன்றாகத் 412

துய்யவளைக் கையுந் துவர்வாயுஞ் சோதிதிகழ்
மெய்யு நிறமும் விளங்குவான் :- மொய்யமரிற் 413

றாவும் விடையுடையான் றன்மேன் மலர்வாளி
யேவுமதனை யெரித்த நாண் :- மேவுற் 414

றெழும்புகையும் வானமு மென்ன வுரோம
வொழுங்கு மிடையு முடையாள் :- தொழுஞ்சுரரைக் 415

காக்கு மிடற்றார்க்குக் கச்சாதல் காப்பாதல்
ஆக்க நினையுமக லல்குலாள் :- நோக்கிதய 416

தூவி மயிலனையார் சூழ வொருகமல
வாவி யருகு மகிழ்ந்திருப்ப :- மேவியயில் 417

உண்கண் விறலி யொருத்தி செழுங்களபக்
கொங்கை யிணைப் படைத்த கூற்றமே:- யெங்குமளி 418

நின்றோ லிடுகின்ற நீள்வனசக் கோயிறனக்
கின்றோ குடிபுகுத விட்டநாள் :- ஒன்றாக 419

விஞ்ச வழகுடையார் வீற்றிருப்ப தல்லாது
கஞ்ச மலரொருத்தி காணியோ :- வஞ்சாதே 420

யிந்த வழகல்லா லேந்துமோ கஞ்சமலர்
தந்த வழகு தனையென்று :- செந்திருமுன் 421

சென்று பணியத் திருவால வாயுமணி
மன்றுமொரு கடவுண் மாநிழலும் :- என்றும் 422

விரும்பி யுறைமழுவாள் வீரன் றசாங்கம்
இருந்து விறலிபா டென்னத் :- தெரிந்தபெரும் 423

பாகுபல வுடையான் பாட்டுக் கொருவடிவான்
றியாக முதவுந் திருமலையு :- மாகம் 424

பெருக்கு மறுகும் பிறைக்கொழுந்தும் பாம்பும்
எருக்கு முடித்தமண லியாறும் :- விருப்பொடர 425

னந்தண் பெருந்துறையி லாளுடையா ரம்மணலில்
வந்து சிறந்த வளநாடுஞ் :- சந்தும் 426

வடங்கொ ளிளமுலையால் வானோ ரறியா
வுடம்பு குறிபெற்ற வூரும் :- தொடர்ந்தவரி 427

நீலம்போற் கண்ணார் நிறமெல்லாந் தன்னுடைய
கோலம்போ லாக்குங் குளிர்தாரும் :- ஆலிலையிற் 428

சேக்கைப் புயலின் றிருநாபி யிற்பனவன்
வாக்கிற் பிறந்த வயப்பரியு :- நோக்கித் 429

திரண்டா யிரங்கயிலை செல்வதெனத் தோன்று
மிரண்டா யிரங்கோட் டிபமும் :- நெருங்கு 430

கடிக்கற் பகவனத்தைக் காசினிமே லாயர்
கொடிக்குக் கொடுத்த கொடியுங் :- துடிக்கண் 431

தழங்கு சதியுடையான் றாண்டவத்துக் கேற்ப
முழங்கு திருக்கை முரசுந் :- தொழும்பா 432

லடுத்து சுரர்பரவ வண்டாண்ட மெல்லாம்
படுத்ததிரு வாணையுமே பாடத் :- துடிக்கவிதழ் 433

நெஞ்சு தளர்ந்து நெறிமயங்கி நீடுயிர்த்து
வஞ்சி யறிவழிந்து மாலாகி :- யஞ்சாதே 434

ஆகம் பிரியா வவளை யறியாமல்
ஏகம்பர் தாமேவந் தெய்திலேம் :- மோகங்கொண் 435

டார மருவி யகன்மார்பி லென்னையவர்
சேர வரவணைக்கத் தேடிலேம் :- பாரடையத் 436

தாவும் விடையுடையோன் றன்மேற் றனத்தழும்பு
மேவுங் கலவி விளைக்கிலேம் :- பூவின்றும் 437

பாகி லணுநலம் பாராட்டி யென்னையவர்
ஆராய புலவி யகற்றிலேம் :- நேயமுடன் 438

போக வுததியினிற் புக்கழுந்தி நெக்குருகி
யாக மிருவருமொன் றாகிலேம் :- ஆகத் 439

தணைத்த தறிய வவரணிந்த நீறென்
பணைத்த முலைமேற் படிலேம் :- மணிக்களத்தா 440

ரின்று மணந்தபடிக் கென்னுடம்பு சான்றாகக்
கொன்றை மணநாறக் கூடிலேம் :- என்றிருந்து 441

வாழும் படிதன் மனத்திற் பிறந்ததெல்லாந்
தோழி யுடனிருந்து சொல்லுங்காற் :- சூழு 442

நெருக்கார மாலை நெடுநிலா வீசுந்
திருக்காவண நிழலிற் சேயுந் :- திருத்தாள்சேர் 443

சீலம் படைத்துத் திருநீ றிடவயிற்றிற்
சூலை கொடுத்தாண்ட தொண்டனும் :- ஓலையுடன் 444

சென்று தடுத்து திருவெண்ணெய் நல்லூரி
லன்று படைத்த வடியானுங் :- கொன்றை நறுந் 445

தேன்பாய் முடிமேற் றிருச்சேய்ஞலூர் தன்னி
லான்பால் சொரிந்தாட்டு மந்தணனுந் :- தேன்போலத் 446

தித்திக்கு மாறு திருவா சகஞ்சொன்ன
பத்திப் பெரும்பெருக்குப் பாலனு :- மெத்திசையுஞ் 447

செல்ல வரிய சிவதத் துவமல்லா
தில்லையென வெழுதி விட்டோனு :- நல்லதவஞ் 448

சூழ்வாருஞ் சூழ்ந்துவரச் சூதத் திருநிழலின்
வாழ்வோன் மணிமறுகில் வந்தணுகத் :- தாழ்குழலு 449

முற்ற நினைந்தவெல்லாம் முன்வந்து கைபுகுதப்
பெற்றவள்போல் வந்து பெரிதிறைஞ்சி:-பொற்றொடியாள் 450

துய்ய புரிநூலும் தோளும் திருமார்பும்
மையல் பெருக வரநோக்கித் :- தையலாள் 451

ஈசன்தன் மார்புநல் எண்தோளும் நீங்காத
வாச நறுங்கொன்றை மாலையே :- பாசறையில் 452

வீசு பனிநீரும் மிக்க அகில் சந்தனமும்
பூச உனக்குப் பொறுக்குமே :- வீசிவரும் 453

போதாரும் தென்றல் புகுதுகைக்கு மாளிகையின்
வாதா யணந்திறந்து வைப்பையே :- நாதம் 454

அளவே அளவேயென்(று) ஆயரிரா ஏதும்
துளைவேய் உனக்குச் சுடாதே :- குளிர 455

அடுத்த செழுங்கரீ ராலே படுத்த
படுக்கை சருகு படாதே - கடக்கவரி (து) 456

ஆயவிரி கங்குல் அடல்மா மதன்சொரியும்
சாயகங்கள் உன்மீது தையாவே :- மாய இரா 457

வெண்ணிலா ஊழி எரித்தாலும் இங்குனக்குத்
தண்ணிலா ஏதுந் தழலாதே :- நண்ணுமயல் 458

அய்ய விடையாரும் அன்னையரும் தாமொறுக்கும்
வெய்ய உரைகேட்க வேண்டாவே :- பையவரும் 459

சேவின் மணியிசைக்கும் தீரா அலைகடற்கும்
கூவும் குயிலுக்கும் கூசாயே :- மேவியநின் 460

முன்றில் உயர்பனையின் மூரி மடற்குடம்பை
அன்றில் அரிக்குரற்கும் அஞ்சாயே :- என்றாலும் 461

வெய்ய பசலை விளைவானேன் மேனியெங்கும்
துய்யமலர்க் கண்ணீர் சொரிவானேன் :- செய்யவங்கை 462

வண்டு விழுவானேன் மற்றெனக்குச் சொல்லென்று
கெண்டை விழிமாது கேட்பளவில் :- திண்டிறல்வேள் 463

காவி ஒழிந்த கணைசொரிந்தான் அவ்வளவில்
தேவர்கள் நாதன் தெருவகன்றான் :- பாவைமேல் 464

ஆர வடமும் அணிந்தார் குளிர்ந்தபனி
நீரும் மடவார் நிரப்பினார் :- பேரிளம்பெண் 465

பேரிளம்பெண்

திண்மை மதனன் செலுத்துகின்ற பேராண்மை
பெண்மை யழகின் பெரும்பெருக்குத் :- தண்மலரோன் 466

நாவுமளவிறந்த ஞானத்தாற் பேரழகாற்
பூவுமரசாளப் போதுவாள் :- தேவர் 467

அரச னிமையாத வாயிரங்கண் சூழத்
தருநிழலில் வாழத் தகுவாள் :- விரவி 468

யினிய கலவி நலமெல்லா மதனன்
மனைவியையுங் கற்பிக்க வல்லாள் :- கனைகடல்சூழ் 469

பாரைப் பெரிதுழைக்கப் பண்ணிப் பழையசுர
ரூரைப் பெரிதுழைக்க வொட்டாமல் :- வாரிட்டுக் 470

கட்டுண் டனமென்று நாணிக் கவிழ்ந்துதலை
யிட்டனபோற் சாய்ந்த விளமுலையால் :- கிட்டரிய 471

சைவப் பெருமை தமிழ் நாடறிவித்த
தெய்வப்புலவன் றிருமுறையுஞ் :- வெவ்வமணர் 472

ஈருமத யானைக் கிடும்போது மஞ்செழுத்தைத்
தேருமரசன் றிருமுறையுஞ் : சேரனுடன் 473

அன்று கயிலைக் கதிமதவெள் ளானையின்மேற்
சென்றபெருமான் றிருமுறையுந் :- தென்றிசையின் 474

மாடப் பெருந்துறையில் வந்த வருட்கோலந்
தேடித் திரிந்தோன் றிருமுறையுங் :- கூடவினி 475

தோதி யவர்கரு வுள்ளக் கருத்தினுள
கோதி னிலைமையெல்லாங் கும்பிட்டுச் :- சோதிதிகழ் 476

அஞ்செழுத்தும் ஏகம்ப ராடுந் திருக்கூத்து
நெஞ்சழுத்தி வைக்கு நிலைமையாள் :- மஞ்சு 477

பொருந்துமணி மாளிகையிற் பூங்கவரி வீசு
விரும்புமணி யாசனத்தின் மீதே :- யிருந்தெவரும் 478

பேச வரிய பிரானார் திருவார்த்தை
யாசையுடன் கேட்புழிவந் தாங்கொருத்தி :- வாசலின்க 479

நின்றா னொருமறையோ நீறணிந்த கோலமுடன்
என்றாள் வரவிடுவை யென்றுரைத்துச் :- சென்றெதிர்கொண் 480

டங்கை குவித்தோ ரரியா சனத்தில்வைத் (து)
எங்கடவம் வந்தவா ரென்றுரைசெய்து :- அங்கமுடன் 481

முன்னை மறைநூல் முதலாய வெக்கலையு
நின்னி லறிவார் நிலத்தில்லை :- மின்னுசடை 482

மீச னிலைமைக்கு மேனையிமை யோர்நிலைக்கும்
வாசி யுரைதெளியும் வாறென்னப் :- பூசுரனும் 483

என்னிலைமை சோதிக்க வென்றோ விதுசொன்னாய்
நன்னுதலே யென்று நகைசெய்யா :- வுன்னி 484

யிதனை யிதனுடனே யெண்ணலா மென்னு
மதனை வினவுதலே யன்றி :- மதியதனில் 485

எண்ணமிலா தார்போல வெல்லா மினிதுணர்ந்த
பெண்ணமுதே கேட்கப் பெறுதியோ :- மண்ணுலகிற் 486

குன்றி தனையொருபொற் குன்ற முடனிகரும்
என்று திரிவாரை யென்செயலாந் :- துன்றிருள்போம் 487

விஞ்சு சுடருடைத்தாய் மின்மினியே வந்துதிக்குஞ்
செஞ்சுடரி னென்பாரைச் செய்யுமதென் :- றஞ்சமென 488

கல்லா னிழலிருந்த கண்ணுதலார் தம்முடனே
எல்லா ரையுந்தேவ ரென்றுரைத்த :- னல்லாயொப்(பு) 489

ஏதும் நிகரா விரும்பினையும் பொன்னினையுந்
தாது வெனவுரைக்குந் தன்மைகாண் :- மீதுலவு 490

நீடு சுடராழி நிலத்தேரி லீரிரண்டு
பாடு சுருதிப் பரிபூட்டித் :- தோடார் 491

நளினத்துப் பாக னடத்த வெரிவாய்த்
துளவப் பகழி தொடுத்துக் :- கொளுவியநாண் 492

மூரி யரவாக மூதண்ட முந்தாங்கு
மேரு வெனுஞ்சயிலம் வில்லாக :- வார்வமுள 493

மூவ ருயிர்வாழ முப்புரமு நீறாக
யாவர் பொருதா ரிமையோரிற் :- றேவர் 494

பழித்த பெருவேள்வி பழாக வாள்விட்
டழித்த விமையவர்வே றார்தான் :- இழைத்து 495

வதைப்பான் வருங்கூற்றை மார்க்கண்டர்க் காக
வுதைத்தா ரிவரல்லா துண்டோ :- வெதிர்த்த 496

கழற்கான் மதன்மாளக் கண்மலரால் வெய்ய
வழற்றானை யேவினா ரார்தான் :- நிழற்பொற் 497

கலையா னிடந்திட்ட கண்ணுக்கோ ராழி
விலையாக நல்கினார் வேறார் :- நிலையாகத் 498

துன்னு மொருசிலந்தி சோணாடுங் காவிரியு
மன்னி யரசாள வைத்தவரார் :- பன்னெடுநாள் 499

தேடி யிருவர் திரியத் தெரியாமல்
நீடு சுடர்வடிவாய் நின்றவரார் :- ஆடலென 500

வுங்காரஞ் செய்தே யுலகுண்ட மாலயனைச்
சங்காரஞ் செய்துபின்னுந் தந்தவரார் :- பங்கயன்மால் 501

வீந்த சுடலை விபூதி தரித்திருவர்
ஆர்ந்ததலை மாலை யணிந்தவரார் :- மாய்ந்திடவே 502

நாரா யணருடலு நாலுமுக னாருடலுங்
கூராய சூலமிசைக் கொண்டவரார் :- சேர 503

வெரிந்த பிறையெயிற்றி னீரைந்து வாயும்
பரந்து செழுங்குருதி பாய :- நெரிந்தொருவன் 504

மான்று கிடக்க மலையான் மகளுடனே
யூன்று விரலொன் றுடையவரார் :- தோன்றியடல் 505

ஓத விடமுன் டுபயநிறத் தாமரைமேற்
கோதையர்க்குத் தாலி கொடுத்தவரார் :- மாதவனைக் 506

கூடி யயனைக் கொடுத்தவரார் மோகினிபால்
நாடுமெழிற் சாத்தனைமு னல்கினரார் :- பாடார்ந்த 507

புத்தேளி ரென்பைப் புனைந்தவரா ரல்லினுமை
கைத்தாளங் கொட்டநடங் காண்பவரார் :- மத்தமுறும் 508

ஆதிநெடு மாலுதிர மத்தனையுங் கைக்கலத்திற்
பாதிதனி லேநிறையப் பண்ணினரார் :- வேதமுடன் 509

றுண்ணெனவே யாழிபுகுஞ் சோமுகனைச் செற்றிடுமீன்
கண்ணை யுகிறாற் களைந்தவரார் :- கண்ணனார் 510

ராமைவடி வந்தனிலு மாதிவரா கந்தனிலு
மாமுதுகோட் டைக்கரத்தால் வாங்கினரார்:- தூமறையும் 511

பேசரிய சிம்புளாய்ப் பேரா டகனையடுங்
கேசரியை வள்ளுகிறால் கீண்டவரார் : கூசா(து) 512

தடருஞ் சலந்தரனை யன்றாழி சூட்டி
யுடலம் பிளந்தவர்வே றுண்டோ :- படிவிண் 513

முழுதளந்த மாயன் முதுகெலும்பைச் செந்நீ
ரொழுகவே வாங்கினர்வே றுண்டோ:- பழுதென் 514

தடமலரோ னுச்சித் தலையை யுகிரால்
உடனே குறைத்தவர்வே றுண்டோ :- நெடுவிசும்பு 515

முற்றும் புதைத்தலையான் மோதுஞ் சுரநதியைச்
சுற்றுஞ் சடையிற் சுவறுவித்து :- மற்றும் 516

பகீரதனின் றூழிநாட் பாதமலர் போற்ற
மகீதலத்தே போதுவித்தார் மற்றார் :- புகழைச் 517

செலுத்தச் சிறுத்தொண்டர் தேவியறுத் தாக்கிக்
கலத்திற் படைத்த கறியைத் :- தலைக்கிட்ட 518

சுட்டியு மாலைச் சுரிகுஞ் சியுமுத்துங்
கட்டியை நல்குங் கனிவாயு :- மிட்டதொரு 519

வாளியுங் காது மருங்கும் மணிவடமுந்
தாளிணையஞ் செம்பொற் சதங்கையுமாய் :- மீளப் 520

பிறப்பித் தவர்தம் பெரும்பிறப்பை யெல்லா
மறுப்பிக்க வல்லவர்தா மற்றார் :- நறைக்கொன்றை 521

யாதி தனையொழிய வாறாறு தத்துவத்தின்
மீது மகிழ்ந்திருக்கும் விண்ணவரார் :- மாதிற் 522

பொருந்தி விடையாகப் பூந்துழாய் மாலை
விரும்பு நடத்தினார் வேறார் :- அரன்பெருமை 523

யின்னம் பலகோடி யில்லையோ யாமிருந்து
சொன்ன பொழுதே தொலையுமோ :- வுன்னரிய 524

மூவா முதலா முதல்வனையு மூவுலகிற்
சாவார் பிறப்பார்கள் தங்களையுந் :- தேவாக 525

வொக்க நினைவாருக் கல்லவோ வோரேழு
மிக்க நரகம் விதித்ததுகாண் :- மைக்கண் 526

மருவார் குழலியென மற்றவளு மந்தப்
பெருவாழ் வுடைய பிரானைப் :- பரவியவர் 527

தெய்வ வெழுத்தைந்து மோதித் திருநீறு
மெய்யி லணிய விதியற்று :- மையறரும் 528

எட்டெழுத்தை யோதி யிடுவார்மண் ணெப்பொழுதுங்
கட்டுரைக்க வென்னக் கவுதமனா :- ரிட்டபெருஞ் 529

சாபத் தியல்பு தருமா மறையோர்செய்
பாபக் கலிகாலப் பண்புகாண் :- கோபவிதழ் 530

மின்னே யெனச்சிறந்தும் வேதியரா கிப்பிறந்தும்
என்னே பெருமை யிருந்தவா :- முன்னை 531

மறையினெழுத் தைந்தும் வாயார வோதி
நிறைய வணிந்துதிரு நீறும் :- பிறவிதனை 532

வாட்ட வறியாமல் வாளாப் பிறவிதனை
யீட்டுவதே பாவ மெனவுரைத்து :- வேட்டவெலா 533

மொண்டொடியும் வேதியனுக் குள்ள மகிழ்ந்தளித்து
வண்டணையும் பூவணைமேல் வந்திருப்ப :- பண்டுவிட 534

முண்ட பிரான் பாகத்தொருத்தி முலைத்தழும்பு
கொண்ட பிரானாடக் குழுவெல்லாந் :- தண்டகமா 535

நன்னாட்டுத் தேவர்க ணாயகனார் சோணாட்டின்
முன்னாட்டு மன்றின் முதலியார் :- தென்னாட்டிற் 536

சூடு மபிடேகச் சொக்கனார் துங்கமணி
மாட நெடுவீதி வந்தணுக :- வாடகப்பூஞ் 537

சோதிச் சிலம்புக்குஞ் சூழ்பா டகத்துக்கும்
பாதத் தழகைப் பகிராதே :- மோதிளநீர் 538

ஆன முலையழகை யாரவிள வண்டலுக்கும்
நானநறுந் தொய்யலுக்கு நல்காதே :- வானநிலா 539

ஆர மணித்தோ ளழகைக் கரும்புக்கும்
ஈரமிலா வல்லிக்கு மீயாதே :- தாரைப் 540

பலவுநிரைத் தன்னதொடைப் பாளைக் களகம்
குலவு மழகைக் கொடாதே :- கலவிநலம் 541

கொண்டதிரு மார்புங் குளிர்ந்த திருச்சாந்தும்
வண்டணியுங் கொன்றை மலர்த்தாரும்:- தொண்டருள 542

அந்தா மரைமலரை யானந்தத் தாண்டவஞ்செய்
செந்தா மரையுந் திருச்சிலம்பும் :- சிந்தை 543

மகிழ மகிழ வணங்கிவளை யெல்லாம்
நெகிழ நெகிழவெதிர் நின்று :- சகமேற் 544

பிறவாம லெண்ணிறந்த பேரண்டம் மாய்ந்தும்
இறவாத மேனி யிறைவா :- உறவாய்ச் 545

சிரித்து முகம் பார்த்துத் திருக்கொன்றை மாலை
தரித்ததிருத் தோளழகைத் தாரீர் :- ஒருத்திகுறி 546

ஆக மிசையில்லை யாமாகி லிப்பொழுதே
ஏக வுமைவிட் டிருப்பேனா :- ஆகிலுநான் 547

கட்டி யிறுகக் கலந்துருகி ஒன்றாகி
இட்ட குறியழித்தால் யார்தவிப்பார் :- பட்டதுபண்டு 548

ஆவல்கெடப் புல்லி அகலாமல் யான்வளைத்தால்
ஏவரெனைத் தள்ளியுமை ஏகுவிப்பார் :- மேவியெனைப் 549

புல்லி ஒருக்காலும் போகா வகைபிணித்து
வல்ல படிகாண மாட்டேனோ :- நல்லமட 550

நாண்கொண்ட தாருவன நங்கையரைப் போலமனம்
வீண்கொண்டு போக விடுவேனோ :- மாண்கொண்டு 551

பூத்ததிரு நீறும் புயமும் திருமார்பும்
ஏத்து மவர்க்கருளீர் என்னென்று :- வாய்த்தசொலால் 552

ஆவதெல்லாம் பார்த்தால் அவளும் தழுவுகைக்கங்(கு)
ஆவதெல்லாம் பார்த்தால் லவைவருமோ :- ஆவி 553

உருகும் வகைகாதத் துண்டாக நோக்கி
விரவுநகை கொண்டேகி விட்டார் :- தரளம் 554

இடையும் நகையார் வரெழுவர் ரிங்ஙன்
கொடிய பெருங்காதல் கொள்ள :- முடிமேல் 555

நிலாவுடையான் தேமா நிழலுடையான் சேரன்
உலாவுடையான் போந்தா னுலா. 556

முற்றும்.




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247