பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய தேவை உலா தேவை உலா (தேவையுலா) என்னும் நூல் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய நூல். 18 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தேவை என்பது ஊரின் பெயர். இது இராமேசுவரத்தைக் குறிக்கும். உலா என்னும் சிற்றிலக்கிய வகை நூல்களில் ஒன்று. காப்பு ஆதியுலாக் கொண்ட வமலனிரா மேசன்மேற் சோதியுலாந் தேவையுலாச் சொல்லவே-காதலாம் தந்தத்தொந் தித்தந்தித் தாவென்றா டுஞ்சிவன்சேய் தந்தத்தொந் தித்தந்தித் தாள். நூல் நீர்கொண்ட மேக நிறங்கொண்ட மால்கமலப் போர்கொண்ட கண்மலராற் பூசித்தும்-சீர்கொண் 1 டுப மன் னியுவி னுபதேசம் பெற்றுஞ் செபமன் னியபூசை செய்தும்-இபமென்ன 2 வந்து பிறந்த மதலையைச் சாம்பனென இந்துகுலத் தொன்றுபெய ரிட்டழைத்தும்-வெந்துயரை 3 மேன்மாற்றும் வில்வோத கேச்சுர லிங்கத்தை ஆன்மார்த்த பூசையா வர்ச்சித்தும்-நான்மறையின் 4 வேர்பெற்ற வீதி விடங்கரைப் பாற்கடலின் மார்பிற் சுமந்து வணங்கியும்- நேர்பெற்ற 5 தொண்டு புரியுந் தொழும்பெல்லா நாணாளுங் கண்டு புரியுங் கருணையால்-அண்டருல 6 கின்னு நடுங்கு மிராவணனைக் கொன்றபழி தன்னை யகற்ற றலைக்கீடா-என்னையோர் 7 பல்லா யிரவர் படைத்த மலமாதி யெல்லா விருளு மினிதகற்றத்- தொல்லைநாட் 8
24 தீர்த்தங்கள் காலவரையடைந்துங் காலவரையடையாச் சீலமுடையசக்ர தீர்த்தமும்-கோலவரைப் 9 பேதையொரு பாகன்போற் பேயுட னேயாடும் வேதாள தீர்த்தமெனு மென்புனலும்-பூதலத்து 10 வாவுந் திடமதிக்கு வந்த மறுத்துடைத்த பாவ விநாசப் பசுந்தடமும்-ஆவலாற் 11 சீதைதரும் பட்டத்தாற் றேவேந் திரப்பட்டங் கோதகன்ற தாஞ்சீதா குண்டமும்-நீதிபோய்த் 12 தேயமிழந் தோனிழந்த தேர் பரியெல் லாங்கவந்த வாயி லுதிப்பித்த மங்கலமும்-நேயத்தால் 13 ஏந்திய நல்லோரை யேகாந்த ராமன்பாற் சேர்த்து விடுமமுத தீர்த்தமும்-பூத்தமலர் 14 வீட்டிலுறை வேதாவை மிக்கமக வானாகக் கூட்டி யருள்பிரம குண்டமும்-வாட்டமுறு 15 நொய்யமனத் தன்மசக னூறுமக வானாகச் செய்யு மனுமகுண்ட தீர்த்தமும்-ஐயமற 16 மானத வாவிவடி வாய்த்தெய்வ யானைதனை யீனு மகத்தியனா ரேல்வையும்-மேனாளில் 17 மெய்கழுவ வந்த விசயன் றமையனுக்குப் பொய்கழுவி ராமர்திருப் பொய்கையும்-தெய்வதங்கள் 18 வாழு மொருதேவை வந்து பலதேவர் தாழு மிலக்குமணர் தண்புனலும்-சூழுலகிற் 19 காந்திவருங் கூட்டைக் கழுவச் சுகமழுக்குத் தீர்த்து விடுசடா தீர்த்தமுஞ்-சாந்தமலர் 20 கூற்றன் மகனைக் குபேரன் மகனாகத் தேற்று மிலக்குமி தீர்த்தமும்-நாற்றிசையும் 21 போய்மூளைக்குஞ் சீதைபழி போக்குதற்காத் தண்ணீரிற் றீமுளைக்கு மக்கினி தீர்த்தமும்-பூமியிலே 22 தங்குமறை யான்றாளுந் தந்துவிசும் பின்மறையான் செங்கையு நல்குசக்ர தீர்த்தமும்-பங்கயத்தோன் 23 மாலை முடியறுக்க வந்த பிரமகத்திக் காலை யறுத்தசிவ கங்கையும்-வேலையெனப் 24 பொங்குநீர்க் குள்ளே புழுங்கினோன் வெம்மையொரு சங்கநீர் தீர்த்தசங்க தீர்த்தமும்-பங்கொருவன் 25 ஒப்பரிய வையத்தி லோடிவந்து முந்நீரைச் செப்பமுற நீந்தியமுத் தீர்த்தமும்-இப்புவியின் 26 மாமிக்காய் மாமன்போய் மாமனைக் கொன்றபழி சேமித் திடாக்கோடி தீர்த்தமும்-காமத்தால் 27 ஓசைநீர் தோய்ந்தோற் குருப்பசியின் வேதனைகள் மோசனமாஞ் சாத்யா முதநீரும்-பேசொருவன் 28 வெண்மை யிரைக்கழுவ மிக்க கருமயிராந் திண்மை பெறுஞ்சருவ தீர்த்தமும்- வண்மையினாற் 29 றானே யரியையுஞ் சம்புவையும் விண்ணவர்தங் கோனாகச் செயததனுக் கோடியும்-மாநிலத்தின் 30 மேலான கத்துருவின் வீழ்சலதோ டந்தணிக்கப் பாலாவி யாகியபா லோடையும் - மேலான 31 நாணுருவா மம்புருவ நங்கை சிலையுருவின் கோண லொழித்தகவி குண்டமும் - காண 32 அரிதலை தன்னை யயனுடலிற் சேர்க்குஞ் சரசுவதி காயத்ரி தாமும் - பிரச 33 மொழுகுஞ் சுளைகளா வோங்குபுகழ்த் தேவை முழுது மொருபழமா முன்னோர் - தொழுதிறைஞ்சுஞ் 34 சேதுப் பலாமரமாச் சேதுப் பலாமரத்தின் மீதிற் பழுத்த வியன்கனியின் - கோதற்ற 35 வான்பே ரமுதென்றால் வாய்கசக்கத் தித்திக்குந் தேன்போ னிறைந்த சிவக்கொழுந்து - மான்போர்வாள் 36 மச்சமயில் போற்கண் மலைவளருங் காதலியாம் பச்சைமயில் வாழ்செம் பவளமலை - நிச்சயமாய்க் 37 காவையு மிந்த்ர புரத்தையுங் கானனமுந் தேவையு மாகத் திருத்தினோன் - மேவுந் 38 திருக்கந்த மாதனத்திற் சென்றேறு நாடொட் டிருக்கந்த மாதனமா வேறான் - வெருக்கொள்ளு 39 முங்கார கால வயிரவனா மோங்கார சங்கார காலனையுந் தாபித்தோன் - பொங்குபெயர்க் 40 காவலுறுஞ் சேதுவந்த மாகாளி யம்மையருட் காவல் புரியுங் கடிநகரான் - தேவர்கோன் 41 வேதனைசெய் கால்விலங்கை விட்டோட்டு வோன்சேது மாதவன் கால்விலங்கை மாற்றாதான் - மோதி 42 எறிகடலைத் தாண்ட வெழுந்தவனு மானை மறிகடலை யென்றெதிரே வைத்தோன் - உறுபுலியாற் 43 கோலு கலிங்கமன்றிக் கொட்டுணையும் பட்டுடான் வாலுக லிங்க வடிவினான் - மேலா 44 மவனசை யாம லணுவசை யாமை பவனனு மாருதியும் பார்த்தோன் - அவனையுமை 45 தானாளத் தான்வந் தெமையாள நாமெல்லாம் வானோரை யாளவந்த வானோரும் - ஏனோரைப் 46 பூதலமீ தாளப் புரியுங் கருணையான் பாதலமே யாபரணப் பையானோன் - வேதனார் 47 சென்னி தனக்குந் திருக்கை மலர்வீடும் அன்னமு நல்கு மருளாளன் - சென்னி 48 மதியார்க்குந் தாள்பணியும் மார்க்கண்டே யர்க்கு முதயாத் தமன மொழித்தோன் - கதிரவற்கும் 49 சண்டைப் படுமிருட்குந் தக்கன் செயுமோம குண்டத்தின் முன்னுறவு கூட்டினோன் - புண்டரிகக் 50 கண்ணிலா வந்தகற்குங் காட்டினோன் - கண்ணின் 51 கடைக்கு விடயமன்றிக் கார்முதலை யென்று விடைக்கு விடைகொடுத்த வேந்தன் - இடைக்குலத்து 52 பூவையர் தாள்பணியப் போகாமல் விண்ணவர்க்குச் சேவை கொடுத்தருளச் செல்கொடியான் - றாவிலா 53 மாரூப வில்வேண் மலர்தூவக் கண்பார்த்துச் சாரூபந் தந்தருளுந் தம்பிரான் - வீரப் 54 புலிபோல வாட்டைப் புசிக்குமரா வுக்குஞ் சலியா நடம்புரிந்த தாணு - வலியாரை 55 மோது மிருமழுவன் முக்கால னாற்கண்ணன் வேதமைந்த னாறுதலை மேவினோன் - காத 56 லெழுசமைய னெட்டுலகு மொன்பது திக்கும் பழுதகலின் பத்து நிதியும் - தொழவருள்வோன் 57 தன்புய வெற்பிடத்துந் தாட்டா மரையிடத்து மென்பணி கொள்ளு மிராமேசன் - அன்பர் 58 திகைத்த வினையுமயன் சென்னியுஞ்சே திக்கு நகத்தன் வரராம நாதன் - சகற்பதியைப் 59 பூசித் திருநாளு நம்மையென்று போதித்தோன் மாசித் திருநாள் வருநாளிற் - பாசத்தாற் 60 பொற்பொடி மார்பிற் பொருந்தும் விடைக்கொடியா நற்கொடி யேறு நலங்கண்டு - சொற்கொடிபோல் 61 வாழும் பருவத வர்த்தினியுந் தானுமுல கேழும் பரவ வெழுந்தருளி - ஆழியருள் 62 காபாலிக் கென்றுகட்டு வித்த ரகுநாத பூபாலன் மண்டபத்திற் போந்திருந்து - மாபாரச் 63 செஞ்சடை யன்றித் திருப்புயஞ்சே ராளென்னு நஞ்சடை வார்த்தைமிக நாணடைய - மஞ்சுதவழ்ந் 64 தேறுகுழற் கங்கையா ளெந்தைபுயஞ் சேர்வதுபோற் கூறு மபிடேகங் கொண்டருளி - வீறு 65 புரியாடை யோரெட்டும் புல்லாடை யொன்றுங் கரியாடை யொன்றுங் களைந்து - துரைராசன் 66 தென்னன் விசய ரகுநாத சேதுபதி கன்ன னருள்பொற் கலைபுனைந்து - பின்னை 67 இறைப்பொழுதுங் கங்கைதனை யீசைகா ணாமன் மறைப்பதெனப் பொன்மகுடம் வைத்துக் - கறைக்கண்டன் 68 காதி லிருவரிசை காத்திருந்து கேட்பனபோற் கோதி லரவக் குழைசாத்திச் - சாதலற 69 அண்டர்க்கா வுண்டநஞ்சி லாரமுத மூறுதல்போற் கண்டத்தின் முத்துவடங் கட்டுறீஇச் - சண்டன்போய் 70 எட்டித் தொடுமுன் னிறுகச் சிவக்கொழுந்தைக் கட்டிப் பிடித்தோன் கரம்போல - வட்டத் 71 தினமணிக்கே காந்திதருஞ் செம்மல் புயத்தி லினமணிக் கேயூர மிட்டுக் - கனல்விழியைத் 72 தோண்டும் விரலைத் தொழவந்த சூரியன்போற் காண்டகுமா ணிக்கக் கடகமிட்டு - வேண்டிவளர் 73 மெய்யாண் முலைத்தழும்பை வேணியாள் காணாமற் கையாள் பதக்கங் கவினுவித்துப் - பொய்யுலகில் 74 தாயுதர பந்தனத்தைத் தள்ளுந் தனிமுதலுக் காயுதர பந்தனமு மாங்கமைத்துத் - தேயம் 75 பரித்தாளும் வாணன் பலசதங்கை யிட்ட திருத்தாளி னூபுரமுஞ் சேர்த்தித் - தரித்த 76 திருமா லொருபாலுந் தேவியொரு பாலும் இருபாலுங் கைக்கொண்ட தென்னத் - திருமேனி 77 ஆகாய மென்ன வகிலாண்ட மாந்தருவிற் சேகாய வண்ணந் தெரிப்பதெனப் - பாகாய 78 சானகி செங்கைத் தளிரும் பொறாதுதிரு மேனி நிறங்கன்றி விட்டதெனக் - கானகத்தின் 79 மண்டிப் பொருவிசயன் மன்னைப் பிடிபிடிக்கக் கண்டத்தி னஞ்சு கலந்ததெனக் - கொண்டலார் 80 தெள்ளுஞ் சிவத்தியானஞ் செய்போ திரண்டுருவு முள்ளும் புறமு மொளிர்வதெனக் - கிள்ளைவளர் 81 கையிற் கரும்பணிவாள் காத லெனுநீலப் பையுட் பொதிந்த பவளமென - ஐயமாத் 82 தூய சிவஞானந் தோன்றா தெவரெவர்க்கு மாயை நிழலின் மறைந்ததென - நேய 83 மருக்கூந்தன் மங்கைநிறம் வாஞ்சித்தா ரென்னத் திருச்சாந் திலேபனமுஞ் செய்து - விரைச்சாந்தாற் 84 சந்திரனில் வாழுந் தடந்தா மரைக்கண்ணன் வந்தெதிர் நிற்கும் வடிவென்ன - முந்தியே 85 விம்பப் பிரதிபிம்ப வேதாந்த நீதியெனப் பைம்பொனிலைக் கண்ணாடி பார்த்தருளி - வெம்போரில் 86 வானிற் பறக்கு மதின்மூன் றையுமெய்ய மேனிற்கும் பொன்மேரு வில்லென்ன - வானத்து 87 முந்திய விந்திரவின் மூன்றி லுமைநிறமும் எந்தைநிற முங்கண் டிரண்டொளிக்க - நிந்தையிலா 88 மற்றொருபொன் வில்லை வளைத்துத் தரித்ததெனப் பொற்றிரு வாசி பொலிந்தோங்கக் - குற்றமறு 89 சீரா தனமான சிங்கா தனத்திலிருந் தாரா தனைகொண் டருளியபின் - யாரும் 90 மடங்கலெனு நந்தியான் மாயோ னடக்கு நெடுங்கடல் போலடங்கி நிற்கச் - சடங்கஞ்சேர் 91 நான்மறையு முத்தமிழு கற்பே ரிரண்டுடையோ னூன்முறையு முன்னே நுவன்றதற்பின் - மேன்முறையே 92 வாட்டிவிடுஞ் சென்மம் வரும்வழியைத் தாளிட்டுப் பூட்டிவிடுஞ் சேதுப் புராணமுங் - கேட்டருளி 93 மெய்ந்நூற் றுறையின் விதிவழியே பூசிக்கும் ஐந்நூற்றுப் பன்னிருவ ராரியரும் - இந்திலத்திற் 94 றேற்றுமலை யத்தனையுஞ் சேதுபந்த மீதுகுடி யேற்றுலக நாதமுனி யென்போனுங் - கூற்றதிர 95 ஆர்க்குங் கடறூர்த் தழிவி றிருநகரஞ் சேர்க்கு மிராவாடு தேசிகனும் - நீர்க்கடலில் 96 ஆராமங் கோயில்குள மற்புதமாக் கற்பித்த மாராம நாத வரமுனியும் - சீராமர் 97 மெய்யம் பலமாக வீற்றிருப்பார்க் கேற்றபணி செய்யம் பலவாண தேசிகனும் -ஐயன் 98 சிவராச தானியுடன் தேவையையொப் பாக்குந் தவராம நாதமுனி தானும் - புவனேசற் 99 காதவன்வாழ் கோபுரங்க ளட்டபந்த னாதிகள்செய் மாதவனாம் வேதவன மாமுனியும் - சீதைபுணர் 100 டேகஞ் சொரிந்து தினம்பூசை - ஆகத்தின் 101 மைவார் விழியும் வனமுலையும் பெற்றோர்க்குத் திவ்யா கமப்படியே செய்விக்கும் - சைவ 102 சிகாமணி யான சிதம்பர நாத மகாமுனியு மாமெழுவர் வந்து - நகாதிகளைக் 103 கண்ணன் முதலோர் கனசேது வைச்சேரப் பண்ணுதல்போற் செய்யும் பணிவிடையும் - மண்ணுலகங் 104 காத்தருளுஞ் சேதுபதி கட்டளையைச் சட்டமிட வாய்த்தசொக்க நாத வரமுனிவன் - கீர்த்தியுடன் 105 நம்பர் திருப்பணிக ணாடோறுஞ் செய்தனவுஞ் சம்பு திருச்செவியிற் சாத்தியபின் - அம்பொற் 106 றிருவாழி தாங்கலாற் சேரும் வடத்தாற் பரிவான பீதாம் பரத்தாற் - றிருவென்னு 107 மாது பதியுமவன் மாமகுட மும்பொலுஞ் சேதுபதி வைத்ததிருத் தேரேறிக் - காதலிதேர் 108 பின்னூரச் சண்டன்றேர் பின்னூர மைந்தர்தேர் முன்னூர நீரூரு மூதூரில் - என்னிறையோன் 109 ஆதித்தேர் தானு மழகுக்குத் தோற்றிந்தச் சோதித்தேர் தன்னைச் சுமப்பதென - வீதிக் 110 கெழுந்தருளும் போதி லிமையோர்கள் வெள்ளங் கொழுந்து படர்ந்துவருங் கூட்டம் - தொழுந்தகைய 111 வள்ளலுடன் முன்வந்த வானரங்க ளோரொரு வெள்ள மெனக்கலித்து மீண்டதென - ஒள்ளிழையார் 112 அன்று தனிப்போ யான்விழிக்குத் தோற்றமத னின்று படைக்கூட்ட மிட்டதெனச் - சென்றோடிப் 113 பேதைமையால் வாலி பிதாமிதித்த பூமிதனை மேதினியோ ரெல்லா மிதித்ததெனக் - காதலுமை 114 ஏடலர் தாரா னிளனுக் கிடுஞ்சாப மாடவர்க் கெல்லாமுண் டானதென - நீடுசடா 115 தீர்த்த மொருசுகத்தின் சென்மந் துடைத்தமைகேட் டார்த்தசுக மெல்லா மடைந்ததெனப் - பார்த்திருந்து 116 சானகியை யீன்ற தலத்தைவெல்லப் பூவையரை யேனை யிடமெல்லா மீன்றதென - மானெல்லாங் 117 கோவங்க மானகா குத்தனை வஞ்சித்த பாவங் கழுவப் படர்ந்ததெனக் - கோவங்கொள் 118 தென்கடனீ ருண்ணச் செலும்போது சீமூத மின்களையெல் லாங்கரையில் விட்டதெனத் - தன்கிளைபோற் 119 கொச்சை மயிலெல்லாங் கூட்டமிட்டு வெற்பீன்ற பச்சை மயிலைவந்து பார்ப்பதென - அச்சுதனார் 120 மூவர் பணிந்த முதற்றலமென் றாங்கவர் தம் பூவையரெல் லாம்பணியப் போந்ததெனத் - தேவைதனில் 121 பிந்தாது சூழவனப் பேடவர்கைத் தாமரையில் வந்தாடல் போற்சா மரையாடத் - துந்துபி 122 சல்லரி தக்கை தடாரிமுர சம்பேரி கல்லவடங் காகளங் கல்லென்னச் - சொல்லரிய 123 வெண்கவிகை யான்மறைந்து விண்ணிறம் வெண்ணிறமாய் வண்கவிசொ னீலநிற மாறாடக் - கண்களெனும் 124 பொங்கலர் பூத்ததடம் போன்றமட வார்களட்ட மங்கல மேந்தி மகிழ்வேந்தப் - பங்கயனும் 125 மாலும் பறவைகளில் வந்தேற வாசையிரு நாலும் புரப்போர் நரர்விலங்கு - மேலேற 126 எட்டிய கோள்க ளெழுபத் தொருகுதிரை கட்டிய தேர்கள் கடிதேறக் - கிட்டுவினை 127 பாறுமிரு நால்வசுவும் பன்னோ ருருத்திரரு மேறு விமான மினிதேறச் - சீறயிலை 128 எள்ளு மிருகண் ணெழுமடவார் நான்மூன்று புள்ளும் விலங்கும் பொலிந்தேறக் - கிள்ளைமொழி 129 நேயத் திருமா னிலமா னிளம்பிடிமான் காயத் திரிமான் கலைமானும் - தூயோர் 130 எழுவர்நதி மாத ரெழுமுனிவர் மாதர் வழுவி லெழுவரர மாதர் - பழிதீர் 131 வசுமாத ரெண்மர் மகிதல மாதி யசமான மாதரோ ரெண்மர் - இசைகதிரோன் 132 கன்னியர் நால்வர் கடவுட் கலாநாதன் பன்னியர் மூவொன் பதுமாதர் - சென்னியச 133 மானவர் பெற்ற வறுபது மாதருட னேனையரு மொய்த்தீண்ட வெம்மருங்கும் - மேனாளிற் 134 கோவ மொடுங்கரா வுண்ட குலமைந்தர் மூவரையும் வாழ்வித்த மூவர்களுந் - தேவருக்கும் 135 பேருலகத் தோர்க்கும் பிரம்படி யுண்டாக்கும் ஓரிருவர் தாமு முடன்போத - நீரோடப் 136 பண்ணியங் கொள்ளாது பார்முழுதுங் கொண்டாடப் புண்ணியங் கொள்ளும் புகழாளன் - விண்ணோர் 137 தருத்தேர் விசய ரகுநாதன் றங்கத் திருத்தேர் வடமுகுர்த்தஞ் செய்யப் - பெருத்த 138 மறுகு கடலாக மன்பதை வெள்ள முறுகு கரைபுரண்டு மோத - நிறைவயிரக் 139 குழாங்கள் கன்னிலத்து மின்னுசந்த்ர காந்த மணிநிலத்தும் பொன்னிலத்தும் வைசயந்திப் பொன்னிலத்தும் - அன்னம் 140 உலாநிலத்து மேனிலத்து மோர்நிலத்து மில்லா நிலாநிலத்தும் வெள்ளி நிலத்தும் - கலாநிதியும் 141 தாரா தரமுதவுந் தாவில்லா மின்களுவந் தோரா யிரங்கோடி யுற்றவென - நேரிழையார் 142 காதலுட னேறிடுவார் கைக்கடகந் தம்மையே பாத கடகமெனப் பார்த்தணிவார் - கீதாதி 143 பாடகத்தின் மீதே பரிந்தணியுங் கண்டசரம் பாடகத்தின் மீதே பரிந்தணிவார் - நாடி 144 இதங்கொண் மலர்க்கை யிருகை யிடத்தே சதங்கை தெரியத் தரிப்பார் - விதங்கொண்ட 145 காலாழி கையாழி யாகக் கடிதணிவார் மாலாழி நீந்த மறுகுவார் - நாலிடமும் 146 மொய்த்திடுவார் மார்பு முறுகு முலைதாங்கி யெய்த்திடுவார் வேர்வை யிறைத்திடுவார் - தத்தம் 147 இடைகளையுந் தேடுவா ரெல்லோர் மடியும் உடைகளையுஞ் சோதித் துடைவார் - விடையோன் 148 கனிவாயுந் தம்மிதழுங் கைவிரலாற் கூட்டத் தனியாமை யாலே தவிப்பார் - இனியிந்தப் 149 பெண்களையு மாண்களையும் பேசுந் திரைக்கரத்தாற் கண்களைமூ டாதோ கடலென்பார் - எண்கொள்ளும் 150 எம்முடைய கொங்கை யிணைகளுக்கு மீசரே உம்முடைய வில்லங்க மோயாதோ - எம்ம 151 திரவியமா நாணையழித் தீருமது நாணை வரையறை யாப்பதுக்கி வைத்தீர் - நிரைவளையார் 152 கைவளையை நீக்கினீர் கண்ணுதலீ ரும்முடைய பெய்வளையை நீங்கப் பெறுவீரே - ஐயரே 153 கொள்ளை விடமமுதாக் கொண்டீரே நீரெமக்குத் தெள்ளமுத நஞ்சமெனச் செய்தீரே - துள்ளி 154 விழமதனை வென்றீரே விண்பழுத்த வெள்ளைப் பழமதனை வெல்லப் படாதோ - முழுமுதலீர் 155 என்றெவ் றிரங்க விளநீ ரையுமுலையு மொன்றென் றிருக்கு மொருபேதை - என்றும் 156 பேதை திருமகளார் சிந்தை தெளிய விளைய மருமகளார் பெற்றெடுத்த வஞ்சி - விரக 157 வசப்படுவோர்க் கெல்லா மதன்கரும்பு போலக் கசப்பு விளையாக் கரும்பு - பசப்புவிளை 158 தன்போல் விளங்கச் சரக்காமன் றேரிழுத்துத் துன்ப முறாத சுகப்பிள்ளை - பின்பொற்றை 159 மாவிற் றனித்திருந்து மால்கொண்டோர் பேய்கொள்ளக் கூவத் தெரியாக் குயிற்பேடு - தாவிப் 160 படியேழு மோடிப் படரச் சிறிதே கொடியோடுங் காமக் கொழுந்து - துடியோடிப் 161 போரம்பஞ் செய்யும் புகழ்க்காம வேடிருநாட் காரம்பஞ் செய்யுமங்கு ரார்ப்பணம் - சேருங் 162 களவுங் கொலையுங் கவுரியமுஞ் சூதும் விளையுந் தமோகுண வித்து - வெளியதிரு 163 நீற்றொளி பொங்குதிரு நீலகண்ட யாழ்ப்பாணர் எற்றினு மேறாத வின்னிசை - ஆற்றலால் 164 என்முடியென் றெண்ணி யிருப்பினு முன்முடியாப் பொன்முடிபோற் கூடாத பூமுடியாள் - முன்னோன் 165 தலந்துதிக்கு மப்பருக்குச் சாக்கியர் பாலிற் கலந்தளித்த நஞ்சனைய கண்ணான் - நிலந்துதிக்கும் 166 பைநாகம் போய்மறைத்த பைம்பொற் சிகரம்போன் மைநாக நீரின் மறைந்ததுபோற் - கைநாக 167 பங்கன் சடைமுடிமேற் பண்டா யிரமுகத்துக் கங்கை யொளித்திருந்த காட்சிபோற் - செங்கனியின் 168 சார்பி லொளித்திருந்த தக்ககன்போன் மிக்கமணி மார்பி லொளித்த வனமுலையாள் - ஊரனுக்குப் 169 பைம்பொன் றிருமுருகன் பூண்டியி லேபறிபோஞ் செம்பொனெனப் போய்மீண்ட சீறெயிற்றாள் - கொம்பனையாள் 170 செய்யதொரு சித்திரத்திற் றீட்டுஞ் செழுங்கிளியைக் கையி லழைத்தழைத்துக் கன்றுவாள் - மெய்யுறுகண் 171 ணாடி நிழலுக் கமுதூட்டு வாளதுவுங் கூடவமு தூட்டக் குனிந்துண்பாள் - நீடுதிரை 172 மட்டித் தெடுத்த மணற்சோற்றைத் தானெடுக்க எட்டிக் கடலை யிறைத்திடுவாள் - கிட்டிய 173 மாதவிப் பந்தர் மணப்பந்த ராவாவிச் சீதளச்செந் தாமரையே தீயாகப் - பேதுறாக் 174 கிஞ்சுக பத்திரமே கிட்டுஞ் சிருக்காக வஞ்சுகங்கண் மந்திரஞ்சொ லந்தணரா - நெஞ்சுகந்த 175 புன்னை யரும்பே பொரியாகப் பூந்தேற னன்னர்ச் சொரியு நறுநெய்யா - முன்னரிள 176 வண்ட லயர்ந்த மணற்சோறு கள்விருந்தாக் கொண்ட முரசங் குரைகடலாத் - தண்டலையில் 177 தன்பாவை யான தமனியப் பாவைதனக் கன்பர் மணஞ்செ யமையத்துத் - தென்பூமி 178 வாழ வருங்கந்த மாதனத்தைப் பொன்மேருத் தாழவரல் போலுந் தடந்தேர்மேற் - சூழத் 179 தனுக்கோடி நீங்குதனுக் கோடியான் வந்தான் மனுக்கோடி யேழுடையான் வந்தான் - எனைக்காக்கும் 180 மூவர் முதல்வந்தான் முப்பத்து முக்கோடி தேவாதி போற்றுஞ் சிவன்வந்தான் - மேலவரும் 181 பாலாழி தூணியாக் கொண்ட பரன்வந்தான் நீலாழி யில்வாழ் நிதிவந்தான் - மேலோர்கள் 182 நந்தா வரராம நாத னெதிர்வந்தான் வந்தானென் றூதும் வலம்புரியும் - துந்துபியும் 183 பின்னத் தொனியான பேரிப் பெருந்தொனியுஞ் சின்னத் தொனியுஞ் செவிதூர்ப்ப-அன்னை 184 எழுவது கண்டெழுந்தா ளேழையர் பின்போய்த் தொழுவது கண்டு தொழுதாள்-முழுவதும் 185 பாதாதி கேசமெலாம் பாவை தரிசித்து வேதாதி கேசவனை மேம்பட்டாள்-பேதைமற் 186 றொன்றினையும் வேண்டாம லும்பர்கோ னங்கைமான் கன்றினை வேண்டிக் கரைந்தழுதாள்-நின்றினையு 187 மன்னே யுமைவிழியென் றம்மானு மம்மானைத் தன்னேயத் தாலே தரித்தது காண்-பின்னவனும் 188 தேற்றுமிள மான்கன்றைச் சென்னிப் பிறைக்கொழுந்தில் ஏற்றி விடுவதிலு மிச்சைகாண்-கூற்றுவன்வே 189 ராணி யறுகை யபேட்சித் தவர்சாத்தும் வேணி யறுகையது மேயுங்காண்-மாணிழையாய் 190 பெம்மா னமரர் பெருமானம் மான்கோமா னெம்மானம் மானையுனக் கீயுமோ-சும்மாது 191 கண்ணருவி யோடக் கரைந்தழுவ தேனெனுமுன் விண்ணருவி யொடுந்தேர் வேறகலப்-பெண்ணெதிரே 192 வந்த விசயமதன் வாளியின் வாய்க்குவிருந் திந்த விசையமையா தென்றகல-வந்த 193 குதம்பை ததும்புங் குழையா ளகன்றாள் பெதும்பை யொருத்திகிளிப் பிள்ளை-பதங்கண்டு 194 துச்ச மதனன் றொடுக்குங்காற் றோட்சரமுங் கைச்சரமு மாகாக் கடிமுல்லை - அச்சமற 195 நீளவரு நாளத்தி னேற்று முகந்தோற்றி நாளை மலரு நளினமலர் - வேளை 196 வெடிக்குமலர் மேற்றாயை விட்டு நடந்து படிக்கு மடவன்னப் பார்ப்புத் - துடித்தோடித் 197 தாவுமதன் றேர்முன்னே தாய்கூவத் தான்காவிற் கூவு மதுரக் குயிற்பிள்ளை - பூவுலகிற் 198 செல்லார் திருமறுகற் றிங்களூர் வெவ்விடம்போற் கொல்லாமன் மீண்டுவிடுங் கூர்விழியாள் - சொல்லும் 199 பெருந்தாளம் வேண்டாத பிள்ளையார்க் கீசன் றருந்தாளம் போலுந் தனத்தாள் - வருந்தியே 200 கோதையர் கூட்டுங் குழலினாள் - சோதிசேர் 201 பொற்கண்ட மான புதியமணி முற்றத்துக் கற்கண்டு கொண்டு கரைகண்டு - சர்க்கரையாற் 202 பாத்தி பரத்திப் பசுந்தேன் குடங்கொண்டு வார்த்து வளர்த்தசிறு மாதவிக்குப் - பூத்தறியாத் 203 தன்போ விளங்கரும்பு தன்னையொரு கொள்கொம்பாப் பொன்போலும் வஞ்சிநடும் போதத்தில் - இன்ப 204 நலஞ்செய்யுங் கங்கை நதிவந்து நித்தம் வலஞ்செய்யச் செய்யும் வழிபோல் - நிலம்பதிய 205 வண்டில் பதியு மணித்தேரி லெந்தைவரக் கண்டில் கடந்தாள் கடிதடைந்தாள் - கொண்டல்போய் 206 முன்னம் பணிந்த முளரித் திருப்பதத்தை மின்னும் பணிந்ததுபோன் மின்பணிந்தாள் - சென்னிமே 207 லாறுபிறை தோற்று மழகு மொருவேளை நூறுவிழி தோற்று நுதலழகும் - கூறரிய 208 வெண்டிசையுங் கொண்ட விடையழகு மேழுலகுங் கொண்ட சிலையின் குனிப்பழகும் - கொண்டுவரு 209 மம்புயத்தி லொன்றையொளித் தாயன் றனைவேடன் றம்பியெனச் செய்த சரணழகும் - கொம்பனையாள் 210 கண்டவளுங் காணா தவளுமாய்ப் பேராசை கொண்டுங் கொளாதுமெதிர் கும்பிட்டாள் - அண்டர்கோன் 211 வேற்றோர் மறுகடைந்தான் வில்வே டொடைமடக்கித் தோற்றா னெனும்பேர் துலக்கினான் - சாற்றும் 212 மங்கை திருப்பிறந்த நாட்பிறந்த தெள்ளமுதத் தாலே யுருப்பிறந்த மங்கை யொருத்தி - தருப்பிறந்த 213 அண்ட மனையு மகிலமுமஞ் சுங்காள கண்ட மனைய கருங்குழலாள் - தொண்டருடை 214 அன்பிறை நீங்கா வடியான் முடிமேல்வாழ் வன்பிறை போல்விளங்கும் வாணுதலான் - என்பிறவிப் 215 பேரூசல் மாற்றும் பிரானோ டுமையாடுஞ் சீருசல் போலுஞ் செழுங்குழையாள் - ஆருரிற் 216 கோன்கன் றினையாளுங் கோமான் கரத்தேந்து மான்கன் றனைய வரிவிழியாள் - தான்கன்ற 217 மைபோற் றுங் கண்ணுமையாள் வாட்டந் திருத்துமான் கைபோற் சிவந்த கனிவாயாள் - வையமெலாம் 218 ஈன்றவரை யீன்றகுறி யீதென்னப் பச்சுடம்பு தோன்றிய வேய்போலுந் தோளினாள் - ஆன்றபுகழ்ச் 219 சேதுவிலுஞ் செம்பொன் வரையிலுஞ் சேர்கந்த மா தனங்கள் போலும் வனமுலையாள் - ஓதியபொன் 220 னாடமருங் கங்கை நதிமுடித்தார் கைப்பிடித்த மாடமரு கம்போன் மருங்குலாள் - நாடு 221 மதிக்கு மகத்தியனார் வாவிவந்த வேழத் துதிக்கை யனைய துடையாள் - மதுக்கொன்றைப் 222 பைந்தா மரைவணங்கிப் பச்சைமா லர்ச்சித்த செந்தா மரையனைய சீறடியாள் - முந்தியதோர் 223 தென்னிலங்கை நாபியாச் சேதுவுரோ மாவலியாப் பொன்னிலங்கு நற்சிகரம் பூண்முலையாத் - தன்னையுணர் 224 மாதவனாம் வேதவன மாமுனிவன் வைப்பித்த வேதவனத் தண்டலைமென் கூந்தலா - மோதாழிப் 225 பீடுறுகட் டேவையெனும் பெண்கொடியுந் தானுமா வாடுதல்போற் பொற்பந் தடிக்குங்கால் - நீடாழி 226 திண்கயி லாசமனஞ் செய்வோன் பணிந்தேத்தும் வண்கயி லாச மனமுவந்தோன் - கண்கள் 227 ககுபங் கடக்குமொரு காதற் கரும்பின் மிகுபங் கடக்குதிரு மெய்யான் - தகைதீர் 228 பரராம நாதரையும் பாலித் தருள்வோன் வரராம நாதன் மகிழ்ந்து - சுரர்சூழ 229 ஆதித்த னம்பொற் குடைமேற் குடையாகச் சோதித்தன் பொற்றேரிற் றோன்றுதலும் - மோதும் 230 பரவையிரச் சின்ன பரிசதிரா தென்ன வுரவை யிரச்சின்ன மூத - விரைவெழுந்து 231 தென்ன னடையாளஞ் சேருந் திருவிழியா ளன்ன நடையா ளமலன்றேர் - முன்னின் 232 றொளியன்னங் காணாத வொண்முடியை மற்றோர் களியன்னங் கண்டதுபோற் கண்டாள் - கிளிதான் 233 திடமான்முன் காணாத் திருவடியை மற்றோர் மடமா னெதிர்காணு மாபோல் - நடமாடும் 234 பொன்னடியுங் கண்டு புகழ்ந்தா டிருவழகை முன்னடியி னின்று முகந்துண்டாள் - பின்னை 235 மதனம் படாதோ வரிக்குயிலி னோசை விதனம் படாதோ விளம்பீர் - முதனம்பி 236 வந்தவளை முன்ன மதுரையினீர் போய்விற்ற தந்த வளையுமக்குத் தந்தவளை - நொந்தவளை 237 நாணுங் கலையு நலனுங் கலனுமருந் தூணுங் கவர்ந்தமக் கொண்ணுமோ - வேணுமால் 238 அந்தத் திருவணையி லன்பா விருக்கின்றீ ரிந்தத் திருவணையி லீனமோ - சிந்தை 239 திகைத்தகன்று போல்வாளைச் சேர்ந்தருளீ ரென்ன நகைத்தகன்று தேர்மே னடந்தான் - பகைத்திருந்த 240 சேக்கை யகன்ற செழுங்குயின் மீண்டுவரிற் காக்கையுங் காக்கை கருதுமோ - தாக்குங் 241 கணைமேற் கிடத்தக் கருதுவாள் போற்பூ வணைமேற் கிடத்தினா ளன்னை - கணையால் 242 மடந்தை தொடர்ந்துபொருங் காமனுக்குத் தோட்டுணையாய் வந்த மடந்தை யொருத்திமலர் மங்கை - அடைந்தவருக் 243 கீவினி லைந்தருவா மேகாம் பரநாதர் மாவினில் வாழும் வரிக்குயில் - மூவா 244 திடைமருதூர் மேயார்க் கினிய நிழலாந் தடமருதில் வாளுமிழந் தத்தை - பொடியாடிப் 245 பால்வரையா மேனிப் பரமன் வரையான மால்வரையில் வாழு மடமஞ்ஞை - நால்வரையாள் 246 .கூடற் குருமணிதன் கூட முளைத்தெழுந்த வாடற் கடம்பி னமர்பூவை - நாடும் 247 இணையிலி தேவை யிராம னடைத்த வணையில் விளையாடு மன்னம் - பணியவெழில் 248 காட்டுஞ் செருத்தணியிற் காலத் தலர்குவளை யேட்டி லிருக்கு மிளஞ்சுரும்பு - நாட்டும் 249 மகோததி முத்த மணிப்பவளத் தோடு சகோதர வாஞ்சை தரித்து - முகோதய 250 தாமதியா நின்றனைய தந்தத்தாள் - காமனையாள் 251 அத்த னுமையவளுக் காக விரட்டைமுடி வைத்த தனைய வனமுலையாள் - மத்தகசம் 252 என்னப் படைத்த விளம்பிடி யானைநடை தன்னைப் பழித்த தனிநடையாள் - துன்னும் 253 அறல்போலுங் கூந்தற் கடர்சோலை நல்குந் திறைபோன் மலர்கொய்யச் சென்றாள் - நறைகள் 254 துடிபோலு மெல்லிடையாள் சொல்லுக்குத் தோற்றுக் குடிபோவ தென்னக் குதிக்கப் - பிடிபோல்வார் 255 பின்னின் றிரங்கப் பிணைமலர் கொய்யுங்காற் பொன்னின்ற வானுலகும் பூவுலகும் - முன்னின் 256 றொளிர்மணித் தேரேறி யும்பர் பெருமான் கிளர்மணி வீதிவரல் கேட்டாள் - தளரும் 257 இடையென்று மெண்ணா ளிறுக்கியுடுத் தாலு முடையென்று நில்லாதென் றோராள் - தடையொன்றும் 258 இல்லா தவர்போ லெழுந்தா ளிரண்டிருளும் வெல்லா தவர்போலு மெய்வடிவும் - சொல்லாத 259 சந்திர சேகரமுந் தானு முமையவளு மிந்திர சாப மெனுமழகும் - அந்தக் 260 கரும்புயல் வாழ்காள கண்டமுங் கங்கை விரும்பி வளர்சடில மின்னும் - இரும்புவனி 261 ஆதார மெய்யெல்லா மாகாய மென்பதனைக் காதா லறிந்தவள்கண் ணாலறிந்தாள் - சோதி 262 இழந்தா ளெழுகடலி னெண்மடங்கு காம முழந்தாள் சிலநின் றுரைத்தாள் - தழைந்தலர்ந்த 263 குற்றமறு கொன்றைக் குழகன் கடைக்கணித்து மற்றமறு கொன்றை மருவினான் - பொற்றபொறிக் 264 கோலத்து வண்டுதினங் கூட்டுண்ட பூமாலை போலத் துவண்டு பொருமினாள் - சோலை 265 வருகாக வன்புள் வளர்த்தகுயில் கூவச் சருகாக மெய்யுலர்ந்து சாய்ந்தாள் - அருகே 266 மிகுந்த வரைமுலையார் மேவ விழியுட் புகுந்தவரை யுட்கொண்டு போனாள் - தகுந்தவரைச் 267 அரிவை சாதக ராக்கியந்தச் சாதகரைத் தான்வளர்த்த மாதக ராக்க வருமரிவை - தாதுநிறை 268 போது நறைக்கமலப் போதுபங்க முற்றதென்று சேதுவில் வாழுந் திருமடந்தை - வேதத் 269 திறைவன் மணிநாவை யெச்சிலிது வென்று மறைபயில் தேவையில்வாழ் வாணி - குறைதோன்ற 270 வாசவன் மேனி வடுப்பட்ட தென்றிரா மேசுரம் வாழவந்த விந்த்ராணி - மாசிலா 271 அத்தனுக் கோடி யருந்தனுவீந் தோனையகன் றித்தனுக் கோடிவந்த வின்பரதி - நெய்த்திருண்ட 272 கூந்தற் கருமணலுங் கோவா நகைமுத்துங் காந்தி மதிமுகமுங் கட்கயலும் - வாய்ந்தகனி 273 மூன்றையும் வென்ற மொழியமுத முங்காட்டித் தோன்று மலையைத் துலக்குவாள் - தோன்றாத் 274 திறலிக்கு வேளுக்குச் செங்கோல் கொடுப்பாள் விறலிக்கு நோக்கருளும் வேளை - மறலிக்குக் 275 கண்ணான் மகுடங் கவிக்குங் கனிமொழியைப் பண்ணார் விறலி பணிந்திருந்தாள் - எண்ணரிய 276 மூவேழ் நரம்பு முறையே குரன்முதலாப் பாவே ழிசையும் பயில்வித்துப் - பூவை 277 முகநீ றிலங்க முளரியோ னாதி சுகனீறாத் தெய்வந் தொழுது - மிகவும் 278 இறும்பூ தெனச்சங் கிசையாதி யாகக் குறும்பூ ழிசையிறுவாய்க் கூட்டிப் - பெறும்பாடல் 279 எண்ணூற் றுறையி னிசைவாணர் கொண்டாடப் பண்ணூற் றொருமூன்றும் பாடுங்காற் - கண்ணனவன் 280 எய்தறுபத் தாறா யிரந்தெய்வ யாண்டுதவஞ் செய்து வரம்பெற்ற சீர்பாடி - வையமுடன் 281 கால முழுதழியக் கண்ணுதலைத் தாடேடி ஞால முழுத நகைபாடி - மாலையாய்த் 282 தோளிற் கிடந்த தொகைபாடிக் கண்மலரைத் தாளிற் கிடந்த தகைபாடித் - தோளில் 283 உதித்தமை பாடி யொருசூல நாவிற் பதித்தமை வித்தமையும் பாடித் - துதித்துச் 284 சிறந்தமை பாடிநர சிங்கவெறி பஞ்சாப் பறந்தமை யெவ்வெவையும் பாடி - அறந்தான் 285 வழுவு மிராவணனை மாய்த்த கொலையைக் கழுவு மருள்பாடுங் காலைத் - தொழவந்தோர் 286 பாரேழும் வெற்பேழும் பாய்பரியே முஞ்சூழு நீரேழுங் காரேழு நேரார்ப்பப் - பேராப் 287 பெருகு கனைகடலும் பேரியு மார்ப்ப வருகுகனை யீன்றோன் வரலும் - கரியபிடிக் 288 கன்று நடந்தருகே காமரரி யைத்தொழல்போற் சென்று நடந்திருதாள் சேவித்தான் - நின்றிறைவன் 289 காயஞ் சிவந்த கவின்கண் டுருகினாள் தாயஞ் சிவந்தருகே தாங்கினாள் - மாயன்றன் 290 சின்ன மகன்றான் றிருந்திழைமுன் றோன்றினான் முன்ன மகன்றான் முழுமுதலோன் - பின்னொருத்தி 291 தெரிவை பேர்திகழ் பேரிளம் பெண்ணையெல்லா மாடவருக் கூர்திக ளாக்குமொ ருதெரிவை - பேரிருட்கும் 292 நாடிய திங்களுக்கு நல்லறிவு வந்துறவு கூடிய தன்ன குளிர்முகத் தாள் - நீடாழி 293 பண்டு பிரிந்த பவளமு முத்துமெதிர் கண்டுகலந் தன்ன கனிவாயாள் - பண்டைமக 294 மேருவு மந்தரமும் வெண்கயிலை போலீசன் சேரு மிடமாய்ச் சிறந்திருக்கப் - பாரில் 295 நிவந்தமுனை யூசியொன்றி னின்றிரண்டு வெற்புந் தவஞ்செய் தனைய தனத்தாள் - சிவந்தவிரற் 296 பத்துப் பவழங் களையும் பழமென்று கொத்து கிளிபோலுங் கூருகிராள் - எத்திசையும் 297 கால னடத்துங் கருமேதி யின்கொம்பு போல் நெரித்த புருவத்தாள் - ஆலவட்டம் 298 கொப்பாக வேள்பிடித்துக் கொண்டாடும் பொன்னூச லொப்பாக நின்றாடு மொண்குழையாள் - மெய்ப்பாகுஞ் 299 செய்குன்றின் மேலிருந்த சேடியர் தற்சூழ மொய்குன்றம் வென்ற முகிண்முலைக்கும் - பெய்கின்ற 300 மஞ்சைப் பொருத மலர்க்குழற்கு மால்கொண்டார் நெஞ்சைப் பொருத்திரு நெற்றிக்குங் - கஞ்சந் 301 தகுமான நீங்கவென்ற தாளுக்கு மன்று வெகுமானஞ் செய்யும் விதம்போல் - நகையாய்த் 302 .துலங்காரஞ் சீதேவி சுட்டிசிலம் பாதி யலங்காரஞ் செய்யு மளவில் - இலங்கிய 303 கூவிரியால் விண்விரியக் கூரா ழிகள்பதிந்து பாவிரி சேடன் படம்விரியத் - தேவருல 304 கச்சாணி யந்தே ரணிகுடைக்கு மப்பாலே கைச்சா ணிருசாணே காணுமென - முச்சகமுங் 305 கோத்த மகமேருக் கூண்டனைய தேர்மீதில் வாய்த்தமக தேவன் வரல்கேட்டாள் - பூத்த 306 கமலங் கதிரோனைக் கண்டலரு மன்றே அமலன் வரல்கேட் டலர்ந்தாள் - உமைபாகன் 307 புந்தியில் வாழப் புறந்தேடு மாந்தரைப்போல் வந்தீயர் சூழு மறுகடைந்தாள் - சந்தித்தாள் 308 சங்கங் கடைந்தணியுந் தாழ்குழைப் பெம்மானை அங்கங் கடைந்தா ரயனிற்ப - வெங்கஞ்சன் 309 காட்டு மலரைவென்ற கண்ணன் கரமலர் சூட்டு மலரைத் தொழுதிரந்தாள் - ஏட்டையுறும் 310 அன்ன மறியாம லாகமெலா மென்பானீர் பின்னைமால் வேதனையும் பெற்றீரே - முன்னியபே 311 ராசை யுடையீரே யண்டருக்குத் தோற்றீரே மாசு மதியைவெல்ல மாட்டீரே - யீசரே 312 தென்றலோ வம்ம திருமேனி தீண்டிவிடு மென்றலோ வெம்பணியெ லாமணிந்தீர் - வென்றி 313 மதனை யெரித்தீரே மாதிடஞ்சேர் காம மதனை யெரித்திடவொண் ணாதோ - விதனஞ்சேர் 314 கொள்ளை விடமாங் குழலோசைக் காவேய்க்குப் பிள்ளை புகுந்து பிழைத்தீரே - வெள்ளை 315 அயில்வாயி லுங்கொடிதென் றல்லவோ கூவுங் குயில்வாய் தனைநெரித்தீர் கூறீர் - கயல்பாய்ந் 316 திமைக்குங் கடலேழி லேகாந்த ராமன் அமைக்குங் கடல்பார்த் தமர்ந்தீர் - உமைக்கொம் 317 பிசையு மொருபா லிராதுவிடை யேறீ ரசையுமணி யோசைக்கா வன்றோ - திசைதோறு 318 மாலைப் பொழுதடரும் வந்திப் பொழுதென்றே காலைப் பொழுதையொரு கண்வைத்தீர் - ஞாலத்தில் 319 நும்ம விரக நுமக்கிவ்வா றாமாகி லெம்ம விரகமெமை யென்செய்யா - திம்மெனவந் 320 தாளீர் புயத்தி லணையீர் படுந்துயரங் கேளீ ரெனநெருங்கிக் கிட்டுதலும் - வேள்போருந் 321 தேராமல் மாலையருள் செய்யாமற் றேரானுந் தாரானு நானென்றே தானகன்றான் - ஊரறிய 322 அன்றுந் தனித்தா ளிலம்புகுந்தா ளவ்வாறே யின்றுந் தனித்தா ளிலம்புகுந்தாள் - நன்றென்று 323 பேரிளம்பெண் கைத்தகாய் தின்று கனியை முனிவார்தம் பித்தகல வந்துதித்த பேரிளம்பெண் - பொய்த்த 324 வலரை விரும்பா தரும்பை விரும்புஞ் சிலரை மயறீர்க்குந் தெய்வம் - கலைமதியை 325 விண்கூடு பாம்பருந்தி வெண்பிறையைத் தீண்டாமை கண்கூடாத் தன்மேன்மை காட்டுவாள் - பண்கூட 326 மூவரும் பாடு முதுதமி ழின்பத்தால் மேவருந் தண்பருவ மேம்படுவாள் - காவிரிவாய்ச் 327 சென்று திருவானைக் காவிற் சிவனைமதக் குன்று வணங்கக் குனிந்ததோ - நின்றநிலை 328 விட்டுத் திசைக்களிற்றை வெல்லவென்று காஞ்சிபுர மட்டு மொருபயணம் வந்ததோ - இட்டிடைதான் 329 என்று முறியா திருக்கத் தலைகீழா நின்று தவஞ்செய்யு நீர்மையோ - வொன்றோடொன் 330 றெய்யா வழக்கிட் டெதிரே மறிப்பிருந்து பொய்யா நடுநிலையிற் போவதோ - கையாற் 331 றகைந்த வடிக்கனத்தைத் தத்த முகங்கள் பருந்தெடுத்துக் கொண்ட படியோ - மிகுந்துவரும் 332 தொண்டருக்கா மூர்க்கர் துணிந்தாடுஞ் சூதுகள்போய்ப் பண்டு வயிற்றிற் படுப்பதோ - விண்டு 333 புகழ்ந்திடம் போதுநின்ற போர்மா ருசிபோல் முகங்கவிழ்ந்த கொம்மை முலையாள் - மகிழ்ந்துவரும் 334 வேட்டுணை யாடவரை வென்று சயங்கொள்ளத் தோட்டுணை தேடுந் துணைக்குழையாள் - நாட்டுறையும் 335 மாந்தரையுந் தேவரையும் வாளமர் செய்வதற்குக் கூந்தலரண் போய்ப்பார்க்குங் கூர்விழியாள் - வாய்ந்த 336 பளிக்கு நிலத்தும் பதித்திடுகண் ணாடி விளைக்கு மொளிப்பசும்பொன் வீட்டும் - ஒளித்தொளித்துப் 337 பூவைய ரன்பு பொருந்தவிளை யாடுங்கால் தேவை யரன்பவனி செப்பினார் - பாவை 338 பழுதாதல் கூறாத பண்டை மறைபோ லெழுதாத வேற்கண் ணிணையும் - எழுபிறவி 339 வேலை யகன்று விடுஞ்சைவர் போன்றுதிரு மாலை யகன்ற மலர்க்குழலும் - சீலமுறும் 340 முன்னவரை வெல்லு முனைப்படைவேள் போற்கரும்பு தன்னை வரையாத் தனதடமும் - மன்னினாள் 341 என்ன விருக ணெழுதாண் மலர்முடியாள் கன்ன லெழுதாள் கடிதெழுந்தாள் - அன்னங்கள் 342 பின்பதறி வானைவிட்டுப் பேர்ந்தோடச் சென்றாளுள் ளன்பதறி வானை யடிபணிந்தாள் - வன்பிலங்கை 343 ஏற்றமுறு வேந்து மிருவர் முயலகருங் கூற்றமு மஞ்சுங் குரைகழலும் - தோற்றுபுலி 344 தான்முக னஞ்சு தளரும் திருவரையு நான்முக னஞ்சு நகநுனியும் - கூன்முதுகுக் 345 கச்சபமும் வெள்ளைக் கருமாவும் பச்சைநிற மச்சமு மச்சமுறு மார்பிடமும் - உச்சமுறும் 346 முப்புர மஞ்சு முறுவலுங் காமவே ளப்புர மஞ்சு மணிநுதலு - மொப்புரையா 347 மோகப் பணியு முதிர்பணியும் பாரிருளு மாசுத் திருளு மடர்விழியும் - லோகம் 348 முடிச்சிட்ட நாளின் முகுந்தனயன் சென்னி முடிச்சிட்ட மாலைமுடியுந் - துடிச்சிட்ட 349 விண்ணவ ரஞ்சுமந்த வெண்பொடிப் பூச்சுமன்ப ரெண்ண வரஞ்சுமந்த வின்னருளுங் - கண்ணாரக் 350 காண்டோறுங் காண்டோறுங் காயங் களிப்பெய்திப் பூண்டோறும் பூண்டோறும் பூட்டவிழ்ந்தாள் - ஆண்டவரே 351 மாற னடித்த மதுரையிலே யஞ்சாமல் மாற னடித்த மதம்பாரீர் - நீறணியும் 352 வெட்ட வெளியாரா மேனியா ரோரிடையன் வெட்ட வெளியாராய் விட்டாரோ - முட்டவருள் 353 தங்கலா லேறு தணவார்க்குச் சாக்கியனார் தங்கலா லேறு சகித்ததோ - இங்கிவர்க்குக் 354 கண்ணிடந் தப்புமெனக் காலா லுதைத்தொருவன் கண்ணிடந் தப்புவதுங் காதலோ - பெண்ணமுதம் 355 அங்கிதஞ் செய்ததுபோ லங்கைவளை யால்முலையா லங்கிதஞ் செய்த தடுக்குமோ - இங்கிதந்தான் 356 என்னென் றுளைந்தா ளிறைவர் திருமேனி பொன்னென்றல் பூவென்றல் பொய்யென்றாள் - பின்னொன்றுங் 357 கூறத் தரமன் றெனக்குழைந்தாள் கொன்றையின்மே லாறத் தரமன்றென் னாசையென்றாள் - மாறற்ற 358 அம்புயத்தாள் போல்வா ளருளுமழ குங்கண்டு செம்புயத்தாள் மாலை சிறிதளித்து - நம்பெருமான் 359 பாரிறைவ னும்பர் பதியிறைவன் றென்றேவை யூரிறைவன் போந்தா னுலா. 360 வாழி சேது நகர்வாழி தீர்த்தங்கள் வாழிகந்த மாதனம் வாழிபர மன்வாழி - காதலித்தாய் வாழி சிவசமயம் வாழிதலத் தார்வாழி வாழிமனு வேந்தன் வளம். தேவையுலா முற்றிற்று இராமநாதர் திருவடித் தாமரைகள் துணை |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |