![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 1 அக்டோபர் 2025 11:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
உலா நூல்கள் |
தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் உலா என்பது ஒன்றாகும். பாட்டில் இடம்பெறும் தலைவன் வீதி உலா வருவதைச் சிறப்பித்துப் பாடுவதாகும். இதனை உலாப்புறம் எனவும் வழங்குவர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நால்வகைப் பாடல் வகையில் கலிவெண்பாவால் இயற்றப் பெறும். தலைவன் வீதி உலா வருகையில், அவ்வீதியிலுள்ள பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழுவகைப் பருவப் பெண்களும் தலைவனைக் கண்டு காமுறுவதாகப் பாடப் பெறுவதாகும். தலைவன் பெயர் கூறப்படுவதாலும், அவனைக் கண்டு மகளிர் காமுற்றதாக உரைப்பதாலும் இது புறப்பொருளைச் சார்ந்த பெண்பாற் கைக்கிளைத் திணையுள் அடங்கும். கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் ஆதலின் இது பாடாண் திணைக்கு உரியதாகும். அரசர், வள்ளல், வழிபடும் தெய்வம், தம் ஆசிரியர் மீது உலாக்கள் பாடப்பெறும். பாட்டுடைத் தலைவன் பெருமை, நீராடுதல், ஊர்திகளில் செல்லுதல்,உடன் வருவோர், மகளிர் கூட்டம் காத்திருத்தல், காமுறுதல் ஆகியன உலாவின் முதற்பகுதியாகவும், அதன்பின் ஏழுவகைப் பருவ மங்கையரின் இயல்புகள், அழகுபடுத்தல், விளையாடுதல், தலைவரைக் காணுதல், காமுறுதல் என்பன இரண்டாம் பகுதியாகவும் கூறப்பெறும். புகழ் பெற்ற உலா நூல்கள் |