![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய மனோதிருப்தி வெண்பா நாடறிய வேங்கடத்தில் நாரா யணனிருக்க காடுஞ் செடிதோருங் கால்கடுத்து - ஓடாமல் போட்டவிட மங்ஙனமே பொருள்தேடு வார்போல நாட்டமுட னேமனமே நம்பு. 1 நம்பி முயல்வார்க்கு நட்டமிலை யென்றமொழி அம்புவியோர் சொல்ல வறிந்திலையா - கம்பமதில் உண்டென்ற போதே யோங்கி யெழுந்தவருட் கண்டிருந்து மோனோ கலக்கம். 2 பிதுரார்ச் சிதம்போல பிராரத்வ மாமனமே விதனப் படுவதினால் விட்டிடுமோ - மெதுவாக பட்டு துலைத்தக்கால் பழயவடி யார்போல தொட்டுகொளு மீசன் துணை. 3 இட்டார்க்கு யிட்டபல னென்றபடி யூழ்வினையிற் பட்டாலு மீசன்மேற் பற்றுடையார் - கெட்டதுண்டோ நோய்படுவ தெண்ணிமனம் நோகாதே யீன்றெடுத்த தாய்விடுமோ சேய்முறையைத் தான். 4 நம்ம மனைக்கு நாம்பெரியோ ரானதுபோல் செம்மையுல கம்படைத்த ஸ்ரீஹரியை - இம்மையெலாம் முக்காலும் நம்பி மெய்வழியே நிற்பாரை எக்காலுங் காப்பாரென் றெண். 5 மனோதிருப்தி முற்றிற்று |