பெரியாழ்வார் அருளிய திருமொழி ... தொடர்ச்சி - 4 ... நான்காம் பத்து முதல் திருமொழி - கதிராயிரம்
(ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 328 கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன் எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய் உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். 1 329 நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம் ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். 2
கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். 3 331 தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன் ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும் வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். 4 332 நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால் சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல் வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். 5 333 பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். 6 334 வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். 7 335 நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன் ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். 8 336 மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம் திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். 9 337 கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும் பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. 10 இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
(திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு)
கலிநிலைத்துறை 338 அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர் சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 1 339 வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. 2 தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. 3 341 ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம் கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 4 342 ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன் ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன் திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. 5 343 ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும் சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 6 344 மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல் முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன் தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 7 345 குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச் சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 8 346 சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள் அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான் சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. 9 347 எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார் விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த் தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 10 348 மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. 11 மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
(திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு)
கலிநிலைத்துறை 349 உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. 1 350 கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும் வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. 2 351 மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3 352 மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப் பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. 4 353 பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. 5 354 பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம் ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. 6 355 கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள் இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம் இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7 356 எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8 357 கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9 358 ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும் ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. 10 359 மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில் மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. 11 நான்காம் திருமொழி - நாவகாரியம்
(முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 360 நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார் தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர் மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அப் பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. 1 361 குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய் செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர் பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே. 2 வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும் திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன்திருநாமங்கள் எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய் உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. 3 363 உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள் நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர் நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர் பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. 4 364 ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய் தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர் நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே. 5 365 பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால் ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. 6 366 குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர் கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள் இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ. 7 367 நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும் தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர் குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள் விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. 8 368 கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர் செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால் எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. 9 369 காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் கேசவா, புருடோத்தமா, கிளர்சோதியாய், குறளா, என்று பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. 10 370 சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும் கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல் ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. 11 ஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
(பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கீதோபதேசம் செய்தல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 371 ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி வாசவார்குழலாளென்றுமயங்கி மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே கேசவா, புருடோத்தமா, என்றும் கேழலாகியகேடிலீ, என்றும் பேசுவாரவர்எய்தும்பெருமை பேசுவான்புகில்நம்பரமன்றே. 1 372 சீயினால்செறிந்தேறியபுண்மேல் செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும் ஈயினால்அரிப்புண்டுமயங்கி எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம் வாயினால்நமோநாரணாவென்று மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும் பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே. 2 373 சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில் சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து ஆர்வினவிலும்வாய்திறவாதே அந்தகாலம்அடைவதன்முன்னம் மார்வமென்பதோர்கோயிலமைத்து மாதவனென்னும்தெய்வத்தைநட்டி ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு அரவதண்டத்தில்உய்யலுமாமே. 3 374 மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக் கண்ணுறக்கமதாவதன்முன்னம் மூலமாகியஒற்றையெழுத்தை மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி வேலைவண்ணனைமேவுதிராகில் விண்ணகத்தினில்மேவலுமாமே. 4 375 மடிவழிவந்துநீர்புலன்சோர வாயிலட்டியகஞ்சியும்மீண்டே கடைவழிவாரக்கண்டமடைப்பக் கண்ணுறக்கமதாவதன்முன்னம் தொடைவழிஉம்மைநாய்கள்கவரா சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார் இடைவழியில்நீர்கூறையும்இழவீர் இருடீகேசனென்றேத்தவல்லீரே. 5 376 அங்கம்விட்டவையைந்துமகற்றி ஆவிமூக்கினில்சோதித்தபின்னை சங்கம்விட்டவர்கையைமறித்துப் பையவேதலைசாய்ப்பதன்முன்னம் வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை மதுசூதனனைமார்பில் தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம் சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே. 6 377 தென்னவன்தமர்செப்பமிலாதார் சேவதக்குவார்போலப்புகுந்து பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப் பின்முன்னாகஇழுப்பதன்முன்னம் இன்னவன்இனையானென்றுசொல்லி எண்ணிஉள்ளத்திருளறநோக்கி மன்னவன்மதுசூதனென்பார் வானகத்துமன்றாடிகள்தாமே. 7 378 கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு நரிப்படைக்குஒருபாகுடம்போலே கோடிமூடியெடுப்பதன்முன்னம் கௌத்துவமுடைக்கோவிந்தனோடு கூடியாடியஉள்ளத்தரானால் குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே. 8 379 வாயொருபக்கம்வாங்கிவலிப்ப வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம் தாரமும்ஒருபக்கம்அலற்ற தீஓருபக்கம்சேர்வதன்முன்னம் செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு அரவதண்டத்தில்உய்யலுமாமே. 9 380 செத்துப்போவதோர்போதுநினைந்து செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல் பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப் பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன் சித்தம்நன்கொருங்கித்திருமாலைச் செய்தமாலைஇவைபத்தும்வல்லார் சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல் சென்றசிந்தைபெறுவர்தாமே. 10 ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
(பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
கலித்துறை 381 காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும் ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள். கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 1 382 அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால் மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள். செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால் நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 2 உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்? பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 3 384 மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால் நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 4 385 மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால் நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 5 386 நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 6 387 மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள். கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 7 388 நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம் செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 8 389 ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள் மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 9 390 சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர் பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. 10 ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
(தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 391 தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய் எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும் கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே. 1 392 சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்ச மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும் கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 2 393 அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 3 394 இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான் இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 4 395 உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும் மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம் கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 5 396 தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 6 397 விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும் கற்பகமலரும்கலந்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 7 398 திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய் அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே. 8 399 வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 9 400 மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான் கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 10 401 பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல் வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே. 11 எட்டாம் திருமொழி - மாதவத்தோன்
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை -1)
தரவு கொச்சகக்கலிப்பா 402 மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர் தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும் போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. 1 403 பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும் இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர் மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார் சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2 மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார் உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர் திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. 3 405 கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர் தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. 4 406 பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர் குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ் திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. 5 407 கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர் தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. 6 408 கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர் தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. 7 409 வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய் எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர் எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. 8 410 குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல் நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர் குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. 9 411 பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. 10 ஒன்பதாம் திருமொழி - மரவடியை
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை - 2)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 412 மரவடியைத்தம்பிக்குவான்பணையம் வைத்துப்போய்வானோர்வாழ செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து உலகாண்டதிருமால்கோயில் திருவடிதன்திருவுருவும் திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று உருவுடையமலர்நீலம் காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே. 1 413 தன்னடியார்திறத்தகத்துத் தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல் என்னடியார்அதுசெய்யார் செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும் மன்னுடையவிபீடணற்கா மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த என்னுடையதிருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்குஆளாவரே? 2 414 கருளுடையபொழில்மருதும் கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் உருளுடையசகடரையும்மல்லரையும் உடையவிட்டுஓசைகேட்டான் இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு ஏற்றிவைத்துஏணிவாங்கி அருள்கொடுத்திட்டுஅடியவரை ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே. 3 பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய துவரையென்னும் அதில்நாயகராகிவீற்றிருந்த மணவாளர்மன்னுகோயில் புதுநாண்மலர்க்கமலம் எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான் பொதுநாயகம்பாவித்து இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே. 4 416 ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய் நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான் சேமமுடைநாரதனார் சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே. 5 417 மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து அவர்களையேமன்னராக்கி உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட உயிராளன்உறையும்கோயில் பத்தர்களும்பகவர்களும் பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும் சித்தர்களும்தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே. 6 418 குறட்பிரமசாரியாய் மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை கொடுத்துகந்தஎம்மான்கோயில் எறிப்புடையமணிவரைமேல் இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய் சிறப்புடையபணங்கள்மிசைச் செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே. 7 419 உரம்பற்றிஇரணியனை உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க வாயலரத்தெழித்தான்கோயில் உரம்பெற்றமலர்க்கமலம் உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட வரம்புற்றகதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. 8 420 தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய் அரியாய்க்குறளாய் மூவுருவினிராமனாய்க் கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில் சேவலொடுபெடையன்னம் செங்கமலமலரேறிஊசலாடி பூவணைமேல்துதைந்தெழு செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே. 9 421 செருவாளும்புள்ளாளன்மண்ணாளன் செருச்செய்யும்நாந்தகமென்னும் ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன் விழுக்கையாளன் இரவாளன்பகலாளன்என்னையாளன் ஏழுலகப்பெரும்புரவாளன் திருவாளன்இனிதாகத் திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே. 10 422 கைந்நாகத்திடர்கடிந்த கனலாழிப்படையுடையான்கருதும்கோயில் தென்னாடும்வடநாடும்தொழநின்ற திருவரங்கம்திருப்பதியின்மேல் மெய்ந்நாவன்மெய்யடியான் விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார் எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ் இணைபிரியாதிருப்பர்தாமே. 11 பத்தாம் திருமொழி - துப்புடையாரை
(அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 423 துப்புடையாரைஅடைவதெல்லாம் சோர்விடத்துத்துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன் ஆனைக்குநீஅருள்செய்தமையால் எய்ப்புஎன்னைவந்துநலியும்போது அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன் அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 1 424 சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய் சங்கொடுசக்கரமேந்தினானே. நாமடித்துஎன்னைஅனேகதண்டம் செய்வதாநிற்பர்நமன்தமர்கள் போமிடத்துஉன்திறத்துஎத்தனையும் புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 2 எல்லையில்வாசல்குறுகச்சென்றால் எற்றிநமன்தமர்பற்றும்போது நில்லுமினென்னும்உபாயமில்லை நேமியும்சங்கமும்ஏந்தினானே. சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம் சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும் அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 3 426 ஒற்றைவிடையனும்நான்முகனும் உன்னையறியாப்பெருமையோனே. முற்றஉலகெல்லாம்நீயேயாகி மூன்றெழுத்தாயமுதல்வனேயா. அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி அஞ்சநமன்தமர்பற்றலுற்ற அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 4 427 பையரவினணைப் பாற்கடலுள் பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி. உய்யஉலகுபடைக்கவேண்டி உந்தியில்தோற்றினாய்நான்முகனை வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக் காலனையும்உடனேபடைத்தாய் ஐய. இனிஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 5 428 தண்ணெனவில்லைநமன்தமர்கள் சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர் மண்ணொடுநீரும்எரியும்காலும் மற்றும்ஆகாசமுமாகிநின்றாய். எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும் அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 6 429 செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற தேவர்கள்நாயகனே, எம்மானே, எஞ்சலிலென்னுடையின்னமுதே, ஏழுலகுமுடையாய். என்னப்பா, வஞ்சவுருவின்நமன்தமர்கள் வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 7 430 நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த ஊனேபுகேயென்றுமோதும்போது அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் வானேய்வானவர்தங்களீசா, மதுரைப்பிறந்தமாமாயனே, என் ஆனாய். நீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 8 431 குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா, கோநிரைமேய்த்தவனே, எம்மானே, அன்றுமுதல் இன்றறுதியா ஆதியஞ்சோதிமறந்தறியேன் நன்றும்கொடியநமன்தமர்கள் நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 9 432 மாயவனைமதுசூதனனை மாதவனைமறையோர்களேத்தும் ஆயர்களேற்றினைஅச்சுதனை அரங்கத்தரவணைப்பள்ளியானை வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் தூயமனத்தனராகிவல்லார் தூமணிவண்ணனுக்காளர்தாமே. 10 |
இலக்கற்ற பயணி ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வகைப்பாடு : பயணக் கட்டுரை விலை: ரூ. 175.00 தள்ளுபடி விலை: ரூ. 160.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் ஆசிரியர்: டாக்டர். ம. லெனின்வகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 222.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|