-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்


சிறுமணவூர் முனிசாமி முதலியார்

இயற்றிய

நான் தொழும் தெய்வம்

கலிவிருத்தம்

வேத னாருரை வேதமுங் கீதையும்
ஆதி சாஸ்திர மாறும் புராணமும்
நீத மான நெரியுரை நூலெலாம்
ஓதிக் கொள்வது யான்தொழுந் தெய்வமே. 1

வியாச ருஞ்சுகர் விஞ்சையர் நாரதர்
கோசி கன்முதற் கொற்றவர் மற்றவர்
பூசை வேள்வி பலதவ மார்க்கமாய்
யாசித் தேற்றுதல் யான்தொழுந் தெய்வமே. 2

மதியு டன்கதிர் மருவு முலகெலாம்
துதிசெய் யன்பர் துகளறுத் தேபர
கதியு மீதெனக் காட்டி யிகசுக
நிதியு மீவது நான்தொழுந் தெய்வமே. 3

இன்ப மோங்கி யெழில்பெறுங் காலமும்
துன்ப மெய்தித் துயர்படுங் காலமும்
என்றும் வேங்கட மென்றுரைப் பார்கண்மேல்
அன்பு கொள்வது யான்தொழுந் தெய்வமே. 4

கடலெ னப்பல காளைகள் தன்னுடன்
வடக ரைக்கட லென்னும் நதிக்குளே
யுடல்வ லுத்தகா ளிங்கன்சி ரசின்மேல்
நடனஞ் செய்தது நான்தொழுந் தெய்வமே. 5

பூசை புட்பம் பெருந்தவ மில்லெனின்
கேச வன்றுனை யென்றுளங் கெட்டியாய்
பேசுந் தோறுமதி பேருரைப் பார்கண்மேல்
ஆசை கொள்வது யான்தொழுந் தெய்வமே. 6

விதியு மற்றைய விண்ணவர் போற்றிடுந்
துதியை வேண்டித் துலங்கிய வேங்கடம்
பதியில் நின்றுப் பதந்தரப் பற்பல
நதியு முள்ளது நான்தொழுந் தெய்வமே. 7

ஓடி யோடி யுலகுள மாந்தர்கள்
தேடித் தேடிவந் தேதிரு வேங்கடம்
கூடி நின்றவர் குறைக ளோதியே
நாடிப் போற்றுதல் நான்தொழுந் தெய்வமே. 8

உம்ப ராதிமற் றம்புவி யுள்ளபேர்
தெம்பு டன்திரு வேங்கடம் தேடியே
கும்பு கூடிக் குறைகளைந் தெய்திட
நம்பி போற்றுதல் நான்தொழுந் தெய்வமே. 9

இரங்கம் சேது ராமேசுர மெவ்வுளூர்
சிங்க மாய்கடி காசலம் காஞ்சியில்
தங்கி யுந்திரு வேங்கடந் தானென
எங்கு முள்ளது யான்தொழுந் தெய்வமே. 10

வல்ல வாணர்கள் வானவர் தானவர்
சொல்லிப் போற்ற சுருதிகள் வாழ்த்தவும்
தில்லை கோவிந்த ராய்திரு வேங்கட
எல்லை நின்றது யான்தொழுந் தெய்வமே. 11

காதி பெற்றக் கடுந்தவ யோகிகள்
ஆதி யென்று வமர்ந்தருள் வேங்கடம்
மீதில் நின்றுயிம் மேதினி கார்க்குமா
நீதி யுள்ளது நான்தொழுந் தெய்வமே. 12

பற்கு ணன்முதற் பாண்டவர் மீதிலே
துற்கு ணந்தொடுத் தோர்கள் துலைந்திட
விற்கு ணத்தொழில் விஜயனுக் கோதிய
நற்கு ணத்தது நான்தொழுந் தெய்வமே. 13

பூத லம்முதற் பொன்னுல கந்தமும்
பாத லம்வரை பற்பல லோகமும்
ஆத ரித்தகி லந்தனில் வேங்கட
நாத னானது நான்தொழுந் தெய்வமே. 14

கந்த புட்பக் களபப் பணியுடன்
சந்த தஞ்சர ணங்கதி யென்றுமுன்
வந்து போற்றி வழிபடுந் தொண்டர்மேல்
மிந்தை யற்றது நான்தொழுந் தெய்வமே. 15

மங்க ளந்திகழ் மங்கையர் கூட்டமும்
எங்கி னும்சுர கீதமும் வேதமும்
அங்க பாகத்தி லேயலர் மேலெனும்
நங்கை யுள்ளது நான்தொழுந் தெய்வமே. 16

நான் தொழும் தெய்வம் முற்றிற்று