கீதா தெய்வசிகாமணி

     கீதா தெய்வசிகாமணி நாவலாசிரியை திருமதி லீலா கிருஷ்ணன், பொறியியல் வல்லுநர் திரு எம்.பாலகிருஷ்ணன் தம்பதியினரின் மகள். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் திரு என்.தெய்வசிகாமணி அவர்களின் மனைவியான இவர், கடந்த பதினெட்டு வருடங்களாக மங்கையர் மலர், சிநேகிதி, மங்கை, பெண்மணி, அவள் விகடன் போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து சுயமுன்னேற்றக் கட்டுரைகள், போட்டிக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

     இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட பேட்டிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி இருக்கும் இவர், சென்னை தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

     தஞ்சை ஓவியக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற இவர், அண்மையில் ஜுபிடர் ஆடியோஸ் மூலம் வெளியிட்ட ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம், கனகதாரா ஸ்தோத்திரம் (தமிழ்) ஒலிநாடா பக்தர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

     இவரது நூல்களான, 'உங்கள் உயர்வு உங்கள் கையில்', 'உற்சாகம் உங்கள் கையில்', 'நம்பிக்கை வெற்றி பெறும்', மணப்பெண்ணே உனக்காக', 'அழகு ஆரோக்கியம் இளமை', 'பிரச்சனைகள் தீர்வுகள்', 'தினம் ஒரு சமையல்' 'நிவேதிதா', 'பொது அறிவு ஆயிரம்', 'கனவு காணுங்கள்' ஆகியவை வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

நூல்கள்