http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




15

     1948 ஜனவரி முப்பதாந்தேதி டில்லியில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும்போது காந்தி மகான் சுட்டுக் கொல்லப்பட்டார். ரேடியோவில் அஞ்சல் செய்து கொண்டிருந்த திருவையாறு தியாகராஜர் உற்சவ நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இந்தப் பேரிடி போன்ற செய்தி அறிவிக்கப்பட்டது. அன்று டில்லியில் சூரியன் அஸ்தமிக்கும் போது சூழ்ந்த இருள் அதன்பின் பல நாள் வரை பாரத நாட்டில் நீடித்தது. செய்தியறிந்த போது ராஜாராமன் மூர்ச்சையாகிவிட்டான். அன்று காலையில் தான் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த பிருகதீஸ்வரன் ராஜாராமனை மூர்ச்சை தெளிவித்து ஆசுவாசப்படுத்தினார். ஓடையில் போய் மகாத்மாவுக்காக முழுகி எழுந்தார்கள் இருவரும். மறுநாள் காலை பிருகதீஸ்வரன் தேசபிதாவைத் தன் சொந்தப் பிதாவாக அங்கீகரித்துக் கொண்டு, அத்தனை காலம் வைத்திருந்த பாசத்தின் அடையாளமாக மகாத்மாவுக்குத் தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் வாரி இறைத்தார். தண்ணீரால் அவர் அந்தத் தர்ப்பணத்தைச் செய்தார் என்பதைவிடக் கண்ணீரால் செய்தார் என்பதே பொருத்தமாயிருக்கும். ராஜாராமனும் தாய் தந்தைக்கே செய்தறியாத தர்ப்பணத்தை மகாத்மாவுக்காகச் செய்தான். முத்திருளப்பனும் குருசாமியும் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள்.

     தொடர்ந்து ஆசிரமத்தில் காலையும், மாலையும் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடந்தன. 'வைஷ்ணவ ஜனதோ'வும் 'ரகுபதி ராகவ' பாடலும் இடைவிடாமல் பல நாட்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தேசம் நிலை கலங்கிப் போயிருந்தது. ஆன்ம பலத்தினாலும் தூய யோகியின் எளிமைக் கோலத்தாலும், பாரத சுதந்திர யுத்தத்துக்கு வழிகாட்டிய தந்தையின் மறைவு பல கோடி மக்களின் கண்களில் நீரைப் பெருக்கியது. மகாத்மாவின் வாழ்நாளில் அவர் உயிரோடு இருக்கும் போது பணியின் காரணமாகவும், தன்னடக்கத்தின் காரணமாகவும் செய்யத் தயங்கியிருந்த ஒரு காரியத்தை இப்போது ராஜாராமன் மனப்பூர்வமான பிரியத்தோடு செய்து கொண்டான். முன்பு ஹரிஜன நிதிக்காக மகாத்மா மதுரை வந்திருந்தபோது டி.எஸ்.எஸ். ராஜன் தன்னைக் கூப்பிட்டபடி 'காந்திராமன்' என்றே தன் பெயரை மாற்றிக் கொண்டு கெஸட்டுக்கும் அறிவித்து விட்டான் அவன். டி.எஸ்.எஸ். ராஜன் அன்று வாய் தடுமாறி அப்படி அழைத்தபோது, "இப்படியே பேர் வச்சுக்கயேன்" - என்று அருகிலிருந்த வைத்தியநாதய்யர் செய்த ஆசிர்வாதமே இன்று பலித்ததாகக் கருதினான் அவன். காந்தியோடு இந்தியாவில் ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு.

*****

     தேர்தலில் நின்று வெற்றி பெற்றுச் சட்டசபையிலோ பார்லிமெண்டிலோ அவன் பணிபுரிய வேண்டும் என்று பின்னாளில் சக தலைவர்களும், தேசபக்தர்களும் அவனை எவ்வளவோ வற்புறுத்தினார்கள். அவன் தீர்மானமாக மறுத்துவிட்டான். ஆசிரமப் பணியே அவன் பணியாகியது.

     "எல்லாருமே பதவிகளிலும், நாற்காலிகளிலும் போய் அமர்ந்துவிட்டால், மகாத்மாவின் பணிகளைத் தொடரமுடியாது. பதினெட்டு வருஷ காலத்துக்கும் மேலாக இந்த மகாவிரதத்தில் நாங்கள் ஈடுபட்டோம். பயன் கிடைத்துவிட்டது. கட்சிப் பூசல்களிலும், நாற்காலியைப் பிடிக்கும் பரபரப்பிலும் நமது விரதம் பங்கப்பட்டுப் போய்விடக் கூடாதென்று தான் பயப்படுகிறேன் நான். சுதந்திரம் பெறுவதற்கு முன் நம் எல்லோருக்கும் அடைய வேண்டிய இலட்சியம் சுதந்திரம் என்ற ஒன்றாக மட்டுமே இருந்தது. 'சுதந்திரம் என் பிறப்புரிமை' - என்று திலகர் கொடுத்த குரலையே நம் எல்லாருடைய இதயங்களும் எதிரொலித்தன. அடைய வேண்டியதை அடைந்தபின் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கும் எல்லைக்கு இப்போது நாம் வந்திருக்கிறோம். நோக்கங்களுக்காகப் போராடும் போது இருந்த ஒற்றுமை பிரயோஜனங்களுக்காக நெருங்கும் போது இருக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். நாட்டுக்கு நான் எதைச் செய்ய வேண்டுமோ அதை இந்த ஆசிரமத்தின் மூலம் தாராளமாகச் செய்வேன். பதவிகள் ஒரு வேளை சேவை செய்வதில் எனக்குள்ள விநயத்தையும் தாகத்தையும் போக்கினாலும் போக்கிவிடலாம். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்" என்றான் அவன். பிருகதீஸ்வரனும் அதே மனநிலையில் தான் இருந்தார்.

*****



ஆத்மாவின் ராகங்கள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11   12  13   14   15


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/aathmavinraagangal/ar15.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs