உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 4 ... அறத்துப்பால் துறவறவியல் 31. வெகுளாமை செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
தனக்குச் செல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக் காப்பவனே காப்பவன்; செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன?காக்கின்என் காவாக்கால் என்? 301 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
செல்லாத இடத்தில் சினம் கொள்வதனால் தீமை வரும். செல்லும் இடத்திலும் அதனிலும் தீமையானது வேறு ஏதும் இல்லை.இல்அதனின் தீய பிற. 302 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது; தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும்.பிறத்தல் அதனான் வரும். 303 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
முகமலர்ச்சியான நகையையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ?பகையும் உளவோ பிற. 304 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச் சினமானது அவனையே முடிவில் கொன்று விடும்.தன்னையே கொல்லுஞ் சினம். 305 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
சேர்ந்தவரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, ‘தன் இனத்தார்’ என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்துவிடும்.ஏமப் புணையைச் சுடும். 306 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாதது போல் உறுதியாகும்.நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 307 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
பலமாகக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதும், கூடுமானால், அவன் பால் வெகுளாமையே நன்று.புணரின் வெகுளாமை நன்று. 308 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப் பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும்.உள்ளான் வெகுளி எனின். 309 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
அளவு கடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்குச் சமமாவர்.துறந்தார் துறந்தார் துணை. 310 32. இன்னா செய்யாமை சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே, குற்றமற்ற அறிவாளரின் கொள்கையாகும்.செய்யாமை மாசற்றார் கோள். 311 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
கறுவுகொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை.செய்யாமை மாசற்றார் கோள். 312 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
ஏதும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும்.உய்யா விழுமந் தரும். 313 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும்.நன்னயஞ் செய்து விடல். 314 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பமே போலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன் தான் ஏதும் உளதாகுமோ?தந்நோய்போல் போற்றாக் கடை. 315 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
துன்பம் தருவன எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.வேண்டும் பிறன்கண் செயல். 316 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன்பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு ஆகும்.மாணாசெய் யாமை தலை. 317 தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
தன் உயிருக்குத் துன்பமாதலைத் தான் அறிந்து வருந்தும் ஒருவன், மற்றைய உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் என்பது, என்ன அறியாமையாலோ?மன்னுயிர்க்கு இன்னா செயல். 318 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும்.பிற்பகல் தாமே வரும். 319 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின் மேல் சென்று சேர்வன; ஆகவே, துன்பப்படாமலிருப்பதை விரும்புகிறவர் பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பர்.நோயின்மை வேண்டு பவர். 320 33. கொல்லாமை அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும்.பிறவினை எல்லாந் தரும். 321 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது!தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்; அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும்.பின்சாரப் பொய்யாமை நன்று. 323 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்தல் என்பதைக் கருதும் வாழ்க்கை நெறியே ஆகும்.கொல்லாமை சூழும் நெறி. 324 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள்.கொல்லாமை சூழ்வான் தலை. 325 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒரு போதும் செல்லாது.செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும் கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக் கூடாது.இன்னுயிர் நீக்கும் வினை. 327 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோருக்குக் கொன்று வரும் ஆக்கம் இழிவானதே யாகும்.கொன்றாகும் ஆக்கங் கடை. 328 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
கொலையையே செய்தொழிலாக உடைய மக்கள், அதன் இழிவான தன்மையைத் தெரிந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர்.புன்மை தெரிவா ரகத்து. 329 உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் வருந்தித் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியவரேயாவர்.செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330 34. நிலையாமை நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும்.புல்லறி வாண்மை கடை. 331 கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
பெரும்பொருள் வந்தடைதல், கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும்; அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே.போக்கும் அதுவிளிந் தற்று. 332 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்; அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்ய வேண்டும்.அற்குப ஆங்கே செயல். 333 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், ‘நாள்’ என்பது ஒரு கால அளவு போலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும்.வாளது உணர்வார்ப் பெறின். 334 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டு விக்குள் மேலாக எழுந்து வருவதற்கு முன்பாகவே, நல்ல செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும்.மேற்சென்று செய்யப் படும். 335 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
‘நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை’ என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும்.பெருமை உடைத்துஇவ் வுலகு. 336 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
அடுத்த பொழுதில் உயிர் வாழும், வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, கோடியும் அல்ல; அதன்மேலும் அளவற்ற பலவாகும்.கோடியும் அல்ல பல. 337 குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
தான் இருந்த கூடானது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு.உடம்பொடு உயிரிடை நட்பு. 338 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு.விழிப்பது போலும் பிறப்பு. 339 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்!துச்சில் இருந்த உயிர்க்கு. 340 35. துறவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
எந்த எந்தப் பொருளில் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.அதனின் அதனின் இலன். 341 வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி விட்டு விட்ட பின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும்.ஈண்டுஇயற் பால பல. 342 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டு விட வேண்டும்.வேண்டிய வெல்லாம் ஒருங்கு. 343 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும்; ஆசை உள்ளதானால் மீளவும் உலக போகத்தில் மயங்கியதே யாகும்.மயலாகும் மற்றும் பெயர்த்து. 344 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்; ஆகவே, மற்றைய ஆசைத் தொடர்புகள் எல்லாம் எதற்காகவோ?உற்றார்க்கு உடம்பும் மிகை. 345 யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உடலை ‘யான்’ எனவும், பொருள்களை ‘எனது’ எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.உயர்ந்த உலகம் புகும். 346 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பொருள்கள் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக் கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்.பற்றி விடாஅ தவர்க்கு. 347 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர்.வலைப்பட்டார் மற்றை யவர். 348 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும்; மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும்.நிலையாமை காணப் படும். 349 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக; உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க.பற்றுக பற்று விடற்கு. 350 36. மெய் உணர்தல் பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
உண்மையில் பொருளற்றவைகளைப் பொருளாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பலவகைப் பிறப்புக்களும் உண்டாகின்றன.மருளானாம் மாணாப் பிறப்பு. 351 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மயக்கம் நீங்கிய குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு அவ்வுணர்வு, இருளிலிருந்து விடுபட்டு அடைகின்றதான இன்பத்தையும் கொடுக்கும்.மாசறு காட்சி யவர்க்கு. 352 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
ஐயத்திலிருந்து நீங்கித் தெளிவுபெற்ற மெய்யறிவாளருக்கு, இவ் வையகத்தினும், வானம் மிகவும் அண்மையானதும் உறுதியானதும் ஆகும்.வானம் நணிய துடைத்து. 353 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ள போதிலும் பயன் யாதும் இல்லை.மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
எப்பொருள் எத்தகைய தன்மையோடு தோன்றினாலும் மயங்காமல், அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்.மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
கற்க வேண்டிய கல்வியைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர், மீண்டும் இவ்வுலகில் பிறவிகளைத் தாம் எடுத்து வராத நெறியை மேற்கொள்வார்கள்.மற்றீண்டு வாரா நெறி. 356 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
என்றும் உளதான மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்து விட்டதானால், மீளவும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம்.பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும்.செம்பொருள் காண்பது அறிவு. 358 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வந்து சாரமாட்டா.சார்தரா சார்தரு நோய். 359 காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக் கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்.நாமம் கெடக்கெடும் நோய். 360 37. அவா அறுத்தல் அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, ‘அவா’ என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்.தவாஅப் பிறப்பீனும் வித்து. 361 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
ஒருவன் எதையேனும் விரும்புவதானால், பிறவாமை என்பதையே விரும்ப வேண்டும்; அந்த நிலை அவா இல்லாத நிலையை விரும்பினால் வரும்.வேண்டாமை வேண்ட வரும். 362 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
அவாவற்ற தன்மைபோலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் யாதும் இல்லை; எவ்விடத்தும் அதற்கு இணையானதான செல்வமும் யாதும் இல்லை.ஆண்டும் அ·தொப்பது இல். 363 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
தூய்மையான நிலை என்பது அவாவில்லாத நிலையே ஆகும். அந்த நிலை, வாய்மையையே விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.வாஅய்மை வேண்ட வரும். 364 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.அற்றாக அற்றது இலர். 365 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
ஒருவனை அவன் தளர்ச்சி கண்டு வஞ்சிப்பது அவா ஆகும்; அதனால், அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே மேன்மையான அறநெறி ஆகும்.வஞ்சிப்ப தோரும் அவா. 366 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
அவாவினை முழுவதும் அறுத்து விட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பியபடியே வந்து ஒருவனுக்கு வாய்க்கும்.தான்வேண்டு மாற்றான் வரும். 367 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அ·துண்டேல்
அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும்.தவாஅது மேன்மேல் வரும். 368 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில், இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும்.துன்பத்துள் துன்பங் கெடின். 369 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
ஒருபோதும் நிரம்பாத அவாவினைக் கைவிட்டால், அந்தப் பொழுதிலேயே, பெரிதான இன்பவாழ்வை அந்நிலைமையானது தானாகவே தந்துவிடும்.பேரா இயற்கை தரும். 370 ஊழியல் 38. ஊழ் ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்.போகூழால் தோன்றும் மடி. 371 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும்.ஆகலூழ் உற்றக் கடை. 372 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.உண்மை யறிவே மிகும். 373 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும்.தெள்ளிய ராதலும் வேறு. 374 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவையாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையவாதலும் உண்டு.நல்லவாம் செல்வம் செயற்கு. 375 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாத போது எதுவுமே ஆகாது; கொண்டு போய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் தம் பொருள் போகாது.சொரியினும் போகா தம. 376 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும்.தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
வந்தடைவதான இன்பங்கள் வந்து சேராமற் போகுமானால் துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்!ஊட்டா கழியு மெனின். 378 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
ஊழால் நன்மைகள் விளையும்போது, அவற்றை நல்லவையாகக் காண்பவர்கள், அ·து இல்லாத கேடு காலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக?அல்லற் படுவ தெவன்? 379 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்!சூழினுந் தான்முந் துறும். 380 பொருட்பால் அரசியல் 39. இறைமாட்சி படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்க ஏறு ஆவான்.உடையான் அரசருள் ஏறு. 381 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்.எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. 382 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்.நீங்கா நிலனாள் பவர்க்கு. 383 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
அரசநெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டை விட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்.மானம் உடைய தரசு. 384 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு.வகுத்தலும் வல்ல தரசு. 385 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
தன்னைக் காண வருவார்க்குக் காட்சிக்குத் தான் எளியனாயும், கடுஞ்சொல் சொல்லாதவனாயும் அரசன் விளங்கினால், அவன் நாட்டை உலகமே உயர்வாகக் கூறும்.மீக்கூறும் மன்னன் நிலம். 386 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்.தான்கண் டனைத்திவ் வுலகு. 387 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்.இறையென்று வைக்கப் படும். 388 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
சான்றோர்கள் கண்டித்துச் சொல்வது கேள்விக்கு வெறுப்பாயிருந்தாலும், பொறுத்து, அக்குறைகளை நீக்கும் பண்புள்ள வேந்தனின் குடைநிழலில், உலகம் தங்கும்.கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், குடி காத்தலும் என்னும் நான்கையும் சிறப்பாகப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவான்.உடையானாம் வேந்தர்க் கொளி. 390 40. கல்வி கற்க கசடறக் கற்பவை கற்றபின்
கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.நிற்க அதற்குத் தக. 391 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
‘எண்’ என்று சொல்லப்படுவதும், ‘எழுத்து’ என்று கூறப்படுவதும், என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் ‘கண்’ என்பார்கள்.கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
‘கண்’ உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர்.புண்ணுடையர் கல்லா தவர். 393 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, ‘இனி என்று மீளக் கூடுவோம்’ என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்.அனைத்தே புலவர் தொழில். 394 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்!கடையரே கல்லா தவர். 395 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்.கற்றனைத் தூறும் அறிவு. 396 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்?சாந்துணையுங் கல்லாத வாறு. 397 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்.எழுமையும் ஏமாப் புடைத்து. 398 தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்.காமுறுவர் கற்றறிந் தார். 399 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
‘அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா.மாடல்ல மற்றை யவை. 400 |