4 அந்தக் காலத்தில், அடிமைகளைத் தண்டிக்கும் வகையில் அவர்களை ஒருவர் பின் ஒருவராக சிங்கக் கூண்டுக்குள் விட்டு, பசியோடு பாய்ந்து கவ்வும் சிங்கத்தையும், அதன் பசிக்கு ருசியாகி, குருதி கொப்பளிக்க, நரம்புகள் தெறிக்க, நாலு பக்கமும் அடைபட, மிருகத்தின் வாய்ப்பக்கம் போகும் அடிமையை சீமான்களும் சீமாட்டிகளும் பத்திரமான இடத்தில் அமர்ந்து ரசித்ததாக வரலாறு கூறுகிறது. அந்த வரலாறு இப்போது வேறு ரூபத்தில் அதே சமயம் மிகப்பெரிய வித்தியாசத்துடன் நடந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக, மல்லிகா, தங்கம்மாவைக் கண்களால் கவ்வுகிறவள் போல் பார்த்தாள். மாதர் சங்கத் தலைவி சரோஜா அம்மையாரும், அவளை முப்பது வருடத்திற்கு முன்பே கையைப் பிடித்து, கழுத்தில் கயிறு கட்டிய கிராம முன்சீப்பும், குறுஞ்சிரிப்புடன் மோவாய்களைத் தடவிக் கொண்டு, முன் நெற்றிகளைச் சுருக்கிக் கொண்டு, தங்கம்மாவைப் பார்த்தார்கள். வெளியே திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்டியப்பன், தங்கம்மா பக்கமும், மாணிக்கம் பி.ஏ.பி.டி. மல்லிகா பக்கமும், மனத்துக்குள் அணிவகுத்துக் கொண்டார்கள்.
நான்கு நாட்களுக்கு முன்பே, முன்சீப் நடந்த விவரத்தைச் சொன்னதும், மனத்துக்குள் மகளைப் பாராட்டிய அந்த கூனுக் கிழவர், இப்போது கேடு கெட்ட, விசுவாசம் கெட்ட, எல்லாங் கெட்ட ஆண்டிப் பயலுக்காக தன் மகள் ஒரு கிராமத் தலைவரின் மகளை - அதுவும் தான் வேலை பார்க்கும் பண்ணையாரின் தங்கை மகளை, 'நாயே பேயே' என்று பேசியது, அதிகபட்சமாகத் தெரிந்தது. அவரும் ஒருதலைப்பட்சமாக நிற்கத் துணிந்து விட்டார். இவள் பிறப்பதற்கு முன்பே, இவர் சேவிக்கும் குடும்பம் இது. மகள் வருவாள். போவாள். ஆனால் சேவகம் இருக்கே அது அப்படியல்ல. அது பாசத்தைத் தாண்டும் பக்தி. தங்கம்மா, அலட்சியமாக நிற்பது, கிழவருக்கு அவமதிப்பாகத் தெரிந்தது. கண்கள், இரத்தம் கொப்பளிப்பது போல் சிவக்க, "இப்போ, தெரிஞ்சி தெரியாமப் பேசிட்டேன்னு கேட்கப் போறியா - இல்ல..." என்றார். தங்கம்மா, வெளியே ஆண்டியப்பனைப் பார்த்தாள். பிறகு தன்னைத்தானே சிலிர்த்துக் கொண்டு, "மன்னிப்புன்னு வந்ததுன்னா முதல்ல அதுதான் கேக்கணும். எங்க அத்த மகனை, காரணமில்லாமல் திட்டுனால், நான் கேட்டுக்கிட்டு இருக்கணுமா?" என்றாள். மல்லிகா, ஆட்கள் இருக்கிற தைரியத்தில் அதட்டினாள். "அது இதுன்னு பேசுனால், கெட்ட கோபம் வரும். நான் என்ன ஆடுமாடா?" கிராம முன்சீப் சிலிர்த்தெழுந்தார். "ஒன் அய்யா முகத்துக்காவ பாக்கேன். இல்லன்னா நீ, என் மகள பேசியிருக்கிற பேச்சுக்கு, சுண்ணாம்புக் காளவாசலுல வச்சி..." சரோஜா அம்மையார், அரசியல்வாதியானார். "அய்யா கேக்குறார் இல்ல. அவருக்கு மரியாத கொடுக்கிறதுக்காவது, தெரியாமப் பேசிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லேன்! இவ மூணு நாளா கன்னம் வீங்கும்படியா அழுதுகிட்டு கிடந்தாள். நாங்ககூட அவளை 'நீன்னு' சொன்னதுல்ல. பெத்த அப்பனுக்கு மரியாத கொடுக்கவளா இருந்தால், இந்நேரம் அவரு சொன்ன மாதுரி கேட்டிருப்பே. நீதான் அப்பனையே மதிக்காதவளாச்சே!" 'பெண்டாட்டி மதிக்கவில்லை என்கிற சமாசாரம், இந்த வேலைக்காரப்பய மவளுக்கும் தெரிஞ்சிப் போச்சே' என்ற இரகசியமான ஆத்திரத்தில் முன்சீப் ஐயா எழுந்தார். "நீ மட்டும் என் மகளாக இருந்திருந்தால், இந்நேரம் கொண்டையைப் பிடிச்சி, 'திருவு திருவு'ன்னு திருவியிருப்பேன்" என்று சரோஜா அம்மையார் சொன்னார். அடைக்கலசாமி ஆவேச சாமியானார். திடீரென்று மகள் மீது பாய்ந்து, அவள் தலைமுடியைப் பிடித்து கைக்குள் சுற்றிக் கொண்டு, மகளின் முதுகில் பலங்கொண்ட மட்டும் குத்தினார். 'அய்யோ, போனேனே' என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டே, தங்கம்மா, அப்பாவின் கையைப் பிடித்து, தலையை உதற உதற, அவளுக்கு வேதனை விஸ்வரூபமாகியது. எப்படியோ அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நாலடி தள்ளிப்போய் நின்று கொண்டாள். இதுவரை, அய்யாவிடம் ஒருதடவை கூட அடிபடாத தனக்கு - திட்டித் தொலைக்கும் அம்மாவைக்கூட, 'என் மகள பேசுனியானா குழிவெட்டிப் புதச்சிடுவேன்' என்று சிங்கம்போல் கர்ஜிக்கும் பெற்றவன், நான்குபேர் முன்னிலையில் அடித்த அடியின் வலியைவிட, அதன் காரண காரியம், அவள் இதயத்தில் பெரும் வலியைக் கொடுத்தது. விம்மப் போனாள். 'அய்யோ அய்யோ' என்று அழப்போனாள். 'என்னையா அடிச்சியரு - என்னையா அடிச்சியரு' என்று கத்தி, தன் தலையிலே கூட, கைகளைப் பாயவிடப் போனாள். திடீரென்று அவள் கண்கள் மல்லிகாவைப் பார்த்தன. அதில் ஜொலித்த அகங்காரத்தையும், உதட்டோரத்தை விரித்த குறுஞ்சிரிப்பையும் பார்த்தன. எதுவுமே நடவாததுபோல் இருந்த சரோஜாவைப் பார்த்தன. அவ்வளவுதான். நீரை விழ வைக்கப் போன கண்கள், இப்போது நெருப்பைக் கொட்டின. உள்ளத்து ஓலம், போர்ப்பரணியாகியது. இயலாமை, எதிர்ப்பாக மாறியது. தங்கம்மா, மல்லிகாவை, அவளும் அவள் பெற்றோரும் பயப்படும் அளவுக்கு சற்று நெருங்கிக் கொண்டு, அழுத்தந்திருத்தமாகப் பேசினாள்: "அடியே, மல்லிகா! குதிரக்கொண்டை, என்னைப் பழிவாங்கிட்டதா நினைக்காதடி! நானாவது எங்கய்யா கிட்டதாண்டி அடிபட்டேன். ஒன் அகங்காரத்துக்கும், மண்டக்கனத்துக்கும் நீ ஊர்ல அடிபடப் போற காலம் வரப்போவுதுடி. எனக்கு அடி வாங்கிக் கொடுத்துட்டதா நினைக்காதடி. இப்போ எங்கய்யா என்னை அடிச்ச அடி, பிட்டுக்கு மண்சுமந்த பரமசிவத்தை, பாண்டிய ராஜா அடிச்சது மாதிரியான அடிடி! இந்த அடி, ஒங்களமாதுரி அக்கிரமக்காரங்க ஒவ்வொருவர் மேலயும் படப்போவுதடி!" மல்லிகா வாயடைத்துப் போய் எழுந்தபோது, அடைக்கலசாமி, அருகே கிடந்த ஒரு தார்க்கம்பை எடுத்துக் கொண்டு, மகளை நோக்கி ஓடினார். திடீரென்று அவருக்கும், தங்கம்மாவுக்கும் இடையே ஓர் உருவம் வந்து நின்றது. கடுமையான கோபம், மேனியெங்கும் ஆடுவது போல் உடலெல்லாம் சிலிர்த்து நிற்க, உயிரையே பணயம் வைக்கத் தயாராவது போல், அந்தக் கம்பீர உருவம், கிழவரையும் மகளையும் மாறி மாறிப் பார்த்தது. ஆண்டியப்பன் மாட்டைப் பறிகொடுத்துவிட்டு, மாமன் மகளையும் பறிகொடுத்தாலும் அவளைப் பலி கொடுக்கச் சம்மதிக்காத ஒரு ஏழை. கம்பீரமாகச் சவாலிட்டான். "இனிமேல் அவள்மேல் ஒரு அடி விழுந்தாலும், இப்பவே கொலை விழும். ஒரு கொலையோட நிக்காது. வேணுமுன்னால் அடிச்சிப் பாக்கட்டும்." அடைக்கலசாமி, அதிர்ந்து போனார். அவருக்குக் கோபம் வரவில்லை. தனக்கு ஏன் கோபம் வரவில்லை என்றும் அவர் ஆச்சரியப்பட்டார். ஒருவேளை, தனக்கு ரோஷம் இல்லாமல் போய்விட்டதோ என்று கூடப் பயப்பட்டார். எவரையும், 'ஒத்தைக்கு ஒத்தையாய்' சமாளிக்க முடியும் என்று இதுவரை தன் வீரத்தில் அசைக்க முடியாத அபிமானம் வைத்திருந்த அந்தக் கிழவர் வாயடைத்து, கையடைத்து, காலடைத்து நின்றார். மகள் மேல், அக்காள் மகன் வைத்திருக்கும் பாசத்தின் தரிசனத்தில், அடிமனத்தில் ஏற்பட்ட பெருமிதம் அவர் வெளிமனத்தில் ஏற்பட்ட கோபதாபத்தை செல்லுபடியாக்காமல் செய்த ரசாயன மாற்றம், அவருக்கே தெரியாது. இதற்குள், வெளியே இருந்து மாசானம், கோபால், மாணிக்கம், இன்னும் இரண்டு மூன்று இளைஞர்கள் ஓடிவந்து ஆண்டியப்பனைப் பிடித்துக் கொண்டார்கள். கிராம முன்சீப், அடைக்கலசாமியை ஒப்புக்குப் பிடித்துக் கொண்டார். "தங்கம் வீட்டுக்குப் போ! என் வீட்டுக்குப் போ! என் மாமனும் ஒன் அய்யாவும் செத்து ஒரு மணி நேரமாவுது! இனிமேல் நீ... நீ... என் வீட்டுக்கே போகலாம். உம் போம்மா... இது நிற்கக்கூடாத இடம்." அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவள் போல் தங்கம்மா முக்காடு போட்டுக்கொண்டு நகரப் போனாள். பிறகு, தன் முக்காட்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு, சேலையை இறுக்கிப் பிடித்துக் கட்டிக் கொண்டு கம்பீரமாக வெளியேறினாள். "ஏளா... அவன் வீட்டுக்குப் போயி தொலைச்சிராத!" என்று கிழவர் சொல்லிவிட்டதாக நினைத்தார். ஆனால் வார்த்தைகள், வாயை விட்டு வெளியேறவில்லை என்பது அவருக்கே தெரியாது. முன்சீப்பிற்கு, இப்போது தன் உத்தியோகத்தின் நினைப்பு வந்தது. மாசானத்தைப் பார்த்ததும், அந்த எண்ணம் அதிகமாக வந்தது. அதட்டினார். "என்ன மாசானம்! காலிப் பயலுவள கூட்டியாந்து என் வீட்ல கலாட்ட பண்ண வந்தியா? இதே மாதிரி நானும் உன் வீட்ல கலாட்டா பண்ண எவ்வளவு நேரமாவும்... இல்ல போலீஸ் ரிப்போர்ட் பண்ணத்தான் நேரம் ஆவுமா? பதில் சொல்லுப்பா?" மாசானம் பதில் பேசினார். "அண்ணாச்சி! தப்பா நினைச்சிட்டிய. சும்மா வழிலே வந்தேன். இந்தப் பையங்க, ஒங்களப் பாக்கப் போறதா சொன்னானுவ. ஆண்டியப்பன் மாட்ட இவரு பிடிச்சிக்கிட்டுப் போயிட்டதச் சொல்லி, ஒங்ககிட்ட ஒரு ரிப்போர்ட் வாங்கிக்கிட்டு, பெரிய அதிகாரிகள பாக்கப் போறதாச் சொன்னானுவ. சரி சின்னப் பயலுவ, பெரிய மனுஷங்ககிட்ட ஒண்ணுகிடக்க ஒண்ண பேசிடப்படாதேன்னு நானும் கூட வாரேன். கடைசில என்னடான்னா, எனக்குத் தான் கெட்ட பேரு. என் ஜாதகமே அப்படி. சின்ன வயசில இருந்து இப்படி." சரோஜா அம்மா புரிந்து கொண்டாள். சின்ன வயதில், தான் காதலித்துக் கட்டிப்பிடித்த 'மாசான மச்சான்' 'கருவாட்டு ஜாதகத்தால்', தன்னை மணக்க முடியாமல் போனதை சுட்டிக் காட்டுவதைப் புரிந்து கொண்டு, அந்த ஐம்பது வயதுக்காரி, இப்போது இருபது வயதுக்காரியாகித் தவித்தாள். எப்பவோ நடந்தது இப்பத்தான் நடந்தது மாதிரி இருக்கே... வாலிபத்தைத் திரும்ப வரவழைத்துக் கொண்டிருந்த இரண்டு முதியவர்களின் 'புனிதக் காதல்' தாபங்களைப் புரிந்து கொள்ளாத மணியக்காரர் தன்பாட்டுக்குப் பேசினார். "ஒரு கொலையோட நிக்காதுன்னு இவன் மிரட்டுறான். இவனுக்கா நான் ரிப்போர்ட் கொடுக்கணும். நல்லா இருக்கே நியாயம்!" இ.ந. மன்றத்தின் உதவித் தலைவர் கோபால் பதிலளித்தான். "நியாயம் நல்லா இருக்கணும் பெரியப்பா! அதுக்காகத்தான் வந்தோம். பரமசிவம் மாமா தூண்டுலுல இவனோட மாட்ட, இவரு பிடிச்சிக்கிட்டுப் போயிட்டார். வேணுமுன்னா இப்பவே இவர விசாரியும். நீரு ஒரு ரிப்போர்ட் கொடுத்தால் நாங்க போலீஸ்ல கம்ளெயிண்ட் கொடுக்க வசதியா இருக்கும். அதோட இது ஒம்மோட கடமை. முடியாதுன்னு சொல்றதுக்கு உரிமை இல்லாத கடமை." மணியக்காரர் மார்தட்டிப் பேசினார். "ஊர குட்டப் புழுதியாக்குறதுன்னு தீர்மானம் பண்ணிட்டிய! பரவாயில்ல. நான் ரிப்போர்ட்டும் தர முடியாது. வேணுமுன்னால், என்னைப் பற்றி தாசில்தார்கிட்ட ரிப்போர்ட் பண்ணிக்கங்க." வேறு வழியில்லாமல், நற்பணிக்காரர்கள் வெளியே வந்தார்கள். மாணிக்கம் மல்லிகாவைத் திரும்பிப் பார்த்தான். அவள், அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். "ஒனக்கு வேணும் மல்லிகா - நீ எதுக்காக பிறத்தியாருக்கு வக்காலத்து வாங்கணும். இப்போ நடக்கத பார்த்தியா?" என்று சரோஜா, மகளிடம் கோபமாகப் பேசுவது மாணிக்கத்தின் காது வழியாக இதயத்தைக் குத்தியது. இருந்தாலும். இ.ந. மன்றத்தின் தலைவன் அவன். ஒரு லட்சியப் புருஷன். படுகளத்தில் காதல் ஒப்பாரி வைக்கலாகாது! மாசானம் அந்த இளைஞர்களை பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்குக் கொண்டு போனார். அவர்களை ஆணையாளரின் முன்னால் நிறுத்திவிட்டு, அருகேயுள்ள அறையில் வரைபடங்களை முறைத்துக் கொண்டிருந்த யூனியன் எஞ்ஜினீயரின் காதை கடிக்கப் போய்விட்டார். மாணிக்கம் பி.ஏ.பி.டி., ஆணையாளரிடம் நடந்த விவரங்களை ஒப்புவித்தான். அந்த ஆணையாளர் நேர்மையானவர். அதே சமயம் தனக்குக் கீழே இருப்பவர்களையும் நேர்மையாக்க நினைத்ததால், மேலே இருப்பவர்களின் பொல்லாப்புக்கு ஆளானவர். ஏற்கெனவே இந்தப் பரமசிவம் தனக்குக் கட்டாத - கட்ட விரும்பாத வீட்டுக்கு சிமெண்ட் அலாட்மெண்ட் கொடுக்கவில்லை என்பதற்காக இவர் லஞ்சம் வாங்குவதாகக் கலெக்டருக்குப் புகார் செய்து, அந்தப் புகார் மனுவை விசாரிக்க கலெக்டர் தேதி குறித்திருக்கிறார். இந்தச் சமயத்தில், இந்தப் பரமசிவத்தைப் பகைப்பது தூக்குப் போட்டுச் சாவதற்குச் சமம். அதோடு ஆணையாளருக்குப் பல 'அபிஷியல்' சிரமங்கள். 'வேலைக்கு உணவு' திட்டத்தை பழுதில்லாமல் செயல்படுத்த வேண்டும். யூனியன் கணக்குகளை தணிக்கை செய்துவரும் ஆடிட்காரர்களுக்கு ஒரு மாதம் வரைக்கும் இவர் தான் சிகரெட்டில் இருந்து சினிமா வரையில் காசு கொடுப்பதோடு, அவர்களின் மூன்று வேளைச் சாப்பாட்டிற்கும் இவர் தான் 'மொய்' எழுத வேண்டும். பயணப்படி வாங்கும் ஆடிட்காரர்கள், ஒரு நயாபைசா தங்கள் உணவிற்காக செலவழிக்கத் தயாராக இல்லை. தணிக்கை என்பது ஆணையாளர் அவர்களுக்கு 'தனிக் கையால்' செலவழிக்க வேண்டும் என்று 'அன் அபிஷியலாக' ஆகிப் போன அபிஷியல் சமாச்சாரம். இந்த வேதனையில் அவருக்கு நற்பணி மன்ற வேதனை சின்னதாகத் தெரிந்தது. ஆகையால் அந்தப் பிள்ளைகுட்டிக்காரர் பக்குவமாகப் பேசினார். மாசானம், யூனியன் அலுவலகத்திலேயே ஒதுங்கிக் கொள்ள, நற்பணிக்காரர்கள், அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தை நோக்கிப் போனார்கள். மயானத்துக்கு அருகே இருந்த போலீஸ் நிலையத்தில், வழி மறிப்பது போல் போட்டிருந்த மேஜையில், காலைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பன், அவர்களைப் பார்த்ததும், 'வாங்கோ வாங்கோ' என்று எழுந்து வரவேற்றார். உடனே ஓடிப்போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவர்களை எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்ததும் கேட்டார்: "ஒங்க தலைவர் குமார் - மன்னிக்கணும் மிஸ்டர் குமார் வரலியா?" மாணிக்கம் முந்திரிக் கொட்டையானான். "அவன் எட்டயப்பனா மாறிட்டான் சார்! எங்க மன்றத்தில் இருந்து அவன நீக்கிட்டோம் சார்! நன்றி கெட்ட பய சார்! எங்களப் பயன்படுத்தி எங்களையே காட்டிக் கொடுத்துட்டான் சார்!" சப்-இன்ஸ்பெக்டர் முகம் இறுகியது. அப்படியானால், இந்தப் பசங்க, மிஸ்டர் குமாரோட எதிரிகளா... தெரியாத்தனமா உட்காரச் சொல்லிட்டேனே... "என்ன விஷயம்? விஷயத்த சட்டுப்புட்டுன்னு சொல்லுங்க. ஒங்களோட குசலம் விசாரிச்சுட்டு இருக்க எனக்கு நேரமில்ல." அதிர்ந்து போன மாணிக்கம், விவகாரத்தை ஆதியோடு அந்தமாகச் சொன்னான். சப்-இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டே பேசினார். "இது சிவில் சமாச்சாரம். அதோட மாட்டைப் பிடிச்சது அடைக்கலசாமி. பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்த சம்பந்தப்படுத்துறது அதிகப் பிரசங்கித்தனம். இதுல யாரு ஆண்டியப்பன்?" "இவன் தான் சார்!" "இவன் தானா... யோவ், எழுந்து நில்லுய்யா. வேட்டிய கால்வரைக்கும் போடுய்யா - பெரிய துரை மாதுரி மடிச்சிக் கட்டிட்டு நிக்கதை. முன்சீப் ரிப்போர்ட் தந்தாராய்யா?" ஆண்டியப்பன், அதிர்ந்து போய் எழுந்தான். யந்திரம் போல் வேட்டியைக் கீழே இறக்கினான். "முன்சீப் தரமாட்டான் சார்" என்றான். சப்-இன்ஸ்பெக்டர் குதித்தார். "பெரிய மனுஷன, அவன் இவன்னு பேசினால் பல்ல உடச்சிடுவேன். நீங்கல்லாம் படிச்சவங்க. இந்தக் கிறுக்கனை எதுக்காக இன்னும் கிறுக்கனாக்குறீங்க." ஆண்டியப்பனும், இதர இளைஞர்களும் அதிர்ச்சியுற்று, செய்வதறியாது திகைத்த போது, சட்டாம்பட்டி தலையாரி, அங்கே வந்து, இரண்டு கடிதங்களை சப்-இன்ஸ்பெட்கரிடம் நீட்டினார். ஒன்று, முன்சீப், ஆண்டியப்பன் தன்னைக் கொலை செய்ய வந்ததாகக் கொடுத்த ரிப்போர்ட். இன்னொன்று ஆண்டியப்பனை 'உள்ளே போட' குமார் எழுதியிருந்த ரெகம்மண்டேஷன் லட்டர். சப்-இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார். "நீங்க வரும்போதே நினைத்தேன். ஏய்யா ஆண்டி, முன்சீப்ப கொல பண்ற அளவுக்கு ஒனக்கு தைரியம் வந்துட்டு இல்ல? உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்." ஆண்டியப்பன், 'வைக்கவேண்டிய' இடத்தில் வைக்கப்பட்டான். லாக்கப்பிற்கு உள்ளே தள்ளப்பட்ட அவன், இரும்புக்கிராதிக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு செய்வதறியாது திணறினான். |
நாவலெனும் சிம்பொனி ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வகைப்பாடு : இலக்கியம் விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
கடவுளின் நாக்கு ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வகைப்பாடு : கட்டுரை விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|