எட்டாம் திருமுறை மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் 1. சிவபுராணம் (சிவனது அநாதி முறைமையான பழமை)
திருப்பெருந்துறையில் அருளியது
(கலிவெண்பா) திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க 10
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி 15 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான். 20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே 45 கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியர் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதர் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வர் தம்கருத்தின் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனர் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 திருச்சிற்றம்பலம்
2. கீர்த்தித் திரு அகவல் (சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை)
தில்லையில் அருளியது
(நிலைமண்டில ஆசிரியப்பா) திருச்சிற்றம்பலம் தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5 என்னுடை இருளை ஏறத் துரந்தும் அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10 கல்லா டத்துக் கலந்து இனிது அருளி நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும் கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15 விராவு கொங்கை நல்தடம் படிந்தும் கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் 20 நந்தம் பாடியில் நான் மறையோனாய் அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும் வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும் நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25 கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் வேலம் புத்தூர் விட்டேறு அருளிக் கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30 வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும் அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35 நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று ஈண்டு கனகம் இசையப் பெறா அது ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40 தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநல் மாநகர் இருந்து குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45 ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும் பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50 தூவண மேனி காட்டிய தொன்மையும் வாத வூரினில் வந்து இனிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக் கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55 பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப் பாவம் நாசம் ஆக்கிய பரிசும் தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60 குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு அட்டமா சித்தி அருளிய அதுவும் வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு காடு அது தன்னில் கரந்த கள்ளமும் 65 மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் ஓரி ஊரில் உகந்து இனிது அருளிப் பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70 தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோவர் கோலம் கொண்ட கொள்கையும் தேன் அமர் சோலைத் திரு ஆரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும் இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75 படிமப் பாதம் வைத்த அப்பரிசும் ஏகம் பத்தின் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து மருவர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80 சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசும் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85 துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90 குற்றாலத்துக் குறியாய் இருந்தும் அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு இந்திர ஞாலம் போலவந்து அருளி எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் 95 தானே ஆகிய தயாபரன் எம் இறை சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100 அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105 ஆனந் தம்மே ஆறா அருளியும் மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110 மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி காதலன் ஆகிக் கழுநீர் மாலை ஏறு உடைத்தாக எழில்பெற அணிந்தும் அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115 பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் மீண்டு வாராவழி அருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி ஆகவும் பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன் உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120 ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய தேவ தேவன் திருப் பெயர் ஆகவும் இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருள்மலை யாகவும் எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125 அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி நாயினேனை நலம்மலி தில்லையுள் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130 ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் எய்த வந்திலாதர் எரியில் பாயவும் மாலது வாகி மயக்கம் எய்தியும் பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும் கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135 நாத நாத என்று அழுது அரற்றிப் பாதம் எய்தினர் பாதம் எய்தவும் பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140 பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப்புக்கு இனிது அருளினன் 145 ஒலிதரு கைலை உயர்கிழ வோனே. திருச்சிற்றம்பலம்
3. திருஅண்டப் பகுதி (சிவனது தூலசூக்குமத்தை வியந்தது)
தில்லையில் அருளியது
(இணைக் குறள் ஆசிரியப்பா) திருச்சிற்றம்பலம் அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5 சிறிய ஆகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10 எறியது வளியின் கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போன் காக்கும் கடவுள், காப்பவை கரப்போன், கரப்பவை கருதாக் 15 கருத்துடைக் கடவுள், திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணேர் பகுதி கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும் அருக்கனில் சோதி அமைத்தோன், திருத்தகு 20 மதியில் தண்மை வைத்தோன், திண்திறல் தீயின் வெம்மை செய்தோன், பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன், மேதகு காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25 மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று எனைப் பல கோடி எனைப் பல பிறவும் அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் அஃதான்று முன்னோன் காண்க, முழுதோன் காண்க தன்நேர் இல்லோன் தானே காண்க 30 ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க கானம் புலியுரி அரையோன் காண்க நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன் இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35 அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க பரமன் காண்க, பழையோன் காண்க பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க, அநேகன் காண்க சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40 சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையில் படுவோன் காண்க ஒருவன் என்னும் ஒருவன் காண்க விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45 இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க அரியதில் அரிய அரியோன் காண்க மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50 அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55 தேவரும் அறியாச் சிவனே காண்க பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க கண்ணால் யானும் கண்டேன் காண்க அருள்நனி சுரக்கும் அமுதே காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க 60 புவனியில் சேவடி தீண்டினன் காண்க சிவன் என யானும் தேறினன் காண்க அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க அவளும் தானும் உடனே காண்க 65 பரமா னந்தப் பழம் கட லதுவே கருமா முகிலில் தோன்றித் திருவார் பெருந்துறை வரையில் ஏறித் திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப் பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75 எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக் கேதக் குட்டம் கையற ஓங்கி இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80 தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85 ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90 மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத் தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95 கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100 எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க பேர்அமைத் தோளி காதலன் வாழ்க ஏதிலர்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105 நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் நிற்பன நிறீஇச் 110 சொல்பதம் கடந்த தொல்லோன் உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன் விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115 ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன்று எனக்கு எளிவந்து அருளி அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120 ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125 திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130 இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும் முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135 ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும் பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140 ஒளிக்கும் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின் பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145 தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி அறைகூவி ஆட்கொண்டருளி மறையோர் கோலம் காட்டி அருளலும் உளையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150 அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155 ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு கோல்தேன் கொண்டு செய்தனன் ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160 ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் சொல்லுவது அறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு 165 அருளியது அறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து உவாக்கடல் நள்ளுநீர் உள்அகம் ததும்ப வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170 தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதம் ஆன அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 உள்ளம் கொண்டோர் உருச்செய் தாங்கு எனக்கு அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் கருணை வான்தேன் கலக்க 180 அருளொடு பரா அமுது ஆக்கினன் பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே. திருச்சிற்றம்பலம் 4. போற்றித் திருஅகவல் (சகத்தின் உற்பத்தி)
தில்லையில் அருளியது
(நிலைமண்டில ஆசிரியப்பா) திருச்சிற்றம்பலம் நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈர் அடியாலே மூவுலகு அளந்து நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று அடிமுடி அறியும் ஆதரவு அதனில் 5 கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10 யானை முதலா எறும்பு ஈறாய ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் 15 இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களின் ஊறு அலர் பிழைத்தும் 20 ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயர் இடைப்பிழைத்தும் 25 ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகல் பசி நிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் கருங்குழல் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30 ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் 35 பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40 புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும் ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின 45 ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் விரதமே பரம் ஆக வேதியரும் 50 சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தம்தம் மதங்களே அமைவது ஆக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து 55 உலோகா யதனெனும் ஒண்திறல் பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி அதில் பெருமாயை எனைப்பல சூழவும் தப்பாமே தாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகு அது போலத் 60 தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் கொடிறும் பேதையும் கொண்டது விடாதென படியே ஆகி நல் இடைஅறா அன்பின் பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் 65 கசிவது பெருகிக் கடல் என மறுகி அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச் சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70 சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் கதியது பரமா அதிசயம் ஆகக் கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது அருபரத்து ஒருவன் அவனியில் வந்து 75 குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் பிறிவினை அறியா நிழல் அது போல முன் பின்னாகி முனியாது அத்திசை என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80 அன்பு எனும் ஆறு கரை அது புரள நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண்களி கூர நுண் துளி அரும்பச் 85 சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி 90 கூடல் இலங்கு குருமணி போற்றி தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவர் வெல்கொடிச் சிவனே போற்றி 95 கல் நர் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்தனக்கு அருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100 இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவா போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரசே போற்றி அமுதே போற்றி விரை சேர் சரண விகிர்தா போற்றி 105 வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி உடையாய் போற்றி உணர்வே போற்றி 110 கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி 115 வானோர்க்கு அரிய மருந்தே போற்றி ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி மூவேழ் சுற்றம் முரண் உறு நரகு இடை ஆழாமே அருள் அரசே போற்றி தோழா போற்றி துணைவா போற்றி 120 வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி விரிகடல் உலகின் விளைவே போற்றி 125 அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி 130 தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி மானேர் நோக்கி மணாளா போற்றி 135 வான்அகத்து அமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி இடைமருது உறையும் எந்தாய் போற்றி 145 சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீர் ஆர் திருவையாறா போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150 ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி பாகம் பெண் உரு ஆனாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி 155 குற்றாலத்து எம் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலை எந்தாய் போற்றி பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 165 ஏனக் குருளைக்கு அருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள் கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 களம் கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி 175 பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி 180 உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சு ஏர் அடியாள் பங்கா போற்றி அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185 இலங்கு சுடர் எம் ஈசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலை நாடு உடைய மன்னே போற்றி கலை ஆர் அரிகே சரியாய் போற்றி 190 திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி 195 தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி ஆரா அமுதே அருளா போற்றி பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200 தாளி அறுகின் தாராய் போற்றி நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி மந்திர மாமலை மேயாய் போற்றி 205 எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210 படி உறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 215 செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி கழு நீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி 220 புரம்பல் எரித்த புராண போற்றி பரம் பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சய சய போற்றி. 225 திருச்சிற்றம்பலம்
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |