உதயண குமார காவியம் ... தொடர்ச்சி - 4 ... நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல் தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற் றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும் இந்திரன்றானூ ரியல்பினேகினான். 301 செல்வநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து செல்வவிந் திரனனுப்பத் திருமணித் தேரினேறிச் செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தானன்றே. 302 6. துறவுக் காண்டம் உதயணனின் தவ எண்ணம் வளங்கெழு வத்தவற்கு மன்னிய காதன் மிக்க உளங்கெழு கற்பினார்களோதிமம் போலு நீரார் இளங்கிளி மொழியினார்க ளினிமையினால்வரோடும் துளங்கலி றிருமின் போர்மின் தூயசொன் மடந்தை தாமும். 303 மண்ணியன் மடந்தை யோடு மருவினார் மிக்க மன்னன் புண்ணிய முன்னாட் செய்த போதந்தே யுதவி செய்ய எண்ணிய கரும மெல்லா மியைபுடனாகப் பின்னும் புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்தனானான். 304
உதயணன் தவத்தின் பெருமையை எண்ணுதல் ஆசை யென்றனக் கருளும் தோழனா ஓசை வண்புகழ் யூகி யானதும் வாச வதத்தை மனைவி யானதும் பேச ரும்மகப் பெற்றெடுத்ததும். 305 நரவாகனன்மக னாம மானதும் வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங் கரண நேமியா லடிப்ப டுத்ததும் பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும் 306 மிக்க விந்திரன் மேவி விட்டதும் தக்க புத்திரன் றரத்திற் சென்றதும் தொக்க வானவர் தொல்சி றப்புடன் அக்கணம்விட வண்ணல் போந்ததும். 307 போந்து புண்ணியன் பொருவில் போகத்துச் சேந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனா வேந்தனெண்ணியை வெறுத்து மாதரைக் காந்தி வாமனைக் கண்டடி தொழும் 308 உதயணனை மகளிர் மயக்குதல் எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன் புண்ணி யநோன்பு போந்த வேளைவேற் கண்ணின் மாதர்கள் காவ லன்மனம் உண்ணக் காமத்தை யுருவு காட்டினார். 309 உதயணன் மீண்டும் காமத்தில் திளைத்தல் மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற் றுன்னு மால் கடற் றோன்றனீந்துநாட் சொன்ன மும்மதந் தோன்ற வேழமும் உன்னிக் காற்றளை யுதறி விட்டதே. 310 மதவெறி கொண்ட யானை காய்ந்து வெம்மையிற் காலன் போலவே பாய்ந்து பாகரைப் பலசனங்களைத் தேய்த்துக் காலினேர் தீயுமிழ்வபோல் ஆய்ந்த கண்களு மருவ ரையென. 311 வெடிப டும்முழக் கிடியெனவிடும் கொடியு டைமதில் கிடுகி டென்றிடும் விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப் படப டென்னவே பயண மானதே. 312 நகர மாந்தர் செயல் அடிய டிய்யென வாயு தர்செலப் படுவ டுவ்வெனப் பறைகள் கொட்டிடத் திடுதி டென்றொலி தெறித்த பேரிகை நடுந டுங்கினார் நகர மாந்தரே. 313 களிற்றின் வெறிச்செயல் பிடிசில் பாகரைப் பிளந்தெ றிந்திடக் குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன் கடவுள் யானையைக் காலிற் றேய்த்திட இடர்ப டுங்களி றெய்தி யோடுமே. 314 நகரமாந்தர் அரசனுக்கு செய்தி தெரிவித்தல் நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற் சிகரம் போன்முடிச் சீர ரசற்குப் பகர வாரணம் பலரைக் கொன்றதென் சிகர மாடநீர் சேர்த்தி ருக்கென்றான். 315 யானை, சோலை முதலிய அனைத்தையும் அழித்தல் நீல நற்கிரி நெடிய யானையும் மாலை நற்போது மாய்ந்து பின்னுறக் காலை நற்போதாற் கனன்று தோன்றின சோலை நல்வய றுகைத்த ழித்ததே. 316 வழிவ ருவாரை மார்கி ழித்திடும் எழில்வனம்பொய்கையீட ழித்திடும் இழிவு றுந்தொழி லீண்டிச் செய்யுநாட் பொழிலுண் மாதவர் பொருந்தினார்களே. 317 சாரணர் சார்ந்திருந்த பொழில் வேத நான்கையும் விரித்த ருளுவர் மாத வர்வினை மாயச் செய்குவார் ஏதில யாத்திரைக் கெழுந்து வந்தந்தப் போத விழ்பொழில் புகுந்தி ருந்தனர். 318 சாரணரின் பெருமை இனமலர் மிசை யேகு வார்களும் புனல லைமிசைப் போகு வார்களும் கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர் இனிய நூன்மிசை யிசைந்து செல்வரும் 319 மலைத்த லைமிசை வானிற் செல்வரும் நிலத்தினால்விரனீங்கிச் செல்வரும் தலத்தினன்முழந் தரத்திற் செல்வரும் பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும் 320 மலைமு ழஞ்சுண் மன்னினான்முடி உலகெ லாமவ ரொருங்கி டம்விடும் அலம தீரவே வறம ழைபெய்யும் மலமறுந்தர மாமுனிவரும். 321 பக்க நோன்புடைப் பரம மாமுனி மிக்க பாணிமீ தடிசின் மேதினி புக்கு முண்டிடப் போது வார்பகல் தக்க வர்குணஞ் சாற்றரி தென்றே 322 தருமவீரர் அறம் கூறுதல் தரும வீரரென்றவருட் டலைவன்பால் வெருவ ருந்துன்ப விலங்கும் வாழ்க்கையை மருவி யோதவே வந்த யாவரும் திருமொழியினைத் திறத்திற் கேட்டனர் 323 யானையின் செயல் வருந்த சைநசை வானிற் புள்ளுகள் இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப் பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும் விருந்த வையுண விட்ட தியானையே. 324 யானை சாரணர் மூலம் பழம் பிறப்புணர்தல் கூற்றெழுங்கரி கொதித்தெ ழுந்ததால் ஆற்றலம்முனியறவு ரையுற ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை மாற்ற ரும்பவ மறிந்து ணர்ந்ததே. 325 யானையின் வருத்தம் குருதியாறிடக் கொன்ற தீவினை வெருவு துக்கமும் விளங்கினுய்த்திடும் அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும் பெருந்து யரெனப் பேது றுக்குமே. 326 யானை மெய்யுணர்வு பெற்று அமைதியுறல் நெஞ்சு நொந்தெழு நெடுங்க ணீருகும் அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக் குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி இஞ்சி வாய்தலினெய்தி நின்றதே. 327 களிற்றினைக் காண உதயணன் வருதல் கடையுடைக் காவலாளர் கதவினைத் திறக்கப் போந்தே நடுநகர் வீதி சென்று நரபதி மனையைச் சேர்ந்து நெடுவரை போல நின்ற நீர்மையை வாயி லாளர் முடிமனற் குரைப்ப முன்னிப் பெருமகனெழுந்து வந்தான். 328 உதயணன் களிற்றின் மீது ஏறல் திருமுடி மன்னனின்ற திருநிறை யானை கண்டு மருவிய வமைச்சர் தம்மை மன்னவனினிதினோக்கப் பெருவிறல் யூகி சொல்வான் பெருந்தவர் பால றத்தை மருவியே கேட்ட தாகு மன்னநீ யேற வென்றான். 329 யானை உதயணனை முனிவரிடம் கொண்டு செல்லல் வேந்தனுங் கேட்டு வந்து வெண்கோட்டினடிவைத் தேறிச் சேந்தனனெருத்தின் மீதிற் றிரும்பிக்கொண்டேகி வேழம் பூந்தளிர் நிறைந்தி லங்கும் பொழில் வலஞ் சுற்ற வந்து காந்துநன் மணிப்பூண் மார்பன் கைம்மாவிட் டிழிந்தானன்றே. 330 உதயணன் துறவியிடம் அறங்கேட்டல் விரைகமழ் பூவு நீரும் வேண்டிய பலமு மேந்திப் பரிசனஞ் சூழச் சென்று பார்த்திபனினியனாகி மருமலர் கொண்டு வாழ்த்தி மாதவ ரடியி றைஞ்ச இருவென விருக்கை காட்ட விருந்துநல் லறத்தைக் கேட்டான். 331 முனிவர் கூறிய அறவுரைகள் அறத்திற முனிவன் சொல்ல வரசனுங் கேட்க லுற்றான் பெறற்கரு மருங்க லங்கள் பேணுதற் கரிய வாகும் திறத்தறி பொருள்க ளாறுந் தேர்ந்துபஞ் சத்தி காயம் மறித்தறி தத்து வங்கள் வரிசையினேழ தாமே. 332 சீரிய நவப தங்கள் செப்பிய காய மாறும் வீரியப் பொறிக ளாறும் வேண்டிய வடக்க மாகும் ஓரிய லறம்பத் தோடு மொருங்குபன்னிரண்டு சிந்தை ஆரிய ரறிந்து நம்பி யதன்வழி றொமுக்க மாகும். 333 தலைமகார் சிறப்புச் செய்து தன்மைநல் வாய்மை யான கலையினற் கரைறைக் கண்டு காதனூல் வழியைச் சென்று மலைவில்சீர் மா தவர்க்கு வண்மையிற் றானஞ் செய்தார் தொலைவிலாய் பிறவி நீங்கித் தொல்சுகக் கடலுளாழ்வார். 334 தரும வீரர் தரும முறைத்திடப் பெருமை மன்னனும் பேர்ந்து வனங்கினன் மருவு வல்வினை மாசினுதிர்த்திடத் தெரிசனவ்விளக் கஞ்சிறப் பானதே. 335 முனிவர் களிற்றின் வரலாறு கூறல் காது வேன்மன்னன் களிறு கதமெழற் கேது வென்னென யெதிவ ரன்சொலும் தாது பூம்பொழிற் சாலிநன்னாட்டிடை வேதியர் குழு வாய்விளங் கும்புரம். 336 கடக மென்பதூர் காதற் பிராமணன் விடப கன்னென்னும் பேரினன் மற்றவன் இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள் கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள். 337 அமரி யென்னு மணிமுலை வேசிதன் அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன் சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும் அமைவி லன்பவ மஞ்சினனில்லையே. 338 காமங் கள்ளுண்டு கைவிட லின்றியே தாம நற்குழ லாடுணை யாகவும் யாம மும்பக லும்மறி யாதவன் ஆமர ணத்தன்பினானைய தாயினன். 339 மன்னனின் செயல் அந்நிலை யுணர்ந் தடங்கிய தென்றனர் மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச் சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும் அன்னம் பானெய்யினன்புடனூட்டெனும். 340 கவள நாடொறு மூட்டெனுங் காவலன் பவள மாமெனும் பண்ணவர் தம்மடி திவளு மாமுடி சேர்த்து வணங்கியே உவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன். 341 உதயணன் முனிவரை வினவுதல் மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக் குதவக் காரண மென்னெனக் கூறலும் சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர் மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார். 342 முனிவர் கூற்று உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார் கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியே வெள்ளி யம்மலை மேல்வட சேடியில் வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள். 343 அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம் செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனை உகந்து பெற்றன ளோர் புகழ்க் கோமுகன். 344 காமனென்னுமக் காளைகைத் தாய்பெயர் சோமசுந்தரி யென்னுஞ் சுரிகுழல் நாம வேன்மகனன்மை விசையனும் சேம மித்திர ராகச் சிறந்தனர். 345 ஒழியாக் காதலுடன்விளை யாடியே வழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும் நழுவில் காட்சியனாமவேற் கோமுகன் ஒழிய நல்லுயி ரோங்கிநீ யாயினை. 346 விசையின் றன்னுயிர் விட்டந் தணனாய் வசையில் காம மயங்கிய மோகத்தின் இசையினாலுயிர் நீங்கியே யிங்குவந் தசையு ணாக்களி றாயின தாகுமே. 347 மித்திரன்முன்பு வீறுநற் காதலால் அத்தி மேலுனக் கன்புமுன் டானதால் வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின் ஒத்த வாயுவு மோரெழு நாளென்றார். 348 உதயணன் வருந்திக் கூறுதல் திருந்து ஞானத்திற்றோர்ந்த முனியுரை பொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய் வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச் சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான். 349 உதயணன் செயல் வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால் வெஞ்செம் முள்ளினை வீரிட வூன்றியும் மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன் குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே. 350 காதல் யானையைக் கையின்மெய் தீண்டியே போத வெங்கும் புரவலன் றைவரப் போத கம்மிகப் பொற்பினிறைஞ்சலிற் காத லிற்றிண் களிற்றியல் கூறெனா. 351 உதயணன் அரண்மனை புகுதல் யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன் தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர் ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச் சேனை சூழத் திருமனை சேர்ந்தனன். 352 உதயணனின் வழிபாடு சீலமும் வளங்களுஞ் செறிந்தவேழத் தன்மையை காலையவ்வு ழையர் வந்து கண்டுரைப்ப மன்னனும் ஆலையம் வலமதா யருகனைவ ணங்கிப்பின் பாலடிசினெய்யருந்திப் பாரரசன் செலுநாள். 353 உதயணனின் செயல் சல்லகீணை கொண்டுடன் சமாதிவந்தே யெய்தலும் நல்லவானிற் றேவனாய் நாகமுறை செய்யக்கேட்டுச் சொல்லரிய வேந்தனுஞ் சூழ்ந்தவனி போகவும் நல்லலவென் றுணர்ந்தனனேமியனைவா வென்றனன். 354 நரவாகனனிடம் உதயணன் கூறுதல் அவனும் வந்து தந்தையை யடியிணைவ ணங்கினான் அவனியுன தாகவா ளென்ன மன்னன் செப்பினன் தவவனிதை யாளநான் றாங்குதற்குப் போவனே உவமமிலா ராச்சிய முற்றதெதற் கென்றனன். 355 கோமுகனுக்கு முடிசூட்டுதல் வத்தவன்னிறைவனாக மன்னுகோ முகனுக்கு வெற்றிநன்ம ணிமுடியை வீறுடனே சூட்டியே ஒத்துலக மாள்கவென் றுரைபல வுரைத்தபின் சித்திரநேர் மாதரைச் செல்வனோக்கிக் கூறுவான். 356 உதயணனன் மனைவிகளிடத்து கூறலும் அவர்களின் பதில் உரையும் தேவியீர் நீர் வேண்டியதென் றிருமனை துறந்துபின் மேவுவனற் றவமென்ன மின்னிடைய மாதரும் போவதுபொ ருளெமக்குப் புரவலனே நின்னுடன் தாவில்சீர் விழுத்தவழுந் தாங்குதுமென் றிட்டனர். 357 உதயணனுடன் தேவியரும் செல்லல் உருமண்ணு விடபகன் யூகிநல் வயந்தகன் பொருவினா லமைச்சரும் பொற்பரசன் மாதரும் மருவுநன் மலர்ப்பொழில் வண்மைவலங் கொண்டுமிக் கருண்முனிவர் பாதத்தி லன்புடன் பணிந்தனர். 358 உதயணன் முனிவரிடம் வேண்டுதல் நாத்தழும்ப மன்னனு நயமுறு மினிமையின் தோத்திரங்கள் கொண்டுமீத் தொடுத்தொலியின் வாழ்த்தியே ஏத்தற முரைத்திட வினிமை வைத்துக் கேட்டனன் ஏத்தரிய நற்றவமு மெங்களுக் களிக்கென்றான். 359 உதயணன் முதலியோரின் தவக்கோலம் காலமிது காட்சிதலை கண்டுணர்த்தக் கைக்கொண்டு ஞாலநிகழ் ஞானமு நன்குமிகவே யுணர்த்திச் சீலமாதி யாயொழுக்கஞ் சீருடனளித்துப்பின் கோலமான குஞ்சிமுதல் வாங்கித்தவங் கொண்டனர். 360 அனைவரின் தவநிலை அறுவகைய காயங்களை யருண்மிக்குற் றோம்பியும் பொறிகளை மனத்தடக்கிப் புண்ணியமா நோன்புகள் அறிகுறி யநசன மாற்றுதற் கரிதென மறுவறு தியானமு மதியகந் தெளிந்தவே. 361 புறத்தினும் மகத்தினும் போகத் தொடர்ப் பாடுவிட் டறத்திடை யருளினா லாயிருரை யோம்பியும் திறத்துடன் சமிதியுஞ் சிந்தையின்னடக்கமும் திறத்திறத் துணர்ந்துபின் றியானமுற்றினார்களே. 362 ஒருவகை யெழின்மன மிருவகைத் துறவுடன் மருவுகுத்தி மூன்றுமே மாற்றிநான்கு சன்னையும் பொருவிலைம் புலம்மடக்கிப் பொருந்தியவா வச்சமூ விருவகைச் செவிலியு மெழுவரையும் வைத்தனர். 363 சுத்திமீக வெட்டினோடுஞ் சூழ்ந்தயோகு வொன்பதாம் பத்துவகை யூற்றடைத்துப் பயின்றவங்கம் பத்தொன்றும் சித்தம்பனி ரெண்டுசீர்க் கிரியைபதின் மூன்றுடன் ஒத்தபங்க மீரேழு மொருங்குடன் பயின்றனர். 364 உதயணன் கேவல ஞானம் எய்துதல் உதயண முனிவனு மோங்குமாவரைதனில் இதயமினி தாகவே யெழில்பெறநல் யோகமாய் இதமுறு தியானத்தினிருவினை யெரித்துடன் பதமினிது சித்தியெய்திப் பரமசுகத் திருந்தனன். 365 தேவியரும் அமைச்சரும் நோன்பிருந்து தேவராதல் அமைச்சரா மநகரு மானவன்ன மாதரும் சமைத்தநோன்பு நோற்றுயர்ந்து சமாதிறன் மரணத்தின் இமைத்தலில் லமரரா நிறைந்தசோத மாதியாய் அமைத்தவச் சுதம்மள வானபாடியின்புற்றார். 366 தேவியரும் அமைச்சரும் தேவலோகத்தில் இன்புற்றிருத்தல் பொற்புடைநன் மாதரைப் புணர்ந்துமேனி தீண்டலும் அற்புதமாய்க் காண்டலு மானவின்சொற் கேட்டலும் கற்புடைமனத்திலெண்ணிக் காணற்கரி தாகவே விற்பனநன் மாதவர் வேண்டுசுகந் துய்த்தனர். 367 காண்டங்களின் செய்யுட் தொகை உஞ்சை நற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீரெட்டு விஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்பதாகும் எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத்தஞ்சாம் அஞ்சுடனைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே. 368 [நூற்றீரெட்டு - நூற்றுப்பதினாறு. கடவுள் வாழ்த்து, அவையடக்கம்,
பயன் கூறும் செய்யுள், உள்ளிட்ட நான்கு செய்யுள் நீங்கலாக உஞ்சைக்
காண்ட செய்யுட்தொகை]
நறுமலர் மாலை மார்பனரவாக காண்டந் தன்னில் அறுபது மொன்று மாகு மாகிய துறவுக் காண்டம் அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந் திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகுமன்றே. 369 |
ஐ லவ் யூ மிஷ்கின் ஆசிரியர்: சி. சரவணகார்த்திகேயன்வகைப்பாடு : சினிமா விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 205.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் ஆசிரியர்: வேணு சீனிவாசன்வகைப்பாடு : தத்துவம் விலை: ரூ. 377.00 தள்ளுபடி விலை: ரூ. 340.00 அஞ்சல்: ரூ. 50.00 |
|