-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்


யசோதர காவியம்

... தொடர்ச்சி - 2 ...

அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்

என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை
தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன
என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே
துன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே. 101

தோழி, பாகனைக் கண்டு மீளல்

மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன்
ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே
கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத்
தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்டாள். 102

(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்

மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்
தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான்
றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்டேன்
என்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள். 103

நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற்
குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன்
நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள். 104

பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா
சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம்
நீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள்
கோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே. 105

அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்

என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம
சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும
ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம்
நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ. 106

காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல்
காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன்
ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக்
நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள். 107

தோழியின் அச்சம்

தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான்
ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும்
பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ
நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள். 108

இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்

ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்
கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப்
பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே
தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்றாள். 109

தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு
கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள்
முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ
லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே. 110

மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்

அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன்
உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின்
விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத்
துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே. 111

மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்

துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி
மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக்
கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண்
செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான். 112

அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்

கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால்
இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்
புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே.
துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே. 113

அரசி மூர்ச்சை யெய்துதல்

இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல்
வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்
தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே
மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான். 114

அரசி மூர்ச்சை தெளிந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்

தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி
வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோ
விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய்
வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்றாள். 115

அரசியின் உறுதிமொழி

பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங்
கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ
எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர்
சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ. 116

மறைந்து நின்ற மன்னனின் செயல்

என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக்
கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே
யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும்
சென்றிடை விலக்கி நின்றோர் தௌ¤ந்துணர் வெழுந்ததன்றே. 117

மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர்
பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன்றுண்
டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற்
றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான். 118

இனையன பலவஞ் சிந்தித் திழிப்பொடு பழித்து நெஞ்சிற்
புனைவளை யவர்கள் போகம் புறக்கணித் திட்டு மீண்டே
கனவரை யனைய மார்பன் கடிகம ழமளி யேறித்
தனிமுனி களிறு போலத் தானினை வெய்து கின்றான். 119

மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்

எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும்
மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத்
திண்மையையுடைக்கு மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை
கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான். 120

இதுவுமது

உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின்
திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக்
கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த
துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான். 121

மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்

மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள்
புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்
பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும்
கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான். 122

மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்

மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை யின்பச
சுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை
மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே
கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள்.123

இதுவுமது

நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே
மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும்
புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்
மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே. 124

இதுவுமது

புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய
விருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற
தரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி
விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான். 125

மன்னன், தாயிடம் சேறல்

“ஆயிடை யரச னுள்ளத் தரசினை விடுப்ப வெண்ணித்
தாயமர் கோயி லெய்திச் சந்திர மதிதன் முன்னர்ச்
சேயிடை யிறைஞ்ச மற்றித் திரைசெய்நீ ருலக மெல்லாம
நீயுயர் குடையின் வைகி நெடிதுடன் வாழ்க வென்றாள்.” 126

சந்திரமதி ஐயுறல்

மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா
வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ
பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய
துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று. 127

அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்

விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே
மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக
கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ
தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான். 128

உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால் விளைந்ததெனக் கூறல்

கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா
இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த
பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால
விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம். 129

ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின்
மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்
கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை
மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு 130

மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே
கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே
சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல
கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள். 131

மன்னன் நெறியறிந்து கூறல்

ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந்
தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி
ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில்
தாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான். 132

என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா
தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின்
என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய்
மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான். 133

யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவர் தம்மைக் கொல்லின்
வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி
ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி
மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே. 134

அன்றியு முன்னின் முன்ன ரன்னைநின் குலத்து ளோர்கள்
கொன்றுயிர் கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லர்
இன்றுயிர் கொன்ற பாவத் திடர்பல விளையு மேலால்
நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம். 135

மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்

என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென்றே
சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங்
கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து
சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள். 136

மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக்
கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற்
றெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால்
வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான். 137

உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்¢கொலை போலுமென்னும
பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன
செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற் கிசைந்ததென்றான்
அயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான். 138

மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய
பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய
தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ் செய்தே
ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான். 139

மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்

மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட
சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி
கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ
மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே. 140

என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி
சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல
பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த
கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான். 141

ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை
ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை
ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும்
ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றான். 142

அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்

இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித்
தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான்
அனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான்
எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள. 143

அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே
விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும்
அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால்
அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள். 144

ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும்
வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே
தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான்
தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே. 145

நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக
எஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே
வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள்
சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள். 146

மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்

நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்
அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்
புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித்
துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே. 147

உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்

எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை
கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின்
மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள்
பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார். 148

விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்

தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண்
காதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ்
சேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார்
ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம். 149

நகரத்து அறிஞர் கூறுதல்

அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கெளியனல்லன்
மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான்
இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண
சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார். 150

இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும்
நினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக்
கனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள்
மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள். 151

இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண்
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்
புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே
மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள். 152

யசோமதி முடிபுனைந்து அரசனாதல்

வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி
யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச்
சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான்
ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான். 153

இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின்
இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம்
இனையது தெளிவி லாதா ரிருநில வரசு செய்கை
வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான். 154

மூன்றாஞ் சருக்கம்

யசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்

மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர்
நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப்
பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப்
புற்ற தாகு முரைக்குறு கின்றதே. 155

விந்த நாம் விலங்கலின் மன்னவன்
வந்தொர் மாமயி லின்வயிற் றண்டமாய்
வந்து நாளிடை நாயொடு கண்டகன்
வந்தொர் வாளியி னான்மயில் வாட்டினான். 156

அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன்
வம்பு வாரண முட்டையின் வைத்துடன்
கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென
நம்பு காமர் புளிஞிகை நல்கினான். 157

சந்தி ரம்மதி யாகிய தாயவள்
வந்து மாநக ரப்புறச் சேரிவாய
முந்து செய்வினை யான்முளை வாளெயிற்
றந்த மிக்க சுணங்கம் தாயினாள். 158

மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக்
கியலு பாயன மென்று கொடுத்தனர்
மயரி யாகு மிசோமதி மன்னவன
இயலு மாளிகை யெய்தின வென்பவே. 159

மன்ன னாகிய மாமயின் மாளிகை
தன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத்
தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண்
டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே. 160

அஞ்சி லோதியர் தாமடி தைவரப்
பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல்
துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ
டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல். 161

சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத்
தரைய மேகலை யாரி மைர்ந்துணும
அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய
இரைய வாவி யிருந்தயில் கின்றதே. 162

வந்து குப்பையின் மாசன முண்டபின்
சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின்
றந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச்
சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே. 163

நல்வ தத்தொ டறத்திற நண்ணலார
கொல்வ தற்குள முன்செய் கொடுமையான
ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர்
வெல்வ தற்கரி தால்வினை யின்பயன். 164

மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை
யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை
முற்று வார்முலை யாண்முயங் குந்திறம
மற்ற மாமயில் வந்தது கண்டதே. 165

அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி
ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின
தப்பி லன்னது சாரன்றன் கண்களைக்
குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே. 166

முத்த வாணகை யாண்முனி வுற்றனள்
கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும்
மத்த கத்தை மடுத்து மறித்தது
தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே. 167

தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள்
நாய்பின் னோடி நலிந்தது கவ்விய
வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது
தீமை செய்வினை செய்திற மின்னதே. 168

நாயின் வாயில் நடுங்கிய மாமயில்
போய தின்னுயிர் பொன்றின மன்னவன்
ஆயு மாறறி யாத விசோமதி
நாயை யெற்றின னாய்பெய் பலகையால். 169

யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்

மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி
துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை
இன்னல் செய்யுமோ ரேனம தாகிய
தன்ன தாகு மருவினை யின்பயன். 170

சந்தி ரம்மதி நாயுமச் சாரலின்
வந்து காரிருள் வண்ணத்த நாகமாய
அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர்
வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே. 171

தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற்
சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர்
பாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ
போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே. 172

மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்

மன்னன் மாமயில் சூகரம் வார்புனல்
இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள்
உன்னு மொப்பி லுலோகித விப்பெயர்
மன்னு மீனின் வடிவின தாயிற்றே. 173

சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்

சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
முந்து சன்று முதலைய தாயது
வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான
உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில். 174

அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள்
வந்து வாயின் மடுத்தது கொண்டது
கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத்
தந்த கொல்கென மன்னவன் சாற்றினான் 175

வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின
சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்
கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர்
அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார். 176

சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்

சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்து வார்வலைப் பட்ட கராமரித
தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய்
வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே. 177

மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை
அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர்
கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக்
குற்ற செய்கைக் குரித்தென வோதினார். 178

அறுத்த மீனி னவயவ மொன்றினைக்
கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர
இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன
சிறக்க வென்றனர் தீவினை யாளரே. 179

நின்ற கண்டத்து நீளுயிர் போமது
சென்ற தன்பிறப் போர்ந்து தெளிந்தது
தின்று தின்று துறக்கத் திருத்துதல்
நன்று நன்றென நைந்திறந் திட்டதே 180

மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்

மன்னன் மாமயில் சூகர மாயமீன்
முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர
மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின
தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே. 181

தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்

தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்
ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர
பாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின
தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே. 182

தாய்வ யிற்கரு வுட்டக ராயது
போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன
மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன
தாயை வாளியிற் றானுயிர் போக்கினான். 183

வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை
நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத்
தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென
ஆளி மொய்ம்ப னருளின னென்பவே. 184

யசோமதி பலியிடும் செய்தி கூறல்

மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன்
பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய்
உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான்
கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ. 185

இன்றெ றிந்த வெருமை யிதுதனைத்
தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின்
நன்றி தென்றன ரந்தணர் நல்கினார
நின்று பின்சில நீதிகள் ஓதினார். 186

ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற்
காது காகங் கவர்ந்தன வாமெனின்
தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென
ஓதி னாரினி யொன்றுள தென்றனர். 187

தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி
சாத நல்ல தகர்முகத் துப்படின
பூத மென்றனர் புண்ணிய நூல்களின்
நாத னாரத் துராதிக ணன்றரோ. 188

என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன்
நன்று நாமுன் வளர்க்க விடுத்தது
சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின
நன்றி தென்று நயந்தன ரந்தணர். 189

சென்று நல்லமிர் துண்டது தின்றனர்
அன்று மன்ன னிசோதர னன்னையோ
டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென
நன்று சொல்லினர் நான்மறை யாளரே. 190

இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்

அத்த லத்தக ராங்கது கேட்டபின்
ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன
இத்த லத்திறை யான விசோமத
மத்த யானையின் மன்னவ னென்மகன். 191

இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி
இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம்
இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம்
இதுவென் யானிவ ணின்னண மாயதே. 192

யான்ப டைத்த பொருட்குவை யாமிவை
யான்வ ளர்த்த மதக்களி றாமிவை
யான ளித்த குலப்பரி யாமிவை
யான்வி ளைத்த வினைப்பய னின்னதே. 193

இவர்க ளென்கடைக் காவல ராயவர்
இவர்க ளென்படை நாயக ராயவர்
இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர்
இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே. 194

என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத்
தன்ன மென்னடை யாளமிர் தம்மதி
மன்னு தன்மறை யானொருட வைகுமோ
என்னை செய்தன ளோவிவ ணில்லையால். 195

அசைய தாகி யரும்பட ரொன்றிலா
இசையி லாதன யானுற வித்தலைத்
தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ்
வசையின மன்னவன் வானுல குய்க்குமோ. 196

பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம்
மேதி னிப்பதி யாதல் விடுத்தபின்
யாது செய்தன னோவினை யேனிடை
யாது செய்குவ னோவுண ரேனினி. 197

சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்

இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா
வினையி னாகிய வெந்துயர் தந்திடத்
தனையன் மாளிகை தன்னுள நோகமுன்
சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே. 198

சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்தி டங்கரு மாகிய வாடது
நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து
வந்து மாயிட மாகி வளர்ந்ததே. 199

வணிகர் தம்முடன் மாமயி டம்மது
பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள்
அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல்
வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே. 200



யசோதர காவியம் : 1 2 3