முதல் பாகம் 1. புஷ்பப் பல்லக்கு அன்றிரவு புஷ்பப் பல்லக்கு. சிதம்பரத்தில் இருந்து கொண்டு வைத்திய நாதனின் மேளக் கச்சேரி கேட்காமலும் இருக்கலாமோ என்று சிவராமன் சாப்பிட்டானவுடன் எட்டரை மணிக்கே ஸ்வாமியைக் கிளப்பி அழைத்து வரக் கோயிலுக்குப் போய்விட்டான். “இந்தப் பனீலே...!” என்று ஒரு பெரிய ஆச்சரியக்குறியுடன் மாமனார்ப் பிராம்மணன் நைசாகச் சொல்லிப் பார்த்தார். பலனில்லை. முந்திய இரவு நகர கதா காலக்ஷேபக் கமிட்டி அங்கத்தினராகக் கண்விழித்த சிரமம் வேறு. தவிரவும் கோர்ட்டிலே அன்று வழக்கத்துக்கு விரோதமாகக் கொஞ்சம் அதிக வேலையும் இருந்து விட்டது. பல்லக்கு, தம் வீட்டுக்கு எதிரே வரும் வரையில் விழித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வக்கீலுக்கு உத்தேசந்தான். எனினும் அவரால் முடியவில்லை. நாற்காலியிலிருந்து ஈஸிசேருக்கும், ஈஸிசேரிலிருந்து கட்டிலுக்குமாக நகர்ந்து சீக்கிரமே படுத்து, மணி பதினொன்று அடிக்கும் முன்னரே அவர் தூங்கிவிட்டார். ஆனால் தூங்குவதற்கு முன், ஜாக்கிரதையாகத் தம் மனைவியை, “ஏய்!, ஏய்! உன்னைத் தானே!” என்று இரண்டு தரம் கூப்பிட்டு, “பல்லக்கு நம்மாத்துக்கு எதிரே வரச்சே என்னையும் எழுப்பு” என்று சொல்லிவைத்தார்.
தவிரவும் வைத்தியநாதனுக்கு அது தன்னுடைய கடைசிப் புஷ்பப் பல்லக்குக் கச்சேரி என்று தெரியும் போலும்! என்றும் இல்லாதபடி, அவனையும் மீறியே அதி அற்புதமாக அழகாக வாசித்தான். ஒரு கலைஞனுக்கு ஏற்ற ரசிகர்கள் அகப்பட்டுவிட்டால், அவன் தன் கலையின் கோடிகளை எட்டிப்பிடித்துக் காட்டாமல் விட்டுவிடுவானா? தன்னைச் சுற்றி நின்ற சிலர் முகத்திலே ரஸனை தாண்டவமாடுவதைக் கண்டுவிட்டான் வைத்தியநாதன். அவ்வளவுதானே அவனுக்கு வேண்டியது! மேளகாரனும், ரசிகர் குழாமும், ஜனக்கூட்டமும் நகர்ந்து வழிவிட்டால்தானே ஸ்வாமியும் பல்லக்கும் நகரலாம்? புஷ்பப் பல்லக்கு மேல வீதி திரும்பும்போது மணி இரண்டரை ஆகிவிட்டது. வானத்து மேகத்திரை சிற்சில சமயங்கள் உறுமுவதும், சரிகை வேலை செய்து காட்டுவதுமாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மழை பெய்வதானால் கூட மறுநாள் தான் பெய்யும்போல் இருந்தது. தவிரவும் ஜனங்களுக்கு, கானவர்ஷத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர்களுக்கு, மழை என்கிற ஞாபகமே வரவில்லை. மழை பெய்திருந்தால் கூடத் தலை நனைந்த பிறகுதான் சுயப்பிரக்ஞை வந்திருக்கும் அவர்களுக்கு. இப்படியாகப் புஷ்பப் பல்லக்கு மேல வீதிக் கோடியில் உள்ள தபாலாபீஸை நெருங்கிய போது மணி மூன்றரை ஆகிவிட்டது. தபாலாபீஸுக்கு அடுத்தாற்போலத்தான் சிவராமனின் மாமனார் வீடு. வீட்டில் எல்லோரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தார்கள். சிவராமனின் மாமியார் மட்டும் அடிக்கடி விழித்துக் கொள்வது, பல்லக்கு வருகிறதா, மேளச் சப்தம் கேட்கிறதா என்று கவனிப்பதுமாக இருந்தாள். பல்லக்கு மேலச் சந்நிதியைத் தாண்டுவதற்குள் ராதை அம்மாமி, வீட்டில் எல்லோரையும் எழுப்பி வாசலில் கொண்டு வந்து நிறுத்திவிட்டாள். அவள் பெண் ராஜமும் தூங்கிவழிந்த கண்களுடன் பல்லக்கின் வருகையையும், தன் கணவன் சிவராமனின் வருகையையும் எதிர்நோக்கி வாசல் குறட்டில் நின்று கொண்டிருந்தாள். மூத்த பிள்ளை குஞ்சு போய் வக்கீல் நாராயணஸ்வாமி ஐயரைத் தட்டி எழுப்பினான். நாலு குரலுக்கு அவர் எழுந்திருக்கவில்லை. ஐந்தாவது கூக்குரலுக்கு விழித்துக் கொண்டவர், “என்னடா அது? அதுக்குள்ளே? பல்லக்கு இன்னும் கடைத்தெருவைக் கூடத் தாண்டவில்லை. அதுக்குள்ளே என்னடா?” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் இழுத்துப் போர்த்துக்கொண்டு புரண்டு படுத்துத் தூங்க ஆரம்பித்துவிட்டார். வடக்கு வீதித் திருப்பத்தில் சிவராமன் நாகஸ்வரம் கேட்டுக் கொண்டு நின்றான். புஷ்பப் பல்லக்கு நாராயண ஸ்வாமி ஐயர் வீட்டு வாசலில் நின்றது. வெளிச்சமும் சப்தமும் கடைசியில் நாராயணஸ்வாமி ஐயரின் தூக்கத்தையும் கலைத்தன. அவர் தாமாகவே எழுந்து வந்து வாசல் கீழ்ப் படியில் நின்றுகொண்டு ஸ்வாமியைப் பார்த்து இரண்டு தரம் தாடையில் போட்டுக்கொண்டார். ஆறு மாதத்தில் வக்கீலாகத் தாம் செய்த பாபங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் அது என்று எண்ணுபவர்போலத் தாடையில் சற்று ஓங்கியே போட்டுக் கொண்டார். அடுத்த விநாடியே அவர் சிந்தனை ஸ்வாமியிடமிருந்து விலகிவிட்டது. “அப்பாடி, என்ன பனி!” என்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்துவிட்டு, “மழை வேறே பெய்யும்போல் இருக்கே” என்றார். அவர், ‘என்ன பனி!’ என்றது அவருடைய மனைவி காதில், ‘என்ன மணி?’ என்று விழுந்ததுபோலும். “மணி மூன்றரை” என்று பதில் அளித்தாள் ராதை அம்மாமி. “இந்த வருஷத்தைவிடப் போன வருஷந்தான் பல்லக்கு அலங்காரம் ஜோரா யிருந்தது” என்றாள். “புஷ்பப் பல்லக்குத்தான் எவ்வளவு அழகாயிருக்கு!” என்றாள் ராஜம். சிறிது நேரம் கழித்து அவள் மீண்டும் சொன்னாள்: “ஆனால், புஷ்பப் பல்லக்குப் பார்க்கிறதானால் தஞ்சாவூரிலே பார்க்கணும். எத்தனை பல்லக்கு வரும்! ராத்திரி பூரா, பகல் பூரா வந்துகொண்டே இருக்குமே! விதவிதமா அழகழகா ஜோடிச்சு வரும்.” மனசில் லேசான பொறாமையுடன் ஸ்வாமிக்குப் போட்டிருந்த நகைகளைக் கணக்குப் பார்ப்பதில் ஈடுபட்டாள் ராஜம். அந்தக் கணக்கு ஒரு வழியாக எடுத்து முடிந்ததும், வடக்கு வீதித் திருப்பத்திலே மேளக்கச்சேரி கேட்டுக்கொண்டு நின்ற கூட்டத்தில் தன் கணவனின் உருவம் தெரிகிறதா என்று கவனித்தாள். ஆனால், காஸ் லைட்டுகளின் வெளிச்சமும், ஜனக்கூட்டமும் ஒரு நிலையாக நிற்காமல், ஏற்கெனவே தூக்கத்தால் கலங்கியிருந்த அவள் கண்களைத் திகைக்கச் செய்தன. உரக்க ஒரு கொட்டாவி விட்டார் நாராயணஸ்வாமி ஐயர். “மணியாறதே. என்ன, இன்னும் மாப்பிள்ளை வரவில்லையா?” என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கையில், “இதோ வந்துவிட்டேனே!” என்று கணீரென்று பதில் சொல்லிக்கொண்டே, வாசற்படி ஏறி உள்ளே வந்தார் மாப்பிள்ளைவாள். ராஜமும், அவள் தாயாரும் வழிவிட்டு மரியாதையாக ஒதுங்கி நின்றார்கள். மாமனார், முன்னால் போய், காமிரா அறை விளக்கைப் போட்டார். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் நாலடிக்க இன்னும் இருபது நிமிஷம் இருந்தது என்று காட்டிற்று. “அப்பாடி, மணி நாலடிக்கப் போகிறதே! இப்படி ராப்பூரா பனீலே நின்னுண்டு கண் விழிச்சா உடம்புக்கு எப்படி ஒத்துக்கும்?” என்றார் நாராயணஸ்வாமி ஐயர். “பனி என்ன பண்ணும்? சில பேருக்குத்தான் உடம்புக்கு ஒத்துக்காது. எனக்குப் பழக்கந்தான் பனியெல்லாம். தவிரவும் மனிதன் உடம்புக்குப் பனி மிகவும் அவசியம். இதை யாராவது ஒரு மேல்நாட்டு டாக்டர் சொல்லிவிட்டானானால் நம் ஊர்க்காராள் எல்லாரும் அப்பறம் பனீலே நிக்க ஆரம்பிச்சுடுவா” என்றான் சிவராமன். நாராயணஸ்வாமி ஐயர் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சிவராமன் மேலும் சொன்னான்: “பாட்டுச் சுகத்திலே, நிற்கிற சிரமங்கூட தோணலை.” “தூங்கற இன்பம் தெரிஞ்சவா இப்படி எல்லாம் சொல்ல மாட்டா” என்றார் வக்கீல் விட்டுக்கொடுக்காமல். “அப்படிச் சொல்லலாமோ நீங்கள்? ராப்பூராவும் கண் விழிக்கறவனுக்குத்தான் தெரியும் தூக்கத்தின் அருமை. பட்டினி கிடப்பவன்தான்...” “மணி அஞ்சாகப் போறது. விளக்கை அணைச்சுட்டுப் படுத்துக்கறேளா? நானும் போய்ச் சித்தே படுத்துத் தூங்கறேன்” என்று சொல்லிவிட்டு, நாராயணஸ்வாமி ஐயர் மாப்பிள்ளையின் பதிலை எதிர்பார்த்து நின்றால் உண்மையிலேயே மணி ஐந்தாகிவிடுமோ என்று பயந்தவராக, அவசரம் அவசரமாக உள்ளே போய்விட்டார். சிவராமன் நாற்காலியில் உட்கார்ந்து சில நிமிஷ நேரம் நாகஸ்வர கீதச் சுவையின் ஞாபக இன்பத்திலே ஈடுபட்டவனாகச் சும்மா இருந்தான். பிறகு உரக்க “ராஜீ! ராஜீ!” என்று கூப்பிட்டான். வாசற் கதவைத் தாழிட்டுப் பூட்டிக் கொண்டு உள்ளே தன் தாயாருடன் படுக்கச் சென்று கொண்டிருந்தாள் ராஜம். மீண்டும் தூக்கம் கெடுகிறது என்று கண்டு முகத்தைச் சுளித்துக்கொண்டு காமிரா அறைக்குள் வந்தாள். “என்ன?” “ஒரு டம்ளர் தீர்த்தம் கொண்டு வாயேன் ராஜி.” “ராத்திரி நாலு மணிக்குப் படுத்துக்கப் போறச்சே தீர்த்தம் எதுக்காம்?” “நான் உடனே படுத்துக்கப் போறதில்லையே! கொஞ்ச நேரம் எழுதப் போறேன்” என்றான் சிவராமன். “நன்னா எழுதினேள், ராத்தூக்கம் இல்லாமே. சும்மாப் படுத்துக்கோங்கன்னா...” என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் ராஜம். “உள்ளே போய்த் தீர்த்தம் கொண்டுவர உனக்கு சோம்பலாயிருந்தால்...” “பனீலே இவ்வளவு நாழி நின்னுட்டு வந்து தீர்த்தமும் சாப்பிட்டுட்டு ராப்பூராக் கண் விழித்தால் ஜலதோஷம் வரும்; ஜுரம் வரும். அப்போ ராஜி, ராஜி என்னுங்கோ, சொல்றேன்” என்று தன் கணவனைப் பயமுறுத்தினாள் ராஜம். “அப்போ சொல்றத்துக்கும் கொஞ்சம் பாக்கியிருக்கட்டும். இப்போ ஒரு டம்ளர் தீர்த்தம் கொண்டு வா, போ” என்றான் சிவராமன், விவாதத்தை முடிக்கும் உத்தேசத்துடன் சற்றுக் கடுமையாகவே. பதில் சொல்லாமல் உள்ளே போனாள் ராஜம். இரண்டு நிமிஷம் கழித்து ஒரு டம்ளரில் குளிர்ந்த ஜலம் டொப்பென்று மேஜைமேல் கொண்டு வந்து வைக்கப்பட்டது. “டம்ளர் முழுசா இருக்கட்டும்” என்றான் சிவராமன் சிரித்துக்கொண்டே. தீர்த்தத்தைச் சாப்பிட்டுவிட்டுச் சொன்னான்: “இதோ பார்... ராஜி. நான் இப்போது என்ன கதை எழுதப் போறேன் தெரியுமா? புஷ்பப் பல்லக்கு என்று ஒரு கதை. அதிலே இரவு மூன்று மணிக்குப் புஷ்பப் பல்லக்குக் கூட்டத்திலே ஒரு...” ஒரு நிமிஷம் ஒன்றுமே சொல்லாமல் சிவராமன் அவளையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பிறகு, தீர்மானமாக லேசாகக் கசப்புத் தொனிக்கும்படியாக, ஆனால் புன்சிரிப்புடனே, “நீ ஓர் இலக்கியாசிரியனின் மனைவியாக இருப்பதற்கு லாயக்கற்றவள்!” என்றான். ராஜம் பதில் சொல்லத் தயங்கவில்லை. “ஆமாம். ஆனால், முதலில் நீங்கள் ஓர் இலக்கியாசிரியராக இருப்பதற்கு லாயக்குள்லவர்தாமா என்பதே இன்னும் நிச்சயமாகிவிடவில்லையே!” என்றாள். சிவராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. “உம், இந்தப் பேச்சைத்தான் கண்டது!” என்றான். “இல்லாவிட்டால் இலக்கியம் இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு, ஒத்தரும் படிக்காத, ஒத்தரும் பிரசுரிக்கக்கூடப் பிரசுரிக்காத கதைகளை எழுதி எழுதி...” “வக்கீல் பெண் வேண்டாம், அது மிகவும் வாயாடி” என்று பாடினான் சிவராமன். பாடிவிட்டு, “உன்னைப் பிரம்மதேவன் ஏதாவது கொஞ்சம் மூளையோடு படைத்திருந்தால்தானே...?” என்றான். “ச்சொ சொ... பெண் பார்க்க வந்தபோதே, மூஞ்சியைப் பார்த்த மாதிரி மூளையையும் பார்த்திருக்கக் கூடாதோ நீங்கதான். யார் வேண்டாம்னது? இப்ப வேணுமானாலும் எனக்கொண்ணும் ஆக்ஷேபம் இல்லை. இலக்கியாசிரியனுக்குத் தகுந்தவளா ஒத்தியைப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கலாமே நீங்க. பேஷாச் செய்யுங்கோ, நான் குறுக்கே நிக்கல்லே. மனசுக்குப் பிடிச்சவளா, படிச்சிண்டிருக்கிறவளா... ஏன் அத்தங்காளேதான் ஒத்தி இருக்காளே...” என்று ஒரே மூச்சில் பேசி முடித்தாள் ராஜம். “ஆயிடுத்தா உன் பிரசங்கம்? போடி, அதிகப் பிரசங்கி! இந்த வாய்தான்...” “உங்களோடு வாயாடிண்டு நிக்க எனக்கு மூளையும் போறாது... இப்போ போதும் கிடையாது. எனக்குத் தூக்கம் வர்றது. நான் போய்ப் படுத்துக்கப் போறேன். அவர் தலையெழுத்து; இலக்கியாசிரியர் கண் விழிக்கணும். அவர் பொண்டாட்டிக்கு என்ன வந்தது? நான் போறேன்” என்று சொல்லிவிட்டுச் சிவராமனின் சமாதான முயற்சிக்குச் சிறிதும் இடங்கொடாமல் ராஜம் உள்ளே போய்விட்டாள். நோட்டுப் புஸ்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டான் சிவராமன். ஒரு பக்கத்தில் மேலே புஷ்பப் பல்லக்கு என்று தலைப்பை எழுதி அதன் கீழே ஒரு கோடு கிழித்தான். சற்று நேரம் கழித்து இன்னொரு கோடு கிழித்தான். இன்னும் சற்றுநேரம் கழித்து மூன்றாவது கோடும் கிழித்தான். சற்றுமுன் துறுதுறுவென்று துடித்துக் கொண்டிருந்த அவன் கற்பனை இப்பொழுது நகரவே மறுத்தது. ராஜம் அப்பொழுது அங்கு அறையில் இல்லை என்றாலும் அவள் வார்த்தைகள் அங்கிருந்தும், அவன் மனசிலிருந்தும் அகல மறுத்தன. சிவராமனின் சிந்தனைகள், விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகளைப் போல ராஜத்தின் வார்த்தைகளைச் சுற்றிச் சுற்றி வந்தன. ராஜத்தின் வார்த்தைகள் மட்டும் போதா என்றுதான் ராதை அம்மாமி நினைத்தாள் போலும். தன் மாப்பிள்ளையின் காதில் விழவேணும் என்று எண்ணியவள்போல் அவள் சற்று உரக்கவே ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தாள். இந்தக் குட்டிப் பிரசங்கத்தின் அர்த்தபுஷ்டியான வார்த்தைகள் சில சிவராமனின் காதில் தெளிவாகவே விழுந்தன. “என்ன எழுத்து வேண்டிக்கிடக்கு; எழுத்து! நூறு ரூபாய் சம்பளத்தையும் விட்டுத் தொலைத்துவிட்டு வந்து ராப்பகலாகத் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு உடம்பு கெட...” என்று பிரசங்கம் செய்து கொண்டிருந்தாள் ராதை அம்மாமி. சிவராமன் விளக்கை அணைத்துவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய், வெளி ஆளோடியில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக உலாத்த ஆரம்பித்தான். அவர்கள் சொல்லியதெல்லாமும் ஒரு விதத்தில் நிஜந்தான் என்று அவனே ஒப்புக்கொள்ள வேண்டி இருந்தது. இலக்கியம் என்கிற ஒதுங்கி நிற்கும் தேவி ஒருத்திக்காக அவன் எவ்வளவு தியாகங்கள் செய்துவிட்டான்! நல்ல உத்தியோகம், பொருள், காலம் எல்லாவற்றையுமே அவன் இலக்கிய தேவியினுடைய பாதகமலங்களில் சமர்ப்பித்துவிட்டு நின்றான். லாபம் என்ன? பைத்தியக்காரன் என்று சாதாரண மக்களும், வக்கீல் ஐயாவும், அவர் சம்சாரமும் அவனை எண்ணினார்கள். அவ்வளவுதான் கண்ட லாபம்! ஆனால், செய்ததெல்லாவற்றையும் தியாகம் தியாகம் என்று தானே கருதும் வரையில், வேறு என்ன, எப்படிப்பட்ட, லாபந்தான் கண்டுவிட முடியும் என்று ஒரு விநாடி தன்னையே நொந்துகொண்டான் சிவராமன். ஆறு மாதங்களுக்கு முன் தன் சொந்தக் காசு போட்டுச் சிவராமன் நாவல் ஒன்று பிரசுரம் செய்தான். ‘அந்த இருநூறு ரூபாய்க்கு எனக்கு ஒரு ஜோடி வைர டோலக் வாங்கியிருக்கலாமே! என்பது ராஜத்தின் கட்சி. அந்த நாவலைப் பத்திரிகை விமர்சகர்களும், ஒரு சில நண்பர்களும், வானளாவப் புகழ்ந்தும் விற்றது ஏதோ நூறு நூற்றைம்பது பிரதிகள் தாம். எஞ்சிய பிரதிகள் எல்லாம் அவன் வீட்டில் சிதறிக் கிடந்தன. உன் கூடத்தில் அவனுடைய மாமியாரும் தன் பிரசங்கத்தை முடித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பிரசங்கத்தின் கடைசி வார்த்தைகளும் அவன் காதில் விழுந்தன. “என்ன எழுத்து வேண்டிக்கிடக்கு? எல்லாம் நாளைக்கு எழுதிக்கலாம். படுத்துக்கச் சொல்லுடி.” ‘ராஜி தூங்கிவிட்டாள் போலிருக்கு. அதான் அவள் பதில் ஒன்றும் சொல்லல்லை’ என்று தனக்குள்ளேயே சிவராமன் சொல்லிக்கொண்டான். அப்போது கோயில் மணி ‘டங், டங், டங், டங்’ என்று நாலு அடித்தது. ‘ஆத்துக் கடிகாரத்தில் மணி நாலடித்துப் பத்து நிமிஷம் ஆகிறதே! வேகமாய்ப் போறது போல் இருக்கு!’ என்று எண்ணினான் சிவராமன். கோயில் மணியின் இன்ப ஒலி சிவராமனுக்கு மீண்டும் வைத்தியநாதனின் நாகஸ்வர இன்பத்தை ஞாபகமூட்டியது. அந்த இசையையும் விட அதிகமாக இசையின் ஞாபகம் இன்ப மூட்டியது. மனக்குரங்கு மற்றெல்லா விஷயங்களையும் நழுவ விட்டுவிட்டது. சற்று நேரத்திற்குள் மனக்குரங்கு அவனுடைய அகக்கண்முன் அவனுடைய சிற்றப்பாவைக் கொண்டு வந்து நிறுத்தியது. “அவர் இன்று இங்கே என்னுடன் இருந்தால் இந்தக் கச்சேரியை எவ்வளவு ரசித்திருப்பார்! அவர் உண்மையிலேயே ரசிகர், கலைஞர். எதிலுமே அவருக்கு ரசனையும் ஈடுபாடும் அதிகந்தான். முன் ஒருதரம் - 1930இலா, 31இலா? நான் அண்ணாமலை சர்வகலாசாலையில் பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, என்னைப் பார்க்க அவர் வந்திருந்தார். அன்றும் புஷ்பப் பல்லக்குத் தினந்தான். அன்றும் வைத்தியநாதனின் நாகஸ்வரந்தான். அவரும் நானும் அன்றிரவு நாகஸ்வரம் கேட்டுக்கொண்டே புஷ்பப் பல்லக்குடன் நாலு வீதியும் சுற்றி வந்தோம். ஹாஸ்டலை நோக்கித் திரும்பிய போது கிழக்கு வெளுத்துவிட்டது. காலையில் ஹாஸ்டலில் காபி சாப்பிட்டபோது சித்தப்பா, ‘ஏண்டா ராஜா, பல்லக்கு எப்படிடா இருந்தது?’ என்று கேட்டார். சிரித்துக் கொண்டே நான், ‘பார்க்கலையே சித்தப்பா!’ என்றேன்... அவர் மட்டும் இன்று இங்கிருந்தால்...! ...ம். அவர் கண் விழிப்பதற்கு அஞ்சவேமாட்டார். இரவு முழுவதும் தூங்காமலே கழிப்பது அவருக்குச் சர்வ சாதாரணமான காரியம். இப்போதுதான் என்ன? மணி நாலாகிறதே! சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருப்பார். நான் இப்போது அவரைப் பற்றி நினைப்பது போல அவரும் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கலாம். என்னிடம் அவருக்கு அலாதியான பிரியந்தான்... ம்... ஆமாம். சித்தப்பா இன்னும் தூங்கியிருக்க மாட்டார். கிரக சஞ்சாரம் எதையாவது கணித்துக் கொண்டிருப்பார்; விரல் விட்டு, விரல் விட்டுக் கணக்குப் பண்ணிக் கொண்டிருப்பார். ஜோசியத்திலே நம்பிக்கை வைப்பது பிசகுதான் என்றாலும் அவர் சொன்னாரே - நான் வேலையை ராஜீனாமாச் செய்வதற்கு இரண்டு மாசங்களுக்கு முன்னதாகவே அவர் சொன்னாரே - ‘பிறகு என்ன சித்தப்பா பண்ணுவேன்?’ என்று கேட்டேன். ‘பிறகா? பிறகு சொல்றேன்’ என்றார்... ம்... எவ்வளவோ விஷயங்களில்...” சிவராமனின் மனக் குரங்கும் நித்திராதேவிக்கு வசமாகிவிட்டது. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF திருமால் வெண்பா - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நல்லை வெண்பா - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF திருவிடைமருதூர் உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF மேகவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF பாண்டிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பித்தப்பூ வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 70.00தள்ளுபடி விலை: ரூ. 65.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |