கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா மூவருலா உலா சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. விக்கிரம சோழன் (1118-1136), அவனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் (1133-1150), பேரன் இரண்டாம் இராஜராஜ சோழன் (1146-1163) ஆகிய மூவரையும் புகழ்ந்து பாடியது. எனவே மூவருலா எனப்படுகிறது. விக்கிரம சோழன் உலா 342 கண்ணிகளையும், குலோத்துங்க சோழன் உலா 387 கண்ணிகளையும், இராசராச சோழன் உலா 391 கண்ணிகளையும் உடையன. இவை அனைத்தும் கண்ணி வகையைச் சேர்ந்தவை (கலிவெண்பாவில் ஒரே எதுகை வருபவை). சோழர் குலச்சிறப்பு, அரசர் பெருமை, பள்ளி எழுதல், அழகு செய்தல், யானையின் மீது அமர்தல், உடன் வருவோர், அவர்கள் கூற்று, ஏழுவகைப் பருவ மகளிரின் அழகு, உணர்ச்சிகள், விளையாட்டுகள், காமுறுதல், பேசுதல் போன்ற செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூலின் பகுதிகளான மூன்று உலாக்களும் தனி நூல்களாகவும் கருதப்படுகின்றன. மூவருலாவின் ஆசிரியர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர். இவர் சோழவள நாட்டில் தஞ்சை ஒட்டங்காடு என்ற இடத்திற்கு அருகில் உள்ள மலரி என்னும் ஊரில் பிறந்தவர். இவர் தந்தையார் சிவசங்கர பூபதி. தாயார் வண்டார் பூங்குழலி. ஒட்டக்கூத்தருடைய இயற்பெயர் கூத்தர் என்பதாகும். கலைமகளை வழிபட்டு ஈட்டி எழுபது என்ற நூலைப் பாடி, வெட்டப்பட்ட தலைகள் ஒட்டி உயிர் பெறுமாறு பாடியதால் ஒட்டக்கூத்தர் என்று அழைக்கப் பெற்றார் என்றும், விக்கிரம சோழன் தன்மீது பாடிய உலாவில் உள்ள ஒரு கண்ணியை ஒட்டிச் செய்யுள் இயற்றும்படி கேட்க, உடன் ஒட்டிச் செய்யுள் பாடியமையால் ஒட்டக்கூத்தர் எனப் பெற்றார் எனவும் சிலர் கூறுவர். கூத்தர் என்பது இவரின் இயற்பெயர் என்றும், ஒட்டம் என்பது இடத்தைப் பொருத்து வந்ததென்றும் ஆய்வாளர் சொல்லுவர். சோழ மன்னர் மூவருக்கும் அரசவைப் புலவராக இருந்தவர். இம்மூவருள் ஒருவன் இவருக்கு அரிசிலாற்றங்கரையில் ஒரு ஊரையே கொடுத்தான். இது கூத்தனூர் என வழங்கப்பெறுகிறது. இவ்வாறு தமிழகமெங்கும் பல ஊர்கள் இவர் பெயரில் திகழ்கின்றன. இவர் அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டி எழுபது, காங்கேயன் நாலாயிரக் கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், காளக்கவி என்றும் அழைக்கப் பெற்றார். விக்கிரம சோழன் உலா விக்கிரமசோழன் உலாவில் உள்ள கண்ணிகள் 342 ஆகும். முதல் 23 கண்ணிகள் சோழர் குலம் தோன்றிய காலம் தொட்டு வழிவழியாக ஆண்ட மன்னர்களில் சிறந்தோர்களை எடுத்துக்கூறுகின்றன. 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகள் முதற்குலோத்துங்கன் சிறப்பும், செயலும் கூறுகின்றன. 28 முதல் 35 வரை உள்ள கண்ணிகளில் விக்கிரம சோழன் பிறப்பும், சிறப்பும், ஆட்சி புரியும் ஆண்மையும் பிறவும் கூறப்படுகின்றன. பின்னர், பள்ளியெழுச்சி, நீராடல், தெய்வ வணக்கம், கொடை, அணி புனைதல், உலாவிற்குப் புறப்படல் ஆகியன 52 கண்ணிகள் வரை கூறப்படுகின்றன. பின் 64 கண்ணிகள் வரை பட்டத்து யானையின் சிறப்புப் பலவாறாகப் பேசப்படுகிறது. யானை மீதமர்ந்து பவனி வருவதும் உடன் வருவோர் தொகையும் 90 கண்ணிகள் வரை தொடர்ந்து கூறப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பேதை (113-133), பெதும்பை (134-162), மங்கை (163-192), மடந்தை (193-227), அரிவை (228-262), தெரிவை (263-305), பேரிளம்பெண் (305-327) ஆகிய ஏழு பருவப் பெண்களின் வனப்பும் பண்பும் செயல்களும் காதலும் மயக்கமும் முறையே கூறப்படுகின்றன. பின் தோழியர் பலர் ஏங்கி நின்று தம் தலைவியைப் புரக்குமாறு வேண்ட, விக்கிரம சோழன் உலாப் போந்தான் என விக்கிரம சோழன் உலா நிறைவு பெறுகிறது.
விக்கிரமசோழன், இராசகேசரி முதற்குலோத்துங்கனுக்கும் மதுராந்தகிக்கும் பிறந்த எழுவரில் ஒருவன். இவனுடன் பிறந்தோர் இரண்டாம் இராசராசன், வீரசோழன், சோழகங்கன் ஆகிய மூவரே. மற்றை மூவர் பெண்மக்களாவர். எழுவரில் இவனே இளையோன் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இம்மன்னன் கி.பி. 1118-ஆம் ஆண்டில் முடி சூடி அரசு கட்டில் ஏறினான். கி.பி. 1122 வரை தந்தையுடன் இருந்து ஆட்சி புரிந்தான். இம்மன்னன் அரசு புரியும் காலத்தில் வடஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் வெள்ளக்கேடு நேர்ந்த காரணத்தால் ஊர்ப்பொது நிலங்களை விற்று அரசாங்கவரி செலுத்தப்பட்டது என அறிகிறோம். கல்வெட்டு ஒன்றில் இவ்வெள்ளக்கொடுமை நிகழ்ந்தது பொறிக்கப்பட்டுள்ளது. இவன் ஆட்சிக்காலம் முழுவதும் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராய் அமைந்திருந்தது. தில்லைக்கோயில் திருப்பணிகள் விக்கிரம சோழனது பத்தாம் ஆட்சியாண்டில் செய்யப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளன. சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக் கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார்தந்த 1 ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன் காதற் குலமைந்தன் காசிபனும் - மேதக்க 2 மையறு காட்சி மரீசியு மண்டிலஞ் செய்ய தனியாழித் தேரோனும் - மையல்கூர் 3 சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில் மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத் 4 தாடு துறையி லடுபுலியும்புல்வாயும் கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய 5 மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும் போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக் 6 கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத் தேற வழக்குரைத்த செம்பியனும் - மாறழிந் 7 தோடி மறலி யொளிப்ப முதுமக்கட் சாடி வகுத்த தராபதியும் - கூடார்தம் 8 தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில் வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் - ஆங்குப் 9 பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர் குலமகளைக் கைப்பிடித்த கோவும் - உலகறியக் 10 தூக்குந் துலைபுக்க தூயோனும் - மேக்குயரக் 11 கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியக் தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச் 12 சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப் பொன்னிக் கரைகண்ட பூபதியும் -இன்னருளின் 13 மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும் -மீதெலாம் 14 எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலனும் - கண்கொண்ட 15 கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம் காதலாற் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்காப் 16 பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும் கொண்டு மலைநாடு கொண்டோனும் - தண்டேவிக் 17 கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியனும் - வங்கத்தை 18 முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி செற்ற தனியாண்மைச் சேவகனும் - பற்றலரை 19 வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும் - அப்பழநூல 20 பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால் ஆடவரப் பாய லமைத்தோனும் - கூடல 21 சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும் - அங்கவன்பின் 22 காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள் பூவலய முற்றும் புரந்ததற்பின் - மேவலர்தம் 23 சேலைத் துரந்துசிலையைத் தடிந்திருகால் சாலைக் களமறுத்த தண்டினான் - மேலைக் 24 கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண் டடல்கொண்ட மாராட் ரானை - உடலை 25 இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - அறத்திகிரி 26 வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும் ஆரிற் பொலிதோ ளபயற்குப் - பார்விளங்கத் 27 தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை மூன்று முரசு முகின்முழங்க - நோன்றலைய 28 மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச் செம்மைத் தனிக்கோ றிசையளப்பத் - தம்மை 29 விடவுட் படுத்து விழுக்கவிகை யெட்டுக் கடவுட் களிறு கவிப்பச் - சுடர்சேர் 30 இணைத்தார் மகுட மிறக்கி யரசர் துணைத்தா ளபிடேகஞ் சூடப் - பணைத்தேறு 31 நீராழி யேழு நிலவாழி யேழுந்தன் போராழி யொன்றாற் பொதுநீக்கிச் - சீராரும் 32 மேய் திகிரி விரிமே கலையல்குற் றூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின் 33 ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய கோதில் குலமங்கை கொங்கையினும் - போதில் 34 நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும் உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்காற் 35 றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு தென்னர் மலையாரச் சேறணிந்து - தென்னர் 36 வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண் பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட 37 நித்திலப் பந்தர்க்கீழ் நீணிலாப் பாயலின்மேல் தொத்தலர் மாலைத் துணைத்தோளும் - மைந்தடங் 38 கண்ணு முலையும் பெரிய களியன்னம் எண்ணு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு 39 பெய்த மலரோதிப் பெண்சக்ர வர்த்தியுடன் எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத 40 பொன்னித் திருமஞ் சனமாடிப் பூசுரர்கைக் கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை 41 மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலிப் பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் - கறைக்களத்துச் 42 செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை முக்கட் கனியை முடிவணங்கி - மிக்குயர்ந்த 43 அலங்காரங்கள் செய்துகொள்ளுதல் தானத் துறைமுடித்துச் சாத்துந் தகைமையன மானக் கலன்கள் வரவருளித் - தேன்மொய்த்துச் 44 சூழு மலர்முகத்துச் சொன்மா மகளுடனே தாழு மகரக் குழைதயங்க - வாழும் 45 தடமுலைப் பார்மடந்தை தன்னுடனே தோளிற் சுடர்மணிக் கேயூரஞ் சூழப் - படரும் 46 தணிப்பில் பெருங்கீர்த்தித் தைய லுடனே மணிக்கடகங் கையில் வயங்கப் - பிணிப்பின் 47 முயங்குந் திருவுடனே முந்நீர் கொடுத்த வயங்கு மணிமார்பின் மல்க - உயங்கா 48 அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்பப் - பொருந்திய 49 அண்ணற் படிவத் தரும்பே ரணியணிந்து வண்ணத் தளவில் வனப்பமைந்து - கண்ணுதலோன் 50 காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு தாம முடிவணங்கத் தந்தனைய - காமருபூங் 51 பட்டத்து யானை கோலத் தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்று காலத் ததிருங் கடாக்களிறு - ஞாலத்துத் 52 தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர் வானே முழங்கினுமவ் வான்றடவி - வானுக் 53 கணியு மருப்பு மடற்கையு மின்மை தணியும் யமராச தண்டம் - தணியாப் 54 பரிய பொருங்கோ டிணைத்துப் பணைத்தற் கரிய தொருதானே யாகிக் - கரிய 55 மலைக்கோ டனைத்து மடித்திடியக் குத்தும் கொலைக்கோட்டு வெங்கால கோபம் - அலைத்தோட 56 ஊறு மதந்தனதே யாக வுலகத்து வேறு மதம்பொறா வேகத்தால் - கூறொன்றத் 57 தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும் வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய 58 கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன் முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற 59 வருத்த மறமறந்து மாதிரத்து வேழம் பருத்த கடாந்திறந்து பாயப் - பெருக்கத் 60 துவற்று மதுரச் சுவடிபிடித் தோடி அவற்றி னபரங்கண் டாறி - இவற்றை 61 அளித்தன னெங்கோமா னாதலா லின்று களித்தன வென்றுவக்குங் காற்று - நௌித்திழிய 62 வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்தமரில் ஏற்றுப் பொருமன்ன ரின்னுயிரைக் - கூற்றுக் 63 கருத்து மயிரா பதநின் றதனை இருத்தும் பிடிபடியா வேறித் - திருத்தக்க 64 கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்திரட்டைக் கற்றைக் கவரியிளங் காலசைப்ப - ஒற்றை 65 வலம்புரி யூத வளைக்குல மார்ப்ப சிலம்பு முரசஞ் சிலம்ப - புலம்பெயர்ந்து 66 வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங்கக் கோட்புலிக் கொற்றக் கொடியோங்கச் -சேட்புலத்துத் 67 உடன் வருவோர் தென்னரு மாளுவருஞ் சிங்களருந் தேற்றுதகை மன்னருந் தோற்க மலைநாடு - முன்னம் 68 குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல் 69 ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள் பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் - போர்க்குத் 70 தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடக் கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையும் 71 கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும் கொங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன் 72 முனியும் பொழுது முரிபுருவத் தோடு குனியுஞ் சிலைச்சோழ கோனும் - சனபதிதன் 73 தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர் வாளும் வலியு மதியமைச்சும் - நாளுமா 74 மஞ்சைக் கிழித்து வளரும் பொழிற்புரிசைக் கஞ்சைத் திருமறையோன் கண்ணனும் - வெஞ்சமத்துப் 75 புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க ஒல்லாத கூற்ற முயிர்வாங்கப் - புல்லார்வம் 76 தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க வாங்கு வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும் 77 கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும் ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா 78 தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக் கொடியெடுத்த காலிங்கர் கோனும் - கடியரணச் 79 செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும் - வெம்பிக் 80 கலக்கிய வஞ்சக் கலியதனைப் பாரில் விலக்கிய வேணாடர் வேந்தும் - தலைத்தருமம் 81 வாரிக் குமரிமுதன் மந்தா கினியளவும் பாரித் தவனனந்த பாலனும் -பேரமரில் 82 முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலும் மட்டித்த மால்யானை வத்தவனும் - அட்டையெழக் 83 காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்த சேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து 84 முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல் கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய 85 மான வரச ரிரிய வடகலிங்கத் தானை துணித்த வதிகனும் - மீனவர்தம் 86 கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன் வாட்டார் மதயானை வல்லவனும் - மோட்டரணக் 87 கொங்கை குலைத்துக் குடகக் குவடிடித்த செங்கைக் களிற்றுத் திகத்தனும் - அங்கத்து 88 வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும் வில்லவனுங் கேரளனு மீனவனும் - பல்லவனும் 89 என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர் முன்னு மிருமருங்கு மொய்த்தீண்டப் - பன்மணிசேர் 90 குழாங்கள் சோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார் வீதி குறுகுதலு மேலொருநாள் - மாதவத்தோன் 91 சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த பூந்துவரை யந்தப் புரம்போன்றும் - ஏந்திப் 92 பரக்குங் கலையல்குற் பாவையரே யாணை புரக்குந் திருநாடு போன்றும் - வரக்கருதா 93 ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன் சேனை திரண்ட திரள்போன்றும் - கானலங் 94 கண்டன் மணற்குன்றத் தன்னக் கணம்போன்றும் கொண்டலின் மின்னுக் குழாம்போன்றும் - மண்டும் 95 திரைதொறுந் தோன்றுந் திருக்குழாம் போன்றும் வரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் - விரைவினராய் 96 இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பிச் சிந்தை பரப்பித் தெருவெங்கும் - வந்தீண்டி 97 உத்தி சுடர வொளிமணிச் சூட்டெறிப்பப் பத்தி வயிரம் பரந்தெறிப்ப - முத்தின் 98 இணங்கு மமுத கலசங்க ளேந்தி வணங்கு தலையினராய் வந்து -கணங்கொண்டு 99 பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்பக் கிஞ்சுகவாய் கூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப - வேர்க்க 100 வரைகொ ணெடுமாடக் கீணிலையின் மல்கி உரக வரமகளி ரொப்பார் - விரல்கவரும் 101 வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும் பாணி பெயர்ப்பப் பதம்பெயர்த்துச் -சேணுயர் 102 மஞ்சிவரும் வெண்பளிக்கு மாடத் திடைநிலையில் விஞ்சையர் மாத ரெனமிடைவார் - அஞ்சனக் 103 கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும் மண்ணிற் பொருந்தா மலரடியும் - தண்ணென்ற 104 வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு வீடா நிலாமுற்ற மேனிலையிற் - கூடி 105 உருவி னொளியி னுணர்வி னுரையிற் பொருவி லரமகளிர் போல்வார் - அருகணைந்து 106 குழாங்களின் கூற்று சீரள வில்லாத் திருத்தோ ளயன்படைத்த பாரள வல்ல பணைப்பென்பார் - பாருமின் 107 செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ வைய முடையபிரான் மார்பென்பார் - கையிரண்டே 108 ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன் வேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் - யானெண்ணும் 109 எண்ணுக் கிசைய வருமே யிவனென்பார் கண்ணிற் கருணைக் கடலென்பார் - மண்ணளிக்கும் 110 ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை பாதியே யன்றா லெனப்பகர்வார் - தாதடுத்த 111 கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல் செங்கை குவிப்பார் சிலர்செறிய - அங்கொருத்தி 112 பேதை வந்து பிறந்து வளரு மிளந்திங்கள் கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து - பைந்தழைத் 113 தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல் வாகை புனைய வளர்கரும்பு - கோகுலத்தின் 114 பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணிய கிள்ளை பவளங் கிளைத்தகிளை - கள்ளம் 115 தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப் பிரியாப் பருவத்துப் பேதை - பரிவோடு 116 பாவையு மானு மயிலும் பசுங்கிளியும் பூவையு மன்னமும் பின்போதக் - காவலன் 117 பொன்னிப் புகார்முத்தி னம்மனையுந் தென்னாகை நன்னித் திலத்தி னகைக்கழங்கும் - சென்னிதன் 118 கொற்றைக் குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றிப் - பொற்கொடியார் 119 வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண் ஆதி யுகம்வந் தடிக்கொள்ள - மேதினிமேல் 120 ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன் மூன்று முரச முகின்முழங்க - வான்றுணைத் 121 தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது தாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் - சேயோன் 122 படியின் மதியும் பகலவனுந் தோற்கும் முடியி லொருகாலு மூளா - வடிவில் 123 மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும் நெகிழ்ந்த திருநோக்கி னேரா - முகிழ்ந்து 124 சிரிக்குந் திருப்பவளச் சேயொளியூ டாடா விரிக்குந் திருநிலவின் வீழா - பரிக்கும் 125 உலகம் பரவுந் திருப்புருவத் தோரா திலக முகாம்புயத்துச் சேரா - பலவும் 126 திசையை நெருக்குந் திருத்தோளிற் செல்லா இசையுந் திருமார்பத் தெய்தா - வசையிலாக் 127 கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா மெய்ம்மலர்ப் பேரொளியின் மீதுறா - அம்மகள் 128 கண்ணு மனமுங் கழுநீர்க் குலமுழுதும் நண்ணுந் தொடையன்மே னாட்செய்ய - உண்ணெகிழா 129 வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கித் தம்மின்க ளென்றுரைப்பத் தாயரும் - அம்மே 130 பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே திருமாலை தாவென்று செல்வேம் - திருமாலை 131 யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்னத் தேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் - ஆங்குத்தன் 132 மார்வத்துக் கண்ணினீர் வாரப் பிறர்கொள்ளும் ஆர்வத்துக் கன்றே யடியிட்டாள் - சேர 133 இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும் அருத்தி யறவே யயர்த்தாள் - ஒருத்தி 134 பெதும்பை மழலை தனது கிளிக்களித்து வாய்த்த குழலி னிசைக்கவர்ந்து கொண்டாள் - நிழல்விரவு 135 முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின் பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி 136 மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் - சுடர்நோக்கும் 137 தானுடைய மெய்ந்நுடக்கந் தன்மா தவிக்களித்து வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் - பூநறும் 138 பாவைகள் பைங்குர வேந்தப் பசுங்கிளியும் பூவையு மேந்தும் பொலிவினாள் - மேவும் 139 மடநடை யன்னப் பெடைபெறக் கன்னிப் பிடிநடை பெற்றுப் பெயர்வாள் - சுடர்கனகக் 140 கொத்துக் குயின்ற கொடிப்பவள பந்தத்தின் முத்துப் பொதியுச்சி முச்சியாள் - எத்திறத்தும் 141 வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல் மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேரொத்த 142 கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற் பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள் - பாங்கியரும் 143 கனாக் கூறுதல் தாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து பாயல் புடைபெயர்ந்து பையச்சென் - றியாயே 144 தளரு மிடையொதுங்கத் தாழுங் குழைத்தாய் வளரு மொருகுமரி வல்லி - கிளரும் 145 கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி எழுந்து கிளைகலிப்ப வேறித் - தொழுந்தகைய 146 கொங்குடைய பொன்னடருஞ் சென்னிக் கொழுங்கோங்கின் பங்குடைய மூரிப் பணையணைந்து - தங்குடைய 147 வண்டு முரல மணநாற வைகுவது கண்டு மகிழ்ந்தேன் கனவிலெனக் - கொண்டு 148 வருக வருக மடக்கிள்ளை முத்தம் தருக தருகவெனத் தாயர் - பெருக 149 விரும்பினர் புல்லி விரைய முலைவந் தரும்பின வாகத் தணங்கே - பெரும்புயங்கள் 150 புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன் வல்லி பெறுதி யெனவழுத்தும் -எல்லை 151 அரச னபய னகளங்க னெங்கோன் புரசை மதவரைமேற் போத - முரசம் 152 தழங்கு மறுகிற் றமரோடு மோடி முழங்கு முகின்மாட முன்றிற் - கொழுங்கயற்கட் 153 பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு மின்னென வந்து வௌிப்பட்டு - மன்னருயிர் 154 உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கைச் செண்டாற் கிரிதிரத்த சேவகனைத் - தண்டாத 155 வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளைச் சோகங் கெடுத்தணைத்த தோளானை - ஆகத்துக் 156 கொங்கை பிரியாத வீறோடுங் கேகானக மங்கை பிரியாத மார்பானை - அங்கமலக் 157 கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும் செய்ய கரிய திருமாலைத் - தையலும் 158 கண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான் மண்டு மனமீட்கு மாறறியாள் - பண்டறியாக் 159 காமங் கலக்கக் கலங்கிக் குழல்சரியத் தாமஞ் சரியத் தனிநின்றாள் - நாமவேற் 160 சேரனு மீனவனுஞ் சேவிப்பச் செம்பியரில் வீரனு மல்வெல்லை விட்டகன்றான் - மாரனும் 161 தக்குத் தகாதாளை யெய்து தரைப்படுத்தப் புக்குத் தொடைமடக்கிப் போயினான் - மைக்குழல் 162 மங்கைப் பருவத் தொருத்தி மலர்பொதுளுங் கங்கைப் புளினக் களியன்னம் - எங்கோனை 163 மன்னனை மன்னர் பிரானை வரோதயனை தென்னனை வானவனைச் செம்பியனை- முன்னொருநாள் 164 கண்ட பெதும்பைப் பருவத்தே தன்கருத்தாற் கொண்ட பரிவு கடைக்கூட்ட - புண்டரிகச் 165 செய்ய வடிமுதலாச் செம்பொன் முடியளவும் மைய லகல மனத்திழைத்துக் - கையினால் 166 தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம் காட்டுங் கனவு தரக்கண்டு -நாட்டங்கொண் 167 டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்றுத் தாதொன்றுந் தொங்கற் சயதுங்கன் - வீதி 168 வருகின்றா னென்று மணியணிகள் யாவும் தருகென்றாள் வாங்கித் தரித்தாள் - விரிகோதை 169 சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே றாடினா டன்பே ரணியணிந்தாள் - சேடியர் 170 மங்கை தன்னையே ஐயுறுதல் காட்டும் படிமக் கமலத்துக் கமலத்தை ஓட்டும் வதனத் தொளிமலர்ந்து - கேட்டு 171 விடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும் படைபோய் வருவனபோற் பக்கம் - கடைபோய் 172 மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி எறிக்குங் குழைக்காதிற் கேற்றும் - நெறிக்கும் 173 அளக முதலாக வைம்பாற் படுத்த வளர்கருங் கூந்தன் மலிந்துங் - கிளர 174 அரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள் பரியன காம்பிற் பணைத்தும் - தெரியற் 175 சுவடு படுகளபத் தொய்யில்சூழ் கொங்கை குவடு படவெழுச்சி கொண்டும் - திவடர 176 நொந்து மருங்கு னுடங்கியும் - வந்து 177 மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ அடையுந் தனதுருக்கண் டஞ்சிக் - கொடையனகன் 178 பண்டறியு முன்னைப் பருவத் துருவத்துக் கண்டறியு மவ்வடிவு காண்கிலேன் - பண்டறியும் 179 முன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி என்னை யறிகலன்யா னென்செய்கேன் - தன்னை 180 வணங்கி வருவ தறிவ னெனவந் திணங்கு மகளி ரிடைநின் - றணங்கும் 181 இறைவ னகளங்க னெங்கோன் குமரித் துறைவ னிருபகுல துங்கன் - முறைமையால் 182 காக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர் பூக்கு முலகளந்த பொற்கழலும் - நோக்கும் 183 திருக்கொள்ளு மார்பமுந் தெவ்வேந்த ரெல்லாம் வெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் - உருக்கும் 184 மகரக் குழைக்காது மாதரார் மாமை நுகரப் புடைபெயரு நோக்கும் - துகிரொளியை 185 வௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும் செவ்வி யழியாத் திருமுகமும் - எவ்வுருவும் 186 மாறுபடா வண்ணமுந்தன் வண்ணப் படிவத்து வேறு படுவனப்பு மெய்விரும்பித் -தேறிப் 187 பிறையாம் பருவத்துப் பேருவகை யாம்பல் நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங் - கிறைவனைக் 188 கண்டு மனமு முயிருங் களிப்பளவிற் கொண்டு பெயர்ந்து கொல்யானை - பண்டு 189 நனவு கிழியிற் பகற்கண்டு நல்ல கனவு தரவிரவிற் கண்டு - மனமகிழ்வாள் 190 தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும் நாட்ட முறங்கா மையுநல்க - மீட்டுப் 191 பெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ்ந் தயர்ந்தா ளவணிலையீ தப்பாற் - சயந்தொலைய 192 மடந்தை வெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு வந்து திரண்டனைய வாயினாள் - அந்தமில் 193 ஓலக் கடலேழு மொன்றா யுலகொடுக்கும் காலக் கடையனைய கட்கடையாள் - ஞாலத்தை 194 வீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள் கோட்டி யிருக்குங் குவிமுலையாள் - நாட்ட 195 வடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர் முடிவு லுணர்வை முடிப்பாள் - கடிதோடிப் 196 போகா தொழியா திடையென்று போய்முடியல் ஆகாமை கைவளரு மல்குலாள் - பாகாய 197 பந்தாடுதல் சொல்லி யொருமடந்தை தோழியைத் தோள்வருந்தப் புல்லி நிலாமுற்றம் போயேறி - வல்லிநாம் 198 சேடிய ரொப்ப வகுத்துத் திரள்பந்து கோடியர் கண்டுவப்பக் கொண்டாடி - ஓடினால் 199 என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான் தன்மாலை வாங்கித் தருகென்று - மின்னனையான் 200 கட்டிக் கனபந்து கைப்பற்றி - ஒட்டிப் 201 பொருதிறத்துச் சேடியர்தம் போர்தொலையத் தானே இருதிறத்துக் கந்துகமு மேந்திப் - பெரிதும் 202 அழுந்து தரளத் தவைதன்னைச் சூழ விழுந்து மெழுந்து மிடைய - எழுந்துவரி 203 சிந்த விசிறு திரையி னுரையூடு வந்த வனச மகளேய்ப்ப - முந்திய 204 செங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென் றங்காந்து தோள்வளைக ளார்ப்பெடுப்பத் - தங்கள் 205 நுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென் றடங்குங் கலாப மரற்றத் - தொடங்கி 206 அரிந்த குரலினவா யஞ்சீ றடிக்குப் பரிந்து சிலம்பு பதைப்ப - விரிந்தெழும் 207 கைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ மைக்கோல வோதியின்மேல் வண்டிரங்க - அக்கோதை 208 பந்தாடி வென்று பருதி யகளங்கன் சந்தாடு தோண்மாலை தாவென்று - பைந்துகிற் 209 றானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ் யானைமேல் வெண்சா மரையிரட்டச் - சேனை 210 மிடையப் பவளமு நித்திலமு மின்ன அடையப் பணிலங்க ளார்ப்ப - புடைபெயர 211 வார்ந்து மகர வயமீன் குலமுழுதும் போந்து மறுகு புடைபிறழச் - சேர்ந்து 212 பதலை முழங்கப் பகட்டேற்றி விட்ட மதலைகண் முன்னர் மலிய - விதலையராய்த் 213 தாழுந் தொழிலிற் கிளைபுரக்கத் தன்னடைந்து வாழும் பரதர் மருங்கீண்ட - வீழுந்திக் 214 கன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும் பொன்னியுந் தோயும் புகார்விளங்க - மன்னிய 215 செங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும் தங்கோ மறுகிற் றலைப்பட்டுத் - தங்களில் 216 ஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும் கட்டிய மேகலையுங் காவாதே - கிட்டித் 217 தொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள் அழுதா ளொருதமிய ளானாள் - பழுதிலாக் 218 காக்குந் துகிலு மிலங்கு பொலன்கலையும் போக்கு நிதம்பம் புனைகென்று - வீக்கும் 219 மணிக்கச்சுந் தம்முடைய வான்றூசுங் கொங்கை பணிக்கக் கடைக்கண் பாரா - அணிக்கமைந்த 220 குன்றாத நித்திலக் கோவையும் பொன்னிறத்த பொன்றாத பட்டும் புனைகென்று - நின்று 221 கொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும் அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் -கடுத்துக் 222 கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றித் தவரு முதுகிளவித் தாய - ரவரெங்கும் 223 கூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து பூசினா ராலி பொழிந்தொழிந்தார் - வீசினார் 224 இட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து சுட்டார் குளரி தொகுத்தெடுத்தார் - விட்டாரோ 225 பள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல் உள்ள முயிரை யுடன்கொண்டு -வள்ளல்பின் 226 ஓதை மறுகி லுடன்போன போக்காலிப் பேதை நடுவே பிழைத்தொழிந்தாள் - மாதரில் 227 அரிவை வாரி படுமமுத மொப்பாண் மதுகரஞ்சூழ் வேரி கமழ்கோதை வேறொருத்தி - மூரித்தேர்த் 228 தட்டுஞ் சிறுகப் பெருகி மரகதத்தாற் கட்டுங் கனபொற் கலாபாரம் - பட்டும் 229 துகிலுங் கரப்பச் சுடர்பரப்பக் கைபோய் அகில்கின்ற வல்கு லரிவை - இகலி 230 ஒருக்கி மருங்குகடிந் தொன்றினைவந் தொன்று நெருக்கிய மாமை நிரம்பித் - தருக்கி 231 இடங்கொண்டு மின்னுக் கொடியொன் றிரண்டு குடங்கொண்டு நின்றதெனக் கூறத் - தடங்கொண் 232 டிணைத்துத் ததும்பி யிளையோர்க ணெஞ்சம் பிணைத்துத் தடமுகட்டிற் பெய்து - பணைத்துப் 233 பெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞாலத் தருமை படைத்ததனத் தன்னம் - கருமை 234 எறித்துக் கடைபோ யிருபுடையு மெல்லை குறித்துக் குழையளவுங் கொண்டு -மறித்து 235 மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள் பதைத்து விழநிறத்திற் பட்டுத் - ததைத்த 236 கழுநீர் மலரின் கவினழித்து மானின் விழிநீர்மை வாய்த்த விழியாள் - முழுதும் 237 நெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு செறிந்து பெருமுருகு தேக்கி - நறுந்துணர் 238 வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர் சோர்ந்து மிசையசைந்த சோலையாய்ச் - சேர்ந்து 239 திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின் பெருவிருந்து பேணுங் குழலாள் - பொருகளிற்றின் 240 வந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன் தந்த பெரிய தனிமைக்கண் - செந்தமிழ்க் 241 கோனே கவர்ந்தெம்மைக் கொண்டனன் வந்தெமக்குத் தானே தரிற்றருக வென்பனபோல் - பூநேர் 242 இணைக்கையுந் தோளு மிடுதொடிக ளேந்தா துணைக்கண் டுயிற்றத் துயிலா - மணிக்கூந்தல் 243 போது மறந்தும் புனையா பொலங்கச்சு மீது படத்தரியா வெம்முலைகள் - சோதி 244 அடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல் கொடுக்குங் தெருணெஞ்சு கொள்ளா - தெடுக்கும் 245 கருப்புச் சிலையனங்கன் கையம்பால் வீழும் நெருப்புக் குருகி நிறைபோய் - இருப்புழிப் 246 பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி ஆடிய தோகைக்கு மன்பின்றிக்- கூடிய 247 கிள்ளைக்குந் தம்மிற் கிளரு மிளவன்னப் பிள்ளைக்குகு மாற்றான் பெயர்ந்துபோய்க் - கொள்ளை 248 பயக்கு மலர்க்குரவப் பந்தர்ப் படப்பை நயக்கு மிளமரக்கா நண்ணி - வயக்களிற்று 249 மன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால் அன்னங்கா ணீரென் றழிவுற்றும் - சென்னி 250 குருகுகா ளென்று குழைந்தும் - கருகிய 251 நீலக் குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டுச் சோலைப் பயில்வீ ரெனத்துவண்டும் - பீலிய 252 பேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும் நேரியுஞ் சேர வெனநெகிழ்ந்தும் - நேரியன் 253 தண்டுணர்ப்பே ராரம் பலகாலுந் தைவந்து வண்டுகாள் வாழ்வீ ரெனமருண்டும் - தொண்டிக்கோன் 254 மன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே தென்றல் வருவ தெனத்திகைத்தும் - நின்றயர்கால் 255 மன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள் முன்னர்ப் பணில முழங்குதலும் - மின்னிற்போய் 256 பேணுந் திருமடனு மென்றும் பிரியாத நாணும் பெருவிருப்பா னல்கூரக் - காணுங்கால் 257 ஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி வாய்ப்ப முகபங் கயமலர்ந்தாள் - போய்ப்பெருகும் 258 மீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும் போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் - சோதி 259 குழைய நடுவொடுக்குங் கொங்கையுந் தோளும் பழைய படியே பணைத்தான் - பிழையாத 260 பொன்னித் துறைவன் பொலந்தார் பெறத்தகுவார் தன்னிற் பிறரின்மை சாதித்தாள் - சென்னிக்குப் 261 பாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும் வாரா விருப்பு வருவித்தான் - ஓராங்கு 262 தெரிவை கோது விரவாக் கொழும்பாகு கொய்தளிரீன் போது புலராப் பொலங்கொம்பு - மீது 263 முயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற் புயலா லழுங்காப் புதுமின் - இயல்கொண் 264 டெழுதாத வோவிய மேழிசைய வண்டு கொழுதாத கற்பகத்தின் கொம்பு - முழுதும் 265 இருளாக் கலாபத் திளந்தோகை யென்றும் தெருளாக் களியளிக்குந் தேறல் - பொருளால் 266 வருந்தக் கிடையாத மாணிக்கம் யார்க்கும் அருந்தத் தெவிட்டா வமுதம் - திருந்திய 267 சோலைப் பசுந்தென்ற றூதுவர வந்தி மாலைப் பொழுதுமணி மண்டபத்து - வேலை 268 விரிந்த நிலாமுன்றில் வீழ்மகரப் பேழ்வாய் சொரிந்த பனிக்கற்றை தூங்கப் - பரிந்துழையோர் 269 பூசிய சாந்தங் கமழப் பொறிவண்டு மூசிய மௌவன் முருகுயிர்ப்பத் - தேசிகப் 270 பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும் சேர வினிதிருந்த செவ்விக்கண் - நேரியும் 271 தசாங்கம் கோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும் பாழி யயிரா பதப்பகடும் - ஆழியான் 272 சூடிய வாரமு மாணையுஞ் சோணாடும் காடு திரைத்தெறியுங் காவிரியும் - பாடுகென 273 கூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து வேன லரசனுந்தன் வில்லெடுத்தான் - தேனியிர் 274 தந்திரி யாழ்ப்பாணன் றைவந்தான் றைவந்தான் வெந்திறன் மாரனுந்தன் வில்லினாண் - முந்த 275 நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன் திறன்மதனு மம்பு தெரிந்தான் - விறலியொடும் 276 பாண னெருபாணி கோத்தான் பலகோத்தான் தூணி தொலையச் சுளிந்துவேள் - மாண 277 இசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து விசைத்தன வேனிலான் பாணி - விசைத்தெழுந்த 278 வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ வாணுதல் வீழா மதிமயங்காச் - சேணுலாம் 279 வாடை யனைய மலயா நிலந்தனையும் கோடை யிதுவென்றே கூறினான் - நீடிய 280 வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி நீரை யிதுவோ நெருப்பென்றான் - ஊரெலாம் 281 காக்குந் துடியை யழிக்குங் கணைமாரன் தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக்கைதொறும் 282 வாழு முலகத் தெவரு மனங்களிப்ப வீழு நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன் 283 எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றான் - கங்குல் 284 புலருந் தனையும் புலம்பினா ளாங்குப் பலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ் 285 ஆழிப் புவன மடைய வுடையபிரான் சூழிக் கடாயானை தோன்றுதலும் -யாழின் 286 யானையை நோக்கிக் கூறுதல் இழைக்கு மிசைமுதலா மெப்பகைக்கு மாற்றா துழைக்கு முயிர்தழைப்ப வோடிப் - பிழைத்னளாய் 287 முட்டுந் திகிரி கிரியின் முதுமுதுகிற் கட்டுங் கடவுட் கடாயானை - யெட்டும் 288 தரிக்கு முலகந் தனிதரித்த கோனைப் பரிக்கு மயிரா பதமே - செருக்கிப் 289 பொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி இருந்த வடவரைக ளெல்லாம் - திருந்தா 290 விதையம் பொருதழிந்த விந்தமே போலப் புதைய நடந்த பொருப்பே - சிதையாாத 291 திங்கட் குலத்திற்குந் தெய்வப் பொதியிற்கும் அங்கட் பழங்குமரி யாற்றிற்கும் - தங்கள் 292 படிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ இடிக்குந் தனியசனி யேறே - கடிப்பமைந்த 293 யாம முரசா லிழந்த நிறைநினது தாம முரசு தரப்பெற்றேன் - நாம 294 விடைமணி யோசை விளைத்தசெவிப் புண்ணின் புடைமணி யோசைப் புலர்ந்தேன் - தடைமுலைமேல் 295 ஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில் மாறாப் பெருங்காற்றான் மாற்றினேன் - வேறாகக் 296 கூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ வீசு மதத்திவலை யான்மீட்டேன் - மூசிய 297 காருலா மோதக் கடல்முழங்க வந்ததுயர் நேரிலா நீமுழங்க நீங்கினேன் - பேரிரவில் 298 என்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம் நின்மே லன்கன்வர நீங்கினேன் - இன்னும் 299 கடைபோல வென்னுயிரைக் காத்தியேல் வண்டு புடைபோகப் போதும் பொருப்பே - விடைபோய்நீ 300 ராட்டுந் தடங்கலக்கின் மாரற் கயில்வாளி காட்டுந் தடமே கலக்குவாய் - கேட்டருளாய் 301 கார்நாணு நின்கடத்து வண்டொழியக் காமனார் போர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் - பார்நாதன் 302 செங்கைக் கரும்பொழியத் தின்கைக் கனங்கனார் வெங்கைக் கரும்பே விரும்புவாய் - எங்கட் 303 குயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய் அயிரா பதமேநீ யன்றே - பெயராது 304 நிற்கண்டா யென்றிரந்து நின்றா ணுதலாக விற்கொண்ட பேரிளம்பெண் வேறொருத்தி - கொற்கையர்கோன் 305 பேரிளம் பெண் மல்லற் புயத்தினகன் மால்யானைக் கைபோலக் கொல்லத் திரண்ட குறங்கினாள் - எல்லையில் 306 கோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவேய்ந் தாடும் படமனைய வல்குலான் - சேடியாய்த் 307 தம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்குக் கொம்மை முகஞ்சாய்த்த கொங்கையாள் - செம்மை 308 நிறையு மழகா னிகரழித்துச் செய்யாள் உறையு மலர்பறிப்பா ளொப்பாள்ன் - நறைகமழும் 309 மாலை பலபுனைந்து மான்மதச் சாந்தெழுதி வேலை தருமுத்த மீதணிந்து - சோலையில் 310 மானு மயிலு மனைய மடந்தையரும் தானு மழகு தரவிருப்பத் - தேனிமிர் 311 ஊற விளம்பாளை யுச்சிப் படுகடுந் தேறல் வழிந்திழிந்த செவ்விக்கண் - வேறாக 312 வாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும் போக்கி யொருத்தி புகழ்ந்துகா - நோக்கி 313 வருந்திச் சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி அருந்தித் தமர்மே லயர்ந்தாள் - பொருந்தும் 314 மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன் நயக்கத் தகுங்கனவு நல்கும் - முயக்கத்து 315 மிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும் ஒக்க விகல வுடனெழுந்து - பக்கத்து 316 வந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில் தந்த தனதுநிழ றானோக்கிப் - பைந்துகிர்க் 317 காசுசூ ழல்குற் கலையே கலையாகத் தூசு புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து - வாசஞ்சேர் 318 சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல் ஆடிய சாந்தி னணிசிதைந்து - கூடிய 319 செவ்வாய் விளர்ப்பக் கருங்கண் சிவப்பூர வெவ்வா ணுதலும் வெயரரும்ப - இவ்வாறு 320 கண்டு மகிழ்ந்த கனவை நனவாகக் கொண்டு பலர்க்குங் குலாவுதலும் - வண்டுசூழ் 321 வேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற் பூரித்த மெய்யுவகை பொய்யாகப் - பாரித்த 322 தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன் நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் 323 கண்டதுங் கெட்டேன் கனவை நனவாகக் கொண்டது மம்மதுச்செய் கோலமே - பண்டுலகிற் 324 செய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற் கெய்த வருமோ விவையென்று - கைதொழுது 325 தேறி யொருகாலுந் தேறாப் பெருமையல் ஏறி யிரண்டா வதுமயங்கி - மாறிலாத் 326 தோழியர் தோண்மே லயர்ந்தாளத் தோழியரும் ஏழுயர் யானை யெதிரோடி - ஆழியாய் 327 மாடப் புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும் கூடற்குங் கோழிக்குங் கோமானே - பாடலர் 328 சாருந் திகிரி தனையுருட்டி யோரேழு பாரும் புரக்கும் பகலவனே - சோர்வின்றிக் 329 காத்துக் குடையொன்றா லெட்டுத் திசைகவித்த வேத்துக் குலகிரியின் மேருவே - போர்த்தொழிலால் 330 ஏனைக் கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட தானைத் தியாக சமுத்திரமே - மானப்போர் 331 இம்ப ரெழுபொழில் வட்டத் திகல்வேந்தர் செம்பொன் மவுலிச் சிகாமணியே - நம்பநின் 332 பாரிற் படுவன பன்மணியு நின்கடல் நீரிற் படுவன நித்திலமும் - நேரியநின் 333 வெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டுப் பொற்பின் மலிவன பூந்துகிலும் - நிற்பணியக் 334 கொண்டா யிவடனது கொங்கைக் கொழுஞ்சுணங்கும் தண்டா நிறையுந் தளிர்நிறமும் - பண்டைத் 335 துயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர் பயிலுந் திருநூற் படியோ - புயல்வளவ 336 மன்னிய தொண்டை வளநாடு வாளியும் பொன்னி வளநாடு பூஞ்சிலையும் - கன்னித் 337 திருநாடு தேருங் குறையறுப்பச் செய்தால் திருநாண் மடமகளிர் தம்மை - ஒருநாளவ் 338 வேனற் கரசன் விடுமே யவன்சினமிப் பானற்கண் ணல்லா ளுயிர்ப்பரமே - ஆனக்கால் 339 குன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி ஒன்றே யுலகுக் கொழியுமே - என்றினைய 340 கூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற் சீறி யனங்கன் சிலைவளைப்ப - மாறழியக் 341 குத்துங் கடாக்களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி உத்துங்க துங்க னுலா. 342 வெண்பா கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும் செய்ய கரிய திருமாலே - வையம் அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான். விக்கிரம சோழனுலா முற்றிற்று. |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |