![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா குலோத்துங்க சோழன் உலா இரண்டாம் குலோத்துங்க சோழன் தன் தந்தை விக்ரம சோழனால் கி.பி. 1133 இல் இளவரசர் பட்டம் சூட்டப் பெற்றான். பிறகு 1135 இல் அரியணை ஏறினான். இவனுக்கு வழங்கப்பெறும் சிறப்புப் பெயர்கள் அபயன், அநபாயன், எதிரிலிப் பெருமாள், கலிகடிந்த சோழன், திருநூற்றுச் சோழன், பெரிய பெருமாள் என்பனவாகும். இவனுக்கு தியாகவல்லி, முக்கோக்கிழானடிகள் என்ற இரு மனைவியர் இருந்தனர். இருவரில் தியாகவல்லி பட்டத்தரசியாக இருந்தவள். இவளுக்குரிய சிறப்புப் பெயர் புவனமுழுதுடையாள் என்பதாகும். இராசராசன் என்னும் பெயருடைய மகன் ஒருவன் இருந்தான். தில்லையில் இவன் செய்த திருப்பணிகளைக் குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா, தக்கயாகப் பரணி ஆகிய நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன. சிதம்பரம் சிவன் கோவிலுக்குப் பொன் வேய்ந்து, திருச்சுற்றுச் சுவரும் அமைத்தான். ஏழுநிலைக் கோபுரங்கள் அடங்கிய சிவகாமிக் கோட்டம் அமைத்தான். அதனருகே திருச்சுற்று மாளிகையும், திருக்குளமும் அமைத்தான். பொன்னாலும் மணியாலும் அழகு செய்யப்பெற்ற தேர் ஒன்றைச் செய்தான். நகரெங்கும் பல மண்டபங்களைக் கட்டினான். இவனது ஆட்சிக் காலத்தில் எல்லா வளங்களும் நிறைந்த பெருநகரமாகச் சிதம்பரம் விளங்கியது. திருவாரூர்க் கோவிலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் சைவ நாயன்மார்களுக்குச் சிலைவைத்து வழிபாட்டிற்கும், விழாவிற்கும் செலவுசெய்ய நிலங்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறான். இவனுக்கு ஆசிரியராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் இவனை ஞான கெம்பீரன், நித்திய கீத பிரமோகன், தூரக வித்தியா விநோதன் என்று புகழ்ந்து கூறியுள்ளார். ஒட்டக்கூத்தர் இவனது அவைக்களப் புலவராக இருந்தார். இவர் இவன்மீது குலோத்துங்க சோழன் உலா, பிள்ளைத்தமிழ் போன்ற நூல்கள் இயற்றியுள்ளார். திருநாம நல்லூர், திருவதிகை, திருமுதுகுன்றம் போன்ற ஊர்களிலும் திருப்பணிச் செய்துள்ளான். இவன் கி.பி.1133 லிருந்து 1150 வரை சோழ நாட்டை ஆண்டான். தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம் போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேல் 1 மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீர உருளுந் திருத்தே ருரவோன் - அருளினாற் 2 பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர் ஊராக் குலிர விடையூர்ந்தோன் - சோராத் 3 துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர் எயில்காத்த நேமி யிறையோன் - வெயில்காட்டும் 4 அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில் ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் - கல்வை 5 எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் - பழக்கத்தாற் 6 போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர் மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் - காந்தெரியில் 7 வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள மந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் - முந்திப் 8 பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண் டொருதேரால் வென்ற வுரவோன் - கருதி 9 மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன் தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா 10 மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக் கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும் 11 பதுமக் கடவுள் படைப்படையக் காத்த முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க 12 வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய 13 மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன் 14 றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு மலையெறியு மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத் 15 தொல்லார் கலைவலையந் தோள்வலைய முன்றிருந்த வில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் - ஒல்லைக் 16 கொலையே நுடம்படையக் கொய்தாலு மெய்தாத் துலையேறி வீற்றிருந்த தோன்றல் - தலையேறு 17 மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராாதாள் கண்கொண்ட சென்னிக் கரிகாலன் -எண்கொள் 18 பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு மணம்புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு 19 படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் - அடுத்தடுத்துச் 20 சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும் ஆறும் படுதழும்பி னாகத்தோன் - ஏறப் 21 பிரம வரக்க னகலம் பிளந்து பரமர் திருத்தில்லை பார்த்தோன் - நரபதியர் 22 தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும் ஈழமுங் கொண்ட விகலாளி - சூழ்வும் 23 ஏறிப் பகலொன்றி லெச்சுரமும் போயுதகை நூறித்தன் றூதனை நோக்கினான் - வேறாகக் 24 கங்கா நதியுங் கடாரமுங் கைவரச் சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன் 25 புவிராச ராசர் மனுமுதலோர் நாளில் தவிராத சுங்கத் தவிர்த்தோன் - கவிராசர் 26 போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள் ஆற்றுந் திருந்தோ ளகளங்கன் - வேற்றார் 27 விரும்பரணில் வெங்களத்தி வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன் 28 கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை 29 இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில் வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை 30 மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின் காதற் பெயரன் கனகளபன் - யாதினும் 31 தீட்டக் கரிய திருவே திருமாலை சூட்டத் திருமகுடஞ் சூடியபின் - நாட்டு 32 முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம் சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்டு 33 மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும் பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம் 34 தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாத போதத் திமிரப் பொறைநீக்கி - மாதரில் 35 ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண் தக்க தலைமைத் தனித்தேவி - மிக்க 36 புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும் அவனி சுரர்கருதி யார்ப்ப - நவநிதிதூய் 37 தில்லையிற் செய்த திருப்பணிகள் ஏத்துத் தருங்கடவு ளெல்லையி லானந்தக் கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேற் 38 றில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத் தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற் 39 றசும்பு வளர்கனித் தண்பெரு நாவல் அசும்பு பசும்பொ னடுக்கிப் -பசும்பொன் 40 அலகை யிகந்த அசலகுல வச்ரப் பலகை ததும்பப் பதித்து - மலர்கவிகைக் 41 காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை தூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம் 42 தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண் டெடுக்குந் திருத்தீப மேற்றி - அடுக்கிய 43 தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கடந்த பாய மரகத்தாற் பாசடையாய்த் - தூய 44 பருமுத்தா வாலியாய்ப் பற்பரா கத்தால் திருமிக்க செந்தா மரையாய்ப் - பெருவர்க்க 45 நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த கோலத்தாற் கோயிற் பணி குயிற்றிச் - சூலத்தான் 46 ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர மாடம் பரந்தோங்கு மாளிகையும் - கூடிப் 47 பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போய வலங்கோட் டிகிரியு மானத் - தலங்கொள் 48 நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க மலையேழு மென்ன வகுத்துத் - தலையில் 49 மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச் சிகரங்க ளாகித் திகழ - நிகரில் 50 எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும் விரிபொற் றிருமுற்ற மின்னச் - சொரிபொற் 51 கடாரப் பனிநீர் கவினிக் கனபொற் றடாகங்க ளாகித் ததும்ப - விடாதுநின் 52 றற்பக லாக வனந்த சதகோடி கற்பக சாதி கதிர்கதுவப் -பொற்பூண் 53 வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த சுரமகளி ராகித் துறும - ஒருதான் 54 பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம் மறக்கும் படிசெல்வ மல்கச் - சிறக்கும் 55 இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள் திருக்காமக் கோட்டந் திகழ்வித் - தருக்கர் 56 புனையா மணியாலும் பொன்னாலு மின்ன மனையாலோ ரோர்தேர் வகுத்து - முனைவன் 57 திருவீதி யீரண்டுந் தேவர்கோன் மூதூர்ப் பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற் 58 பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும் கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள் 59 புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம் பவனி யெழுச்சி பணித்துக் -கவினும் 60 மடமயி லொக்க மகுடங் கவித்தாள் உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில் 61 அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதென மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை 62 வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத் தான மனைத்துங் தகைபெறுத்தி - வானிற் 63 கிளைக்குஞ் சுடரிந்தர நீலக் கிரியை வளைக்கு மிளநிலா மானத் - திளைக்கும் 64 உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத் திருவுடை யாடை திகழ்த்தி - ஒருபுடைப் 65 பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற் கச்சை நவரத்னக் கட்டெறிப்ப - வச்ர 66 வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத் திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற் 67 கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள் பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிப் - பாற்கடல் 68 வந்த வனச மகளேபோன் மற்றது தந்த கடவுண் மணிதயங்கப் - பந்தச் 69 சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்த உரக பணாமணி யொப்ப - விரவி 70 மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச் சிகரச் சுடர்போற் றிகழ - நிகரில் 71 முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில் வடியு நிலவு மலையப் - படியில் 72 வயங்கு கடக மகுடாதி மின்னத் தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய 73 செவ்வி நுதலிற் றிருநீற்றுப் புண்டரம் வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய 74 நாவியு மான்மதச் சாந்து நறையகில் ஆவியு மாகண் டமுமளப்பத் - தீவிய 75 தோண்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக் கோண்மாலை கூசக் குளிர்கொடுப்ப - நாண்மாலை 76 வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடுப்பப் போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில் 77 மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும் வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட் 78 கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும் வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா 79 முதுவாய் வடவையு முந்நான்கு கோளும் கதுவாம லெல்லாக் கடற்கும் - பொதுவாய் 80 அபயங் கொடுக்கு மயிரா பதத்தை உபய வயக்கோட் டுருமை - விபவ 81 நிருத்தத் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற் றெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தக்க 82 பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்க வெள்ளிக் கவிகை மிசையோங்க - ஒள்ளிய 83 ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு மற்றை யலகில் வளைகலிப்பக் - கற்றைக் 84 கவரி யிரட்டக் கடவுண் முரசார்த் துவரி யுவாவாடி யொப்ப - அவிர்வாளும் 85 சங்குந் திகிரியுஞ் சார்ங்கமுந் தண்டமும் எங்குஞ் சுடர்விட் டிருள்களையக் - கொங்கத்து 86 விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப் பொற்கொடி யொன்றின் புடைபோதத் - தெற்கின் 87 மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச் சிலையான் வரவு தெரியத் - தொலையாது 88 வீசுந் திவலை விசும்புகூர் மங்குவால் வாசவன் வந்த வரவறியக் - கூசாதே 89 யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள தேவர் வருவ ரெனத்தௌிய- யாவர்க்கும் 90 பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத் தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப் 91 பரவி யுலகிற் பலமண்ட லீகர் புரவி மிசைகொண்டு போத - அருவிபோல் 92 விட்டு மதம்பொழியும் வேழந் திசைவேழம் எட்டு மொழியப் புகுந்தீண்டக் - கட்டி 93 இரவிக்கு நிற்பன வேழு மொழியப் புரவிக் குலமுழுதும் போத - விரவி 94 உடைய நிதிக் கடவு ளூர்தி யொழிய அடைய நரவெள்ள மார்ப்ப - விடையே 95 எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம் விழுந்த துகளுருவ வீழ்ந்தும் - தொழுந்தகைய 96 விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம் மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட - எண்ணரிய 97 மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர் பூகத ராயினார் போற்பரவ - நாகர் 98 கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத் தொழுந்தொறும் மன்னர் சொரிய - எழுந்துள 99 கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்து மைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய 100 சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார் மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் - மாலைதாழ் 101 தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர் நெற்றி சுருங்க நெருங்குவார் - பொற்றொடியார் 102 மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார் சூளிகை மாடந் தொறுந்துறுவார் - நீளும் 103 இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்பத் திரண்டு பலரெதிரே சென்று - புரண்ட 104 கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும் பெரும்புவன வெல்லை பிடிப்பச் - சுரும்பு 105 நிரைக்கு நிரைமுரல நீலக் குழாங்கன் இரைப்பின் மொகுமொகு வென்ன - விரைச்சுருள் 106 மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூதக் காகாள மென்னும் படிகலிப்பப் - போகத் 107 தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ் மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு - இகலனங்கன் 108 சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர் சேனா பராக மெனத்திகழப் - பூநாறும் 109 கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய் வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில் 110 இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன் மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர் 111 முதுகுல மன்னர் முடிவணங்க வந்த விதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற் 112 கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர் எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்கும் 113 தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும் யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய 114 மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும் தாதகியுந் கொள்ளத் தரினென்பார் - மாதை 115 ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை இறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற் 116 சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவும் 117 துஞ்சுந் துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில் நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் - பஞ்சவனே 118 வாடையினுந் தண்ணென்னும் மந்தா நிலமெமக்குக் கோடையினுந் தீது கொடிதென்பார் - கூடி 119 முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற் பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொருமதனன் 120 பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் - ஆர்த்தான் 121 உளைத்தான் சிலையிக் கொருகோடி கோடி வளைத்தா னரும்புலகின் மாய்த்தான் - இளைத்தார் 122 பேதை இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற் புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகினோர் 123 ஆடாத தோகை யலராத புண்டரிகம் பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை -சூடத் 124 தளிராத சூதந் தழையாத வஞ்சி குளிராத திங்கட் குழவி - அளிகள் 125 இயங்காத தண்கா விறக்காத தேறல் வயங்காத கற்பக வல்லி- தயங்கிணர்க் 126 கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம் ஏழைப் பருவத் திளம்பேதை - சூழும் 127 நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம் 128 தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை மிக்க பராந்தகனை மீனவனைப் -புக்கார் 129 வணங்க வணங்கி வழுத்த வழுத்தி அணங்க வணங்கா ளகலாள் -குணங்காவல் 130 மன்னன் புனையுந் திருமுத்த மாலையை அன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன் 131 கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும் பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை 132 அயிர்க்கு மிருகோட் டயிரா பதத்தை மயிற்கு மலையென்று மன்னும் - குயிற்கிளவி 133 தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை மான்வாழ மாசின் மதியென்னும் - கோனுடையப் 134 பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய பூங்குவளை மாலை புனைகென்னும் -தேங்கமலத் 135 தற்புத வல்லி யவளே பிறந்துடைய கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்போர் 136 பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி 137 போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய பேரார மாலைக்குப் பேதுறும் - நேரியன் 138 ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன் 139 இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும் அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும் 140 முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும் கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநான் 141 சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்ற கோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து 142 விடம்போற் பணிகட்டு வேழங்கட் கெல்லாம் கடம்போற் கொலையூறுங் கண்ணாள் - அடங்கா 143 வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென் றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் - உயிர்ப்பாவை 144 கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்துச் சொல்லிக் கிடங்குந் துணைமணிக்கும் - வல்லி 145 இதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்ன மதர்க்கு மொருதிரு மாது -முதற்றன் 146 பணிவாயி லாயம் பரந்தகலக் கிள்ளைக் கணிவாயின் முத்த மருளி - மணிவாயாற் 147 சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே வல்லாய் பிறவறிய வல்லவோ - கல்லரணக் 148 கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர் ஆழித் தடக்கை யபயற்கு - வாழியாய் 149 காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ ஆக்கு நதியேழு மாரமோ - தேக்கிய 150 பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த மண்ணேழும் வாகு வலயமோ - தண்ணறுந் 151 தூவ னறவப் பொழிலேழுங் தொங்கலோ காவன் மலையேழுங் கந்துகமோ - ஏவலால் 152 செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோ பெய்யு முகிேலூம் பேரியமோ - வையகம் 153 கூறு மவையிவை யென்று குறுந்தொடி வேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும் 154 ஒருத னடியின் மடிய வுபய மருது பொருது வயவன் - விருதன் 155 விலையி லமுத மதன விமலை முலையின் முழுகு முருகன் - வலைய 156 கனக சயில வெயிலி கணவன் அனக னதுல னமலன் - தினகரன் 157 வாசவன் றென்னன் வருண னளநேசன் கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை 158 ஆழிப் பெருமா னபய னனபாயன் சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது 159 சென்றா டிருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து நின்றா ளினிவறிதே நிற்குமே - என்றாலும் 160 கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி ஓடு நகாதே யுடையாதே - பீடுற 161 வந்து தொடுங்குன்ற வாடைக் கிளங்கொன்றை நொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ்த் 162 தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று மன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய் 163 சூதள வல்ல துணைமுலை தூயகண் காதள வல்ல கடந்தனபோய் - மாதர் 164 உருவத் தளவன் றொளியோக்க மாக்கம் பருவத் தளவன்று பாவம் - தெருவத் 165 துடைவ துடையாதா முள்ள முறவோர்ந் தடைவ தடையாதா மச்சம் - கடைகடந்து 166 சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன் தோயினுந் தோய மனந்துணியும் - ஆயினும் 167 ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்புக் கண்டிலன் காந்து தனதடங் கண்டிலன் - பூந்தடந் 168 தேரி னகலுந் திருந்தல்குல் கண்டிலன் காரி னெகிழளகங் கண்டிலன் - மாரவேள் 169 எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ கொய்யு மலரம்பு கோத்தானோ - தையன்மால் 170 மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும் செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென - நொந்தார் 171 வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக் கிளைத்தளிர்ப் பாயற் கிடத்தி - துளைத்தொகை 172 ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும் வேய்க்குழ லென்று விளம்பியும் -தீக்கோள் 173 நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன் புகழ்நிலா வென்று புகழ்ந்தும் - இகலிய 174 பல்லிய மன்று பரராச கேசரி வல்லிய மென்று மருட்டியும் - மெல்லிய 175 கல்லார மன்று கதிரோன் றிருமருமான் மெல்லார மென்று விளம்பியும் - நல்லார் 176 அருத்தி யறிவா ரவையிவை யென்று திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி 177 மங்கை உருவ வரிக்க ணொழுக வொழுகப் புருவ முடன்போதப் போத - வெருவி 178 வனமுலை விம்மி வளர வளரப் புனைதோள் புடைபோதப் போத - வினைவர் 179 அருங்கலை யல்கு லகல வகல மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு 180 பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை வரவர வாற்றாத மங்கை - பொரவரு 181 தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி தாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர் 182 அமுத மதியத் தலர்நிலா முற்றும் குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார் 183 கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள வேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர் 184 தண்டா மரையா டலைவனை யாமும்போய் கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை 185 ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும் தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம் 186 வாவிக் கரையில் வரநீ ரரமகளிர் சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற் 187 புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத் தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே 188 னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா வரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய 189 முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங் கொத்தி னணங்கனைய கோலத்தாள் - பத்திய 190 பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ் கச்சை நிலமகள்போற் காட்சியாள் -நிச்சம் 191 உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில் வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி 192 மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன் கைம்முகில் மேல்வரக் கண்டதற்பின் - மொய்ம்மலர் 193 நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்க நீலமே யன்றி நினையாதாள் - நீலமே 194 முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம் தன்னுடைய மாமை தழீஇக்கொள்ளப் - பின்னர் 195 நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும் ஒருங்கு மலர்தட மொத்தும் -மருங்கே 196 இறங்கிய கற்பக வல்லியு மேறி உறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க 197 வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண் டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள் 198 கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு ஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின் 199 காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும் தூசுங் துகிலுங் தொடியுநான் - கூசேன் 200 வௌியே தருவேன் விரையாரத் தொங்கல் கிளியே தருமேனீ கேளாய் - அளியேநீ 201 தாது கடிகமழ் தாதகித் தாமத்தின் போது கொழுதப் புறப்படாய்- ஓதிமமே 202 எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ உங்கள் பெருமா னுழைச்செல்வாய் - பைங்கழற்காற் 203 சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான் சாயன் மயிலே தலைப்படாய் - பாயும் 204 கடமானே போல்வார்க்கு நீநின்னைக் காட்டின் மடமானே தானே வருங்காண் - கடிதென்று 205 கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன் பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் - உள்ள 206 அலகில் குலநீல ரத்னா பரணம் விலகி வெயிலை விலக்க - உலகிற் 207 பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை 208 ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும் நேயத்தா ரல்லரே நிற்பாரே - தேயத்தார் 209 மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதே மின்னனை யாளையு மீதூரா -முன்னர் 210 கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும் இடமாதும் யாமென்பார் போலப் - படமாய் 211 இரைப்பச் சுரும்போ டிருளளக பாரம் நிரைத்து வனமாகி நிற்பார் - விரைப்பூண் 212 முலையாய் வளரு முரட்குவடு கொண்டு மலையாய் நெருங்க வருவார் - தொலையாத 213 பாய பருமுத்தின் மாலை பலதூக்கித் தூய வருவியாய்த் தோன்றுவார் - சாயற் 214 கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும் பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ 215 யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார் தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் - ஆழிக்கைத் 216 தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும் பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையார் 217 நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின் பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள் 218 தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா நின்சங்கந் தந்தருள னேரென்பார் - மின்கொள்ளும் 219 இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும் நின்றுயி றந்தரு ணீயென்பார் - என்றென்று 220 மானு மயிலு மனையார் வளைத்துளைப்பத் தானூங் களிறுந் தடையுண்ட - கோனும் 221 தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை அடுத்த திருநோக் கருளாக் - கொடுத்த 222 திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும் ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் - பெருநகை 223 எய்தி யனங்க னெழப்போனான் மாதரும் உய்து சிறந்தா ளுழைச் சென்றார் - நொய்திற் 224 றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ தடுக்கும் பசலை யடாமே - உடுக்கும் 225 துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம் புகிலும் புகாமே பொராமே - அகினாறும் 226 பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய் வள்ளியிற் சால வயங்கினாள் - ஒள்ளிழை 227 மடந்தை பின்ன ரொருத்தி பெருமைக் கரமகளிர் முன்ன ருரைக்கும் முதன்மையாள் - சென்னியில் 228 வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் -பண்டுவந் 229 தேற்றுப் பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும் தோற்றுச் சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றற் 230 கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற வலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண் 231 எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும் 232 அடல்விடு மல்குற் பரவைக் குடைந்து கடல்விடு முத்தின் கலையும் - உடலிமேல் 233 ஏந்து மினைய விளநிலா விட்டெறிப்பப் போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - வேந்தனும் 234 சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும் உட்கோடு கேயூரத் தூடெறிப்பக் - கொட்கும் 235 கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும் அடல்சேக்கு மார்பிற் கமைய - உடலி 236 அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை மறுகு திருமலர வந்தான் - குறுகும் 237 முறுகு கதிரின் முகந்திரிய வேற்று மறுகு திருமலர வந்தான் - குறுகும் 238 நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்கட் குடையாய வெள்ளமுங் கூடி - அடைய 239 மதியுதய மென்று வணங்க வனச பதியுதய மென்று பணிய - துதியில் 240 ஒருவரு மொல்வா வுருவமிக் கூறும் இருவரு மெய்திய வெல்லைத் - தெருவில் 241 நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து மருங்கு வருகின்ற மாரன் - திருந்திய 242 பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற் போய மருங்குற் புறநோக்கார் -சாயா 243 முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள் நிலையின் பணைப்பு நினையாக் - கொலையால் 244 உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின் கடைக்கு முடிவின்மை காணாக் - கிடைக்கும் 245 பருவக் கொடிவதன பங்கே ருகத்தின் புருவக் கொடி முடியப் போகா - உருவக் 246 களிக்கும் புடவி சதகோடி கற்பம் அளிக்கும் பெருமானை யஞ்சா - குளிர்க்கும் 247 கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக் கொடுங்காற் சிலையைக் குனித்து - நடுங்கா 248 முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற் புகுந்த திதுவென்று போனான் - திகந்த 249 முழுதா ளபயனை முகிணகையுந் தோளும் தொழுதா ெள்ாருதானே தோற்றாள் - அழுதாள் 250 திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும் சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் - பரிந்தார் 251 முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ் கடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பே 252 ரினந்தழுவிப் பின்னையைக் கொள்வா யிவளைத் தனந்தழுவிக் கொள்கை தவறோ - அனந்தம் 253 கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை தருந்துகி னோக்கத் தகாதோ - விருந்து 254 துளவ முகிற்கிது வந்தது தூய வளவர் திருக்குலத்து வந்தோ - அளவிறந்த 255 வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல் புன்க ணடியேம் பொறேமென்று - மின்கண் 256 இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றிக் கவிரிதழ் பின்னுங் கலங்கத் - துவரின் 257 வியக்குந் துகிரியைய மேம்பட் டுலகை மயங்குந் திருவாய் மலர்க்கும் - நயக்கும் 258 பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரே திருப்புருவஞ் செய்த செயற்கும் - பரப்படையக் 259 செங்கே ழெறித்து மறிக்குந் திருநயன பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் - அங்கே 260 தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும் பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார் 261 பாலிருத்தி மம்மர் படப்படப் பையப்போய் மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி 262 அரிவை தாளை யரவிந்தச் சாதி தலைவணங்கத் தோளை யுரகர் தொழவிருப்பாள் - நாளை 263 வளவர் பெருமான் வரும்பவனி யென்று கிளவி விறலியர்வாய்க் கேட்டாள் - அளவுடைத் 264 தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன் பேரிரா வென்று பிணங்கினான் - பேரிரா 265 என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும் நின்று சுடுங்கோ னிலவென்றான் - நின்றார் 266 அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம் எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து - சுடர்க்கதிரோன் 267 மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள் - காலையோன் 268 சேமித்த பூங்கோயி லெல்லாந் திருவென்று காமித் திகழின் கடைதிறப்ப - நேமி 269 மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித் தணக்கக் கடிகாவிற் சார்ந்தாள் - கணக்கதிர் 270 வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில் இந்து சிலாதலத்தி லேறினான் - குந்திக் 271 கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம் நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கிக் 272 களிக்கு மயிற்குலங் கூத்தாடக் கண்டும் கிளக்குலம் பாட்டெடுப்பக் கேட்டும் - பளிக்குருவப் 273 பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை பூவை பகரப் புறஞ்சாய்ந்தும் - கோவை 274 அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத விளிக்களி கூர்ந்து வியந்தும் - களிக்கப் 275 பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி எழுச்சி முரசோர்ந் திருந்தாள் - கழற்செழியர் 276 தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில் தன்சங்க மாகி யெதிர்தழங்க - மின்சங்கம் 277 போல விழுந்து மெழுந்தும் புடையாயம் கோல மறுகு குறுகுவாள் - ஞாலம் 278 எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக் கொடுக்குஞ் சுடிகைக் குதம்பை -கடுக்கும் 279 மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து வெயில்வேண்ட வேண்டி விளைப்ப - பயில்கதிர் 280 வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல் எல்லாப் பருதியும் போலெறிப்ப - கொல்குயத்து 281 வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம் சூழ்சோதிச் சக்ரந் தொலைவிப்பக் - கேழொளிய 282 பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த செம்பொற் றிகிரி யெனத்திகழ - அம்பொற் 283 புறவுஞ் சகோரமும் பூவையு மானும் பிறவு மினமென்று பெட்ப - உறவாய் 284 அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்புக் கன்னம் தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல - நடந்துபோய் 285 மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு மீனவற்குச் சென்று வௌிப்பட்டாள் - தானே 286 அலகு முகமுங் குவிகையு மாகி மலரு முகளமுமானப் - பலர்காணத் 287 தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி மானு மடைய மனங்கொடுத்தாள் - கோனும் 288 தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்தி விடாதே களிறகல விட்டான் - படாமுலைமேல் 289 ஒத்திலங்கு வேர்வந் துறைப்ப நறைக்கழுத்து நித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் - எத்திசையும் 290 சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொற் றொடிவலயம் நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் - தேரின் 291 அரிவை துகினெகிழ வல்கு லரவின் உரிவை விடும்படமு மொத்தாள் - சொரிதளிர் 292 மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமரப் பூங்கொம்ப ரென்னப் புறங்கொடுத்தாள் - பாங்கியரும் 293 ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல் மற்றை யருகிவளை வைத்திலனே - பெற்றுடைய 294 வாரத் தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை ஆரத் திருத்தோ ளளித்திலனே - நேரொத்த 295 பூந்தா மரையா ளெதிரேயிப் பொற்றொடிக்கும் ஏந்தார மார்ப மிசைந்திலனே -வேந்தர்கோன் 296 அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள் இன்ன மபயம்புக் கெய்திடீர் - நன்னுதற் 297 பாவைகாள் கொல்யானைப் பாவடிக் கீழ்ப்பணியீர் பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் - தாவிப்போய்ப் 298 பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர் கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் - யாதெல்லை 299 என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர்ப் 300 தெரிவை பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர் இருவி லிடைநின் றிறைஞ்சித் - திருவுலாப் 301 போதும் பெருமாள் புகுது மளவுமிங் கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம் 302 பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று வந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும் 303 கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதே அம்மென் மருங்குல்பார்த் தஞ்சாதே - தம்முடனே 304 கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும் கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி 305 எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும் கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து 306 முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங் கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம் 307 அடியு மிருகையு மம்புய மென்று படியு மொழுங்கிற் பயில -முடியும் 308 தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர்க் கிடையிடை நின்றகா லேய்ப்ப - அடைய 309 விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய் எழுந்தன கைகடவா வென்னக் - கொழுந்தளிரால் 310 ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை ஆற்றுதி யீதிங் கரிதென்னப் - போற்றரும் 311 கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை ஐயோ வறித லரிதென்னப் - பொய்யோ 312 திலக நுதலிற் றிருவேயென் றோதி உலகு வியப்பவென் றோத - அலகிறந்த 313 பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்ட வந்தாட்டு நீராட்டு மண்டத்து - விந்தை 314 பெருமா னனபாயன் பேரிய மூன்றும் தருமா வாரந் தழந்த - ஒருமாதர் 315 ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும் 316 தாதுந் தமினிய மாலையுந் தண்கழுநீர்ப் போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்குச் 317 சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற் பொன்னி யறலும் புறங்கொடுப்பப் - பின்னர் 318 ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால் மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங்கழுத் 319 தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம் இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும் 320 உச்சக் கலனணியாத் தோளினைக் கோரிரண்டு பச்சைப் பசுங்காம்பு பாடழிய - நிச்சம் 321 அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை விசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க் 322 கோல வயிறுதர பந்தனக் கோணீங்கி ஆவின் வளர்தளிரி னைதாகி - மேலோர் 323 இழியு மொருசாம ரேகையு முந்திச் சுழியும் வௌிவந்து தோன்றக் - கெழிய 324 இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல் திசையின் புடையடையச் செல்ல - மிசையே 325 பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ சுறையு மரகத மொப்ப - அறையும் 326 சிலம்பு சுமவாத செந்தா மரைபோய் உலம்பு குரலஞ்சா தோடக் - கலம்பல 327 தாங்கி யுலகந் தரிப்பத் தரியென்று பாங்கிய ரெம்மருங்கும் பாராட்டப் - பூங்கே 328 ழுருவி லொளிபோ யுலகடையக் கோப்பத் தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும் 329 கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய வெற்றிக் களியானை மேல்வந்தான்-பற்றி 330 இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்க ஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில் 331 மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு சிறந்த திருவுள்ளஞ் செல்லச்- சிறந்தவள் 332 ஆக னசுத்திருந்தா ளாகத் திருவுள்ளக் கோசு னகத்திற் கொடுசென்றாள் - நாகிள 333 நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால் வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி 334 முருகு கமழ முகந்து முகந்து பருகு மடமகளைப் பாரா - அருகு 335 மடுத்து முயங்கி மயங்கிய தாயர் எடுத்து மலரணைமே விட்டார் - அடுத்தொருவர் 336 நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும் நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத 337 தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத் துங்கப் பணிவலையந் தோளுக்கும் - கொங்கைக்குப் 338 பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற் கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி 339 அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்று தௌிப்பச் சிறிதே தௌிந்தாள் - கிளிக்கிளவி 340 பேரிளம்பெண் மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனே செற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் - சுற்றவும் 341 தெட்டுத் தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை மட்டுத் தமனிய வள்ளத்து - விட்டு 342 மறித்து வயிர மடலொன்றின் வாக்கித் தெறித்து ஞமிறோப்பிச் செவ்வி - குறித்துக்கொண் 343 டேந்தி முகம னியம்பி யிருந்தொரு காந்தி மதிவதனி கைக்கொடுப்ப - மாந்தி 344 குதலை சூழறிக் குயிற்குங் கிளிக்கும் விதலை யுலகில் விளைத்து - நுதலை 345 வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை அயரா வௌிவிடா வஞ்சாப்- பெயரா 346 அருகிருந்த பாணனை நோக்க அவனும் குருசில் வருதமரங் கூறப் - பரிபுரக் 347 காலு நிதம்புமுங் கையுந் திருக்கழுத்தும் கோலு மதாணிக் குலமெல்லாம் - மேலோன் 348 குரகத மேழு முழுகிக் குளிப்ப மரகத சோதி வயங்கப் - புருவ 349 இடைபோய்க் குமிழின் மலர்வந் திறங்கப் புடைபோய்க் கருவிளை பூப்ப - விடையாக 350 ஏக முருக்கு மலர விளம்பாளைப் பூக மிடறு வரப்பொதிய - போகப் 351 பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப் பரும்பொருங் காம்பு பணைப்ப - விரும்பிய 352 நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக் குறுந்தொடிக் காந்தள் குலைப்பச் - செறிந்து 353 சலித்துத் தனியிள வஞ்சி தளரக் கலித்துக் கதலி கவின - ஒலித்தே 354 அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும் களிக்கு மயூர கணமும் - விளிக்கும் 355 புறவுந் தொடர்ந்துடனே போத வவையே பிறவு மினமென்று பெட்பர் - சுறவுயர்த்தோன் 356 காலை புகுந்து காப்ப தொருபசும்பொற் சோலை யெனவந்து தோன்றினாள் - ஞாலத்தோர் 357 தெய்வப் பெருமாளுஞ் சேவடி முன்குவித்துக் கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் - தையல் 358 வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும் பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும் 359 செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய பந்தாகக் கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும் 360 உய்ய விருகாது மூக்கு முடுபதியை நைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய 361 பவளத் துவர்வாயும் பாதாம் புயமும் கவளக் களிற்றௌிதிற் கண்டு - குவளைக் 362 சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களிப்பப் பருநெடுந் தோளும் பணைப்ப - ஒருநின் 363 சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன் அலம்பு சுடலேழு மாடேன் - வலம்புவனம் 364 ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ் வாழுந் திருவெனக்கு வாய்க்குமே - தாழி 365 முடைதழுவு தோளும் முலையுந் தழுவ விடைதழுவு தாமரைக்கை வீரா - கடகரியைக் 366 கைதழுவிக் கோரத்தைக் காறழுவி நின்புலியை மெய்தழுவிக் கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ் 367 ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற் கால வுததி கலக்கவும் - சால 368 வருந்தா வகைவருந்த வாழி பெயரும் பெருந்தேவி யார்க்குப் பெறலாம் - திருந்திய 369 குந்த மொசித்ததுவுங் கொற்றத் திருத்தோளால் வந்த விடையேழு மாய்த்ததுவும் - முந்துறக் 370 கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த ஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய 371 சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய மாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன் 372 முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும் அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி 373 மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய் அலைக்குங் கடன்மாய்த் தருளாய் - மலைத்தவர் 374 தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற் றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர்த் 375 தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும் எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின் 376 செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின் வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சுமத்துக் 377 காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய் வீதி விடைதடிய வேண்டாவோ - யாதுகொல் 378 வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங் 379 சுருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற் சுருப்புசாண் புக்கழுந்தத் தூக்கும் - நெருப்புமிழ் 380 அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா 381 உடல்பிள வோட வொருதேரிடட் டூரும் அடன்மகர போசன மாக்கும்- விடுதூதால் 382 அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய் இக்காம தண்ட மௌிதன்றே - மைக்கோல 383 வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த கண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில் 384 எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே 385 தையலார் பெற்றோகைச் சாயலார் கையகலா மையலார் போலராய் மன்றேற - வையம் 386 பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும் ஒருகுடையான் போந்த னுலா. 387 வெண்பா என்றினி மீள்வ தரிதி னிரணியனை அன்றிரு கூறா யடர்த்தருளிக் -கன்றுடனே ஆவின்பின் போன வனக னனபாயன் மாவின்பின் போன மனம். கட்டளைக் கலித்துறை ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம் நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம் பாடுங் கவிப்பெரு மாளொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமைச் சொல்லுவரே. குலோத்துங்க சோழனுலா முற்றிற்று. |