சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப் பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றிய தொகை நூல்கள். பதிற்றுப் பத்து சேர மன்னர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இது பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை. நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இவற்றைச் சார்ந்த சில பாடல்கள் தொல்காப்பிய உரைகளாலும், 'புறத்திரட்டு' என்னும் தொகை நூலாலும் தெரிய வருகின்றன. இவை நூல் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், துறை, வண்ணம், தூக்கு, பெயர், என்பனவற்றைப் புலப்படுத்தும் பழங்குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப் பத்தைப் பாடியவர், பாட்டுடைத் தலைவர், அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள், புலவருக்கு அவர் அளித்த பரிசில், முதலிய செய்திகளைக் குறிப்பிடும் பதிகம் உள்ளது. இந்நூற் செய்யுட்களில் இப்பொழுது கிடைப்பன 80; உரைகளால் தெரிய வருவன 6. ஒரு சில செய்யுட்களில் சில சீர்களும் அடிகளும் சிதைந்துள்ளன. நாலாம் பத்துச் செய்யுட்கள் மட்டும் அந்தாதியாக அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து
எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க் கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும் இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய சூலம் பிடித்த சுடர்ப் படைக் காலக் கடவுட்கு உயர்கமா, வலனே! இரண்டாம் பத்து
பாடினோர் : குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டோ ர் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 11. வெற்றிச் செல்வச் சிறப்பு
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய, வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல் நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி, அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை, 5 கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு- செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப, அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின், மணி நிற இருங் கழி நீர் நிறம் பெயர்ந்து, மனாலக் கலவை போல, அரண் கொன்று, 10 முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை; பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழு முதல் துமிய ஏஎய், வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர், நார் அரி நறவின், ஆர மார்பின், 15 போர் அடு தானைச் சேரலாத!- மார்பு மலி பைந் தார் ஓடையொடு விளங்கும் வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின் பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே 20 கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும், ஆரியர் துவன்றிய, பேர் இசை இமயம் தென்அம் குமரியொடு ஆயிடை மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே. 25 துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புண் உமிழ் குருதி |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |