சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து ... தொடர்ச்சி ... 12. வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்
வயவர் வீழ வாள் அரில் மயக்கி, இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப, கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின வேந்தே! தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் அரிமான் வழங்கும் சாரல், பிற மான் 5 தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு, முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது, மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்- கேட்டற்கு இனிது-நின் செல்வம்: கேட்டொறும் காண்டல் விருப்பொடு-கமழும் குளவி; 10 வாடாப் பைம் மயிர், இளைய ஆடு நடை, அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் கன்று புணர் பிடிய; குன்று பல நீந்தி- வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல் தொல் பசி உழந்த பழங்கண் வீழ, 15 எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை, மை ஊன் பெய்த வெண்னெல் வெண் சோறு, நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி; நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன, நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை, 20 நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ; வணர் இருங் கதுப்பின், வாங்கு அமை மென் தோள், வசை இல் மகளிர் வயங்குஇழை அணிய; அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே! 25 துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மறம் வீங்கு பல் புகழ் 13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும், ஏறு பொருத செறு உழாது வித்துநவும், கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங் கண் எருமை நிரை தடுக்குநவும், கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் 5 வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும், ஒலி தெங்கின், இமிழ் மருதின், புனல் வாயில், பூம் பொய்கை, பாடல் சான்ற பயம் கெழு வைப்பின், நாடு கவின் அழிய, நாமம் தோற்றி; 10 கூற்று அடூஉ நின்ற யாக்கை போல, நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்- விரி பூங் கரும்பின் கழனி புல்லென, திரி காய் விடத்தரொடு கார் உடை போகி, கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க, 15 ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து- உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து, உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே. காடே கடவுள் மேன; புறவே 20 ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன; ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக் கூலம் பகர்நர் குடி புறந்தராஅ, குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25 மழை வேண்டு புலத்து மாரி நிற்ப, நோயொடு பசி இகந்து ஒரீஇ, பூத்தன்று-பெரும!-நீ காத்த நாடே! துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : பூத்த நெய்தல் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |