12
'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' - என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்த போதே உலகத்தின் துணிவுள்ள முதல் பத்திரிகையாளன் பிறந்துவிட்டான்.
"வா! அண்ணா! இப்போதுதான் என்னைத் தேடி வர வழி தெரிந்ததா?" என்று புன்னகையோடு முகம் மலர எதிர் கொண்ட தங்கையை, "சௌக்கியமா பவானி?" என்று அன்புடனே விசாரித்தான் சுகுணன்.
"ஹெட்கிளார்க் வீட்டு மாடியில் நீ தங்கிக் கொள்ள இடம் ஏற்பாடு செய்திருக்கிறேன். வா! நானும் கூட வருகிறேன். காரிலேயே போய் விடலாம்" என்று அவனோடு பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பவானி. நீண்ட நாள் அவளைப் பார்க்காமல் இருந்து விட்டுத் திடீரென்று இப்போது பார்க்கிற வேளையில் பொலிவாகவும் வனப்பாகவும், அவள் வளர்ந்திருந்திருப்படு போல் தோன்றியது சுகுணனுக்கு. படிக்கிற பெண்கள் அவளிடம் வைத்திருக்கும் அன்பையும், பிரியத்தையும் காணப் பெருமையாயிருந்தது அவனுக்கு. அந்த ஊருக்கு திருவிழா வந்து விட்டதைப் போல் அவன் வரவைக் கொண்டாடினாள் தங்கை. படிக்கிற பெண்களிடமும், சக ஆசிரியைகளிடமும், அவளுக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து வியந்தான் சுகுணன். "உங்களைப் போல் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்குவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று ஹெட்கிளார்க் மிகவும் விநயமாகத் தன் வீட்டிற்குள் அவனை வரவேற்றார். எதிர்ச்சாரியிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தும் ஒரு கொத்து முகங்கள் எட்டிப் பார்க்க வாடகைக் காருக்குப் பணம் கொடுத்தனுப்பி விட்டுச் சுகுணன் ஹெட்கிளார்க் வீட்டில் அவருடைய மூன்றாவது மகள் என்று சொல்லிப் பவானி அறிமுகப்படுத்தி வைத்த யுவதி அவனுக்குக் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு - அவனுடைய நாவல்களையும், தொடர் கதைகளையும் ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி அவற்றைத் தான் பலமுறை திரும்பத் திரும்பப் படித்திருப்பதாகச் சொன்னாள். "அப்படியா! நிரம்ப மகிழ்ச்சி" - என்று அவளுக்கு மறுமொழி கூறிய சுகுணனை இடைமறித்து "இவளுடைய தற்கால இலட்சியம் கதைகளைப் படிப்பது, எதிர்கால இலட்சியம் யாராவது ஒரு நல்ல எழுத்தாளரைக் கணவனாக அடைவது" என்று பவானி கேலியில் இறங்கினாள். "தற்கால இலட்சியத்தைப் பற்றி ஒன்றும் பயமில்லை. ஆனால் எதிர்கால இலட்சியம் தான் பயப்படும்படியாக இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே சுகுணன் கூறிய போது ஹெட்கிளார்க் மகள் நாணி உள்ளே ஓடி விட்டாள். பகல் உணவுக்குப் பின் ஓரிரண்டு மணி நேரம் அமைதியாக உறங்க முடிந்தடு. மூன்று மணிக்குப் பவானி வந்து அவனை எழுப்பி விட்டாள். "பள்ளிக்கூட இலக்கிய மன்றத்தின் சார்பில் இன்று நீ பேச வேண்டுமென்று ஹெட்மிஸ்டர் ரொம்ப வற்புறுத்துகிறாள் அண்ணா!" என்றாள் அவள். "யார் தன்னிடம் குற்றமற்றவனாய்ப் பிறருடைய குற்றங்களை எடுத்துக் காட்டுகிறானோ அவனை நோக்கிச் சமூகத்தின் நெற்றிக் கண்கள் திறக்கத்தான் செய்யும். குற்றம் செய்கிறவர்களின் நெற்றிக் கண் திறக்கிற அளவு அவர்களைக் கொதிப்படையச் செய்ய முடியாத எழுதுகோல் வெறும் மரக்கோல் தான். என் எழுதுகோல் மரக்கோலாயிருந்ததில்லை. இனியும் அப்படி இருக்கப் போவதில்லை; சொற்களை அணிவகுத்து நிறுத்திப் போராடுகிறவன் வெற்றி பெற நீண்டகாலம் பிடிக்கும். ஏனென்றால் அவன் ஆயுதங்கள் பொருள் தெளியப் பொருள் தெளியப் பலமடைகின்ற வார்த்தைகளாக நிற்கின்றன" என்று அவன் கூறிய மறுமொழி மிகவெளிப்படையாக அவளுக்குப் புரியாவிட்டாலும் அதில் ஒரு திடமிருப்பதை அவள் உணர்ந்தாள். "சத்தியமங்கலத்து மாமா உன் ஜாதகம் எங்கிருக்கிறதென்று மாதத்திற்கு ஒருமுறை வந்து கேட்டுவிட்டுப் போகிறார்?" என்று அவனுடைய திருமணத்தைப் பற்றி மெல்ல அவனுக்கு நினைவூட்டினாள் பவானி. "வெட்கப்படாமல் அவரிடம் உன் ஜாதகத்தை முதலில் குறித்துக் கொடு பவானி!" என்று நாணத்தினால் சிவக்கும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடி மறுமொழி கூறினான் சுகுணன். "ஏதோ நாலு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு நான் இப்படி இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா அண்ணா?" என்று அவனை மடக்கிக் கேட்டாள் பவானி. அந்தப் பேச்சு அவ்வளவில் மேலே தொடராமல் நின்றுவிட்டது. உதகமண்டலத்திலிருந்து அவர்கள் திரும்பிய நாளன்று அதிகாலையில் முதல் பஸ்ஸில் அங்கிருந்து புறப்பட்டிருந்ததனால் மலையிலிருந்து கீழே மேட்டுப்பாளையத்திற்கு இறங்குகிற வழியில் பாக்கு மரக் கூட்டங்களிடையே பஸ் வரும் போது திருமண வீட்டில் மணப்பது போல் பாக்கு மரம் பூத்து மணந்த அந்த மங்கல நறுமணத்தைப் பற்றிச் சுகுணன் பவானியிடம் வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டே வந்தான். உதகையிலிருந்து திரும்பிய தினத்தன்று மாலையில் அவர்கள் மருதமலைக்குப் போய் வந்தார்கள். அண்ணனும் தங்கையும் மறுநாள் அதிகாலையில் பேரூருக்குப் போய் வந்தார்கள். சிறு சிறு அலைகளுடன் ஓர் ஓரமாக நீர் சிலிர்த்து ஓடும் நொய்யல் நதிக்கரையில் தென்னை மரக் கூட்டமும் கொய்யா மரக் கூட்டமுமான அந்த இடம் சுகுணனுக்கு மிகவும் விருப்பமானது. கோவையின் பரபரபு ஒடுங்கி அமைதியும் அழகும் விலகி இருக்குமிடம் என்பதால் சிறு வயதிலிருந்து பேரூரை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அன்று பகலில் சிங்காநல்லூரிலுள்ள ஓர் உறவினர் வீட்டிற்கு அவனும் பவானியும் சாப்பிட அழைக்கப்பட்டிருந்தார்கள். உணவு முடிந்ததும் அவர்களுடைய அழைப்பின் நோக்கம் மெல்ல மெல்ல வெளிப்பட்டது. சுகுணனுடைய ஜாதகம் வேண்டுமென்று மெதுவாக ஆரம்பித்தார் அந்த உறவினர். அண்ணனும் தங்கையும் அந்தக் கேள்வியை நாசூக்காகத் தட்டிக் கழித்துவிட்டு அங்கிருந்து தப்பினார்கள். "அண்ணாவையே கேளுங்களேன். நான் சிறியவள், என்னைக் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்?" என்றாள் பவானி. "இப்போது அதற்கென்ன அவசரம்? தங்கைக்குத்தான் முதலில் வரன் பார்க்க நினைத்திருக்கிறேன். எனக்கு இப்போது சாத்தியமில்லை. 'ஜர்னலிசத்தில், ஒரு பெரிய 'டிப்ளமா' வாங்குவதற்காக அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, போக எண்ணமிருக்கிறது. போனால் திரும்ப நாளாகும். அப்புறம் தான் இதைப் பற்றிச் சிந்திக்க முடியும்..." என்று ஒரே போடாகப் போட்டான் சுகுணன். சாயங்காலம் அவன் கோவைக்கு வந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் - சென்னை புறப்பட்டபோது பவானிக்கு அழுகையே வந்து விட்டது. "ஏதோ மூன்றாம் மனிதர்கள் சந்தித்துக் கொள்வது போல் எப்போதாவது சந்தித்துக் கொள்கிறோம். மறுபடி எப்போது பார்ப்போம் என்று உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது..." 'போனதும் ஞாபகமாகக் கடிதம் எழுதுங்கள்' - ஒரு வேண்டுகோள், 'சுவாமி எவிடைக்கா போகுந்தது?' - என்று யாரோ ம்லையாளத்தில் யாரையோ விசாரிக்கும் ஒரு குழைவான குரல், அர்த்தமில்லாமல் இரயிலோடு கலந்து ஓசையில் சங்கமமான சில குரல்கள் - சில வார்த்தைகள் - காதில் விழுந்தன. வண்டி விரைந்து விட்டது. 'எங்கே போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?' சதா காலமும் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிற - இருக்க வேண்டிய இந்தக் கேள்வியை இரயில் பயணத்தின் போது மட்டும் கேட்டுப் பார்த்துக் கொள்கிறோமா என்ன? மனத்தினால் போவதும், வருவதும், தங்குவதும் கூடப் பிரயாணங்களானால் மனிதன் பிரயாணத்தைத் தவிர வேறெதுவும் செய்யவில்லல என்றாகிவிடும். அப்படி ஆகுமானாலும் அது ஒரு தத்துவம் தான். சுகுணன் அமர்ந்திருந்த அந்தப் பெட்டியில் மொத்தம் ஏழு பேர் இருந்தனர். மூவர் பெண்கள். நாலு ஆண்களில் சுகுணனுக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இரயிலில் இவன் ஏறி உட்கார்ந்த விநாடியிலிருந்து - அவனை உற்று உற்றுப் பார்ப்பதும் - ஏதோ கேட்க நினைப்பவர் போல் தயங்குவதுமாக இருந்தார். சுகுணன் அதைக் கவனித்தாலும், அவராகக் கேட்கட்டுமே என்று இருந்தான். இரயில் விரைந்து நகரத் தொடங்கியதும் அவராகப் பேச்சைத் தொடங்கினார். "... நீங்கள்... தொகுதி எம்.எல்.ஏ. அல்லவா?" என்று அவர் வினாவிய போது ஒரு விநாடி திகைத்த பின், "இல்லை நான் எந்தத் தொகுதி எம்.எல்.ஏ.யுமில்லை" - என்று மறுத்தான் சுகுணன். அப்படியும் அவர் விடவில்லை. "மன்னிக்க வேண்டும். தயவு செய்து நீங்கள் யாரென்று நான் அறிந்து கொள்ளலாமா?" என்று இப்படி விசாரிக்கும் விசாரணைக்கு ஆங்கிலம் தான் நாகரிகம் என்று கருதினாற் போலத் தமிழிலேயே பேசிக் கொண்டு வந்தவர் இதை மட்டும் ஆங்கிலத்தில் விசாரித்தார். சுகுணன் ஆங்கிலத்திலேயே அவருக்கு மறுமொழி கூறத் தொடங்கியதோடன்றித் தொடர்ந்து பேசிய போதும் சரமாரியாக ஆங்கிலத்தைத் தொடுத்த போதும் அவர் ஆற்றாமையோடு தம்முடைய தோல்வியை ஒப்புக் கொள்வது போல் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கிவிட்டார். இரயிலிலோ பஸ்ஸிலோ, விமானத்திலோ, பயணம் செய்யும் போது சராசரி இந்தியன் அடுத்தவனுக்குச் சுதேசி மொழி தெரியாதென்று நினைத்து ஆங்கிலம் பேசுவதற்குப் பதில் தனக்குத் தெரியும் ஆங்கிலத்தைத் தனது சுய விளம்பரங்களில் ஒன்றாக அடுத்தவனுக்குக் காண்பித்தே தீர வேண்டுமென்பதற்காகவே ஆங்கிலம் பேசுகிறான். சராசரி இந்தியனிடம் இந்த மனப்பான்மை கிளர்ந்திருப்பது நாகரிகங்களில் ஒன்றாகத் தோன்றினாலும் சில சமயங்களில் போலியாகவே வளர்ந்து விடுகிறது. ஆங்கிலத்தில் வினாவிய அந்தச் சக பிரயாணியிடம் சுகுணன் முற்றிலும் ஆங்கிலத்திலேயே விரைந்து உரையாடத் தொடங்கிய போது போர்க்களத்தில் ரவை தீர்ந்து போய் வெற்றுத் துப்பாக்கியோடு பேந்தப் பேந்த விழிக்கும் கோழையைப் போல் சொற்கள் தீர்ந்து போன ஆற்றாமையோடு வேறு வழியின்றி மறுபடி தமிழுக்கே வந்தார் அவர். ஆயினும் அவரைச் சிறிது நேரம் தவிக்க விடவேண்டுமென்று குறும்புத்தனமாகத் தீர்மானித்துக் கொண்டு விட்ட சுகுணன் வேண்டுமென்றே தன் ஆங்கிலத்தில் கடுமையான பிரஞ்சு, லத்தீன் வார்த்தைகளைப் போட்டு அவரைத் திணற அடித்தான். அவருக்குப் புத்தி வந்து விட்டது. "உங்களிடம் நிறையப் பேசணும் சார்" - என்று அவர் திரும்பத் திரும்பத் தமிழில் அபயக் குரல் கொடுத்த பின்பே அவரிடம் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கினான் சுகுணன். 'இவரை இவ்வளவு தண்டித்தது போதும்' என்று தோன்றியது அவனுக்கு. சுதேசி வாழ்க்கைக்காக ஆயிரங்காலம் போராடி விட்டுத் தம்மை மறந்து விதேசியாகவே வாழும் இந்தியர்களை எண்ணும் போது அவனுக்குப் பாரதியாருடைய 'நடிப்புச் சுதேசிகள்' என்ற பாடல் நினைவுக்கு வந்தது. சுதேச உணர்வு வராதவரையில் சுதேச இலட்சியங்கள் எல்லாமே போலியாகத்தான் போய்விடுகின்றன. 'சக பிரயாணி தன்னிடம் நிறைய பேசுவதற்கு என்ன இருக்கிறது?' என்றெண்ணி அவன் தயங்கிய போது அவரே தொடர்ந்தார். "கதை - கிதை - எழுதுகிறீர்களே...? அதற்கு ஏதாவது பணம் கொடுப்பார்களோ, இல்லையோ?" - இப்படிப்பட்ட கேள்விகள் சராசரி மனிதனின் இலக்கிய ஞானம் எவ்வளவிற்கு இந்த நாட்டில் வளர்ந்திருக்கிறது அல்லது வளரவில்லை என்பதைக் காட்டுபவை. இலக்கியத்தைப் பற்றி அக்கறை கவலை பொறுப்புகள், எல்லாம் அறவே இல்லாவிட்டாலும் பணத்தைப் பற்றிய அக்கறை, கவலை எல்லாம் இங்கு இருக்கிறது. ஒரு மனிதனை உயிருடனே வெயிலில் நிறுத்தி வைத்துத் திறந்த முதுகிலே ஆணி அறைவது போன்ற கேள்விகள் இவை. அதனால் இவற்றை எதிர்கொள்ளும் போது கோபம் அல்லது சலிப்புத் தவிர வேறெதையுமே சுகுணன் கண்டதில்லை. இப்போதோ கோபம் தான் முன் நின்றது. "பணம் நிறையக் கிடைத்தால் நீங்களும் எழுதலாம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?" - என்று சிரித்துக் கொண்டே அவரைப் பதிலுக்கு வினாவினான் அவன். அவனுடைய அந்தச் சிரிப்புக்குப் பின்னால் கோபமிருப்பது புரியாமலேயே அவர் பேச்சைத் தொடர்ந்தார். "இல்லை! ஆயிரம் இரண்டாயிரம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே; அதுதான் கேட்டேன்..." என்ற போது 'இதற்குக் கூட ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்கிறார்களே' என்று அவர் வியப்பதோ, அலட்சியம் செய்வதோ சொற்களுக்கு அப்பால் தொனிப்பதைச் சுகுணனால் புரிந்து கொள்ள முடிந்தது. "ஆயிரம் இரண்டாயிரம் என்ன? ஐயாயிரம் ஆறாயிரம் கூடக் கொடுக்கிறார்கள். சிறுகதை நாவலுக்குப் பெரிய பெரிய போட்டிகள் வைத்துக் கால் லட்சம் அரை லட்சம் கூடக் கொடுக்கிறார்கள். சினிமாவுக்குக் கதை எழுதினால் இன்னும் நிறையக் கூடக் கொடுப்பார்க. கதை வெளிவந்த பின் யாராவது கேஸ் போட்டுப் பரிசு பெற்றதோ, படமாக வந்ததோ, திருட்டுக் கதை என்பதையும் நிரூபிப்பார்கள்." "நீங்கள் கேலி செய்கிறீர்கள் சார்... வெறும் பணத்தைத் தவிரப் புகழும் இதில் இருக்கிறதே?" "புகழ், பழி பொறாமை, பகை, நட்பு, எல்லாம் தான் இதில் இருக்கிறது. 'நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' - என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்த போதே உலகத்தின் முதல் பத்திரிகையாளன் பிறந்து விட்டான். அவன் பொருளை நாடி நியாயம் பேசவில்லை. நியாயத்தை நாடியே நீதி பேச வேண்டும் என்று பிடிவாதமாக நீதி பேசினான். பொருட் பயனை நாடி மட்டும் நீதி பேசினால் ஒரு வேளை அந்த நீதியின் தரம் - இன்றைய பத்திரிகைகளின் தரத்தைப் போல் சீரழிந்துவிடும்." "இருக்கலாம்; ஆனால் பண்பாடும், பொது அறிவும் எவ்வளவு வளர்ந்திருக்கின்றன? தய்வு செய்து இதற்கு மட்டும் சுருக்கமாக பதில் கூற வேண்டுகிறேன்." சுகுணனின் இந்தக் கேள்விக்கு அவரால் மறுமொழி கூற இயலவில்லை. பேச்சை வேறு பக்கமாகத் திருப்பினார் அவர். அவன் விடவில்லை. மேலும் விவாதித்தான். "ஆழமாகச் சிந்திக்காமல் உங்களைப் போல் நாலு பேர் எல்லாம் வளர்ந்து விட்டதாக மக்கள் நடுவிலும், மேடையிலும் பேசி விடுகிறீர்கள். பத்திரிகைக்காகப் பத்திரிகை விற்காமல் சோதிடத்துக்காகவும், சினிமாவுக்காகவும், பகுத்தறிவுப் போட்டிகளுக்காகவும், பத்திரிகை விற்பது ஒரு பெருமையா? கோவில் வாயிலில் பூக்கடை இருக்கிறது என்பதற்காக மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள் என்று பெருமைப்பட நியாயமிருக்கிறதா?" "இது குடியரசுக் காலம். மக்களுக்குப் பிடித்த அம்சங்கள் எல்லாம் பத்திரிகையில் இருக்க வேண்டும். மக்களில் பலவிதமான சுவையுடையவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவர் சுவைக்கும் ஏற்றார் போல பத்திரிகையில் ஏதாவது இருக்க வேண்டும். மக்கள் கேட்பதைக் கொடுக்காவிட்டால் புறக்கணிக்கிற காலம் இது..." "நாங்கள் விரும்புவது இது, 'ஆகவே இதைப் பற்றியே இன்று பாடம் நடத்துங்கள்' - என்று ஏதாவதொரு நடிகையின் பெயரைச் சொல்லி மாணவர்கள் ஆசிரியரை வற்புறுத்தினால் கூடக் குடியரசுக் காலத்துக்குக் கட்டுப்பட்டு அப்படியே நடத்த வேண்டுமென்று கூறுவீர்கள் போலிருக்கிறதே? அறிவுத் தொழில் தொடர்புடைய கல்வி, பத்திரிகை, கலைகள் முதலிய துறைகளில் - கொடுப்பவர் பெறுபவர் என்ற உறவு - விற்பவர் வாங்குபவர் உறவு போல் - வியாபார ரீதியாகவே முற்றிலும் மாறி விடுவது நல்லதில்லை. நல்ல கல்வி வளர - நல்ல இலக்கியம் வளர - நல்ல கலைகள் பெருக அது துணை செய்யாது. 'விற்பவர் - வாங்குபவர்' - உறவை விடத் தரத்திற் சிறந்த வேறொரு உரமான உறவு கல்விக்கும், கலைக்கும், இலக்கியத்திற்கும் தேவைப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. "காலம் போகிற வேகத்திற்கு ஒத்து வராத கருத்துக்களைக் கூறுகிறீர்கள். இவையெல்லாம் இப்போது யாருக்குப் புரியும்?" என்று அலுத்துக் கொண்டார் அவர். அந்த வேளையிலே அவரை யாரென்று விசாரிக்கலானான் சுகுணன். போத்தனூரில் ஏதோ ஒரு பவுண்டரி மானேஜராய் இருப்பதாக அவர் தெரிவித்தார். விசாரணை தன்னைப் பற்றியதாய்த் திரும்பவே அவர் பேச்சில் சிக்கனம் கடைப்பிடித்துவிட்டுப் 'பெர்த்தில்' ஏறித் துண்டை விரித்துப் படுக்கத் தொடங்கி விட்டார். தன்னைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள முயலுவது அநாகரிகமென்றும், தான் மட்டும் மற்றவர்களளப் பற்றித் துறுதுறுப்பாகத் துளைத்து விசாரிக்க இடமுண்டு என்றும் கருதாத நாகரிக மனிதனே உலகில் இருக்க மாட்டான் போல் தோன்றியது. இரவு நேரத்து இரயிலில் உறக்கம் வராமல் உறக்கம் வந்தாலும் உறங்க இடமில்லாமல் நெடுநேரம் சிந்தித்தபடியே பிரயாணம் செய்தான் சுகுணன். கோயம்புத்தூரைப் பற்றி - தங்கையைப் பற்றி, தங்கை வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்தைப் பற்றி, பத்திரிகைத் தொழிலைப் பற்றி - தனது எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் தான் அவன் சிந்தனையில் மாறி மாறி வந்தன. 'துளசி இன்னும் சென்னையில் இருப்பாளா; அல்லது டில்லிக்குத் திரும்பி இருப்பாளா? - என்றும் நடுவில் ஒரு சிந்தனை மனத்தை அழுத்தி விட்டு மறைந்தது. நேரம் ஆக ஆக ஓடும் இரயிலின் அடைக்கப்படாத ஜன்னல் வழியே ஊடுருவும் காற்றில் குளிர்ச்சி அதிகமாகிக் கொண்டிருந்தது. குறட்டை ஒலியும், மனிதர்கள் தாறுமாறாகக் கிடந்து தூங்கும் காட்சிகளும் - இரவு நேரத்து இரயிலின் அசதியைக் காட்டின. சென்றடைய வேண்டிய ஊர் விடிந்ததும் வருகிறார்போல் முந்திய இரவு முழுவதும் பயணம் செய்கிற இரயிலுக்கு ஒரு சோபை உண்டு. விடிகிற வேளளயில் உற்சாகத்தில் நாமே ஓடி வந்து அந்த இடத்தை அடைந்து விட்டாற் போன்று மாயமாகக் காலை அரும்பியதும் அரும்பாததுமாகப் புது ஊர் வந்து சேரும். முதல் நாள் இரவிற் புறப்பட்ட நகரின் ஓசைகள், உறவுகள், உணர்வுகள் கனவாக நைந்து மறப்பதற்குக் கூட அவகாசமில்லாதது போல் மறுநாள் எதிர் வருகிற ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் இந்த உணர்வை அடைந்திருக்கிறான் சுகுணன். இன்று விடிந்த போது அரக்கோணம் வந்தது. பல் விளக்கிவிட்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காபி குடித்த பின் சென்னை வருகிற வரை படிக்கலாமென்று அங்கு ஒரு தினசரியைக் கையில் வாங்கிக் கொண்டு மறுபடி இரயிலேறிய சுகுணன் - பத்திரிகையில் கண் பார்வையைச் செலுத்தினான். பத்திரிகையின் நடு தாளை எதிர் ஸீட்டுக்காரர் மெதுவாகக் கேட்டு இரவல் வாங்கி உருவி எடுத்துக் கொண்டு விட்டார். மற்ற நான்கு பக்கங்களையும் படித்து விட்டு - நடுத்தாளுக்காக அவன் காத்திருக்க வேண்டியதாயிற்று. திருவள்ளூர் தாண்டுகிறவரை தினசரியின் நடுத்தாள் அவரிடமிருந்து கிடைக்கவில்லை. கிடைத்த போது அதில் அவன் கண்களுக்குத் தெரிந்த முதல் செய்தி அப்படியே அதிர்ந்து போகச் செய்வதாக இருந்தது. அதைப் படிக்கவே துணியாமல் அவன் நெஞ்சு 'திக்திக்'கென்று வேகமாக அடித்துக் கொண்டது. இதயத்து உணர்வுகள் விம்மின. குமுறின. 'எப்படி அழாமல் இருக்க முடிகிறது நம்மால்' - என்று அவனே தன்னையும் தன் மனத்திடத்தையும் வெட்கத்தோடு கடிந்து கொள்கிற துயரமான அந்தச் செய்தியை முதலில் படிக்க நேர்ந்திருந்தால் அதற்கப்புறம் அதில் வேறெதையுமே படிக்க அவனுக்கு மனம் ஓடவில்லை. 'இப்படியும் கூட ஒரு துயரம் வருமா?' - என்று எண்ணி எண்ணி மனம் உருகி மாயும் செய்தி தெரிந்தது அங்கே. அச்செழுத்துக்கள் கண்களிலிருந்து மறையாமல் 'அதுதான் உண்மை', 'அதுதான் உண்மை' - என்று எதிரே நின்று கண்களை உறுத்தின. அவனோ கண் கலங்கி மனம் நெகிழ்ந்து உணர்வுதனையிழந்து பதுமை போல் இரயில் பலகணிக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி இமையாது வீற்றிருந்தான். நிற்காத சில நிலையங்களைக் கடந்து சென்ட்ரலை நோக்கி விரைந்தது இரயில். இதோ ஆவடி அம்பத்தூர் கூடக் கடந்தாயிற்று. சென்னை நெருங்குகிறது. இப்படி நடக்குமென்று அவன் ஊர் புறப்படும் போது நினைக்கவில்லை. மனிதனைத் திகைக்க வைக்கும் காரியங்கள் எல்லாம் இப்படித்தான் பேரிடியாய் வந்து நிற்கும் போலிருக்கிறது. 'அதிர்ஷ்டமே! உன் கைகளில் நான் யானை பலம் பெறுகிறேன். ஆனால் துயரமே! உன் கைகளில் நான் நலிந்து பலவீனப்பட்டு விடுகிறேன்' - என்று நவநீத கவி ஓரிடத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. இரயில் ஓடுவதாகத் தெரியவில்லை. ஊர்வதாகத் தோன்றியது. செய்தித்தாளை நம்பிக்கையில்லாமல், மறுபடியும் எடுத்துப் பார்த்தான். பொய்யில்லை; உண்மைதான்! நமக்குப் பிடிக்காத உண்மைகள் பொய்கள் ஆகிவிடுவதுமில்லை. நமக்குப் பிடித்த பொய்கள் உண்மைகளாகி விடுவதுமில்லை. ஆசைகள் நமக்குரியவை, ஆனால் விளைவுகள் அப்பாற்பட்டவை. மனிதனுடைய சோகம் ஆரம்பமாகிற எல்லை ஆசைக்கும் விளைவுக்கும் நடுவே இருக்கிறது. நினைப்பும் நிகழ்ச்சிக்கும் ஊடே எங்கோ இருக்கிற அந்த நூலிழை எல்லையில் தான் மனிதர்கள் வெல்லவும் தோற்கவும் முடிகிறது போலும். |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |