1 அம்மன் கோயில் சந்தியாகால மணியோசை கணகணத்து ஓய்ந்தது. மணியோசை கேட்டதும் வடிவேலு முதலியார் சந்நிதானத்துக்குச் சென்று அம்மனைச் சேவித்துவிட்டு, ஓதுவார் மூர்த்தியிடம் விபூதிப் பிரசாதம் பெற்று நெற்றியில் பூசியவாறே வெளியே வந்தார்.
வடிவேலு முதலியார் சாதாரணக் கைத்தறி நெசவாளி. மாதா மாதம் ஜவுளிக் கடைக்காரர்களிடம் நூல் வாங்கி, நெய்து கொடுத்தால், நெய்த கூலி வீட்டில் தினம் உலைப்பானை ஏற்றுவதற்குக் கட்டிவரும். சுருங்கச் சொன்னால், அவரது வாழ்க்கை பெரு வாழ்வுக்கு ஆசைப்படாத, ஆசைப்பட முடியாத அன்றாடங் காய்ச்சி வாழ்க்கை. வடிவேலு முதலியார் 1930ஆம் வருஷத்தில் தெரிந்தோ தெரியாமலோ அன்னியத் துணி ஜவுளிக்கடை மறியல் கேஸில் அகப்பட்டு, ஆறுமாதத் தண்டனைக்கு ஆளானார். அதற்கு முன்பு எந்த வித அரசியல் எண்ணமும் இல்லாது இருந்த அவர், சிறையிலிருந்து வெளிவந்ததும், பேச்சளவில் காங்கிரஸ் பக்தனாக இருந்து வந்தார். எனினும் ஆகஸ்டுச் சுதந்திரம் வந்த பிறகு அவரும் அரசியல் தியாகி என்ற பெயரால், ஐந்து ஏக்கர் நிலத்துக்கு ஒரு மனுப் போட்டு வைத்தார். வடிவேலு முதலியாருக்குக் காங்கிரஸ் கமிட்டியினரிடத்தில் செல்வாக்குக்கோ சிபார்சுக்கோ வழியில்லாது போன காரணத்தாலும், ஆகஸ்டுத் தியாகம் என்ற தனிப் பெருந் தியாகத்தை அவர் செய்யாததாலும் அவருக்கு ஐந்து ஏக்கர் நிலமான்யம் பிஞ்சிலேயே வெம்பி விழுந்த ஆசைக் கனவாகி விட்டது. அதிலிருந்து அவருக்கு காங்கிரசின் மீதிருந்த பக்தி விசுவாசமும் பிடிதரம் அற்றுக் கழன்று விழ ஆரம்பித்தது. மேலும் சுதந்திரம் வந்து விட்டது, சுபிட்சம் மலர்ந்து விட்டது என்று எண்ணி ஏமாந்த அப்பாவிகளில் அவரும் ஒருவர். எனவே “பாவிப் பயலுஹ! அந்தக் காந்தி மகானையுமில்லா சுட்டுக் கொன்னுட்டான்! அவர் இருந்தா இந்த நாடு இப்படிக் குட்டிச்சுவராப் போகுமா?” என்று மட்டும் எப்போதாவது வாய்விட்டுக் கூறித் தமக்குத் தாமே ஆத்ம சாந்தி தேடிக் கொள்வார். எனினும் கூட, காங்கிரஸின் அரசியல் போராட்ட காலத்தில் அதன் பரம வைரிகளாகவும் ஆகஸ்டு சுதந்திர காலத்தில் அதன் விசுவாசிகளாகவும், மாறியுள்ள உள்ளூர்ப் பணக்காரர்களைப் பார்க்கும் போதும், அந்தப் பணக்காரர்கள் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னும் கொள்ளை கொள்ளையாகப் பணம் திரட்டியிருப்பதை எண்ணும் போதும் அவருக்குத் தமது அப்பாவித்தனமான காங்கிரஸ் பக்தியைப் பற்றி மன உளைச்சலும் உறுத்தலும் ஏற்படும். தம்மையறியாமலே தாம் காங்கிரஸை வெறுத்து வருவதை அவர் உணரத்தான் செய்தார். வடிவேலு முதலியார் தினசரி வாசகசாலைக்கு வந்து விடுவார். அந்தி மயங்கும் நேரத்தில் அந்தப் பக்கமா வந்தால் அம்மனைத் தரிசிப்பதற்கும், நாலு பேரைச் சந்திப்பதற்கும், தறிக் குழியில் உட்கார்ந்திருந்த ஆசனக் கடுப்புத் தீர்வதற்கும், மூப்பனாரிடம் சில்லறைப் பற்றுவழி செய்வதற்கும் அவருக்கு வாய்ப்பிருந்தது. “ஆமா மதியம் வரலே. ஒருவேளை அஞ்சரை வண்டியிலே வரலாம்” என்று நிர்விசாரமாகப் பதில் சொன்னார் மூப்பனார். “சரி, வெத்திலை பாக்கு குடுங்க, போட்டுக்கிட்டாவது இருக்கலாம்” என்று கூறிக் கொண்டே, சாத்தி வைத்திருந்த சரப்பலகை யொன்றை எடுத்துக் கடைப்படிக்கும், தெருவிலுள்ள குத்துக் கல்லுக்குமாகப் போட்டு அதில் துணை மடித்துப் போட்டு உட்கார்ந்தார் முதலியார். வெற்றிலையையும் பாக்கையும் எடுத்துக் கொடுத்தார் மூப்பனார். “என்ன முதலியார் வாள், பொகையிலை வேண்டாமா?” “ஒரு காம்பு இருக்கு, அது போதும்” என்று சொல்லிவிட்டு, களிப்பாக்கைக் கடுக் என்று கடித்தார் முதலியார். “முதலியார்வாள், மாசமும் புறக்கப் போவுது. உங்க நிலுவையைக் கொஞ்சம் அடைச்சிட்டா நல்லது. என் பாடும் ஓடியடையணும் பாருங்க” என்று தொண்டையைச் செருமிக் கொண்டே கேட்டார் கடைக்காரர். “அதுக்கென்ன? நம்ம துட்டு என்ன ஓடியா போவுது? கைலாச முதலியார்வாள் கிட்டே பாக்கி வாங்கணும். வாங்கினதும் உடனே தந்திருதேன். உங்க கஷ்டம் எனக்குத் தெரியாதா? இல்லே, நம்ம கஷ்டம் உங்களுக்குத் தெரியாதா?” என்று கூறிக் கொண்டே, பத்திரிகை கொண்டு வரும் பையன் வருகிறானா என்று மேற்கே எட்டிப் பார்த்தார். மேற்கே, கையெழுத்து மறையும் மாலை மயக்கம். இருள் இறங்கித் தெரியும் பாபநாச மலையில், அந்தி ஒளி கன்றிக் கட்டிப் போன ரத்தம் மாதிரி, நீலம் பாரித்துக் கறுத்துப் போயிருந்தது. மாலைக் கருக்கலின் பின்னணியில் தூரத்து ரயில்வே லைன் செம்மண் மோட்டின் மீது புல்லுக்கட்டுச் சுமந்து செல்லும் விவசாயப் பெண்களின் எடுப்பான தோற்றம் நிழலாட்டம் போன்ற காட்சிப் பிரமையை உண்டாக்கியது. அந்த மயக்கின் சோபையின் மீது முதலியாரின் கவனம் செல்லவில்லை. பத்திரிகைப் பையன் வருகிறானா என்று தான் அவர் பார்த்தார். அவன் கண்ணில் தட்டுப்படாதைக் கண்டு சோர்வுற்ற முதலியார் வாயில் கூடி நின்ற தாம்பூல ரசத்தைத் துப்புவதற்காகப் பின்புறம் குனிந்தார். “வே, பாத்துத் துப்பும் வே” என்று திடீர்க் குரல் முதலியாரின் தலையை மேல் வாங்கியது. எதிரே சுப்பையா முதலியாரும் வேறு இரு நெசவாளிகளும் வந்து நின்றார்கள். வடிவேலு முதலியார் எச்சிலை லாவகமாக எட்டித் துப்பிவிட்டு, “வாங்கய்யா, இப்படி உட்காருங்க” என்று நகர்ந்து உட்கார்ந்தவாறே கூறினார். வந்தவர்கள் மூவரும் சரப் பலகை என்ற அந்தச் சங்கப் பலகையில் இடம் பெற்று அமர்ந்தனர். “வடிவேலு முதலியார்வாள், நீங்க என்ன நம்ம கைலாச முதலியார்வாளைக் கண்டு, அந்த விசயமாகக் கேட்டியளா?” என்று ஒரு நெசவாளி எதையோ ஞாபகப்படுத்தினார். “கூலி விசயம் தானே? அவுஹ ஊட்டுக்குப் போனேன்; அவுஹ ஊருக்கில்லியாம். கடேசிச் சுக்கிரவாரத்துக்காக, திருச்செந்தூர் போயிருக்காகளாம். அவுஹளைப் பத்திக் கவலை இல்லை. கூடக் குறையன்னாலும் மாட்டேன்னு சொல்லமாட்டாஹ” என்றார் வடிவேலு. “என்னவே மாப்ளேய், உசத்து உசத்துன்னு நம்ம பாட்டுக்குக் கேட்டுக்கிட்டேயிருந்தா, முதலாளிமாருங்கதான் என்ன செய்வாஹ? நூல் விலையோ நாளுக்கு நாள் ஏறிக்கிட்டிருக்கு. நாமும் கொஞ்சம் நிதானமாய் நடந்துக்கிட வேண்டாமா?” என்று குறுக்கிட்டார் சுப்பையா முதலியார். “வேய்! உமக்கு என்ன, வயத்திலே பசியா, முட்டிலே பசியா?” என்று வெடுக்கென்று கேட்டுவிட்டு, வடிவேலு முதலியார் காரசாரமாகப் பேசத் தொடங்கினார். “வே உமக்கு இந்தப் பெரிய மனுசன் புத்தி போகாது போலிருக்கே! மொதலாளிக்காகத் தாக்குப் பிடிச்சி உமக்கு என்ன லாபம்? நீரும் தொள்ளாளி; நாங்களும் தொள்ளாளி. கூலியை உசத்திக் கேட்க வாயா வலிக்குது? நூல் விலை ஏறிக்கிட்டே போவுதுங்கிறீரே, அரிசி விலை மட்டும் இறங்கிக் கிட்டே போவுதோ? மொதலாளிக்கு ஏண்டுக்கிட்டுப் பேச வாரீரே, உமக்கென்ன கிடைக்குது? ஏதாச்சும் அஞ்சு பத்துக் கிடைக்குதா? அதையாவது சொல்லும்!” தொண்டையில் கூடிய எச்சிலைக் கடுக்கென்று விழுங்கி விட்டு, “அதுக்குச் சொல்லலே, பெரிய முதலாளி கூட அன்னைக்கிச் சொன்னாக வரவர யாபாரமே இல்லியாம். ஏத்துமதியே அத்துப் போச்சாம். இந்தச் சமயத்திலே போயி, கூலி உசத்துறதுன்னா...” என்று தமது வாக்கைக் கொண்டு செலுத்த முனைந்தார் சுப்பையா முதலியார். “பெரிய முதலாளிக்கு ஏத்தமும் இறக்கமும் வயித்தைப் பிடிக்கிற விவகாரமில்லையே. அவுஹ தடுக்கி விழுந்தா, தாங்குறதுக்கு பங்களா இருக்கு; கார் இருக்கு; லட்ச லட்சமாப் பணம் இருக்கு; வீடுவாசல் சொத்து சுகம் இருக்கு. நமக்கு என்னவே இருக்கு?” என்று கூட வந்த நெசவாளி ஒருவர் கூறினார். இந்தச் சமயத்தில் திடீரென்று நாய் குலைக்கும் சத்தமும், சைக்கிள் மணிச் சத்தமும் ஏககாலத்தில் ஒலித்தன. வடிவேலு முதலியார் தலையைத் திருப்பிப் பார்த்தார். எதிரே பத்திரிகைப் பையன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால், நெருங்கவும் பயந்து கொண்டு, பின் வாங்கவும் கூசிக் கொண்டு ஒரு கறுப்பு நாய் குலைத்துக் கொண்டே ஓடி வந்தது; சிறிது தூரம் ஓடி வந்துவிட்டு, அது பின் தங்கிவிட்டது. வாயில் புகையிலையோடு பொதுமி நின்ற வெற்றிலைக் கூழைப் புளிச்சென்று துப்பிவிட்டு, “அந்த நாயைக் கூடப் பாருங்க. அதுக்குக்கூட, அவர் புத்திதான் இருக்கு!” என்று எரிச்சலோடு சொன்னார் வடிவேலு முதலியார். “அவரைப் பத்தி நாம் எதுக்கு வாயைக் குடுக்கணும்? வீண் பொல்லாப்புக்கா?” என்று பட்டும் படாமலும் வெட்டிப் பேசினார் சுப்பையா முதலியார். “அது யார் நாய்?” என்று தெரியாதது போல் கேட்டார் இன்னொருவர். “எல்லாம் மைனர் முதலியார்வாளின் நாய்தான்! அதனால் தான் அதுக்குக் கூடக் கார்வார் ஜாஸ்தியாப் போச்சு!” என்றார் வடிவேலு. ‘மைனர் முதலியார்’ என்ற அருணாசல முதலியார், சுப்பையா முதலியாருக்குத் தூரத்து உறவு. சுப்பையா முதலியாரின் தந்தை கைத்தறி ஜவுளிக்கடைதான் வைத்திருந்தார். எனினும், சுப்பையா முதலியாருக்கு வயது வருமுன்பே, அந்தக் கடை நொடித்துப் போய்விட்டது. அதன் பின்னர் அவரது தந்தை ‘ஜவுளிக்கடை முதலாளி’ என்ற அந்தஸ்திலிருந்து வழுக்கி விழுந்து, மீண்டும் தமது சமூகத் தொழிலான கைத்தறி நெசவில் அடைக்கலம் புகுந்தார். சுப்பையா முதலியாரும் தற்போது ஒரு நெசவுத் தொழிலாளிதான். என்றாலும், ஜவுளிக்கடை வைத்து நடத்திய பழைய பெருமையுணர்ச்சியும், மைனர் முதலியார்வாள் போன்ற பெரியதனக்காரரின் தூரத்துச் சொந்தக்காரர் என்ற ஒட்டுறவுணர்ச்சியும் அவர் மனத்தை விட்டு அகலவில்லை. எனவே மைனர் முதலியாரைப் பற்றிச் சொன்னதும் அவருக்கு நெஞ்சில் சுருக்கென்றது. “என்னவே மாப்பிளே. அவுஹ கோயில் தர்மகர்த்தா வாச்சி, அந்த மரியாதைக்குக் கூட, நீர் மதிப்புக் குடுக்கக் காணமே!” என்று அங்கலாய்த்தார் சுப்பையா முதலியார். வடிவேலு முதலியார் விடுவதாக இல்லை. “கோயில் தர்மகர்த்தாவா? கோயில் பெருச்சாளின்னு சொல்லும்வே. அவரு நினைச்சா அம்மன் கழுத்திலே கிடக்கிற பொட்டிலே கூடக் கை வைக்கிறவராச்சே. அப்புறம் நம்ம சொத்தைக் கேட்பானேன்” என்றார் வடிவேலு முதலியார். “அட சரித்தாம்வே. பேச்சை நிறுத்தும்; பேப்பர் வந்திட்டுது” என்று வெட்டி முறித்துப் பேசிவிட்டு, பத்திரிகைக்காரப் பையனிடம் தினசரிப் பத்திரிகையை எட்டி வாங்கினார் சுப்பையா முதலியார். பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தவாறே “பார்த்தீரா வே! நாக்பூரிலே ஒருத்திக்குக் குரங்குப் புள்ளே புறந்திருக்காம்!” என்று சுவாரசியத்தோடு சொன்னார். “சரிசரி, பேப்பர் படிச்ச லெச்சணம் போதும்; இப்படிக் குடும்” என்று அதிகாரத் தோரணையோடு கூறிக் கொண்டே பத்திரிகையைக் கையில் வாங்கினார் வடிவேலு. “பாத்தியளா, இதை. சட்டசபை அங்கத்தினர் மீது லஞ்சம் வாங்கியதாகப் புகாராம். வேலியே பயிரை மேய்ந்தா, விளைச்சல் கண்டு முதல் ஆனாப்பிலேதான்! இந்தக் காங்கிரசுக்கு என்ன கேடுகாலம் வரப்போவுதோ? ஹும்! எல்லாம் அந்தக் காந்தி மகானோடேயே போச்சி!” என்று ஏதோ ஒரு தலைப்பைப் பார்த்து விட்டு அங்கலாய்த்துக் கொண்டார், வடிவேலு. “ஆமண்ணாச்சி, அந்த வெள்ளைக்காரன் ராச்சியமே தேவலைன்னு போச்சி. காந்தி பேரைச் சொல்லிக்கிட்டே, நம்மைத் தேரோடும் வீதியிலே திருவோடும் கையுமா விரட்டிடுவாங்க போலிருக்கே!” என்று விசனித்தார் இன்னொருவர். “வெள்ளைக்காரன் ராச்சியம் போயிட்டுதா? கல்லுக் குத்தி போல, நம்ம கண்ணெதிரிலேயே அங்கே மலையடியிலே ஹார்வி உக்காந்துக்கிட்டிருக்கான். என்னமோ அண்ணாச்சி, நாம மட்டும் ஏமாறலெ, நம்ம தலைவர்களுங் கூடத்தான் ஏமாந்திட்டாஹ போலிருக்கு!” என்று தமது கருத்தை வெளியிட்டார் இன்னொரு நெசவாளி. வடிவேலு முதலியார் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், பத்திரிகையில் எதையோ கூர்ந்து கவனித்தவாறே, “தம்பி, நூல் விலை கூட, இன்னம் ஏறும் போலத்தான் இருக்கு” என்றார். “வே! அதுக்காக நாங்க கூலி உசத்திக் கேக்கிறதை ஒண்ணும் நிறுத்தப் போறதில்லை. வயித்துக்குத் தின்னாத் தானேவே, வேலை வெட்டி பார்க்கச் சக்தி உண்டு” என்று உடனே எதிரொலி கிளப்பினார் வடிவேலு. பிறகு அவர் சாவதானமாகப் பத்திரிகையைப் பார்த்துவிட்டு, கடைக்கார மூப்பனாரிடம் கொடுத்தார். மூப்பனாரும் வாங்கிய மரியாதைக்காக, நாலு பக்கத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, கல்லாப் பெட்டியின் மீது பத்திரிகையை வைத்தார். இதற்குள் வடிவேலு முதலியாரைப் பார்த்து, “அண்ணாச்சி! அப்படின்னா, நீங்க கைலாச முதலியார்வாள் வந்ததும் ஒரு வார்த்தை கலந்துக்கிட்டு, ஊர்க்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று ஒரு நெசவாளி கேட்டுக் கொண்டார். “செய்தாப் போச்சி, அத்தோடே இன்னொரு சங்கதி.” “அதென்ன அது?” “கோயில் தர்மகர்த்தா விஷயம் தான். கோயில் தர்மகர்த்தா பதவியை நாம் ஏதோ மைனர் வாளுக்கே கிரயம் பண்ணிக் குடுத்த மாதிரி, அவாள் நடந்துக்கிடுதாக. அதுக்கும் ஒரு வழி பண்ணியாகணும்” என்றார் வடிவேலு. “அப்படின்னா?” “தர்மகர்த்தாவைப் பத்தித்தான் ஊரிலே நாலு பேரு நாலு விதமாகச் சொல்லுதாகளே. வருஷமும் நாலு ஆச்சி, அம்மனுக்கு ஒரு கொடையைக் காணம்; ஊரிலே பலபேர் குடுமி அவர் கைக்குள்ளே இருக்கதாலே, யாரும் அவரைத் தட்டிக் கேக்கவும் காணம்; ஊர்ப் பணத்துக்கும் இன்னிக்கித் தேதி வரையிலே ஒரு கணக்கு வழக்குக் கிடையாது. அதனாலே, வேறே யாரையாவது...” வடிவேலு முதலியார் பட்டவர்த்தனமாக விட்டுச் சொல்வதைக் கண்டதும், பக்கத்தில் மைனர் முதலியாருக்கு மிகவும் வேண்டியவரான சுப்பையா முதலியார் இருப்பதைச் சாடைகாட்டி, வடிவேலு முதலியாரின் தொடையில் லேசாகக் கிள்ளினார், ஒரு நெசவாளி. வடிவேலு முதலியாரோ அதற்கெல்லாம் மசிபவராயில்லை. “எல்லாம் தெரிஞ்சிதான்வே சொல்லுதேன்” என்று அடித்துப் பேசியவாறே இடத்தை விட்டு எழுந்திருந்தார் வடிவேலு. பிறகு கடைக்கார மூப்பனாரைப் பார்த்து, “ரெண்டு சுருட்டு குடுங்க. வாய்க்காங்கரைப் பக்கம் போகணும்” என்றார். வாங்கிய சுருட்டில் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, “வாய்க்காங் கரைக்கு யாராவது வர்ரியளா?” என்று கேட்டார். சுப்பையா முதலியார் தமக்கு வேறு வேலை யிருப்பதாகக் கூறிக்கொண்டு விடைபெற்று, எதிர்த் திசையில் திரும்பினார். சுப்பையா முதலியார் சென்றதும், தொடையைக் கிள்ளிச் சாடை காட்டிய நெசவாளி வாயைத் திறந்தார். “என்ன அண்ணாச்சி, பக்கத்திலே நாரதமுனி சுப்பையா நிக்கயிலேயே நீங்க மைனர்வாளைப் பத்தி விளாசித் தள்ளுதியளே” என்று பாதி அங்கலாய்ப்புடனும் பாதிப் பாராட்டுடனும் கூறினார். “வேணுமின்னுதான் தம்பி சொன்னேன். இப்போ அவர் நேரா மைனர் முதலியாரிடம் போய், அத்தனை விசயத்தையும் ஒண்ணுவிடாமே, இறக்கி வச்சிட்டுத்தானே மறுவேலை பார்ப்பார்! அதுக்குத்தானே சொன்னேன்” என்று பெருமிதத்தோடு சொன்னார் வடிவேலு. “நீங்க எதுக்கும் துணிஞ்சவங்க தான், அண்ணாச்சி!” “துணிஞ்சவனுக்குத் தான், தம்பி, துக்கமில்லை!” என்று அனுபவ வாயிலாகப் பிறந்த நீதி வாக்கியத்தை உதிர்த்து விட்டு, வாய்க்காலை நோக்கி நடக்க முனைந்தார் வடிவேலு முதலியார். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கே.பாலசந்தர் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு இருப்பு உள்ளது விலை: ரூ. 115.00தள்ளுபடி விலை: ரூ. 105.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |