4

     சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இத்தாலிய ‘பாஸிஸ்ட் ஜடாமுனி’ அபிஸீனியா மீது போர் தொடுப்பதற்கு முன்பு, கைலாச முதலியார் சாதாரணத் தறிகாரராய்த்தான் இருந்தார். ஏதோ முன்னோர்கள் தேடி வைத்துவிட்டுப் போன நாழி ஓடுபோட்ட சிறு காரை வீடும், இரண்டு மரக்கால் விரைப்பாடும் கொண்ட சாதாரண மத்திய தர வர்க்கத் தொழிலாளியாகத்தான் இருந்தார். அந்தக் காலத்தில் அவர் உள்ளூர் பெரிய முதலாளியான தாதுலிங்க முதலியாரிடம் நூல் வாங்கி நெய்து கொடுத்து அதற்குரிய கூலியைப் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். நாளாரம்பத்தில் அவர் தமது சுய சம்பாத்தியத்தில் வாயை வயிற்றைக்கட்டி மிச்சம் பிடித்ததைக் கொண்டும், வயலை அடமானம் வைத்தும், நாலைந்து தறிகளை வாங்கிப் போட்டுத் தமது இனத்தாரில் சிலரை அதில் வேலைக்கு வைத்துக் கொண்டு, நூல் வாங்கிக் கொடுத்து நெய்து சேலை துணிமணியாக்கித் தமது தொழிலை ஓரளவு விருத்தி பண்ணிக் கொண்டார்.

     அதற்குப் பின்னால், ஹிட்லரின் பேராசையால் எழுந்த உலக யுத்தம் தொடங்கிய பிறகு, கவனிப்பற்றுக் கிடந்த கைத்தறித் தொழிலுக்குத் திடீரென்ற ஒரு மவுசு ஏற்பட்டுவிட்டது. யுத்தத் தேவையினாலும், ராணுவ விஸ்தரிப்பினாலும், மில் துணிக்கு ஏகப்பட்ட கிராக்கியும், பொதுமக்களிடையே துணிப் பஞ்சமும் ஏற்பட்டது. பகாசுரப் பசி கொண்ட யுத்ததேவதைக்கு மில் துணி மட்டும் போதவில்லை. வெளிநாடுகளில் கைத்தறித் துணிக்கும் கிராக்கி அதிகமாயிற்று. இதன் காரணமாகவும், யுத்த காலத்தில் ஏற்பட்டிருந்த பணவீக்கத்தின் காரணமாகவும் கைத்தறி நெசவாளருக்குரிய கூலியும் உயர்ந்தது; கைத்தறித் துணி உற்பத்தியும் அதற்குரிய கிராக்கியும் உயர்ந்தது. பெருநாசச் சீரழிவை உலகத்துச் செல்வங்களுக்கும் மக்களுக்கும் கொண்டு வந்த யுத்தம், லாப வேட்டைக்காரர்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் கொள்ளை கொள்ளையாகப் பணம் திரட்டிக் கொடுத்தது. பெரு மழையில் அடித்த தூவானம் போல், அந்தச் சூழ்நிலை கைலாச முதலியார் போன்ற சிறு வியாபாரிகளையும் கைதூக்கி வளர்த்து விட்டது. யுத்த காலத்தில் கிடைத்த அபரிமிதமான வருவாயின் காரணமாக, கைலாச முதலியார் தாமும் மற்ற வியாபாரிகளைப் போல் நூல் வாங்கி விற்பதற்கு லைசென்ஸ் வாங்கினார். அத்துடன் தமது மகன் மணியின் பெயரால் ஒரு மாஸ்டர் வீவர் லைசென்சும் பெற்றார். அதன் மூலமாக, அவர் தாமும் நாலு வியாபாரிகளைப் போல் ஐம்பது அறுபது தறிகளுக்கு நூல் கொடுத்து நெய்து வாங்கி, ஜவுளிக் கொள்முதலும் வியாபாரமும் பண்ணத் தொடங்கினார். அத்துடன் தாதுலிங்க முதலியார் போன்ற பெரும் புள்ளிகளிடமும் கள்ள மார்க்கெட்டில் நூல் வாங்கி நெய்யக் கொடுத்து வியாபாரம் நடத்தினார்.

     இத்தியாதி காரணங்களால், யுத்த காலத்தில் சாதாரணத் தறிகாரர் என்ற நிலைமையிலிருந்து ‘முதலாளி’ என்ற அந்தஸ்துக்கு கைலாச முதலியார் உயர்ந்துவிட்டார். கையில் கிடைத்த புதுப் பணத்தின் மூலமாக, அவர் தமது பூர்விக வீட்டை எடுத்துக்கட்டி விஸ்தரித்தார். நாழி ஓட்டைப் பிரித்து, மச்சு எடுத்து வீட்டைப் புதுப்பித்தார்; வீட்டுக்கு மின்சார விளக்கும் போட்டார். முன்வீட்டில் நூல் கட்டுக்களை ஸ்டாக் செய்யவும், ஜவுளிக் கொள்முதல் வியாபாரம் செய்யவும் ஒரு கடையையும் திறந்து வைத்தார். கடையில் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் ஒரு கணக்கப்பிள்ளையையும், பதினைந்து ரூபாய்ச் சம்பளத்தில் ஒரு எடுபிடி வேலைக்காரப் பையனையும் வேலைக்கு அமர்த்தினார். காலையில் அவர் ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டு கையில் இரும்புப் பெட்டிச்சாவி கலகலக்க, ஈரத்தலையைச் சிக்கெடுத்து உதறியவாறே பட்டறைப் பலகையில் வந்து அமரும்போது, சிப்பந்திகள் இருவரும் எழுந்து நின்று மரியாதை செய்யும் போதும், ‘மொதலாளி’ என்று பவ்வியத்தோடு அழைக்கும் போதும், அவருக்குத் தம்மையறியாமலேயே சிறு அகந்தை உணர்ச்சி மேலோங்கும்.

     வீட்டை எடுத்துக் கட்டியதோடு அவர் தாமிரபருணிப் பாசனத்தில் ஒன்றரைக் கோட்டை விரைப்பாடு கொண்ட வயலையும் கிரயத்துக்கு முடித்திருந்தார். அத்துடன் வாழ்நாளில் செம்பாதியை உழைத்துழைத்துச் சலித்து வாடிப் போன தம் மனைவி தங்கம்மாளுக்கு ஐயாயிரம் ரூபாய் பெறுமானத்துக்கு நகை நட்டுக்களும் பண்ணிப் போட்டிருந்தார். தங்கம்மாளும் புதுப் பணமோகத்தில் ஊரிலுள்ள நாலு பெரிய வீட்டுப் பெண்ணரசிகளோடு சம அந்தஸ்தில் பழக வேண்டும் என்ற காரணத்தால், வளர்த்துத் தொங்க விட்டுப் பாம்படம் போட்டிருந்த காதை அறுத்து ஒட்டி, கால் துட்டு அகலத்தில் கம்மலும் போட்டுக் கொண்டாள். ஏதோ தன் மகன் மணிக்குக் காலாகாலத்தில் ஒரு கலியாணத்தைப் பண்ணி வைத்து விட்டால், மருமகளை ஆட்சி செலுத்திக் கொண்டு தான் நிம்மதியாக இருக்கலாம் என்ற நிரந்தர நப்பாசையும் அவள் மனத்தில் குடி கொண்டிருந்தது. வியாபாரி என்ற அந்தஸ்துக்கு வந்து விட்டதால், கைலாச முதலியாரும் தமது மூத்த மகன் சுப்பிரமணியன் என்ற மணியை இங்கிலீஷ் படிப்புப் படிக்க வைத்து, பி.ஏ. கிளாஸ் வரையிலும் தள்ளி விட்டுவிட்டார். கைலாச முதலியார் தம் சம்பாத்தியத்தில் பெருமளவை வீட்டிலும் வயலிலும் வியாபாரத்திலும் போட்டு விட்டதால், அவரிடம் ரொக்கமாக அப்படி ஒன்றும் அதிகம் மிஞ்சி விடவில்லை. எனவே வியாபாரத்தில் அடிக்கடி ஏற்படும் தேவைகளுக்கு தாதுலிங்க முதலியாரிடமும், மைனர் முதலியோரிடமும், வேறு சிலரிடமும் அவ்வப்போது ரொக்க லேவாதேவி செய்து, வாங்குவதும் அடைப்பதுமாக வியாபாரத்தை ஓட்டி வந்தார்.

     கைலாச முதலியார் எந்தக் காலத்திலும் பாவ புண்ணியத்துக்கும் தெய்வத்துக்கும் அஞ்சி நடந்து வந்தார். திருச்செந்தூர் முருகப் பெருமான் மீது அவருக்குக் கரை கடந்த பக்தி. அவரது முருக பக்தியின் சாட்சியமாக அவர் தமது மூத்த மகனுக்கு சுப்பிரமணியம் என்று பெயரிட்டது போலவே தமது இரண்டாவது புத்திரனுக்கும் ஆறுமுகம் என்று பெயர் வைத்திருந்தார். ஆறுமுகத்துக்குப் பத்து வயதிருக்கும். கைலாச முதலியார் முருகனை நினைக்காத நேரமே கிடையாது. பட்டறைப் பலகையில் அமரும்போதும், சாப்பாட்டுக்கு இலைமுன் உட்காரும் போதும், அலுத்துப் போய்க் கொட்டாவி விடும்போதும், தூங்கி எழுந்திருக்கும் போதும் அவர் முருகன் பெயரை வாய்விட்டுச் சொல்லி வணங்க மறப்பதில்லை. அவரது வீட்டில் எங்கு பார்த்தாலும் தொங்கிக் கொண்டிருக்கும் முருகக் கடவுளின் ஆறுபடை வீட்டுப் படங்களும், பிற திருவுருவப் படங்களும் அவரது தெய்வ பக்தியைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும். மேலும் அவர் தமது விட்டு மாடியில் ஒரு சிறு பூஜை அறையும் வைத்திருந்தார். காலையில் பூஜையெல்லாம் முடிந்த பிறகு தான் அவர் தொண்டையை நனைப்பார். அவர் சாதாரணத் தறிகாரராயிருந்த காலத்திலேயும், வைகாசி விசாகத்துக்கோ, மாசித் திருவிழாவுக்கோ கூண்டு வண்டி கட்டிக் கொண்டு குடும்பத்தோடு திருச்செந்தூர் சென்று, நீராடி நேர்த்திக் கடன் முடித்து வருவது வழக்கம். இப்போது அவர் முதலாளி என்ற அந்தஸ்துக்கு ஆளான பின்பும், சஷ்டியன்றும் கிருத்திகையன்றும் ஒரு போதும் விரதம் அனுஷ்டிக்கத் தவறுவதில்லை. அத்துடன் கடைசி வெள்ளிதோறும் தவறாது திருச்செந்தூருக்கு மாதாந்தமும் சென்று வந்து விடுவார்.

     மாற்றுக்குறையாத தெய்வ பக்தியின் காரணமாகவும், தமது பூர்வ நிலையை மறந்தறியாத காரணமாகவும், அவர் தம்மிடம் தொழில் நடத்திய தறிகாரர்களிடத்தில் கூடிய பட்ச நாணயத்தோடும், மரியாதையோடும் நடந்து கொண்டார். பெரிய முதலாளிமார்களைப் போல், தறிகாரர்களின் வாயில் வயிற்றிலடித்துப் பணம் திரட்டவும், தறிகாரர்களிடத்தில் கண்ணியக் குறைவாகவோ, அதிகார முறுக்காகவோ நடந்து கொள்ளவும் அவர் முனையவில்லை. இதனால், தறிகாரர்கள் அனைவரிடத்திலும் பொதுவாக அவரைப் பற்றி நல்லெண்ணம் தான் நிலவி வந்தது.

     வடிவேலு முதலியாருக்குக் கைலாச முதலியாரின் நாணயப் பொறுப்பிலும் நல்லெண்ணத்திலும் மிகுந்த நம்பிக்கை. எனவேதான் அவர் எப்படியும் நடப்பு வருஷத்தில் கைலாச முதலியாரைக் கோயில் தர்மகர்த்தா ஆக்கிவிடுவது என்று தீர்மானத்தோடு தறிகாரர்களிடையே அவ்வப்போது பிரசாரம் செய்து பலம் திரட்டி வந்தார். அன்று மாலை நடக்கவிருந்த ஊர்க்கூட்டத்தில் கூலி உயர்வுப் பிரச்னையையும் தர்மகர்த்தாப் பிரச்னையையும் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. அன்றைக்குப் பொழுது அநேகமாகக் கருக்கலாகி விட்டதால், வடிவேலு முதலியார் கைலாச முதலியாரைக் கூட்டத்துக்கு நேரில் சென்று அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தார்.

     “அண்ணாச்சி, அண்ணாச்சி.”

     வாசலில் கூப்பிடு குரல் கேட்டதும் கைலாச முதலியாரின் மனைவி தங்கம்மாள் சேலையை இழுத்துத் தோளில் மூடிக் கொண்டு, வாசல் நடைக்கு வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் வடிவேலு முதலியார் நிற்பதைக் கண்டதும், உள்ளே திரும்பிச் சென்று மாடிப் படிக்கட்டுக்கருகே நின்றவாறே மேல் நோக்கிச் சத்தம் கொடுத்தாள்.

     “இந்தாங்க, உங்களத்தானே.”

     கைலாச முதலியார் மாடியிலிருந்து இறங்கி வந்தார். வந்தவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டுத் தன் வேலையைக் கவனிப்பதற்காக உள்ளே சென்றாள் தங்கம்.

     கைலாச முதலியார் வாசல் நடை மீதிருந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, கடையை அடுத்துக் கிடந்த பெஞ்சியில் அமர்ந்தார். “வடிவேலுத் தம்பியா? வாங்க. என்ன நேரமாயிட்டுதா?” என்று விசாரித்தவாறே பெட்டியைத் திறந்தார்.

     “ஆமா அண்ணாச்சி, நேரத்தோட போயிட்டா நல்லதுதானே. பெரிய முதலாளி கூட வாரதாக இருக்கு” என்றார் வடிவேலு.

     கைலாச முதலியார் வெற்றிலையைப் போட்டு முடித்துவிட்டு, “அப்ப இருங்க. வேட்டி மாத்திக்கிட்டு வந்திடுதேன்” என்று கூறியவாறே உள்ளே சென்றார்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினர் அல்லது புரவலராக இணைந்திடுங்கள்.



பஞ்சும் பசியும் : 1 2 3 4 5



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247

நூல்
விலை
தள்ளுபடி
விலை
அஞ்சல்
மேலும் விபரம்
ரூ. 211.00
ரூ.200.00
இலவசம்
ரூ. 244.00
ரூ.230.00
இலவசம்
ரூ. 650.00
ரூ.600.00
இலவசம்
ரூ. 270.00
ரூ.255.00
இலவசம்
ரூ. 500.00
ரூ.480.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 199.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 433.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 411.00
ரூ. 390.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 580.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 160.00
இலவசம்
ரூ. 380.00
ரூ. 360.00
இலவசம்
ரூ. 165.00
ரூ. 150.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 205.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 165.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 610.00
இலவசம்
ரூ. 288.00
ரூ. 270.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 325.00
ரூ. 310.00
இலவசம்
ரூ. 333.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 425.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 360.00
ரூ. 340.00
இலவசம்
ரூ. 190.00
ரூ. 180.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 275.00
இலவசம்
ரூ. 425.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 600.00
ரூ. 500.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 430.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 470.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 525.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 299.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 588.00
ரூ. 540.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 250.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 350.00
இலவசம்
ரூ. 230.00
ரூ. 220.00
இலவசம்
ரூ. 790.00
ரூ. 740.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 215.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 180.00
ரூ. 170.00
இலவசம்
ரூ. 1800.00
ரூ. 1600.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 120.00
ரூ. 110.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 177.00
ரூ. 155.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 80.00
ரூ. 75.00
ரூ. 30.00
ரூ. 144.00
ரூ. 135.00
ரூ. 30.00
ரூ. 111.00
ரூ. 100.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 125.00
ரூ. 115.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 90.00
ரூ. 30.00