9 அந்த முக்கிய வீதி மட்டும் இல்லையானால், சட்டாம்பட்டி, சாதாரணமானப் பட்டியாகி இருக்கும். ஆனால் அந்த ஊரின் மேல்பக்கம், கிட்டத்தட்ட ஊரின் வேலி போல இருந்த, அந்தச் தார்ச்சாலையில், திருவள்ளுவர் பஸ்களும், கட்டபொம்மன் பஸ்களும் ஓடிக் கொண்டிருந்தன. இந்தப் பட்டியில், இந்தச் சாலையில் நின்று படிக்கட்டுகள் வழியாக பஸ்ஸுக்குள் ஏறிவிட்டால் ஒருத்தர் மதுரையில் இறங்கலாம், இன்னொருத்தர் நாகர்கோயிலில் ஒரு தூக்கம் தூங்கிட்டு எழலாம். இந்தச் சாலையில்தான் துளசிங்கத்தின் உரக்கடையும் சிமெண்ட் கடையும் பக்கத்தில் பக்கமாய் உள்ளன. எதிர்ப்பக்கம் பஸ் ஸ்டாண்ட். நான்கைந்து பெட்டிக் கடைகள் ஒரு சில தேநீர் கடைகள் வரிசையாய் இருந்தன. இவன் கடைகளுக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் வாடகை சைக்கிள் கடைகள். ஒரு வாசகசாலை. உருப்படாத ஒரு நடிகனுக்கு உள்ளூர் உதவாக்கரைப் பயல்கள் வைத்திருக்கும் ரசிகர் மன்றம். சில அரசியல் கட்சிகளின் கிழிந்துபோன கொடிகள்.
திருமலை வேட்டியைத் தார்ப் பாய்த்துக் கொண்டு சிம்ம கர்ஜனை போட்டான். “எனக்கு எப்டிடா நீ சிமெண்ட் இல்லன்னு சொல்லலாம்?” “நீ எப்டிடா கேட்கிற விதமா கேட்காமல் இருக்கலாம்?” “நான் எப்படிக் கேட்டா ஒனக்கென்னடா...? ஒனக்குத் தேவை பணம்தானடா...?” “அதுக்கு ஒன் காலுல சிமெண்ட் மூட்டையை போட்டுட்டு கும்பிட முடியுமா? ஒனக்கு சிமெண்ட் வேணுமுன்னா என் கடையில வந்து தான் கேட்கணும். தெருவுல வந்து கொடுக்க நான் ஒன் வேலைக்காரன் இல்ல.” “நீ இந்த ஊருக்கு நல்ல முறையில எல்லாருக்கும் சிமெண்ட் கொடுக்கறதுக்காக ஒனக்கு ஏஜென்சி கொடுத்திருக்காங்க. நீ எடுக்காட்டா நான் எடுத்திருப்பேன். அதனால நீ எனக்கு இப்பவே இந்த இடத்துலயே சிமெண்ட் மூட்டய தந்தாகணும். இல்லன்னா, நான் உன்னை விடப்போறதாய் இல்ல.” “நீ இவ்வளவு சொன்ன மட்டும் நான் ஒனக்கு சிமெண்ட் தரப்போறதாய் இல்ல. எப்போ தந்தாலும் தருவேன். ஆனால் இப்போ தலையே போனாலும் தரவே மாட்டேன்.” “தராட்டா எடுப்பேன்.” “எடுக்கிற கைய ஒடிப்பேன்.” “பாத்துப்புடலாண்டா.” “பாத்துக்கிட்டே இருடா.” வேலையாட்கள் செம்பட்டையான் கரும்பட்டையான் ஆகிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆகையால், தத்தம் சேவல்களுக்கு ஆதரவாய் உடம்பை நிமிர்த்தியபோது - அந்தச் சாலைவாசிகள், அனைவருமே கூடிவிட்டார்கள். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, யார் தோற்கிறான் என்பதை கண்டு பிடிக்க அதிக நேரம் ஆகும் என்பதாலும் எவன் படுக்கிறான் என்று தெரிவதற்குள், தத்தம் கடை வியாபாரம் படுத்துவிடும் என்பதாலும், இருவரையும் பிரித்து விட்டார்கள். பிரிந்தவர்கள் சிறிது பின்வாங்கி நின்றபோது பிரிபட்டவர்கள் மீண்டும் பிணையப் போனார்கள். ஒருவருக்கு அலுத்து விட்டது. காண்டிராக்டர் தாமோதரன் பிரித்த ஆட்களை விலக்கித் தள்ளிவிட்டு, இருவரின் கைகளையும் பிடித்து நேருக்கு நேராய் நிறுத்திவிட்டு, கத்தினார். “நாங்க யாரும் ஒங்கள பிடிக்க மாட்டோம். உம் பாயுங்க. எவனாவது ஒருவன் கீழே விழுறது வரைக்கும் சும்மாவே இருக்கோம். டேய் ஆஸ்பத்திரிக்கு ஒரு வண்டிய ரெடி பண்ணி வையுங்கடா.” தாமோதரன், வேறு யாரையோ சொல்வது மாதிரியும், அதுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் துளசிங்கமும், திருமலையும் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நிற்கிறார்கள். மற்போரைச் சொற்போராக்குகிறார்கள். திருமலையின் காதில் ரத்தம் ஒழுகியது, துளசிங்கம் கடித்த கடி. ரத்தச் சொட்டுக்களோடு பேசினான். “செறுக்கி மவன். சிமெண்ட் கேட்டா தர மாட்டாங்கான். எனக்கு இப்போ ரெண்டு மூட்ட சிமெண்ட் வேணும். வாங்காமப் போக மாட்டேன். செறுக்கி மவன் சரியான நாயி. எப்டி கடிச்சிருக்கான் பாருங்க.” திருமலை கொடுத்த அடியில், கை வளைத்து நின்ற துளசிங்கம், வளையாத வலது கையை ஆட்டியபடியே பதிலளித்தான். “நான் நாயின்னா இவன் வெட்டியான். என் கைய எப்டி வளச்சிருக்கான் பாருங்க. சிமெண்ட் அவனுக்கு இனிமேல் எப்பவும் கிடையாது. வேணுமுன்னால் புகார் பண்ணிக்கட்டும்.” இதற்குள் ஊரே கூடிவிட்டது. பாக்கியம், திருமலை காதில் பெருக்கெடுத்த ரத்தத்தை முந்தானை சேலையால் துடைத்தபடியே ஒப்பாரியிட்டாள். கோலவடிவு, அம்மாவுக்கும் தாயம்மாவுக்கும் பின்னால் நின்று கைகளைப் பிசைந்தாள். ரஞ்சிதம் நெற்றிச் சுருக்கங்களோடு நின்றாள். சந்திரா, துளசிங்கத்தை நாயே, பேயே என்று திட்ட, துளசிங்கத்தின் அம்மா அன்னம்மா எதிர்திட்டு போட்டாள். அலங்காரி, துளசிங்கத்தின் கையைத் தடவி விட்டபடியே, “என் ராசா ராசா” என்று கத்தினாள். இதற்குள் கரும்பட்டையான்களும், செம்பட்டையான்களும் அணிவகுத்தும் ஆர்ப்பரித்தும் பேசினார்கள். “சிமெண்ட் வாங்க விடமாட்டோம்.” “தராத சிமெண்ட் எடுக்காம விடமாட்டோம்.” “செம்பட்டையான் கடைக்குள்ள வந்து சிமெண்ட் எடுக்கணு முன்னால் அந்தக் கடையே கரும்பட்டையான்களுக்கு சமாதியாயிடும்.” “கரும்பட்டையான் வம்சத்துக்கு முன் வச்ச காலை பின் வச்சு பழக்கமில்ல. அந்தப் பழக்கத்தை மாத்திக்கவும் தயாராய் இல்ல.” “சரி வந்து பாருங்க.” இந்த சண்டைக்கு மூன்றாவது கனபரிமாணமாக, ‘காத்துக் கருப்பன் குடும்பத்து’ அதே அந்த ராமையா கோபாவேசமாகப் பேசினார். சூதுவாதில்லாத மனிதர்தான். கோலவடிவை, அக்னி ராசாவுக்கு திருமணம் செய்யும் உறுதியோடு அவர் பேசவில்லைதான். ஆனாலும் பழனிச்சாமி மச்சான் மேல் புதிதாக வந்த பாசம் அவரை இப்படிப் பேச வைத்தது. “ஏய் துளசிங்கம்! நீ பேசுறது அக்கிரமண்டா. ஒன் கடை உரத்த வயலுல போட்டு இப்போ பயிரெல்லாம் சாவியா போயிட்டு.” “சிமெண்டுக்கும், உரத்துக்கும் என்ன சம்பந்தம்.” “எங்க அண்ணாச்சிய பேச விடுடா. பேமானிப்பயல... அவரு யாரோடயும் பேசாதவர். இப்பவாவது பேசட்டும்.” “ஒரே வார்த்ததான் பேசப் போறேன். துளசிங்கம் கடை பொதுக் கடை. சாமியை நம்பாதவன் கற்பூரம் விற்கதுமாதிரி இவன் பிடிக்காத திருமலைக்கும் சிமெண்ட் மூட்டைய கொடுத்தாகணும். இல்லன்னா கடையை உடைச்சாகணும்.” காத்துக் கருப்பன்கள் ‘பைத்தியார தர்மரு’ ராமய்யாண்ணன் பின்னால் கச்சைக் கட்டி, அவரின் இச்சையை நிறைவேற்றத் துடித்தார்கள். ஆனானப்பட்ட அதிகாரிகளையே கெஞ்சியும், மிஞ்சியும் மடக்கிப் போடும் ஒத்தை வீடு காண்டிராக்டர் தாமோதரன் விவகாரியானார். “இதைவிட என் உயிரக் கேளும் தாரேன்.” “உயிரும் இப்போ போகத்தான் போகுது.” ரஞ்சிதம் அடிமேலடியாய் நடந்து, கூட்டதுக்கு முன்னால் வந்து தீர்ப்பளிப்பவள்போல் பேசினாள். “நான் எல்லாருக்கும் பொதுப்பிள்ள, அடுத்த சாதி அற்பம். நான் சொல்லுறதக் கேளுங்க. நம்ம யூனியன் காண்டிராக்டர் அய்யா தாமோதரன், முருகன் கோயில் முகப்பு கட்டுறதுக்கு உபயமாய் பத்து மூட்டை சிமெண்ட் வாங்கி துளசிங்கம் கடையிலேயே போட்டிருக்கார். அதுல எத்தன மூட்டை சிமெண்ட வேணுமுன்னாலும் திருமலை அவருகிட்டயே பணத்தக் கொடுத்துட்டு, எடுத்துக்கட்டும். தாமோதரய்யா தன்னோட சிமெண்ட் மூட்டைய எடுத்துக் கொடுப்பாரு. இதனால துளசிங்கம் மானமும் போகல. திருமலை மானமும் போகல. சிமெண்ட் மூட்டதான் போவுது.” “ரஞ்சிதம் ஒன்னை கொழும்புக்கு அனுப்பி வைக்கணும்.” அந்தத் தீர்ப்பால் எல்லோருக்கும் திருப்தி. ஒரு சில கர்நாடக விவகாரிகள்தான் மனதுக்குள் முனங்கிக் கொண்டார்கள். “போயும் போயும் ஒரு ஒத்தை வீட்டுப் பொண்ணு அடுத்த சாதிக்காரி... சொக்காரப் பலம் இல்லாத ரஞ்சிதமா இந்த வழக்க தீர்த்து வைக்கணும். நாங்க எதுக்கு இருக்கோம்?” விவகாரம் தீர்ந்து கொண்டிருந்த போது, அக்கினி ராசாவின் அப்பா ராமய்யாதான் தனது சுபாவத்திற்கு மாறாக விடாப்பிடியாகப் பேசினார். “அதுல்லாம் முடியாது. தாமோதரன் சிமெண்ட் விற்றுப் போன சிமெண்ட். துளசிங்கந்தான் அவன் கையால வேற சிமெண்ட்ட கொடுக்கணும்.” தாமோதரன், ராமய்யாவின் மோவாயைத் தூக்கி, தன் உள்ளங்கையில் தாங்கிக் கொண்டே மன்றாடினார். “போவட்டும் மச்சான். போவட்டும் ரெண்டு தரப்புமே சம்மதிச் சுட்டாங்க. நமக்கென்ன வம்பு. டேய் துளசிங்கம். என் சிமெண்ட் மூட்டையை தனியா ஒதுக்கு. இந்தாடா திருமலை நூற்றி எண்பத்து நாலு ரூபாயும் முப்பது பைசாவையும் எடு. என்கிட்டயே கொடு. சிமெண்ட்டோட விலை. வயசுப் பொண்ணு வளத்தி மாதிரி கூடிக்கிட்டே போவுது. இன்னைய ரேட்டுப்படி. மீதிக் கணக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.” “ஆமா தெரியாமத்தான் கேக்கேன், நீரு விவகாரியா, இல்ல வியாபாரியா, மாப்பிள்ளே.” திருமலை சட்டைப் பையைத் துழாவினான். வேட்டியைத் தூக்கி, டவுசர் பைக்குள் கைவிட்டான். அப்போதுதான் அவனுக்கு உறைத்தது, வெறும் கையில் முழம் போட்டிருக்கான். இந்தச் சமயத்தில் யாரிடமாவது பணம் கேட்டால், தான் துளசிங்கத்திடம் வம்புச் சண்டைக்குப் போனதாக அர்த்தமாகிவிடும். திருமலை என்ன செய்வது என்று புரியாமல் விழித்தபோது, துளசிங்கம் புரிந்து கொண்டான். திருமலை வம்புச் சண்டைக்கே வந்தவன் என்பதை நிரூபிப்பதற்காக, அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சபையிடம் முறையிடப் போனபோது - திருமலை அண்ணாவின் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்ட கோலவடிவு, அண்ணனின் அருகே வந்து, முந்தானையில் மடித்து வைத்திருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை திருமலையின் கையில் லாவகமாகத் திணித்தாள். உடனே அவன், அந்த நோட்டுக்களை பத்து ரூபாய் நோட்டாக பயந்து பார்த்து, பிறகு சந்தோஷப்பட்டு தாமோதரனிடம் நீட்டினான். துளசிங்கம், கோலவடிவை, பற்களைக் கடித்துப் பார்த்தான். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
உடம்பு சரியில்லையா? மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : மருத்துவம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உடலுக்கு நேரக்கூடிய பலவித பாதிப்புகளையும், நோய்களையும் எளிய முறையில் இந்த நூல் உங்களுக்கு உணர்த்துகிறது. என்ன பிரச்னைக்கு எந்த மருந்து சாப்பிட வேண்டும் என்பதை ஒரு டாக்டர் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் அந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களைக் கூறுவதுடன், அவற்றைத் தடுக்கவும், தவிர்க்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நூலில் அறியலாம். மிக முன்னேறிய தொழில்நுட்பக் கருவிகள் மருத்துவ உலகில் அறிமுகமாகி வருகின்றன. சந்தோஷம். என்றாலும் உடல் பாதிப்புகளை கண்டறிவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவற்றைத் தீர்ப்பதிலும் ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் என் மனதில் உள்ளது. ஆயுளை அதிகரிக்க முடிகிறது. ஆனால் அப்படி ஆயுளை அதிகரித்துக் கொள்ளும்போது உயிர்ப்புடன் வாழ முடிகிறதா? இந்தச் சூழலில் நம்மை நாமே அறிந்து கொள்வதும் முடிந்தவரை எச்சரிக்கையாக இருப்பதும் மிக அவசியம். அதற்கு உதவும் ஒரு பாதையே இந்த நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|