சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய பரிபாடல் கடைச் சங்கத்துப் புலவர்கள் அருளியச் செய்த பரிபாடல்கள் எழுபது எனத் தெரிந்தாலும் நமக்கும் கிடைத்துள்ளவை 22 முழுப்பாடல்களும், பழைய உரைகளிலிருந்தும் புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் இரண்டு பாடல்களும், சில பாடல்களின் உறுப்புக்கலுமேயாகும். இவ்விருபத்திரண்டனுள், திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15), முருகனுக்குரியவை எட்டு(5, 8, 9, 14, 17, 18, 19, 21), வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22). இவற்றின் பின்னே உள்ள பகுதிகளுள் திருமாலுக்குரிய முழுப்பாடல் ஒன்று; வையைக்குரிய முழுப்பாடல் ஒன்று; உறுப்பு ஒன்று; மதுரைக்குரிய உறுப்புகள் ஏழு; சில உறுப்புகள் இன்ன வகையைச் சார்ந்தனவென்று விளங்கவில்லை. எட்டுத்தொகை நூல்களுள் இஃதொன்றே இசை நூலாகும். இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றித் தெரியவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால்முதல் பாடலுக்கும் 22ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள் தெளிவாக இல்லை. மேலும் முதல் பாடலில் 14 முதல் 28ஆம் வரி வரை உள்ள பகுதி தெளிவின்றி உள்ளது. 1. திருமால்
ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை தீ உமிழ் திறனொடு முடிமிசை அணவர, மாவுடை மலர் மார்பின், மைஇல் வால் வளை மேனி, சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய, 5 வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; (இது தரவு) எரிமலர் சினைஇய கண்ணை; பூவை விரிமலர் புரையும் மேனியை; மேனித் திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை 10 எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும் ஏவலுட் பணிந்தமை கூறும், நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே. (இது கொச்சகம்) இணைபிரி அணி துணி பிணி மணி எரி புரை 15 விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் தெரி திர டெரி யுருளிகன மிகு முரண் மிகு கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில் தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மலர்மார்பின் 20 எரி வயிர நுதி நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் றுணி படல் இன மணி இயலெறும் எழிலின் இசை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர் மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை 25 உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிரிய அமரரைப் பொரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் உதிர்பு அதிர்பு அலம் தொடர அமர் வென்ற கணை. (இவை நான்கும் அராகம்) "பொருவேம்" என்றவர் மதம் தபக் கடந்து, 30 செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்! தெருள நின் வரவு அறிதல் மருள் அறு தேர்ச்சி முனிவர்க்கும் அரிதே; (இஃது ஆசிரியம்) அன்ன மரபின் அனையோய்! நின்னை 35 இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? (இது பேரெண்) அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம் திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும். (இஃது ஆசிரியம்) 40 விறன்மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் அறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ; திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின் மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ; அம் கண் வானத்து அணி நிலாத் திகழ் தரும் 45 திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; ஐந் தலை உயிரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ; நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் புலமும், பூவனும், நாற்றமும், நீ; |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |