http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி ...

50 வலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,
     நிலனும், நீடிய இமயமும், நீ. (இவை ஆறும் பேரெண்)
     அதனால்,
     "இன்னோர் அனையை; இனையையால்" என,
     அன்னோர் யாம் இவண் காணாமையின்,
55 பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய
     மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
     நின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே! (இது சுரீதகம்)
     நின் ஒக்கும் புகழ் நிழலவை;
     பொன் ஒக்கும் உடையவை;
60 புள்ளின் கொடியவை; புரி வளையினவை;
     எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
     மண்ணுறு மணி பாய் உருவினவை;
     எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை. (இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்)
     ஆங்கு, (இது தனிச்சொல்)
65 காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
     யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
     ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
     வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே. (இது சுரீதகம்)


கடவுள் வாழ்த்து.

2. திருமால்

     தொல்முறை இயற்கையின் மதியொ....
     ... ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக.
     பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
     விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
5   கரு வளர் வானத்து இசையின் தோன்றி,
     உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
     உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
     செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
     தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
10 உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
     மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
     உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
     நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
     மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
15 செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
     கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
     ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
     ஊழி யாவரும் உணரா;
     ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது.
20 நீயே, "வளையொடு புரையும் வாலியோற்கு அவன்
     இளையன்" என்போர்க்கு இளையை ஆதலும்,
     "புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
     முதியை" என்போர்க்கு முதுமை தோன்றலும்,
     வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
25 கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்,
     இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
     நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே.
     ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
     பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
30 நித்தில மதாணி அத்தகு மதி மறுச்
     செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்
     வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
     வை வான் மருப்பின் களிறு மணன் அயர்பு,
     "புள்ளி நிலனும் புரைபடல் அரிது" என,
35 உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று.
     ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,
     இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்
     கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,
     முடிகள் அதிர, படிநிலை தளர,
40 நனி முரல் வளை முடி அழிபு, இழிபு,
     தலை இறுபு தாரொடு புரள
     நிலை தொலைபு, வேர், தூர், மடல்,
     குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்
     பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்

பரிபாடல் : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20
21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ettuthogai/paripadal2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs