http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி ...

7. வையை

     திரை இரும் பனிப் பெளவம் செவ்விதா அற முகந்து,
     உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
     கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
     வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி
5   இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,
     வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
     நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன
     பெயலாற் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,
     நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த,
10 வந்தன்று, வையைப் புனல்.
     நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,
     ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,
     துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்
     வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,
15 உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி;
     உழவர்களி தூங்க, முழவு பணை முரல,
     ஆடல் அறியா அரிவை போலவும்,
     ஊடல் அறியா உவகையள் போலவும்,
     வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;


20 விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப்
     பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
     செய்கின்றே, செம் பூம் புனல்;
     "கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
     அவிழ்ந்த மலர் மீதுற்றென", ஒருசார்;
25 "மாதர் மடநல்லார், மணலின் எழுதிய
     பாவை சிதைத்தது" என அழ, ஒருசார்;
     "அகவயல் இள நெல் அரிகால் சூடு
     தொகு புனல் பரந்தெ"னத் துடி பட, ஒருசார்;
     "ஓதம் சுற்றியது ஊர்" என, ஒருசார்;
30 "கார் தூம்பு அற்றது வான்" என, ஒருசார்;
     "பாடுவார் பாக்கம் கொண்டென,
     ஆடுவார் சேரி அடைந்தென,
     கழனி வந்து கால் கோத்தென,
     பழன வாளை பாளை உண்டென,
35 வித்து இடு புலம் மேடு ஆயிற்றென",
     உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
     புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,
     சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,
     பழன உழவர், பாய் புனல் பரத்தந்து;
40 இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,
     வரை புரை உருவின் நுரை பல சுமந்து,
     பூ வேய்ந்து, பொழில் பரந்து;
     துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,
     அலர் தண் தாரவர், காதில்
45 தளிர் செரீஇ, கண்ணி பறித்து;
     கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,
     மேகலை, காஞ்சி, வாகுவலயம்,
     எல்லாம் கவரும் இயல்பிற்றாய்த் தென்னவன்
     ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட
50 தானையான் வையை வனப்பு;
     புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
     துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்
     அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,
     கை புதைஇய வளை
55 ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்
     போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு
     பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்
     இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்
     செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;
60 வையைப் பெருக்கு வடிவு;
     விரும்பிய வீரணி மெய் ஈரம் தீர,
     சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;
     பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,
     கூர் நறா வளர்ந்தவள் கண்.
65 கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப்
     பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்
     பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,
     "என்னை வருவது எனக்கு?" என்று, இனையா,
     நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;

பரிபாடல் : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20
21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ettuthogai/paripadal9.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs