http://www.chennailibrary.com


சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி ...

45 நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி,
     ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
     அளறு சொரிபு, நிலம் சோர,
     சேரார் இன் உயிர் செகுக்கும்
     போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே;
50 ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே;
     பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.
     நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
     கண்ணே, புகழ் சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
     வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
55 நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும்,
     சாயல் நினது, வான் நிறை என்னும்
     நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே;
     அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
     எவ் வயினோயும் நீயே.
60 செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!
     கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
     படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
     புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
     திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
65 நின் உருபுடன் உண்டி;
     பிறர் உடம்படுவாரா
     நின்னொடு புரைய
     அந்தணர் காணும் வரவு.
     வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
70 மூவா மரபும் ஓவா நோன்மையும்
     சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
     ... ... ... ... ... ... ... மரபினோய் நின் அடி
     தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
     கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
75 கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
     "கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!" எனவே.

கடவுள் வாழ்த்து
கீரந்தையார் பாட்டு
நன்னாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்

3. திருமால்

     மாஅயோயே! மாஅயோயே!
     மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
     மணி திகழ் உருபின் மாஅயோயே!
     தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
5   ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
     திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
     மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
     தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
     மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
10 மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
     மாயா வாய்மொழி உரைதர வலந்து;
     "வாய்மொழி ஓடை மலர்ந்த
     தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
     நீ" என மொழியுமால், அந்தணர் அரு மறை.
15 "ஏஎர், வயங்கு பூண் அமரரை வெளவிய அமிழ்தின்,
     பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
     பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
     நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
     சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
20 கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;
     தீ செங்கனலியும், கூற்றமும், ஞமனும்,
     மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
     ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
     கேழ லாய் மருப்பின் உழுதோய்? எனவும்,
25 "மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்
     சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்? எனவும்,
     ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
     நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
     பாடும் வகையே; எம் பாடல் தாம் அப்
30 பாடுவோர் பாடும் வகை.

பரிபாடல் : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20
21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ettuthogai/paripadal3.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.