பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 19 ...
1801 அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி அருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டு அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி அருளால் என்நந்தி அதும்புகுந் தானே. 10
1802 பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின் நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில் கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின் நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே. 11
1803 பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன் உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே. 12
1804 அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய் அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே. 13
1805 ஆயும் அறிவோடு அறியாத மாமாயை ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும் ஆய பலஇந் திரியம் அவற்றுடன் ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே. 14
1806 அருளே சகலமும் ஆய பவுதிகம் அருளே சராசர மாய அமலமே இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன் அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே. 15
1807 சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து தவமான ஐம்முகன் ஈசன் அரனும் பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா நவம்அவை யாகி நடிப்பவன் தானே. 16
1808 அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத் தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே. 17
1809 தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே துடைத்திடும் தானே மறைத்திடும் தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும் தானே வியாபித் தலைவனும் ஆமே. 18
1810 தலையான நான்கும் தனதுஅரு வாகும் அலையா அருவுரு வாகும் சதாசிவம் நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும் துலையா இவைமுற்று மாய் அல்லது ஒன்றே. 19
1811 ஒன்றது வாலே உலப்பிலி தானாகி நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே. 20
1812 நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு ஆயக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப் போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு வீயத் தகாவிந்து வாக விளையுமே. 21
1813 விளையும் பரவிந்து தானே வியாபி விளையும் தனிமாயை மிக்கமா மாயை கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம் அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 22 10. அருள் ஒளி
1814 அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார் அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் அருளின் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. 1
1815 வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில் ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. 2
1816 ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே. 3
1817 உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும் பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. 4
1818 விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. 5
1819 ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும் ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. 6
1820 புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே. 7
1821 அருளது என்ற அகலிடம் ஒன்றும் பொருளது என்ற புகலிடம் ஒன்றும் மருளது நீங்க மனம்புகுந் தானைத் தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. 8
1822 கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் பாறணி யும்உடல் வீழவிட்டு ஆருயிர் தேறுஅணிவோம்இது செப்பவல் லீரே. 9 11. சிவபூசை
1823 உள்ளம் பெருங்கோயில் * ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் # தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 1 * ஊனுடம்பு சுற்றலை # தெள்ளத் தெளிந்தார்க்குச்
1824 வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. 2
1825 பான்மொழி பாகன் பராபரன் தானாகும் ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. 3
1826 நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் கனைகழல் ஈசனைக் காண அரிதாம் கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார் புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 4
1827 மஞ்சன மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோடும் அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 5
1828 புண்ணியம் செய்வார்க்குப் * பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. 6 * பூவுள நீருள
1829 அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள் ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச் சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. 7
1830 மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும் சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 8
1831 ஆரா தனையும் அமரர் குழாங்களும் தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும் பேரா யிரமும் பிரான்திரு நாமமும் ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. 9
1832 ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத் தான்அந்த மில்லாத் தலைவன் அருளது தேன்உந்து மாமலர் உள்ளே * தெளிந்ததோர் பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. 10 * தெளிந்தோர்
1833 உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர் தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப் பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 11
1834 வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார் அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. 12
1835 கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள் பழிப்படு வார்பல ரும்பழி வீழ வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 13
1836 பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்குஅரன் தானே பயிலும் நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. 14
1837 ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன் மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 15
1838 தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும் பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள் நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. 16
1839 உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப் பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. 17
1840 வென்று விரைந்து விரைப்பணி என்றனர் நின்று பொருந்த இறைபணி நேர்படத் துன்று சலமலர் தூவித் தொழுதிடில் கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. 18
1841 சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும் ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான் மாத்திக்கே செல்லும் வழியது வாமே. 19
1842 ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற மேவித் திரியும் விரிசடை நந்தியைக் கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத் தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 20
1843 சாண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம் காணும் அளவும் கருத்தறி வாரில்லை பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு மாணிக்க மாலை மனம்புகுந் தானே. 21
1844 பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள வருந்தன்மை யாளனை வானவர் தேவர் தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 22
1845 சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும் அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 23
1846 ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர் ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. 24 (இப்பாடல் 1458-ம் பாடலாகவும் வந்துள்ளது) 12. குரு பூசை
1847 ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப் போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. 1
1848 கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுற மாமலர் இட்டு வணங்கினும் * ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது # தேனமர் பூங்குழல் சேரஒண் ணாதே. 2 * ஊனற நோக்கி # வானவர் நாடு வழிதிறவாதே (இப்பாடல் 1452-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1849 மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம் சேவடி சேரல் செயலறல் தானே. 3
1850 உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை விச்சிமின் விச்சி விரிசுடர் மூன்றினும் நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே. 4
1851 புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம் பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம் எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால் பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே. 5
1852 இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை * வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம் இந்துவும் பானுவும் # இலங்காத் தலத்திடை $ வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே. 6 * வந்திப்ப # இயங்காத் $ வந்திக்க நந்திக்கு மாமலராமே
1853 இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர் விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே. 7
1854 மனபவ னங்களை மூலத்தான் மாற்றி அனித உடல்பூத மாக்கி அகற்றிப் புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத் தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. 8
1855 பகலும் இரவும் பயில்கின்ற பூசை இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப் பகலும் இரவும் பயிலாத பூசை சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே. 9
1856 இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்குஅற ஆனந்தத் தேறல் * பருகி இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே. 10 * பருகார் 13. மகேசுவர பூசை
1857 * படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் # நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா $ நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் @ படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. 1 * படமாடுங் # நடமாடுங் $ நடமாடுங் @ படமாடுங்
1858 தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று எண்திசை நந்தி எடுத்துரைத் தானே. 2
1859 மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும் தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. 3
1860 அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என் பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு நிகரில்லை என்பது நிச்சயம் தானே. 4
1861 * ஆறிடும் வேள்வி அருமறை நூலவர் கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில் நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. 5 * ஆறிடு
1862 ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 6 (இப்பாடல் 2111-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1863 சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப் பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே. 7
1864 அழிதகவு இல்லா அரன்அடி யாரைத் தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும் பழுது படாவண்ணம் பண்பனை நாடித் தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. 8
1865 பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப் புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும் முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே. 9
1866 வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன் அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம் சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. 10
1867 தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம் ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும் ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும் போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. 11 14. அடியார் பெருமை
1868 * திகைக்குரி யானொரு தேவனை நாடும் வகைக்குரி யானொரு வாது இருக்கில் பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும் அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. 1 * சிகைக்குரிய
1869 அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலொடும் அவ்வுல கத்தே * அருந்தவம் நாடுவர் அவ்வுல கத்தே அரனடி கூடுவர் அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. 2 * அருந்தவர் நாடுவார்
1870 கொண்ட குறியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள் உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே. 3
1871 அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும் கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. 4
1872 பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல * மூடத்துள் உள்நின்ற # சோதி ஒருவர்க்கு அறியொணாக் கண்ணின்றிக் காணும் செவியின்றிக் $ கேட்டிடும் அண்ணல் பெருமையை @ ஆய்ந்தது மூப்பே. 5 * மூடகம் # சோதியை உற்றறி வாரில்லைக் $ கேட்கும் @ ஆய்ந்தவர்
1873 இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர் புயங்களும் எண்டிசை போதுபா தாள மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. 6
1874 அகம்படி கின்றநம் ஐயனை ஒரும் அகம்படி கண்டவர் அல்லலில் சேரார் அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம் அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. 7
1875 கழிவும் முதலும் காதல் துணையும் அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப் பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே. 8
1876 என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம் ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணன் ஏரெழுந் தாயே. 9 * நேரெழுத்தாயே; நேரெழுத் தாமே
1877 துணிந்தார் அகம்படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும் அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக் கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. 10
1878 தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப் புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும் பலமிசை செய்யும் படர்சடை யோனே. 11
1879 அறியாப் பருவத்து அரன்அடி யாரைக் குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை குறியார் சடைமுடி கட்டி நடப்பார் மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே. 12
1880 அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள் சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன் அவன்பால் அணுகியே நாடும் அடியார் இவன்பால் பெருமை இலயமது ஆமே. 13
1881 * முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள் எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப் பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. 14 * இன்னிருந்தார் முழு தெண்குணத் தேவர்கள்
1882 சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம் அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் நவயோகம் கைகூடும் நல்லியல் காணும் பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே. 15
1883 மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன் மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன் மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள் மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே. 16 15. போசன விதி
1884 எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர் ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. 1
1885 அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. 2 16. பிட்சா விதி
1886 விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 1
1887 பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில் பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப் பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப் பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே. 2
1888 பரந்துலகு ஏழும் படைத்த பிரானை இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தக மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. 3
1889 வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன் தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம் பொரஇருந் தான்புக லேபுக லாக வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. 4
1890 அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப்படு வாரே. 5
1891 மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும் கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வரஇருந்தாரே. 6 17. முத்திரை பேதம்
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பாலான மோன மொழியில் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்யக் கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே. 1
1893 துரியங்கண் மூன்றுஞ் சொருகுஇட னாகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. 2
1894 சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம் ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. 3
1895 தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால் ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. 4
1896 வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே ஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே. 5
1897 யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம் ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால் ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி யோகத்துக் கேசரி யோகமுத் திரையே. 6
1898 யோகிஎண் சித்தி அருளொலி வாதனை போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 7
1899 துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம் அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும் தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே. 8
1900 மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை கானிக்கும் முத்திரை கண்ட சமயமே. 9 |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |