![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 17 ...
1601 முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர் அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின் முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன் குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 12
1602 வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான் பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 13
1603 அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும் முடிசார வைத்தனர் முன்னை முனிவர் படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக் குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 14
1604 மந்திரமாவதும் மாமருந் தாவதுந் தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ் சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்தன் இணையடி தானே. 15 3. ஞாதுரு ஞான ஞேயம்
1605 நீங்காச் சிவானந்த * ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா படரினும் ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே நீங்கா அமுத நிலைபெற லாமே. 1 * நேயத்தே
1606 ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும் ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர் ஆயத்தில் நின்ற அறிவறி வாரே. 2
1607 தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந் தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை யவனடி சாத்தினால் நானென் றவனென்கை நல்லதொன் றன்றே. 3
1608 வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால் அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே. 4
1609 முன்னை யறிவறியாதஅம் மூடர்போற் பின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான் தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்து தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே. 5
1610 காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங் கோணாத போகமுங் கூடாத கூட்டமும் நாணாத * நாணமும் நாதாந்த போதமுங் காணா யெனவந்து காட்டினன் நந்தியே. 6 * நாதமும்
1611 மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும் மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண் மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே. 7
1612 முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால் வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே. 8
1613 மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி பாலித்த முத்திரை பற்றும் * பரஞானி ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. 9 * பரஞானம் 4. துறவு
1614 இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட் கறப்பதி காட்டும் அமரர் பிரானே. 1
1615 பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே மறந்து மலஇருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே. 2
1616 அறவன் பிறப்பிலி யாரும் இலாதான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே. 3
1617 நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும் நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே. 4
1618 கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும் நாடி வளைந்தது நான்கட வேனலேன் ஆடல் விடையுடை அண்ணல் திருவடி கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே. 5
1619 உழவன் உழஉழ வானம் வழங்க உழவன் உழவினிற் * பூத்த குவளை உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட் டுழவன் அதனை யுழவொழிந் தானே. 6 * பூத்தது வேளை
1620 மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன் நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும் பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே. 7
1621 நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந் தேகப் படம்செய் துடம்பிட மாமே. 8
1622 அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும் இவன்றா னெனநின் றெளியனும் அல்லன் சிவன்றாள் பலபல சீவனு மாகும் நயன்றான் வரும்வழி நாமறி யோமே. 9
1623 தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற் கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. 10 5. தவம்
1624 * ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. 1 * ஒடுங்கு
1625 எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ் செம்மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திருவருள் * பெற்றவர்க் கல்லா(து) இம்மா தவத்தின் இயல்பறி யாரே. 2 * பெற்றவ ரல்லால்
1626 பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பில ராகிய மாதவஞ் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. 3
1627 இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும் பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே இருந்திந் திரனே யெவரே வரினுந் * திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 4 * திருந்துநஞ்
1628 கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன் அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. 5
1629 பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும் மன்னெய்த வைத்த மனமது தானே. 6 (இப்பாடல் 1586-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1630 அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. 7
1631 சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே. 8
1632 தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில் தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில் தவம்வேண்டா * மச்ச கசமார்க்கத் தோர்க்கு தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே. 9 * மச்சகசன் மார்க்கத் 6. தவ நிந்தை * (* சமாதி தூடணம்)
1633 ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற் காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற் சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற் போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 1
1634 கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற் சத்தமும் வேண்டாஞ் * சமாதிகை கூடினாற் சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற் சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. 2 * சமாதியைக்
1635 விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார் விளைவறி வார்பண்டை * மெய்யறஞ் செய்வார் விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. 3 * மெய்யுறஞ்
1636 கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல் தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந் தூடிற் பலவுல கோரெத் தவரே. 4
1637 மனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித் தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார் பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின் முகத்திடை நந்தியை முந்தலு மாமே. 5
1638 * மனத்திடை நின்ற மதிவாள் உருவி # இனத்திடை நீக்கி இரண்டற $ வீர்த்துப் @ புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால் தவத்திடை யாறொளி தன்னொளி யாமே. 6 * மனத்திலிருந்த # மனத்தினை $ வீசி @ நினைத்த விடத்தே நிலைபெறு மாகில், அனைத்துயிர்க்கெல்லாம் அதிபதி யாமே
1639 ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ் சத்தான செய்வது தான்தவந் தானே. 7
1640 இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி மலர்தொட்டுக் கொண்டேன் * வரும்புனல் காணேன் தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந் தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே. 8 * வருமபுலன்; வரும்புலன்
1641 படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க் கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும் இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில் உடரடை செய்வ தொருமனத் தாமே. 9
1642 ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய் ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும் நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. 10
1643 பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங் குழக்கன்று துள்ளியக் கோணியைப் * பல்காற் குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள் இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. 11 * புல்காற்
1644 சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால் சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால் சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ் சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. 12 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
1645 பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம் பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. 1
1646 தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகந் திரிவார் அவிழு மனமும்எம் ஆதியறிவுந் தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. 2
1647 புண்ணிய பாவம் இரண்டுள பூமியில் நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத் தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. 3
1648 முன்னின் றருளு முடிகின்ற காலத்து நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும் பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும் முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 4
1649 சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர் சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர் சிவனரு ளால்வினை சேரகி லாமை சிவனருள் * கூடின்அச் சிவலோக மாமே. 5 * கூறில்
1650 புண்ணியன் எந்தை புனிதன் இணையடி நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது மண்ணவ ராவதும் வானவர் ஆவதும் அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. 6
1651 காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தே ரேறி மயங்கு மவையுணர் நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தே ரேறி யவனிவ னாமே. 7
1652 அவ்வுல கத்தே * பிறக்கில் உடலொடும் அவ்வுல கத்தே # யருந்தவர் நாடுவர் அவ்வுல கத்தே யரனடி கூடுவர் அவ்வுல கத்தே யருள்பெறு வாரே. 8 * பிறந்தவ் # அருந்தவம் (இப்பாடல் 1869-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1653 கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம் மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ் சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம் எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே. 9
1654 நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல வீடும் அளவும் விடுகின் றிலேனே. 10 8. அவ வேடம்
1655 ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. 1
1656 ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும் மான நலங்கெடும் * வையகம் பஞ்ச்மாம் ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே. 2 * அப்புவி யாதலால்
1657 இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம் என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின் மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே. 3
1658 இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப் பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார் கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே. 4
1659 பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப் பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற் பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ் சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. 5
1660 பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர் பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும் உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே. 6 9. தவவேடம்
1661 தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1
1662 பூதி * யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2 * யணிந்து
1663 யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ் சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 3
1664 காதணி குண்டலங் கண்டிகை * நாதமும் ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம் ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4 * நாகமும் நீறும் 10. திருநீறு
1665 நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர் ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. 1
1666 கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே. 2
1667 அரசுட னாலத்தி யாகும்அக் காரம் விரவுகனலில் வியனுரு மாறி நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர் உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 3 11. ஞான வேடம்
1668 ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர் ஞானமுள்ளார்வேடம் இன்றெனில் நன்முத்தர் ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேட நண்ணி * நிற் பாரே. 1 * நிற்போரே
1669 புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை நன்ஞானத்தோர்வேடம் * பூணார் அருள்நண்ணித் துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 2 * பூண்பர் அருள் நண்ணத்
1670 சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும் அவமான சாதனம் ஆகாது தேரில் அவமா மவர்க்கது சாதன நான்கும் உவமான மில்பொருள் உள்ளுற லாமே. 3
1671 சுத்தித் திரிவர் * கழுவடி நாய்போற் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 4 * கழுகடி
1672 அடியா ரவரே யடியா ரலாதார் அடியாரு மாகார்அவ் வேடமு மாகார் அடியார் சிவஞான மானது பெற்றோர் அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 5
1673 ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந் தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம் ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே. 6
1674 ஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி தானத்தில் வைத்த தனியால யத்தனாம் மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம் ஏனைத் தவசி இவனென லாகுமே. 7
1675 * தானன்ற தன்மையுந் தானவ னாதலும் ஏனைய வச்சிவ மான இயற்கையுந் தானுறு சாதக முத்திரை சாத்தலு மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. 8 * தானன்றித் 12. சிவ வேடம்
1676 அருளால் அரனுக் கடிமைய தாகிப் * பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர் தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1 * பொருளார்ந் தன்னுட பொற்பத னாடி
1677 உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா உடல்கழன் றால்வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார் கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே. 2
1678 மயலற் றிருளற்று மாமன மற்றுக் கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத் தயலற் றவரோடும் தாமே தாமாகிச் செயலற் * றிருப்பார் சிவவேடத் தாரே. 3 * றிருந்தார்
1679 ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின் வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத் தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 4 13. அபக்குவன்
1680 குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் * கொள்வார் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே. 1 * கொள்வர்; கொள்வோர்
1681 மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி நினைப்பின் அதனின் நிழலையுங் காணார் வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார் புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 2
1682 ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள் வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந் தாய்முலை யாவ தறியார் தமருளோர் ஊனிலை செய்யும் உருவிலி தானே. 3
1683 வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின் பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. 4
1684 பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை * யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம் விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற் பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே. 5 * பஞ்சச்
1685 தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ் சிவத்திடை நின்றது தேவர் அறியார் தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம் பவத்திடை நின்றதோர் பாடது வாமே. 6
1686 கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும் தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும் பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் என்றிவை இறைபால் இயற்கை அல்லவே. 7
1687 விடிவ தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார் கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே. 8
1688 வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப் பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத் தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. 9
1689 மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான் துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான் பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான் அன்னிய னாவன் அசற்சீட னாமே. 10 14. பக்குவன்
1690 தொழுதறி வாளர் கருதிகண் ணாகப் பழுதறியாத பரம குருவை வழியறி வார்நல் வழியறி வாளர் அழிவறி வார்மற்றை யல்லா தவரே. 1
1691 பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 2
1692 பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச் சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. 3
1693 கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள * பொருளுடல் ஆவி யுடன்ஈக எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று தெள்ளி யறியச் சிவபதந் தானே. 4 * உடல்பொருள்
1694 சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு ஓதிய நாளே உணர்வது தானென்று நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது ஆதியும் ஏதும் அறியகி லானே. 5
1695 தொழிலார மாமணித் தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே விழலார் விறலாம் வினையது போகக் கழலார் திருவடி கண்டரு ளாமே. 6
1696 சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி சாத்தவல் லானவன் சற்சீட னாமே. 7
1697 சத்தும் அசத்துமெவ் வாறெனந் தானுன்னிச் சித்தை யுருக்கிக் சிவனருள் * கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச் சத்தியில் இச்சைத் தகுவோன்சற் சீடனே. 8 * கை காட்டிப்
1698 அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா அடிவைத்த மாமுடி மாயப் பிறவி அடிவைத்த காய அருட்சத்தி யாலே அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. 9
1699 சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல வாராத காதல் குருபரன் பாலாகச் சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன் ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. 10
1700 உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக் குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண் டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. 11 |