முன்னுரை மீன் பிடிக்கும் தொழில், மனிதன் மண்ணில் தானியம் விதைத்து உண்டு வாழ்வதற்குப் பழகுவதற்கு முன்பே நடைமுறையிலிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இன்றும் கடற்கரையோரங்களிலும் வேறு நீர் நிலைகளின் கரைகளிலும் வாழும் மக்களின் உணவுப் பழக்கங்களை ஆராய்ந்தால், நீர் வாழ் உயிரினங்களே அவர்கள் உணவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். உணவுப் பழக்கத்தைப் பொறுத்தே, தொழில், வாழ்வு, கலை, பண்பாடு எல்லாம் அமைந்து விடுகின்றன.
பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கமாகிய அக்காலத்தில், பாண்டிய நாட்டின் தென்பகுதி முகமதியர் படையெடுப்பின் காரணமாக ஆட்டங்கண்டு, சிறு சிறு குறுநில மன்னர்களின் ஆட்சியிலே பிளவுபட்டுக் கிடந்தது. கடல் ஆதிக்கம் குறித்து, தமிழ்நாட்டு வாணிபத்திலும் அரசியலிலும் செல்வாக்குப் பெற்று வந்த முகமதியர்களுக்கும், பாண்டியப் பேரரசு வீழ்ந்த பின் தம் செல்வாக்கை இழந்த பரதவருக்கும் இடையே வேறுபாடுகளும் பகைமையும் தோன்றின. இந்நிலை முற்றி, பூசல்களும் தகராறுகளும் வன்முறையில் கொண்டு வந்து விடவே, போர்த்துகீசியரிடம் பரதவர் உதவி கோரும் சந்தர்ப்பமும் வாய்த்தது. கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வந்திருந்த போர்த்துகீசியர் இவ் வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மெல்ல மெல்ல, கோவாப் பிரதேசத்துடன், தெற்கே கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பரதவ மக்கள் அனைவரையும் கிறிஸ்தவ மறை தழுவச் செய்தனர். இவ்வாறு சமயம் மாறியவர், பெயரளவில் கத்தோலிக்கராக இருந்தாலும் நடைமுறையில் இந்துக்களாகவே இருந்திருக்கின்றனர். கி.பி. 1542 ஆம் ஆண்டு புனித சவேரியார், யேசு சபைக் குருவாக, பரத குல மக்களிடையே பணியாற்றி வந்த பின்னரே இவர்கள் முறையாகக் கிறிஸ்தவ சமயத்தினராக வாழத் தலைப்பட்டனர். வேற்று நாட்டிலிருந்து, அந்நியக் கலாச்சாரங்களை உள்ளடக்கியதாக இந்திய மக்களிடையே வேரூன்றி நிலைக்க வந்த சமயத் துறையில், அந்நாளைய யேசு சபைப் பெரியோர்களாகிய புனித சவேரியார், ஹென்றிக்கஸ் அடிகளார் ஆகியோர், இவ்வெளிய மக்களுக்காக இந்தியப் பண்பாடுகளைக் கொண்டதாகவே மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜனவரி முதல் தேதியை, தை முதல் நாள் என்று கொள்ளுமாறு காலக் கணிப்பு நாட்களை அமைத்தும், தமிழைக் கற்று, கிறிஸ்துவ சமயப் பெரியாரின் வரலாறு போன்ற நூல்களை இப்புதிய சமயக்காரருக்காக இயற்றியும் ஹென்றிக்கஸ் அடிகளார் அருந்தொண்டாற்றியிருக்கிறார். இன்றும், இக்கடற்கரையைச் சார்ந்த பரதவர் கிராமங்களில், கோயில்களில் தேர் - திருவிழாக்கள் போன்ற பண்டிகைகள், மணச்சடங்குகளில் இடம் பெற்றிருக்கும் சில பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினால், இந்தியப் பண்பின் வேர் நிலைத்திருக்க, சமயம் மட்டுமே மாற்றம் பெற்றிருப்பதை உணரலாம். கோயிலில் நேர்த்திக் கடன் கொடுப்பதிலிருந்து மொட்டையடித்துக் காது குத்துவது வரையிலும், கிறிஸ்துவ சமயம் இந்தியம் தழுவி இருப்பது கண்டு வியப்புத் தோன்றுகிறது. வடமாநிலங்களில் அந்நியர் படையெடுப்பின் காரணமாக இடம் பெயர்ந்து தென் பகுதிகளில் வந்து குடியேறினாற் போன்றோ, தெற்கு மாநிலங்களிலிருந்து பஞ்சம் காரணமாகப் பிழைப்பை நாடி வடக்கு நகரங்களில் சென்று குடியேறினாற் போன்றோ, இப்பரதவ மக்களுக்குத்தமக்கு வாழ்வளிக்கும் கடல் துறைகளை விட்டு இடம் பெயர்ந்து செல்லும் அவசியம் ஏதும் நேரிட்டிருக்கவில்லை. எனவே, போர்த்துகீசியரின் ஆதிக்கம் நாட்டை விட்டுச் சென்று வெகு நாட்களான பின்னரும், நாட்டின் அரசியல் சமுதாயக் களங்களில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்ட பின்னரும், இக்கடல் துறை மக்களின் வாழ்க்கை முறையிலும் நம்பிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் வந்திருக்கவில்லை. கடலை நம்பி, உடல் வலிமையை நம்பி வாழும் இவர்களிடையே, உலகின் ஏனைய பகுதிகளில் எய்திவிட்ட பல நூற்றாண்டுகளின் அறிவு மலர்ச்சியும், தொழில் நுணுக்க முன்னேற்றங்களும், அண்மைக்காலம் வரையிலும் கேள்விப்பட்டிராத செய்திகளாகவே இருந்திருக்கின்றன. கடல் தொழிலில் இயற்கையோடிணைந்த வாழ்வில் உரம் பெற்று விளங்கும் இப் பரதவரின் கட்டுமரங்கள் சென்னையைச் சார்ந்த கடற்துறைகளில் உள்ள தொழிலாளிகளின் கட்டுமரங்களைக் காட்டிலும் நீண்டும் அகன்றும் ‘கொங்கை’ எனப் பெறும் கீழ்ப் பகுதியில் இரு சிறகுகள் போன்று அழகிய செதுக்கு மரங்கள் இணைக்கப் பெற்றும் விளங்குகின்றன. இக் கட்டுமரங்கள் மூன்று கட்டைகளால் பிணைக்கப் பெற்றவை. இதில் பாய் பொருத்திக் கொண்டு ஆழ்கடலுக்குச் சென்று அந்நாளைய ‘தட்டுமடி’ என்ற கயிற்று நூல் வலை போட்டு, நாற்பது, ஐம்பது மடங்கு எடையுள்ள சுறா மீன்களைப் பிடித்து வந்த நிகழ்ச்சிகளை இன்றும் முதியவரான பரதவர் நினைவு கூறுகின்றனர். அக்காலத்தில், சுறா வகை மீன்களின் செதில்கள் - வால் பகுதிகளை (துவி என்று இவர்கள் வழங்குகின்றனர்) கோயிலுக்கு வரியாக விட்டுக் கொடுத்துவிடும் வழக்கம் இருந்தது. இப்பொருள்கள், கீழை நாடுகளான ஜப்பான், மலேயா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அந்நியச் செலாவணியை ஈட்டித் தரத் தொடங்கியதும், கழிக்கப் பெற்ற ‘துவி’க்கு மீனை விட அதிக மதிப்பு உண்டாயிற்று. கோயிலுக்கு துவியைத் தவிர வேறு வகையிலும் பரதவராகிய கடல் தொழிலாளிகள் வரி செலுத்தி வந்தனர். 1960-க்குப் பிறகு, சில தொழிலாளர், விழிப்புணர்ச்சி பெற்று, கோயில் வரியை எதிர்க்கத் தொடங்கினர். 1965-66 கால கட்டத்தில், சுறா மீன் துவிகளைக் கோயில் வரியாக விட்டுக் கொடுப்பதில்லை என்று ஒரு போராட்டத்தை ‘இடிந்தகரை’ என்ற ஊரில் உள்ள மக்கள் நடத்தினர். அதன் பயனாகச் சில பரதவ மக்கள் சில கிறிஸ்தவக் குருமாரின் கோபத்துக்கு ஆளாகி திருச்சபையிலிருந்து நீக்கம் செய்யப் பெற்றதும், பின்னர் ‘விசுவ ஹிந்து பரிஷத்’ என்ற அமைப்பு அவர்களை இந்துக்களாக மாறச் செய்ததும் வரலாற்று உண்மைகளாகும். அண்மைக் காலங்களில், இறால் மீன் ஏராளமாக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பொருளானதும், அரசு இத் தொழிலை இயந்திரமயமாக்குவதற்கு நல்கும் ஆதரவும் உடல் பாடுபடும் மீனவரான பரதவ மக்கள் முன்னேற்றம் காண உதவவில்லை. ஒரு நாவல் என்பது, நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனை கதைதான்; ஆனால் மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளிலும் நிலைகளிலும் ‘பிரத்தியட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அநுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு நான் இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன். இவ்வாறு புதிய புதிய அநுபவங்களை நாடி நான் புதிய களங்களுக்குச் செல்கிறேன். அவ்வாறு இந்த நவீனத்தை நான் உருவாக்குவதற்கு, முதன் முதலில் எனக்குத் தூண்டுதலாக இக்களத்தை நான் தேர்ந்து கொள்ளச் செய்தவர், பேராசிரியர் திரு.சிவ சுப்பிரமணியம் (சிவம்) அவர்கள். பின்னர், ஒவ்வொரு கட்டத்திலும் உவந்து எனக்குப் பல செய்திகளைக் கூறியும், உடன் பயணம் செய்தும் உதவியளித்த அவர், மணப்பாடு, உவரி போன்ற கடற்கரை ஊர்களில் நான் தங்கிச் செய்திகள் சேகரிக்கவும் பல நண்பர்களை எனக்கு அறிமுகமாக்கி வைத்தார். இத்தகைய பேருதவிக்கு எவ்வாறு நான் நன்றி தெரிவித்துக் கொள்வேன்? வெறும் சொற்களாகி விடுமோ என்றஞ்சுகிறேன். தூத்துக்குடி, அமலிநகர், மணப்பாடு, உவரி, புன்னைக்காயல், ஆலந்தலை, போன்ற பல ஊர்ச் சோதரரும் சோதரியரும் மனமுவந்து நான் கேட்ட விவரங்களுக்கெல்லாம் தகவல் தந்து உதவியிருக்கின்றனர். மீன் என்றாலே விலக்கப்பட வேண்டியதொரு சொல் என்ற பழக்கத்தில் வளர்ந்த நான் கவிச்சி வாடையிலேயே மூழ்கினாற் போன்று சில ஆண்டுகள் கோவாவில் வாழ்ந்திருக்கிறேன். என்றாலும் நெருங்கிப் பழகித் தொழிலைப் பற்றிய அறிவும், நுணுக்கங்களும் தெரிந்து கொள்ள, அவர்களிடையே சில காலம் ‘வாழ்ந்து’ இருக்க வேண்டியது அவசியமல்லவா? மணப்பாட்டில் நான் தங்கியிருக்கையில் அன்றாடம் காலையில் கடற்கரை மீன்வாடியில் சென்று நான் நிற்கையில் திரு. பிச்சையா வில்லவராயன் அவர்களும், திரு.குருஸ் பர்னாந்து அவர்களும் ஒவ்வொரு வகை மீனையும் கொண்டு வந்து எனக்குக் காட்டிப் பெயரும் விவரங்களும் எடுத்துக் கூறியதை எவ்வாறு மறக்க இயலும்! தொழில் செய்யும் இளைஞர் எல்லோருமே எனக்கு உற்ற சோதாரராகப் பழகியதையும் மிகக் கருத்துடன், இரவானாலும் எனது இருக்கை தேடி வந்து, விட்டுப் போன செய்தியை அக்கறையுடன் எடுத்துக் கூறியதையும், நினைக்குந்தோறும் நெஞ்சு நெகிழ்ந்து போகிறேன். எனது நாவல் எழுதும் முயற்சிகளில் இத்தகைய மனித உறவுகள் என்றுமே மறக்க இயலாப் பசுமையுடன் நெஞ்சத்தில் நிலைத்திருப்பவையாகும். இவர்களுடைய பேச்சுவழக்கை ஆராய்ந்து அறிவது, மிகவும் உளம் கவர்ந்ததோர் அநுபவமாக அமைந்தது. இந்நாள் நம் பேச்சு வழக்கிலில்லாத தனித்தமிழ் சொற்களும் போர்த்துகீசியம், சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து வந்த சொற்களும் கலந்ததோர் தனி வழக்கு மொழியைப் பேசும் பரதவ சோதரர் தோற்றத்தில் உறுதியும் உரமுமாகக் காட்சியளித்தாலும் சிறிது பழகும் போதே கவடில்லாத குழந்தை உள்ளம் கொண்ட இயல்பினர் என்று தெரிந்து கொள்ளலாம். இயந்திரமயமாக்கும் படகுத் தொழில் இவர்களுடைய வண்மைக்கே உலை வைப்பதாகக் கருதுகின்றனர். இப்பிரச்னைக்கு எத்தனையோ வகையாகத் தீர்வு காண யோசனைகள் கூறப்பட்ட போதிலும், தீர்வு எளிதாக இல்லை. மீன்பிடித் தொழில் படகுச் சொந்தக்காரர் கையிலும் அதற்கு வேண்டிய பணம் முடக்குபவர் கைகளிலும் இருக்கும் வரையிலும் பாடுபடும் கடல் தொழிலாளிகளின் நியாயமான பிரச்னைகள் தீர்வு காணுமா என்பது ஐயத்துக்குரியது. வலிமையுள்ள பிள்ளையே மேலும் மேலும் அன்னையின் சாரத்தை முட்டி முட்டி அருந்த வாய்ப்பிருக்கிறது. இக்காட்சிகளைக் கண்ட பின்னர், எனது கற்பனையிலே உயிர்த்த மக்களை நான் நடமாடச் செய்து இக் கதையைப் புனைந்துள்ளேன். உண்மையான நிகழ்ச்சிகள் ஆதாரமான புள்ளிகளே; கோலங்கள் முழுதும் கற்பனையே. இறுதியாக நான் எனக்குப் பேருதவி புரிந்த பல நண்பர்களுக்கும் சோதர சோதரியருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துக் குளித்துறை வரலாறு பற்றிய தகவல்களை எனக்களித்து உதவிய பங்குத்திரு அவர்களுக்கும், உவரியூரிலும், மணப்பாடு, ஆலந்தலை, இடிந்தகரை, அமலி ஆகிய இடங்களில் அன்புடன் எனக்குப் பல தகவல்களையும் தந்துதவிய நண்பர்களுக்கெல்லாம் நான் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலைப் பெருமளவு வரவேற்று நல்ல மதிப்புரைகளையும் விமரிசனக் கட்டுரைகளையும் நல்கி பல ஆய்வாளரும் இலக்கிய நண்பர்களும் என்னை உற்சாகப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். வழக்கமாக எனது நூல்களை வெளியிட்டு நல்லாதரவளிக்கும் தாகம் பதிப்பகத்தார் இந்நூலின் மூன்றாம் பதிப்பையும் இப்போது கொண்டு வந்துள்ளனர். சிறந்த முறையில் மீண்டும் இந்தப் பதிப்பைக் கொண்டு வந்திருக்கும் வெளியீட்டாளர் திரு.கண்ணன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நூலை வாசகர் முன் வைக்கிறேன். வணக்கம். ராஜம் கிருஷ்ணன். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|
எழுகதிர் ஆசிரியர்: ஜெயமோகன்வகைப்பாடு : சிறுகதை விலை: ரூ. 360.00 தள்ளுபடி விலை: ரூ. 350.00 அஞ்சல்: ரூ. 50.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
அமிர்தம் ஆசிரியர்: தி. ஜானகிராமன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|