அத்தியாயம் - 9

     கோயிலின் முன் பூவரச மரத்தடியில் வைத்துக் கூட்டிய புது மரத்துக்கு ரொசாரியோ பூசை போட்டு அன்று நீரி இறக்கினான்.

     “இருதயம் மாமோ, ஒங்கக்க ஆசீர் வேணும். மரத்தைத் தொட்டு ஜபம் சொல்லும் மாமோ!” என்றான்.

     “நானின்னம் தொழிலுக்குப் போவ இல்ல. இப்பம் ஒடம்பு பெலமாத்தானிருக்யு. முதமுதல்ல ஒம்மரத்தில நான் தொழில் செய்ய வாரம். நாள அமாசி. பருவலை எடுத்திட்டு வா. வெள்ளாப்புத் தொழில்ல போவலாம்” என்றன. ரொசாரியோவிடம் ‘பீஸ்வலை’ எனப்படும் அயல் நாட்டு வலை இருக்கிறது. கண்ணிகள் ஒரேயளவாக இருக்கும். கச்சத்தீவுப் பக்கம் கடலில் யாரோ வியாபாரியிடம் வாங்கினானாம். இழுப்பதற்கு இலகுவானது; பட்ட மீன் நிச்சயமாகத் தப்ப ஏலாது.

     அன்றிரவு அப்பன் நெடுநேரம் ஜபம் சொல்கிறார்.

     நள்ளிரவைக் கடந்ததுமே அவருக்கு விழிப்பு வந்து விடுகிறது. சிறிது நேரம் கடல் அலைகளைச் செவியுற்றவாறே படுத்திருக்கிறார்.

     திடீரென்று மனசில் ஓர் ஐயம் தட்டுகிறது. புறக்கடைக் கதவைத் திறந்து கொண்டு கீழிறங்கி வானைப் பார்க்கிறார்.

     சூனியம் நிலவுவது போல் ஒரு பிரமை. ஆறாங்கோட்ட வெள்ளியில்லை... ஒரு வெள்ளி கூட வானில் தெரியவில்லை. வானம் ஸல்லென்றிருக்கிறது...

     கதவைத் தாழிட்டுக் கொண்டு வந்து கட்டிலில் உட்காருகிறார். மடிப்பெட்டியைத் தேடி எடுத்துப் புகையிலையைச் சிறிது கிள்ளிப் போட்டுக் கொள்கிறார்.

     மரியான் வழக்கம்போல் மூன்று மணி சுமாருக்கு எழுந்து விடுகிறான். ஆத்தா அடுப்பைச் சுள்ளியைப் போட்டு எரிய விடுகிறாள்.

     “லே, மக்கா, இன்னிக்குக் கடலுக்குப் போகாண்டாம்!” அப்பனின் குரல்தான்.

     “ஏ...?”

     “ஏண்ணா... கடல்... காத்து செரியில்ல... மானம் சரியில்ல...” மரியான் வாயிலில் சென்று நின்று பார்க்கிறான்.

     “பூ... இத்தெக்காட்டியும் ஒண்ணுமே தெரியாம இருந்தன்னிக்குக் கூடப் போயிட்டு வார இல்ல? முத முதல்ல, காச்சலாக் கிடந்தப்புறம் நீங்க இன்னிக்குத் தொழிலுக்குப் போகாண்டாம். அதுக்காவ என்னிய ஏம் போகண்டாமிண்டு சொல்லணும்?...”

     “என்னியலே, நான் சொல்லுதே. நீ மதியாத போவே? காத்துல... ஒரு அமுக்கம் இருக்குலே...”

     “ஒரு புல்லுமில்லிய. கடல் எப்பம் போலதா கூப்பிடுது...

     அவர் வெளியே அவனைத் தொடர்ந்து வந்து வானில் கை உயர்த்திக் காட்டுகிறார்.

     “அதப்பார். ரிஸ்க மேகம் போட்டிருக்கி...”

     “என்னக்கு ஒரு மயிரும் தெரில. அமாசி... மீன்படும் நாள், போகாண்டாமிண்டு சொல்லாதீம்...”

     “லே, அவசுரப்படுதே! செத்தப் பாத்திட்டுப் பொறவு போலே...”

     “உக்கும். இவுரு நெட்டமா ஒண்ணு நெனச்சிட்டா அதுக்குக் குனியணும். என்னா எளவு? காத்து வழக்கம் போல அடிக்கி, கரை வழக்கம் போல இருக்கு...”

     “ஆறாங்கோட்டம், குருசு ஒண்ணுமில்ய பாருலே...”

     “அப்பிசி மழக்காலம்; இந்துக்க தீவாளி எறியுதாங்க. மழக் காலத்துல ஆறாங்கோட்டமும் குருசு வெள்ளியும் எங்ஙனக் காணும்? நீர் இன்னிக்குக் கடல் போகண்டாம். சும்மா பெனாத்தாதீம். கெடந்து ஒறங்கும்...”

     ஆத்தா கோபித்தண்ணீர் கொண்டு வருகிறாள். கருவாடு வறுக்கச் சட்டியை அவள் போடுவதைப் பார்த்து மரியான், “சோறு ஒண்ணும் வேணாம். பொள்தோடு வந்திருவ. இவுரு வேறு கலக்கிவுடுதாரு. ஆழக்கடல் போக இல்லை...” என்று கூறுகிறான்.

     பீற்றரை ஆத்தா எழுப்புகிறாள். “வே, மிதப்புக் கட்டயத் தூக்கிட்டுவா...”

     மரியான் முன்னே செல்கிறான். கடற்கரையில் இன்னும் பலர் வந்திருக்கவில்லை. மரங்கள் பெரும்பாலும் கரையில்தான் நிற்கின்றன.

     இவர்கள் மரத்தின் பக்கம்... ஜான் வந்துவிட்டானா என்ன? ஜானில்லை, நசரேன்!

     “மாப்ளே?... எப்பம் தூத்துக்குடிலேந்து வந்தே...?”

     “நேத்துத்தான் மச்சான்...”

     “நீ வர மாட்டேண்டு நினச்சம் மாப்ள...”

     மரியானுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

     “ரொம்ப நாளாயிட்ட மாதிரி இருக்கி. ஆவணில போன... பொரட்டாசி அற்பிசி... தொழில் எப்படி இருக்கு?...”

     “இருக்கு... காரல்தான் புடிக்கிறம்; கொல்லத்துப் பக்கம். கடன் அவதி கெட்டிச் சாப்பாட்டுச் செலவுக்குச் சரியாப் போவுது. றாலுக்கு அம்மாட்டொண்ணும் அவங்க சொன்னாப்பல இல்லிய.”

     “அப்பிடியா?”

     “போவப் போவத்தாந் தெரியும்...”

     “துவிக் குத்தவை எடுத்தவருக்கு, துவி அஞ்சுமீன் இதெல்லாம் போடாதவருக்கு, அம்பது பேருக்குத் தலைக்கி அறுவது ரூபாவும் துவிக்கிரயமும் அவுராதம் கெட்டணுமிண்டு கோயில்ல சாமி சொல்லிச்சாமே? ஆத்தா சொல்லிச்சி!”

     “சொல்லிற்றுப் போட்டம்...”

     “அவுராதம் கெட்டலிண்ணா, கோயில் சம்பந்தப்பட்ட, சாமியார் சம்பந்தப்பட்ட எதும் நடக்க ஏலாதாம்...”

     “பயங் காட்டுறாரே...”

     “நமக்குத் துவி பத்து நூறு ரூபாய்க்கிக் கிடைச்சிச்சாமே?”

     “ஆமா...?”

     அவர்கள் மரத்தில் வலைகளை வைத்துக் கட்டிவிட்டு, பாய்த்தண்டு கொம்பு, எல்லாமாக மரத்தில் ஏறித் தள்ளுகின்றனர். பீற்றர் தள்ளி விடுகிறான். ஜான் வரவில்லை.

     மரம் கரையை விட்டு அகன்று செல்கிறது. பார் தடையையும் கடந்து செல்கின்றன. நசரேன் ‘மாதாவே’ என்று தலைத் துணியை அவிழ்த்துக் கொள்கிறான். பிறகு பாய்த்தண்டை ஊன்றிப் பாயை இழுத்துக் கட்டுகின்றனர்.

     “லாஞ்சில இம்மாட்டு உசிரைக் குடுக்காண்டாமில்ல மாப்ள?”

     “ஆமா...? மாமெம்பய தோமை இன்ஜின் ஓட்றா, காரோட்டுற மாதிரி, ஆழக்கடலுக்குப் போவம். வாரத்துக்கு டிசில் நூறு ரூபாய்க்குச் செலவளியிது. பெரி... டிரம்மு டிசில் ஆனா, புன்னக்காயல் பக்கம், தொளில் செய்ய வந்தா கொன்னிடுவானுவ. அல்லாம் அம்மாட்டுக்குக் காட்டமா இருக்கானுவ!”

     “இங்கேயெல்லாம் வள்ளம் வச்சித் தொழில் செய்ய தோதில்ல. மணப்பாடு, புன்னக்காயல், வீரபாண்டி, குலசைண்டு நிக்யணும். லாஞ்சி வந்தா இங்கியும் பொழக்க விடமாட்டானுவ...”

     மரம் மடைப்பழுப்புக்கு மேலே மிதக்கிறது. நீரோட்டம் கிழக்கில் இருந்து மேற்கே - கரையை நோக்கிய ஓட்டமாகத்தான் படுகிறது. ஆழ்கடலுக்கு நசரேன் மரத்தைச் செலுத்துகிறான். தண்ணீர் தெளித்து ‘கவுர’டிக்கிறது. மினுங் மினுங்கென்று மத்தாப் பூச்சுடர் பொரிவது போன்று மீன் கூட்டங்கள் தெரிகின்றன. மனிதனின் ஆசை மொட்டுக்களை மலரச் செய்யும் காட்சி. அவசரமாக வலைகளை அவிழ்த்துப் பிரித்து வளைத்துப் போடுகின்றனர். ‘கல்யாண வீட்டில்’ கும்மாளியிடுவது போன்று மீன்கள்...!

     ஆழ்கடலில்தான் எத்தனை எத்தனை மீன்கள்! கோடியில் ஒரு பங்கும் கூட இவர்கள் மலைகளில் முழுதும் நிறைந்தாலும் ஆகாது! கடல் நாச்சியின் பரந்த இதயம்... இவர்களின் வாழ்வும் மேன்மையும் அதில் இருக்கின்றன. அலைநீர் வாடி அடிக்கையில் கொஞ்சி விளையாடும் மகிழ்ச்சி இசைகிறது. பொழுது புலர்ந்து விட்டது. மடிப்பெட்டியைக் கேட்டுவாங்கி நசரேன் வெற்றிலை போடுகிறான்.

     ஜனவரிஉடன் லில்லிப்பெண் கலியாணத்தை முடித்து விட வேண்டும். நசரேன் மலையாளக் கரையில் தொடுப்பு எதுவும் இல்லாமலிருந்திருப்பானா?... பரவன்... கல்யாணமில்லையென்றால் நங்கூரமில்லாத வள்ளம் போல்...

     மரியான் எண்ணங்களைத் துரத்திப் பிடிக்கையில் நசரேன் பேசுவது அலைகளுக்கு மேல் செவியில் விழுகிறது.

     “மாப்ள... நான் லில்லிப்பொண்ணைப் பார்த்தேன்...” திடுக்கிட்டாற் போல் தோன்றினாலும் மரியானின் இதழ்களில் நகை மலருகிறது. “எங்கிய?”

     “அவ தூத்துக்குடிக்கி வந்திருந்தா. சின்னக் கோயில்ல, ஸிஸ்டர் கூடப் பார்த்தே. எம்மாட்டு வளத்தி...டா?”

     “பொறவு...”

     “என்னிய பொறவு? அம்புட்டுதா. சிரிச்ச, அவ சிரிச்சா. பத்தாவதில ஒரு பரிட்சையில் போயிற்றாம். மறுக்க எளுதிருக்யாண்டு சொன்னா. எப்பம் ஊருக்கு வார, பண்டியலுக்கு வருவியாண்ணு கேட்டே. ‘வாரனோ, இல்லியோ’ண்ணா...”

     “சினிமாவுக்குக் கூட்டிப் போனியா மாப்ள...?”

     “ம்... போயிற்று வாருமிண்ணு, ஸிஸ்டர் கூட்டியனுப்பி வச்சா... ஆளப்பாரும்! அந்தப் பொண்ணு ஒரு பேச்சுப் பேசு முண்ண கால்ல கஞ்சிய ஊத்திற்றாப்பல பறந்தா... ஒன்னக்க ஆத்தா கூட வந்து என்னக்க ஆத்தா கிட்டக் கேட்டாளாம். கலியாணமிண்ணா சீதனம், பவன் எல்லாம் எம்மாட்டுண்ணு. ஆத்தாளுக்கு நா வாக்குக் குடுத்திருக்யேண்டு தெரியாது...”

     “மாமெ மவ... உன்னக்க மாம மவ எப்டீயிருக்யா?”

     “நா ரெண்டுதபா தா ராத்திரியிக்குப்போனே. அவ அழவாத்தானிருக்கா. அத்தாண்ணு கூப்பிடுவா. கோபி பீங்கான்ல கொண்டாருவா. வூடு மங்களா போல இருக்கு. ஆனா, எனக்கு என்னியோ போல இருக்யு. லில்லிப் பொண்ணக் கட்டதா ஆச. பண்டியலுக்கு அவ இந்தக் கரய்க்கு வந்தா வசப்படுத்திடுவம் மச்சான்...” குறும்பாகச் சிரிக்கிறான்.

     புகையிலைச் சாற்றை உமிழ்ந்து விட்டு, வலையிருக்கும் திசையைப் பார்க்கிறான் நசரேன். சட்டென்று வானத்தையும் பார்க்கிறான். “மச்சா, ஒரு மாதிரி அமுக்கமா இல்ல? காத்து... கெட்டிச்சிப் போட்டுக் குமுங்கினாப்பல... இல்லிய?...”

     மரியானுக்கு மனதில் குளிர்திரிபோல் அச்சம் எழும்புகிறது. “போடா, மட்டிப் பயலுவளா? நான் சொல்லுதேன், நாப்பது வருசமா கடல்ல போறவ... காத்து அமுங்கிக் கெடக்கு. இப்பிடி இருந்திச்சின்னா சுழலி கெளம்புமிண்ணு... கேட்டியா...” என்று அப்பனின் குரல் அலைகளுக்கு மேல் மிதந்து வந்து காதில் விழுகிறது.

     கடலில் வழக்கம் போல் நிறைய மரங்கள் மிதக்கவில்லை என்பதையும் அப்போதுதான் உணருகிறார்கள்.

     இவனுக்கும் அலைகளே அமுங்கி விட்டாற்போன்று பிரமை தட்டுகிறது. இத்தனை அமுக்கமும் பீரிட்டுச் சுழலியாகக் கடலைக் கடைந்தெடுக்கும் தலைத்துணிகளை கைகளில் வைத்துக் கொண்டு, மாதாவையும், அந்தோணியாரையும் நினைத்து மன்றாடிப் பிச்சை கேட்கின்றனர். பிறகு வலைகளை இழுக்கத் தொடங்குகின்றனர். வலைகள் மிகப் பளுவாக, மீன்கள் நிறையப் பட்டிருப்பதை அறிவிக்கின்றன. கடலோட்டம் அவர்களை எதிரிட்டுத் தள்ளாமல் இழுத்த இழுப்பில் பெருஞ் சுமையாக வருகின்றன. எல்லாம் சீலா மீன். பத்துநூறு போல் ஒவ்வொன்றும் மூன்றடி போலும் மேலும் நீளமாகவும் கொழுவிய சீலா - கறிக்கு எடுத்த மீன். இது கனவோ? அல்லது பிரளய காலத்துக்கு முந்திய பேறுதானோ, அவ்வளவு வலைகளிலும் வெள்ளிப்பாளங்களாக, பொரி மத்தாப்புக்களாக மீன்கள். இத்தனையும் கொண்டுபோய்க் கரையில் சேர்க்க வேண்டுமே?... கவலைகளின் கனம், வளமையின் மகிழ்ச்சியின் ஆவல்களையும் கனவுகளையும் அழுத்தி விடுகின்றன. அவர்கள் வலைகளை இழுத்து மரத்தோடு வைத்துக் கட்டுமுன் காற்று சுழன்றடிக்கத் தொடங்குகிறது.

     “வாங்கலெடுக்கு... அந்தோணியாரே! எங்களைக் கரை சேரும்...”

     பாயை இறக்க முயலுகின்றனர். அது இலகுவாக இருக்கிறதா? யாரோ பெருமத்துப் போட்டுக் கடலைக் கலக்குவது போன்று கும்மாளியிடத் தொடங்குகின்றன அலைகள். பாயைத் தறி கொட இழுத்து வளைக்கின்றன.

     “அப்பச்சி பேச்சைக் கேக்காம வந்தம் மாப்ள...”

     அவன் பேச்சொன்றும் செவிகளில் விழவில்லை. அவர்கள் பாய்த் தண்டைச் சுருட்டுமுன் நீர் விசையுடன் அடித்து மரத்தை மறிக்கிறது. நசரேன் கடலில் நழுவி மூழ்குகிறான். இவ்வளவுக்கு மீன்கள் படும்போதே... இது சரியாகத் தோன்றவில்லை. சூழும் இருளுக்கு முன் அந்தியம் பொழுதின் செவ்வொளி மயக்கம் அழகாய் இருப்பது போல்... அலைவாய்க் கடலிடம் உதாசீனமாக இருக்கலாமா? கடலுக்கு ஆத்தாளின் கருணையுமுண்டு; அலட்சியமாக இருந்தால் அற்ப மனிதனைச் ‘சங்காரிக்க’வும் செய்யும்.

     மரியானின் கண்களிலும் முகத்திலும் உப்புநீர் மோத, மரம் அலைகடல் துரும்பாய் நிலையின்றிச் சுழல்கிறது. நசரேன் முறிந்து போன பாய்த்தண்டைப் பற்றிக் கொண்டு வந்து மரத்தில் மீண்டும் தொற்றிக் கொள்கிறான். மரியான் மரத்தோடு மரமாகத் தன்னைப் பிணைத்துக் கொள்ளப் போராடுகிறான். வலைகளோடு - மீன்களோடு ஒரு கடல் தொழிலாளியின் இறுதி இலட்சியம் இதுதான் என்பதுபோல் - மரம் அவனோடு தூக்கி எறியப்படுகிறது. அலைகள் உயர்ந்து எழும்பி அவனோடு மரத்தையும் பந்தாடுகிறது; பிறகு மிதக்கிறது. “நசரேன்... நசரேன், மாப்ள... என்னக்க சேக்காளித் தோழா...! தூத்துக்குடி போனவன் இதற்குத்தான் வந்தாயா?...”

     மூச்சடக்கி நீரின் மோதலோடு போராடுகிறான். இவன் காலோடு நசரேனின் உடலும் பிணைந்து கொள்கிறது.

     தலை நிமிர அச்சம். மூடிய கண்களுக்குள்ளே, கடல் நீர் கரிக்கும் பிரளயச் சூழலில், மரணத்தின் தலைவாயிலில் நிற்கும் போராட்டத்தில், எங்கோ உள்ளே உள்ளே... உயிர்ச்சூடு மெல்லிய துடிப்பாகப் பிழைத்திருக்கிறது. அந்த இழையின் நினைவு. பயங்கரங்களாகத் தோற்றம் காட்டுகிறது. பல்வேறு வண்ணங்களின் பயங்கரச் சுவாலைகள் கவிய ஓர் அரக்கன் வாயினுள் புகுவது போன்ற தோற்றம். பெரிய மகர மீனின் வாயிலோ போகின்றனர்? அலைகளின் ஊங்கார ஊளைக்கும் பிரலாபத்துக்கும், இரைச்சலுக்கும் மேலே அப்பச்சி கையில் சாராயக் குப்பியை வைத்துக் கொண்டு சிரிப்பது போன்று ஒரு தோற்றம்.

     ‘அப்பமே சொன்ன; படு... அநுபவி...’ என்று சொல்வது போல் குரல்... “அப்பச்சி, மன்னாப்புத்தாரும்! ஒங்களை உதாசீனம் பண்ணினம்! மாதாவே இரக்கமாயிரும்! நா மனஸ்தாபப்படுதேன். ஒங்க வல்லமை இந்த இடங்கேட்டினும் கொந்தளிக்கையிலும் பரிசையா வந்து கார்க்கட்டும்...”

     மரத்தை மாதா சுரூபத்தின் பாதத்தைப் பற்றியிருப்பது போல் உறுதியாகப் பிணைந்திருக்கிறான். இது பாறைகளில் போய் மோதுண்டால்... அவர்கள் மரணத்தின் வாயிலில் விழுவார்கள்.

     ஏலி... ஏலிப் பெண்... அவன் குழந்தை... “மாதாவே கரைமேல் சேர்த்துவிடும். பாவமெல்லாம் செய்தவனை மன்னித்தருளும்... அம்மை...”

     உணர்வுகள் தறி கெடச் சுழல்கின்றன. சிங்கிறாலின் கண்களைப் பிதுக்கும் கைகள்... கண்டா ஓங்கல் கூட்டம் கூட்டமாக மோதுகின்றன. அலைகளில்லை. கண்டா ஓங்கலோ, பனை மீனோ...? தோழ்ச வாதியாயிருந்தாலும், நல்லது சொல்ல இல்லிலே சேசுவே... கோயில் தெறிப்பை மறுத்தமிண்ணு தெண்டனியா?...”

     உணர்வை அழிக்கும் பிரளயத்தில் நைந்து நைந்து அது எழும்பி எழும்பிப் புயலின் நடுவே திரியாக மன்றாடிக் கொண்டிருக்கிறது.

     ஏலி அந்தப் பச்சை மண்ணைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறாள், ஏணையை நீக்கிக்கொண்டு காயும் மழுவாய் கைபட்டால் பொரியும் சூடு. கைக்குச் சூடு கண்டு ஏணையில் விட்டாள். வானில் அனக்கமேயில்லாமல் மருமத்தைப் புதைத்துக் கொண்டாற்போல் ஒரு சூழல். ஸ்டெல்லா மாமியைத் தேடிப் போகிறாள்; மாமி, பாட்டன் இருவருமில்லை. கைமருந்தெல்லாம் ஒன்றும் தெரியாது... கடலில் அதிகமாக மரங்கள் போகவில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு கோயிலுக்குப் பக்கத்திலுள்ள ‘பொதுமை’ மரத்தின் இலைகளைப் பறித்து, கெபியின் முன் சுரூபத்தின் பாதம்பட வைத்துக் கொண்டு வரச்செல்கிறாள். அந்த மரம் பசுமையான இலைகளே இல்லாமல் கழிக்கப்பட்டிருக்கிறது. மேலே ஏறி இலை கழித்து விடுகின்றனரென்று, அந்த வேம்பின் அடி மரத்துக்கு மேல் முள் கட்டியிருக்கின்றனர்.

     ஏலி அடி மரத்திலிருந்து கொஞ்சம் காய்ந்த பட்டையைப் பெயர்த்து எடுக்கிறாள். கெபியின் முன் வைத்து, முட்டு குத்தி, மன்றாடி ஜபம் செய்கிறாள். அவள் மணலில் நடந்து வருகையில் காற்று தூசையும் மணலையும் வாரியடிக்க வீசுகிறது. கடலுக்கு அநேகம் பேர் சென்றிருக்கவில்லை. செபஸ்திநாடார் கடை வாசலிலும், கோயிலுக்குப் பக்கத்தில் பூவரசு மரத்தடியிலும் யார் யாரோ குந்தியும் நின்றும் புகை குடித்துக் கொண்டு பேசுகின்றனர். மீன் சம்பைகள் வெற்று வட்டிகளுடன் அலைவாய்க்கரைக்குச் செல்கையில் பரபரப்பில்லாதவராகக் காணப்படுகின்றனர். கடலில் வாங்கலடித்துக் கொந்தளிப்பாக இருந்து ஒரு முறை ஏலி பார்த்திருக்கிறாள். மரியான் இன்று கடலுக்குப் போயிருப்பானோ?...

     குடிலுக்குள் காய்ச்சலடிக்கும் சிசுவை விட்டிருக்கும் உணர்வோடு இந்தப் பீதியும் கவ்விக் கொள்கிறது. கரையுடன் அவள் நடக்க மேட்டில் இருந்து இறங்குகிறாள். சென்ற மரங்கள் அவசரமாகத் திரும்பி இருக்கின்றன. உறுதியாக ‘கல்லு வைப்’பதில் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது குடிமகன் ‘தம்பு ரெடுக்கும்’ ஒலி கேட்கிறது.

     “இப்பம் காலமே, கடல் காத்து, சுழலி அடிக்குமிண்டு ரேடியோ அறிக்கை வாசிச்சிரிக்கிறதால, கடல் புறத்தில் ஆரும் தொழிலுக்குப் போகண்டாமிண்டு ஊரறிக்கை வுடுதாங்க... டும் டுடும் டுடும்... அலைவாய்க் கரையைத் தொட்டடுத்த வூடுக, புரைங்களெல்லாம் காலி பண்ணிட்டு புள்ள குட்டிங்களைக் கொண்டு எல்லோரும் கோயில் பக்கமோ, வேற தாவுக்கோ போயிக்கணுமிண்டு கற்பனையாயிருக்கு பஞ்சாயத்தில... டும் டுடும்... டுடும்...”

     அவள் திரும்பிக் குடிலுக்குச் செல்லுமுன் காற்று ஹோவென்று கடல் அலைகளுடன் சேர்ந்து கொள்கின்றன. அலைகளின் ஆட்டமும் பாட்டுகளும், கிடுகுகளையும், கூரையில் இருக்கும் பன ஓலைகளையும் எழும்பி நடனமாடத் தூண்டி விட்டாற்போன்று பறந்து விழுகின்றன. அவளுடைய சேலை பறக்கிறது. மண் சுள் சுள்ளென்று விழுகிறது. ஓட்டமும் நடையுமாக அவள் குடிலுக்குள் செல்கிறாள். கடலுக்கு மிக அருகாமையிலுள்ள வீடு... குழந்தை ஒலியே எழுப்பச் சக்தியற்றாற் போன்று துவண்டு கிடக்கிறது. அவள் அந்த மரப்பட்டைத் துண்டைச் சிறு துணியில் முடித்து, குழந்தையின் உடலோடு போர்த்துக் கொள்கிறாள். அவள் இன்னாசியை மணந்து கொண்டு அந்தக் கரைக்கு வந்த நாளில் வாங்கிய பெட்டிக்குள் அருமையான சாமான்கள் - துணி - குழந்தைக்கு மரியான் வாங்கிக் கொடுத்த புதிய சட்டை, மினுமினுப்பாக அவளுக்கு வாங்கி வந்த கண்ணாடி பிளவுஸ் துணி, பிறகு ஒரு நாள் அவள் கடற்கரையில் பொறுக்கி வழுவழுப்பாகத் தேய்த்துப் பிள்ளைக்குப் பால் கொடுப்பதற்கென்று நினைத்து வைத்துக் கொண்ட சங்கு, அந்தோணியார் படம் - புதிய அலுமினியம் பாத்திரத் தூக்கு, எல்லாம் எடுத்துக் கொள்கிறாள். தோளில் குழந்தையும் கையில் பெட்டியுமாக அவள் கோயிலின் பக்கம் தான் நடக்கிறாள். அவள் வீட்டுக்கும் அப்பாலுள்ள குடிசைகள் - குடிமகன்மாரும், சிப்பி நொறுக்கிச் சுண்ணாம்பு நீற்றும் எளியவர்களும் வாழும் புரைகள், அவர்களில் சிலர் குழந்தை குட்டிகளுடன் கோயிலின் உள்ளே வந்திருக்கின்றனர். குழந்தையை மாதாவின் முன் கிடத்திவிட்டு ஜபிக்கையில் கண்கள் துளிக்கின்றன.

     மரியானின் அப்பன், ஒரு முழுக்குப்பி சாராயத்தையும் குடித்துவிட்டுப் பொலபொலவென்று வசைகளாய் கொட்டுகிறார். மேரி கொடியில் காயப் போட்ட துணிகளை உருவி அவசரமாக மடித்து வைக்கிறாள். நடுவீடு ஒன்றுதான் ஓடு. கீற்றுக்களும் கிடுகுகளும் பேயாட்டம் ஆடத் தொடங்குகின்றன. கடலலைகள் ஆங்காரமும் ஓங்காரமுமாக மேட்டை நோக்கிப் பாய்கையில் அச்சம் திகிலாய் நெஞ்சைக் கவ்வுகிறது.

     கருவாட்டுப் பெட்டி, எண்ணெய், விறகு, பாய் படுக்கை, எல்லாம் எங்கே கொண்டு போவார்கள்.

     “மாதாவே? உன் மக்கள் தோழ்சமெல்லாம் பொறுத்து, மன்னாப்பு கண்டு வேணும். பிள்ளை எட்டி ஒதஞ்சாலும் காலை முத்தம் வைக்கும் ஆத்தாளே, கடலம்மா? உம் புள்ளியள, ஒரு இடங்கேடுமில்லாமகாரும். உம் புள்ளியள்ளாம் கவடு இல்லாத மக்க. உண்மையாம்படியே ஆரையும் உதாசீனம் செய்யமாட்டா. நல்லபடியாக் காத்துக் கரைசேரும் தாயே!...” என்று ஆத்தா கடலைப் பார்த்து முழந்தாளிலிருந்து ஜெபிக்கிறாள்.

     ஜான் ஓடி வருகிறான். கோயில் மணி ஒலிக்கிறது. இது சந்தோஷ மணியில்லை; துக்க மணியுமில்லை; அபாய மணி.

     “மாமி? பொறப்படும். தம்பு ரெடுத்தது சொவில வுழ இல்லியா? ஆத்தா உங்க எல்லாரையும் அங்கிய வரக்காட்டுதா. லே, பீற்றர், எடு, பொட்டி சட்டி எல்லாம் தூக்கிட்டு வாரும்...!” என்று முடுக்குகிறான்.

     சார்லசும் பீற்றரும் குடிபெயரத் துடிக்கின்றனர்.

     “கடலுக்கு நீ போவ இல்லையா?” என்று ஜானிடம் கேட்கிறாள்.

     ஆத்தாளுக்கு அவனைக் காணவே வியப்பாக இருக்கிறது.

     “என்ன அமைத்து வச்சிட்டு, நசரேனில்ல போயிருக்யா?”

     “நசரேனா? அவெ இங்கியா இருக்யா?”

     “அவெ அந்திப்போதில வந்தா. கடலுக்கு நாம் போறண்டு கிளம்பிட்டா. பொழுது வெளுப்புக் குடுக்குமுன்ன பிறப்பட்டுப் போனா...”

     ஆத்தா அதிர்ச்சியுற்றாற்போல் நிற்கிறாள்.

     பெஞ்சமின் வந்து செய்தி சொல்கிறான். “ரேடியோவில் ராத்திரியே கேட்டு, காலம மேட்டுத் தெருவில போய்ப் பஞ்சாயத்து மெம்பரிட்ட சொன்னேன். ஒடனே குடிமவன வுட்டுத் தம்புரெடுன்னேன், ஆனா அதுக்குள்ளாற பொறப்பட்டுப் போனவங்க அநேகம் பேர் கொஞ்ச தூரம் போயிட்டுத் திரும்பி வந்திட்டாங்க. இவனுவளும் திரும்பி வந்திடுவானுவ. இல்லியேண்ணாலும் வேறு தாவில எந்தக்கரையில்லேன்னாலும் ஒதுங்கியிருப்பா. கவலிப் பொண்ணும் வேணாம் நீங்கல்லாமும் எச்சரிக்கயா நம்ம வீட்டுப் பக்கம் வந்திரலாம்...”

     ஆத்தாளின் கண்கள் நிரம்பி வழிகின்றன.

     “சோறு கூட எதும் வேண்டாமிண்டு பிறப்பட்டுப் போனா. அப்பச்சி அச்சானியம் போல போவாதேலேயிண்டு சொல்றாரேண்ணும் நினைச்சே. போகக் கிளம்பையிலே புரு புருண்ணாரு. நீங்க எல்லாம் போயிடுங்க. ஏக்கி மேரி, செயமணி, தம்பி, அப்பச்சியெல்லாரையும் கூட்டிப் போயிரு. எங்கண்ணான பய கடல்மேல் இருக்கையிலே, என்னக் கொண்டு மட்டும் என்னம்ப்பு...!”

     அப்பனோ, அந்தக் கட்டிலை விட்டு நகர மறுக்கிறார்.

     “நானிந்த எடத்தவிட்டு நவுர மாட்டே. நீங்க எல்லாரும் எங்கிய வேணாலும் போயிக்கிங்க. நா இதே எடத்திலே தானிருப்பே. இது உயிர்தம்...”

     அப்போது, மீன் துவிவெட்டும் வளைந்த கத்தியுடன் செபமாலையான் வளைந்த மீசையுடன் சிவந்த விழிகளில் ஆங்காரமுமாகப் பாய்ந்து வருகிறான்.

     “...ப்பயலுவ? கோயில் தெறிப்பை நிறுத்தினானுவ, சரித்திரம் சொன்னா, தரித்திரமிண்டு எகனை மொகனை பேசினானுவ. ஏலே, வாடா உன்னிய இப்பம் வெட்டிப் போடுவ, துவி கொடுக்காண்டாம், கோயில் வரமுற மதிக்காண்டாமிண்டு நீ தானேலே பேசுன?...”

     அவன் பெஞ்ஜமினை நோக்கிப் பாய்கையில் ஜான் குறுக்கே இளங்கன்று பயமறியாது என்றூ பாய்கிறான்.

     “ஐயோ, மாதாவே இப்பம் கொலை செய்ய வாறீரு, பசு பட்சிக் கூட்டம் கூட இப்பிடி ஒரு ஆவத்து நேரத்தில துரோவச் செயல் செய்யாதே? உமக்கு நெஞ்சு ஈரமில்யா? நீங்கல்லாம் மனிசனுவ இல்லியா?...” என்று ஆத்தா தவித்து ஜானை விலக்குகிறாள். அவனது அரிவாளுக்கு முன் தானே நிற்கிறாள்.

     இதற்குள் பெஞ்ஜமின் பெண்சாதி அங்கே கையில் பிள்ளையுடன் கூந்தல் கட்டவிழ்ந்தலைய இவன் கத்தியுடன் அவள் கணவனைத் தேடி ஓடியது கண்டு ஓடி வருகிறாள்.

     பெஞ்சமினே பாய்ந்து அவன் கை அரிவாளைப் பற்றி விட்டான்.

     “சாத்தான் வெளயாடுது இந்தக்கரயில. இவனுவள வுட்டு வச்சா கரைய அழிச்சிடுவானுவ” என்று செபமாலையான் குதிக்கிறான்.

     எட்வின், ரொசாரியோ, சாமுவல் எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டு செல்கின்றனர். சாராயம் வாங்கிக் கொடுத்தால் அடங்கிப் போவான்?

     இயற்கையின் சீற்றத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் கரையில் காலம் காலமாக நிற்கும் பனந்தோப்புகளில் பல பனைகள் தலை கவிழச் சாய்கின்றன. கரையில் நாடாரும் குலசைச் சாயபுவும் போட்டிருந்த மீன் கொட்டகைகளைக் காற்று உருத்தெரியாமல் பிய்த்தெறிகிறது. அலைவாய்க் கரையோரமிருந்த கீற்றுத் தடுப்புகள் கூரைகள், யாவற்றையும் விட்டு வைக்காமல் பறித்துப் பந்தாடுகிறது. பகலா, இரவா என்பது புரியாமல் காற்று வெறியாடும் இந்த அரங்குக்கு மேகங்களும் குவிந்து வந்து மழைத் தாரைகளால் வானையும் வையத்தையும் ஒன்றாக்குகின்றன.

     கடல்... கடலம்மை ஊழித் தாண்டவமாடத் தொடங்கிவிட்டாள். ஆடுகளும், கோழிகளும், மனிதக்குஞ்சுகளும் பாய், பரட்டை தட்டுமுட்டுகளுமாக மக்கள் இடம் பெயர்ந்து கோயிலுக்குள் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.

     நசரேனின் வீட்டில் மேல் மச்சில் ஊர்ப்பிள்ளைகள் கொண்ட மட்டும் கூடியிருக்கின்றனர். மரியானின் ஆத்தாளும் அப்பச்சியும் கூட இங்கே நடுவீட்டில் வந்திருக்கின்றனர். ரோசிதா சோறு பொங்கி, காரல் கருவாட்டைப் போட்டு ஒரு ஆணமும் கூட்டி இருக்கிறாள். யேசம்மா சுவரில் கூண்டுக் குள்ளிருக்கும் ‘சுரூபத்’தின் முன் இரண்டு வத்திகளைக் கொளுத்தி வைத்திருக்கிறாள். இந்த வீட்டில் ‘கரண்ட்’ விளக்குகள் இருந்தாலும் சுழலிக் காற்றீல் கம்பிகள் தொடர்பறுந்து போய் ஊரை, கோயிலை இருளில் ஆழ்த்தியிருக்கிறது. கடற்புறம் பார்க்காத அந்த வீட்டில் வாயிற்கதவைத் தாளிட்டுக் கொண்டு, வத்தி ஒளியில், அவர்கள் முட்டுக்குத்தி ஜபம் சொல்கிறார்கள். மேரி ஜபப் புத்தகத்தைப் பிரித்து, தாவீதரசனின் எண்பத்தொன்பதாவது சங்கீதத்தைப் பாடிச் சொல்ல மன்றாட்டு செய்கிறார்கள்.

     “ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்கு அடைக்கலம். மலைகள் இராமுன்னே, பூமியும் பூச்சக்கரமும் உண்டு பண்ணப்படா முன்னே, நீரே எப்பொழுதும் இப்பொழுதும் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். மனிதனை இழிவில் விடாதேயும், ஏனெனில் மனுமக்களே மனந்திரும்புங்களென்று தேவரீர் திருவுளம் பற்றினீர்.

     “...உமது கோபத்தால் நாங்கள் சோர்ந்து போனோம்; உமது கோபாக்கினியால் நாங்கள் கலங்கிப் போனோம். நமது சமூகத்தில் எங்கள் பாவங்களையும் உமது திருமுகத்தின் வெளிச்சத்தில் எங்கள் சீவியத்தையும் நிறுத்தி வைத்தீர். ஆதலால் எங்களுடைய நாள்களெல்லாம் பறந்து போயின; உமது கோபாக்கினியால் நாங்கள் வாடிப் போனோம். எங்களுடைய வருஷங்கள் சிலந்திப் பூச்சி நூலைப்போல் நிலையற்றதாயிருக்கின்றன...

     உம்முடைய கோபத்தின் பெருக்கத்தை அறியவும் அதன் கோரத்தைக் கண்டுபிடிக்கவும் யாராலே கூடும்! உமது வலது கரத்தின் வல்லமையைக் காட்டி எங்கள் இதயத்தில் நாங்கள் ஞான உணர்ச்சி கொள்ளும்படி செய்யும். ஆண்டவரே, எங்கள் பக்கமாய்த் திரும்பும். உங்கள் தாசர்களாகிய எங்கள் பேரில் தயவாயிரும்... எங்கள் தேவனாகிய ஆண்டவருடைய பிரகாசம் எங்கள் பேரிலே இருக்கக் கடவது. ஆழிக்கடலில் போயிருக்கும் மனுக்குமாரர்களுக்கு, இந்தப் புயலிலிருந்து ரட்சை அருளுவீர் - உந்நதஸ்தலங்களிலிருந்து எங்கள் கரங்களுடைய வேலையை நடத்தியருளும் ஆமென்...”

     அந்தக் காள இரவு விடிகையில், கதிரவன் கடலுக்குச் செம்பொன் பட்டாடை விரிக்கிறான். தகத்தகாயமாக அது ஒளிர்கிறது. வெண்ணிறக் கடற்காகங்களும், நிலத்தின் கருங்காகங்களும் கரையில் பறக்கின்றன. மரியானிடம் வந்து சாப்பிட்டுக் குசினி மூலையில் படுத்துக் கொண்டு உறவு கொண்டாடும் சிவப்பி பெண்நாய், கரையில் வாய் பிளந்து செத்துக் கிடக்கிறது. அதன் குடல் கண்ணாடிக் குழாய்போல் ஆசன வாய் வழியே பிதுங்கியிருக்கிறது. மரங்களைத் தாறு மாறாகக் கடல் அடித்திருந்தாலும் அவை ஈடு கொடுத்திருக்கின்றன. நீர்ப்பாசிகளும், சிப்பி நண்டுகளும், மரத்துண்டுகளும், ஓலைப் பொடிகளும், ஒட்டு உடைசல்களும், பூண்டுகளும், உடைந்த சட்டித் துண்டுகளும், கரை நெடுக மணலில் காற்றுக் கடலின் விளையாட்டுக்குச் சாட்சியங்களாகக் கிடக்கின்றன. கூரைத் தாழ்வரைகளும் குடிசைகளும் வாய் பிளந்தாற் போன்று வெறும் வரிக்கம்புகள் தெரியச் சிதிலமடைந்திருக்கின்றன. ஏலியின் குடிலுக்குள் நீர் புகுந்து விளையாடி இருக்கிறது. மணலும் ஈரமும் பிரிந்த கூரையும் ஊறிய அடுப்புமாக அந்தக் குடிலில் குழந்தையைப் போடக்கூட இடமில்லை.

     பிச்சைமுத்துப்பாட்டாவும் மாமியும் முதல் நாள் அமலோர்பவத்தின் வீட்டில் தங்கியிருந்தார்கள். நல்ல கல் கட்டுமான வீடாகையால் ஓதம் தங்கவில்லை. நடுவீட்டில் ஓடுகள் விலகவில்லை. புறக்கடையில்தான் சேதம். “மாமி...? இந்தப்புள்ளயப் பாரும்...!” என்று ஏலி குழந்தையுடன் வருகிறாள்.

     “நாய்க்காத்து. நான் பனவிளக்கி ஓல கொண்டாரலாம் பிலப்பெட்டி முடஞ்சிக்கலாமிண்டு போனம். ஒரே காத்து... நாய்க்காத்து, ராவிக்கி எங்கட்டீ இருந்தே?...”

     “கோயில்ல மாமி, புள்ள தீயாக் கொதிக்கி. தொட்டால அலண்டு போவு. முலெ சப்பல... ஏதேனம் மருந்து ஊத்தலா மிண்ணா ஒண்ணுந்தெரியல...”

     மாமி ‘வாரியலை’க் கீழே போட்டுவிட்டுக் குழந்தையைத் தொட்டுப் பார்க்கிறாள்...

     “அனல் காயுத! மாதாவுக்கு வித்துக் கொடுக்யேண்டு நேர்ச்சை முடிஞ்சி வையட்டீ!”

     பிச்சமுத்துப்பாட்டா மூலையில் சுருட்டுப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

     “தாலிக் கெட்டில்லாம புள்ள பெத்து ஞானஸ்நானமில்லாம நிக்யா! அதது உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போவு. போவட்டும்ட்டீ! புள்ள எதுக்காவட்டீ, புள்ள? அவெ அவெ எங்கெங்கியோ பாத்து ஓடுதான். ஆத்தாளப் பாக்குதா, அப்பெயப் பாக்குதா? புள்ள பொண்ணு ஆரும் ஒரு புரோசனமும் இல்ல. விருதாவா ஏன் சஞ்சலப்படுதே! மாதா குடுத்தா, எடுத்திட்டாப் போவு!...”

     ஏலிக்கு, மரியான் கடல் மீது சென்றிருக்கிறானோ, ஊரிலிருக்கிறானோ என்றறியும் தவிப்பு மேலிட்டிருக்கிறது. ஆனால் அதை எப்படி யாரிடம் வெளியிடுவாள்? அவள் அவனைச் சாமி சாட்சியாகக் கைப்பற்றி மணவாட்டியாயிருக்கிறாளா?

     அன்று ஞாயிற்றுக் கிழமை. புயலடித்து மீண்டபின் அவரவர் உடமைகளின் சேதங்களைப் பார்ப்பதும் சீர் செய்வதுமாக ஒன்றியிருக்கையில் திருப்பலிப் பூசைக்கான மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏலிக்கு அது... ஏனோ துயர மணியைப் போல் ஒலிப்பதாகவே தோன்றுகிறது. குழந்தையைக் கையிலேயே வைத்துக் கொண்டு கடலைப் பார்த்த வண்ணம் கூரையில்லாக் குடிலின் வாயிலில் நிற்கிறாள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247

நூல்
விலை
தள்ளுபடி
விலை
அஞ்சல்
மேலும் விபரம்
ரூ. 211.00
ரூ.200.00
இலவசம்
ரூ. 244.00
ரூ.230.00
இலவசம்
ரூ. 650.00
ரூ.600.00
இலவசம்
ரூ. 270.00
ரூ.255.00
இலவசம்
ரூ. 500.00
ரூ.480.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 199.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 433.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 411.00
ரூ. 390.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 580.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 160.00
இலவசம்
ரூ. 380.00
ரூ. 360.00
இலவசம்
ரூ. 165.00
ரூ. 150.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 205.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 165.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 610.00
இலவசம்
ரூ. 288.00
ரூ. 270.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 325.00
ரூ. 310.00
இலவசம்
ரூ. 333.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 425.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 360.00
ரூ. 340.00
இலவசம்
ரூ. 190.00
ரூ. 180.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 275.00
இலவசம்
ரூ. 425.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 600.00
ரூ. 500.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 430.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 470.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 525.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 299.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 588.00
ரூ. 540.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 250.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 350.00
இலவசம்
ரூ. 230.00
ரூ. 220.00
இலவசம்
ரூ. 790.00
ரூ. 740.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 215.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 180.00
ரூ. 170.00
இலவசம்
ரூ. 1800.00
ரூ. 1600.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 120.00
ரூ. 110.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 177.00
ரூ. 155.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 80.00
ரூ. 75.00
ரூ. 30.00
ரூ. 144.00
ரூ. 135.00
ரூ. 30.00
ரூ. 111.00
ரூ. 100.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 125.00
ரூ. 115.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 90.00
ரூ. 30.00