ரங்கோன் ராதா 13 கதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக நான் இருந்தது பயனில்லாமற் போய்விட்டது. என் மனதிலே இருந்த கொதிப்பைத் தணிக்கக் கூடவில்லை. அந்தச் சமயத்திலே, எனக்குத் துளசி மீது சென்றது நினைவெல்லாம். அவள் மட்டும் எனக்குத் துணையாக இருந்தால், எவ்வளவோ நிம்மதியாக இருக்குமே என்று எண்ணினேன். அந்தக் கிராமத்திலே, எனக்கு நாள் போவதே தெரியாமல், அவ்வளவு இனிமையாகப் பேசிக் கொண்டிருப்பாள். அவள் இப்போது இருந்தால் கோபம், சோகம் எல்லாவற்றையும் விரட்டி அடிப்பாள். ஏன்! என் புருஷருக்குக்கூடப் புத்தி புகட்டக் கூடியவள் துளசி. கேலியாகப் பேசியே சித்திரவதை செய்துவிடுவாள். அவளோ புரட்டனிடம் வாழ்க்கைப்பட்டுக் கிராமத்தில் இருந்தாள். நானோ, புதுமாப்பிள்ளையாக வேண்டுமென்று திட்டமிட்டு வேலை செய்யும் புருஷனோடு சச்சரவு செய்து கொள்ளக் கூடச் சௌகரியம் கிடைக்காமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன்.
"தூக்கம் வரவில்லையடி..." "மத்தியானம் தூங்கினீர்களே அதனால்..." "ஏன் தூக்கம் வரவில்லை என்றா உன்னைக் கேட்டேன்? தூக்கம் வரவில்லை, என்ன செய்வது இப்போது?" "படுத்துக்கொண்ட சும்மா கண்ணை மூடிக்கொண்டிருந்தா, தூக்கம் கொஞ்ச நேரத்திலே தன்னாலே வந்துவிடும்." "போடி மூதேவி! ஏதாவது ஒரு கதை சொல்லடி. கேட்டுக் கொண்டே இருந்தா தூக்கம் வந்துவிடும்." "எனக்கென்ன கதை தெரியுங்க? முன்னமேயே சொன்னேனுங்களே, கதை தெரியாதுன்னு." "போடி புளுகி, இவ்வளவு பெரிய பொம்பளைக்குக் கதையா தெரியாது." "நீங்க ஒரு வேடிக்கை. ஏதாவது கதை சொல்றதுதான் கேட்கறதுதான். அதெல்லாம் இப்போ கவனமா இருக்கும். இப்ப என் சமாசாரமே பெரிய கதை! நான் வாழ்ந்த கதையும் வதைகிற கதையும், அந்தப் பாவி என்னைத் தொட்டுத் தாலி கட்டின கதையும், மொந்தைக் குடியனாகி, என் கால் கொலுசு, கம்மல், அட்டிகை, காப்பு எல்லாவற்றையும் கடன்காரன்கிட்டே அழுத கதையும் இதுதான் இப்ப எனக்குத் தெரிஞ்ச கதை." "அழுமூஞ்சி! அழுமூஞ்சிடி நீ! போகட்டும், உன் கலியாணக் கதையைச் சொல்லு கேட்கலாம்." "நீங்க ஒரு வேடிக்கை. நான் என்ன தொரபதையா, சீதையா, என் கலியாணத்துக்கு ஒரு கதை இருக்க. பொறந்தேன், பொம்பளையா வளர்ந்தேன். வயசு வந்ததும் ஒருத்தன் கிட்ட பிடிச்சுக் கொடுத்தான் எங்க அப்பன். தாலி கட்டின அண்ணைக்கு மறுநாளே அவன் ஆரம்பிச்சிவிட்டான், அதிகாரம் பண்ண. நின்னா உதை, குனிஞ்சா குத்து, இவ்வளவுதான் கதையே பொம்பளை கதை இவ்வளவுதானேம்மா இருக்கும். அதிலேயும் ஏழை வீட்டுக்கதை ராஜா கதையாட்டமா இருக்கும்! எனக்கென்ன சொயவரம் நடந்துதா, கதை இருக்க." "போடி திருடி, கதையே தெரியாதுன்னு சொன்னயே, இப்ப நீ பேசறதே கதை சொல்றமாதிரியாகத்தான் இருக்கு, கிடக்கட்டும்! உன்னை உன் அப்பா, கலியாணம் செய்து கொடுக்கறப்போ, உன்னைக் கேட்டாரா? இப்படி, நானாக அவளிடம், பேசிப் பேசிக் கிளறியும் பார்த்தேன்; பலன் இல்லை. அவளிடம் அந்தப் பேச்சு பேசும் போது கூட, உரக்கப் பேசியும் இடையிடையே பலமாகச் சிரித்தும் பார்த்தேன். அவருடைய தூக்கம் அதனால் கெடட்டும் என்பதற்காக. அதுவும் பயன் தரவில்லை. அவருடைய குறட்டைச் சத்தம் அதிகரித்தது, குறையவில்லை. நெடுநேரத்துக்குப் பிறகு, வேலைக்காரி தானாக, 'ஒரு கதை நீங்கதான் சொல்லுங்களேன்' என்றாள். எஜமானியைக் கதை சொல்லும்படி கேட்பது மரியாதை அல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தாள் போலிருக்கிறது. நான் வேண்டுமென்றே கதைகட்டிச் சொன்னேன்; பெண்ணைக் கொடுமை செய்யும் ஆணைப்பற்றி; அந்த ஆடவன் பிறகு பலமாதிரி கஷ்டங்களை அனுபவித்து பலரால் இம்சிக்கப்பட்டு, கடைசியில் எந்த மனைவியை இம்சித்தானோ அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் என்று என் ஆசையைக் கதையாக்கிச் சொன்னேன். நான் பெண்களை, ஆண்கள் கொடுமை செய்வதைப்பற்றிச் சொன்னபோதெல்லாம், சுவாரஸ்யமாக இருக்கும் வேலைக்காரியின் பேச்சு. "அவள் பாபம் சாது. வீண் ஜோலிக்குப் போகிறவளல்ல. தன் புருஷனே தெய்வம் என்று எண்ணிக்கொண்டு, அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தாள். அவள் அவ்வளவு அன்பாக இருந்தாள். அவள் புருஷனோ அவளுடைய அன்பை மதிக்கவில்லை; அவளைப் பிரியமாக நடத்துவதில்லை; எப்போதாவது கொஞ்சிக் குலாவுவான்; குச்சிநாய்க் குட்டியிடம் கோடீஸ்வரன் எப்போதாவது கொஞ்சமாட்டானா, அதுபோல. ஆனால் அவனுடைய மனமோ எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது" என்று நான் சொல்வேன். உடனே சூதுவாது அறியாத வேலைக்காரி, "படுபாவி! கல்நெஞ்சுக்காரன்" என்று கதையிலே வரும் ஆணைச் சபிப்பாள், திட்டுவாள். உடனே நான் "அதோ கூடத்திலே இருக்கிறாரே, ரொம்ப யோக்யஸ்தரோ அவர்" என்று சொல்வேன். வேலைக்காரியோ பதில் பேச மாட்டாள். கதையைச் சொல்லும்படி தூண்டுவாள். "இந்த மாதிரியான ஆண்களை வழிக்குக் கொண்டுவர முடியும். பெண்பிள்ளைகள் பைத்தியக்காரத்தனமாக இது வரையில் இருந்துவிட்டார்கள். ஆண் பிள்ளையின் விளையாட்டுப் பொம்மையாகிவிட்டார்கள். அவர்களுக்கும், மானம், மரியாதை, சூடு, சொரணை உண்டு என்று காட்டியிருக்க வேண்டும்" என்று நான் காரசாரமாகச் சொன்னபோது அவள் பயந்தே போனாள். பிசாசு பேசுகிறது என்று கூற எண்ணிக் கொண்டிருந்திருப்பாள். பெருமூச்சுடன், "என்னம்மா செய்வது? தொட்டுத் தாலிகட்டினவன் இட்ட வேலையைச் செய்வது தானே நம் விதி?" என்று அவள் கூறியபோது, நான், "போடி! பெண்களும் சரி, ஆண்பிள்ளைகளும் சரி, அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாலி கட்டினால் என்னடி யம்மா! அது என்ன மாட்டுக்கு மூக்குக் கயிறு போடுவது போலவா! தாலி கட்டினான் என்றால், ஒரு வீட்டுப் பெண்ணை, சுகமாக, கௌரவமாகக் காத்து ரட்சித்து வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தது என்றுதானே அர்த்தம். நேர்மாறாகப் புருஷன் நடந்துகொண்டால், துரோகம் செய்தால், அவன் சண்டாளன் தானே?" என்று கோபமாகச் சொன்னேன். என்ன பதில் சொல்வது என்று தோன்றாமலே திகைத்தாள் வேலைக்காரி. பாவம்! அவள் புருஷனிடம் பட்ட அடியும் உதையும் எவ்வளவோ! "அடங்கி அடங்கிப் போனால் பயன் கிடையாதடி; அழுதாலும் பிரயோஜனம் இல்லை; அடங்காப்பிடாரி, வாயாடி, துஷ்டை என்று எவ்வளவு கெட்ட பெயர் வந்தாலும் சரி என்று துணிந்து, புருஷனின் போக்குக்கு எதிர்ப்புக் காட்டினால், ஒரு தடவை, இரண்டு தடவை அடித்துப் பார்ப்பான். உதைத்துப் பார்ப்பான், பிறகு பெட்டியிலிட்ட பாம்புதான்" என்று அவளிடம் போர்த் திட்டமே கூறினேன். அவள் மேலும் திகைத்துப் போனாள். "இதோ பாரடி; என் வீட்டுக்காரர்கூட என்னை என்னவோ வாய் செத்தவள், மிரட்டி உருட்டி அடக்கி விடலாம் என்று எண்ணிக்கொண்டு, நான் இருக்கும்போதே, வேறு ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறார். அந்தக் கலியாணம் நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பார், நடக்கப் போகிற வேடிக்கையை. கலியாண மணையிலே மாப்பிள்ளைக் கோலத்தில் அவர் உட்காரட்டுமே, அப்போது தெரிகிறது, ரங்கம் எப்படிப்பட்டவள் என்று. ஆயிரம் பேர் கூடி இருக்கட்டும், அந்தக் கலியாண வாசலில். அப்படியே பாய்ந்து கலியாணத்துக்கு 'ஓமம்' வளர்த்துகிறார்கள் பார், அந்த நெருப்பை எடுத்து, அவர் கண்ணிலே கொட்டாவிட்டால், என் பெயர் ரங்கமல்லடி! பார் நடக்கப்போகிற கூத்தை!" என்று நான் ஆக்ரோஷத்துடன் சொன்னேன். நடுநிசி. எனக்கோ பிரமாதமான கோபம். அந்தச் சமயத்திலே என் பேச்சும், பார்வையும், பாவம் அந்த வேலைக்காரிக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை. "ஐயோ! காளியாயி" என்று ஒரே அலறல்! நான் வாயை மூடப்போனேன், கூச்சல் அதிகரித்தது; அவரும் எழுந்து ஓடிவந்தார். இந்தப் போராட்டம் சில நாட்கள் நீடித்தது. போராட்டம் என்றுகூடச் சொல்வதற்கில்லை! அவர்தான் கோழையாகி விட்டாரே! என் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது சில நாட்கள். அவர் ஏதோ பெரிய திட்டமிடுகின்றார். மனத்திலே அதனால்தான் இப்படி அமைதியாக இருக்கிறார்; அஞ்சி இருப்பவர்போல் காணப்படுகிறார் என்று நான் யூகித்தேன். அவருடைய முகத்தில் கவலை படியத் தொடங்கிற்று. ஏன் இராது? அடங்காப்பிடாரி நான்! அவர் என்னைக் கொடுமைப் படுத்துவதன் மூலம், என் கோபத்தை மட்டுமல்ல, மனதிலே உள்ள ரோஷத்தைக் கிளப்பிவிட்டார். அதன் வேகத்தைத் தாங்கும் சக்தி அவருக்கு இல்லை! எங்கும் எதிலும் அதுதானே நிலைமை! கட்டுக்கு அடங்கும் என்று கருதி நாம் வளர்க்கும் மிருகம், சில நேரத்தில் அடக்குமுறை, அதனால் தாங்கமுடியாத அளவு ஆகிவிட்டால், கட்டு அறுத்துக்கொண்டு ஓடவும், திருப்பித் தாக்கவும் செய்யவில்லையா? அந்த நேரத்திலே அதற்குமுன் அதே மிருகத்தைக் கட்டுக்கு அடங்கி நடக்கும்படி செய்தவனே, கிலிகொண்டு ஓடுகிறானல்லவா! மனிதனிடம், மிருக குணம் அடியோடு மாய்ந்து போகவில்லையே! என் மனம் மட்டுமா? யாருக்கும்தான், அந்தக் குணம் இருக்கும். மகனே! நான் நினைக்கிறேன், உலகிலே எவ்வளவு உபதேசம் நடைபெற்றாலும், இந்த மிருக குணம் அடியோடு ஒழிந்துபோகும் என்று கூறமுடியாது. நல்ல முறைகளால் நட்பு நியாயத்தில் அந்த மிருக குணத்தைக் குறைக்கலாம், மறைக்கலாம், தூங்க வைக்கலாம்; அடியோடு மாய்த்துவிட முடியாது. நான் அடிக்கடி எண்ணிக் கொள்வதுண்டு, வெங்காயம் வெட்டும்போது, இது பார்வைக்குக் கெட்டியான பொருளாகத்தானே இருக்கிறது; தேங்காயையாவது எடுத்துக் குலுக்கிப் பார்த்தால், உள்ளே தண்ணீர் இருப்பது தெரிகிறது; இதனைப் பார்த்தால், அப்படித் தண்ணீர் இருப்பது தெரியக் காணோமே; அப்படி இருந்தும் இதை நறுக்கினால் ஈரம் இருக்கிறதே, எப்படி என்று. ஈரம் மட்டுமா இருக்கிறது தம்பி! நமது கண்களில் இருந்து நீரைக் கொண்டு வருகிற அளவு எரியும்சக்தி இருக்கிறதே அதனிடம். நெருப்புக்கு உள்ள சக்தியும், நீருக்கு உள்ள சக்தியும் கொண்டு, தனியாக இருக்கும்போது மணம் பயன்படாமலும், மற்றவற்றுடன் பதம்பார்த்துச் சேர்த்தால் சுவையும் மணமும் தருவதுமாக இருக்கிறது வெங்காயம். நான் பெண்களின் சக்தியை அப்படித்தான் இருக்கிறது என்று எண்ணிக்கொள்வதுண்டு. வெங்காயச் சாறு கண்ணில் பட்டால், விழியில் நீர் வழிவதுபோல பெண்களின் கோப உணர்ச்சியும் பழிவாங்கும் எண்ணமும் கிளப்பப்பட்டுவிட்டால், எந்த ஆணும் அழுதுகொண்டுதான் இருந்தாக வேண்டும்! அவர் அழுதுகொண்டிருந்ததிலே ஆச்சரியமில்லை. அவர் என்னுடைய எதிர்ப்பை மட்டும் சமாளிக்க வேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்தால், கொஞ்சம் சிரமப்பட்டாலும், வெற்றி திட்டமாகப் பெற்றுவிட முடியும். அவரோ, என் எதிர்ப்பைச் சமாளிப்பது மட்டுமல்ல, தன் ஆசையை - தங்கத்தைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற திட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியவராக இருந்தார். நானோ அடங்க மறுத்துவிட்டேன். அத்துடன் நின்றுவிட மாட்டேன். ஊர் அறிந்தாலும் கவலை இல்லை. உரிமைக்காகப் போராடுவது, கொடுமைக்குச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டவள் - என் ஆர்ப்பாட்டத்தின்மூலம் நான் அவருக்கு என் புதிய நிலையைத் தெரிவித்துவிட்டேன். ஆகவே, அவர் புதிய திட்டம் வகுத்தாக வேண்டியவரானார். தம் காரியத்தைச் சுலபத்திலே சாதித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தார். நான் வெற்றிபெற்று வந்தேன் ஒவ்வொரு நாளும். நான் வெளியில் போய் வருவேன்; அவர் எங்கே போயிருந்தாய், ஏன் போய் வந்தாய் என்று எதுவும் கேட்கமாட்டார். எனக்கு இஷ்டமான பண்டம் சமைக்கப்படும். இஷ்டமான நேரத்தில் சாப்பிடுவேன். அவருடைய சௌகரியத்தைக் குறைப்பது, இப்படி ஒரு மனப் போக்கு இருந்தது எனக்கு. சிறுபிள்ளைகள் பொன்வண்டு விளையாடுகிறார்களே அதுபோல. ஒருநாள் ஒரு வேடிக்கை கேள். தெருத்திண்ணையிலே யாரோ உள்ளூர்ப் பெரிய மனுஷருடன் பேசிக் கொண்டிருந்தார். கலெக்டர் ஆபீசிலிருந்து ஆள் வந்தார்கள், உன் அப்பாவை அழைக்க. உடனே அவர், "இதோ பத்து நிமிஷத்திலே, குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறினார். அந்தப் பேச்சு காதில் விழுந்தது; உடனே ஸ்நான அறைக்குப் போனேன். பத்துத் தடவை இருக்கும், அவர் "இன்னும் முடியவில்லையா ஸ்நானம்? நேரமாகிறதே, கலெக்டர் காத்துக் கொண்டிருப்பாரே" என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார். என்னிடம் கேட்பாரா! வேலைக்காரியிடம். அவள் என்னிடம் எப்படிப் பேசுவாள்! "அம்மா! அம்மா!" என்று கூப்பிடுவாள். நான் தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் சத்தந்தான் அவளுக்குப் பதில்; கதவைத் தட்டுவாள். "யாரது, முட்டாள்தனமாக ஸ்நான அறைக் கதவைத் தட்டுவது" என்று பதில். "ஐயா..." என்று அவள் பேசத் தொடங்குவாள். "என்னடி அக்கிரமம்! ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது அவர் எப்படித் தட்டலாம்" என்று கேட்பேன்; எனக்குத் தெரியும் அவள்தான் தட்டினாள் என்று. "அம்மா! நான் தான் தட்டினேன், அவரல்ல; அவர் கலெக்டர் ஆபீஸ் போகவேணுமாம்" என்று அவள் கூற, "அதற்கு உத்தரவு கேட்கிறாரா என்னை" என்று நான் கேலி பேச, "இல்லையம்மா, குளித்துவிட்டுப் போக வேண்டுமாம்" என்று அவள் பேச, "சரிதாண்டி! பாதிக் குளியலோடு வந்துவிட முடியுமா" என்று நான் கோபிக்க, எங்கள் பேச்சைக் கேட்டு, அவர் திகைத்துவிட்டுக் கடைசியில், குளிக்காமலேயே அவசர அவசரமாக உடுத்திக்கொண்டு போய்விட்டார். வேலைக்காரி ஒரு 'ஐயோ பாவம்' சேர்த்துச் சேதியைச் சொன்னாள்; களித்தேன். குளித்தேன் என்று மட்டுமா கூறமுடியும் அந்த ஸ்நானத்தை! |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
Life Balance The Sufi Way மொழி: English பதிப்பு: 1 ஆண்டு: November 2007 பக்கங்கள்: 296 எடை: 350 கிராம் வகைப்பாடு : Self Improvement ISBN: 978-81-7992-677-2 Stock Available விலை: ரூ. 299.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: Based on the authors’ combined 50 years of experience, Life Balance The Sufi Way brings a fresh perspective to why most people are overworked, yet underutilized. The book reflects on Eastern philosophies emphasizing reflection, silence, and going with the flow, and interweaves them with Western ideas of excellence, efficiency and effectiveness to invite balance in our lives. Life Balance The Sufi WayLife Balance Is Your Choice illustrates that life balance is a choice each one of us makes – circumstances do not determine life balance! நேரடியாக வாங்க : +91-94440-86888
|