ரங்கோன் ராதா 9 மகனே! தங்கத்தை அவர் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்றேன். அதன் பயன், பேய் பிடித்தவள் என்று ஊராரே கூறும்படியானதுதான். சரி! இனித் தடுத்துப் பயனில்லை. ஆண்களின் மனம் வானம் போன்றதுதான். அதிலே பல நட்சத்திரங்கள் இருந்தே தீரும். ஒளிவிடும் மதி இருந்தாலும், மின்மினியும் இருக்கும், கருமேகமும் இருக்கத்தான் செய்யும். ஆகவே, ரங்கம் இருக்கும்போது தங்கம் ஏன் என்று கேட்டுப் பயன் இல்லை. அவர் தாராளமாகத் தங்கத்தையும் கலியாணம் செய்துகொள்ளட்டும் என்று எண்ணி, என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். அதன் விளைவுதான் மின்னல்போல் தோன்றி மறைந்த, அவருடைய அன்பு! அந்த அன்பு, அன்று இரவு மட்டுமே நிலைத்திருக்க முடிந்தது. அந்த இன்ப இரவு, உன்னையும், உலகிலே எந்தப் பெண்ணும் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியாத பழியையும், எனக்குத் தந்தது. பாழ் மனமே! ஏன் நீ, அன்று அவரிடம் தஞ்சம் புகுந்தாய்? கெஞ்சி அவருடைய கொஞ்சு மொழியைப் பெற்றாய், களித்தாய்! இதோ தருகிறாரே நஞ்சு, அது உயிரைப் போக்கினாலும் பரவாயில்லையே, மானத்தை அல்லவா மாய்க்கிறது' என்று மெள்ளக் கூறிக் கொண்டே குமுறினேன். விசாரத்தை விநாடியில் துடைத்துவிடும் துளசியும், என் நிலையைக் கண்டு, அழுதுகொண்டே தன் முந்தானையால் என் கண்களைத் துடைக்க முடிந்ததே தவிர, எனக்குச் சமாதானம் கூற முடியவில்லை. எப்படி முடியும்? 'விபசாரி!' என்ற பழி சுமத்தப்பட்ட பிறகு, பெண் எப்படி உலகை ஏறிட்டுப் பார்க்க முடியும்? உலகிலே, எத்தனையோ விதமான அக்ரமத்தைச் செய்து வயிறு வளர்ப்பவன் கூட, ஒரு பெண் விபசாரி என்றாகிவிட்டால், கேவலப்படுத்துவான்; கண்டிப்பான். எவ்வளவு கொடூர சுபாவம் இருந்தால் அவர் அப்படிச் சொல்ல மனம் துணிவார் என்பதை நீ இப்போது எண்ணிப் பார். ஏதோ தாய் தன் மகனிடம் கூறுகிறாள் என்று எண்ணவேண்டாம். துர்ப்பாக்கியவதி ஒருத்தி கருணையும் நீதியும் தெரிந்த ஒரு உத்தமனிடம் முறையிடுகிறாள் என்று எண்ணிப் பதில் சொல்லு. வேண்டாமடா மகனே! நீ பேச வேண்டாம். உன் கண்ணீர் போதும், எனக்கு அந்தப் பாஷை தெரியும். இம்சைக்கு ஆளான எனக்கு கடைசிக் காலத்திலேனும், அந்தக் கண்ணீர் ஆதரவு தருகிறது என்று ஆறுதல் கிடைத்ததே அதுவே போதும்.
தூக்க மயக்கத்தைத் தெளிவிக்க என் முகத்திலே பன்னீர் தெளிக்கும்படி பரிவுடன் பேசிய என் கணவர், நான் கர்ப்பவதியாக இருக்கிறேன் என்ற செய்தி கேட்டு ஆனந்தமடைந்திருக்க வேண்டியது முறை. ஆனால், அவரோ என்னைத் தலைமுழுகிவிட்டதாகத் தெரிவித்தார். பெண்ணின் வாழ்க்கை இப்படி ஒரு ஆணின் ஆபாசத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கும் கொடுமையை யார் எண்ணிப் பார்க்கிறார்கள். மகனே! உன்னைப்போன்ற உத்தமகுணம் படைத்தவர்கள் உலகில் மிகமிகக் குறைவு. உன் மனம் என் அழுகுரல் கேட்டுப் பதைபதைத்தது. உள்ளே ஓடி வந்து, என்னை அடித்த முரடனிடம் சண்டைக்கும் நின்றாய். ஆனால் பொதுவாக ஆடவர்கள் இவ்விதம் செய்யமாட்டார்கள். அதனால், ஆண்கள் இரக்கக் குணமே அற்றவர்கள் என்று நான் கூறுவதாக எண்ணாதே. நாய், பூனை இவைகளிடம்கூட இரக்கம் காட்டும் ஆடவர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட கருணாகரர்கள் கூட, மனைவியை புருஷன் அடித்துத் துன்புறுத்தும்பொழுது குறுக்கிட்டுத் தடுக்கமாட்டார்கள். அவன் பெண்ஜாதியை அவன் அடிக்கிறான், நாம் எப்படி அவனைத் தடுக்க முடியும்? போடா உன் வேலையைப் பார்த்துக் கொண்டு என்று அவன் சொல்லிவிட்டால், நாம் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வது என்று, இப்படி உப்புச்சப்பற்ற பேச்சைப் பேசிவிட்டுப் போவார்களேயொழிய, பெண்ணை இப்படி இம்சிக்கலாமா என்று கேட்க முன்வர மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலேதான் பெண்கள் வாழ்கிறார்கள்; என் நிலைமையும் அதுதான். உன் அப்பா, கலியாணமான சில காலம்வரை காட்டிய அன்பும் அக்கறையும், எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, ஒரு புது நம்பிக்கையையும் கொடுத்தது. மற்றவர்களைப்போல் இவர் முரடரல்லர்; கண்ணியம் வாய்ந்தவர். நம்மிடம் அமோகமாக அன்பு வைத்திருக்கிறார். ஆகவே, இவர் நம்மை மிகவும் பிரியமாக நடத்துவார்; நம் வாழ்விலே துன்பம் இராது என்று நம்பினேன். மற்றக் குடும்பத்துப் பெண்களைப்போலக் கசங்கிய கண்களாக இராது என்று நினைத்தேன். அவருடைய சொல்லும் செயலும் எனக்கு அவ்விதமான நம்பிக்கையைத் தந்தது. தங்கம், என் வாழ்க்கையிலே குறுக்கிடும் வரையில், அவர் என்னை அன்புடன் தான் நடத்தி வந்தார். பாபம்! தங்கத்தை மட்டும் குறைகூறிப் பயன் என்ன? உன் அப்பா பேராசைக்கு ஆட்படும்வரை என்னை அன்பாகத்தான் நடத்திவந்தார். பேராசை பிடித்ததும் என்னைச் சித்திரவதை செய்யலானார். அப்பாவை அழைத்துக் கொண்டு, வீடு வந்தேன். பேயோட்டிக் கொள்வதற்காகவென்று நான் வீட்டிலிருந்து கிராமத்துக்குப் புறப்பட்ட போது, சாதுவாகத்தான் சென்றேன். பிறகு எதற்கும் பயப்படாதவளாக, வீட்டுக்குள் நுழைந்தேன். அடக்கம் பெண்களுக்குப் பூஷணம் என்பார்கள்; நான் அதன் படிதான் நடந்து வந்தேன். கிராமத்தை விட்டு மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்தபோதோ அதிகாரி என்ற முறையிலே புகுந்தேன். இனி, அடக்க ஒடுக்கம், பரிவு, பாசம், இவைகளை நான் ஏன் கொள்ள வேண்டும்? புருஷனின் குரலைக் கேட்டாலே பயந்து, அவர் காலால் இடும் வேலையைத் தலையால் செய்து தீரவேண்டும் என்று நான் இருப்பானேன்? அடங்கி ஒடுங்கி இருந்து பார்த்தாகிவிட்டது. கொடுமைகளைத் தாங்கிக் கொண்டேன். இழிவைப் பொறுத்துக் கொண்டேன்; சித்திரவதை செய்தார், சகித்துக் கொண்டேன். இவ்வளவுக்கும் பிரதிபலன் என்ன பெற்றேன்? தலைமுழுகிவிட்டேன் என்று அவர் எழுதிய கடிதந்தானே? புருஷனிடம் இடிபட்டு அடிபட்டு, இம்சைகளைப் பெற்றுக் கொண்டு, பெண் எதைப் புகழாகப் பெறுகிறாள்? அவள் உத்தமி, பத்தினி, பதி சொல் கடவாத பாவை என்ற பட்டங்களைத்தானே! எனக்குத்தான் என் கணவர் விபசாரிப் பட்டம் கட்டிவிட்டாரே; இனி பத்தினி, உத்தமி என்ற பட்டம் கிட்டும் என்பதற்காக நான் ஏன் பாடுபடவேண்டும். கொஞ்சமும் இரக்கமின்றி என்னைத் 'தலைமுழுகிவிட' அவருக்கு மனம் இடந்தந்தான பிறகு, நான் ஏன் சாதுவாக இருக்க வேண்டும்? இருந்துதான் நான் என்ன சுகத்தைக் காணப் போகிறேன்? எனவே, ஓர் புதிய உறுதியுடன் வீட்டுக்குள் பிரவேசித்தேன். உலகறிய என்மீது குற்றம் சாட்டி, அதற்கு ருஜு காட்டி, என்னை வீதியிலே விரட்டட்டும். அதுவரையில், இந்த வீட்டில் நான் ஆட்சி செய்வேன். அவரை ஆட்டிப் படைப்பேன் என்று திட்டமிட்டேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே, புதிய முறையில் வேலை துவங்கினேன். நான் உள்ளே வந்த போது அவர் வீட்டிலே இல்லை. அப்பா, என்னைத் தனியாக விட்டுப் போக விரும்பவில்லை. நானாகவே அவரைப் போகச் சொன்னேன். வேலைக்காரியைக் கூப்பிட்டேன். "எங்கே அவர்? எத்தனை மணிக்கு வெளியே சென்றார்? யார் கூடச் சென்றார்?" என்று மளமளவென்று கேள்விகளை அதிகாரத் தோரணையில் பூட்டினேன். அவ்வளவு உரத்த குரலிலேயும் முடுக்காகவும் நான் அதுவரை பேசி அவள் கேட்டதில்லை. ஆகவே அவள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாள். ஒரு வேளை "பேய்தான் பேசுகிறது" என்று தான் எண்ணிக்கொண்டிருப்பாள். "என்னடி சமையல் இன்று?" என்று கேட்டேன். அவள் சொன்ன பண்டங்கள் யாவும் அவருக்குப் பிரியமானவை. உடனே அவைகளை மாற்றினேன். அவருக்குப் பிடிக்காத வெண்டைக்காயைக் குழம்பு வைக்கச் சொன்னேன். அவருக்குக் கொத்தமல்லித் துவையல் பிரியம்; அதைச் செய்யவேண்டாம் என்று உத்தரவு போட்டேன். கீரைத் தண்டு ஒரு பதார்த்தத்திலே சேர்ந்ததா என்று சலித்துக் கொள்வார் அவர். அதைக் கூட்டுச் செய்யச் சொன்னேன். அவருக்கு 'இரசம்' இல்லாவிட்டால் சாப்பாடு பிடிக்காது. அன்று அது தேவையில்லை என்றேன். தயிருக்குப் பதில் மோர், தலைவாழை இலைக்குப் பதில் பொத்தல் ஆல இலை, நெய் வாடை அடிக்கும் 'ரகம்'. இப்படி சமையற்கட்டிலே என் போர் துவக்கப்பட்டது. சாப்பாடு தயாரானதும், வேலைக்காரியைப் பரிமாறச் சொல்லி சாப்பிட்டுவிட்டு, உள்ளே படுத்துக்கொண்டு, "நான் நாலுமணி நேரம் தூங்கி ஆகவேண்டும். இடையிலே எழுப்பாதே. தூங்கி எழுந்திருப்பதற்குள் காப்பி தயாராக இருக்கட்டும்" என்று உத்தரவு போட்டுவிட்டு, மெத்தை மீது வழக்கமாகப் போடுவதைவிட அதிகத் தலையணைகள் போட்டுக்கொண்டு, படுத்துக் கொண்டேன். "எங்கே ரங்கம்?" என்று வேலைக்காரியைக் கேட்டார். எங்கே ரங்கம்? முன்பெல்லாம், எதிரே நிற்பாள். கையில் தண்ணீர்ச் செம்புடன், முகத்தில் சந்தோஷத்துடன்; சாப்பிட்டிருக்க மாட்டாள்! எங்கே ரங்கம்? வந்து பாரேன்; இதோ இருக்கிறாள் ரங்கம்; வெல்வெட்டுத் தலையணை தலைக்கும் காலுக்கும் போட்டுக்கொண்டு, ஒய்யாரமாகக் கண்களைப் பாதி அளவுக்கு மூடிக்கொண்டு வெற்றிப் புன்னகையுடன் கட்டிலின் மீது படுத்துக் கொண்டிருக்கிறாள்! தூக்கம் பூரணமாக வரவில்லை, வரச் செய்கிறாள். பதினோரு மணிக்குச் சாப்பிட்டாள். கொஞ்சநேரம் கதைப் புத்தகம் படித்தாள். படித்தபடி தூக்கம் வருவது போலிருந்தது. புத்தகத்தை கீழே வீசி எறிந்தாள். எவனோ கதாசிரியன், உத்தமிகளின் இலட்சண விளக்கத்தை எழுதி இருந்தான் அதிலே. இதோ, படுத்துக்கொண்டிருக்கிறாள். எங்கே இருப்பாள் ரங்கம் என்று கேட்கிறாயே. எங்கே இருப்பாள். ஒரு செல்வக் குடும்பத்திலே பிறந்து, செல்வவானுக்கு வாழ்க்கைப் பட்டவள்? பகல் ஒரு மணிக்குத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பாளா, நெல் குத்திக் கொண்டிருப்பாளா, அடுப்பு ஊதிக் கொண்டிருப்பாளா? வேலைக்காரி சமைத்தாள்; வேளையோடு சாப்பிட்டாள்; ஓய்வாகப் படுத்துக் கொண்டிருக்கிறாள். நாலு மணிக்கு எழுந்திருப்பாள்; காப்பி சாப்பிடுவாள், ஒரு அரைமணி நேரம் தோட்டத்திலே உலவுவாள்; பிறகு கோயிலுக்கோ, கோமளம், கோகிலம், குந்தளம் போன்ற சிநேகிதி வீட்டுக்கோ போய் வருவாள், பொழுதுபோக்காக! இப்படி எல்லாம் நான் கூறினேன். என் எதிரே இருந்த பெரிய நிலைக் கண்ணாடியில் தெரிந்த என் உருவத்துக்கு. அவர் கூடத்திலே வேலைக்காரியைக் கேட்டார் "எங்கே ரங்கம்!" என்று. மகனே! முன்பு அவர் 'எங்கே வேலைக்காரி?' என்று என்னைக் கேட்பார். இப்போது வேலைக்காரியைக் கேட்டார், எங்கே ரங்கம் என்று. "அம்மா உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னாள் வேலைக்காரி. பிறகு அவள் தான் சாதம் போட்டாள். சமையற்கட்டிலே நடந்த சம்வாதம் எனக்குச் சங்கீதமாக இருந்தது. "இதென்ன சனியன். வெண்டைக்காய் ஏன் செய்து தொலைத்தாய்?" "அம்மாதான்..." "என்னவாம் அம்மாவுக்கு? அம்மா! துவையல் எங்கே?" "செய்யவில்லை." "செய்யவில்லையா?" "ஆமாம். அம்மா வேண்டாம் என்றார்கள்." "இதென்ன பெரிய இழவு! இது என்ன வீடா, சுடுகாடா?" "பேஷ்; சபாஷ்! அற்புதம்!" என்று கூறலாமா என்று தோன்றிற்று எனக்கு, அவருடைய பதைப்பான பேச்சைக் கேட்டு, எதையோ தூக்கிக் கீழே வீசுகிற சத்தம் கேட்டது. "நான் என்னங்க செய்வது? அம்மா..." என்று அழுகுரலில் வேலைக்காரி பேசுகிற சப்தம் கேட்டது. பிறகு கூடத்திலே வந்து உலவிக் கொண்டே பேசலானார், உன் அப்பா. "இந்த வீட்டிலே மனுஷன் எப்படி வாசம் செய்ய முடியும்! பேயைப் பெண்டாகக் கொண்டால் இந்தக் கதிதான்" என்றார். சில விநாடிகள் பேச்சு இல்லை; காலடிச் சத்தம் மட்டும்தான் கேட்டது. "மங்களம்! இதோ பார், இனி இங்கே இதுபோல நடக்கக்கூடாது!" என்றார். மங்களம் என்ன செய்வாள்? எஜமானி போடும் உத்தரவின்படி நடக்கவேண்டியவள்தானே! "அம்மா சொன்னாள், அம்மா சொன்னாள் என்று வீட்டைக் குட்டிச் சுவராக்கக்கூடாது. அம்மாவுக்கு இங்கே யாரும் இந்த அதிகாரமெல்லாம் தரவில்லை. தெரிகிறதா? இந்த வீட்டிலே என் இஷ்டப்படிதான் சகலமும் நடக்க வேண்டும். ஜாக்ரதை, தோலை உரித்துவிடுவேன்" என்றார் மிரட்டலாக. தோலை உரித்து விடுவேன் என்றாரே தவிர, யாருடைய தோலை என்பதைக் கூறவில்லை. கூறத் தைரியமில்லை. வேலைக்காரி பதில் ஏதாவது பேசினாலாவது அவர் கோபத்தை வெளியே கக்கிவிட்டு நிம்மதி அடைந்திருப்பார். அவள் பேசாமல் இருக்கவே அவருடைய கோபம் வலிவு அதிகரித்தது. அந்தக் கோபத்தை நாற்காலிமேல் காட்டுகிறார், விசிறியின்மேல் காட்டுகிறார், தெருக் கதவின் மீது வீசுகிறார், கடைச் சிறுவன் மீது காட்டுகிறார், தோட்டக்காரன் மீது போடுகிறார். கோபத்தை எங்கெங்கோ பாய்ச்சுகிறாரே தவிர, ரங்கத்தின் மீது வீசத் தைரியமில்லை. ரங்கம் உள்ளேதான் சயனித்துக் கொண்டிருக்கிறாள்; கூடத்திலே குதிக்கிறார், கூவுகிறார்; உள்ளே நுழைந்து ஒரு வார்த்தை கேட்க முடியவில்லை. கேட்டிருந்தால் எரிமலை வெடித்திருக்கும். நெடுநேரம் இவருடைய 'திட்டு'களைக் கேட்டுக் கொண்டிருந்த வேலைக்காரி, "நான் யார் பேச்சைக் கேட்பது? அம்மா ஒரு விதமாகச் சொல்லுகிறார்கள், நீங்கள் அதற்கு நேர்மாறாகச் சொல்கிறீர்கள்; நான் யாருடைய அதிகாரத்துக்கென்று அடங்கி நடப்பது" என்று கெஞ்சும் குரலில் பேசினாள். ஐயோ பாவம், நம்மாலே அவளுக்குக் கஷ்டம் வருகிறதே என்று ஒரு விநாடி யோசித்தேன். பிறகு மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். சே! வேண்டுமானால், அவளுக்குத் தனியாகச் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அவள் கஷ்டப்படுகிறாள் என்பதற்காக நமது போர்முறையை மாற்றிக் கொள்ளக்கூடாது. இந்தப் போர் முறை வெற்றி தருகிறது. ஆகவே இதனைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டேன். தன் கோபத்தை எங்கு காட்டுவது என்று தெரியாது திண்டாடிய என் கணவர், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கடைக்குப் போய் விட்டார். முன்பெல்லாம் சாப்பிட்டானதும் மூன்று மணி வரையில் படுத்துத் தூங்குவார்; நான் காப்பி போட்டுக் கொடுத்தான பிறகுதான் போவார். சாப்பிட்டு அரைமணி நேரமாகவில்லை, ஓடினார் கடைக்கு; நான் ஒய்யாரமாகப் படுத்து உறங்கினேன். அவரும் நானும் பழைய நாட்களிலே ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோமே, அப்போது எனக்கு இருந்த சந்தோஷம் ஒருவிதம். அவருடன் 'போரிடுவது' என்று திட்டமிட்டு, படை எடுப்பின் துவக்கத்திலேயே அவர் தோற்று ஓடினபோது நான் கொண்ட சந்தோஷம் வேறோர் விதமாக இருந்தது. எனக்கு இந்த இரு சந்தோஷங்களின் வகைகளை விளக்கச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு வகை என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இனிப்புப் பண்டங்களிலேயே, இனிப்பளிக்கும் முறையிலும், இனிப்பின் தன்மையிலும் வித்தியாசம் இல்லையா? அதுபோலவே, அந்த இருவகைச் சந்தோஷங்களிலேயும் வித்தியாசம் இருந்தது. காசி அல்வா தின்னும்போதும் இனிப்புதான்; கரும்பைத் கடித்துத் தின்னும்போதும் இனிப்புதான், என்றாலும் வித்தியாசம் இருக்கிறது பார் மகனே! அது போலிருந்தது. உத்தரவின்படி நாலு மணிக்கு வேலைக்காரி காப்பி கொடுத்தாள்; சாப்பிட்டேன்; குளித்தேன்; அதுவும் புது வழக்கம்! அலங்காரம் செய்து கொண்டேன். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
புதிய கல்விக் கொள்கை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : கல்வி ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 90.00 தள்ளுபடி விலை: ரூ. 80.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். அப்படிப்பட்ட கேள்விக்குறிக்கான பதிலை, தனது கருத்து ஏரைக் கொண்டு வாசிப்போரின் சிந்தனையில் ஆழ உழுது விதைக்கிறார். கூடவே, ஒவ்வொரு பெற்றோரும் கடனே என்று இருந்துவிடாமல் தங்களின் பொறுப்பையும் உணர வைக்கிறார். எதிர்காலத்தில் உறுதிமிக்க தேக்குமரமாக வளரத்தான் போகிறது என்பதற்காக, சின்னஞ்சிறிய கன்றாக இருக்கும்போது அதன் மீது நாம் சுமைகளை வைப்போமா? கனமான ஆணிகளை அறைவோமா? அப்படித்தான் இருக்கிறது இந்த கல்விக் கொள்கை என்று தனது கருத்துரையை தெளிவாக்கி இருக்கிறார் நேரடியாக வாங்க : +91-94440-86888
|