ரங்கோன் ராதா 4 "நண்பா! என் தாயார் சொல்லிக்கொண்டு வந்த கதையைக் கேட்டு எனக்கு அளவு கடந்த ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டன. என் எதிரே உட்கார்ந்துகொண்டு, சுமார் 20 வருஷங்களுக்கு முன்புதான் இறந்ததையும், சுடலையில் தன் பிணத்துக்கு நெருப்பு வைக்கப்பட்டதையும், தீ நன்றாகப் பிடித்துக் கொண்டதையும் சொன்னால், கேட்பதற்கு எவ்வளவு திகைப்பு இருக்கும். நான் இருந்த நிலையைக் கண்டு என் தாயார் மெள்ளச் சிரித்துவிட்டு, "தம்பி! என் கதையைக் கேட்டுக் கலக்கமடைகிறாய். ஒருவேளை எனக்கு மூளை புரண்டுவிட்டதோ என்று எண்ணுகிறாயோ என்னவோ. நீ மட்டுமா, யாரிடம் சொல்லப்போனாலுந்தான் இப்படித் திகைப்பார்கள். ஆனால், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் உன்னிடம். நான் உண்மையை, முழு உண்மையைக் கூறுகிறேன். இன்னொருவர் நம்பவேண்டும், அதனால் எனக்கொரு பலன் ஏற்படவேண்டும் என்பதற்காக அல்ல, என் நெஞ்சிலே நெடுங்காலமாக இருந்துவரும் பாரத்தைப் போக்கிக் கொள்ள. ஆகவே, ஆச்சரியம் திகைப்பு எது ஏற்பட்டாலும், பொருட்படுத்தாமல் என் கதையைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள்" என்று கூறிவிட்டு கதையைத் தொடர்ந்து கூறலானார்கள்.
இரவு மணி பத்துக்குப் பிணம் வேகத் தொடங்கிற்று. அதே நேரத்தில், நான் வேகமாக, ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தேன். முடி தரித்த மன்னரும் முடிவிலொரு பிடி சாம்பலாகப் போவர் என்ற பழமொழிப்படி, நான் வெந்து நீறானேன் என்று மக்கள் பேசிக் கொண்டிருந்த சமயம், காவி உடையுடன், கையில் திருவோட்டுடன், காளி கோயில், காத்தவராயன் கோயில் ஆகிய இடங்களிலே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். கூந்தல் கிடையாது. மழுங்க மொட்டையடித்துக் கொண்டிருந்தேன். ஆமாமடா கண்ணே! உன் அன்னை இந்த அலங்கோல உருவிலே அலைந்து கொண்டிருந்தபோது உன் அப்பாவிடம் ஊரார், "என்ன செய்யலாம் நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். புண்யவதி உமது மனைவி, பூவோடும் மஞ்சளோடும் போய்ச் சேர்ந்துவிட்டாள் பாவம்" என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். நான் இறந்துவிடவில்லை; ஓடிவிட்டேன்; அவருக்குத் தெரிந்தே ஓடிவிட்டேன், என்பது உன் அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். எப்படித்தான் அவர் தன்னிடம் தேறுதல் மொழி கூற வந்தவர்களோடு பேசினாரோ, எனக்குத் தெரியாது. கோட்டையூர் மக்கள், நான் இறந்துவிட்டேன் என்று தீர்மானித்துவிட்டனர். ஆனால், பாவம், இறந்தது உண்மையில் ஒரு பிச்சைக்காரி! இறக்கக்கூடவில்லை, கொல்லப்பட்டாள். ஆமாம், கண்ணு! சாந்தசீலர், சத்தியவந்தர் என்று புகழப்படும் உன் தகப்பனாரால் கொல்லப்பட்டாள். என்னைக் கொல்ல, அவர் ஒரு ரகசிய ஏற்பாடு செய்திருந்தார். அதிலே அவள் சிக்கிக் கொண்டாள்; பாபம், செத்தாள். கேள், உன் தகப்பனாரின் கெடுமதி சென்ற விதத்தை. கொஞ்சம் பழைய கதை கூறவேண்டும் இதற்கு. கோட்டையூர் வீரராகவ முதலியார், அதாவது உன் தாத்தாவுக்கு இரண்டு பெண்கள். ஆண் வாரிசு கிடையாது. நான் மூத்தவள். இரண்டாவது பெண் தான் உன் சிற்றன்னை தங்கம். என்னை, உன் அப்பாவுக்கு ஏற்பாடு செய்தபோது வீரராகவ முதலியாருடைய மிட்டா சம்பந்தமாகப் பெரிய கேஸ் நடந்து தோற்றுவிட்டது. கொஞ்சம் அவர் நொடிந்துப் போயிருந்தார். ஆகவே, என் கலியாணத்தின்போது, அதிகமான சீர் செய்யவில்லை. ஆடம்பரம் அவ்வளவும் உன் அப்பாவின் செலவிலேயே நடந்தது. விசாரத்தில் மூழ்கிய வீரராகவ முதலியார், கேஸ் தன் பக்கம் ஜெயித்திருந்தால், எனக்கு மாங்காய் மாலையும், மரகத மணியும், கல் இழைத்த ஒட்டியாணமும், காசு மாலையும் பூட்டி இருக்கலாம்; கச்சேரியும் காலட்சேபமும் வைத்திருக்கலாம் என்று கூறினார். ஒன்றும் செய்ய முடியாத நிலை. பெரிய குடும்பம். நல்ல பரம்பரை . ஒரு காலத்தில் ஓஹோ என்று வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட இடத்திலே சம்பந்தம் கிடைத்ததே ஒரு பெருமை என்று உன் அப்பா இருந்துவிட்டார். அவருடைய குடும்பம் பரம்பரைப் பணக்காரக் குடும்பமல்ல. உன் அப்பாவின் திறமையால் சொத்துச் சேர்ந்தது. தரகு மண்டி தர்மலிங்க முதலியார் என்றால் யாருக்கும் ஒரு பற்றுதல், மரியாதை, நம்பிக்கை. இதற்கு முக்கிய காரணம் அவருக்குப் பணத்தாசையே கிடையாது என்பது தான். நான்கூட மற்றவர்களைப் போலவே, உன் அப்பாவுக்குப் பணத்தாசை கிடையாது என்றே நினைத்தேன். அவ்வளவு திறமையாக உன் அப்பா நடித்து வந்தார். உள்ளமோ ஒரே ஆசைக்காடு. அது பிறகுதான் எனக்கே தெரியவந்தது. ஊராருக்கு இப்போதாவது தெரியுமோ என்னவோ. நிம்மதியாக நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்தபோது என் அப்பா, என் தங்கை தங்கத்துடன், தன் வீட்டில் கொஞ்சம் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். கேஸ் தோற்ற பிறகு அவருக்கு ஊரிலே முன்பு இருந்ததைவிட மதிப்பு அதிகம். அது ஒரு விசித்திரந்தான். கேஸ் யார் பக்கம் ஜெயித்ததோ, அவர்கள் கடனாளியாகக் கஷ்டப்பட்டார்கள். அப்பாவுக்குச் சொந்தமான மிட்டா அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததே தவிர, கேஸிலே ஜெயிப்பதற்காக அவர்கள் பட்ட அலுப்புத் தீரவில்லை. அப்பாவோ தன் கவலை வெளியே தெரிய ஒட்டாதபடி நடந்துகொண்டார். எப்போதும் போலச் சரிகைத் துப்பட்டாதான், வெள்ளிப் பூண் போட்ட தடிதான், ஊர் பெரியதனக்காரராகவே வாழ்ந்து வந்தார். இரண்டொரு ஏக்கர் நிலம் மிச்சமிருந்தது. அது மண் போட்டால் பொன் விளையும் பூமி என்பார்கள். அவ்வளவு நல்ல நிலம். அதிலே கிடைக்கும் வருமானமே ஜீவன ஆதாரம். இந்தக் கஷ்டத்துக்கிடையே தங்கம் கொடிபோல வளர்ந்து வந்தாள். அடிக்கடி நம் வீட்டுக்கு வருவாள், எனக்கு அவளிடம் அபாரமான ஆசை. அவளும் அப்படியே இருப்பாளென்று பைத்தியக்காரி நான் நினைத்தேன். அது தவறு என்பதைக் கண்டுபிடிக்க ரொம்ப நாளாயிற்று. வீட்டுக்கு வந்ததும், 'அக்கா' என்று ஆசை வழியக் கூப்பிடுவாள், 'வாடி கண்ணே!' என்று நான் அழைத்துக் கொண்டு சமையலறைக்குப் போவேன். என் கூடவே இருந்து சமையல் வேலையைக் கவனிப்பாள். பிறகு அவளுக்கு நான் தலை சீவி அலங்காரம் செய்து, என் நகைகளை அவளுக்குப் போட்டு அழகுபடுத்தி, அவர் வருகிறபோது அவளிடம் காபியோ, வெற்றிலைத் தட்டோ , எதையாவது கொடுத்து அனுப்புவேன். அவர் அவளைப் பார்த்ததும், "பலே தங்கமா! எவ்வளவு அழகடி ரங்கம் உன் தங்கை" என்று கூறுவார். "அக்கா! அத்தானைப் பாரேன், கேலி செய்கிறார்" என்று தங்கம் சொல்லுவாள். "என்னாங்க! நம்ப தங்கத்துக்கு இந்த நகை எல்லாம் போட்டா, எவ்வளவு அழகாக இருக்கு, பார்த்தீங்களா?" - நான் கேட்பேன். "அதுக்கென்ன சந்தேகம்! இப்ப என்ன தங்கத்துக்கு ஒரு தனவந்தன் புருஷனாகக் கிடைத்துவிட்டா, வைரமாக இழைத்துவிடுகிறான். தங்கம் அதிர்ஷ்டக்காரிதான், பாரேன்" என்று அவர் சொல்லுவார். தங்கம் வீட்டுக்குப் போகும்போது, நகைகளைக் கழற்றி என்னிடம் கொடுப்பாள். கொடுக்கும்போது சொல்லுவாள்; "அக்கா! அத்தான் சொன்னாரே எனக்கு அதிர்ஷ்டம் என்று; அந்த அதிர்ஷ்டம், எனக்கு இப்படி என்றைக்காவது ஒரு நாளைக்கு அட்டிகையும் செயினுமாகக் கொடுத்து உடனே மறுபடியும் திருப்பி வாங்கிக் கொள்ளுது பார்த்தாயா?" என்பாள். எனக்கு கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கும் அதைக் கேட்க. "ஏண்டி கண்ணே! போட்டுக் கொண்டுதான் போயேன் வீட்டுக்கு" என்று நான் சொல்வேன். "போக்கா போ" என்று கூறிவிட்டுத் தங்கம் போய்விடுவாள். நகைகளைப் பூட்டி நான் அவளுடைய அழகைக் கண்டு ஆனந்தப்பட்டு வந்த சமயங்களிலெல்லாம், அவள் அசூயை கொண்டிருந்தாள் என்பது எனக்குத் தெரியாமல் போயிற்று. சிறு வயதிலேயே அவள் மனதில் பொறாமை அவ்வளவு குடியேறி விட்டது. வீட்டிலே தனக்குத் தரித்திரமும், எனக்கு என் புருஷன் வீட்டிலே தனபாக்கியமும் இருந்தது அவளுக்குப் பொறுக்கவில்லை. நாளாகவாக அவள் மெள்ள மெள்ளக் கேலி பேசும் பாவனையிலே தன் பொறாமையைக் கொட்டத் தொடங்கினாள். இந்தச் சமயத்திலேதான் அவள் பருவமடைந்தாள். என் கண்களுக்கு ஒரு பெரிய விருந்தாக விளங்கினாள். அவளுக்கு நீராட்டின அன்று, நான் அடைந்த பெருமையும் பூரிப்பும் இவ்வளவு அவ்வளவு என்று கூறமுடியாது. என் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய், அவளுக்குப் பூட்டி அழகு படுத்த வேண்டுமென்று நான் ஆவலாகச் சென்றேன். அவளோ, ஒரேயடியாக அவைகளைப் போட மறுத்து விட்டாள். அப்பா, என் புருஷர், யார் சொல்லியும் கேட்கவில்லை. என் மனதிலேயும் தங்கத்திடம் அசூயை தோன்றிவிட்டது. அதற்கு முன்பெல்லாம், உன் அப்பா, என் வீட்டுப் பக்கம் போய் வராமல் ஒரு நாள் இருந்துவிட்டால், நான் அவரிடம் கோபிப்பது வாடிக்கை. "அது என்னங்க, அப்பாவும் தங்கமும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துவரக் கூடாதா? நாலைந்து தெருவுக்கு அப்புறம் இருக்கிறார்கள். பத்து மைலா, எட்டு மைலா? வீட்டுக்கு வருகிறபோது ஒரு நடை அப்படியே போய் வரக்கூடாதா?" என்று கேட்பேன். அவர், கடையில் வேலை, கணக்கப் பிள்ளை வீட்டில் காரியம் என்று ஏதாவது சாக்குச் சொல்வார். அப்படிப்பட்ட நான், அவராக, 'இன்று உன் அப்பாவைப் பார்த்தேன்' என்று கூறும்போது 'கடைவீதியிலா?' என்று கேட்பேன். 'இல்லை, வீட்டுக்குப் போயிருந்தேன்' என்பார். உடனே எனக்கு முகம் ஒரு விதமாக மாறிவிடும். முதலிலே எனக்கு அந்தச் சுபாவம் பிடிக்கத்தான் இல்லை. ஆனால், அது வளருவதைத் தடுக்க என்னால் முடியவில்லை. 'ரங்கம்! வெள்ளரிக்காய் என்றால் தங்கத்துக்கு இஷ்டமல்லவா? கிராமத்திலிருந்து நாளைக்கு ஒரு கூடை கொண்டுவரச் சொல்லி இருக்கிறேன். கொண்டு போய்க் கொடு தங்கத்துக்கு' என்பார் உன் அப்பா. எனக்குத் திடீரென்று கோபம் வரும். காரணமின்றி நான் கோபித்துக் கொள்கிறேன் என்று அவர் எண்ணிக் கொள்வார். 'தங்கத்துக்கு எது பிடிக்கும், என்ன தேவை என்பதிலே இவருக்கு என்ன அவ்வளவு அக்கறை? எனக்கு மாம்பழம் என்றால் உயிர், ஆயிரம் தடவை சொல்லி இருக்கிறேன், அது ஒரு அரை டஜன் வாங்கி வரக் காணோம். அவளுக்கு வெள்ளரி பிடிக்குமாம், ஒரு கூடை வருகிறதாம். இதை நான் சுமந்துகொண்டு போய், அவளுக்குத் தருவதாம்' என்று எண்ணுவேன். கோபம் பொங்கும் மகனே! இந்தப் பொறாமை இருக்கிறதே, அதைப் போல வேகமாக பரவும் நெருப்பு வேறே கிடையாது. நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்கிறது. என் உள்ளத்தை அந்தத் தீ வேகவைத்தது. 'வெள்ளரி வேண்டுமென்று தங்கம் கேட்டாளா?' என்று நான் கேட்டேன். புருஷனை மனைவி கேட்பதைப் போல அல்ல, குற்றவாளியை அதிகாரி கேட்பது போல. அவர் சாதாரணமாகவே, 'அவள் கேட்கவில்லை. நீதானே சொல்லுவாய், தங்கத்துக்கு வெள்ளரி என்றால் பிரியம் என்று' என்று சொன்னார். என் கோபம் குறைவதற்குப் பதிலாக வளர்ந்தது. 'அவள் ஏதோ வாய்திறந்து வெள்ளரி வேண்டுமென்று கேட்டாள்; ஆசைப்பட்டுக் கேட்ட பிறகு எப்படி வாங்கிக் கொடுக்காமல் இருப்பது என்று எண்ணி இவர் வெள்ளரி வாங்கியிருந்தாலும் பரவாயில்லை. அவள் கேட்கவேயில்லையாம். இவராக அவளுக்கு எந்த வஸ்துமேல் பிரியம் என்று யோசித்து நான் எப்போதோ சொன்னதைக் கவனம் வைத்திருந்து, வெள்ளரி தருவிக்கிறாரே, எவ்வளவு அக்கறை அவள் விஷயத்திலே? ஏன்?" என்று யோசிக்கிறேன். போக்கிரித்தனமும் கலந்து 'தங்கத்துக்கு எது எது இஷ்டம் என்பதைப் பற்றிய ஆராய்ச்சியிலே மும்முரமாக ஈடுபட்டுவிட்டீர்களோ?' என்று கேலியாகக் கேட்டேன். 'அத்தான் என்றிருந்தால் அந்த அக்கறை இராதோ?' என்று அவர் பதில் கூறினார். அது என்னைச் சவுக்கால் அடித்ததுபோல இருந்தது. கொஞ்ச நேரம் மரம்போல நின்றேன். பிறகு கேட்டேன். "ஆமாம்! நேற்றுப் போயிருந்தீர்களா வீட்டுக்கு" என்று. "இல்லையே, நாலு நாளாகிவிட்டது நான் போய்" என்று அவர் கூறினார். என் ஆத்திரம் கட்டுக்கு அடங்கவில்லை. "ஐயையோ! ஏன் பாவம் இவ்வளவு கஷ்டம்! இப்போதே ஓடிப்போய் அவளைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்களேன். தலைகிலை வெடித்துவிடப் போகிறது" என்று சொல்லிவிட்டுச் சரேலெனச் சமையற்கட்டுக்குப் போனேன். அவர் கூடத்திலே சிரித்துக் கொண்டிருந்த சத்தம் என் காதிலே விழுந்தது. நான் வற்றல் வறுப்பதற்காக, வாணலியில் எண்ணெய் ஊற்றி வைத்திருந்தேன். அடுப்பெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தேன். சடசடவெனச் சத்தம் கேட்டது. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது நான் அழுது கொண்டிருந்தது. கொதிக்கும் எண்ணெயில் என் கண்ணீர் வீழ்ந்து, அந்தச் சத்தம் உண்டாயிற்று. அதுவரையில் நான் அழுததில்லை, புருஷன் வீட்டிலே! அன்று அழ ஆரம்பித்தேன், அந்த அழுகை இன்னும் ஓயவில்லை; இனியும் ஓயாது. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சுவையான 100 இணைய தளங்கள் வகைப்பாடு : கணினி / இணையம் இருப்பு உள்ளது விலை: ரூ. 60.00தள்ளுபடி விலை: ரூ. 55.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |