![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
முன்னுரை 1979ம் ஆண்டு உலகச் சிறுவர் ஆண்டாகக் கொண்டாடப் பெற்றது. இந்த ஓராண்டுக் காலத்தில் உலகு தழுவிய வகையில் சிறுவர் நலன், கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பல அமைப்புக்கள் உருவாயின. நம் நாட்டிலும் அரசைச் சார்ந்ததும், தனிப்பட்ட முறையிலும் சிறுவர் நல வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுவது பற்றியும், சமுதாயத்தின் பின் தங்கிய பகுதிகளின் பிரச்சினைக்குரிய சிறுவர் நிலை பற்றியும் ஆராய்வதற்கான பல குழுக்கள் அமைந்தன. அத்தகைய குழுக்களில் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. இந்த வாய்ப்பு எனக்கு உழைக்கும் சிறுவர் தொடர்பான உண்மை நிலைகளைப் பரிச்சயம் செய்து கொள்ள உதவியது. எனது மனதைப் பெருமளவில் பாதித்த பல விஷயங்களே நான் இந்த நாவலை எழுதத் தூண்டுகோலாக அமைந்தன எனலாம். ஒரு இலக்கியப் படைப்பாளருக்கு தன்னைச் சுற்றிய உலகில் நிகழும் நிகழ்ச்சிகளும் அது சம்பந்தமான பாதிப்புகளும் சிந்தையைத் தாக்கும் போது கற்பனையாக ஓர் மாதிரியைப் புனைந்து, கருத்துக்களை வெளியிடும் ஆர்வம் உந்தித் தள்ளுகிறது. இந்தக் கதை முழுவதும், கற்பனையே. உண்மையான வாழ்வில் தனிப்பட்ட யாரையும் குறிக்கும் வகையில் பாத்திரங்கள் உருவாக்கப் பெறவில்லை. ஆயினும், இக்கற்பனைக் கதையின் வாயிலாக, எனது சிந்தனையைப் பாதித்த சில சமுதாய - தொழில் சம்பந்தப்பட்ட வாழ்வுப் பிரச்சனையைத் தொட்டுக் காட்டத் துணிந்திருக்கிறேன். இலக்கியப் படைப்புக்கள் வாசகர் மனங்களை ஈர்த்து ஒருமுகப்படுத்தி வாழ்வின் பிரச்சினைகளை எதிர்நோக்கும் துணிவையும், சுயநலமற்ற மனிதாபிமான நம்பிக்கையையும் ஊட்ட வல்லவையாக அமையும் போது தான் இலக்கியம் பயனுடையதாகிறது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுத்துத்துறை அமைக்கும் தடத்தில் ஓடி வந்திருந்தாலும், இன்றும் ஒவ்வொரு படைப்பிலும் ஈடுபடும் போதும் புதிய பரபரப்பும், புதிய அச்சமும், புதிய துணிவுமாக இயங்கும் அனுபவம் மாறாமலிருக்கிறது. அத்தகைய உணர்வுடன், இப்படைப்பு நூலாக உருவாகும் இந்நாளில் என் எழுத்தின்பால் அளப்பறிய ஆர்வமும் அபிமானமும் காட்டி என்னை ஊக்குவிக்கும் நண்பர் பலரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். எனது ஒவ்வொரு படைப்பையும் நல்ல முறையில் அச்சிட்டு நூலாக்கி வெளியிட்டு எனக்கு ஆதரவளிப்பதன் வாயிலாக வாசக உலகின் தொடர்பை என்றும் நவிலா இளமைப் பொலிவுடன் பேணி வர உதவும் தாகம் பதிப்பகத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றியுணர்வைப் புலப்படுத்திக் கொள்கிறேன். வாசகப் பெருமக்கள் எப்போதும் போல் இப்படைப்பினை ஏற்று, எனது கருத்தின் வெற்றி தோல்வியைக் கணிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ராஜம் கிருஷ்ணன் கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|